Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all 219 articles
Browse latest View live

காந்திக் காட்சிகள் 20 - காகா காலேல்கர்

$
0
0
Photo Courtesy: Collected Works of Mahatma Gandhi
71. மகான்களின் வாக்கு
நாங்கள் ஆசிரமத்தில் சிவாஜி திருநாளைக் கொண்டாடினோம். திரு. நாராயண்ராவ்ஜி கரே பாட்டுக்கள் பாடினார். திரு வினோபாவும் நானும் உரை நிகழ்த்தினோம். எங்கள் பேச்சுக்களில் சிவாஜியைப் புகழ்ந்து ராமதாஸ், துக்காராம், மோரோ பந்த் முதலிய மகான்களும் கவிகளும் கூறியிருப்பவையெல்லாம் குறிப்பிடப்பட்டன; சரித்திரச் செய்திகளும் போதிய அளவு இடம்பெற்றன.
கடைசியில் இரண்டு வார்த்தைகள் சொல்லும்படி பாபூவிடம் கூறப்பட்டது. பாபூ, “சரித்திரம் என்ன சொல்லுகிறது என்பதை நான் கவனிக்க விரும்பவில்லை. மகான்களின் வாக்கையே நான் நம்புகிறேன். மகான்கள் சிவாஜியை ஜனகரைப் போன்றவரென்றும் தருமத்தின் அவதாரமென்றும் கொள்ளுகிறார்கள் என்றால் அதுவே எனக்குப் போதும். இதைவிடப் பெரிய ஆதாரமெதுவும் தேவையில்லைஎன்றார்.
72. மொழித் தூய்மை
பாபூ ஆசிரமம் அமைத்துக்கொண்டு குஜராத்தில் தங்கியபோது அவர் தம் அரசியல் குருவான கோகலேயின் நூல்களை குஜராத்தியில் மொழிபெயர்க்கச் செய்ய விரும்பியது இயற்கையே. கல்வி பற்றிய அவரது கட்டுரைகளையும் சொற்பொழிவுகளையும் சேர்த்து ஒரு தனிப் புத்தகமாக வெளியிடுவதென்று முடிவாயிற்று. ஒரு பிரபல விற்பன்னரிடம் இவ்வேலை ஒப்படைக்கப்பட்டது. மொழிபெயர்ப்பு அச்சாகி முன்னுரை தயாரிப்பதற்காக அச்சான பாரங்கள் பாபூவிடம் வந்திருந்தன போலும். அவர் எல்லாவற்றையும் ஒருமுறை பார்க்கும்படி மகாதேவ் பாயிடம் கொடுத்தார். மகாதேவ் பாய் பாபூவின் காரியதரிசியாக அமர்ந்தது அந்தக் காலத்தில்தான்.
மொழிபெயர்ப்பைப் படித்த பொழுது மகாதேவ் பாய்க்கு திருப்தி உண்டாகவில்லை. அவர் பாபுவினிடம், “மொழிபெயர்ப்பு சரியாயில்லை, நடையும் நன்றாயில்லை!என்றார்.
பாபூ வெறும் அபிப்பிராயத்தினால் மட்டும் திருப்தியடைந்துவிடமாட்டார்; உடனே ஆதாரமும் கேட்பார். அவர் முன்னிலையில் குறை கூற வந்தவனே குற்றவாளியாக ஆகிவிடுவதுண்டு! மகாதேவ் பாய் சில உதாரணங்கள் தந்தார். பாபூ, “சரி, உன் கருத்தைப் புரிந்துகொண்டேன். இப்பொழுது இந்த மொழிபெயர்ப்பை நரஹரியிடம் கொடு. அவன் சொந்த அபிப்பிராயம் எனக்கு வேண்டும்என்றார். பாவம், மகாதேவ் பாய் குன்றிப்போனார்; ஆனால் தம் அபிப்பிராயத்தில் உறுதியிருந்ததால் ஒன்றும் பேசவில்லை.
நரஹரி பாயும் அதே அபிப்பிராயம் தெரிவித்தார். ஆயினும் பாபூவுக்கு சமாதானம் உண்டாகவில்லை. அவர், “சரி, அப்படியானால் காகாவின் அபிப்பிராயத்தைக் கேள்என்றார்.
அந்தக் காலத்தில் எனக்கு குஜராத்தியில் சரியாகப் பேசவே வராது! இலக்கியத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாதென்று சொல்லலாம். ஆயினும் மொழிபெயர்ப்பு சரியாய் இருக்கிறதா, இல்லையா என்று என்னிடமும் அறிய விரும்புகிறார் என்று தெரியவே நான் மூல ஆங்கில நூலையும் மொழிபெயர்ப்பையும் எடுத்துவைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். பாபூவின் முன் போக வேண்டுமே என்ற பயத்தினால் மிகவும் கவனமாகப் பல பக்கங்களை வாக்கியத்தோடு வாக்கியம் ஒப்பிட்டுப் பார்த்தேன். பாவம், மொழிபெயர்ப்பாளரின் துரதிர்ஷ்டம், என் அபிப்பிராயமும் அவருக்கு பாதகமாகவே அமைந்தது.
மூவர் அபிப்பிராயங்களும் ஒன்றாகிவிடவே பாபூ யோசிக்கலானார். இனி வேறு வழியில்லை. எல்லாப் பிரதிகளையும் எரித்துவிட வேண்டியதுதான். குஜராத்திக்கு இம்மாதிரியான காணிக்கையை நான் செலுத்தமாட்டேன்என்றார்.
புத்தகம் மிகப் பெரியது. எவ்வளவோ ஆயிரம் பிரதிகள் அச்சாகியிருந்தன. அதனாலென்ன? எல்லா பாரங்களையும் கொளுத்திவிட வேண்டுமென்றும், கழிவுக் காகிதமாக விற்கவும் கூடாதென்றும் பாபூ உத்தரவிட்டுவிட்டார். பாவம், மொழிபெயர்த்தவருக்கு என்ன எழுதினாரோ தெரியாது. விஷயம் அதோடு முடிந்தது.
அந்த மொழிபெயர்ப்பாளர் என்ன பாடு பட்டிருப்பாரென்பது ஒருபுறம் இருக்கட்டும். நாங்கள் மூவரும் பெரிதும் பயந்துபோனோம். இனி எழுதுவதையெல்லாம் நன்றாக, தீர ஆலோசித்து எழுத வேண்டும்; குஜராத்தியும் சரி, மொழிபெயர்ப்பும் சரி தரத்தில் சிறிதும் குறையக் கூடாதென்று உணர்ந்தோம். 'யங் இந்தியா'வில் வரும் பாபூவின் கட்டுரைகளை குஜராத்தியில் மொழிபெயர்க்கும் வேலை எங்களுக்கு அளிக்கப்பட்டபோது நாங்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதைச் செய்யவேண்டியிருந்தது. ஒருவரையொருவர் கலந்துகொண்டு, ஒவ்வொரு சொல்லையும், அவற்றின் வழக்காற்றையும் நன்கு ஆராய்ந்து, வாக்கியங்களைப் பல வகையில் மாற்றி அமைத்துப் பார்த்த பிறகும் பாபூவுக்கு ஏதேனும் ஒரு சொல் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இருந்துகொண்டேதானிருந்தது.
ஒரு சமயம் பாபூவின் ஏதோ ஒரு கட்டுரைக்கு (Death Dance) ‘பேயாட்டம்என்ற தலைப்பு அளிக்கப்பட்டது. அதை மொழிபெயர்த்தது நாங்களே. எங்கள் மொழிப்பெயர்ப்பு மோசமாய் இல்லையாயினும் பாபூவுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் இதை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்?” என்று நாங்கள் கேட்டதற்கு அவர், ‘பதங்க நுத்யவிட்டில் கூத்து என்று சொன்னார். பாபூவுக்கு இலக்கியப் பழக்கம் எங்களைவிட அதிகமில்லை என்றாலும் நுணுக்கங்களை உணரும் அவரது திறமை அபூர்வமானது.
அந்தக் காலத்தில் நவஜீவனில் சுவாமி ஆனந்தர், மகாதேவ் பாய், நரஹரி பாய், நான் ஆகியோர் மொழிபெயர்ப்புக் கலையில் வல்லவர்களென்று கருதப்பட்டுவந்தோம். எங்களுடன் திரு. ஜுகத்ராம் தவே, சந்திர சங்கர் சுக்லா முதலிய இளைஞர்களும் தயாராகிவந்தார்கள். நவஜீவன் பிரஸ்ஸில் இந்த பரம்பரை இன்றும் தொடர்ந்து இருந்துவருகிறது. இதுமட்டுமல்ல, பாபூவின் வற்புறுத்தலினால் குஜராத் முழுவதிலும் இலக்கியத்தின் இலட்சியமும் மொழிபெயர்ப்பின் தூய்மையும் பெரிதும் உயர்ந்துவிட்டன. இதற்கு முன்னெல்லாம் குஜராத்தியில் வெளிவந்த எத்தனையோ புத்தகங்களில் ஆங்கில, வங்காளி, மராத்தி மொழிகளின் பல கடினமான சொற்களும் சில வாக்கியங்களும்கூட அரைகுறையாகவே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்.
73. அரிய சாதனை
எரவாடா சிறையில் மாலையில் நாங்கள் உலாவிக்கொண்டிருந்தோம். எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது பாபூ, “இப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் என் முன் வந்ததும் அதைப்பற்றி எழுதுவதற்கு நேரம் பிடிப்பதில்லை. ஆனால் இதன் பொருள் நான் இதற்காக சாதனை செய்யவில்லை என்பதல்ல. தென்னாப்பிரிக்காவில் ஒரு நண்பர் சட்டப் பரீட்சை எழுதவேண்டியிருந்தது. அதற்கு அவருக்கு சமயமுமில்லை, சக்தியுமில்லை. நான் அவருக்காக 'டச்சு லா'பற்றிக் குறிப்புகள் தயாரித்து தினமும் அவர் வீட்டுக்குப் போய் கற்றுக்கொடுத்துவந்தேன். என் கேஸுகளையும் நான் இன்றே ஏதோ பரீட்சை எழுதவேண்டியவனைப் போல தயார் செய்துகொண்டே கோர்ட்டுக்குப் போவேன்என்றார்.
இதற்கு முன்னமேயே நான் திரு. மகன்லால் பாயின் மூலம் பின்வரும் செய்தியைக் கேள்விப்பட்டிருந்தேன்: தென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் ஒரு முஸ்லீம் பட்லர் பாபூவிடம் வந்து, “எனக்கு ஆங்கிலம் தெரியுமானால் நல்ல சம்பளம் கிடைக்கும். இப்பொழுது வரும் சம்பளம் செலவுக்குப் போதவில்லைஎன்றான். அவ்வளவுதான், பாபூ அவனுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தயாராகிவிட்டார். இதைக் கண்ட அவன், “நீங்கள் தயாரானது உங்கள் தயையைக் காட்டுகிறது. ஆனால் நான் என் வேலையைப் பார்ப்பதா, உங்களிடம் ஆங்கிலம் கற்க வருவதா?” என்றான். இதற்கும் பாபூ பரிகாரம் கண்டுபிடித்துவிட்டார். ஒவ்வொரு நாளும் 4மைல் நடந்து அவன் வீட்டுக்குப் போய் அவனுக்கு ஆங்கிலம் கற்பிக்கலானார்!
74. ‘எனக்கு வழி ஒன்றே
எந்த வருடமென்று சரியாக நினைவில்லை. நான் சிஞ்சவட்டிலிருந்து திரும்பி வந்திருந்தேன். பாபுவின் சுயசரிதை நவஜீவனில் ஒவ்வொரு அத்தியாயமாக பிரசுரமாகி வந்தது. அதைப்பற்றிப் பேச்சு எழுந்தது. நான், “உங்கள் சுயசரிதை உலக இலக்கியத்தில் ஒப்பற்ற நூலாக மதிக்கப்படும். மக்கள் இப்பொழுதிருந்தே அதற்கு அந்த மதிப்பு அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எனக்கு அதனால் முழுத் திருப்தி ஏற்படவில்லை. வாலிப வயதில் மனிதன் தன் வாழ்க்கையின் இலட்சியத்தை நிர்ணயிக்க வேண்டி வரும் பொழுது, தனக்கு எந்த வழி பொருத்தமாயிருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் சிந்தையில் ஆழும்போது, எழும் உள்ளப் போராட்டத்தின் கடுமையை மகா யுத்தங்களைவிடக் குறைந்ததென்று சொல்லுவதற்கில்லை. அப்பொழுது ஒன்றுக்கொன்று முரணான பல இலட்சியங்கள் ஒரே வகையில் அவன் உள்ளத்தைக் கவருகின்றன. நான் உங்கள் சுயசரிதையில் இம்மாதிரியான மனக்குழப்பத்தின் விவரத்தை எதிர்பார்த்தேன். ஆனால் இத்தகையதொன்றும் அதில் காணோம். ஆங்கிலேயரை நம் நாட்டைவிட்டு விரட்டுவதற்காக நீங்கள் புலால் உண்ணவும் தயாராகிவிட்டீர்கள். இந்த முனையிலிருந்து அஹிம்சையென்ற மறுமுனைக்கு எப்படி வந்தீர்கள்? இதற்கிடையில் என்னென்ன மனப்போராட்டம் நடந்தது என்பதை எங்கும் எழுதவில்லைஎன்று சொன்னேன்.
இதற்கு பாபூ, “நான் ஒரே வழியில் செல்லும் சுபாவமுள்ளவன். நீ சொல்லுவது போன்ற குழப்பங்கள் என் மனத்தில் தோன்றுவதில்லை. எம்மாதிரியான நிலையிலும் என் கடமை என்ன என்ற ஒன்றைப்பற்றி மட்டுமே நான் ஆலோசிப்பேன். அது முடிவானவுடன் அதில் முனைந்துவிடுவேன். இதுவே என் வழிஎன்று பதில் சொன்னார்.
அப்பொழுது நான், “’சாதாரண மனிதர்களிலிருந்து நான் வேறுபட்டவன், எனக்கு வாழ்க்கையில் செய்ய வேண்டிய பணியொன்றுண்டுஎன்ற உணர்ச்சி உங்களுக்கு எப்பொழுது முதல் ஏற்பட்டது? ஹைஸ்கூலில் படித்துவந்த பொழுதே நான் மற்றவர்களைப் போலல்லஎன்ற எண்ணம் வந்துவிட்டதா?” என்று மற்றொரு கேள்வி கேட்டேன்.
என் கேள்வியை பாபூ கவனிக்கவில்லை போலும்; அவர், “சந்தேகமில்லை, ஹைஸ்கூலில் என் வகுப்புப் பிள்ளைகளுக்கு நான்தான் சட்டாம்பிள்ளைஎன்று மட்டும் சொன்னார்.
இதற்குள் யாரோ வந்துவிடவே இந்த முக்கியமான கேள்வி பதில் பெறப்படாமலே இருந்துவிட்டது.
75. மதிப்பு குறைந்தாலும் அன்பு குறையாது
சுயசரிதைபற்றி பின் ஒரு தடவை பேச்சு எழுந்த பொழுது நான், “பாபூஜி, சுயசரிதையில் நீங்கள் மிகவும் கஞ்சத்தனம் செய்திருக்கிறீர்கள். எத்தனையோ நல்ல விஷயங்களை விட்டுவிட்டீர்கள். நீங்கள் சரிதையைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறீர்களே, அதற்குப் பிறகு நடந்தவைகளை எழுதப்போவதாய்த் தெரியவில்லை. இடையில் விட்டுவிட்டவைகளை எழுதினாலே சுயசரிதைக்குச் சம அளவுள்ள இன்னுமொரு பெரிய நூல் ஆகிவிடும்"என்றேன். அதற்கு பாபூ. எல்லா விஷயங்களையும் நானேதான் எழுதவேண்டுமா? உனக்குத் தெரிந்தவைகளை நீதான் எழுதேன்என்றார்.
நான் மீண்டும், “சில இடங்களில் நீங்கள் வேண்டுமென்றே விஷயங்களை விட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. உங்களுக்குப் பாதகமான விஷயங்களையெல்லாம் வெகு பிரியமாக வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் விஷயத்தில் அப்படிச் செய்யவில்லை. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் உங்கள் வீட்டில் இருந்துகொண்டே நீங்கள் இல்லாத சமயம் பார்த்து உங்கள் நண்பன் ஒரு வேசியை அழைத்துவந்தானென்ற விஷயம் எழுதியிருப்பது சரி. ஆனால் நீங்கள் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் ஒருவன் உங்களை மாமிசம் தின்னுமாறு தூண்ட, நீங்கள் அதற்காக வீட்டில் திருடினீர்களே அதே முஸ்லீம்தானா இவன் என்பதை எழுதவில்லைஎன்றேன்.
பாபூ, “நீ சொல்லுவது சரியே. நான் வேண்டுமென்றேதான் இதை எழுதவில்லை. நான் எழுதப் புகுந்தது என் சரிதையை; அதில் இந்த விவரம் தரத்தேவையில்லை. மேலும், இந்த மனிதன் இன்றும் இருக்கிறான். சிலருக்கு எனக்கும் அவனுக்குமுள்ள சம்பந்தமும் தெரியும். இரண்டு சந்தர்ப்பங்களும் இணைக்கப்படுமானால் அவனிடத்தில் பிறருக்கு வெறுப்பு அதிகமாகும்என்றார்.
ஒவ்வொரு மனிதன் விஷயத்திலும் பாபூவுக்குள்ள பரிவைக் கவனிக்கையில் எனக்கு ஒரு பழைய செய்தி நினைவுக்கு வருகிறது.
காசி இந்து சர்வகலாசாலையில் பாபூவின் சொற்பொழிவு நடந்த பிறகு பத்திரிகைகளில் பாபூவையும் திருமதி. அன்னி பெஸெண்டையும் பற்றி விஸ்தாரமாகவும் கடுமையாகவும் வாதவிவாதங்கள் நடந்தன. அதே சந்தர்ப்பத்தில் பம்பாய் இந்தியன் ஸோஷல் ரிபார்மர்பத்திரிகையில் திரு. நடராஜன் பாபூவைப் பற்றி 'Everyone's honour is safe in his hands' (எவர் மானமும் அவரிடம் பாழாகாதிருக்கும்) என்று எழுதினார்.
பாபூவின் சுபாவத்தின் இந்த அம்சத்தை திரு. நடராஜனால்தான் இவ்வளவு அழகிய சொற்களில் வெளியிட முடியும்.
இதைப் போன்ற மற்றொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது.
ஒரு பிரபல முஸ்லீம் ஊழியரைப் பற்றிப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவர் பொது விஷயத்தில் தவறாக நடந்துகொண்டதொன்றைக் குறிப்பிட்டேன். பாபூ துயரத்தோடு, “அது முதல் எனக்கு அவரிடமிருந்த மதிப்பு குறைந்துவிட்டது. ஆனால் அதனாலென்ன? அவருக்கு நஷ்டமொன்றும் ஏற்படாது. என் அபிப்பிராயத்தில் ஒருவர் மதிப்பு அதிகமானாலென்ன குறைந்தாலென்ன? என் அன்பு அதனால் குறையப்போவதில்லையே!என்றார்.
76. உள்ளத்தின் விழைவு
இது 1926-27-ல் நடந்தது. கதர் சுற்றுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு பாபூ ஒரிஸ்ஸாவுக்குப் போனார். அங்கே நாங்கள் ஈடாமாடி என்ற ஊரை அடைந்தோம். பாபூவின் பேச்சு நடந்தது. பிறகு மக்கள் தம் தம் காணிக்கைகளையும் சந்தாவையும் எடுத்துவந்தார்கள். ஒருவன் பரங்கிக்காயும். ஒருவன் பிஜௌராவும், இன்னொருவன் கத்தரிக்காயும், வேறொருவன் காட்டுப் பச்சிலை ஒன்றும் கொண்டுவந்தனர். சில ஏழைகள் தங்கள் கந்தல் துணிமுடிகளை அவிழ்த்துச் சில காலணாக்களைக் கொடுத்தார்கள். நான் கூட்டமெங்கும் சுற்றிச்சுற்றிப் பணம் சேர்த்து வந்தேன். பாசி படிந்த காலணாக் காசுகள் பட்டுப்பட்டு என் கைகள் பச்சையாகிவிட்டன. நான் பாபூவுக்கு என் கைகளைக் காட்டினேன்; என்னால் பேசமுடியவில்லை. மறுநாள் காலையில் பாபூவுடன் உலாவக் கிளம்பினேன். நாங்கள் பாதையை விட்டு வயல் புறங்களில் சுற்றப் போனோம். அப்பொழுது பாபூ, “இங்கே எவ்வளவு ஏழ்மையும் எளிமையும் பார்த்தாயா? இந்த மக்களுக்காக என்ன செய்யலாம்? நான் சாகும் தருணத்தில் ஒரிஸ்ஸாவுக்கு வந்து இந்த மக்களிடையே இறங்க வேண்டுமென்று விருப்பமுண்டாகிறது. அப்பொழுது என்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு இவர்களின் பரிதாப நிலை தெரியவருமல்லவா? அவர்களுள் எவருக்கேனும் மனம் இளகவும், அவர் இங்கே வந்து இவர்களின் பணிக்காக இங்கேயே தங்கிவிடலாமல்லவா?” என்றார்.
இதற்குமேல் நான் சொல்லுவதற்கென்ன இருக்கிறது? அவருடைய இந்தப் புனிதமான உள்ள விழைவுக்குச் சாட்சியாக இருக்க வாய்ப்புக் கிட்டியதை எண்ணி மகிழ்ந்தேன்.
77. நம்பிக்கையின் சின்னம்
இதே யாத்திரையில் நாங்கள் சார்படியாவுக்குப் போனோம். அங்கும் இதே போன்ற கூட்டம் நடந்தது. ஈடாமாடியைவிட அதிகப் பரிதாபமான காட்சியை எங்கும் காண முடியாதென்று எண்ணியிருந்தேன். ஆனால் சார்படியா அதையும் விஞ்சிவிட்டது. வந்திருந்தவர்களே ஒரு சிலர்தான். அவர்களுள் எவர் முகத்திலும் உயிரின் ஒளியையே காணோம். எல்லோரும் பிரேதங்கள் போல் காணப்பட்டார்கள்.
இங்கும் பாபூ காசு தரும்படி மக்களிடம் வேண்டிக்கொண்டார். மக்களும் இருந்ததை எடுத்தெடுத்துக் கொடுத்தார்கள். என் கைகளும் முன்போலப் பசுமையாகிவிட்டன.
இந்த மக்கள் ரூபாயைக் கண்ணால் கண்டவர்களே அல்ல; தாமிரக் காலணாக்கள்தான் இவர்களுக்கு பெரிய பணம். காலணா கைக்கு வந்ததானால் அதைச் செலவழிக்க இவர்களுக்கு மனமே வருவதில்லை. வெகுகாலம் வரை துணியில் முடிந்து வைத்திருப்பதனாலும் மண்ணில் புதைத்து வைப்பதனாலும் அவைமீது பாசி படர்ந்துவிடுகிறது.
நான் பாபூவிடம், “இவர்களிடமிருந்து இந்தக் காசுகளை வாங்கி என்ன பயன்?” என்று கேட்டேன். இதற்கு பாபூ, “இது புனிதமான தானமல்லவா? இது நமக்கு தீட்சையாகும். இது ஏமாற்றத்திலேயே ஆழ்ந்திருந்த இவ்விடத்திய மக்களின் உள்ளங்களிலும் நம்பிக்கை முளைக்கக் காரணமாய் இருக்கிறது. இந்தக் காசுகள் அந்த நம்பிக்கையின் சின்னமே. 'நமக்கும் நல்ல காலம் பிறக்கும்'என்று இவர்கள் நம்பத்தொடங்கிவிட்டார்கள்என்றார்.
***
இந்த இடமும், இந்த நாளும் நினைவிலிருப்பதற்கு மற்றொரு காரணமும் ஏற்பட்டது. நாங்கள் இரவில் அங்கேயே தூங்கினோம். மறுநாள் சூரியோதயம் வெகு அழகாயிருந்ததனால் அதைப் பார்ப்பதற்கு பாபூ என்னை அழைத்தார். பிறகு என்னிடம், “உனக்கு குஜராத் வித்தியாபீடத்தின் நிலைமை தெரியும். அதன் பொறுப்பை உனக்களித்தால் ஏற்பாயா?” என்றார். நான், “பாபூஜி. வித்தியாபீடத்தின் நிலைமை பற்றி உங்களுக்குத் தெரிந்ததை விட அதிகமாக எனக்குத் தெரியும். பிரச்னை சிக்கலாகிவிட்டது. ஆனால் குறைந்தது ஒரு விஷயத்திலாவது உங்கள் கவலையைப் போக்கக் கருதி, நான் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்என்றேன். பாபூ, “ஒரு டாக்டரிடம் ஒரு நோயாளி வந்தானென்றால் டாக்டர் சுலபமாக சிகிச்சை செய்யும் பொறுப்பை ஏற்கக்கூடிய நிலைமையிலா வருவான்? டாக்டரும் பிழைக்கக்கூடிய நிலைமையிலிருக்கும் நோயாளிக்குத்தான் வைத்தியம் செய்வேனென்று சொல்லலாமா?” என்றார்.
நான், “நிலைமை அவ்வளவு மோசமாயில்லை. வித்தியாபீடத்தை நான் நிச்சயமாக நல்ல நிலைக்குக் கொண்டுவந்து. சிறிது சிறிதாக கிராமத்தை நோக்கித் திருப்பிவிடுகிறேன்என்றேன்.
நான் வித்தியாபீடப் பொறுப்பை ஏற்றபொழுது அதன் பாடத்திட்டத்தில் கதர் வேலை, தச்சுவேலை முதலியவைகளைச் சேர்த்ததோடு கிராம சேவா தீட்சித்என்ற புதிய பட்டமொன்றையும் ஏற்படுத்தினேன். அதற்கும் மாணவர்களைத் தயாரித்தேன். திரு. பபல்பாய் மேதாவும். ஜவேரிபாய் படேலும் அந்த கிராம சேவை மந்திரத்தில் முதலில் பட்டம் பெற்றவர்களே. இவர்கள் இருவரும் கிராம சேவையை எவ்வளவு சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பபல்பாய் மாரூம் காமடூங்’ (என் ஊர்) என்ற புத்தகத்தில் எழுதியிருக்கும் அனுபவங்கள் மயிர்சிலிர்க்கச் செய்யும் நாவலில் உள்ளவை போன்றவை.
78. நினைவிலும் மறதியிலும் ஒரே எண்ணம்
பாபூ இந்தியாவுக்குத் திரும்பி வந்து அதிக நாள் ஆகவில்லை. ஏதோ காரியமாக அவருக்கு பம்பாய் போகவேண்டி வந்தது. அங்கே அவருக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அவர் ரேவாசங்கர் பாயின் மணி பவனில் தங்கியிருந்தார். மகாதேவ் பாய் அவருக்கு உதவி வந்தார். ஒருநாள் ஜுரம் மிகவும் அதிகமாகி ஜன்னி பிறந்துவிட்டது. இரவில் மகாதேவ் பாயை எழுப்பி, “மகாதேவ். இந்த வங்காளிகள் கல்கத்தாவில் காளியின் பெயரைச் சொல்லி, காளிகட்டத்திலுள்ள கோயிலில் பசுக்களைக் கொல்லுகிறார்கள். இது தருமமல்ல, பெரிய அதருமம் என்று இவர்கள் மனத்தில் படும்படி எப்படிச் சொல்வது? கிளம்பு, நாம் இருவரும் போய் சத்தியாக்கிரகம் செய்வோம்; அவர்களைத் தடுப்போம். அப்பொழுது ஆத்திரமடைந்த வங்காளி பிராமணர்கள் நம்மீது பாய்ந்து நம்மைக் கண்டதுண்டமாக வெட்டுவார்கள். இந்தப் பசு வதையைத் தடுப்பதில் நமது உயிர் போவதில் தவறென்ன?” என்றார்.
[இந்தச் செய்தியை மகாதேவ் பாய் எனக்குச் சொன்னார்.]
79. 'பசுவைக் கைவிடேன்'
1927-ல் சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. நாங்கள் ஸ்ரீநிவாச அய்யங்கார் வீட்டில் தங்கியிருந்தோம். அவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமை விஷயமாக ஓர் ஒப்பந்த நகல் தயாரித்து அதுபற்றி பாபூவின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வதற்காகக் கொண்டுவந்தார். அது பாபூ அரசியலிலிருந்து ஒதுங்கியது போல் இருந்துவந்த காலம்; அவர் தம் சக்தி முழுவதையும் கதர் வேலையிலேயே ஈடுபடுத்திவந்தார். ஒப்பந்த நகல் கைக்கு வந்ததும் அவர், “எவருடைய முயற்சியினாலாவது, எந்த நிபந்தனையின் மீதாவது இந்து - முஸ்லிம் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடுமானால் எனக்கு அது சம்மதமே. எனக்கு இதில் காட்ட வேண்டியதென்ன இருக்கிறது?” என்றார். ஆயினும் ஒப்பந்த நகல் பாபூவிடம் காட்டப்பட்டது. அவர் மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு, “சரிதான்என்றார்.
மாலைப் பிரார்த்தனை ஆனபின் பாபூ விரைவில் தூங்கிப்போனார். காலையில் வெகு சீக்கிரமாக எழுந்தார்; மகாதேவ் பாயை எழுப்பினார்; நானும் விழித்துக்கொண்டேன். அப்பொழுது அவர், “பெரிய தவறு நேர்ந்துவிட்டது. நேற்று மாலையில் நான் நகலைக் கவனமாகப் படிக்கவில்லை. 'சரிதான்'என்று சாதாரணமாகச் சொல்லிவைத்தேன். இரவில் அதில் முஸ்லீம்களுக்கு பசுவதை செய்ய முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறதென்பதும், பசுவைப் பாதுகாக்க வேண்டுமென்ற நம் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருக்கிறதென்பதும் நினைவுக்கு வந்தன. இதை நான் எப்படிச் சகிக்கமுடியும்? அவர்கள் பசுவதை செய்வார்களானால் நாம் அவர்களை பலவந்தமாகத் தடுக்கக்கூடாதுதான். ஆனால் அவர்களுக்கு உதவி செய்து விஷயத்தை எடுத்துச்சொல்ல முடியுமல்லவா? சுயராஜ்யத்திற்காகக்கூட பசுப் பாதுகாப்பென்ற லட்சியத்தை என்னால் துறக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தில் எனக்குச் சம்மதமில்லையென்று அவர்களிடம் இப்பொழுதே போய்ச் சொல்லிவிடு. விளைவு என்னவான போதிலும் சரி, எளிய பசுக்களை நான் இம்மாதிரிக் கைவிட மாட்டேன்என்றார்.
சாதாரணமாக எந்த நிலைமையிலும் பாபூவின் குரலில் ஆத்திரம் தொனிக்காது; அமைதியாகவேதான் பேசுவார். ஆனால் மேலே உள்ளதைச் சொல்லும் பொழுது அவர் ஆத்திரம் உள்ளவர்போல் காணப்பட்டார். நான் என் மனத்திலேயே,
அஹோபத மஹத்பாபம் கர்த்தும் வ்யவஸிதாவயம்!
யத்ராஜ்ய லாபலோபேன காம் பரித்யக்தமுத்யதா:!!
(ஐயோ, நாம் எத்தகைய கொடிய பாவம் புரியத் துணிந்தோம்! ராஜ்ய ஆசையினால் பசுவைக் கைவிட முற்பட்டோமே! - கீதை சுலோகத்தின் தழுவல்)
என்று சொல்லிக்கொண்டேன். பாபூவின் நிலைமை இப்படித்தான் இருந்தது.
80. நல்லெண்ணம் கெடாதிருக்க வழி
மிஸஸ். அன்னி பெஸண்ட் ஹோம்ரூல் லீகை ஸ்தாபித்து இந்தியாவில் அரசியல் இயக்கத்தை ஆவேசத்துடன் நடத்தினார். சர்க்கார் அவரைக் காவலில் வைத்துவிட்டது. அப்பொழுது அதற்காக என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசிப்பதற்கு திரு. சங்கர்லால் பாங்கர் பாபூவிடம் வந்தார். பாபூ சத்தியாக்கிரகம் செய்யலாமென்று ஆலோசனை கூறும் கடிதமொன்று எழுதினார். அக் கடிதத்தை சங்கர்லால் பாய் பிரசுரித்துவிட்டு சத்தியாக்கிரகத்திற்கு ஆயத்தம் செய்தார். இதையெல்லாம் பார்த்த சர்க்கார் மிஸஸ். அன்னிபெஸண்டை விடுவித்துவிட்டது.
பிறகு இயக்கத்தின் சொரூபமே மாறிவிட்டது. ஒத்துழையாமையின் காலம் வந்தது. மிஸஸ். அன்னிபெஸண்ட் 'நியூ இந்தியா'என்ற ஓர் ஆங்கில தினசரிப் பத்திரிகை நடத்திவந்தார். அதில் பாபூவை எதிர்த்து நாள்தோறும் ஏதேனும் எழுதப்பட்டுவந்தது. ஒருநாள் அதில் மிகவும் மோசமான கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. நான் பாபூவிடம், “நீங்கள் நேற்றைய நியூ இந்தியாகட்டுரையைப் படித்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு பாபூ, “நான் நியூ இந்தியாபடிப்பதை நிறுத்தி வெகுகாலமாகிவிட்டது. விசேஷமான யுக்திவாதம் பொருந்திய கட்டுரைகள் அதில் வந்துகொண்டிருந்த வரையில் படித்தேன். பிறகு என் சொந்த விஷயங்கள் பற்றி கண்டனங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பதைப் பார்க்கவே படிப்பதை நிறுத்திவிட்டேன். சொந்த விஷயமாகக் குற்றங்குறைகள் சொல்லப்படுவதைக் கேட்பதனால் நம் மனம் மாறி மாசு தோன்றுவது இயற்கை. படிக்காமலே இருந்துவிட்டால் நல்ல எண்ணம் எப்பொழுதும் போல் இருந்துவரும். இப்பொழுது நான் மிஸஸ். பெஸண்டைப் பார்ப்பேனானால் என் மனத்தில் அவரிடம் ஏற்கனவே இருந்த மரியாதையுணர்ச்சி அப்படியே இருக்குமே தவிர சிறிதும் குறையாதுஎன்றார்.

காந்திக் காட்சிகள் 21 - காகா காலேல்கர்

$
0
0
81. கர்வேயின் பெருமை
ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட புதிது. நாங்கள் கோசரப்பிலுள்ள பங்களாவில் இருந்துவந்தோம். தம் நிறுவனத்திற்காகப் பணம் வசூலிக்க புரொபஸர் கர்வே அகமதாபாத்துக்கு வந்திருந்தவர் பாபூவைப் பார்க்க ஆசிரமத்திற்கும் வந்தார்.
பாபூ ஆசிரமவாசிகள் அனைவரையும் ஒன்று கூட்டி எல்லோரையும் அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யச் சொன்னார். பிறகு, “கோகலேஜி தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தபோது நான் அவரிடம், ‘உங்கள் மாகாணத்தில் சத்தியத்தில் உறுதியுள்ளவர்கள் யார் யார்?'என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் என் பெயரைச் சொல்வதற்கில்லை. சத்திய மார்க்கத்திலேயே செல்லுவதற்கு முயன்றபோதிலும், அரசியல் விவகாரங்களில் பொய்யும் கலந்துதான் விடுகிறது. எனக்குத் தெரிந்தவர்களுள் 3பேர் சிறிதும் உண்மை தவறாதவர்கள், ஒருவர் புரொபஸர் கர்வே. இரண்டாமவர் சங்கரராவ் லவாடே, (இவர் கள் குடியை நிறுத்தும் வேலையைச் செய்துவந்தார்). மூன்றாமவர் ...என்றார். சத்தியத்தில் உறுதியுள்ளவர்கள் நமக்குப் புண்ணியஸ்தலங்கள் போன்றவர்கள். சத்தியாக்கிரக ஆசிரமம் சத்தியத்தை வழிபடுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டிருப்பது. இம்மாதிரியான ஆசிரமத்தில் சத்தியத்தில் உறுதியுள்ள ஒருவர் வரும் நாள் நமக்கு நன்னாளாகும்என்றார். பாவம், கர்வே அப்படியே உருகிப்போய்விட்டார். அவரால் பதிலெதுவுமே சொல்ல முடியவில்லை. காந்திஜீ, நீங்கள் என்னை மிகவும் நாணமுறச் செய்துவிட்டீர்கள். உங்கள் முன்னிலையில் நானும் ஒரு மனிதனா?” என்றார்.
82. கிளையை ஒடித்தல் பாவம்
1930-ல் பாபூவுடன் இருப்பதற்காக அனுப்பப்பட்டேன். நான் என்னுடன் நிரம்ப பட்டை கொண்டுபோயிருந்தேன். அங்கே நான் இருக்க வேண்டிய காலம் 5மாதத்திற்கு அதிகமில்லை. அந்த 5மாதத்திற்குத் தட்டு ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான பட்டை என்னிடமிருந்தது. ஆனால் சில நாட்களுக்குள்ளேயே சர்க்கார் திரு. வல்லபாயையும் எரவாடா சிறைக்குக் கொண்டுவந்துவிட்டது. அவருக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு சுவரே இருந்தபோதிலும் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. பாபூவுக்கு இது மிகவும் வருத்தமளித்துவந்தது. இந்த சர்க்கார் எவ்வளவு தொந்தரவளிக்கிறது பார். வல்லபாயை சபர்மதியிலிருந்து இங்கே கொண்டுவந்திருக்கிறது. நான் அவர் குரலைக்கூட சில சமயம் கேட்க முடிகிறது; ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை. சர்க்காருக்கு இதிலென்ன இன்பமோ தெரியவில்லை!என்று சொல்லிவந்தார். பாபூவை தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு அவருடைய தீரமும் கம்பீரமுமே தெரியும். அவருடைய அன்பு எவ்வளவு ஆழ்ந்தது, அதற்கு பங்கம் நேரும்போது அவர் எப்படித் துடித்துப்போகிறார் என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அறிய முடியாது. பாபூ தாழ்வாரத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது அவர் பார்வை அடிக்கடி சுவரின் மறுபுறத்திற்கே போய்க்கொண்டிருக்கும்.
ஒருநாள் மேஜர் மார்ட்டின் (சூபரின்டென்டெண்ட்) வல்லபாயின் கடிதமொன்றை வாங்கிவந்தார். அதில் என் பட்டைகளெல்லாம் செலவாகிவிட்டன. உங்களிடமிருந்தால் அனுப்புங்கள்என்று எழுதியிருந்தது. வல்லபாய் நூல் நிரம்ப நூற்றுவந்தார். ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது தம் அறையில் சிங்கம் போல் உலாவிக்கொண்டிருப்பார் அல்லது நூல் நூற்பார். அவருடைய தாய்க்கும் நூற்பதில் நல்ல பழக்கமுண்டு. கண் தெரியாமல் போன பிறகும் அவர் நூற்பதை நிறுத்தவில்லை. வீட்டில் உள்ளவர்கள் தங்கள் பட்டைகளை மறைத்து வைக்கவேண்டியதாயிற்று; எங்கேயாவது பட்டை இருந்தால் அதையெடுத்து உடனே நூற்று விடுவார். இத்தகைய தாயின் பிள்ளையல்லவா? பாபூ என்னை, “காகா, உன்னிடம் பட்டை இருக்கிறதா?” என்று கேட்டார். நான், “ஏராளமாயிருக்கிறது. ஆனால் எனக்கு பஞ்சு கொட்டத் தெரியாதே. இதைக் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்றேன். அதற்கு பாபூ, “நான் கற்றுக்கொடுக்கிறேன். இல்லையேல் பட்டை போட்டுத் தருகிறேன்என்றார். நான் கற்றுக்கொள்ளவே விரும்பினேன். ஆனால் என் மனத்தில் பயமிருந்தது. எல்லாப் பட்டைகளும் வல்லபாய்க்கு அனுப்பப்பட்டுவிட்டன.
பாபூ பக்கத்தறையிலேயே எல்லா உபகரணங்களையும் கொணர்ந்து சேர்த்துக்கொண்டு எனக்குப் பஞ்சு கொட்டக் கற்றுக்கொடுத்தார். நான் சில நாட்களுக்குள்ளேயே கற்றுக்கொண்டுவிட்டேன்.
ஆனால் இதற்கிடையில் மழைக்காலம் வந்துவிட்டது. காற்றின் நைப்பினால் நரம்பில் தொய்வு ஏற்பட்டது. நாங்கள் மாற்று என்னவென்று யோசித்தோம். வெயில் வரும்போது வில்லையும் பஞ்சையும் வெயிலில் வைப்பது என்று எண்ணி, அப்படியே செய்தும் வந்தேன். ஆனால் மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. எல்லா நாட்களிலும் வெயிலும் இல்லை. பிறகு எங்களுக்கொரு யுக்தி தோன்றிற்று. எங்கள் தாழ்வாரத்தில் பன்ரொட்டி சுடும் அடுப்பொன்றிருந்தது. அதை ஆங்கிலோ இந்தியக் கைதிப்பிள்ளைகள் உபயோகித்துவந்தார்கள். நான் மாலையில் என் வில்லையும் பஞ்சையும் அந்த அடுப்பினருகில் வைக்க ஆரம்பித்தேன். இதனால் நரம்பு காய்ந்து நல்ல பிகுவாகிவந்தது. ஆனால் அதில் பிரிந்து நீட்டிக்கொண்டிருக்கும் பிசிர்களைப் படியவைப்பதெப்படி? அதற்கு வேப்பிலையை அதன் மீது தேய்க்கலாம் என்று தோன்றிற்று.
ஒருநாள் நான்கைந்து இலைகளுக்காக நான் ஒரு கிளையையே ஒடித்துக்கொண்டு வருவதை பாபூ காணவே, “இது இம்சையாயிற்றே. இது மற்றவர்களுக்குப் புரியாமலிருக்கலாம். உனக்கு சுலபமாகப் புரியவேண்டும். 4இலைகளானாலும் மரத்திலிருந்து மன்னிப்புணர்வுடனேயே பறிக்க வேண்டும். நீ ஒரு கிளையையே ஒடித்துவந்துவிட்டாயே!என்றார்.
மறுநாளிலிருந்து நான் என் முறையை மாற்றிக்கொண்டேன். நான்தான் நல்ல உயரமாயிற்றே, மரத்திலிருந்தே 4, 5இலைகளைப் பறித்துவர ஆரம்பித்தேன். அடுப்பு பயன்படாத அன்று நரம்பில் நைப்புண்டாக்க அதில் மெழுகுவர்த்தியைத் தேய்க்க ஆரம்பித்தேன். அது நல்ல நைப்பை அளித்தது. பாபுவுக்கும் திருப்தியாயிற்று.
இதற்குள் வெளியிலிருந்து பல்குச்சி வருவது நின்றுபோயிற்று. நான் பாபூவிடம், “இங்கேதான் வேப்பமரம் ஏராளமாயிருக்கிறது; நான் உங்களுக்கு பிரதி தினமும் நல்ல புதிய பல்குச்சி தருகிறேன்என்றேன். பாபூ சரிஎன்றார். மறுநாள் ஒரு பல்குச்சி கொண்டுவந்து அதன் ஒரு நுனியை நசுக்கி மிருதுவாயிருக்கும்படி செய்தேன். அதை உபயோகித்த பிறகு பாபூ, “இப்பொழுது இதில் தேய்த்த பக்கத்தை வெட்டியெறிந்துவிட்டு, அதையே மீண்டும் நசுக்கி நாளைக்கு உயோகமாகும்படி செய்என்றார். நான் இங்கேதான் ஒவ்வொரு நாளும் புதிய குச்சி கிடைக்குமேஎன்றேன். அதற்கு பாபூ. அது எனக்குத் தெரியும். ஆனால் நமக்கு அதற்கு உரிமை கிடையாது. ஒரு பல்குச்சி முற்றிலும் உலர்ந்துபோகும் வரை நாம் அதை எப்படி எறியலாம்?” என்றார். மறுநாளிலிருந்து அவ்வாறே செய்யலானேன். சில சமயங்களில் குச்சி நல்ல மிருதுவாக அமைவதில்லை; பாபூவின் ஒரு சில பற்களுக்கும் ஈறுக்கும் நேரும் சிறு துன்பத்தையும் என்னால் பொறுக்க முடியவில்லை. ஆனால் பல்குச்சி மிகவும் சிறியதாகவோ, காய்ந்தோ போய்விடும் வரை புதிய குச்சியொன்றை வெட்டுவதற்கு எனக்கு அனுமதியும் இல்லை!
இவ்வாறு பாபூ சிறையில் தலைசிறந்த கைதியாக மட்டுமின்றி, அஹிம்சை விரதத்தை சிறந்த முறையில் கடைப்பிடிப்போராகவும் விளங்கினார்.
83. சமயோசித புத்தி
இது 1921-ல் நடந்தது. பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. வருடாந்தர மாநாட்டைவிட அது சிறப்பில் குறைந்திருக்கவில்லை. திலகர் சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய் சேர்த்தல் ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைப் பதிவு செய்தல், ஒரு லட்சம் ராட்டைகள் சுற்றச்செய்தல் என்ற வேலைத் திட்டம் இங்கேதான் ஏற்பாடாயிற்று.
அதற்குப் பிறகு ஒரு பெரிய கூட்டம் நடந்தது. ஒரு பெரிய மண்மேடு அமைத்து அதன் மீது தலைவர்கள் அமர்த்தப்பட்டார்கள். நாற்புறமும் மக்கள் கூட்டம் கடலைப்போல் அலைமோதிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி கிடையாது. பேசுவோரின் குரல் வெகு தொலைவு வரையில் எட்டுவதற்கில்லை. மக்களுக்குப் புதிய ஆசையினால் பித்தம் தலைக்கு ஏறியிருந்தது. அவர்கள் காந்தியடிகளைத் தரிசித்தாக வேண்டும். நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே ஒரு பசு கூட்டத்தின் உள்ளே புகுந்துவிட்டது. கூட்டத்தில் ஒரே குழப்பம். பாபூவால் ''நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. சுயராஜ்யத்தின் சங்கொலியைக் கேட்கவே வந்திருக்கிறீர்கள்என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் அந்தப் பெருங்கூச்சலில் எதுவுமே கேட்கவில்லை. பாபூ நாற்காலியில் எழுந்து நின்றார். பித்தம் பிடித்த மனிதர்கள் இதைக் கண்டதும் பெரும் பித்தர்களாகிவிட்டார்கள். அவர்கள் மண்மேட்டை நோக்கி அடித்து மோதிக்கொண்டு வந்தார்கள். அங்கே அவர்களைத் தடுத்து நிறுத்த ஏற்பாடு எதுவுமில்லை. எனக்கு பாபூவின் உயிரைப்பற்றியே கவலையாகிவிட்டது. பகைவரிடமிருத்து தப்புவிக்கலாம், ஆனால் குருட்டு பக்தர்களிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? இடித்துப் புடைத்துக்கொண்டு வந்தவர்கள் மேட்டின் மீதிருத்த பந்தல் காலைப் பற்றி மேலே ஏற முயற்சி செய்யலானார்கள். ஏதேனும் ஒரு கம்பம் சாயுமானால் பந்தல் முழுமையும் தலைவர்கள் தலையில் விழுந்துவிடுவது நிச்சயம்.
பாபூ நிலைமையை உணர்ந்துகொண்டார்; உடனே ஒரு நாற்காலியில் ஏறி நின்றார்; ஓர் இமைப் பொழுதில் நாற்புறமும் கண்ணைச் சுழற்றிப் பார்த்தார். 3, 4நாற்காலிகளைத் தாண்டி கூட்டத்தின் பரப்பு குறைவாயிருந்த பக்கத்தில் குதித்து, மக்களைத்தள்ளி விலக்கி, அம்பைப் போல் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இது யாருக்குமே தெரியாது.
நான் நாற்காலியில் எழுந்து நின்று கவனமாய்ப் பார்க்கையில் பாபூவை எங்கும் காணமுடியாமற்போகவே கூட்டத்தை விட்டு கிளம்பத் தயாரானேன். அங்கே காந்தி இல்லையென்று தெரியவே சிறிது நேரத்தில் கூட்டம் கலையலாயிற்று. நான் மிகவும் சிரமப்பட்டு வீட்டை அடைந்தேன். அங்கே பார்த்தால் கூட்டத்திற்கே போகாதவரைப் போல தம் அறையில் உட்கார்ந்துகொண்டு சௌக்கியமாகக் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறார்! நீங்கள் எப்படி வந்தீர்கள்?” என்று கேட்கவே அவர், “கூட்டத்திற்கு வெளியே வந்ததும் யாரோ ஒருவருடைய வண்டி போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதை நிறுத்தி ஏறிக்கொண்டு இங்கே வந்து சேர்ந்தேன்என்றார்.
84. அபூர்வக் காட்சி
குஜராத் வித்தியாபீடத்தின் நிர்வாக சபையின் கூட்டம் நடந்தது. பாபூவும் அதற்கு வரவேண்டியவர். அவர் வருவதற்காக இருந்த வண்டி உரிய நேரத்தில் வரமுடியவில்லை போலும். பாபூ நேரத்தில் காரியங்களைச் செய்வதில் மிகவும் பிடிவாதமுள்ளவர். வண்டி வரவில்லையென்று தெரியவே, ஆசிரமத்திலிருந்து கால்நடையாகவே புறப்பட்டுவிட்டார். ஆனால் கூட்ட நேரத்திற்குள் எப்படி வந்துசேர முடியும்? நேரமோ அனேகமாய் ஆகிவிட்டது. ஆசிரமத்திலிருந்து வித்தியாபீடத்திற்கு தூரம் அதிகம். இடையிலுள்ள சாலையில் ஜன நடமாட்டம் இராதாகையால் வண்டி கிடைப்பதற்கும் வழியில்லை.
சிறிது தூரம் சென்ற பிறகு பாபூ கதருடை தரித்த ஒருவர் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பதைக் கண்டார். அவரை நிறுத்தி, “சைக்கிளைக் கொடும், எனக்கு வித்தியாபீடத்திற்குப் போகவேண்டும்என்றார். அவர் பதில் பேசாமல் சைக்கிளைக் கொடுத்துவிட்டார்.
பாபூவுக்கு எப்பொழுதோ - தென்னாப்பிரிக்காவிலிருந்த காலத்தில் - சைக்கிளில் ஏறிப் பழக்கமுண்டு போலும். இந்தியாவில் அதற்கு சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை. அவ்வளவுதான், சைக்கிளில் ஏறிக்கொண்டு வித்தியாபீடத்திற்கு வந்து சேர்ந்தார். பாபூ குறித்த நேரத்தில் வந்துவிட்டதைக் காண ஆச்சரியமாயிருந்தது. ஆனால் ஒரு சிறிய ஆடை மட்டும் அணிந்துகொண்டு திறந்த உடம்புடன் சைக்கிள் மீது ஏறிவந்த பாபூவின் அந்தக் காட்சியை ஆயுளில் பிறகு எப்பொழுதுமே பார்க்க இயலவில்லை.
85. ‘நடை வண்டி
1924-ன் தொடக்கத்தில் நோய் காரணமாக பாபூ எரவாடா சிறையிலிருந்து உரிய காலத்திற்கு முன்பே வெளிவந்துவிட்டார். நானும் என் ஓராண்டுத் தண்டனையை அனுபவித்தான பிறகு அவரைப் பார்ப்பதற்காக பூனாவுக்குச் சென்றேன். நாங்கள் சிறுபிள்ளைகளுக்காக குஜராத்தியில் ஒரு பால சிட்சை தயாரித்தோம். அதற்கு சாலன் காடி” (நடைவண்டி) என்று பெயரிட்டோம். அதிலிருந்த விசேஷம், குழந்தைக்கு ஒன்றிரண்டு எழுத்துக்கள் வந்ததுமே வார்த்தைகளையும் படிக்க இடமிருந்ததாகும். ஒவ்வொரு பக்கத்திலும் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகம் முழுவதும் பல நிற ஆர்ட் காகிதத்தில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டிருந்தது. புத்தகத்தை ஜோடனை செய்வதில் நாங்கள் குறையெதற்கும் இடம் வைக்கவில்லை. குழந்தைகளுக்கு எழுத்துக்கள் வருவதோடு நல்லது கெட்டதை உணரும் பகுத்தறிவும் ஏற்படவேண்டுமென்பது நோக்கம். புத்தகத்தின் விலை 5அணா என்று வைக்கப்பட்டிருந்தது. அதை குஜராத் நன்கு வரவேற்றது. அது பற்றிய முழுக் கற்பனையும் என்னுடையதாயிருந்ததோடு, அதன் ஒவ்வொரு பக்கமும் என் பார்வையில் தயாரானமையால் நான் அது குறித்துக் கொஞ்சம் பெருமையும் பட்டதுண்டு.
ஒருநாள் நான் பாபூவிடம், “நீங்கள் சாலன் காடிபார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர், “ஆம், பார்த்தேன். அழகாய்த்தான் இருக்கிறது. ஆனால் அதை யாருக்காகத் தயாரித்தாய்? தேசீயக் கல்வியின் ஆசார்யரல்லவா? பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் குழந்தைகளுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு உன்னுடையது. இன்றுள்ள பால சிட்சைகள் ஒரு அணாவுக்குக் கிடைக்கின்றனவென்றால் உன் பால சிட்சை அரை அணாவுக்குக் கிடைக்க வேண்டும்; காலணாவுக்கே ஏன் கிடைக்கக்கூடாதென்று நான் கேட்பேன். 5அணாவுக்கே உன் புத்தகம் மலிவானதுதான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏழைகள் 5அணாவுக்கு எங்கே போவார்கள்?” என்று கேட்டார்.
நான் என் அறியாமையை எண்ணி வெட்கிப்போனேன். அது குறித்து எனக்குப் பெருமையாகவே தோன்றிய போதிலும் அகமதாபாத்துக்குப் போய் வர்ணக் காகிதத்திலும், மையிலுமிருந்த பிடிவாதத்தை விட்டு, அதன் புதிய பதிப்பொன்றைப் பிரசுரம் செய்து அதை 11/4அணாவுக்கு விற்கத் தொடங்கினேன். ஆயினும் அதை எடுத்துக்கொண்டு பாபூவிடம் போவதற்குத் துணிவுண்டாகவில்லை.
பாபுவின் அந்தக் கண்டனத்தின் விளைவாக வித்தியாபீடத்தின் சார்பில் பிரசுரிக்கப்பட்டு ரூ.2½-க்கு விற்கப்பட்டு வந்த புத்த பகவான் சரித்திரம்என்ற நூலின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டபோது, காகிதத்தின் ரகத்தையும், அச்சின் தரத்தையும் சிறிதும் மாற்றாமலே அதை 8அணாவுக்கு விற்றோம். அதன் பயனாக அந்த சரித்திரம் குஜராத்தில் ஏராளமாக விற்கவே, அதனால் நவஜீவன் பிரசுராலயத்தாருக்குச் சிறிதும் நஷ்டமேற்படவில்லை.
86. சுதேசி தத்துவ விளக்கம்
பாபூ ஒருவருடன் பேசுகிறாரென்றால் அவரது பழக்க வழக்கம், மதம், விருப்பு - வெறுப்பு ஆகிய எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாயிருப்பார்.
ஒருநாள் கிறிஸ்துவ நண்பரின் கடிதம் வந்தது. அதில் அவர் சுதேசியைப் பற்றிக் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பாபூ, “சுதேசி தருமம் பைபிளில் உள்ள ஓர் உபதேசத்தை அமுலுக்குக் கொண்டுவருவதேயன்றி வேறல்ல. ஏசுநாதர் உன்னை நீ எப்படி நேசிக்கிறாயோ அப்படியே உன் பக்கத்து வீட்டானையும் நேசிஎன்று சொல்லியிருக்கிறாரல்லவா? ஒரு மனிதன் தன் பக்கத்திலுள்ள கடையை விட்டுத் தொலையிலுள்ள கடையில் போய் சாமான் வாங்குவானானால், அவன் சுதேசி தருமத்தை மறந்து தன் சுயநலத்தினாலேயே இவ்வளவு தூரம் போகிறான். அவனுடைய பக்கத்திலுள்ளவன் கடை வைத்திருப்பது அக்கம் பக்கத்திலுள்ளவர்களை நம்பியே அல்லவா? சுதேசி தருமம், ‘உன் பக்கத்திலுள்ளவர்களுக்குத் துரோகம் செய்யாதேஎன்றே போதிக்கிறதுஎன்று பதில் எழுதினார்.
பாபூவின் இந்தக் கடிதத்தைப் படித்த பிறகே எனக்கு உன் பக்கத்திலுள்ளவனை நேசிஎன்ற போதனையின் பொருள் விளங்கிற்று.
87. பிரார்த்தனைத் தத்துவம்
இதையே போன்ற மற்றோர் உதாரணம்; மீராபஹனுக்காக (மிஸ். ஸ்லேட்) பாபூ ஆசிரம பஜனாவளியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். பிரார்த்தனைக்குப் பிறகு பிரதி தினமும் சிறிது சிறிதாக எழுதி ஆசிரம பஜனாவளி முழுவதையும் மொழிபெயர்த்துவிட்டார். அதில் ஒரு சுலோகத்தில் ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மகாதேவ சம்போஎன்று வருகிறது. நான் ஸம்ஸ்கிருதத்திற்கு ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்துமிருக்கிறேன், மொழியாக்கம் செய்துமிருக்கிறேன். ஜய ஜயஎன்பதற்கு நேர் பொருள் ‘Victory, Victory’ என்பதாகும். ஆனால் பாபூ ‘Thy Will be done’ என்று மொழிபெயர்த்திருந்தார். நான் இதைப் பற்றிக் கேட்டதற்கு அவர், “கடவுளுடைய வெற்றிதான் உலகத்தில் இருந்துவருகிறதே. நாம் பிரார்த்தனை செய்வது நமது உள்ளத்தில் மேலோங்கியிருக்கும் காமம், குரோதம் முதலியவை அகல வேண்டும் என்பதற்காகவே; அதாவது, கடவுள் திருவுள்ளப்படி நாம் காரியம் செய்துகொண்டே போகவேண்டும். கிறிஸ்துவர்களுக்கு Thy Kingdom come அல்லது Thy Will be done என்பதே பொருளாகக்கூடும். பிரார்த்தனையை நாம் நம் உள்ளத்தில் கடவுளின் ஒளி ஓங்கவேண்டுமென்பதற்காகத்தானே செய்கிறோம்?” என்றார்.
(மிஸ். ஸ்லேட் - Miss Slade)
88. 'கோபத்தை அடக்கு'
ஏரவாடா சிறையின் ஜெயிலர் மிஸ்டர் குவின் ஓர் ஐரிஷ்காரர். பிரதி தினமும் மாலையில் எங்கள் நலங்களை விசாரிக்க வருவார். வந்து உட்கார்ந்தால் ஏதேனும் பேச்சு நடக்கும். ஒருநாள் பாபூவிடம், “நான் குஜராத்தி கற்க விரும்புகிறேன்என்றார். பாபூ, “சரி, படியுங்கள்என்றார். அன்று மாலையில் பாபூவிடம் குஜராத்தி பால சிட்சை படிக்க ஆரம்பிக்கவே, பாபூவும் நேரம் செலவிட்டு அன்புடன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் அவர் போன பிறகு பாபூ என்னிடம், “என்னைவிட உன்னால் இவருக்கு நன்றாகச் சொல்லிக்கொடுக்க முடியுமென்று எனக்குத் தெரியும். என் நேரமும் மிச்சமாகும். ஆனால் இவருக்கு என்னிடம் படிக்கவேண்டும் என்பதில்தான் ஆசைஎன்றார்.
பிறகு அவர் காலையில் வர ஆரம்பித்தார். ஒருநாள் வரவில்லை. எங்களுக்குச் சிறிது வியப்பாயிருந்தது. நான் விசாரித்தேன். காரணம் தெரியவந்தது. மறுநாள் சாப்பாட்டிற்குப் பிறகு, “நேற்று குவின் வராததற்குக் காரணம் தெரிந்துவிட்டது. நேற்று காலையில் இங்கே தூக்குப் போட்டார்கள். அவர் அங்கே போகவேண்டியிருந்ததால் இங்கே வரவில்லைஎன்றேன். நான் சொன்னதைக் கேட்டதுமே பாபூவுக்கு உடம்பு என்னவோ போலாகிவிட்டது. அவர் முகபாவமே மாறிப்போயிற்று. சாப்பிட்ட சாப்பாடு இப்பொழுதே வெளியே வந்துவிடும் போலிருக்கிறதேஎன்று சொல்லலானார்.
நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே தூக்கு மேடையிருப்பது காந்தியடிகளுக்குத் தெரியும். தம் அருகிலேயே முதல் நாள் ஒரு மனிதன் தூக்கிலேற்றப்பட்டான் என்பதைக் கேட்டவுடனே அவர் மனத்தில் அவனுடைய உருவம் அப்படியே வந்து நின்றுவிடவும் நான் கண்டு திகிலடையும்படி அவர் உடல் பாதிக்கப்பட்டுவிட்டது.
ஒருநாள் மிஸ்டர் குவின் பாபூவிடம், “குஜராத்தி கையெழுத்தை நான் அடிக்கடி படிக்க உதவும்படியாக எனக்கு ஒரு வாக்கியம் காகிதத்தில் எழுதிக்கொடுங்கள்என்று கேட்டார். அதற்கு பாபூ, “கைதிகளை நேசி. எந்தக் காரணத்தினால் மனத்தில் கோபம் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அமைதியாயிரு”'என்று எழுதிக்கொடுத்தார்.
இதே மிஸ்டர் குவின் பிற்காலத்தில் விஸாபூர் சிறைக்கு சூபரின்டெண்டெண்டான பொழுது குஜராத்தின் அரசியல் கைதிகள் அங்கே போனார்கள். அப்பொழுது ஏதோ சந்தர்ப்பத்தில் அவருக்கு மிகுந்த கோபம் வந்துவிடவும், அரசியல் கைதிகளும் அவரிடம் மிகுந்த முரண்டு செய்தார்கள். துப்பாக்கியால் சுடவேண்டிய சமயமும் வந்திருக்கும்; ஆனால் மிஸ்டர் குவின்னின் பையில் பாபூ எழுதிக்கொடுத்த குஜராத்தி வாக்கியமுள்ள அந்தக் காகிதம் இருந்தது. அவர் அதை எடுத்துப் படிக்கவே சாந்தமாகிவிட்டார். சத்தியாக்கிரகிக் கைதிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இதேமாதிரி ஒரு சமயம் சிறையில் ஓர் ஆங்கிலோ இந்திய அதிகாரி பாபூவிடம் ஆட்டோகிராப்’ (கையெழுத்து) கோரியது நினைவுக்கு வருகிறது. பாபூ, ‘It does not cost to be kind’ (அன்பாயிருக்கப் பணம் காசொன்றும் செலவில்லை) என்று எழுதிக்கொடுத்தார். அந்த வாக்கியத்தைப் படித்ததிலிருந்து தம் சுபாவமே மாறிப்போனதாக அந்த இளைஞர் என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார்.
89. அற்புதமான அன்பு
எனக்குக் காசநோய் கண்டபொழுது நான் ஆரோக்கியத்திற்காக பூனாவுக்கு அருகில் உள்ள சிம்மகட்டில் போய்த் தங்கிக்கொண்டிருந்தேன். உடம்பு குணமானதும் ஆசிரமத்தில் வந்து இருக்கலானேன். சில மாதங்கள் வரை நான் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்று டாக்டர் சொல்லியிருந்தார்.
ஆசிரமத்திற்கு நான் வந்து சிறிது நேரமாவதற்குள் ஒரு பெண் தட்டில் நல்ல பூக்களை வைத்துக் கொணர்ந்தாள்; “இவைகளை பாபூ உங்களுக்காக அனுப்பியிருக்கிறார்என்று சொன்னாள். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவள் மேலும், “பாபூ எங்களிடம் தினமும் இதேமாதிரி கொண்டுபோய்க் கொடுங்கள். காகாவுக்கு பூக்களென்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்என்றாள்.
பாபூவும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சமயத்தில் என்னிடம் வந்துகொண்டிருந்தார்.
இதேபோல மற்றொரு சமயத்தில் ஆசிரமத்தின் பையனொருவன் பாபூவிடம் வந்து, “பாபூஜி, புரோபஸர் ஆவ்யாசே” (பாபூஜி, புரொபஸர் வந்திருக்கிறார்) என்று சொன்னான். (ஆசிரமத்தில் திரு. ஜீவத்ராம் கிருபளானியை புரொபஸரென்பது வழக்கம்). இதைக் கேட்டதும் பாபூ தேவதாசிடம், “தேவா, பாவிடம் போய் தயிர் இருக்கிறதா என்று கேள். புரொபஸருக்கு தயிர் அவசியம் வேண்டுமே. இல்லையென்றால் எலுமிச்சம்பழம் கொண்டுவா வேறெங்கும் கிடைக்காவிட்டால் காகா வீட்டில் நிச்சயம் இருக்கும்என்றார்.
பாபூவின் அன்பு சேவைமயமானது. ஒவ்வொரு மனிதனுடைய இன்ப துன்பங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டு நடப்பது அவரது இயற்கைக் குணமாகும்.
ஒருநாள் எரவாடா சிறையில் பாபூவுக்கு பரங்கிக்காய்க் கறி தயாரித்துக் கொடுத்துவிட்டு, நான் அதைச் சாப்பிடாமலிருந்தேன். சிறிது சாப்பிட்ட பிறகு, “உனக்கு பரங்கிக்காய் பிடிக்காதென்று எனக்குத் தெரியும். ஆனால் இன்றைய கறி அலாதியாய் அமைந்திருக்கிறது. கொஞ்சம் சாப்பிட்டுப் பார்என்றார். நாவடக்கத்தைப் போதிக்கும் பாபூ ஏதேனுமொன்றை ருசித்துப்பார்என்று சொல்லுவதென்றால் அது ஓர் அதிசயமே. அவருக்கும் இது தெரிந்துவிட்டது. பரங்கிக்காயும் எவ்வளவு இனிப்பாய் இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளவே உன்னைச் சாப்பிட்டுப் பார்க்கச் சொன்னேன்என்றார்.
இங்கே எனக்கு ஏற்கனவே நடந்த செய்தியொன்று நினைவுக்கு வருகிறது.
நான் ஏதோ காரணமாக பாபூவிடம் போயிருந்தேன். அங்கே யாரோ ஒரு கனவான் வந்து பாபூவின் முன்னால் கொஞ்சம் பழங்களை வைத்தார். அவற்றில் சீகுமிகவும் நன்றாயிருந்தது. பாபூ உடனே இரண்டு பெரிய சீகு பழங்களை எடுத்து என்னிடம் தந்து, “காகா, இவ்விரு சீகுவையும் மகாதேவுக்குக் கொடு. அவனுக்கு சீகு மிகவும் பிடிக்கும்என்றார். மகாதேவ் பாய் நான் இருந்த இடத்திற்குப் பக்கத்திலேதான் வசித்துவந்தார். நான் அவரிடம் போய், “மகாதேவ் பாய், உங்களுக்கு அன்புக் காணிக்கை கொண்டுவந்திருக்கிறேன்என்றேன். சீகுவைப் பார்த்ததும் அவர் மிகவும் மகிழ்வுற்று, “உண்மையில் அன்புக் காணிக்கையேஎன்றார்.
90. சிந்தனையில் பிறந்த செயல்
பாபூவின் கருத்துக்கள் மூல தத்துவத்தை உணர்வதிலிருந்து எழுபவை. அவர் ஆழ்ந்து ஆலோசியாத வாழ்க்கையின் பகுதியோ, அம்சமோ கிடையாது. ஜெர்மன் யஹூதி வகுப்பினரும் கட்டட நிர்மாணத் தொழில் செய்து ஏராளமாகச் சம்பாதித்துக்கொண்டிருந்தவருமான அவருடைய நண்பர் கெலன்பாக் என்பவர் பாபூவிடம், “உங்கள் விஷயம் ஏதேனும் எவருக்கேனும் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி அவை ஒவ்வொன்றிலும் உங்கள் சிந்தனை அடங்கியிருக்கிறதென்பதை எவரும் மறுக்கமாட்டார்என்று அடிக்கடி சொல்லுவது வழக்கம்.
நானும் ஆசிரமத்திற்குப் போனதுமே இவ்விஷயத்தை உணர்ந்தேன். ஆசிரமத்தில் அளிக்கப்படும் சாதம் எனக்கு அறவே பிடிக்கவில்லை. நான் ஒருநாள் பாபூவிடம், “இது சாதமா, சுண்ணாம்பா? நாங்கள் இம்மாதிரியான சோற்றைச் சாப்பிடுவதேயில்லைஎன்று சொன்னேன். பாபூ சிரித்துக்கொண்டே, “இது எனக்கும் தெரிந்ததுதான். முதலில் இதைச் சாப்பிட்டு எப்படியிருக்கிறதென்று பார்என்று சொன்னார்.
இதோடு கூடவே ஓர் உபதேசமும் தொடங்கிவிட்டது: ஜனங்களுக்கு மல்லிகை மொக்குகளைப் போன்ற சாதம் வேண்டியிருக்கிறது. முதலில் சத்து அம்சங்களெல்லாம் நீக்கப்பட்ட மில்லில் தீட்டிய அரிசியை எடுத்துக்கொள்வோம். அரிசியில் எந்த இடத்திலிருந்து முளை கிளம்புகிறதோ, அதுவே மிகவும் புஷ்டியான பாகம். முதலில் அது போய்விடுகிறது. பிறகு சாதம் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும் என்பதற்காகத் தண்ணீரினால் பல முறை கழுவும்பொழுது எஞ்சியிருந்த சத்தையும் போக்கிவிடுகிறார்கள். இவ்வாறு அரிசியை சத்தேயில்லாத வெறும் சக்கையாக்கிச் சாப்பிடுகிறார்கள். அதுவும் நன்றாகப் பக்குவமானதாய் இல்லாவிட்டால் நன்கு மென்று சாப்பிடவும் முடியாது மேலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதனால் சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடுகிறது; பிள்ளையாரைப் போல் தொந்தி வேறு விழுந்துவிடுகிறது. ஆசிரமத்தில் நாங்கள் இம்மாதிரியான அரிசியைச் சமைப்பதில்லை. முதலாவது, எங்கள் அரிசி கைக்குத்தரிசி. அதை நாங்கள் அதிகமாகக் கழுவுவதில்லை. மேலும், நாங்கள் அதைத் தண்ணீரில் நனைத்து வைக்கிறோம். பிறகு வேகவைக்கும்போது அதிலுள்ள நீரையும் கஞ்சியையும் நீக்குவதுமில்லை. வெந்த பிறகு அதை மாவுபோல் மத்தித்துவிடுகிறோம். அது வாய்க்கு ருசியாயிருக்கிறது; சர்க்கரை சேர்க்காமலே தித்திக்கிறது. குறைவாகச் சாப்பிட்டாலே போதுமானதாயிருப்பதோடு, அதிகப் புஷ்டியுள்ளதாயிருப்பதால் தொப்பை விழுவதில்லை
இவ்வளவு காரணங்களையும் கேட்ட பிறகு எனக்கும் நம்பிக்கை பிறக்கவே நானும் அந்தச் சோற்றை விரும்பிச் சாப்பிடலானேன். பிறகு அதே சோற்றில் எல்லா குணங்களும் இருப்பது தெரியவும், அதைப் பெரிதும் ஆதரிக்கத் தொடங்கினேன்.

காந்திக் காட்சிகள் - தொகுப்பு

காந்திக் காட்சிகள் 22 - காகா காலேல்கர்

$
0
0
Photo Courtesy: Fine Art America
91. காந்திக் குல்லாயின் கதை
நான் ஒருநாள் பாபூவிடம் இன்று காந்தித்தொப்பி என்று வழங்குகிற குல்லாயை நீங்கள் எப்படி ஏற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு பாபூ சொன்னதாவது: இந்தியாவின் பல மாகாணங்களில் வழங்கும் பல தலைப்பாகைகளைப் பற்றியும் சிந்திக்கலானேன். நமது வெப்பமான நாட்டில் தலையை மூடி ஏதேனும் இருக்கவேண்டியதே. வங்காளிகளும் தென்னாட்டுப் பிராமணர்களில் சிலரும் வெறுந்தலையாக இருந்தபோதிலும் பெரும்பாலோரான இந்தியர் தலையின் மீது ஏதோ அணியத்தான் செய்கிறார்கள். பஞ்சாபி தலைப்பாகை அழகாக இருந்தபோதிலும் அதற்கு அதிகத்துணி தேவையாகிறது. பக்டிவியர்வையில் ஊறி அசுத்தமாகிவிடுகிறது. குஜராத்தில் வழங்கும் கூர்மையான பங்களூர்த் தொப்பிகள் பார்வைக்கு நன்றாகவே இல்லை. மகாராஷ்டிரத்தின் ஹங்கேரித் தொப்பிகள் அதைவிட நன்றாய் இருந்தபோதிலும் அவை பெல்டினால் செய்யப்படுகின்றன. ஐக்கிய மாகாணத்திலும், பீகாரிலும் வழங்கும் மெல்லிய தொப்பிகள் தொப்பிகளே அல்ல, அழகாகவுமில்லை. இவை எல்லாவற்றையும் பற்றி ஆலோசித்ததில் இது நன்றாயிருப்பதாகத் தோன்றிற்று. இது அழகாயும் கைக்கு லேசாயும் இருப்பதோடு, தயாரிப்பது சுலபமாகவும் துணியில் தைத்ததாகையால் பெட்டிக்குள் அமுக்கி வைக்கக்கூடியதாயும் இருக்கிறது. காஷ்மீர் தொப்பி கம்பளத்தில் செய்யப்படுவது. நான் அதைப் பருத்தித் துணியில் செய்யவேண்டுமென்று எண்ணினேன். பிறகு நிறத்தைப் பற்றி யோசித்தேன். எந்த நிறமிருந்தால் தலைக்கு எடுப்பாயிருக்குமென்று எண்ணிப்பார்த்ததில் ஒரு நிறமும் பிடிக்காமையால் கடைசியாக வெள்ளை நிறமே எல்லாவற்றையும் விடச் சிறந்ததென்று தோன்றிற்று. அதில் வியர்வை பட்டால் தெரியுமாகையால் உடனே துவைக்க வேண்டியிருக்கிறது; துவைப்பதும் சிரமமாயில்லை. தொப்பி வட்டமாகவும் வெண்மையாகவுமிருப்பதால் அதை அணிந்துள்ள மனிதன் துப்புரவாகக் காணப்படுகிறான். இவையெல்லாம் பற்றி ஆலோசித்து இந்தத் தொப்பியைத் தயாரித்தேன். உண்மையில் நம் நாட்டின் தட்பவெப்ப நிலையைக் கருதும்பொழுது Solo Hat எனக்குப் பிடித்ததே. அது வெயிலிலிருந்து தலையையும் கண்களையும் கழுத்தையும் காக்கிறது. மரத்தூளினால் செய்ததாகையால் இலேசாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது; தலைக்கு சிறிது காற்றும் கிடைக்கக்கூடும். இன்று நான் அதைப் பற்றிப் பிரசாரம் செய்யாமைக்குக் காரணம் நம் உடுப்புக்கும் அதற்கும் அவ்வளவு பொருத்தமில்லாதிருப்பதுதான். மேலும், அது ஐரோப்பியர்களின் பொருளாகையால் அதை மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். நம் தொழில் வல்லுநர் அந்த மேல்நாட்டுத் தொப்பியிலுள்ள நல்ல அம்சங்களை ஏற்று, நம் ஆடைக்குப் பொருத்தமாக அதை மாற்றி அமைப்பார்களானால் பெரிய நன்மை செய்தவராவார். இவ்வழியில் சிந்திப்பார்களானால் அவர்களுக்கு இதைக் கண்டுபிடிப்பதில் சிரமமிராது.” 
92. உணவு ஆராய்ச்சி
பாபூ வர்தாவுக்கு வந்து மகன்வாடியில் தங்கியிருந்த பொழுது அவ்விடத்திய மக்களின் நிலையைக் கவனித்துப் பார்த்து, உணவு பற்றி அதிகம் சிந்திக்கலானார். கடைத்தெருவில் காய்கறிகளே கிடைப்பதில்லை; கிடைத்தாலும் கிராக்கியாயிருந்தன. இதைப் பார்த்து கிராமங்களில் ஏழைகள் சாப்பிட்டுவருவதும், பட்டணத்துக் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு வராததுமான கறி எதுவென்று கிராமங்களில் தேடினார். அப்பொழுது மகன்வாடிக்கு அதே கறி வாங்கிக் கொண்டுவரப்பட்டது. இந்தக் கறிகளில் எவ்வளவு உணவுச் சத்திருக்கிறது, இவற்றின் குண தோஷங்கள் யாவை என்ற விஷயங்களை அடுத்தாற்போல் கவனிக்கலானார். சாப்பிட்டுவந்தவர்கள் அத்தனை பேரிடமும் அவரவர் அனுபவங்களைக் கேட்டுவந்தார். பிறகு எல்லா வகையிலும் சாப்பிடுவதற்குத் தகுதிவாய்ந்த சில காய் வகைகள் இருப்பதைப் பார்த்து திருப்தியடைந்தார்.
அந்தக் காலத்தில்தான் சோயாபீன் பற்றிய சோதனை நடந்தது. சோயாபீன் தருவிக்கப்பட்டது. அதை வேகவைப்பது, வெந்த பிறகு அரைப்பது என்று எத்தனையோ பக்குவ முறைகள் பல நாட்கள் வரையில் செய்துபார்க்கப்பட்டன. இதற்கிடையில் சோயாபீனைப் பற்றிய புத்தகங்களையும் ஏராளமாகப் படித்துவிட்டார். ஆனால் சோயாபீனினால் அவருக்கு அதிக திருப்தி ஏற்படவில்லையென்று தோன்றுகிறது.
93. அமைதி அளிப்பதும் கவலை தருவதும்
இது 1927-க்குப் பிறகு நடந்தது. மைசூரில் உலக மாணவர் மாநாடு நடக்கவிருந்தது. மாணவர்களிடையே வேலை செய்துவரும் அமெரிக்கப் பாதிரி மாட் அதற்குத் தலைவர். இந்தியாவுக்கு வந்த பிறகு பாபூவைப் பார்க்காமல் அவர் எப்படிப் போவார்? அவர் அகமதாபாதுக்கு வந்து பாபூவைப் பார்த்துப் பேசுவதற்காக சமயம் கோரினார். பாபூவுக்கு பகல் முழுமையும் மிகுதியாக வேலை இருந்தது. ஆகவே இரவில் தூங்குவதற்கு முன் 10நிமிடம் அளித்தார். நானும் வித்தியாபீடத்திலிருந்து ஆசிரமத்திற்குப் போனேன். 10நிமிடத்திற்குள் என்னென்ன பேச்சு நடக்கிறதென்று பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவல்.
பாபூ முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். பக்கத்திலேயே ஒரு பெஞ்சில் ரெவரண்ட் மாட் வந்து அமர்ந்தார். அவர் தம் கேள்விகளை எழுதிக்கொண்டு வந்திருந்தார். அரிஜன இயக்கம் பற்றிக் கொஞ்சம் கேட்டார். மிஷினரிகளின் பணியினால் விளையும் பயனைப்பற்றியும் விசாரித்தார். பிறகு அவர் கேட்ட இரு கேள்விகளின் விடைகள் என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டன. இம்மாதிரியான கேள்விகளை எப்பொழுதும் எவரும் கேட்பதரிது.
கேள்வி: உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கைக்கும் ஏமாற்றத்திற்கும் காரணமான எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்துகொண்டிருக்குமே, அவைகளிலெல்லாம் உங்களுக்குச் சமாதானமளிப்பது எது?
பதில்: பிறர் அவர்களிடம் எவ்வளவு சேஷ்டை செய்த போதிலும், அவர்களுக்கு ஆத்திரமூட்டிய போதிலும் இந்நாட்டு மக்கள் அஹிம்சை வழியை விட்டு வழுவாதிருக்கிறார்களே, அதுதான் எனக்கு எல்லாவற்றையும்விட அதிக ஆறுதல் அளித்துவருகிறது.
கேள்வி: உங்களை அல்லும் பகலும் சிந்தனையில் ஆழ்த்துவதும், கவலைக்குக் காரணமாயிருப்பதுமான விஷயம் யாது?
கேள்வி கொஞ்சம் விசித்திரமானதே.
பாபூ சிறிது நேரம் தாமதித்தபிறகு, “படித்த மக்களிடையே கருணையுணர்ச்சி வறண்டுபோயிருப்பது குறித்து நான் எப்பொழுதும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்என்றார்.
இந்தக் கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் கேட்டுக்கொண்டிருந்த நான் சிறிது அசௌக்கியமடைந்தவன் போலானேன். வித்தியாபீடத்திற்குப் போய்ப் படுத்தும் தூக்கம் வரவில்லை. நான் படிப்பில்லாத மக்களின் பிள்ளைகளை அழைத்துவந்து அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்கிறேன். அதாவது, பாபூவுக்குச் சமாதானம் தரும் வகுப்பை வரவரக் குறைத்து, அவருக்குக் கவலை தரும் வகுப்பைப் பெருக்கிக்கொண்டிருக்கிறேன். என் உழைப்பின் பயன் இதுதானா? நான் அளித்துவரும் கல்வி தேசியக் கல்வியென்று அழைக்கப்பட்ட போதிலும் இதனால் எனக்கு எப்படி திருப்தியேற்படும்?
இதையடுத்தே வித்தியாபீடத்தில் கிராம ஸேவா தீட்சித்என்ற பட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன்.
94. தாட்சண்யமின்மை
பாபுவுக்கு ஒரு சகோதரியுண்டு. பாபூ தென்னாப்பிரிக்காவில் ஆசிரமம் தொடங்கிய பொழுது தம்மிடமிருந்த எல்லாவற்றையும் அந்த ஆசிரமத்திற்கு, அதாவது நாட்டிற்குக் கொடுத்துவிட்டார். இந்தியாவுக்கு வந்தபொழுது இங்கேயிருந்த தம் பூர்வீக வீடுகளின் மீது தமக்கிருந்த உரிமையையும் துறந்துவிட்டார். பந்துக்களை அழைத்து, இது சம்பந்தமான தஸ்தாவெஜூக்கள் எழுதிக் கையெழுத்திட்டு, தம் நான்கு பிள்ளைகளையும் கையெழுத்திடச் செய்தார். இவ்வாறு அவர் சிறிதும் சொத்தில்லாதவராகத் தம்மை ஆக்கிக்கொண்டுவிட்டார்.
இப்பொழுது கோகீபஹனின் (பாபூவின் சகோதரி) நிர்வாகம் எப்படி நடக்கும்? சொந்தக் காரியங்களுக்காக பாபூ யாரையும் எப்பொழுதும் உதவி கேட்பதில்லை. ஆயினும் அவர் தம் பழைய நண்பரான டாக்டர் பிராண ஜீவன் மேத்தாவிடம் கோகீபஹனுக்கு மாதம் ரூ.10அனுப்பும்படிச் சொன்னார்.
சிறிது காலத்திற்குப் பிறகு கோகீபஹனுடைய பெண் கைம்மையெய்தி தன் தாயுடன் வந்து இருக்கலானாள். கோகீபஹன், “இப்பொழுது செலவு அதிகமாகிவிட்டது. அதனால் அக்கம் பக்கத்தவர்களுக்கு கூலிக்கு தானியம் அரைத்துக் கொடுக்கும் வேலை செய்யவேண்டியிருக்கிறதுஎன்று பாபூவுக்கு எழுதினார். பாபூ அதற்கு மாவு அரைப்பதென்பது மிகவும் நல்லது. அதனால் இரண்டு பேருடைய உடம்பும் ஆரோக்கியமாய் இருக்கும். ஆசிரமத்தில் நாங்களும் மாவு அரைக்கிறோம்என்று எழுதிவிட்டு, உங்களுக்கு இஷ்டமான பொழுது நீங்கள் ஆசிரமத்தில் வந்து உங்களாலான வேலைகளை செய்துகொண்டிருக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு. நாங்கள் எப்படியிருக்கிறோமோ அப்படியே நீங்களுமிருக்கலாம். என்னால் உங்கள் வீட்டிற்குப் பணம் அனுப்பவும் முடியாது, அனுப்பும்படி நண்பர்களிடம் சொல்லவும் முடியாதுஎன்று எழுதினார்.
மாவு அரைத்துப் பிழைக்கக்கூடிய சகோதரிக்கு ஆசிரம வாழ்க்கை கடினமாய்த் தோன்றுவதற்கில்லை. ஆனால் ஆசிரமத்தில் அரிஜனங்களும் இருந்தார்களல்லவா? அவர்களோடு இருக்கவும், சாப்பிடவும் பழைய கால மனிதர்களுக்கு எப்படி முடியும்?
அவர்கள் வரவில்லை. ஏதோ ஒரு சமயத்தில் பாபூவைப் பார்ப்பதற்காக வந்திருந்தபொழுது நான் அவரைக் கண்டு வணங்கினேன்.
95. கிணற்றடி வழக்கு
ஆசிரமத்தின் ஆரம்ப காலம். நாங்கள் கோசரப்பில் இருந்துவந்தோம். எங்கள் பங்களாவுக்கு எதிரில் இருந்த சாலையின் மறுபுறத்தில் இருந்த கிணற்றிலிருத்து தண்ணீர் கொண்டுவருவோம். ஆசிரமத்தில் வேலைக்காரர்கள்தான் கிடையாதே; எல்லா வேலைகளையும் நாங்களே செய்துவந்தோம்.
பாபுவுக்கு இடையிடையே பம்பாய்க்குப் போகவேண்டியிருந்தது. 3-வது வகுப்பில் பிரயாணம்; இரவு முழுவதும் கண் விழிப்பு; பகல் முழுவதும் வேலை செய்த பிறகு இரவில் தூங்குதல். நான் முதலில் பாபூ படுத்ததுமே தூங்கிப்போவாரென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படியில்லை. அப்பொழுதும் பாபூவுடன் தீண்டாமை ஒழிப்பைப் குறித்துப் பேச்சு நடக்கும். ஆசிரமத்தில் ஓர் அரிஜனக் குடும்பம் சேர்ந்திருந்தது. பாவுக்கு அவர்கள் கையால் சாப்பிடுவதற்கு இஷ்டமில்லை. பாவம், பாபூ பழம் மட்டும் சாப்பிட்டுவந்தார். ஆனால் பாபூ இதை எப்படி சகிப்பார்? அவர், “ஆசிரமத்தில் தீண்டல் கீண்டல் ஒன்றும் கிடையாது. உனக்கு இந்த வித்தியாசங்களைப் பாதுகாப்பதே இஷ்டமானால் ராஜகோட்டுக்குப் போய்விடு. என்னுடன் இருக்கமுடியாது.என்று சொல்லுவார். இரவில் வெகுநேரம் வரை இருவரிடையிலும் தர்க்கம் நடக்கும். காலையில் எழுந்ததும் ராமதாசும், தேவதாசும்கூட பாபூவுக்குச் சமாதானம் சொல்லுவார்கள். ஏன் பா, தென்னாப்பிரிக்காவில் அரிஜனங்கள் தொட்டதை நீ சாப்பிட்டுவந்தாயே; இங்கே ஏன் கூடாதென்கிறாய்?''என்பார்கள். அதற்கு பா, “அது அந்நிய நாடு, அவ்விடத்திய விஷயம் வேறு. இங்கே நாம் நம் தேசத்திலிருக்கிறோம். நம் சமூகத்தின் கட்டுப்பாடுகளை எப்படி மீறுவது?” என்பார்.
இங்கே நாங்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் வேலையை ஆரம்பிப்போம், பாபூவும் ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு வருவார். ஒருநாள் நான் பாபூவிடம், "பாபூஜி, நேற்று இரவு உங்களுக்குத் தூக்கமே இல்லை. உங்கள் தலையில் நோவு வேறு உண்டாகியிருக்கிறது. காலையில் என்னுடன் வெகு நேரம் திரிகை சுற்றினீர்கள். போய் கொஞ்சம் இளைப்பாறுங்கள். தண்ணீரைப்பற்றிக் கவலை வேண்டாம்என்று சொன்னேன். ஆனால் பாபூ கேட்பாரா? அவருடன் தர்க்கம் செய்வது வீணென்று எண்ணி, நானும் ராமதாசும் கிணற்றிலிருந்து தண்ணீரைச் சேந்திக்கொடுக்கவும், மற்ற ஆசிரமவாசிகள் பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு போய்க் கொட்டலானார்கள்.
இதற்கிடையில் நான் சமயம் பார்த்துச் சந்தடி செய்யாமல் ஆசிரமத்திற்குப் போய் அங்கே உள்ள சிறிதும் பெரிதுமான எல்லாப் பாத்திரங்களையும் எடுத்துவந்ததோடு, ஆசிரமத்திலிருந்த குழந்தைகளையும் அழைத்துவந்தேன். இப்பொழுது நான் தண்ணீரை இழுத்து ஒரு பாத்திரத்தை நிரப்பியதும் அதை பாபூவிடம் கொடுக்காமல் மற்றவர்களிடம் கொடுத்துவந்தேன். குழந்தைகளுக்கும் என் குறும்பு தெரிந்துவிட்டது. அவர்கள் ஓடி ஓடி என் அருகில் வந்து நிற்கலானார்கள். பாவம், பாபூ தம் முறை வருமென்று காத்துக்கொண்டேயிருந்தார்; பிறகு ஆசிரமத்திற்குப் போய் பாத்திரம் தேடினார்; அங்கே பாத்திரமெதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சத்தியாக்கிரகியாயிற்றே! எப்படித் தோற்கக்கூடும்? அங்கே சிறு குழந்தைகளைக் குளியாட்டுவதற்காக ஒரு மரத்தொட்டி இருந்தது. அதை எடுத்து வந்து, “இதை நிரப்புஎன்றார். நான், “இதை எப்படித் தூக்குவீர்கள்?” என்று கேட்டேன். எப்படித் தூக்குகிறேனென்றும் பாரேன். முதலில் நிரப்புஎன்றார்.
நான் தோல்வியுற்றவனாய் நடுத்தரமான குடமொன்றை எடுத்து அவர் தலை மீது வைத்தேன்!
96. கருமமே கண்ணாயினார்
இது 1919-ல் நடந்தது, அமிர்தசரசின் அக்கிரமத்திற்குப் பிறகு சர்க்கார் நடந்த அட்டூழியம் பற்றி விசாரிப்பதற்காக ஹண்டர் கமிட்டியை நியமித்தது. காங்கிரசுக்கு அது திருப்தி அளிக்காமையால் காங்கிரஸ் அதை பகிஷ்காரம் செய்தது.
பகிஷ்காரத்தோடு நாம் இன்னும் ஏதேனும் செய்ய முடியும் என்று மற்றவர்கள் நினைக்கவில்லை. ஆனால் பாபூ காங்கிரசைக் கொண்டு பிரத்தியேகமான கமிட்டி ஒன்றை நியமிக்கச் செய்து விசாரணையையும் ஆரம்பித்துவிட்டார். அந்தக் கமிட்டியில் சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, ஜெயக்கர், அப்பாஸ் தியாப்ஜி, பாபூ முதலியவர்கள் இருந்தார்கள். மூன்று மாத காலம் விசாரணை நடந்தது. 1700சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களுள் 650பேரின் வாக்குமூலங்கள் பிரசுரிக்கப்பட்டன. இப்பொழுது அறிக்கையைத் தயாரிக்க வேண்டியதுதான் பாக்கி.
பாபூ குறிப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஆசிரமத்திற்கு வந்து அறிக்கையை எழுத ஆரம்பித்தார். கொடுமைகளைக் கேட்டு அவர் ஆத்திரத்தினால் பொங்கிக்கொண்டிருந்தார். இரவும் பகலும் அறிக்கை எழுதப்பட்டுவந்தது. உண்மையில் பகல் இரவு 24மணி நேரமும் அவர் எழுதிக்கொண்டேதான் இருந்தார்; இரவில் 2, 2½ மணி நேரம் தூங்கியிருப்பாரோ என்னவோ. பகலில் எழுதி எழுதி மிகவும் களைத்துப்போனதனால் சில சமயங்களில் அவர் உடல் வேலை செய்ய மறுக்கும். ஒருநாள் அவருடைய இடது கையில் காகிதமும் வலது கையில் பேனாவும் இருக்க, தலையணையில் சாய்ந்தபடியே அவர் தூங்குவதையும், வாய் திறந்தபடி இருப்பதையும் கண்டேன். ஒரு சில கணமே இவ்வாறு கழிந்திருக்கும். உடனே ஏதோ தப்புச் செய்து அகப்பட்டுக்கொண்டவர் போல் திடுக்கிட்டு எழுந்தார்; எழுந்தவர் மீண்டும் எழுதத் தொடங்கிவிட்டார்!
அறிக்கை எழுதி முடிக்கப்பட்டு கமிட்டியின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. எல்லோரும் கையெழுத்திட்டான பிறகு பாபூ அங்கத்தினர்களைப் பார்த்து, “நாம் கையெழுத்தென்னவோ செய்துவிட்டோம். ஆனால் நம் நாட்டில் இம்மாதிரியான அக்கிரமங்கள் நடைபெறுவதையே அசாத்தியமானதாகச் செய்யாதவரையில் நாம் சும்மா இருப்பதில்லைஎன்று உறுதி செய்துகொள்வோமாகஎன்று கூறினார். எல்லா அங்கத்தினர்களும் அவ்வாறே உறுதி செய்தனர்.
இதற்குப் பிறகு நடந்தவை எல்லோருக்கும் தெரிந்தவையே.
97. “புர்ர்ர்ர்ர்
இது 1922-ல் நடந்தது. சர்க்கார் பாபூவைக் கைது செய்து சபர்மதி சிறைக்கு அனுப்பிவிட்டது. அவர் மீது வழக்கு நடக்கவிருந்தது. அந்த இடைக்காலத்தில் பலர் பாபூவைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தார்கள்.
சபர்மதி சிறையில் நல்ல அறைகள் சிறையின் வலது மூலையில் இருக்கின்றன. தூக்குக் கைதிகளை இவைகளில் வைப்பது வழக்கமாகையால், இவை தூக்குக் கொட்டடிகள்என்று அழைக்கப்படுகின்றன. பாபூவும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தார்.
ஒருநாள் நான் பாபூவைப் பார்க்கப் போனேன். சிறையின் வாயிற்படியில் திரு. அப்பாஸ் தியாப்ஜியைக் கண்டேன். அவரும் பாபூவைப் பார்க்கவே வந்திருந்தார். வாயிற்படியைத் தாண்டி இடதுபுறமாகத் திரும்பி பாபூவின் அறையின் பக்கம் போனோம். அப்பாஸ் சாகேபைக் கண்டதுமே அவரை எதிர்கொள்வதற்காக பாபூ தாழ்வாரத்திலிருந்து எழுந்து மாடிப்படிகளில் இறங்கிவரலானார். அப்பாஸ் சாகேபும் விரைவாக முன் செல்லவே இருவரும் மாடிப்படிகளிலேயே சந்தித்துவிட்டனர். பாபூ தம் இடது கையை அப்பாஸ் சாகேபின் இடையில் கொடுத்து, வலது கையினால் அவர் தாடியைப் பிடித்துக்கொண்டும், தம் கன்னத்தை அவர் கன்னத்தோடு ஒட்ட வைத்துக்கொண்டும் புர்ர்ர்ர்ர்என்று கத்த ஆரம்பித்தார். அப்பாஸ் சாகேபும் அதற்குப் பதிலாக புர்ர்ர்ர்ர்செய்யவே இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். எனக்கு அந்த புர்ரின் பொருள் சிறிதும் விளங்கவில்லை.
தண்டி யாத்திரை நடந்த காலத்தில் (1930-ல்) நான் அப்பாஸ் சாகேபுடன் சபர்மதி சிறையிலிருந்தேன். அப்பாஸ் சாகேபிடம், “அன்று பாபூவைச் சந்தித்த பொழுது நீங்கள் இருவரும் புர்ர்ர்ர்ர்என்றீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “நாங்கள் இருவரும் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் நான் பாபூவுக்கு ஒரு கதை சொன்னேன். அதில் புர்ர்வந்தது. என்னைப் பார்த்ததும் பாபூவுக்கு அது நினைவுக்கு வந்துவிட்டதுஎன்றார்.
இதன் பிறகு அப்பாஸ் சாகேப் எனக்கு அந்தக் கதை முழுவதையும் சொன்னார். ஆனால் நான் அதை பிறகு மறந்துபோய்விடவே, ‘புர்ர்என்பதற்கு நானே ஓர் அர்த்தம் கற்பித்துக்கொண்டேன். அது என்னவென்றால், “நாம் 1919-ல் உறுதி ஒன்று செய்துகொண்டோமே அதை நிறைவேற்றியதன் பயனாக நான் இங்கே வந்திருக்கிறேன்என்று பாபூ குறிப்பிடவும், அப்பாஸ் சாகேப், “நானும் இங்கே வரத் தவறமாட்டேன்என்று பதில் சொன்னார்.
நான் கற்பித்துக்கொண்ட இந்த அர்த்தத்தை அப்பாஸ் சாகேபிடம் தெரிவித்த பொழுது அவர், “அந்த சமயத்தில் என் மனத்தில் இம்மாதிரியான எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் நீ சொல்லுவதும் சரியே. எங்கள் இருவருக்கும் உள்ள உறவே இத்தகையது. நான் சிறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. இதற்கு அதிகமாக என்னால் ஏதேனும் செய்ய முடியுமா என்பது எனக்கு விளங்காமலிருப்பதே இதில் விசேஷம். உண்மையில் பாபூ ஓர் அற்புதமான மனிதர்என்றார்.
98. கீதைவழி நடத்தல்
இது 1936-37-ல் நடந்ததென்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் பாபூ வர்தாவில் மகன்வாடியில் இருந்துவந்தார். நான் போர் (Borgaon) கிராமத்தில் வசித்துவந்தேன். பாபூ அதிகம் வேலை செய்துவந்தார். வந்த கடிதங்களெல்லாவற்றிற்கும் பதில் எழுதுவதற்கு நேரமே கிடைப்பதில்லை. எனவே இரவில் 2, 3மணிக்கு எழுந்து எழுதுவார். இதைக் கேள்விப்பட்டதும் என்னால் பொறுக்க முடியவில்லை. தந்திரமாகப் பேச்சை எடுத்தேன். பாபூஜி, நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்த பொழுது ஆரோக்கிய வழிஎன்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்கள். அதில் உணவு, மலஜலம் கழித்தல் ஆகியவற்றிலிருந்து ஆண் - பெண் உறவு வரையில் எல்லா விஷயங்களும் காணப்பட்ட போதிலும் ஒன்றை மட்டும் காணோம்என்றேன். பாபூ ஆச்சரியத்தோடு, “அது என்ன?” என்று கேட்டார். தூக்கத்தைப் பற்றி அதில் ஒன்றுமே இல்லையேஎன்றேன். பாபூ, “தூக்கத்தைப் பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது? மனிதனுக்குத் தூக்கம் வரும்பொழுது அவன் தூங்குகிறான். இதற்கு அதிகமாக என்ன எழுத முடியும்?” என்று கேட்டார். அதற்கு நான், “இதுதானே விஷயம். நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுகிறீர்கள்; அளந்து கணக்காகச் சாப்பிடுகிறீர்கள். அன்றாடம் செய்யவேண்டிய வேலைகளெல்லாம் திட்டப்படி நடக்கின்றன. எவ்வளவு பேர் உங்களிடம் உரிமை கொண்டாடிக்கொண்டு வருகிறார்களோ அவர்கள் அத்தனை பேரையும் திருப்தி செய்துவிடுகிறீர்கள். எவனாவது ஒரு கடிதம் எழுதினால் அவனுக்கு உங்கள் பதிலும் கிடைத்துவிடுகிறது. ஆனால் தூக்கத்தின் விஷயத்தில்தான் அநியாயம் நடக்கிறது. வேலை அதிகமாக இருந்தால் தூக்கத்திற்குரிய நேரம் பறிக்கப்படுகிறது. இது எப்படி சரியாகும்? உணவு கொள்ளாமல் உபவாசமிருந்தால் அதை இயற்கை சமாளித்துக்கொண்டுவிடுகிறது. ஆனால் தூக்கம் குறைக்கப்படுமானால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டியிருக்கும்என்றேன்.
நான் வரம்பை மீறிப் பேசுகிறேன் என்பது எனக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் நான்தான் என்ன செய்வேன்? பொறுக்கமுடியாமற்போகவே சொல்லித் தீர்த்துவிட்டேன்.
பாபூ கம்பீரமாக, “நீ சொல்லுவதன் பொருள் நான் கீதை சொல்லுவதை அனுசரித்து நடக்கவில்லை என்பதாகும். நான் உடலுக்கு சாத்தியமான வேலையையே அதனிடம் வாங்குகிறேன். நான் செய்துவரும் வேலை என்னுடைய வேலையென்று நான் எண்ணவில்லை. அது ஆண்டவன் வேலை. அதைப் பற்றிய கவலையும் அவனைச் சேர்ந்ததே. என் பங்குக்குள்ள வேலையைச் செய்யவே நான் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறேன். அதற்கு அதிகம் செய்கிறேன் என்பது அகந்தையாகும்என்றார்.
***
சில நாட்கள் சென்றன. நான் போர் கிராமத்திலிருந்து மகன்வாடிக்கு வந்துவிட்டேன். மகாதேவ் பாய் என்னிடம், “இன்று பாபூவுக்கு உடம்பு சரியாயில்லை, தூங்குகிறார். காலையில் எழுந்ததும், ‘இன்று எனக்கு உடம்பு சரியில்லை; ரத்த அமுக்கம் அதிகமாயிருக்கும். டாக்டரைக் கூப்பிட்டால் நல்லதுஎன்றார். இன்று வரை பாபூ தாமாக டாக்டரை அழைக்கும்படி சொன்னதேயில்லைஎன்றார்.
நான் வேண்டுமென்றே பாபூவைப் பார்க்கப் போகவில்லை. மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு பாபூ தம் உடம்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். எடுத்ததும், “நான் முழுமையும் கீதை வழியில் நடக்கவில்லைஎன்றார்.
நான் பழைய விஷயத்தை மறந்தே போனேன். ஆனால் இந்த வாக்கியத்தினால் எனக்கு அன்று நடந்த எங்கள் பேச்சு நினைவுக்கு வந்துவிட்டது. நான் பாபூவிடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்னமேயே அவர் என் வாயை அடைத்துவிட்டாரென்று மனத்துள் எண்ணிக்கொண்டேன்.
அது முதல் தூக்கக் கடனைத் தவறாமல் செலுத்திவருவதென்று திட்டம் செய்துகொண்டிருக்கிறார்.
99. வெறியைத் துறந்த சிங்கம்
தென்னாப்பிரிக்காவில் பட்டாணியர் பாபூவைத் தாக்கிய பொழுது அவர் இறந்துபோனார் என்ற எண்ணத்தினால் அவரைப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நினைவு வந்ததும் பாபூவின் வாயிலிருந்து முதலில் வந்த வார்த்தை.
என்னை இப்படிக் கடுமையாகத் தாக்கியவர்களைத் தண்டிக்கக்கூடாது. நான் அவர்களை மன்னிக்கிறேன்என்பதே. (இதன் முழு விவரமும் அவருடைய சுயசரிதையில் வந்திருக்கிறது.)
அன்றிலிருந்து பாபூவின் நெருங்கிய நண்பரான கெல்லன்பாக் பாபூவை எங்கும் தனியே போக விடுவதில்லை. கெல்லன்பாக் நல்ல வாட்டசாட்டமான, உறுதியுள்ள உடல் வாய்க்கப்பெற்றவர். அவருக்கு குஸ்தி, ‘பாக்ஸிங்முதலியவையெல்லாம் நன்றாகத் தெரியும். பாபூ போகும் இடங்களுக்கெல்லாம் அவரும் மெய்காப்பாளரப்போல உடன் போய்க்கொண்டிருந்தார்.
ஒருநாள் பாபூ ஏதோ ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தார். அங்கே பாபூவை வெள்ளைக்காரர்கள் தாக்கப்போகிறார்களென்று கெல்லன்பாக்குக்குத் தெரியவந்தது. அவர் தம் கால்சட்டைப் பையில் ரிவால்வர் எடுத்து வைத்துக்கொண்டார். பாபூவுக்கு அவர் ரிவால்வர் வைத்துக்கொண்டிருப்பது தெரியவந்ததும் மிகுந்த கோபம் கொண்டு, “எறிந்துவிடும் அந்த ரிவால்வரை. நீர் கடவுளை நம்புகிறீரா, ரிவால்வரையா? என் பாதுகாப்புக்காக என்னுடன் வருவதற்குத்தான் என்ன அவசியம்? கடவுள் என்னைப் பாதுகாக்கமாட்டாரா? எனக்காக அவர் வேலை வைத்திருக்கும் வரை என்னைக் காக்கவே செய்வார்என்று சொன்னார்.
இதன் பிறகு நடந்த ஒரு சம்பவம்: வெள்ளையர்களின் கூட்டமொன்று நடந்தது. கெல்லன்பாக் அதற்குப் போயிருந்தவர், கூட்டத்தின் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார். அங்கே பேசவந்திருந்தவரோ அல்லது கேட்க வந்தவரோ - அவருக்கும் இவருக்கும் பேச்சு முற்றிச் சண்டையாகிவிட்டது. ஆங்கிலேயர் அல்லவா? சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் குரங்கு நடிப்பு நடிக்கத் தவறமாட்டார்களே! அந்த ஆங்கிலேயன் கெல்லன்பாக்கை வீராவேசத்துடன் “Come along, let us fight it out” (வா, ஒரு கை பார்ப்போம்) என்று அறைகூவி அழைத்தான். கெல்லன்பாக் சாந்தமான குரலில், “But I am not going to fight you” (ஆனால் நான் உன்னோடு சண்டைக்கு வந்தால்தானே) என்று பதில் சொன்னார். கூட்டம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்துப்போய் இதைப் பார்த்துக்கொண்டிருந்தது. கெல்லன்பாக்கின் உடல் வலியும், அவருக்குக் குஸ்தி போடுவதிலிருந்த திறமையும் எல்லோருக்கும் தெரியும். எவனும் அவரைப் பயங்கொள்ளியென்று சொல்லமாட்டான். மேலும், ஒருவன் அறைகூவி அழைக்கும்போது எவ்வளவு பயந்தவனாக இருந்தபோதிலும் சண்டைக்கு வர இவ்வாறு மறுப்பானா? எல்லோருக்கும் ஒரே வியப்பாகிவிட்டது.
[இந்த வரலாற்றை நான் திரு. மகன்லால்பாய் காந்தி சொல்லக் கேட்டேன்.]
100. தீரத்தின் சிகரம்
இது சம்பரானில் நடந்தது. அங்கே நடந்துவந்த அநியாயங்களையும் கொடுமைகளையும் குறித்து பாபூவின் சார்பில் விசாரணை தொடங்கப்படவே மக்களுக்கு சிறிது உணர்ச்சி பிறந்தது. பல இடங்களிலும் பாபூ பள்ளிக்கூடங்கள் தொடங்கியதனாலும் அவர்கள் விழிப்படைந்தார்கள். இதனால் நீலச்சாய வெள்ளைக்காரர்களுக்கு மிக்க சிரமமாகிவிட்டது.
எவனோ ஒருவன் பாபூவிடம், “இங்குள்ள நீல வெள்ளையன் மகாதுஷ்டன். உங்களைக் கொல்லப்பார்க்கிறான். இதற்கென கொலைஞர்களை அமர்த்தியிருக்கிறான்என்றான்.
இதைக் கேட்டதும் ஒருநாள் இரவு பாபூ தனித்தே அவன் பங்களாவுக்குப்போய், “நீங்கள் என்னைக் கொல்வதற்காக ஆட்களை அமர்த்தியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால் எவரிடமும் சொல்லாமல் தனியாக வந்திருக்கிறேன்என்றார்.
பாவம், அந்த வெள்ளையன் அப்படியே நிலைக்குத்தாகிவிட்டான்.
101. கடித்த பாம்புக்கு அபயம்
இது நடந்தது 1917-ல் இருக்கும். பாபூ ஆசிரமத்தில் மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு தம் படுக்கையின் தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். பாபூவை குளிர் தாக்காமலிருப்பதற்காக பா ஒரு போர்வையை நான்காக மடித்து அவர் முதுகில் போர்த்தினார். பாபூ ஆசிரமத்தைச் சேர்ந்த திரு. ராவ்ஜீ பாய் படேலுடன் பேசிக்கொண்டிருந்தார். ராவ்ஜீ பாய்க்கு போர்வையின் மீது ஒரு கறுப்புக் கோடு போல் தோன்றிற்று. கவனித்துப் பார்க்கையில் ஒரு பெரிய கரும்பாம்பு பின்னாலிருந்து ஏறி பாபூவின் கழுத்து வரையில் வந்திருப்பது தெரிந்தது. அது மேலே எங்கே போவது என்பதை நிச்சயிப்பதற்காக இங்குமங்கும் பார்த்துக்கொண்டிருந்தது ராவ்ஜீ பாய் தாம் சொல்லுவதில் கவனமின்றி தம் தோளின் பக்கம் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட பாபூ, “'என்ன ராவ்ஜீ பாய்?” என்று கேட்டார். பாபூவுக்கும் தம் முதுகின் மீது ஏதோ பாரம் ஏறியிருப்பது தெரிந்தது. ராவ்ஜீ பாய்க்கு நல்ல நிதான புத்தி, உரக்கச் சொன்னால் பாபூ முதலிய எல்லோரும் பயந்துபோய் அமளியாகிவிடும், பாம்புக்கும் 'காபரா'ஏற்பட்டுவிடுமென்று எண்ணினார். அவர், “ஒன்றுமில்லை பாபூ, ஒரு பாம்பு உங்கள் முதுகின் மீது ஏறியிருக்கிறது. நீங்கள் சிறிதும் அசையாதிருங்கள்என்றார். அதற்கு பாபூ. நான் அசையவேயில்லை. ஆனால் நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு ராவ்ஜீ பாய், “போர்வையின் நான்கு மூலைகளையும் ஒன்று சேர்த்து பாம்பு சகிதமாக இறக்கிவிடப்போகிறேன்என்றார். இந்தப் பேச்சுவார்த்தை நடக்கையிலேயே பாம்பு போர்வைக்குள் புகுந்துவிட்டது. பாபூ, “நான் அசையாமலிருக்கிறேன். நீ ஜாக்கிரதையாக கவனித்து எடுஎன்றார்.
ராவ்ஜீ பாய் போர்வையை எடுத்து தொலைவுக்குக் கொண்டுபோனார். பாம்பு போர்வைக்குள்ளிருந்து வெளிவந்ததும் அதை வீசி எறிந்துவிட்டார். (திரு. ராவ்ஜீ பாய் தம் புத்தகத்தில் இந்த சம்பவம் பற்றி விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். எனக்கு நினைவிருந்ததை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.)
மறுநாள் பத்திரிகைகளில் ஒரு நாகம் பாபூவின் தலைக்கு மேல் வந்து படம் விரித்துக் குடை பிடித்ததாகவும், இதனால் பாபூ சக்கரவர்த்தியாகப்போவதாகவும் செய்தி வந்தது. ஒரு நண்பர் என்னிடம், “அந்த நாகம் அவர் தோள் வரையில்தான் ஏறிற்று. தலை வரையில் ஏறியிருந்தால் அவர் நிச்சயம் இந்தியாவுக்குச் சக்கரவர்த்தியாகியிருப்பார்என்றார்.
ஒருநாள் இந்த சம்பவம் நினைவுக்கு வரவே, நான் பாபூவிடம், “பாம்பு உங்கள் உடம்பில் ஏறியபொழுது உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் எழுந்தன?” என்று கேட்டேன். அவர், “அந்த சமயத்தில் பயந்துபோனேன். ஆனால் பயமிருந்தது அந்தக் கணத்தில் மட்டுந்தான். உடனே நிதானித்துக்கொண்டேன். அதன் பிறகு ஒன்றும் நேரவில்லை. பிறகு இந்தப் பாம்பு என்னைக் கடித்ததானால், ‘குறைந்தது இதைக் கொல்லாதீர்கள். நீங்கள் எந்தப் பாம்பைக் கண்டாலும் கொல்ல முனைந்துவிடுகிறீர்கள். அவ்வாறு செய்யவேண்டாமென்று இதுவரையில் நான் எவரையும் தடுத்ததில்லை. ஆனால் என்னைக் கடித்த பாம்புக்காவது அபயம் கிடைத்துத்தான் ஆகவேண்டும்என்று சொல்லுவேனென்பதாக எண்ணங்கள் உதித்தனஎன்றார்.

(நிறைவு)

காந்திக் காட்சிகள் - தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம்

$
0
0
காந்திஜி: ஒரு சொற்சித்திரம் - முகப்புப் படம்
"காந்தியைக் கற்கத் தொடங்கும் மாணவன் முதலில் மூன்று புத்தகங்களில் கவனம் கொள்ள வேண்டும். இது என் தேர்வு. ஆனால் இந்த வாசல் வழியாகத்தான் உள்ளே போகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒன்று: காந்தியின் சுயசரிதம். அதாவது 'சத்திய சோதனை'. இரண்டு: 'இந்திய சுய ராஜ்ஜியம்'. காந்தி தனது எண்ணங்களின் அடிப்படைகளை விளக்கும் புத்தகம். மூன்று: 'காந்திஜி ஒரு சொற்சித்திரம்'. காந்தியிடம் நேர்ப்பழக்கம் கொண்ட பலரும் தத்தம் அனுபவங்களைக் கூறியிருப்பவற்றின் தொகுப்பு. பி. பி. சி. தயாரித்து அளித்தது. நம் மனத்தில் இருக்கும் கற்பனை காந்தியிலிருந்து உண்மையான காந்தியைப் பிரித்து எடுத்துக்கொள்ள இந்த நூல்கள் உதவும்." - சுந்தர ராமசாமி
'காந்தி இன்று'என்ற கட்டுரையில் சு.ரா. இவ்வாறு குறிப்பிடுகிறார். அவர் மூன்றாவதாகச் சுட்டும் 'காந்திஜி ஒரு சொற்சித்திரம்'எனும் அரிய நூல் பிரான்ஸிஸ் வாட்சன் (Francis Watson) மற்றும் மாரிஸ் பிரவுன் (Maurice Brown) எழுதிய 'Talking of Gandhiji'என்ற நூலின் தமிழாக்கம். வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தின் தலைமை ஆசிரியர் பி. வி. ஜானகி இதனை மொழிபெயர்த்துள்ளார். நூலின் முகப்பிலேயே 'மூலநூல் எழுந்த 1957ஆம் ஆண்டின் நிலைமைகளில் மாறுதல் இல்லாமல் தமிழாக்கம் செய்யப்பெற்றுள்ளது.'எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்நூல் இங்கே தொடர் பதிவுகளாக வெளிவரும். நூலைப் பற்றிய பிற அறிமுகத் தகவல்கள் பின்வரும் முன்னுரைகளில் உள்ளன.
அண்மையில் இந்த நூலைப் பற்றி காந்திய ஆர்வலர் சித்ரா பாலசுப்ரமணியம் ஒரு குறிப்பைஎழுதியிருந்தார். அவரே நூலைப்படியெடுக்கவும் உதவினார். அவருக்கு நன்றி.

***
முகவுரை
இது ஓர் புதுமாதிரியான சிறந்த நூல். 1956ஆம் வருஷக் கடைசியில் பிரிட்டிஷ் வானொலியில் (பி.பி.ஸி.யில்) காந்தியடிகளைப் பற்றி நான்கு நீண்ட தொகுப்புரைகள் ஒலிபெருக்கப் பெற்றன. இந்தத் தொகுப்புரைகள் கேட்பதற்குப் பலர் கூடிப் பேசும் கருத்தரங்கு போல் அமைந்துள்ளது. ஆனால் இவை காந்தியடிகளோடு நெருங்கி நேரில் பழகிய 64இந்திய, பிரிட்டிஷ் பிரமுகர்களை நேரில் சந்தித்து காந்தியடிகளின் குணாதிசயங்களையும், சிந்தனைகளையும், செயல்முறைகளையும் பற்றி அவர்களுடைய அபிப்பிராயங்களை ஒலிப்பதிவு செய்து, அந்த நாடாக்களை வகுத்துத் தொகுத்து ஒரு தொடர் கருத்தரங்குபோல் ஒழுங்குபடுத்தப்பட்டன. நான்கு கருத்தரங்குகளாவன (1) காந்தியடிகளின் குணாதிசயங்களைப் பற்றிப் படம் பிடித்தது. (2) காந்தியடிகள் பாரத மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்டது. (3) இங்கிலாந்தில் காந்தியடிகளின் போக்கும், அலுவல்களும். (4) காந்தியடிகள் கடைசி காலத்தில், தனது ஆப்த நண்பர்களிடமிருந்து வேறுபட்டு ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டு முடிவில் கொலையுண்டது. இதில் அபிப்பிராயம் கூறியவர்களுக்குள், இந்தியாவில் பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திரப் பிரசாத், மதிப்பிற்குரிய ராஜாஜி, பழம்பெரும் தேச பக்தர்களான ஆசிரியர் கிருபளானி, காந்திக்கு ஓயாமல் பணிவிடை செய்த திரு. ப்யாரிலால், சுசீலா நைய்யார், ராஜகுமாரி அம்ரித்கௌர், மீராபென் முதலியோர். இங்கிலாந்தில், லார்ட் ஈர்வின் (பின்னர் லார்ட் ஹாலிபாக்ஸ்) சர் சாமுவேல் ஹோர் (பின்னர் லார்ட் டெம்பிள்டன்), ஹோரேஸ் அலெக்சாண்டர் முதலியோர்.
இந்தக் கருத்தரங்குத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினமானது என்று நான் உணர்வேன். ஆதலால் மிகவும் நன்றாக, கோர்வை குன்றாமல், எளிய இனிய தமிழில் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தின் தலைமை ஆசிரியை திருமதி. பி. வி. ஜானகி அம்மாள் செய்திருப்பதை மிகவும் பாராட்டுகிறேன். தமிழ் மக்கள் காந்தியடிகளைப் பல கோணங்களிலிருந்து அறிந்துகொள்வதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும். ஆதலால் அதை அவர்கள் அன்புடன் ஏற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
க. சந்தானம்
சென்னை,
19-1-78 
பதிப்புரை
எனது சிறு வயதில், எங்களால் பெரிதும் போற்றி அன்புடனும் பாசத்துடனும் அழைக்கப்பெறும் கோவை ஐயா திரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களுடையவும் வணக்கத்திற்குரிய பேரன்புமிக்க ஸ்ரீமத். சுவாமி சித்பவாநந்தா அவர்களுடையவுமான பராமரிப்பில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாலயத்தில் படிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள், வாழ்வில் மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டு செய்வதன் அரிய பெருமைகளை எங்கள் இளம் வயதில் நன்கு பதியும்படியாக எங்களை வளர்த்திருக்கின்றார்கள். அதன் மூலம் எங்கள் சிறுபோதில் ஏற்பட்ட ஊக்க உணர்வு, பிற்காலத்தில் எங்கள் அருமைக் குருகுலமாக வளர்ந்து சமூகத்தொண்டில் ஒரு நல்ல வாய்ப்பினை எங்களுக்குத் தந்திருக்கின்றது.
குருகுலத் தந்தையும் எனது தந்தையுமான காலம் சென்ற சர்தார். வேதரத்னம் அவர்கள் அப்போதிருந்தே கொடுத்துவந்த ஊக்கம் இப்பொதுவாழ்வில் பல இடையூறுகளுக்கு இடையில் தளராது பொதுப்பணியைச் செவ்வையாகச் செய்வதற்குப் பக்கபலமாக நின்றுவந்திருக்கின்றது.
நம் சமுதாயத்திற்குக் குருகுலத்தின் மூலம் நல்ல பல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வளர்ந்தும் வந்திருக்கின்றது. அதன் ஒரு படியாகத் தந்தையவர்கள் காலத்திலேயே வேதாரண்யம் என்ற பெயரில், நமது அருமைத் தலைவர் காலம் சென்ற திரு. ராஜாஜி அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாக்கிரகம் இங்கே நடந்த நிகழ்ச்சி தொகுத்து வெளியிடப் பெற்றது. அதுதான் குருகுலத்தின் முதல் படைப்பு. அதன் பிறகு எண்ணம் இருந்தும் செயல்படுத்த முடியவில்லை.
இந்த எண்ணத்தின் இடைவிடாத் தூண்டுதல் காரணமாக முயன்றுவரும் சமயம் உலகம் சுற்றும் தமிழர் நமது குருகுலத்தின் அரிய நண்பர் திரு. ஏ. கே. செட்டியார் அவர்களிடம் உரையாடிக்கொண்டு இருக்கும்போது - காந்தியடிகள் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு காந்தியடிகள் பற்றிய ஒரு அழகிய சொற்சித்திரத்தை இலண்டன் பி. பி. ஸி.யில் காந்தியடிகளுடன் தொடர்பு கொண்ட பல பெரியார்களைப் பேட்டி கண்டு அவர்கள் வாயிலாகவே ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பி இருக்கின்றார்கள். அந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் ‘Talking of Gandhiji’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கின்றது. அதைத் தமிழில் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை தெரிவித்தார்கள். இது 1963-இல் நடந்தது. அப்போதே அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு இதைத் தமிழாக்கம் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. முதற்படியாக இதைத் தமிழாக்கம் செய்ய அனுமதி வேண்டுமே.
அதை எண்ணி இலண்டன் பி.பி.ஸி. அலுவலகத்திற்கு நமது குருகுலம் பற்றியும், அதில் அவர்கள் ஒலிபரப்பிய இந்த நிகழ்ச்சி பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்து வெளியிட ஆவல் கொண்டிருக்கின்றோம் என்ற செய்தியையும் தெரிவித்து அனுமதி வேண்டி எழுதியிருந்தோம். அவர்கள் அன்பு பூண்டு எங்கள் கடிதத்தை இப்புத்தகத்தின் உரிமை பெற்ற திரு. பிரான்சிஸ் வாட்சன் அவர்களுக்கு அனுப்பிக்கொடுத்திருக்கின்றார்கள்.
திரு. பிரான்சிஸ் வாட்சன் அவர்கள் நம்மைப் பற்றி முன்பின் தெரியாமலேயே பி.பி.ஸியில் இருந்து நமது கடிதத்தைப் பெற்றுக்கொண்டு 1964-இல் புத்தகத்தை வெளியிட எந்த விதமான உரிமைப்பணமும் கோராமல் அனுமதி கொடுத்துக் கடிதம் எழுதிவிட்டார்கள். இருப்பினும் அத்துடன் நில்லாமல் இந்தியாவில் ஆங்கிலத்தில் இதைப் பதிப்பித்து வெளியிட்ட லாங்மென்ஸ் புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கும் அவர்களே கடிதம் எழுதி குருகுலத்திற்கு இந்தப் பொறுப்பை விட அவர்களிடமிருந்தும் மனமுவந்து அனுமதியும் பெற்றுக்கொடுத்துவிட்டார்கள். இந்த அளவு பெருங்குணத்துடன் அவர்கள் நம்பால் அன்பு பூண்டு அனுமதி கொடுத்து நமது ஊக்கத்தை மேலும் வலுவடையச் செய்துவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி கூறுவதுதான் எவ்வாறு என்று தெரியாமல் தேங்குகிறோம். தொடர்ந்து இப்புத்தகம் வெளிவருவதில் அவர்கள் காட்டிய ஆதரவிற்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்களுக்கு முதலில் நாம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பின்னர் இந்தப் பொறுப்பு நன்கு நிறைவேறத் தமிழாக்கம் செய்யத்தக்கவர்கள் வேண்டும். அந்த எண்ணத்தில் சுழன்றுகொண்டிருக்கும்போது, எங்கள் குருகுலத் தலைமை ஆசிரியையான எங்களால் 'பெரியக்கா'என்று அன்புடன் அழைக்கப்பெறுகின்ற, சகோதரி பி. வி. ஜானகி அவர்கள் ஊக்கத்துடன் தாம் இப்பணியை ஏற்றுச்செய்வதாக முன்வந்தார்கள். அவர்கள் தமிழில் எம். ஏ. பட்டம் பெற்று இருப்பதுடன் நமது அருமை திரு. கி. வா. ஜகன்னாதன் அவர்களிடம் மாணாக்கியாகவும் இருந்து தமிழ் படித்தவர்கள் என்ற நிலையில் பெரிதும் இப்பணிக்கு ஏற்றவர்கள் என்று மகிழ்வடைந்து அவர்களிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தோம். முதல் முயற்சியாக இருந்தாலும் அவர்கள் பெரும் ஊக்கத்துடன் சிறப்பாக இப்பணியை நிறைவேற்றிக் கொடுத்து உதவியிருக்கின்றார்கள். அவர்களுக்கும் எங்கள் அன்பு நிறைந்த நன்றி உரித்தாகும்.
ஆண்டுகள் பல கழிந்தும் ஏதோ ஒருவகையில் இப்புத்தகத்தை வெளியிடுவதில் தயக்கம் ஏற்பட்டுவந்திருக்கிறது. நமக்கும் இந்தத் துறையில் போதிய அனுபவம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் மேலும் முயன்று தற்சமயம் இப்புத்தகத்தை வெளிக்கொண்டுவர இயன்றது. இந்த முயற்சியில் சிறந்த எழுத்தாளரும் தந்தையவர்களுடன் இந்திப் பிரச்சார சபை மூலம் நட்பு கொண்டவருமான திரு. ரா. வீழிநாதன் அவர்கள் பெரும் துணை நின்றார்கள். தமிழாக்கம் கைப்படிகளைத் தாம் நன்கு பரிசீலித்து அதைப் புத்தகமாக உருவாக்க அரிய ஆலோசனைகளையும் செய்துகொடுத்து உதவியிருக்கின்றார்கள். அவர்களுக்கும் நமது உளம் நிறைந்த நன்றி உரித்தாகுக. எனது பால்ய நண்பரும் கல்கி பத்திரிக்கை காரியாலயத்தில் வெகுகாலம் பணிபுரிந்தவருமான திரு. ஷண்முகவடிவேலு அவர்கள் புத்தகத் தயாரிப்பில் தனக்கு உள்ள அனுபவத்தைச் சொல்லி உதவியதுடன் அட்டைப்படம் போடத் தனது ஓவிய நண்பர் திரு. விவேக்குடன் கலந்து பலவகைப்பட்ட படங்கள் போட்டு முடிவாக இந்தப் படம் உருவாக்கிக் கொடுத்து உதவியிருக்கின்றார்கள். குருகுலத்தின் பால் பேரன்பு கொண்டு கைம்மாறு கருதாது இவர்கள் செய்திருக்கும் உதவிக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இப்புத்தகத்தை வெளியிடும்போது தக்க பெரியவர்களுடைய ஒரு முன்னுரை இருப்பது பெரிதும் துணை நிற்கும். அந்த எங்கள் ஆவலை வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் முதற்கொண்டு குருகுலத் தந்தையவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இன்றளவும் எங்கள் குடும்பத்தின்பாலும், குருகுலத்தின்பாலும் அக்கறை மிகுந்த திரு. க. சந்தானம் அவர்களை அணுகினோம். தமக்கு உள்ள பல முக்கிய அலுவல்களுக்கிடையே பிரதிகளைப் படித்துப் பார்த்துத் தமது அன்பான முன்னுரையைக் கொடுத்து ஊக்குவித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நன்றி கூறுவதைவிட எங்கள் நமஸ்காரத்தைத் தெரியப்படுத்தவே கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்களைத் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
மேலும் குருகுலத் தந்தையவர்களின் இந்த 81-ஆம் ஆண்டு பிறந்த தின விழாவில் இதை அன்புடன் வெளியிட்டு உதவ இசைந்திருக்கும் எங்கள் அன்பிற்குரிய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு. என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களுக்கும் நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
இது குருகுலத்தில் 3வது வெளியீடாக வருகின்றது. குருகுலம் மேலும் மேலும் பல நல்ல நூல்களையும், குழந்தைகளுக்கு, சிறந்த கல்வி அறிவையும் ஊக்கத்தையும் கொடுக்கும் கல்விப்பணிக்கான மேலும் சிறந்த நூல்களையும் கொண்டுவர ஆவல் கொண்டுள்ளது. இப்பணிகள் சிறக்க பொதுமக்கள் மற்றும் கல்வி, சமூகத்தொண்டுகளில் ஈடுபாடு மிக்கவர்களின் ஆதரவும், எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று பெரிதும் நம்புகின்றோம்.
சிறந்த முறையில் இந்தப் புத்தகத்தை அச்சிட்டுக் கொடுத்து உதவிய குருகுலம் அச்சுப் பள்ளியில் பயிலும் மாணாக்கியர்கள், அவர்களுக்கு ஆசிரியராகத் துணை நிற்கும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்கிக்கொள்கின்றோம்.
மேலும் மேலும் இப்பணி சிறந்து வளர எல்லாம் வல்ல பரம்பொருள் துணை வேண்டிப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
வே. அப்பாகுட்டி
குருகுலம்
25-2-78.
அணிந்துரை
காந்தியடிகளுக்கு 'மகாத்மா'என்று பட்டம் சூட்டிய முதற்பெருமை நம் தமிழகத்துக்கே உரியது. அது மட்டும் அல்ல; அவர் வழி அறிந்து அதன்படி ஒழுகிய பெருமையும் அதையே சார்ந்தது.
காந்தியடிகளை நம் தமிழகம் வெறும் அரசியல்வாதியாக மட்டும் ஏற்கவில்லை. நம் தமிழ் மண்ணின் அறவழி வந்த ஆன்றோர்களின் வடிவமாகவும் அவரைக் கண்டிருக்கிறது.
நம் தமிழ்க்கவி பாரதியார் உள்ளும் புறமும் அவரை ஊடுருவி நோக்கித் தமது காந்தி பஞ்சகத்தில் நினைவழியாச் சித்திரமாகத் தீட்டியிருப்பது போல வேறு மொழி கவிஞர்கள் எவருமே தீட்டியதில்லை என்பது உறுதி.
அரசியலிலும் மெய்ஞ்ஞானத்தைப் புகுத்தி, அறவழி சென்று உப்புக்காகக் காந்தியடிகள் உலகப்புகழ் பெற்ற தண்டி யாத்திரை மேற்கொண்டார். தண்டிக்குத் தான் எள்ளளவும் குறையவில்லை என்பதை எடுத்துக்காட்டியது வேதாரண்யம். அரசியல் மேதை ராஜாஜியின் தலைமையிலே நடைபெற்ற அந்தச் சத்தியாகிரகத்திலே ஸ்ரீ க. சந்தானம் போன்றவர்கள் கலந்துகொண்டார்கள் வேதாரண்யத்துக்குப் புகழ் சேர்த்த பெருமையில் பெரும் பங்கு சர்தார். வேதரத்தினம் அவர்களையே சாரும்.
ஸ்ரீ வேதரத்தினம் காந்தி வழியை உள்ளும் புறமும் ஒருங்கிணையப் பின்பற்றியவர். அவரது நிர்மாணத் திட்டங்களிலே அசையாப் பற்றுக்கொண்டு மிகுந்த செயல்திறனோடு பணியாற்றியவர். அதன் பலனாக உருவாகியதே வேதாரண்யம் கன்யா குருகுலம்.
அந்த ஆதரிச நிறுவனத்தை அதன் தரம் உயரும் வகையில் அவர் வழி வந்துள்ள ஸ்ரீ அப்பாக்குட்டி அவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.
ராமராஜ்யக் கனவு கண்ட காந்தியடிகளைப் பலரும் பிற்போக்கினராகப் புரிந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலே, ஸ்ரீ அப்பாக்குட்டியின் கையில் ஓர் ஆங்கில நூல் சிக்கியது. நீண்ட பேட்டியாக பி.பி.ஸி ஒலிபரப்பிய பேச்சுத் தொடரே அது. காந்தியடிகள் எத்தகைய முற்போக்குவாதி என்பதையும், கிராமக் கைத்தொழில் திட்டத்துக்கு ஆதரவு தேடும் காந்தியடிகள் இந்திய மண்ணின் தரத்தையும், உரத்தையும் தவறாகக் கணக்குப் போடவில்லை என்பதையும், ஊரோடும் உலகத்தோடும் ஒட்டி உயரவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதையும் அந்த நூல் எடுத்துக்காட்டியது.
தாம் பெற்ற இன்பத்தைத் தமிழ் மக்களும் பெறவேண்டும் என்ற ஆசையில், அதைத் தமிழாக்கித் தரும் பொறுப்பைக் கன்யா குருகுலத்துத் தமிழாசிரியை - தலைமை ஆசிரியை ஸ்ரீமதி ஜானகியிடம் ஒப்படைத்தார். ஆர்வமும் அசையா பக்தியும் அவருக்குக் கைகொடுத்து உதவியுள்ளன. அதன் பலன் எளிய தமிழ் நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் நல்லதொரு நூல் கன்யா குருகுல வெளியீடாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
பாராட்டுக்குரிய இம்முயற்சியில் என் பணி என்ன என்று கேட்பவர்களுக்கு ரகசியமாக ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மொழிபெயர்ப்புத் துறையில் எளிய பங்கு ஏற்று அணிற்குஞ்செனச் சிறு பணிபுரிந்துவரும் என்னிடம் இதனை ஒப்புநோக்கி தரும் பெரும்பணியை எந்தத் தைரியத்தில் ஒப்படைத்தார்களோ, தெரியாது! அதன் பயனாக இந்த அணிந்துரை வழங்கும் பேற்றினைப் பெறுகிறேன். இது என் தகுதிக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றாலும் ஆசை யாரை விட்டது? அந்த ஆசையோடு இன்னுமோர் குட்டி ஆசை! இந்த 'வேதாரண்யப்பணி'யைத் தமிழுக்குக் கிடைத்த நிதியமாகப் போற்றிப் படித்துப் பயன்பெற வேண்டும் என்று நானும் கேட்டுக்கொண்டால், அது நியாயமான ஆசைதானே?
ரா. வீழிநாதன்
சென்னை – 35
15-2-78 
அறிமுகம்
மகாத்மா காந்தியடிகள் உலகம் போற்றும் உத்தமராவார். அவரது வாழ்க்கையே அவரது போதனையாகும். எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து வாழ்ந்த மகான் காந்தியடிகள்.
காந்தியடிகளோடு நீண்ட காலம் தொடர்பு கொண்ட பலரது கருத்துக்களைப் பி.பி.ஸி.யில் ஒலிபரப்பப்பெற்று பிறகு அவற்றைத் தொகுத்து ஒரு சொற்சித்திரமாக ஆங்கிலத்தில் அமைந்த நூல்தான் 'Talking of Gandhiji'என்ற நூல். இந்த ஆங்கில நூல் 1957ஆம் ஆண்டு வெளிவந்தது.
இன்றைக்குச் சற்றேறத்தாழ 22ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆங்கில நூல் தமிழ் வடிவம் பெறுகிறது. 'அண்ணாச்சி'என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் குருகுலம் மானேஜிங் டிரஸ்டி உயர்திரு. வே. அப்பாக்குட்டி அவர்கள் மூலம் இந்தச் சிறு நூல் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மேலும் அவர் இதனைத் தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பொறுப்பினையும் என்னிடம் ஒப்படைத்தார்.
மொழிபெயர்ப்புத் துறையில் முன் அனுபவம் எதுவும் எனக்கில்லை. இருப்பினும் காந்தியடிகள் பால் ஓரளவு ஈடுபாடும் அவரது கொள்கைகளில் சற்றுப் பிடிப்பும் உள்ளமையால் இப்பணியினைத் துணிந்து மேற்கொண்டேன். என் சிற்றறிவுக்குப் புரிந்த வரை எனது பணியினைச் செய்துள்ளேன்.
இந்த நூல் தமிழ் வடிவம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் மொழிபெயர்ப்புத் துறையில் பழுத்த அனுபவம் பெற்று ஜாம்பவானாகவிளங்கும் உயர்திரு. வீழிநாதன் அவர்கள் ஆவார்கள். மொழிபெயர்த்த நூலை ஆங்கில மூலநூலோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆங்காங்கே தேவைப்பட்ட திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்துகொடுத்துள்ளார்கள். இந்நூல் உருவாவதற்கு அவர்களது உதவியும் ஒத்துழைப்பும் மிகவும் இன்றியமையாதவையாக இருந்தன. அவருக்கு எனது இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பொறுப்பை எனக்களித்த 'அண்ணாச்சி'அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதியளித்த இந்நூல் உரிமையாளருக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.
ஆங்கில நூலுக்குக் கருத்துரை வழங்கிய 64பேர்களது வாழ்க்கைக் குறிப்புக்களையும் 1956-ஆம் ஆண்டு ஆங்கில நூலில் வெளிவந்துள்ளவாறே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
காந்தியடிகளது அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்த சர்தார் வேதரத்னம் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்றது இக்குருகுலம். காந்தீயக் கருத்துக்களையும் தத்துவங்களையும் இயன்ற வரை குருகுலம் பின்பற்றி வருகின்றது. எனவே இந்த நூல் குருகுலம் வெளியீடாக வருவது ஒரு சிறப்பு அம்சமாகும்.
காந்தியடிகளைப் பற்றிப் பல கோணங்களிலும் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஓரளவு உதவியாக இருக்கும் என்று திடமாக நம்புகின்றேன்.
இந்த நூலைக் குருகுல வெளியீட்டுக் குழு மிகுந்த சிரத்தை கொண்டு அழகாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும்.
இதனை அழகாக அச்சிட்டு வழங்கிய குருகுலம் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.
இந்த எனது கன்னிமுயற்சியில் காணப்படும் குறைகளை வாசக அன்பர்கள் பொறுத்து மன்னித்து ஆதரவு தருமாறு அன்புடன் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் மக்கள் அனைவரும் இந்த நூலைப் படித்து காந்தியடிகளைப் பற்றி இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற எனது ஆசையையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பி. வி. ஜானகி
வேதாரண்யம்,
25-2-78


So Generous!
21, SOUTH GROVE,
Highgate Village,
London, N. 6.
23-2-64
Dear Mr. Appakutti,
Your letter of Jan. 30 to the British Broadcasting Corporation has been passed to me, as author of the scripts published in “Talking of Gandhi” and owner of the copyright.
I shall be delighted if these scripts can be of service to your educational work in a Tamil rendering, and you have permission to do this without payment of the usual fee.
Wishing you and your institution every success under the blessing of God.
Yours Sincerely
Sd. / .................
(Francis Watson)
***
21, SOUTH GROVE,
Highgate Village,
London, N. 6.
15-5-64
Dear Mr. Appakutti,
I must apologise that it has taken so long to secure the final release in the matter of your Tamil translation of “Talking of Gandhiji”. But the road is now quite clear of you to go ahead, Orient Longmans of Calcutta have written to me: “We have no objections to giving the Tamil translation rights to the Kasthurba Gandbi Kanya Gurukulam, and we presume no payment will be made by them.”....
....With all good wishes and blessings on your work.
Yours Sincerely
Sd. / .................
(Francis Watson)
***
21, SOUTH GROVE,
Highgate Village,
London, N. 6.
5-8-76
Dear Mr. Appakutti,
I was interested to hear of the printing press that is being operated by the girls who are in your charge. It is a fine, useful and compassionate work that you are doing and one which would have pleased Gandhiji.
All success to you,
Yours Sincerely
Sd. / .................

(Francis Watson)

காந்திஜி ஒரு சொற்சித்திரம் - அறிமுகம்

$
0
0

Twitter / @mygovindia
இந்த நான்கு கட்டுரைகளும் 1956ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் பி.பி.ஸி.யில் ஒலிபரப்பப் பெற்ற மூன்றாவது நிகழ்ச்சியாகும். பி.பி.ஸி. ஒலிபரப்பில் ஒரு தனிமனிதனைப் பற்றிய மிகப்பெரிய நிகழ்ச்சி இதுவேயாகும். 1952-இல் இதற்கான பூர்வாங்க வேலையில் நான் ஈடுபட்டேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தில் இடையிடையே பல வகைப்பட்ட குறிப்புக்கள் எடுக்கப் பெற்றன. 1955ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் பி.பி.ஸி. தயாரிப்பாளரான ஸ்ரீ மாரிஸ் பிரெளனும் நானும் இந்தியாவில் பிரயாணம் செய்து பலரைப் பேட்டி கண்டு குறிப்புகள் சேகரித்தோம். பி.பி.ஸி.யைச் சேர்ந்த வேறொரு தொண்டர் தென் ஆப்பிரிக்காவில் ஸ்ரீ மணிலால் காந்தியைச் சந்தித்தார். ஒலிபரப்புக்கு வேண்டிய விஷயங்கள் சேகரித்துத் தொகுக்கப் பெற்றன. ஒலிப்பதிவு செய்யப்பெற்ற நாடாவே பதினைந்து மைல்களுக்கும் மேல் நீண்டது என அறிந்தேன். இந்த ஐந்து அல்லது ஆறு மணிநேர ஒலிபரப்பை மக்கள் கேட்பார்களோ மாட்டார்களோ? இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சிக்காக மேற்கொண்ட பிரயாசை முழுவதும் வீணோ? என்று காந்திஜியே கூட நினைத்திருப்பார். ஒலிபரப்பு பயன்தரவல்லது என்றால் இந்த ஒலிபரப்பும் பயன்தரவல்லது என்றே நான் நம்புகின்றேன்.
காந்திஜியைப் பற்றி எத்தனையோ எழுதியாகிவிட்டது. என்றாலும் இன்னும் எத்தனையோ எழுத உள்ளன. ஆண்டுதோறும் தம் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி எழுத்து வடிவில் தரும் காந்திஜியைப் பற்றிய செய்திகளைக் காட்டிலும் நேரடியாக அவனர அறிந்துகொண்டவர்களது பேச்சில் விஷயங்களில் ஊடுருவிச் சென்று கேட்பவர்களது உள்ளங்களைப் பிணைக்கும் திறன் இருக்கும். இதுவே ஒலிபரப்பு நிகழ்ச்சிக்குக் காரணம். அதையே கட்டுரைத் தொகுப்பாக ஆக்கி வாசிக்கப் பயன்படும்படி செய்துள்ளோம். இவற்றை ஏற்கனவே ஒலிபரப்பு மூலம் செவிவழிச் செய்தியாக்கி வெற்றி கண்ட பிறகு புத்தக வடிவம் கொடுத்து விழிவழிப் பொருளாக்கியுள்ளாமே தவிர இது காந்தியடிகளைப் பற்றிய மற்றொரு புதிய நூலில்லை. எனவே இது உயிருள்ள ஒரு புதிய மாறுபட்ட முயற்சியாகக் கொள்ளத்தகும்.
வானொலி செய்தித்துறைக்குத் தனிப்பட்ட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளும் உண்டு. ஒலிபரப்பு நேரத்திற்குக் கட்டுப்பாடும் விஷயங்களுக்குத் தக்கபடி விதிமுறைகளும் இருக்கும். பி.பி.ஸியின் மூன்றாவது ஒலிபரப்பு பொதுமக்கள் விரும்பிக் கேட்க முடியாத அளவுக்கு மிக நீளமாக இருந்தது. ஆனால் விஷயம் அறிந்த ஒருசிலர் மட்டும் கேட்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இங்கிலாந்தைத் தவிர வெளிநாட்டினர் வேறு எவரும் சுலபமாகக் கேட்க முடியாத சில குறைபாடுகளும் இருந்தன. இருப்பினும் இந்த நான்கு ஒலிபரப்புக்களிலும் மிகச் சிறியது 70நிமிடங்கள் கொண்டது. மிகப் பெரியது 150நிமிடங்கள் கொண்டது. இதுபோன்ற நிகழ்ச்சி பி.பி.ஸிக்கு புதுமையானதாகும். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அடக்குவதற்கென்று சில நல்ல பகுதிகளை நீக்கிவிடுவது என்பது மிகவும் வருத்தம் தரத்தக்க சிரமசாத்தியமான வேலையாகும்.
ஆரம்பத்திலிருந்தே இந்த ஒலிபரப்பு பிரிட்டிஷ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதை மனத்தில் கொண்டே நாங்கள் தயாரித்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். முதன் முதலாகப் பதிவு செய்யும் விஷயங்கள் ஆங்கில மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இருக்கக்கூடாது. மேலும் கேட்பவர்களுக்குப் புரியும்படி கூடுமானவரை எளிய முறையில் இருக்கவேண்டும். ஏனெனில் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் மொழி, எப்பொழுதும் சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த முழு ஒலிபரப்பும் நிகழ்வதற்கு யார்யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று விரும்பினோமோ அவர்கள் எல்லோரின் விஷயங்களை ஆங்கிலத்திலேயே பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அதே சமயத்தில் இந்தியக் குடியானவர்களை இதில் சேர்த்துக்கொள்ளவில்லையென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். காந்திஜி குடியானவர்களுக்காக . உழைத்து அவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். அவரோடு சேர்ந்து பணிபுரிந்தவர்கள் மூலம் இந்திய குடியானவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அப்படி முடியாதிருந்தால் காந்திஜியைப் பற்றிய இந்த ஒலிச்சித்திரத்தில் இந்தியக் குடியானவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது பெருங்குறைபாடாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக ஹிந்தி, குஜராத்தி, வங்காளி மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தியிருந்தால் பயனுள்ள ஒலிபரப்பு நேரத்தைப் பாழ்படுத்தி முக்கியமான ஒலிபரப்பு நிகழ்ச்சியிலும் தடங்கல் ஏற்பட்டிருக்கும்.
அதேபோல ஒலிபரப்புக் குறிப்பிலும் பேசுபவரது அனாவசியமான விளக்கத்தையும், தேவையற்ற பகுதிகளையும் முன்னுரைகளையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினோம். பேசுபவர்கள் யார் என்பதைக் கேட்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேடை மீது பேசுவதாக இருந்தால் பேசுபவரைக் கேட்பவர்கள் பார்க்க முடியும். புத்தகம் என்றால் எந்தக் குறிப்பையும் திரும்பவும் பார்க்கலாம். ஆனால் ஒலிப்பதிவைக் கேட்பவர்களது காதுகள் அம்மாதிரி செய்ய முடியாது. ஒலிப்பதிவில் பங்கெடுத்துக்கொள்ளும் வெவ்வேறு பேச்சாளர்களைக் கேட்பவர்கள் யார்யார் என்று இனங்கண்டுகொள்ள வேண்டும். காலத்திற்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளியைப் பேசுபவர்களது குரல் இணைக்க வேண்டும். ஆனால் குறிப்புக்கள் குறைவாகவும் தெளிவாகவும் இருத்தல் நலம். இதைக் கேட்கும் ஆர்வமுள்ள எவருக்கும் குறிப்பிட்ட அளவு கல்வி அறிவு இருக்கும்.ஆசிரமம்,சத்தியாக்கிரகம் போன்ற சொற்களை விளக்கம் இன்றிப் பயன்படுத்தலாம் என்று எண்ணினோம். ஆனால் சிக்கலான அரசியல் பின்னணி பற்றித் தெளிவாகவும் குவய அவார்ட்’ ‘ஃபார்வார்ட் பிளாக்’,மாநில சுயாட்சி’, ‘காங்கிரஸ் காரியக் கமிட்டிபோன்ற சில சொற்றொடர்களுக்குச் சரியான பொருளும் அவர்கள் அறிந்திருக்கக்கூடும் என்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. பொதுவாக எளிய முறையில் இருக்கவேண்டும் என்பதற்காகக் காந்திஜியின் அரசியல் வாழ்க்கையை நன்கு தெரிந்த குறிப்புகளைக் கொண்டு வளர்த்த விரும்பவில்லை. இது முதல் காரணம். அடுத்தது கடந்த காலத்துத் தப்பு அபிப்பிராயங்களுக்கும் பகையுணர்ச்சிக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. அவற்றை எல்லாம் புத்தகங்களில் விரிவாகக் கண்டுகொள்ளலாம். சச்சரவுச் சூழ்நிலையிலும் குழப்பத்திலும் கூட காந்திஜி நடுநாயகமாக இருந்தார். மனிதத்தன்மைக்கு ஒளியும் உருவும் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கருதியதால் காந்திஜியைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட விரும்பினோம். இதற்கு வேண்டிய கடந்த காலத்து சம்பவங்களைத் தேடுவது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் அரசியல் விவாதத்தையோ காந்திஜியின் வேதாந்தக் கொள்கைகளில் உள்ள மாறுபட்ட சர்ச்சையையோ அல்லது அவருக்குப் புகழ்மாலை சூட்டுவதையோ நாங்கள் விரும்பவில்லை.
நேரில் பேசுவது போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்க நாங்கள் விரும்பினோம். எனவே இதன் அதிக நீளமுள்ள முதல் நிகழ்ச்சியை ஒரு சித்திரம் என்று கொள்ளலாம். இது வாழ்க்கை வரலாறு வடிவத்தில் அமையவில்லை. சொந்த நினைவாற்றலின் மூலமாக இதன் பலவகைப்பட்ட அம்சங்களும் இதனுள் அடங்கியிருக்கும். ஒற்றுமை உணர்வும் இதனை ஓர் உயிர்ச்சித்திரமாக்க முயன்றுள்ளன. இது கடந்த காலத்தில் பதிவாகிய- காந்திஜியின் பேச்சிலிருந்து எடுத்த அவரது சொந்தக் குரலில் தொடங்கி அவரது குரலோடு முடிகிறது. ஆனால் அதன் போக்கு ஒரு கருத்திலிருந்து மற்றொன்றுக்கு இயல்பாகப் பாய்ந்து அடுத்து அதற்கு வழிகாட்டியாக அமைகிறது. இது முடிந்த உடனே இடையில் விட்டுப்போன விஷயங்களை இணைத்து வருணனை முறையைக் கையாண்டு இன்னும் சிறப்பாக எடுத்துரைக்க முற்பட்டுள்ளோம். வாழ்க்கை வரலாற்றை நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் ஆங்கிலேய மக்களுக்கு ஆர்வமும் சுவையும் கூட்டும் என்று நாங்கள் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்தோம். மேலும் கடந்த காலத்தில் காந்திஜியோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களது கருத்துக்கள்தாம் பயனுள்ளவையாக இருக்கும் என்றும் புத்தகங்களில் இங்கும் அங்கும் காணப்படும் கருத்துக்கள் அவ்வளவு பயனுடையவையாக இராதென்றும் நாங்கள் ஏற்கனவே எண்ணி முடிவுகட்டியபடி உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்தோம். எனவே தென் ஆப்பிரிக்காவில் - தொடர்பு கொண்டு காந்திஜியோடு ஆரம்பக் காலத்தில் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர்கள் அவற்றைப் பற்றிக் கூறக்கூடியவர்கள் வெகு சிலரே இருந்தார்கள். தனக்கென ஓர் உண்மையான வழி வானொலிக்கு உண்டு. ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவிக்குப் பேசுபவர்களது மனோநிலையைக் கண்டு அந்த மனநிலைக்கு ஏற்றாற்போல் அமைக்கும் அபூர்வ சக்தியுண்டு. ஒலிபெருக்கிக் கருவிக்கு முன்பு பேசுபவர்கள் பெரும்பாலும் மிகவும் எளியவராகவும் நேர்மையாளராகவும், எதனாலும் பாதிக்கப்படாதவராகவும் தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைப் பேசுபவராகவும்தான் இருப்பார்கள். ஒலிப்பதிவான பெரும்பாலான மக்களது குரல்கள் அவர்கள் அனைவரும் சிறந்த ஒலிபரப்பாளர்கள் என நிரூபித்துள்ளன. அவர்கள் பேசியவை அவர்களது தாய்மொழியில் இல்லாதிருந்தும் கூட ஒரு சிலரது ஒலிபரப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஒலிப்பதிவுக் கருவி அதன் வேலையைச் செய்யாத காலத்தில் பல விஷயங்கள் உரையாடல் முறையில் நிகழ்ந்துள்ளன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கே தெரியாமல் அவர்களது பேச்சை ஒலிப்பதிவு செய்து ஏமாற்றுவது ஒருபோதும் கூடாது. சில வேளைகளில் பேசியவர்கள் தாங்கள் பேசும் விஷயங்களைப் பற்றிச் சரியாக உணர்வதற்குள் நாடா வெகு நீளம் ஓடியிருக்கும். ஆனால் அப்படி ஓடிய நேரம் தவறென யாரும் கொள்ளமாட்டார்கள். மேலும் அம்மாதிரி சந்தர்ப்பத்தில் பொறுத்திருந்து வேலை செய்வது பயனுள்ளதாகும்.
விஷயங்களைத் தேர்ந்தெடுக்கவும் தவறானவற்றைத் தள்ளி ஏற்பனவற்றை ஏற்று நிகழ்ச்சியாகத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொண்ட மாதங்கள் பற்றி ஒன்று கூறுவது அவசியமாகும். ஒலிப்பதிவு செய்யும் நாடா மிகவும் அதிசயமான கண்டுபிடிப்பாகும். ஏனைய கண்டுபிடிப்புக்களைப் போலல்லாது இதை அளவுடனும் நேர்மையுடனும் கையாள வேண்டும். இதை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளைத் தலைகீழாக மாற்றலாம். பேச்சின் பொருளைத் திரித்து, சந்தர்ப்பத்தைப் பாழ்படுத்தி மற்றவர்களது குரலைப்போல் ஒலிக்கச்செய்து கேலிக்கூத்தாக்கலாம். இம்மாதிரி மிகவும் அபாயமுள்ள ஒரு கருவியைப் பயன்படுத்தும்போது முற்றும் நேர்மையான வழியைக் கடைப்பிடிப்பதுதான் சிறந்த வழியாகும். எங்களிடம் ஒப்படைக்கப்பெற்ற வார்த்தைகளுக்கு இம்மாதிரியான போலி ஒலிபரப்பு முறைகளைக் கையாளக் கூடாதென்று தொடக்கத்திலிருந்தே வெகு எச்சரிக்கையோடு உறுதி பூண்டிருந்தோம். கேட்பவர்களைத் தூண்டுவதற்கென, நடிகர்கள், நிலையத்தின் செயற்கைக் குரல்கள்; எழுதி வைத்துக்கொண்டு பேட்டி காணுதல், போலி விளைவுகள் ஆகிய செயற்கை சாதனங்களைக் கலக்கக்கூடாதென்றும் அப்பொழுதே தீர்மானித்துக்கொண்டோம். ஆனால் 1947, ஆகஸ்டு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த நேரத்திலிருந்து இந்தக் கடைசி நிகழ்ச்சியைத் தொடங்கவேண்டும் என்று எண்ணியதால் அன்று புதுதில்லியில் நடந்த விழாவின் பொழுது கூட்டத்தில் எழுந்த பல ஒலிகள் சுருக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு அரசியல் நிர்ணய சபையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் திரு.ஜவஹர்லால் அவர்களது பேச்சும், சங்கொலிகளும், வரவேற்பு ஒலிகளும் இடம்பெற்றுள்ளன.
இலேசான சில மாற்றங்களைத் தவிர எழுத்து வடிவில் என்ன வருகின்றனவோ அவை அப்படியே ஒலிபரப்பு நிகழ்ச்சியில் இடம்பெற்றவைதாம்.இந்தச் சிறு மாற்றங்களும் இரண்டு இடங்களில் நிகழ்ந்துள்ளன. ஒன்று,ஒலிபரப்புக்களைத் தொகுத்து அறிமுகம் செய்தவர் தனது பெயரும் சொற்களும் அச்சில் வரவேண்டாம் என்றதால் அப்பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்று நிகழ்ச்சிகளை வர்ணித்தவர் முன்னுரையில் வந்த கருத்துக்களே மீண்டும் மீண்டும் வந்ததால் அவற்றையும் நீக்கியுள்ளோம். திரும்ப வந்திருக்கும் சில பகுதிகள் நீக்கப்படாமல் இருப்பதையும் படிப்பவர்கள் கவனிப்பார்கள். அவை அதிகமில்லை.அவை தொடர் நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஒருமாத காலத்தில் இடைவெளி விட்டு ஒலிபரப்பப்பட்டதால் தொடர்பைக் கருதி சில சந்தர்ப்பங்களில் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பேச்சாளர் தனது சொந்தக் காரணத்தினால் தாம் யார் என்பது தெரியாமல் இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது விருப்பத்திற்கேற்ப இரண்டு இடங்களில் அவரைப் பற்றிய குறிப்பு இல்லாதது இயற்கையே.
- பிரான்ஸிஸ் வாட்சன்

காந்திஜி ஒரு சொற்சித்திரம் - தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் - தொழில் நுணுக்கம்

$
0
0
Iconic Eyewear by Danielle Turner / Behance

1949-ஆம் ஆண்டு ஸ்ரீ டபிள்யூ. ஆர். ரோஜர்ஸ் என்பவர் அயர்லாந்து தேசத்துக் கவிஞர் ஸ்ரீ டபிள்யூ. பி. யேட்ஸ் என்பவரைப்பற்றி ஒரு வாழ்க்கைச் சித்திரம் ஒலிபரப்ப வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். அதைத் தயாரிக்கும் பணி எனக்கு அளிக்கப்பெற்றது. ஸ்ரீ ரோஜரும், நானும் பி.பி.ஸியில் மூன்றாவது அலைவரிசையில் ஒலிபரப்பிற்கு வழிவகுத்தோம். அந்தக் காலத்தில் அது புரட்சிகரமானதாகச் சொல்லப்பட்டது. நினைவுகள், கருத்துக்கள், அவரைப் பற்றிய புகழுரைகள், விமரிசனங்கள், அவரது வாழ்க்கையில் நடந்த சிறிய பெரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நாங்கள் பதிவுசெய்யத் தொடங்கினோம்.அந்தக் கவிஞரின் நண்பர்கள், பகைவர்கள், குழந்தைப் பருவத் தோழர்கள், உறவினர்கள் ஆகியவர்களின் கருத்துக்களை ஒலிப்பதிவு செய்தோம். வானொலித் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இந்தப் புரட்சிகரமான ஒலிப்பதிவு தயாரிக்கப்பட்டது.
முதலாவதாக இயல்பான உரையாடல்களையே நாங்கள் விரும்பினோம். எழுதிவைத்துப் படிக்கும் செயற்கைப் பேச்சை நாங்கள் விரும்பவில்லை. இரண்டாவதாக ஒலிபரப்புப் பகுதிகளை நிலையத்தில் உள்ள வர்ணனையாளர்களைக் கொண்டே மட்டும் இல்லாமல் பேசுபவர்களைக்கூட ஒருவரோடு ஒருவர் இணைத்தோம். அதன் பலனாக முழு ஒலிபரப்பு நிகழ்ச்சியும் உரையாடலாகவே அமைந்துவிட்டது.
அந்தக் காலத்திலிருந்தே இம்மாதிரியான பலவகைப்பட்ட பி.பி.ஸி. ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் நான் தொடர்புகொண்டுவந்துள்ளேன். மேலும் அனுபவத்தின் மூலம் வளர்ச்சி கொண்ட தொழில்நுட்பங்களையும், ஒலிபரப்புத்தட்டுக்குப் பதிலாக காந்த சக்தி உள்ள நாடாவையும் புகுத்தி திரு. வாட்சனும் நானும் காந்திஜி பற்றிய நிகழ்ச்சியைச் சற்று எளிதான முறையில் தயாரிக்க முயன்றோம்.
1954ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாங்கள் வேலை தொடங்கினோம். இரண்டு ஆண்டுகள் ஒருநாள் கழிந்த பிறகு முதல் நிகழ்ச்சி ஒலிபரப்பாயிற்று. இந்த ஓர் ஒலிபரப்பு நிகழ்ச்சிக்காகவே நாங்கள் இந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்டதாக எண்ணிவிடாதீர்கள். பிரான்சிஸ் வாட்சன் ஒரு சுதந்திர எழுத்தாளர். நானோ பி.பி.ஸி.யின் எழுத்தாளர்-தயாரிப்பாளர். எங்கள் மனத்தில் காந்திஜி பற்றிய நிகழ்ச்சிதான் முதல் இடம் பெற்றிருந்தது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி எங்கள் சக ஊழியர்களுக்குத் தெரியும். இலண்டனில் எங்களுக்குத் தெரிந்தவர்களில் யாரெல்லாம் காந்திஜியைப் பற்றிக் கூறக்கூடியவர்களோ அவர்களது பேச்சுக்களை எல்லாம் இலண்டனில் பதிவு செய்யத் தொடங்கினோம். ஒலிப்பதிவு செய்வதற்கு பி.பி.ஸி. ஸ்டூடியோவையும், மோட்டாருடன் இணைத்த நாடாச்சுருளையும் நாங்கள் பயன்படுத்தினோம். ஒலியைப் பற்றிய தத்துவம் எங்களுக்கு அங்கேயே தெரிந்திருந்தபடியால் ஒலிப்பதிவு செய்தது கிட்டத்தட்ட சுத்தமாகவே அமைந்திருந்தது. எனவே ஒலிப்பதிவு பற்றிய தொந்தரவு எதுவுமே இருக்கவில்லை. அந்தக் கருவியே செவ்வனே அந்த வேலையைச் செய்துவிட்டது.
1955 ஜனவரியில் நாங்களிருவரும் இந்தியா வந்துசேர்ந்தோம். மூன்று மாதங்கள் மின்சார ஒலிப்பதிவு அறிவு ஏதுமின்றி எந்த இடத்திற்கும் சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய நாடா ஒலிப்பதிவுக் கருவியை உபயோகித்து ஒலிப்பதிவு இஞ்சினியராக இருந்தேன். ஒலிப்பதிவு சம்பந்தப்பட்ட வரை இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவ்வப்போது "சர்வீஸ்"செய்யவேண்டிய ஒலிப்பதிவுக் கருவிகளை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தியது பெரும் சாதனையே ஆகும்.இரண்டாவதாக அது மாதிரி வேலை செய்தது என்றால் அதன் ஒலிப்பதிவுத்தரம் உண்மையிலேயே நல்லபடி சீராக இருந்தது என்றுதான் கொள்ளவேண்டும். சொல்வதன் பொருள் என்னவென்றால் ஒலிப்பதிவுக்கு ஓரளவு நல்ல கருவி இருந்தாலும் மற்ற வசதிகள் பெருங்குறையுடன்தான் இருந்தன என்பதே ஆகும். மேலே கூறிய இரண்டு விஷயங்களை எடுத்துக்கொள்வோம். முதலாவது தேவையான ஒலிப்பதிவு வசதி,கையில் எடுத்துச் செல்லக்கூடிய சிறு ஒலிப்பதிவு கருவியைப் பயன்படுத்துவது என்றால் பொதுவாகப் பேசுபவரது வீட்டிலோ, அலுவலகத்திலோதான் அவரது கருத்துக்களைப் பதிவு செய்வோம். மேஜை,நாற்காலி முதலிய எதுவுமில்லாத இலேசான விரிப்புக்களும் கடினமான சுவர்களும் கொண்ட அறையில் எதிரொலி அதிகமாக ஏற்படும் என்பது தெளிவு. விரிப்புக்கள் போடப்பட்டு மெத்தென்று இருக்கும் சிறு அறை என்றால் பேசுபவர்களுடைய சொற்கள் எதிரொலிக்காது. உரையாடல் இயல்பாக அமையும்.
இந்த ஒலிப்பதிவு நுட்பத்தில் நான் முயற்சியெடுத்து இசைவானதொரு வழியைக் கண்டுபிடித்தேன். தொங்கவிடப்பட்டுள்ள திரைச்சீலைகள், படுக்கை விரிப்புக்கள், மைக்கிரோபோனுக்குப் பின்னால் மெத்தை, எதிரொலி அதிகம் கேட்காத அறை, அதையொட்டினாற்போல் வேறு ஓர் அறை, சில வேளைகளில் வேறு வீடே கூட ஏற்பாடு செய்துகொண்டோம். இப்படியாக ஒலிப்பதிவுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொண்டோம். எப்படி முயற்சி செய்தாலும் எல்லா ஒலிப்பதிவுகளுமே சீரான கீழ்மட்டத்தில்தான் அமைந்திருந்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான பின்னணியை ஒலிப்பதிவு செய்துகொள்ள வேண்டியிருந்ததுதான் ஒரு சிரமமாக இருந்தது. இந்தியா போன்ற உஷ்ணமான நாடுகளுக்கு இது முக்கியமாகப் பொருந்தும். ஜன்னல்கள் திறந்திருக்கும்; சாலையில் போய்க்கொண்டிருக்கும் மோட்டார்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கும்; பேராசை பிடித்த காகங்கள் கரையும்; குருவிகள் கிறீச்சிடும்; சிறார்கள் கூச்சல் போடுவார்கள்; டாக்டர் வீட்டிலிருக்கும் நோயாளிகள் கூப்பாடு போடுவார்கள்; மந்திரிகள் வீட்டில் காத்திருக்கும் பெருங்கூட்டம் சலசலக்கும்; திறந்திருக்கும் ஜன்னல் வழியே இந்த ஒலிகளெல்லாம் உள்ளே நுழையும். நாட்டுப்புறத்திலோ செக்குச் சுற்றும் ஓசை, அரவை இயந்திரத்தின் ஒலி, மிகுதியான நட்புறவோடு வரும் பறவைகளின் ஆரவாரம், பாரவண்டிகளின் கடமுடா சப்தம், கமலை ஏற்றத்தின் இரைச்சல் என்று ஏதாவது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக நுழைந்து அதிநுட்பமாக ஒலிகளைக் கிரகிக்கும் மைக்கிரோபோனுக்கு இடையூறு விளைவிக்கும். டாக்டர் கில்டரது ஆலோசனை அறையில் சுழலும் மின்சார விசிறியை நிறுத்தவேண்டியிருந்தது. பம்பாய் தெருவிலிருந்து வரும் சந்தடி இரைச்சலைத் தடுக்க ஜன்னல் கதவைச் சாத்தவேண்டியிருந்தது. இந்திய ராஷ்டிரபதி அவர்களது கருத்துக்களை ஒலிப்பதிவு செய்யும் பொழுது சுமார் 5நிமிடங்கள் ரிகளின் ஊளை பின்னணியாகிவிட்டது. காகங்களும், கழுகுகளும், குழந்தைகளும் ஸ்ரீ மாரிஸ்ப்ரைட்மான் அவர்களது அறையின் அமைதியைக் குலைத்தன. பூனாவிலுள்ள டாக்டர் ஜெயகர் நூல் நிலையத்தில் அவர் பேசினபோது நட்புறவு கொண்ட கிளிப்பிள்ளைகள் ஜன்னல் கண்ணாடிகளின் மீது உட்கார்ந்து உரக்கக் கத்தின. புதுதில்லியில் டவுன் ஹாலில் இருந்த கடிகாரம் பியாரேலால் அவர்கள் தமது நினைவுகளை பதிவு செய்தபோது மணியடித்துவிட்டது. ஸ்ரீமதி ஜே. பி. பட்டேலும் நானும் பிரான்சிஸ் வாட்சன் அவரது கணவரின் கருத்துக்களை ஒலிப்பதிவு செய்யும்போது உப்பரிகையில் ஏறி காகங்களை அவ்வறைப் பக்கம் வரவிடாமல் வெகு தூரத்திற்கு வெகுநேரம் வரை விரட்டினோம். காஷ்மீரத்தில் மீரா பென்னின் முழங்காலுக்கிடுக்கில் இருந்துகொண்டு பூனை பெரிதாகக் கத்தியது. அது தூங்கச் செல்லும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக்கு இவையெல்லாம் பசுமையாக நினைவிருக்கின்றன.
எங்கள் முயற்சியின் வெற்றிக்கு எங்கள் திறமையைக் காட்டிலும் எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பே கை கொடுத்தது என்று சொல்லலாம். பொதுவாகப் பேசுபவர்களுக்கு அதிக இடையூறு இல்லாத பின்னணியை அமைக்க எங்களால் முடிந்தது. அதனால்தான் இதை ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள் என்று நிச்சயமாக நான் எண்ணுகிறேன். விஞ்ஞான ரீதியில் எதிரொலியானது சாதாரணமாக அமைதியைக் குலைத்து இருவர் ஒரே அறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தையே குறைத்துவிடும். பின்னணியாக அமைந்த வண்டிகளின் போக்குவரத்து ஒலியும் மோட்டார் வாகனங்களின் ஹாரன் ஒலியும் திடீரென்று தூரத்திலிருந்து கத்தும் பறவைகளின் ஒலியும் ஒலிப்பதிவைப் பெரிதும் கெடுத்துவிடும். இன்னும் எடுத்துச்சொல்லப்போனால் அமைதியான சூழ்நிலையில் வர்ணனையாளர்கள் நான்கைந்து பேர்களின் பேச்சு பல்வகைப் பின்னணி ஒலியுடன் பதிவு செய்யப்பட்டது. இப்படி இரு வகையான ஒலிப்பதிவு மொத்த விளைவைப் பாதிப்பதாக முடியும். எனவே மகாத்மா காந்தியைப் பற்றித் தங்கள் கருத்துக்களையும் நினைவுகளையும் கூறியவர்களை ஒலிப்பதிவு செய்தபோது நாங்கள் பெரிதும் கவலை கொண்டோம். அடிக்கடி பேசுபவர்களது அறைக்குச் சென்று தொந்தரவு கொடுத்துவந்தோம்.
பேச்சாளர்களிடமிருந்து நாங்கள் என்ன விரும்பினோம் என்பதை ஸ்ரீ பிரான்சிஸ் வாட்சன் தமது முன்னுரையில் எழுதியுள்ளார். பெரும்பாலான கேள்விகளை அவர்தான் அடிக்கடி கேட்பார். அவ்வப்போது நானும் ஒருசில கேள்விகளைக் கேட்பேன். கேள்விப்படாத பேட்டியாளர்கள் என்றாலும் அவர்களது கருத்துக்களை ஒலிப்பதிவு செய்யும் நுட்பத்தை அவர் நன்கு கற்றிருந்தார். அவர் கேள்வி கேட்கும் முறை பதில் அளிப்பவர்களது விடையோடு கேள்வியும் அடங்கியதாக அமையும். ஒரு கருத்து அல்லது கதையை ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்றால் ஒலிப்பதிவுசெய்வதற்கு முன்பு அதைக் கேட்பதை அவர் கூடுமானவரை தவிர்க்கக் கற்றுக்கொண்டிருந்தார். முதல் முறையாகச் சொல்லப்படும் கருத்து மிகச் சுவையுள்ளதாக இருக்கும். இரண்டாம் முறை சொல்லத் தொடங்கினால் அதன் இயற்கை வேகமும் சுவையும் குன்றிவிடும். அடிக்கடி சொல்வனால் அது அனாவசியமாகக்கூடத் தோன்றிவிடும். சில சிறுசிறு நிகழ்ச்சிகள் மிகவும் அற்பமாகத் தோன்றவும் கூடும். ஆனால் அவை எல்லாம் வானொலி ஒலிப்பதிவுச் சித்திரத்திற்கு எடுத்துக்கொண்ட விஷயத்தில் ஊடுருவிச் சென்று ஒலிச்சித்திர அமைப்புக்கே பெரிதும் உதவியாக அமையும்.
இம்மாதிரியான பணிக்கு விஷய அறிவோடு கூட நினைவாற்றலும், ஆழ்ந்த சிந்தனாசக்தியும் தேவைப்படுகின்றன. இம்மாதிரியான வேலையில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் தாமாகவே இயல்பான விந்தைமிகு நினைவாற்றல் மிக்கவர்களாகிவிடுவார்கள் என்பவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஓராண்டிற்கு முன்பு என்பவர் பேசியது நம் நினைவிற்கு வரும். என்பவரின் பேச்சு அதற்குத் தொடர்பு உடையதாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் அதன் பொருத்தமற்ற நிலையை உணரக்கூடும். குறுக்கிட்டு டேப்பில் என்பவர் "முடியாது, அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது"என்பார். அப்போது வர்ணனையாளர் இடைமறிக்காமலே தமது கருத்தை நேரடியாக க்குத் தெரிவித்தாற்போல் ஆகிவிடும். இப்படிச் சிலரது நினைவாற்றலின் துணையால் ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்துள்ளவற்றோடு இம்மாதிரியான இடைமறிப்பு பேச்சுக்களை இணைத்து இறுதி வடிவம் கொடுத்துவிடலாம்.
ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பொதுவாகத் திருத்தத்தைப் பற்றிய விஷயமாகும். ஓர் இடத்தின் தவறான பெயர் சரியில்லாத தேதி போன்ற சில தவறுகளை விட்டுவிடுவது இயல்பு. ஆனால் இம்மாதிரித் தவறுகள் பேசுபவர்களது வாயில் இருந்து வருமாயின் திருத்துவது என்பது இயலாத காரியமாகும். பேசுபவர்களது குரலில் இம்மாதிரித் தவறுகள் ஏற்பட்டுவிட்டால் இலண்டனிலிருந்தாலும், பங்களூரிலிருந்தாலும், அஸ்ஸாமில் இருந்தாலும் கவனித்துவிடலாம்.
ஓர் உதாரணம் கூறுகிறேன். ஓர் இலண்டன்வாசி காந்திஜி நெய்துகொண்டே எவ்வாறு குழந்தைகளுக்குத் தம் கையெழுத்தைப் போட்டுக்கொடுப்பார் என்று கூறினார். ''நூற்றுக்கொண்டா?"என்று திரு.வாட்சன் கேட்டார். "ஆமாம், நூற்றுக்கொண்டே"என்று டாக்டர் டெக்கர் மீண்டும் கூறினார். பிறகு நான்கு இடங்களில் ஒலிப்பதிவு நாடாவை சுலபமாகக் கத்தரித்து நெசவை நீக்கிவிட்டு நூற்றுக்கொண்டே என்னும் சொற்களை இரண்டு இடங்களில் இணைத்துவிட்டோம். இம்மாதிரித் தவறு பிறகு ஏற்படவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அம்மாதிரி உடனடியாகத் திருத்தாது இருந்தால் அந்த முழுப் பகுதியும் அர்த்தமில்லாமல் போயிருக்கும்.
1955ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில் எங்கள் ஒலிப்பதிவு நாடாவுடன் நாங்கள் இலண்டனுக்குத் திரும்பினோம். 19 மணிநேரம் ஒலிபரப்பக்கூடிய காந்திஜியைப் பற்றிய பேச்சுக்கள் அடங்கிய 78 ஒலிப்பரப்பு நாடாக்கள் இருந்தன. ஜுலை 1956 வரை, கடைசி பேச்சாளரது பேச்சை ஒலிப்பரப்பு செய்யும் வரை, நாங்கள் இங்கிலாந்தில் ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்தோம். இது பற்றிய புள்ளிவிபரங்கள் கீழ்வருமாறு: ஒலிப்பதிவு செய்த நேரம் 27 மணி,ஒலிப்பதிவு செய்த நாடாவின் நீளம் 15 மைலுக்கும் சற்று கூடுதல்,ஒலிப்பதிவான வார்த்தைகள் கிட்டத்தட்ட 1,95,000. ஒலிப்பதிவான இந்தச் சொற்களை ஒலிப்பதிவு நாடாவிலிருந்து தட்டெழுந்தில் தேர்ந்த பல பெண்கள் 'டைப்'செய்து கொடுத்தார்கள். கடைசியாக நாங்கள் இதுவரை என்ன சாதித்தோம் என்பதை மலையெனக் குவிந்த காகிதங்களைக் கண்டபோது எங்களுக்கே பிரமிப்பாக இருந்தது. பலவகைப்பட்ட மிகுதியான எழுத்துப் பிரதிகளை வரிசைக் கிரமமாகவும் வளர்ச்சிக் கிரமமாகவும் அமைக்கும் பொறுப்பு திரு.வாட்சனுடையது. இந்தப் பிரதிகளை மீண்டும் ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் வேலை என்னுடையதாகும்.
இந்த எழுத்துப் பிரதிகள் 10அல்லது 15பக்கங்கள் கொண்ட பிரிவாக எனக்கு வந்து சேர்ந்தன. கிட்டதட்ட இந்த புத்தகத்தில் படிப்பது போலவேதான் அவையும் படிக்கப்பட்டன திரு.வாட்சனுடைய பேச்சு ஒலிப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டது, அல்லது ஒலிப்பதிவு செய்ததிலிருந்து வெட்டியெடுத்து ஒலிப்பதிவு செய்ததாக இருந்தது. இந்த ஒலிப்பதிவு முதலில் ஒலிப்பதிவு செய்ததிலிருந்து எடுக்கவேண்டியிருந்தது. இந்த ஒலிப்பதிவை மீண்டும் ஒலிப்பதிவு செய்வதற்குப் பெரிய ஒலிப்பதிவு நாடா பயன்படுத்தப்பட்டது. பிறகு இடைவெளி பொருத்தமான பேச்சுக்கள் மூலம் இணைக்கப்பட்டது. மீண்டும் இரண்டு பிரச்சனைகள் இருந்தன. முதலாவது பிரதிகளின் ஒலிப்பதிவும் இரண்டாவது அவற்றைப் பதிவு செய்வதும் ஆகும்.
டைப் செய்யப்பெற்றப் பேச்சுக்களைச் சரியான அளவில் பிரித்து இந்தியா 1-9, இங்கிலாந்து 1-7, என்று பக்கங்கள் குறிக்கப்பெற்றன. எண்களும் நாடாக்களின் தொடக்கமும் முடிவும் பேச்சாளர்களின் பெயருக்கேற்ப பக்கங்களில் குறிக்கப்பெற்றன. இறுதியில் வழவழப்பான பெரிய அளவுள்ள காகிதங்களில் ஒவ்வொரு விஷயமும் முழு விபரத்துடன் வெளிவந்தது. அவை பக்கங்களின் ஓரங்களில் எழுதப்பட்டுள்ளன. நினைப்பது போல் இந்த வேலை அவ்வளவு சுலபமல்ல. சில வேளைகளில் சில வாக்கியங்களைப் பயன்படுத்துவதற்குப் பல பாகங்கள் பதிவாகியுள்ள 2, 3நாடாக்களிலுள்ளவற்றைக் கொண்டு ஒரு சிறு பத்தி அமைக்கவேண்டியிருந்தது.
நாடாவில் எல்லாவற்றையும் பதிவாக்கின பிறகு பேச்சு வழக்கில் இதை ஷூட்டிங் ஸ்கிரிப்ட்என்று சொல்லுவார்கள். நானும் ஒலிப்பதிவு செய்வதில் திறம்படைத்த பலரும் சேர்ந்து இவற்றை ஒலிவழிக்கேற்ப இணைக்க முற்பட்டோம்.
இதைச் செய்வதற்கு 2ஒலிப்பதிவு கருவிகளை நாங்கள் பயன்படுத்தினோம். ஒன்று ஏற்கெனவே ஒலிப்பதிவானவற்றில் இருந்து எங்களுக்குத் தேவையானவற்றை மீண்டும் ஒலிப்பதிவு செய்வதற்கும், மற்றொன்று மீண்டும் வரிசைப்படி ஒலிப்பதிவு செய்வதற்குமாக அவற்றைப் பயன்படுத்தினோம்.
ஒரு பேச்சை ஒலிப்பதிவு செய்யவேண்டுமாயின் ஒன்று அப்பேச்சை அப்படியே ஒலிப்பதிவு செய்யவேண்டும் அல்லது மேலே கண்டுள்ளபடி வாக்கியம் வாக்கியமாக ஒலிப்பதிவு செய்யவேண்டும். இம்மாதிரி ஒரு முறை ஒலிப்பதிவு செய்ததை மீண்டும் ஒலிப்பதிவு செய்யும்போது விரைவிற்கு ஏற்பச் சில மாறுதல்கள் செய்வது தேவையாக இருக்கலாம். சில வேளைகளில் ஒரு வாக்கியத்திற்குள் கூட இம்மாதிரி மாற்றம் செய்யவேண்டி வரும். அதிகமான சூட்டினாலோ அதிகமான குளிரினாலோ அதிகமான தூசியினாலோ அல்லது ஒலிப்பரப்பு யந்திரக் கருவியில் ஏற்படும் கோளாறு காரணமாகவோ பேச்சின் வேகம் பாதிக்கப்படும்போது சில சமயங்களில் பாட்டரி போட்ட சிறு ஒலிபரப்புக் கருவி பயன்படுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் கூட தேவையான இடங்களில் உண்மையான ஒலிப்பரப்பைச் சமன் செய்வதற்காக நாங்கள் சிறப்பான ஒலிப்பரப்புக் கருவியைப் பயன்படுத்தினோம். ஓரளவு அதிகப்படியான ஓசையைக் குறைக்க முடிந்தது. 'S' (எஸ்) என்ற ஓசை வரும்போது ஒலிப்பதிவுக் கருவியின் ஒலியைச் சற்றுக் குறைக்க வேண்டி வந்தது. காற்றின் ஒலியைப் போன்ற ஒலியையும் தேவையற்ற மற்ற ஒலிகளையும் குறைக்கவும் இக்கருவி பயன்பட்டது. இயன்ற வரை பேசுபவர்களது பேச்சு அவர்களது இயற்கைப் பேச்சு போல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இவையெல்லாம் செய்யப்பெற்றன. ஒரு முறை ஒரு புது நாடாவில் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் அதன் அமைப்பு வேலை தொடங்கும்.
நாங்கள் ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த நாடா மின்சார முறையைக் காட்டிலும் சிறந்தது. அது சராசரி ஒரு விநாடியில் 15அங்குல நீளத்தைப் பதிவு செய்யும் வேகம் உள்ளது. சராசரி நீளமுள்ள ஒரு வார்த்தை 6, 8அங்குல நீளமுள்ள நாடாவில் அடங்கிவிடும். கடைசியில் அமையும் 'S'இரண்டு அங்குலத்தில் அடங்கும் 'N'என்ற எழுத்து வாக்கியத்தின் இடையில் வரும்போது 3/4அங்குல நீளத்தை எடுத்துக்கொண்டுவிடும். ஒரு நீளமான 'er'அல்லது நீளமுள்ள ஓர் இருமல் ஆகியவை எளிதாக அகற்றக்கூடியவையாக இருப்பினும் அவை 6அங்குலத்திலிருந்து 9அங்குலம் வரையுள்ள நாடாவில் இடத்தை அடைத்துக்கொள்ளும்.
எளிதாக அகற்றப்படக்கூடியவை என்று நான் எழுதியிருக்கிறேன். இது மிகச் சிறந்த நேர்த்தியான பிளேடினால் அகற்றப்படவேண்டும். தேவையற்ற நாடாத்துண்டை அகற்றுவதற்கும் இரண்டு ஓரங்களை இணைப்பதற்கும் இதற்காகவே செய்யப்பட்ட வெள்ளை நாடா பயன்படுகிறது.
பிரதிகளின் நகல்களை எடுக்கும்போதும், ஒரு வாக்கியத்தையோ அல்லது ஒரு பத்தியையோ அல்லது நான் குறிப்பிட்டது போல் பல நாடாக்களிலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியக் கோவைகளையோ இணைக்கும் பொழுதும், தேவையான குறிப்புக்களைப் பிரதிகளுக்குமேல் நான் குறித்துக்கொண்டேன்.அதிக நீள இடைவெளிகளும் தவறுகளும், திருத்தங்களும், குறைபாடுகளும், இருமல்களும், சொன்னதையே திருப்பிச் சொல்வதும், அல்லது திருப்தியற்ற தொடக்கமோ அல்லது முடிவோ ஏற்பட்டிருக்கலாம்.
டாக்டர் ஜெயகருடைய பேச்சு ஒலிப்பதிவுச் சித்திரமாக இந்த முறையில் தொடங்கிற்று. நாங்கள் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த எழுத்து வடிவில் இது மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் முதல் நான்கு சொற்கள் பிரான்சிஸ் வாட்சனுடைய கேள்விகளில் மறைந்துவிட்டதனால் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் இம்மாதிரி அடிக்கடி நடந்தது. டைப் செய்த வார்த்தைகள் நேர்த்தியாக வார்த்தைக்கு வார்த்தை பேச்சாளருக்குப் பேச்சாளர் பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாவில் இடையூறு செய்யப்பட்ட குரல் அல்லது ஒலி இவற்றை மாற்ற முடியாதபடி நேர்ந்துவிட்டால், அல்லது ஒலிப்பதிவு சரியாகப் பதிவாகாதிருந்தால், எழுத்துப் பிரதியில் பொருந்தும்படியான திருத்தம் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. பொதுவாக இம்மாதிரிப் பதிவு செய்வது வழக்கம்தான். அதிகமான கருத்துக்களையும் சொந்தக் கருத்துக்களையும் பதிவு செய்யும்போது மிகவும் கவனமாகச் செய்யவேண்டும். சில பேச்சாளர்கள் தயங்குவார்கள். அல்லது 'ers'என்ற ஓசை எழுப்பவோ அல்லது கடைசியில் வரும் மெய்யெழுத்துக்களை நீட்டவோ செய்வார்கள். சில பேச்சாளர்கள் நடுக்கத்துடன் ஆரம்பித்து மெதுவாகத் தொடர்ந்து வரும் எண்ண ஒலிகளுடன் மைக்கிரோபோனையும் மறந்து வேகமாகப் பேசுவார்கள். சில பேச்சாளர்கள் தாம் பேசவேண்டிய கருத்துக்களை அழுத்திக் கூறுவதற்காகப் பேசியதையே பேசுவார்கள். இம்மாதிரியான விஷயங்களும் இவை போன்ற பல விஷயங்களும் அவர்களது ஒலிப்பதிவை ஒழுங்கு செய்யும்போது மனத்தில் வைத்துக்கொண்டு செய்யவேண்டும்.
இதுபோன்ற பெரும்பாலான இடையூறுகளையும் பதிவு செய்வதிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. ஆனால் பேசுபவர்களது குணச்சிறப்பிற்கு ஏற்பவும், ஒலிப்பதிவு செய்த குரலுக்கு ஏற்பவும் அவற்றைத் தேவைப்படும் அளவு அப்படியே வைத்திருப்பதும் பேசுபவர்களைத் துரிதப்படுத்துவதும் நாடக பாணியில் பேசுகின்ற இடங்களில் இம்மாதிரியான தேவையற்ற இடையூறுகளை நீக்குவதும் அவசியமாகும். இம்மாதிரி நீக்குவது பொருத்தமாக இருக்கும்படி பேசுபவர்களை நிதானப்படுத்தும் பொருட்டு அவரது மெதுவான தொடக்கத்திலிருந்து அகற்றப்பட்ட அந்த இடைவெளிகளையும் 'ers'களையும் இதே நோக்கத்திற்காக வைத்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும்.முதல் நாடாவின் கடைசி வார்த்தைக்குப் பிறகு வெட்டப்பட்ட பகுதியையும் அடுத்த நாடாவிலுள்ள முதல் வார்த்தைக்கு முன்புள்ள பகுதியையும் ஒன்றாக இணைக்கும் பொழுது அவற்றை ஒரே நாடா போல் இருக்கும்படி பயன்படுத்த வேண்டும். இரண்டு வார்த்தைகளுக்கிடையில் இயற்கையாக இருக்கவேண்டிய இடைவெளி அதே நாடாவில் இருப்பதோடு அதே பின்னணி ஒலியும் அந்த இரு வார்த்தைகளையும் இணைக்கும்போதும் இருக்கவேண்டும். ஒலிப்பதிவு செய்யப்படாத நாடாவையோ அல்லது வேறு பின்னணியில் அமைந்த நாடாவையோ பயன்படுத்தினால் அது உடனே கேட்போர் கவனத்திற்கு உள்ளாகும்.
நானும், சிறந்த வல்லுநர்களும் சேர்ந்து ஏறத்தாழ 90மணிநேரம் ஒலிப்பதிவுகளை 4சுருள்களில் அடக்கி முடித்தோம்.பிறகே ஒழுங்கான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாக்கள் தயாராயின. பேசுகின்ற இணைப்பு எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வெள்ளை நாடாவினால் இணைத்தோம். எவ்வளவோ பிரயாசைப்பட்டுத் தரத்தை உயர்த்தி ஒரு நாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை மற்றொரு நாடாவில் பதிவு செய்தோம். கிராமபோன் தட்டில் பதிவாகியிருந்த காந்திஜியின் பேச்சை மீண்டும் பதிவு செய்தது காந்திஜியைச் சுட்டுக்கொன்றபோது நடந்த நிகழ்ச்சியைப்பற்றி ராபர்ட் ஸ்டிம்சன் கூறியதைப் பதிவு செய்தது, ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவில் புதுதில்லியில் ஒலிப்பதிவான திரு.நேரு அவர்களின் பேச்சு, அந்த நேரத்தில் நடந்த விழாவின் ஒலி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான திரு. பிரான்சிஸ் வாட்சனுடைய பேச்சுக்களைப் பதிவு செய்வதற்காக ஒலிப்பதிவு நிகழும் அறையில் நான்கு நாட்களைக் கழித்தோம். ஒரு ஒலிப்பதிவுக் கருவி மூலம் பதிவு செய்ததை மீண்டும் ஒலிபரப்புவதற்கும் மற்றொன்று வர்ணனைகளையும் ஏற்கனவே பதிவாகியுள்ளவற்றையும் கலந்து பதிவு செய்வதற்குமாக இரண்டு ஒலிப்பதிவுக் கருவிகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. திரு. வாட்சன் பேச்சையும் ஏற்கனவே பதிவாகியுள்ள நாடாவில் வெள்ளை நாடா தெரியும் வரை ஒலிபரப்பானதையும் இணைத்து அரை மணிநேரம் இம்மாதிரி நிகழ்ச்சி தயாரித்தோம். முழு நிகழ்ச்சியும் உருவாயிற்று.
ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சியை நாங்கள் பதிவு செய்தோம், முதல் ஒலிப்பதிவு முடிந்ததும் ஒவ்வொன்றும் அதிக நீளமுள்ளதாக இருந்தது. நாங்கள் கலந்து பேசி ஆங்காங்கே வெட்டிச் சுருக்கினோம். வர்ணனைகள் தேவைப்பட்ட இடங்களில் எழுதப்பட்டு, மீண்டும் ஒலிப்பதிவாகியது. திரும்பவும் கிராமபோன் தட்டிலிருந்து புது விஷயங்களை வெட்டி எடுப்பதும் தேவையற்ற பேச்சுக்களை நீக்குவதும், இடைவெளிகளை நீட்டுவதும் குறைப்பதும், ஏற்கனவே பதிவாகியுள்ளவரது பேச்சுக்களை ஒழுங்கு செய்வதுமாகச் செய்நேர்த்தி செய்யவேண்டும்.
பாராட்டுச் செய்தியும், எங்கள் பணியில் திருப்தியும் மகிழ்வும் கொண்ட சக ஊழியர்களது புகழுரைகளும் இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தன. இவற்றின் மகத்தான வெற்றிக்கு நுட்பமான பணியாளர்களே காரணமாவார்கள். ''இங்கிலாந்தில் காந்திஜி"என்ற நிகழ்ச்சியை உருவாக்கும் சமயத்தில் திரு. வாட்சன் சற்று களைப்பாக இருந்தபடியால் மெஸெஜ் (Message) என்று பதிவாக வேண்டியது மெஸெஞ்சர் (Messenger) என்று பதிவாகிவிட்டது, எழுத்துப் பிரதியைப் பார்த்தபொழுது ஒரு பார்வையிலேயே இந்தத் தவற்றை நீக்கியிருக்கலாம், பொருளும் மாறாது என்று தோன்றியது. ஆகையினால் அவரிடம் மீண்டும் அதே பகுதியைப் பேசும்படிக் கேட்கவில்லை. அன்று மாலையில் வெகுநேரம் வரை இஞ்சினியரும் நானும் நாடாவோடு வேலை செய்துகொண்டிருந்தபோது இந்தத் தவற்றை அறிந்துகொண்டோம்.
''நீங்கள் இந்த வாக்கியத்தையோ, அந்த வாக்கியத்தையோ எதை நீக்கினாலும் பொருள் குலையாது''என்று அந்த வாக்கியத்தைச் சுட்டிக்காட்டி வாட்சனிடம் கூறினேன்.
''ஒரு விநாடி பொறு"என்று அவர் சொன்னார். கவனமாக் கேட்டார். அரை அங்குலம் நாடாவை வெட்டி இரண்டு ஓரங்களையும் சேர்த்து இணைத்தார். "இப்பொழுது கேட்கலாம்"என்று அவர் சொன்னார். மெஸெஜ் என்று ஒலிப்பதிவு கூறிற்று. கடைசியிலுள்ள ''யின் ஓசை கிட்டத்தட்ட யின் ஓசை போல் இருந்தது, அவர் ‘W’ என்பதை வெட்டி எடுத்துவிட்டார். இந்த முறைப்படி பொறுமையுடனும் திறமையுடனும் வேலை செய்யும் தொழில்நுட்பத்தைக் கற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாகும்.
- மாரிஸ் பிரவுன்

காந்திஜி ஒரு சொற்சித்திரம் - தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – ஒலிச்சித்திரம் - 1

$
0
0

Gandhi by Sergio Moreno / Dribbble
காந்திஜி:-"உங்களுக்குக் காதில் விழுகிறதா? என் குரல் கேட்கவில்லையென்றால் அது என் குறையல்ல. அது ஒலி பெருக்கியின் குறைபாடாகும்." (சிரிப்பும், மகிழ்ச்சி ஆரவாரமும்)
சொல்பவர்:- அந்தக் குரல் (1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய ஒற்றுமை மாநாட்டில் உண்மையாகவே பதிவானது.) அனைத்து உலக மக்களுக்கும் நிச்சயமாக எட்டியுள்ளது. அந்தக் குரல், கடைசியாக மூன்று குண்டுகளால் அமைதி அடைந்த பொழுது போப்பாண்டவரிடமிருந்தும், காண்டர்பரியின் ஆர்ச் பிஷப்பிடமிருந்தும், தலாய்லாமாவிடமிருந்தும், இங்கிலாந்து அரசரிடமிருந்தும், அமெரிக்க நாட்டு ஜனாதிபதியிடமிருந்தும் துயரச் செய்திகள் வெளிவந்தன. ஏகாதிபத்யம் ஓங்கியிருந்த காலத்தில் காந்திஜியின் குரல் ஒரு பேச்சாளரின் குரல் போல் இருக்கவில்லை. பொதுக்கூட்டங்களிலோ பிரார்த்தனைக் கூட்டங்களிலோ அவர் பேசுவது ஒரு பொழுதும் முன்கூட்டியே தயாரித்த பேச்சாக இருந்ததில்லை. மேலும் ஜவாஹர்லால் நேரு, அமிர்தகெளர், நேருஜியின் குமாரி இந்திரா முதலியவர்கள் நினைவுகூர்வது போல் அது அமைதியான குரல்.
ஜவாஹர்லால் நேரு:-குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவரது குரல் எழும்பாது. அவர் ஒரு பொழுதும் தமது குரலை உயர்த்தி பேசியதில்லை. ஆனால் அது ஓர் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த குரலாக இருந்தது.
ராஜகுமாரி அமிர்தகௌர்:- அது மிகவும் பலவீனமானது.அவரது குரலைக் கேட்பது அரிது. அவர் பேசும் மேடையிலிருந்து அதிக தூரமில்லாத இடத்தில் எனது தாயாருடன் நான் இருக்க நேர்ந்தபடியால், அவரது பேச்சை நான் கேட்டேன். ஆனால் ஒலிபெருக்கி வசதி கிடையாது. ஆகையால் அவரது குரல் முதல் இரண்டு அல்லது மூன்று வரிசைகளுக்கு மேல் எட்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இந்திரா காந்தி:-அவரது குரல் எனக்கு நினைவிருக்கிறது. மிகவும் அமைதியாகவும் மெதுவாகவும் இருக்குமென்றாலும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. எனவே,அவர் தாழ்ந்த குரலில் பேசினாலும் அமைதியாகவே நாம் இருக்கவேண்டியிருக்கும்.
சொல்பவர்:-காலம் சென்ற திருமதி சரோஜினி நாயுடுவின் பெண்களில் ஒருத்தியான பத்மஜா நாயுடு இந்த ஒலிச்சித்திரத்திற்கு நிச்சயமாக உதவி செய்யக்கூடியவர்.
பத்மஜா நாயுடு:-எனது தாயார் அவருக்கு மிக்கி எலிஎன்று பெயர் வைத்திருந்தார். அவரும் அந்தப் பெயரை விரும்பினார். ஆனால் மிக்கி எலிஎன்ற பெயரை ஏன் அவருக்கு வைத்தார் என்பதை விளக்குவதற்கு என் அன்னைக்கு நீண்டகாலம் பிடித்தது. அவருக்காக ஒரு சினிமாப் படத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவரைச் சினிமாவிற்குப் போகச் செய்வதற்கு அவள் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் அது சட்டென்று நடக்கக்கூடியதாக இல்லை.
சொல்பவர்:-தம் வாழ்நாளிலேயே காந்திஜி 1944இல் ஒரு படம் பார்த்தார். அந்தப்படம் அவரை அவ்வளவாகக் கவரவில்லை. எனவே குமாரி நாயுடு பேசக் கேட்போம்.
பத்மஜா நாயுடு:-அவரது எலும்புகள் எல்லாம் கொஞ்சம் வளைந்து நெளிந்திருக்குமோ என்ற எண்ணம் பார்ப்பவர்க்கு ஏற்படும். ஆனால் முதலில் அவரது தோற்றத்தைக் கண்டு அதனால் உண்டான அதிர்ச்சி நீங்கிய பின், அதைப்பற்றிய நினைவே இருக்காது. அவரது கண்கள் வசீகர சக்தி வாய்ந்தவை. ஓய்வு நேரத்தில் அவரது முகத்தைப் பார்க்கும் பொழுது வாழ்நாளில் என்றுமே கண்டிராத துயரம் தோய்ந்த முகமாக எனக்குத் தோன்றும். அவர் ஓய்வாக இருக்கும்போது மட்டுமே இந்த மாதிரி துயரத் தோற்றத்தைப் பார்க்க முடியும்.
கில்பர்ட் மூரே:-அவரது தோற்றம் நிச்சயமாக முதலில் உங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அவர் ஏறத்தாழ நிர்வாணமாக இருந்ததே அதற்குப் பாதி காரணமாகும். அவருக்குப் பல் இல்லாதது அதிர்ச்சிக்கு முக்கிய காரணமோ என்று நான் நினைக்கிறேன்.
சொல்பவர்:-காந்திஜியைப்பற்றி டாக்டர் கில்பர்ட் மூரேயின் கருத்து இது. கிளோர்னி போல்டன், வெரியர் எல்வின் என்ற இரு எழுத்தாளர்களின் கருத்தோவியம் வருமாறு.
கிளோர்னி போல்டன்:-ஒவ்வொருவரும் கருதியபடி மிகவும் அசாதாரணமான எளிய தோற்றமுள்ள வயதான மனிதர் என்றேதான் நானும் கருதியதாக நினைவு. ஆனால் சில விநாடிகளுக்குள் அந்தக் கருத்தும் மறைந்துவிட்டது. வியப்பிலிருந்து விடுபட்டுச் சாதாரண நிலையை அடைந்தபின் அழகாக ஆங்கிலம் பேசும் ஓர் மனிதரைக் காண்போம். அபூர்வமான நகைச்சுவை அவரிடம் இருந்தது. சதா சிரித்துக்கொண்டும், மக்களைப்பற்றி ஆழ்ந்த அபிமானத்துடன் பேசிக்கொண்டும் இருப்பார் அவர்.
வெரியர் எல்வின்:-மக்கள் அவரை அவலட்சணம் என்கிறார்கள். ஆனால் இன்று எனது பழைய நாட்குறிப்பு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் பல விஷயங்களில் முதன்மையாக அவரது அழகைப்பற்றித்தான் நான் குறித்திருக்கிறேன். அவர் ஓர் அழகான மனிதராகவே எனக்குத் தோன்றினார். சொல்லப்போனால் அழகு என்பது இரண்டு கண்களும், ஒரு மூக்கும், வாயும் ஒழுங்காக மனிதரது முகத்தில் அமைந்திருப்பது மட்டுமல்ல. அவரது உடம்பின் தோல் அழகாக அமைந்திருந்தது. கண்கள் அழகு பொருந்தியிருந்தன. அவரது முதுகுப்புறம் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது.
சொல்பவர்:-1942-இல் லூயி பிஷர் இதே உடலழகைக் கண்டுள்ளார்.
லூயி பிஷர்:- அவர் தமது உடம்பைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். மிருதுவான தோலையுடைய அழகான உடம்பு என்று சொல்லலாம். அதிசயிக்கத்தக்க பலம் கொண்ட திரண்ட மார்பு, நீண்ட கால்கள், பெரிதான முழங்கால்கள் ஆசிரமப் பெண்களில் ஒருத்தியால் மிகக் கவனமாகவும் கச்சிதமாகவும் வெட்டிவிடப்பட்ட விரல் நகங்கள் ஆகியவற்றுடன் தோற்றமளித்தார். அவர் தூய்மையானவர். அவர் உடம்பு மிகவும் சுத்தமாக இருக்கும். தினமும் மஸாஜ்’ ‘செய்துகொள்வார். அவர் முழங்கால் வரை வேட்டியும் ஒரு ஜதை பழைய செருப்பும் அணிந்திருந்தார். ஆனால் அவரது முழங்கால் வரையுள்ள வேட்டி எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். ஒரு தடவை அவர் காலைச் சிற்றுண்டி அருந்தும்போது நான் அவரிடம் போனேன். அவர் காலைச் சிற்றுண்டி விடியற்காலை ஐந்து மணிக்கு அருந்துவார். அதில் பொதுவாக ஒரு கோப்பை மாம்பழச்சாறும் இருக்கும். சிற்றுண்டி முடிந்தபின் கைகளைக் கழுவிக்கொண்டு உலாவப் புறப்பட்டார். அப்பொழுது அவரது வெள்ளை வேட்டியிலோ அல்லது மேலாடையிலோ ஒரு சொட்டு மாம்பழச்சாறு விழுந்துவிட்டது. அதை அவர் சுரண்டிக்கொண்டிருந்தார். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் அதைச் சுரண்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுத்தமாக்க முயன்றார்.
சொல்பவர்:-அவருடைய தோற்றத்தைப் பற்றி அவரே வேடிக்கையாகக் கூறுவதுண்டு. 1946-இல் லூயி பிஷர் மீண்டும் அவரைப் பார்த்தார்.
லூயி பிஷர்:-அவர் வந்தவாறே என்னைப் பார்த்து, “,பிஷர் அவர்களா!என்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் நடந்த சந்திப்பு இது. இந்த நான்கு ஆண்டுகளில் நான் அழகுள்ளவனாக வளர்ந்திருக்கிறேனா?”என்று கேட்டார். உங்கள் கருத்துக்கு மறுப்புக்கூற எனக்குத் துணிவில்லைஎன்றேன் (சிரிப்பு). அவர் தமது தலையைப் பின்னுக்கு இழுத்துச் சிரித்தார். அவரது கண்களைத் தவிர மற்ற எல்லா உறுப்புக்களும் முகமும் தனித்தனியாகப் பார்த்தால் அவலட்சணம் என்றே கூறவேண்டும்.ஆனால் எல்லாம் சேர்ந்து அவரது முகம் அழகானது. ஏனென்றால் அதில் ஒளியிருந்தது.
சொல்பவர்:-காந்திஜி தமது முகத்தைப் பார்த்துச் சிரித்ததை பத்மஜா நாயுடு நினைவுகூர்கிறார்.
பத்மஜா நாயுடு:-என் தாயாரும் நானும் முடிந்த பொழுதெல்லாம் அவரைப் பார்க்கப் போவது வழக்கம். குறிப்பாக அவரது மெளன தினத்தன்று அவரைப் பார்க்கப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அன்று அவருக்கு ஓய்வு நாள். அரசியல் பற்றியோ, வேறு முக்கியமான பிரச்சனைகள் பற்றியோ பேச வாய்ப்பு இராது. எனவே நல்ல ஓய்வு கிடைக்கும். சாதாரண அரட்டைப் பேச்சுக்கு வாய்ப்பு உண்டு. காந்திஜியும் இம்மாதிரிப் பேச்சை விரும்புவார். ஆகையால் ஒருநாள் அவரிடம் புதுதில்லியில் மிக மிக அவலட்சணமான ஒரு மனிதனைப் பார்த்ததாகக் குறிப்பிட்டேன். காந்திஜி தம்மைப் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணிக் குழம்பி தம்மையா என்று சுட்டிக்காட்டினார். அவர் கேட்பது புரியாமல் நான் குழம்பவே ஒரு தாளை எடுத்து நீங்கள் மிகவும் அவலட்சணமான மனிதனை தில்லியில் பார்த்ததாகக் குறிப்பிட்டீர்களே! நான் எங்கே அங்கே வந்தேன்?” என்று எழுதிக் கேட்டார். ஆகையினால் அவரிடம் மன்னிப்புக் கேட்டவாறே நான் தில்லியில் இரண்டாவது அழகில்லாத மனிதனை இப்பொழுதுதான் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.என்று சொல்லவேண்டி வந்தது. அவர் அதைக் கேட்டு மகிழ்ச்சியே அடைந்தார்.
சொல்பவர்:-ஆங்கிலேய அட்மிரல் ஒருவரின் பெண்ணான மிஸ். ஸ்லேட் என்னும் மீரா பென் காந்திஜிக்காகத் தமது வாழ்க்கையை ஈடுபடுத்தியவர். எல்லோரைப் போலவும் காந்திஜியைப் பாபுஜி என்று அழைப்பவர். காந்திஜி முகம் பார்க்கும் கண்ணாடியே வைத்துக்கொண்டதில்லை என்று சொல்கிறார்.
மீரா பென்:-அவர் ஒருபோதும் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக்கொண்டதில்லை. அவர் கண்ணாடியில் தம்மைப் பார்த்துக்கொண்டதில்லை. ஷவரம் செய்துகொள்ளும்போது கூடப் பார்த்துக்கொள்வதில்லை, ஒரு விசித்திரமான சம்பவம் எனக்கு நினைவு வருகிறது. ஆகாகான் மாளிகையில் எங்கு பார்த்தாலும் ஏராளமான முகம் பார்க்கும் கண்ணாடிகள் இருக்கும். அந்த அரண்மனையில் குளிக்கும் அறையில் அவர் கைகழுவப் போவது வழக்கம். எதிரில் இருக்கும் கண்ணாடியில் தம் உருவத்தைப் பார்த்துக்கொள்வதாக எண்ணி நான் எனக்குள் பார்! பார்! பாபு தம் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறார்என்று சொல்லிக்கொள்வதுண்டு. அவர் தர்மசங்கடமான நிலையில் இந்த மனிதர் யார்? மக்கள் எதைக்கண்டு மயங்குகிறார்கள்என்று ஆச்சரியமடைந்து கேட்பது போல் தோற்றமளிப்பார்.
சொல்பவர்:-1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறுஎன்ற இயக்கத்துக்குப் பிறகு காந்தியடிகள் தங்குவதற்காகப் பூனாவிற்கு அருகில் இருக்கும் ஆகாகான் மாளிகை இந்திய அரசாங்கத்திற்கு இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்தது, 1944-ஆம் ஆண்டு மே மாதம் அவர் விடுதலை அடைந்தார். ஆனால் அந்தப் போராட்டத்தின் காரணத்தையும் அதன் முடிவையும் இந்த தேசத்திலிருப்பவர்களாகிய நாம் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகின்றோம். திரு. ராபர்ட் ப்ரூம்பீல்ட் என்பவர் 1922-இல் காந்திஜி மீது இருந்த வழக்கை நடத்திய முறை காந்திஜியைப் பெரிதும் கவர்ந்தது. காந்திஜி அவர்கள் கைதானது ஒரு கதையே ஆகும்.
திரு. ராபர்ட் ப்ரூம்பீல்ட்:-அகமதாபாத்தில் பொழுது சாய்ந்த வேளையில் ஒரு கிளப்பில் நான் இருந்தேன். டான்ஹிலே என்ற போலீஸ் சூப்பிரென்ட்டென்ட் தமது போலீஸ் உடையோடு திரும்பினார். ஏன் இவ்வளவு நேரம் வரை வேலை செய்தீர்கள்?” என்று நான் அவரைக் கேட்டேன். அவர் காந்திஜியைக் கைது செய்யப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். அந்த நேரத்தில் அதுவும் காந்திஜியின் சொந்த நகரத்தில் அம்மாதிரி கைது செய்வது ஆபத்தானது. டான்ஹிலே அந்தக் கிளப்பை விட்டுத் தம்முடைய காரில் புறப்பட்டார். அந்தக் காரை ஓட்டியவர் ஒரு போலீஸ் ஆர்டர்லி. அதில் வேறு போலீஸ் அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை. காந்திஜி தம் சகாக்களுடன் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்கு அவர் அந்தக்காரை ஓட்டிச் சென்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நான் அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் காந்திஜிக்கு ஒரு வாரன்ட் இருப்பதாகக் செய்தி அனுப்பினார். அப்பொழுது காந்திஜி மாலைப் பிராத்தனை செய்துகொண்டிருந்தார். ஒருசில நிமிடங்களில் தாம் தயாராகிவிடுவதாகக் காந்திஜி அவருக்குக் சொல்லி அனுப்பினார். டான்ஹிலே தமது காரில் காத்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு காந்திஜி வந்து காரில் உட்கார்ந்துகொண்டார். அவர்கள் இருவரும் சிறைக்குச் சென்றனர். கார் ஓட்டுபவரைத் தவிர அங்கு வேறு போலீஸ் அதிகாரியே இல்லை. அந்த இருவரையுமே பாராட்ட வேண்டிய நிகழ்ச்சி அது என்று நான் எப்பொழுதும் எண்ணுவேன்.
சொல்பவர்:-காந்திஜிக்கும், காந்திஜியின் அஹிம்சைக்கும் வெற்றி கிட்டியதற்குப் பெரும் காரணம் அவர் எதிராளிகளையும் பாராட்டக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்ததுதான்என்று குடியரசுத் தலைவராகிய டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்கள் ஒருமுறை சொன்னார். டாக்டர். பிரசாத் முதன் முறையாக1917-இல் பீகாரில் காந்திஜியுடன் தொடர்பு கொண்ட பொழுது அவரது அணுகுமுறை அவருக்குப் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருந்தது. ஆனால் விரைவிலேயே அவர் எந்தக் குறிக்கோளை அடைய விரும்புகிறார் என்பதை அறிந்துகொண்டார்.
ராஜேந்திர பிரசாத்:-அவர் எந்தக் குறிக்கோளை அடைய விரும்புகிறார் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அவர் கையாளுகிற முறை புதுமையானது, விந்தையானது, வெற்றிகரமானது என்பதை நாங்கள் கண்டுகொண்டோம்.
சொல்பவர்:-இந்தியாவின் சிறந்த அரசியல் தலைவரான டாக்டர். எம். ஆர். ஜெயகர் அடிக்கடி காந்திஜியின் கருத்துக்களோடு மோதுவார். ஆனால் காந்திஜியிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஒருபோதும் குறைந்தபாடில்லை.
எம். ஆர். ஜெயகர்:-நாம் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். காந்திஜி மட்டும் இல்லையென்றால், நான் சொன்னது போல் அரசியல் கருத்துக்களில் மாற்றமோ புரட்சியோ இவ்வளவு விரைவில் ஏற்பட்டிருக்க முடியாது. நாம் நமது சுதந்திரத்தை வெகு மலிவாக எளிதில் அடைந்ததாகவே நான் கருதுகிறேன். மற்ற நாடுகள் யாவும் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தியுள்ளன. நாம் துளிக்கூட இரத்தம் சிந்தவில்லை. அவர் தவறுகள் செய்திருக்கலாம். அவரது அரசியல் மிகவும் உணர்ச்சிமயமானது என்று நான் கருதுகிறேன். தலைவர்களை வணங்கும் ஒரு மோசமான பழக்கத்தை அவர் ஏற்படுத்தினார். நேர்மையான அரசியலில் அது இடம்பெறவே கூடாது என்பது எனது கருத்தாகும்.
சொல்பவர்:-வேறொரு மூத்த தேசியத் தலைவரான திரு. மீர்ஸா இஸ்மாயில் கூட அளவோடுதான் அக்கருத்தை ஏற்றுக்கொண்டார். காந்திஜி சமூகத்திற்கும் தனிப்பட்டவர்களுக்கும் உள்ள பெரும் இடைவெளிக்கு அணை கோலி மாற்றம் காண்பார் என்பதை இன்னும் விரிவாகப் பேராசிரியர் நிர்மல் போஸ் என்பவர் காண்கிறார். மேற்கு வங்காள முதன் மந்திரி டாக்டர் பி. ஸி. ராய் இதே கருத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பி. ஸி. ராய்:-மார்க்ஸும் மற்றோரும் முதலில் சமூகம் திருந்த வேண்டும். அப்புறம்தான் தனிமனிதன் மாற முடியும் என்று எண்ணியிருந்தனர். ஆனால் தனிமனிதனது வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்துதான் வளர்ச்சி பெற வேண்டும் என்றே மதிநுட்பம் வாய்ந்த காந்திஜி கருதினார் என்று நான் நினைக்கிறேன். காந்திஜியின் மேதாவிலாசம்தான் தனிமனிதனைச் சமூகத்தோடு தொடர்புகொள்ளச் செய்தது.
சொல்பவர்:-மாறுபட்ட தனிப்பட்டவர்களுக்கிடையிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியவர் காந்திஜி என்பது நேருஜியவர்களின் கருத்து.
ஜவாஹர்லால் நேரு:-காந்திஜியைப்பற்றி உண்மையான கருத்து என்னவென்றால், அவர் எப்படி மாறுபாடுள்ள, முற்றிலும் மாறுபட்டுள்ள பல்வகை மக்களைத் தம்பால் ஈர்த்தார் என்பதாகும். அதன் காரணமாகவே ஏழைக் குடியானவர்களது பிரதிநிதியாக எப்பொழுதும் இருக்க நினைத்து அவர்களுக்கும் அரசர்களுக்கும் பணக்காரத் தொழிலதிபர்கட்கும் ஏனையோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு கொண்டு எல்லா மக்களையும் அவரவர்கள் வழியிலேயே தம்பால் ஈர்க்க அவரால் முடிந்தது என்று சொல்லலாம். சந்தேகமின்றி ஓரளவு இவரால் அவர்கள் எல்லாம் கவரப்பட்டனர். நம்மில் சிலர் மிகவும் அதிகமாகக் கவரப்பட்டோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நாம் அவரோடு கூடவே பணிபுரிந்தோம். தனிமனிதனின் உயர்வைப்பற்றி விளக்கிச் சொல்ல ஒருவழி எனக்குத் தெரியவில்லை. நான் எனது வாழ்நாளில் பார்த்தவர்களில் நிச்சயமாக அவர் ஒரு மிகப்பெரிய தனிமனிதர் ஆவார்.
சொல்பவர்:-குடியானவன், தொழிலாளி, அரசன், பகைவன் முதலியவர்கள் காந்திஜியை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்தனர். 1947-இல் பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு தமது சொத்து சுதந்திரங்களை இழந்த போதிலும் தமது குடும்பம் இரத்தக் களரியினின்றும் காப்பாற்றப்பட்டதை நினைவுகூரும் ஒரு ஹிந்துக் கடைக்காரர் பெருங் கொடுமைக்கு ஆளாகிய டில்லியைக் காந்திஜி எவ்வாறு அமைதி நிலைக்குக் கொண்டுவந்தார் என்பதை நினைவுகூர்கிறார்.
தேவதாஸ் கபூர்:-இரண்டு மூன்று நாட்கள் நடந்த குழப்பத்திற்குப் பிறகு அவர் இங்கு வந்தார். பாகிஸ்தான் தவறு செய்துகொண்டிருக்கிறது என்பதற்காக நீங்கள் தவறு செய்வீர்களானால் இரண்டு தவறுகளும் சேர்ந்து ஒரு சரி ஆகிவிடுமா? நீங்கள் இந்த அர்த்தமற்ற செயல்களை எல்லாம் நிறுத்திவிடுங்கள். எல்லா முகமதியர்களும் இந்தியர்கள். உங்களது சகோதரர்கள். அவர்கள் நீண்டகாலமாக இங்கு வாழ்ந்து வருபவர்கள். ஆகையால் அவர்களை எவ்விதத் தொந்தரவுகளுக்கும் ஆளாக்கக் கூடாது. சுடுவது, கொல்வது ஆகிய எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்.என்று கூறினார் இரண்டு நாட்கள் பிரசாரத்திற்குப் பிறகு இதெல்லாம் நின்றுவிட்டது.
சொல்பவர்:-சில மக்களுக்கு அது ஓர் அதிசயமாகத் தோன்றியது. அற்புதச் செயலாகப் பட்டது. எஜமானனுக்காக காலமில்லாக் காலத்தில் மரங்கள் எல்லாம் பூத்தன என்றும், பாம்பு அவரை வணங்கிற்று என்றும் பொய்க் கதைகள் கூட வளர்ந்துவிட்டன. கல்கத்தாவிற்கு அருகிலுள்ள கோலான்பூர் ஆசிரமத்துப் பணியாளர் ஒருவருக்கு இவ்விஷயத்தில் சந்தேகமே ஏற்படவில்லை.
வர்மாஜி:-காந்திஜி திரும்பி வந்த உடனே அந்த இந்திய மரம் காலமில்லாக் காலத்தில் அவருக்கு ஆசி கூறுவது போல் பூக்க ஆரம்பித்தது. அது மிகவும் ஆச்சரியமான காட்சி என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்தினால் திகைத்துவிட்டோம். பிறகு காலையில் அவர் உலாவச் செல்லும் பொழுது எங்களில் சிலர் ஐந்தோ, ஏழோ அல்லது பத்துப் பேரோ அவருடன் இருந்தோம். நாகப்பாம்பு ஒன்று வந்து படம் எடுத்து எஜமானராகிய காந்தியடிகளின் பாதங்களில் வணங்குவதுபோல் குனிந்திருந்தது. அதைக் கண்டு நாங்கள் அனைவரும் வியந்தோம். இந்தப் பாம்பை ஒருவரும் துன்புறுத்தவோ அடிக்கவோ இல்லை. அது அவரை வணங்கி, விரைந்து மறைந்துவிட்டது. அதைக்கண்டு எங்களைப் போலவே அவரும் மகிழ்ந்தார்.
சொல்பவர்:-அறிவாளிகளுக்கு அது வேறாகப்படும். காந்திஜியினுடைய கருத்துக்கு முற்றிலும் வேறுபட்டு, இங்கிலாந்திலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் பலரில் ராஜா ஹத்தி சிங்கும் ஒருவராவார்.
ராஜா ஹத்தி சிங்:-நாங்கள் அவரை ஒரு மூலையில் தள்ள முயன்றோம். ஒரு மாணவன் என்ற முறையில் அவரை ஒரு மூலையில் தள்ளிவிட்டதாகவே கூட நான் நினைத்தேன். ஏனெனில் அவர் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுகிறார். ஏழைகளது தர்மகர்த்தாக்களாகப் பணக்காரர்கள் இருந்தால் செல்வம் எப்படி அழியாதிருக்கும் என்று ஏதேதோ தாறுமாறாகப் பேசுகிறார். இது சாதாரண அடிப்படை, இது பொருளாதாரமே அல்ல என்று நான் நினைத்தேன். அவர் பேசுவது சுத்த அபத்தம் என்றுதான் அந்த நிலையில் நான் எண்ணியிருந்தேன்.
சொல்பவர்:-இருந்தபோதிலும் ராஜா ஹத்தி சிங் முடிவில் காந்திஜிக்காக காந்திஜியுடனே பணிபுரிந்தார்.
ராஜா ஹத்தி சிங்:-நீங்கள் என்னிடம் காந்திஜி சொல்வதை எல்லாம் நம்புகிறீர்களா?” என்று கேட்டால் நான் உடனே இல்லை, நம்பமாட்டேன்என்றுதான் சொல்வேன். இன்று கூட இதே உணர்வு என்னிடம் ஆழப் பதிந்துள்ளது. இருப்பினும் அவர் அழிக்க முடியாத முத்திரையை எனது வாழ்க்கையில் பதித்துவிட்டுச் சென்றுள்ளார். அவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஒருவித சமாதானத்தையும், ஒருவித சக்தியையும் அடைகிறேன். யார் அவரைப் பற்றி நினைத்தாலும் இப்படித்தான். அவர் மேற்கொண்ட வழி அத்தகையது.
சொல்பவர்:-காந்திஜி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற பிறகும் கூட இந்தியாவில் அவர் தமது இயக்கத்தைத் தொடங்கியபோது பல இடையூறுகளைக் கடக்க வேண்டியிருந்தது. தமது இயக்கத்தின் தன்மையை விளக்கிக்காட்டி சர்தார் ஸ்ரீ வல்லபாய் பட்டேலை நம்பவைக்க வேண்டி வந்தது. 1916-இல் காந்திஜி அகமதாபாத்திற்கு வந்ததைக் கீழ்ச்சபை சபாநாயகரான திரு. மாவ்லங்கர் 1956-ஆம் ஆண்டில் அவர் மரணமடையும் வரை நினைவு வைத்திருந்தார். வல்லபாய் பட்டேலும் மாவ்லங்கரும் தங்கள் கிளப்பில் மேஜை எதிரே உட்கார்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
ஜி. வி. மாவ்லங்கர்:-காந்திஜி வருவதை நான் பார்த்தேன். அதனால் நான் எழுந்திருந்தேன். பட்டேல் என்னிடம் எங்கே போகிறீர்கள்? ஏன் எழுந்தீர்கள்?” என்று விசாரித்தார். இங்கே பாருங்கள் காந்திஜி வருகிறார்என்றேன். இந்த விளையாட்டைக் கவனித்தால் நீங்கள் எவ்வளவோ கற்றுக்கொள்ளலாம். அவரிடம் உள்ள யாவும் முழு முட்டாள்தனமான கொள்கைகள். அவரிடம் சென்று எதைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?” என்று சர்தார் உடனடியாக விடையிறுத்தார்.
சொல்பவர்:-ஆனால் 1930இல் சர்தார் பட்டேலுக்குக் காந்திஜியைப் பற்றி மாற்றமான ஒரு கருத்து ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்திற்கு ஜனத்தொகை கணக்கு எடுத்ததற்கான செலவைக் கொடுக்க அகமதாபாத் முனிசிபாலிடி மறுத்த பொழுது அதில் முக்கியப் பங்கு கொண்டவர் திரு. மாவ்லங்கர். அப்பொழுதுதான் ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றிருந்த காந்திஜியிடம் இதுபற்றிக் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
ஜி. வி. மாவ்லங்கர்:-சர்தார் பட்டேலும் இங்கு இருக்கும்படி, நேர்ந்தது. ஆக நாங்கள் மூன்று பேர்களும் அங்கிருந்தோம். நான் காந்திஜியிடம் எல்லா விதமான கடிதப் போக்குவரத்துக்களையும் கொடுத்தேன். பிறகு எனது யூகம் சரிதானா?” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார். நல்லது, உங்களது அறிவுரை என்ன? நான் இதற்கு என்ன பதில் கொடுப்பது?” என்று அவரிடம் கேட்டேன். காந்திஜி புன்சிரிப்புடன் நீங்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும்என்று உடனே கூறினார். அதைக்கேட்டு என் இரத்தம் கொதித்தது. அவர் எப்படி என்னிடம் பணத்தைக் கொடுஎன்று கூறலாம்! இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் இதற்கும், ஒத்துழையாமை இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தச் சண்டை ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன்பும் இருந்தது. பின்பும் தொடர்ந்தது, இது குறித்து நான் காந்திஜியிடம் தர்க்கம் செய்ய ஆரம்பித்தபோது சர்தார் எனது தோள் மீது கையை வைத்து மாவ்லங்கர்! இந்த மனிதரோடு தர்க்கம் செய்வதில் பயனில்லை. பல விஷயங்களில் நாம் இவரோடு ஒத்துப்போவதில்லை. நான் இந்த விஷயத்தில் அவரது கருத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அவரைத் தலைவர் என்று நாம் ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அதனால் தாங்கள் அவரைப் பின்பற்றுங்கள். அவரது உத்தரவைப் பின்பற்றுங்கள்என்று கூறினார். காந்திஜி இவற்றையெல்லாம் ரசித்தார்.
சொல்பவர்:-இதைப்போலப் பல கதைகள் உண்டு. ஆனால் சில சமயங்களில் ஒப்புதல் தானாகவே வந்துவிடும். வெற்றி உடனே கிடைத்துவிடும். மிஸ். ஸ்லேட்என்பவர் இங்கிலாந்தில் இருந்துகொண்டு தன்னை காந்திஜியுடன் இருக்க அனுமதி கேட்டு எழுதியது, மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். பிறகு ஓராண்டு ஆயத்தத்தில் செலவழிந்தது. கடைசியில் அகமதாபாத்தை அடைந்து சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார்.
மீரா பென்:-நாங்கள் ஒரு காரில் சென்றோம். நான் ஒரு ஜடத்தைப் போல் இருந்தேன். பாபுஜியின் பாதங்களை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கந்தான் என் மனத்தில் குடிகொண்டிருந்தது. இருப்பினும் வழியிலுள்ள ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு கல்லையும், செங்கல் பாதையில் உள்ள ஒவ்வொரு ஜல்லியையும் பழ மரங்களையும் ஒன்றுவிடாமல் என்னால் பார்க்க முடிந்தது. ஆழ்ந்த உணர்ச்சிவசப்பட்டிருக்கும் பொழுது எப்படிப் பதியுமோ அப்படி ஒவ்வொன்றும் என் மனதில் நன்கு பதிந்திருந்தது.
ஆற்றங்கரையோரத்தில் இருந்த அறைக்குப் போனோம். அங்கு பாபுஜி இருந்தார். அங்கு ஓர் ஒளியைத் தவிர என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. அது பாபுஜி என்பதை உணர்ந்துகொண்டேன். பாபுஜி என்னை நோக்கி எழுந்து நடந்து வந்தார். நான் மண்டியிட்டு வணங்கினேன். அவர் என்னைத் தமது கரங்களால் எடுத்து ''நீ எனது மகள்"என்று கூறினார். நான் காந்திஜியிடம் நெருங்கிப் பழகிய அளவில் வேறு யாராவது பிறரிடம் நெருங்கிப் பழக முடியுமா என்பதை என்னால் ஒருபோதும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. முற்றிலும் எளிமையான இயற்கை நிலையில்தான் எத்தனை உயர்ந்த இலட்சியம்!
சொல்பவர்:-நாம் எல்லோரும் துறவியாகிய மகாத்மாவோடு உயரிய நிலையில் உள்ளோம்.
பி. ஆர். அம்பேத்கார்:-அவர் ஒரு பொழுதும் மகாத்மா அல்ல. நான் அவரை மகாத்மா என்று அழைத்ததில்லை. பெருமை தரும் இந்தப் பட்டத்திற்கு அவர் தகுந்தவரல்ல, அவரது ஒழுக்கத்தைப் பொறுத்துக் கூட அவர் இந்தப் பட்டத்திற்குத் தகுந்தவரில்லை.
சொல்பவர்:-எதிர்ப்பு! அரிஜனங்களின், தீண்டாதாரின், அரசியல் தலைவர், அம்பேத்காரிடமிருந்து எதிர்ப்பு! தீண்டாதாரிடமுள்ள குறைபாடுகளையெல்லாம் களைந்து அவர்களை இந்து சமயத்திற்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். அம்பேத்காரோ அவர்களைப் பாதுகாக்க அவர்களுக்குத் தனிச்சமூக அமைப்பு வேண்டும் என்று விரும்பினார். இது காந்திஜிக்கு ஒழுக்க முறையில் தவறாகவும், அரசியல் முறையில் அபாயகரமாகவும் தோன்றிற்று. இந்தச் சண்டை மிகவும் கடுமையாகி முடிவில் காந்திஜியின் பெருமை மிக்க உண்ணாவிரதங்களில் ஒன்றுக்கு வழி வகுத்தது.
பி. ஆர். அம்பேத்கார்:-உண்ணாவிரதத்தை நிறுத்த அவர் மேலும் மேலும் பேரம் பேசினார். நான் எதுவும் முடியாதுஎன்று மறுத்துவிட்டேன். கடினமான நிபந்தனைகள் இல்லாது போனால் நான் உங்களது உயிரைக் காப்பாற்றத் தயார். ஆனால் எங்கள் மக்களின் வாழ்க்கைக்குத் தீங்கு ஏற்படுத்தி உங்கள் உயிரைக் காப்பற்ற நான் தயாராக இல்லைஎன்று கூறினேன். காந்திஜியை எனது விரோதியாகவே நான் எப்பொழுதும் கருதி வந்தேன். காந்திஜியைப் பற்றி எதிராளி என்ற முறையில் மற்றவர்களைக் காட்டிலும் நான் அதிகம் அறிந்திருப்பதாக எனக்கு இறுமாப்புக்கூட. ஏனெனில் அவர் தமது உள்ளத்தின் உண்மையான இருட்டு மூலை முடுக்குகளையெல்லாம் கூட என்னிடம் திறந்து காட்டியுள்ளார். எனவே அவரது உள் மனதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது.
சொல்பவர்:-ஆனால் மகாத்மாவிடமிருந்து வேறுபட்ட கருத்துக்களைக் கொள்வதற்கு அவரது விரோதியாக இருக்கவேண்டும் என்பதில்லை. இந்தியாவின் சோஷலிஸக் கட்சியின் தலைவரான ஜே. பி. கிருபாளானி காந்திஜியின் விரோதியல்ல. 1917-இலிருந்து காந்திஜி இறக்கும் வரை அவரது சீடர்.
ஜே. பி. கிருபாளானி:-இவர் தம்மை ஓர் அசாதாரண உயர்ந்த மனிதரென ஒப்புக்கொள்ள மறுத்தார். தாம் ஒரு மகாத்மாவாக இருந்தால் தம்மைப் புரிந்துகொள்ள நம்மால் முடியாது என்றுகூட அவர் சொன்னார். அடிப்படையில் அவர் கூறியவையெல்லாம் சமூகத்தைப் பற்றியவை, அரசியலைப் பற்றியவை, பொருளாதாரத்தைப் பற்றியவைதாம் என்பதை நான் நம்புகிறேன். ஆத்மீகத்தைப் பற்றி அறிந்துகொண்ட வரைக்கும் அவரது போதனைகள் ஆத்மீகத்தைப் பற்றியவை அல்ல. நமக்குப் போதுமான தெய்வங்களும் அசாதாரணமான மதத்தலைவர்களும் இருக்கிறார்கள். மனிதன் என்ற நிலையில் காந்திஜி ஒரு நல்ல மனிதர் என்றே நான் சொல்லுவேன்.
சொல்பவர்:-அந்த மனிதரைத்தான் நாம் எதிர்நோக்கிக்கொண்டிருந்தோம். அவரும் அவரோடு நீண்டகாலம் நெருங்கிப் பழகி, அவருடைய செயல்களைக் கவனித்து அவருக்காக அரசியலைத் தவிர மற்ற துறைகளிலும் பணிபுரிந்தவர் மௌரிஸ் பிரைட்மான் என்ற போலிஷ் இஞ்ஜினியர். காந்திஜியை நெருக்கமாக அறிந்திருப்பதோடு சில சமயங்களில் அவரோடு தர்க்கமும் செய்துள்ளார். காந்திஜி பல துறைகளிலும் முயற்சி உடைய ஒரு மனிதர் என்று அவர் சொல்கிறார்.
மௌரிஸ் பிரைட்மான்:-அவர் பல துறைகளிலும் முயற்சி உடைய மனிதர். எப்பணியையும் அருவருப்பின்றி செய்யக்கூடியவர். இயற்கையாகவே இந்தப் பெரிய தேசத்திற்குச் சுதந்திரத்தைக் குறுகிய காலத்தில் கொண்டுவர வேண்டுமெனில் அவர் பலதரப்பட்ட மக்களோடு தேவைக்கும் அதிகமான சகிப்புத்தன்மையுடன் வேலை செய்ய வேண்டி வந்தது. வழக்கப்படி தம்முடைய சீடர்களின் அஹிம்சைத்தன்மையை அவர் அதிகமாக மதிப்பிட்டார். ஒவ்வொருவரும் செய்வது போல்தான் அவரும் செய்தார்.
தம்மைப்போலவே மற்றவர்களையும் கருதினார். அதிகமான நம்பிக்கையை மக்கள் மீது வைத்து அவர்களை மிகவும் அதிகமாக எடை போட்டதுதான் அவர் தொடர்ந்து அடிக்கடி செய்த தவறு. ஆனால் அதுகூட அவரது பெருமையும் சிறப்பும் ஆகும். சொல்லப்போனால் ஒருவர் பெரிய மனிதர் என்பதற்கு அடையாளம் மற்றவர்களைக் காட்டிலும் நம்புவது, மற்றவர்களைக் காட்டிலும் நம்பிக்கை வைப்பது, மற்றவர்களைக் காட்டிலும் பொறுமையுடன் இருப்பது என்பதுதானே? அவர் அதிகமான பாசத்தைக் கொட்டக்கூடிய மாபெரும் மனிதர். உண்மையில் நாம்தான் அவர் காட்டும் பாசத்தை நம் அளவு மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறுகிய எல்லையில் உள்ளோம். நாம் சிறு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போனால் சிறிதளவே பெறுகிறோம். ஆனால் அதிகமாகக் கேட்பவர்கள் அதிகமாகப் பெறுகிறார்கள். அவரிடம் எல்லோருக்கும் கொடுக்கப் போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால் மக்கள் எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் தங்களது பலவகைப்பட்ட சொந்தப் பிரச்சினைகளையும் பயத்தையும், தேவைகளையும், சொந்த விருப்பு வெறுப்பு கோபதாபங்களையும் கொண்டுவருகிறார்கள். அவரால், சுயநலக்காரர்களைத் திருப்தி பண்ண முடியவில்லை. ஆனால் சுயநலவாதிகள் அல்லாதவர்கள் முற்றும் திருப்தி அடைகிறார்கள்.
சொல்பவர்:-எதிரிகளிடம் அவரது சகிப்புத்தன்மை,மென்மை எல்லாம் பேச்சளவே. சில சமயங்களில் அவை முறிந்துவிடவில்லையா?

காந்திஜி ஒரு சொற்சித்திரம் - தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – ஒலிச்சித்திரம் - 2

$
0
0
Gandhi GEOMETIC by J Federico Valecillo Gil / Behance

மௌரிஸ் பிரைட்மான்:-ஆமாம்,அவரால் முட்டாள்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அவரது தாக்குதலும் திட்டுதலும் சரியாகவே இருக்கும். நான் ஒருநாள் என்னைப் பற்றிப் பெருமை அடித்துக்கொண்ட பொழுது அவர் என்னை உதவாக்கரைஎன்று கூறினார். ஒருமுறை அவர் மாஜி மந்திரியைப் பார்த்து ஆ! நீங்கள் வேறு ஒரு வேலைக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று குத்தலாகக் கேட்டதை நான் கேட்டிருக்கிறேன். அவர் சாது இல்லை. அவரைச் சாது என்று சொல்லிவிட முடியாது. அவர் எல்லோரையும் விரும்புவார். அதற்காக இளகிய மனம் படைத்தவர் என்றும் கூறிவிட முடியாது. அவர் ஒரு மூடக் கொள்கையாளர் அல்லர். ஆனால் அவர் தமது கருத்து சரி என்று நம்பினார். தம் வழி நடப்பவர்கள் சரியானதைத்தான் செய்ய வேண்டும் என்று விரும்பினார். மேலும் யாரெல்லாம் தங்களது வாழ்க்கையை அவரது வாழ்க்கையோடு அர்ப்பணித்துவிட்டார்களோ, அவர்கள் எல்லோரும் சரியானதைத் தேர்ந்தெடுத்தார்கள். அவரிடத்தில் நல்ல தன்னம்பிக்கை இருந்தது. அவரை முழுமையாக நேருக்கு நேர் அறிந்துகொள்ளாதவர்களுக்கு இந்தத் தன்னம்பிக்கை எரிச்சலை உண்டுபண்ணியது. எல்லாமே மனிதனது மனோபாவத்தைப் பொறுத்ததுதான். யார் யார் அவரை விரும்பினார்களோ அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு பூரண மனிதராகவே தோற்றமளித்தார். அவரைப் பிடிக்காதவர்களுக்கெல்லாம் அவர் ஓர் அரசியல்வாதி அல்லது ஒரு சீர்திருத்தவாதியாகவே காணப்பட்டார்.
சொல்பவர்:-காந்திஜி ஒரு துறவியா? அல்லது அரசியல்வாதியா? என்ற கேள்விகளுக்குத் தக்க விடை கிடைக்காமலேயே இருந்தது. இதற்குப் பதில்,அவர் இரு தன்மையும் உடையவர் என்று கூறி யாரையும் திருப்திப்படுத்திவிட முடியாது.இந்தப் பிரச்சினையை ஒரு வேளை யாராலும் தீர்க்க முடியாமல் போகலாம். ஆனால் டாக்டர் கில்பர்ட் மூரேயினால்தான் இந்தப் பிரச்சினையை அணுக முடியும். அவர் காந்திஜியை முதன் முதலாக 1914-இல் இலண்டனில் சந்தித்தார். 17ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஸ்போர்டில் அவருடன் நீண்டநேரம் பேசியிருக்கிறார்.
கில்பர்ட் மூரே:-மிகவும் சுவையுள்ள பலவகைப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர் அவர். நிச்சயமாக அவர் ஒரு துறவி என்பதில் சந்தேகமே இல்லை. அவர் தீவிரமான பிடிவாதக்காரராக வாழ்ந்தார். சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்என்று அவர் கையாண்ட முறை மிகவும் நியாயமற்றது என்று நான் கருதினேன். அவர் சீரிய உறுதிமிகு எண்ணங்கள் பல கொண்டவர். அவர் தென்னாப்பிரிக்க அரசாங்கத்தோடு போராடிய முறையிலிருந்து இதை அறிந்துகொள்ளலாம். அவரிடம் ஒரு விதமான நல்ல தன்மை இருந்ததை உணரமுடியும். மற்றொரு நிலையில் அவர் அரசியலை மேற்கொண்ட மற்றத் துறவிகளைப் போல தந்திரமான தீவிர அரசியல்வாதி. யாரோ செய்த கொடுமைகளுக்காக யாரிடமோ போரிடுவது போன்ற ஓர் உணர்ச்சி அவரைப்பற்றி ஏற்படும். நான் கடினமான வார்த்தையை உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் அவரது தந்திரம் அல்லது நம்பகமற்ற தன்மை ஒரு சாதாரண ஐரோப்பியனுடைய தன்மையைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது.
ஜே. பி. பட்டேல்:-அடிப்படையில் காந்திஜி ஓர் அரசியல்வாதி அல்லர்.
கில்பர்ட் மூரே:-அவர் மிகவும் நழுவிவிடும் தன்மையுடையவர்.
ஆபா பந்த்:-தமது அபிப்ராயமே சரி என்ற கருத்து அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை.
சொல்பவர்:-அரச குமாரரான ஆபா பந்த் தமது சிறிய சமஸ்தானத்தைக் காந்திஜியின் அறிவுரைப்படி மனமுவந்து மக்களுக்கு வழங்கியவர். காந்திஜி ஒவ்வொரு விஷயத்திலும் ஊடுருவிச் செல்பவர் என்று சொல்கிறார்.
ஆபா பந்த்:-ஒரு திட்டத்தைப் பற்றியோ ஒரு கொள்கையைப் பற்றியோ முடிவெடுக்கும் விஷயத்தில் எவ்வித ஆடம்பர அலங்காரமுமின்றி மேலெழுந்த வாரியாகத் தர்க்கம் செய்யாமல் காந்திஜி நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவார்.
சொல்பவர்:-முன்னாள் மேற்கு வங்காளத்து முதன் மந்திரியான பி. ஸி. கோஷைப் போலவோ அல்லது காந்திஜியின் காரியதரிசியான பியாரேலால் நைய்யாரைப் போலவோ நீங்கள் முற்றும் ஒரு காந்தீயவாதியாக இருந்தால் காந்திஜியின் மதமும் காந்திஜியின் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளவை என்பதை அறிந்துகொள்வீர்கள்.
பி. ஸி. கோஷ்:-கடவுளது இச்சையின்றி மரத்திலிருந்து ஓர் இலைகூட விழாது"என்று அவர் அடிக்கடி சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். நான் பார்த்த வரையில் பலரும் மறைமுகமான அரசியல்வாதிகளேயாவார்கள்என்று ஓரிடத்தில் அவர் கூறியுள்ளார். ஆனால் அரசியல்வாதி என்ற போர்வையில் இருக்கும் நான் என்னுடைய அந்தராத்மாவில் ஊடுருவிப் பார்த்தால் ஒரு மதப்பற்றுள்ளவன்என்று இன்னோர் இடத்தில் சொல்லியுள்ளார்.
பியாரேலால் நைய்யார்:-சொல்லப்போனால் காந்திஜியின் அரசியல் நிரந்தரப் பொருளின் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த விருப்பமே ஆகும்.
சொல்பவர்:-இது ஒரு பாகிஸ்தானியரின் கருத்து.
பாகிஸ்தானி:-பிரிவினைக்கு முன்பு காந்திஜியைச் சாமர்த்தியம் வாய்ந்த தீவிரக் கருத்துள்ள வக்கீல் என்று பொதுவாக முஸ்லிம்கள் கருதினர். என்னைக் கேட்டால் அவர் ஒரு வழவழாக் கொள்கையாளர் என்பேன். ஏனெனில் முஸ்லிம்களது நன்மையைப் பற்றிப் பிரத்யட்ச நிலைக்கு வரும்போதெல்லாம் அவர் தடுப்பது வழக்கம். தவிரவும் அவர் அப்பொழுதெல்லாம் தம் உயர்ந்த ஆத்மீகக் கருத்துக்களில் அடைக்கலம் புகுந்துகொள்வார். எனவே அவரைப் பின்பற்றுவது கஷ்டமாக இருந்தது. காந்திஜியைப் பற்றி இந்தப் பொதுவான அபிப்பிராயம்தான் முஸ்லிம்களுக்கு இருந்தது. அதாவது அவர் அவலட்சணமான பிரத்யட்ச நிலையினின்றும் தம்மை மறைத்துக்கொள்ளும்போது ஆத்மீகத் துறையைச் சரண் அடைந்துவிடுவார் என்பதாகும். ஜின்னாவும், ஜின்னாவைப் போன்ற தலைவர்களும் காந்திஜியைப் பற்றி இந்தக் கருத்தைத்தான் கொண்டிருந்தனர். பிரிவினைக்குப் பிறகு காந்திஜி மிகவும் உயர்ந்துவிட்டார். பாகிஸ்தானியர்களுக்கிடையில் கூட உயர்ந்துவிட்டார். ஆனால் பிரிவினைக்குப் பிறகு காந்திஜி பாகிஸ்தானியர்களின் பகைவர் அல்லர்.
சொல்பவர்:-பம்பாயில் காந்திஜியும் ஜின்னாவும் 1944-இல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது யாரும் அங்கு இருக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்திய இருவரும் இப்பொழுது இறந்துவிட்டார்கள். 1940-இல் இருவரும் வைசிராயின் அழைப்பின் பேரில் சிம்லாவுக்குப் போயிருந்த பொழுது இவ்விரு தலைவர்களையும் ஒன்று சேர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட முதல் முயற்சியை இந்திய மேல் சபையின் அங்கத்தினரான திவான் சமன் லால் நினைவுகூர்கிறார்.
சமன் லால்:-நான் ஜின்னாவிடம் சென்றேன். இது நல்ல அறிகுறிஎன்று ஜின்னா சொன்னார். நான் அந்த அறையை விட்டு வெளிவரும்போது,தயவு செய்து நான் காந்திஜியைப் பார்க்க விரும்புவதாக அவரிடம் சொல்லாதீர்கள்என்று கூறினார். இது சற்றுக் கடினமான நிபந்தனையாகத்தான் இருந்தது. கோஸ்வாமியும் நானும் காந்திஜியைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் நுழைந்ததும் அவர் துன்பமும் தீமையும் மிக நெருங்கியவர்களைக் கூட மாற்றார்களைப் போல் ஆக்கிவிடும் என்று யாரோ எங்கேயோ சொல்லியிருக்கிறார்கள் அல்லவாஎன்று கேட்டார். என்னோடு பணிபுரியும் நீங்கள் இருவரும் ஜின்னாவிடமிருந்து தூதுவர்களாக என்னிடமே வருகிறீர்களா?” என்று அவர் கேட்டார். காந்திஜி, எப்படியிருந்தாலும் நாங்கள் ஜின்னாவை நன்கு அறிந்தவர்கள். என்னையும் கோஸ்வாமியையும் விட உங்களுக்குச் சிறந்த தூதுவர்கள் இருப்பார்களா?” என்று கேட்டேன். உடனே ஜின்னா என்னைப் பார்க்க விரும்புகிறாரா?''என்று அவர் கேட்டார். அவர் பார்க்க விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நீங்களிருவரும் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்என்றேன். நான் ஜின்னாவைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்வேனாகில் அது பொய், பொய்தான். ஆனால்,ஜின்னா என்னைப் பார்க்க விரும்புவதானால் நான் வெறும் காலுடன் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நடக்கத் தயாராக இருக்கிறேன்"என்று கூறினார். துரதிருஷ்டவசமாக இது நடக்கவில்லை. இருவரும் சந்திக்கவில்லை. சரித்திரம் வேறு விதமாக அமைந்துவிட்டது.
சொல்பவர்:-சில சமயங்களில் சரித்திரம் மிக மிகச் சிறு நிகழ்ச்சியால் கூட மாறிவிடுவதுண்டு. ஆனால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் ஒரு குறிப்பிட்ட மனிதரால் ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் நிகழ்ந்தது. அவர் காந்திஜியுடன் அரசியல் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு காந்திஜியை நம்புவதாகத் தீர்மானம் செய்தார். அவர்தான் லார்ட் ஹாலிபாக்ஸ். காந்திஜியுடைய முக்கியமான போராட்ட காலத்தில் 1926லிருந்து 1931வரை இந்தியாவின் வைசிராய் ஆக இருந்த லார்ட் ஹாலிபாக்ஸ் என்ற இர்வின் பிரபு ஆவார்.
லார்ட் ஹாலிபாக்ஸ்:-காந்திஜியை நம்பவேண்டும் என்று நான் நினைத்தேன். நம்பவும் செய்தேன். எங்கள் பேச்சுக்களுக்கிடையில் எத்தனையோ முறைநான் இப்பொழுது சில விஷயங்கள் உங்களிடம் சொல்லப்போகிறேன், அதை வெளியிலே நீங்கள் சொன்னீர்களானால் என் பெயரே மண்ணாகிவிடும், நீங்கள் அதை உங்கள் மனத்தோடு வைத்திருக்க வேண்டும். நான் உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் சொல்கிறேன்என்று கூறியுள்ளேன். அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட அதுபற்றி வெளியாகவில்லை. அதுவே அந்த ஆச்சரியமான சிறு மனிதரிடம் நான் அதிக மதிப்பு வைப்பதற்குத் தக்க காரணமாக அமைந்தது. அவரிடம் நடைமுறைக்கு ஒவ்வாத அலுக்க வைக்கும் முரண்பாட்டுத் தன்மை எவ்வளவோ இருந்தாலும் இந்திய மக்களின் பேராதரவு அவருக்குப் பெரிதும் இருந்தது என்பதை இங்கிலாந்து மக்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவரது நேர்மை, ஒழுக்கம், மனிதாபிமானம் போன்றவற்றை மக்கள் அவரது இயல்புக்கே உரித்தாக ஆக்கியதால் அவை அவருக்கு ஒப்பற்ற ஸ்தானத்தைப் பாமரர்களுக்கிடையிலும் வாங்கிக்கொடுத்தது. மேலும் அவருக்கு அபார ஆற்றலையும் கொடுத்தது. அவர் ஒரு விந்தை மனிதர்.
சொல்பவர்:-அத்தகைய ஆற்றல் எங்கிருந்து வந்தது என்பது ஜே. பி. பட்டேலுக்கும் டாக்டர் ஜெயகருக்கும் நன்கு தெரியும்.
ஜே. பி. பட்டேல்:- நம் நாட்டுப் பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றி நடக்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது?” என்று ஒருமுறை காந்திஜியிடமே நான் கேட்டதாக நினைவு இருக்கிறது. இந்த தேசத்து மனிதன் என்னைப் பார்க்கின்ற பொழுது நான் அவனைப் போலவே வாழ்ந்துவருவதை உணருகிறான். என்னையும் அவனில் ஒருவனாகவே மதிக்கிறான்என்று கூறினார் அவர். இக்கருத்தே சராசரி மனிதனைக் காந்திஜியின்பால் இழுத்தது.
எம். ஆர். ஜெயகர்:-அவர் தம்மை அம்மாதிரி அமைத்துக்கொண்டார். அவரது அரசியலுக்கு அடித்தளமாக இருந்த இந்தியாவின் புராதனப் பழக்கங்களும் தலைமைப் பண்பும் நீங்கள் அறிந்திருந்த ஐரோப்பிய முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தன. நாங்கள் இந்தியாவிலிருந்து இதை அறிந்துகொண்டோம். உதாரணமாக அவர் வெளியில் சென்ற முறையைக் கூறலாம். அவர் அரசரைக் காணச் சென்ற உதாரணத்தையே எடுத்துக்கொள்வோமே! தமது பாதி கால் வெளியில் தெரியும்படியாக ஏழை மனிதனுடைய எளிய உடையை அவர் அணிந்திருந்தார். சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உடை அணிய வேண்டும் என்று அவருடைய நண்பர்கள் எத்தனையோ கூறியும் கேட்க மறுத்தார். இந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்தது. நாங்கள் அனைவரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டோம். காந்திஜி உள்ளே சென்றார். அறிக்கையில் வெளியானதைத்தான் சொல்வதாக நான் நினைக்கிறேன். அரசர் மிஸ்டர் காந்தி இந்தியா எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். என்னைப் பாருங்கள்,இந்தியா எப்படி இருக்கிறது என்பதை என்னைப் பார்த்தே நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்என்று கூறினார். அவர் கூறியது சரியா என்பது வேறு விஷயம். நான் அதைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவர் தவறுகள் செய்திருக்கலாம். அது முற்றிலும் மாறுபட்ட விஷயம். ஆனால் எல்லா தேசங்களும் இங்கிலாந்து உட்பட அந்த ஏழை மனிதனது இந்தியா எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்பின. அதற்கு அந்த ஓர் ஒப்பற்ற மனிதரே காரணம். சொல்லப்போனால் அது மாபெரும் கோரிக்கை.
சொல்பவர்:-காந்திஜி வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் அவர் நீதிமன்றத்தில் திரு. ராபர்ட் புரூம்பீல்டுக்கு முன்பு ஆஜரானபோது தம்மை ஒரு விவசாயி என்றும், நெசவாளி என்றும் கூறிக்கொண்டார்.
திரு. ராபர்ட் புரூம்பீல்டு:-அது உண்மைதான். அவர் எப்பொழுது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாரோ அப்பொழுதே அவர் தேச மக்களோடு மக்களாகத் தம்மை பாவிக்கத் தொடங்கிவிட்டார். தாமும் அவர்களில் ஒருவராக நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர்களில் ஒருவராக வாழ்வது என்ற முடிவிற்கு வந்தார். அதுதான் அவரது நேர்மைக்கு அடிப்படை. அவர் தம்மைத் தொழில் முறையில் விவசாயியாக நெசவாளியாக வர்ணித்துக் கொள்ளும் பொழுது இதைத்தான் கருத்தில் கொண்டிருப்பார் என்று நான் எண்ணுகிறேன்.
சொல்பவர்:-தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே அது தொடங்கிவிட்டது.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-நான் என்னைப் பற்றி அறிந்துகொண்டது தென்னாப்பிரிக்காவில்தான்என்று அவர் ஒரு முறைக்குப் பல முறையாக என்னிடம் கூறியுள்ளார்.
சொல்பவர்:-அவரது அணுகுமுறையே அப்படித்தானா? அல்லது அந்த நுட்ப வழியை அப்பொழுதுதான் கண்டுபிடித்தாரா? டாக்டர் ஜாகீர் உசைன் அவரது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம் பற்றியும், அவரது திட்டம் பற்றியும் அறிந்திருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்துக்கு உகந்த கருத்துக்கள் அவருடையவை.
ஜாகிர் உசைன்:-காந்திஜி செய்த எத்தனையோ செயல்களில் முக்கியமானது பொருளாதார வாழ்க்கை பற்றியது. நூற்பு,நெசவு போன்ற கிராமக் கைத்தொழில்களை அவர் வலியுறுத்தினார். அது காந்திஜி பழைய வாழ்க்கை முறையை விரும்புகிறார் என்று மக்களை நம்ப வைத்தது. ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று நான் நினைக்கிறேன். நான் அறிந்தவரை காந்திஜி மிகவும் முற்போக்கான சிந்தனையாளர். காந்திஜி பழமை விரும்பி அல்லர் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். சூழ்நிலை,தேவை- இவற்றின் பொருட்டே அவர் பழைமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஏனெனில், அந்தக் காலத்தில் தோற்றத்தில் பழைமையை மேற்கொள்வது ஒன்று மட்டுமே நடைமுறைக்குச் சாத்தியமாக இருந்தது.
சொல்பவர்:-டாக்டர் ஜாகிர் உசைன் ஒரு முஸ்லிம் என்றாலும் காந்திஜியின் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்த பெருமை வாய்ந்த கல்வி நிபுணர். காந்திஜியின் கொள்கைகள், வாழ்க்கை நெறிமுறைகள், ஒழுக்கம், மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஆகியவை எவ்வளவு தூரம் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களைச் சார்ந்திருந்தனவோ?
திரேந்திர மோகன் தத்தர்:-மகாத்மா காந்தி அல் இந்தியர் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
சொல்பவர்:-டாக்டர் தத்தர் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ ஞானி. பல்கலைக்கழகமாகியுள்ள இரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனில் அவர் தற்சமயம் வாழ்ந்து வருகிறார்.
திரேந்திர மோகன் தத்தர்:-தற்கால இந்துக்களுக்கு அவர் ஓர் உயர்ந்த ஆதர்ச புருஷர். உயர்ந்த இலட்சியங்களையும், கொள்கைகளையும், ஐரோப்பியக் கல்வியுடனும், ஐரோப்பிய அடிப்படையுடனும் மக்களால் பின்பற்ற முடியும். ஆனால், பழைய கருத்துக்களில் ஊறிப்போனவர்கள் அவர் நம்பிக்கைத் துரோகம் செய்வதாகவும், அவரது இந்து மதம் உண்மையில் இந்து மதம் அல்லவென்றும் நினைத்தார்கள்.
அம்பேத்கார்:-அவர் முற்றும் ஒரு பழமையான ஹிந்துதான்.
சொல்பவர்:-டாக்டர் அம்பேத்கார் அப்படி நினைக்கிறார்.அதேபோல் பலர் நினைக்கின்றார்கள். ஆனால் எல்லா முகமதியர்களும் அப்படி நினைப்பதில்லை. காந்திஜியுடைய தீண்டாமைக் கருத்து அவரைச் சிறப்புடையவராக்கிற்று என்று சிலர் உணர்ந்தார்கள்.
அம்பேத்கார்:-தீண்டாமையைப் பற்றிப் பேசுவதெல்லாம் அவர்களையெல்லாம் காங்கிரஸில் இழுக்கும் நோக்கத்திற்காகவேதான். இது ஒன்று. இரண்டாவதாக தீண்டாதார் தம்முடைய இயக்கத்திற்கு எதிராக வராமலிருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருக்கு இதற்குமேல் அவர்களது உண்மையான முன்னேற்றத்தில் எந்த நோக்கமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
திரேந்திர மோகன் தத்தர்:-பொதுமக்கள் காந்திஜியின் கீதை வியாக்கியானத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் மகாத்மா காந்தியுடைய செயல்களிலும், மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் கர்மயோகியின் இலட்சியத்தை அவர்கள் நிச்சியமாகக் கண்டார்கள். அரசியல் பூசலுக்கு மத்தியில் இருப்பினும் மகாத்மா காந்தியின் ஒருவகைப் பற்றற்ற தன்மையை அவரது வாழ்க்கையில் அவர்கள் கண்டார்கள். மக்களின் மூலமாகக் கடவுளுக்குச் சேவை செய்யலாம் என்பதுதான் அவருக்குக் கீதையின் கருத்தாகத் தோன்றிற்று.
சொல்பவர்:-அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் ஹிந்து, கிறிஸ்துவ, முகமதிய, பெளத்த, சோரோஸ்ட்ரியப் பிரார்த்தனைகள் நடக்கும். நாஸ்திகர்கள் கூட அவரோடு பணிபுரிய ஆசை கொண்டார்கள். கடைசியாக வங்காளத்திற்குச் சென்றிருந்தபோது பேராசிரியரான நிர்மல் போஸ் என்பவரை காந்திஜி தம்மோடு இருக்கும்படி அழைத்தபோது, சத்தியத்தில் அவருக்கு நம்பிக்கை இருப்பினும் கூட கடவுளிடம் நம்பிக்கையிருப்பதாக ஒருபோதும் நினைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
நிர்மல் போஸ்:-சத்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” என்று என்னை அவர் கேட்டார். நான் உறுதியாக உண்டுஎன்று சொன்னேன். அது போதும்என்று அவர் சொன்னார். சத்தியத்திற்காகத் துன்பப்படத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் தயாராக இருக்கிறேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எவன் ஒருவன் தான் எண்ணுவது சாத்தியம் என்று நினைத்து அதையே பற்றி நிற்கிறானோ அவன் துன்பப்படுவதற்குத் தயாராகத்தான் இருக்க வேண்டும் என்பதை நான் பூரணமாக ஒப்புக்கொள்கிறேன்என்று கூறினேன். அது போதும். அதுவே எனக்குப் போதும்என்று அவர் சொன்னார். அன்று முதல் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். ஒன்றிரண்டு பிரார்த்தனைக் கூட்டங்களைத் தவிர மற்ற எல்லாப் பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நான் கலந்துகொண்டேன். அதோடு மட்டுமின்றி இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் ஒருநாள் பாபு ஏன் கடவுளைப் பற்றி என்னிடம் பேசக்கூடாது?” என்று கேட்டேன். கடவுள் இருக்கிறார் என்று என்னை நம்பவைக்கத் தாங்கள் முயன்றிருக்க வேண்டும்என்றும் கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே "எனக்குக் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை உண்டு என்று நான் எண்ணியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. ஆனாலும் அதன்படி வாழ வேண்டும் என்று நான் முயலுகிறேன். எனது வாழ்க்கை அந்த விஷயத்தைக் கற்பிக்கவில்லையெனில் எனது வாய் வார்த்தை ஒருபொழுதும் வெற்றி பெறாது. அதனால் நான் முயலவில்லைஎன்று கூறினார்.
சொல்பவர்:-கிறிஸ்துவத்துக்குச் செல்வாக்கும் அங்கே உண்டு. ஐரோப்பிய மீரா பென் என்பவர் கடவுளது சமஸ்கிருதப்பெயர்களைச் சேவாகிராம ஆசிரமத்தில் காந்திஜி தங்கியிருந்த குடிசையின் மண் சுவரில் எழுதிவைத்துள்ளார். இந்தியராகிய ஜே. பி. பட்டேலுக்கு அங்கிருந்த கிறிஸ்துவின் படம் நினைவிருக்கிறது.
ஜே. பி. பட்டேல்:-வெளித் தாழ்வாரத்தையும், உள்ளே சிறிய அறையையும் கொண்ட ஒரு மண் குடிசைதான். எனது நினைவிற்கு எட்டியவரை அந்த அறையிலிருந்த ஒரே படம் இயேசுவினுடையதுதான். அதற்கு அடியில் அவர் நமது அமைதிஎன்று குறித்திருந்தது.
சொல்பவர்:-லூயி பிஷர் 1942-இல் அந்த ஆசிரமத்தில் ஒருவாரம் தங்கியிருந்தபோது இயேசுநாதருடைய இந்தப் படத்தைக் கவனித்துள்ளார்.
லூயி பிஷர்:-சிறிது நேரத்திற்குப் பின் அவ்வறையில் இயேசுநாதருடைய படத்தையும், அதற்கடியில் அவர் நமது அமைதிஎன்று எழுதப்பட்டிருப்பதையும் கவனித்தேன். நான் காந்திஜியிடம் இது எப்படி? நீங்கள் ஒரு கிறிஸ்துவர் அல்லவே?”என்று கேட்டேன். நான் ஒரு கிறிஸ்துவன்,ஒரு ஹிந்து, ஒரு முகமதியன், ஒரு யூதன்என்று அவர் சொன்னார்.இதுதான் அவரை ஒரு பெரிய மனிதராக்கியது.
நிர்மல் போஸ்:-துன்பப்படுகின்ற மக்கள் சமுதாயத்தின் விமோசனத்திற்காக அவர் தமது சொந்த நலன்களை மனமுவந்து தியாகம் செய்தார் என்று சொல்ல விரும்புகிறேன். ஆனால் ஒன்று, ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவ மதத்தின் செல்வாக்கு அவர் மீது அதிகமாகப் படிந்திருந்தது என்றும், அந்தக் கிறிஸ்துவ மதக் கோட்பாடு இந்தச் சமூகப்பொறுப்பிற்கு வழிகாட்டிற்று அல்லது பெருமளவுக்கு வளர்த்தது என்றும் நான் மெய்யாகவே நம்புகிறேன். கிறிஸ்துவ இயக்கம் மக்கள் சமுதாயத்தின் துன்பத்தைப் போக்க எப்படி முயல்கிறது என்பதைக் கண்டார் அவர். இந்த ஆழ்ந்த சமூகப் பொறுப்புணர்ச்சிதான் ஏற்கெனவே அவரிடம் படிந்திருந்த பண்பை நிச்சயமாக வளர்ச்சியடையச் செய்தது. மேல்நாடுகளோடு அவர் கொண்ட நெருங்கிய தொடர்பும், ஆங்கிலக் கலாசாரமும், கிறிஸ்துவர்களது பண்பாடும் இதற்குப் பெரும் பொறுப்பு வாய்ந்தவை என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன்.
சொல்பவர்:-சில சமயங்களில் கிறிஸ்துவச் சங்கங்கள் காந்திஜியைக் கிறிஸ்துவராக மாற்ற விரும்பின. சில சமயங்களில் காந்திஜியால் கிறிஸ்துவர்கள் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பின. டாக்டர் வெரியர் எல்வின் ஏன் அப்படி நடக்கவில்லை என்பதை தாம் அறிந்துள்ளதாக நினைக்கிறார்.
வெரியர் எல்வின்:-அது மூடுமந்திரம். ஒவ்வொரு தேசமும், அவற்றைச் சார்ந்த ஒவ்வொரு கிராமமும் சுயதேவைப் பூர்த்தி உடையதாக இருக்க வேண்டும் என்பதும், அதனதன் சொந்தப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதும்அவரது தேசீயக் கொள்கையாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக எனது மதத்திலிருந்து மாற விரும்புகிறேன்என்று ஒருமுறை நான் அவருக்கு எழுதினேன். ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை. “கூடாது, நீ எப்படி இருக்கிறாயோ அப்படியேதான் இருக்கவேண்டும்என்று சொன்னார். ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறுவது தவறு என்று அவர் உணர்த்தினார் என்பது என் கணிப்பு. இப்படி அவர் நிச்சயமாக கிறிஸ்துவ மதத்தின் மீதுள்ள வெறுப்பினால் கூறவில்லை. ஏனெனில் அவருக்குக் கிறிஸ்துவ மதத்தினிடத்தும் இயேசுநாதரிடத்தும் மிகுந்த பக்தியும், மரியாதையும் உண்டு.
சொல்பவர்:-ரோம் நகரத்திலுள்ள மாதா கோவிலில் சிலுவையில் அறைந்துள்ள ஏசுவின் உருவம் ஓர் உயிருள்ள மனிதன் அளவுக்கு உள்ளது. இலண்டன் வட்டமேஜை மகாநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் மீரா பென்னுடன் காந்திஜி ரோமாபுரிக்கு இத்தாலி வழியாக விஜயம் செய்தார்.
மீரா பென்:-பாபுஜி அந்தச் சிலுவையின் முன் நின்றார், பார்த்தார். மீண்டும் மீண்டும் பார்த்தார். இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் மிகவும் அமைதியாகச் சென்றார். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. யாரும் போகவேண்டும் என்று கூட நினைக்காத பக்கம் எல்லாம் சென்று சிலையின் பின்புறமெல்லாம் பார்த்தார். மறுபடியும் சுற்றி முன்பக்கம் வந்து ஒரு பேச்சும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் அந்தக் கோவிலை விட்டு வெளியில் வந்தபோது பாபூஜி இந்தச் சிலை மிகவும் அற்புதமானதுஎன்று மிகவும் அமைதியான குரலில் சொன்னார்.
சொல்பவர்:-இது தூய்மையான கலையுணர்வினால் பாராட்டப்பட்டதல்ல.
வெரியர் எல்வின்:-நன்மை, சத்தியம், அன்பு போன்றவைதாம் அவரிடத்தில் - அவரது போதனையில் - பூர்ணமாக முன்னணியில் இருந்தன என்று நான் நினைக்கிறேன். அழகைப் பற்றி அவருக்கு அதிகமாகத் தெரியாது. இயற்கைக் காட்சிகளை விரும்பினார். அவர் இலக்கியத்தையும் இசையையும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் விரும்பினார். ஆனால் அவருக்குக் கலையில் அதிக நாட்டம் இல்லை. பாமர மக்களுக்குத் தேவையானது உணவு என்னும் இலக்கியம்தான் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சொல்பவர்:-அவருடைய இந்தத் துறவு மனப்பான்மை நேருவின் மகளைப் போல் அழகான இல்லங்களிலிருந்து வருபவர்களைப் பெரும்பாலும் இடருக்குள்ளாக்கியது.
இந்திரா காந்தி:-வீடுகள் அழகாக இருக்கவேண்டும் என்பதிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையுண்டு. அப்படியிருக்க அவருக்கு அதுவே இந்தியக் குடியானவனிடமிருந்தும் கிராம மக்களிடமிருந்தும் பிரித்து வைப்பது போல் தோன்றிற்று. இதுவும் ஒரு விதத்தில் சரிதான்.
சொல்பவர்:-இருப்பினும் குலோர்னி போல்டன் 1931-இல் இலண்டனில் அழகு கொஞ்சும் இளவேனிற் காலத்து மாலைவேளையில் காந்திஜிக்குக் கார் ஓட்டிக்கொண்டிருந்தபொழுது சூரிய ஒளியின் பிரகாசத்தைப் பார்த்து எப்படி மகிழ்ந்தார் என்பதைக் குறிப்பாக நினைவுகூர்கிறார்.
குலோர்னி போல்டன்:-காந்திஜியைத் தெரிந்திராத பல மக்ககளுக்கு வாழ்க்கையை வெறுத்து, உலகத்தைத் துறந்த அன்பில்லாத ஒருவர் என்ற கருத்துத்தான் காந்திஜியைப் பற்றி நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர் அப்படிப்பட்ட தன்மையுள்ளவர் அல்லர். எல்லாவற்றையும் எவ்வளவு தூரம் எளிமையாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏனெனில் வாழ்க்கையின் எளிமையான பொருள்கள்தாம் உண்மையில் சிறந்த பொருள்களைக் காட்டிலும் சிறந்தவை என்று கருதுபவர். ஒருமுறை ஒரு பாத்திரத்தில் மிகவும் அழகான பழம் அவருக்காகக் கொண்டுவரப்பட்டது. அது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதை அவர் எவ்வளவு ருசியுடன் அருந்தியிருக்க வேண்டும் என்பதும் எனக்கு நினைவு இருக்கிறது. மேலும் இங்கு அவருடன் இலண்டனில் காரில் செல்லும்போது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது அந்த சூரிய ஒளிதான். எளிய வாழ்க்கைதான், அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கைதான் எளிதில் கிடைக்கக்கூடியது. செலவு எதுவும் இல்லாதது. சொல்லப்போனால் கடவுளால் கொடுக்கப்பெற்றது. இம்மாதிரிப் பொருள்கள் அவரை உருக வைத்தன. அவர் மிகவும் மகிழ்ச்சியுள்ள மனிதராக இருப்பதற்கும் அவரது சுபாவம் இனிமையாக இருப்பதற்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்றாகும். மேலும் அவரது மோகனச் சிரிப்பிற்கும் இதுவே காரணமாகும்.
சொல்பவர்:-சந்தேகமின்றி பழ உணவு எளிமையாகவே இருந்தது. ஆனால் அவரைப் பற்றி விமரிசனம் செய்யும் கே. எம். அஷ்ரஃப் என்ற இளைஞர் கூறுவது போல் அது எப்பொழுதும் அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு எளிமையாக இருந்ததில்லை.
கே. எம். அஷ்ரஃப்:-அவர் ஆரஞ்சுப் பழரசத்தையும் ஆட்டுப்பாலையும், உணவாக அருந்தும் பொழுது அவையெல்லாம் சுவை மிகுந்தவை என்று ஒரு விநாடி எங்களுக்குத் தோன்றியது. ஆகையினால் எனது நண்பன் காந்திஜி இது ஒரு குடியானனுடைய வாழ்க்கைக்கு உகந்ததுதானா?” என்று கேட்டார். “'மிகவும் இனிமையாகவும் நன்றாகவும் இருக்கிறதுஎன்ற காந்திஜி குடியானவனது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இல்லை. ஆனால் கடவுள் எல்லாவற்றையும் மன்னித்துக்கொண்டிருக்கிறார், அவர் இதையும் மன்னித்துவிடுவார்என்றார்.
சொல்பவர்:-அவர் முடிந்த வரை ஒட்டாதவர், பற்றற்றவர். ஆனால் வெளியில் பெரிய இந்திய முதலாளியான ஜி. டி. பிர்லாவைத் தமது மகனாகவே பாவித்தார். எவ்வளவு முரண்பாடு!
ஜி. டி. பிர்லா:-ஒரு நிலைப்பாட்டைக் காந்திஜியின் சிறப்பாகக் கொள்ள முடியாது. அவர் ஒருபொழுதும் ஒரு நிலையில் இருந்ததில்லை. அவர் தமது இயல்பையும், முறையையும் அவ்வப்பொழுது தமக்குச் சரியென்று படுகிறபடியெல்லாம் மாற்றிக்கொள்வார். எந்த நேரத்தில் எது சரியென்று படுகிறதோ அதைச் செய்வதுதான் நேர்மையின் வழி என்று அவர் சொல்லுவார். முன்னுக்குப் பின் முரணானாலும் பரவாயில்லையென்பது அவர் கருத்து.
சொல்பவர்:-அவரது இந்த முரண்பாடுகள் பல. அது கொள்கைகளை வகுக்க வழிசெய்கிறது. சபர்மதி ஆசிரமத்தில் இருந்த பொழுது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு கன்றுக்குட்டியின் துன்பத்திற்கு விமோசனமாக அதையே கொல்லச் செய்தது யாவரும் நன்கு அறிந்த கதையாகும். காந்திஜி இது குறித்துப் பல எதிர்ப்புக்களுக்கு உள்ளானார். ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அளவு கடந்த பரிதாபம் காரணமாகவே அதைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார் என்று மீரா பென் சொல்கிறார்.
மீரா பென்:-இது போன்ற விஷயங்களில் அவரது கொள்கைகள் என்ன என்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில், ஆடு மாடுகள் எல்லை மீறித் துன்புறும் நேரங்களில், அவற்றின் துன்பத்திற்கு முடிவு கட்டுவதே உண்மையான அஹிம்ஸாவாதிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழி என்று அவர் நம்பினார்.
சொல்பவர்:-ஸ்திரத்தன்மை இல்லாக் கொள்கை சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி சில சமயங்களில் வழிமுறைகளைத் தளர்த்துவதற்கும், பொறுத்துப் போவதற்கும் ஏதுவாகிறது.
ஆபா பந்த் என்பவரை கிராம மக்களைப் போலவே வாழ்க்கை நடத்துமாறு காந்திஜி கேட்டுக்கொண்டார். மூன்று நான்கு ஆண்டுகள் அவர் சொன்னபடியே செய்தவர் உடல் நலம் கெட்டுப் படுத்துவிட்டார். காந்திஜியின் மருத்துவர்களே அவர் மிருகங்களின் புரதச்சத்தை உண்ணாவிட்டால் வேலை செய்வதற்கு ஏற்ற பலத்தைப் பெறமுடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஆபா பந்த்:-இவ்விஷயத்தை நான் காந்திஜிக்கு எழுதினேன். உடனே காந்திஜி, “உன் முதல் கடமை உடம்பை மக்களுக்குச் சேவை செய்யத் தகுதியான முறையில் நன்கு பாதுகாத்துக்கொள்வதாகும். ஒவ்வொரு தொண்டருக்கும் தம் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை உண்டு. ஆகையால் நீ மாமிசம் கட்டாயமாகப் புசிக்க வேண்டும். உன்னால் மரக்கறிப் புரதத்தை ஜீரணிக்க முடியாவிட்டால் விலங்குப் புரதத்தைப் புசிக்க வேண்டும்என்று கூறினார். அஹிம்சையின் அவதாரமாக இருந்துவருபவர் இம்மாதிரிச் சொல்வதென்றால் பலருக்கும் அதிர்ச்சி ற்படுவது இயல்புதானே! ஆனால் மகாத்மாஜி எப்பொழுதும் மக்களை இப்படி அதிர்ச்சியடையச் செய்வதில் மகிழ்ச்சி கொண்டார்.
சொல்பவர்:-1932-இல் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த உடனே தமது பல சீடர்களைக் காந்திஜி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இன்னொரு அரசியல் ஒத்துழையாமை இயக்கம் தயார் ஆகி ஐரோப்பியப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது என்று ஒரு தீர்மானம் இயற்றப்பெற்றிருந்தது. ஆனால் தாம் இலண்டனில் இருந்த பொழுது தம்மைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த இரண்டு துப்பறியும் ஆங்கிலேயப் போலீஸ்காரர்கள் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். அவர்களுக்குப் பரிசனுப்ப வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். அவர் தமது காரியதரிசியான பியாரேலால் நைய்யாரை அழைத்துச் சொன்னார்.
பியாரேலால் நைய்யார்:-ஒருநாள் மாலையில் அவர் எனக்கு ஆள் அனுப்பிய பொழுது அந்தத் தீர்மானம் அவர் முன் இருந்தது. நீங்கள் போய் பிரிட்டனில் தயாரித்த இரண்டு நல்ல கடிகாரங்கள் அந்தத் துப்பறிபவர்களுக்குத் தேர்ந்தெடுத்து வாங்கி வாருங்கள்''என்றார். நான் பம்பாய் முழுவதும் தேடி அலைந்துவிட்டு இரண்டு பெட்டிகள் நிறையக் கடிகாரங்களோடு திரும்பினேன்.நிச்சயமாக அவற்றில் நூறு கடிகாரங்களுக்கு மேல் இருக்கும். துரதிருஷ்டவசமாக அவற்றில் ஒன்றுகூட பிரிட்டனில் தயாரான கடிகாரமில்லை. அவையெல்லாம் ஸ்விஸ் கடிகாரங்கள். ஊஹும்! இது சரியில்லை, நான் அவர்களுக்குப் பிரிட்டனில் தயாரான கடிகாரங்களைத்தான் கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் முதலாவதாக நான் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். இரண்டாவதாக எனக்கு ஆங்கிலேயரிடம் எவ்விதத் துவேஷமும் இல்லை என்பதைக் காட்ட விரும்புகிறேன். ஆனால் அவை ஆங்கிலேயப் பொருள்கள் என்பதற்காக நான் அவற்றைப் பகிஷ்க்கரிக்க விரும்பவில்லைஎன்று காந்திஜி கூறினார். ஆனால் இதோ, ஒரு தீர்மானம் உங்கள் முன் இருக்கிறது. இது நாளைக்கு நிறைவேறப்போகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால் இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்தில் நீங்கள் ஆங்கிலேயப் பொருள்களைப் பகிஷ்க்கரிக்கும்படிப் போதிக்கப்போகிறீர்கள். அப்படியிருக்கும்பொழுது ஏன் ஆங்கிலக் கடிகாரங்களை விரும்புகிறீர்கள்என்று நான் கேட்டேன். அந்த நேரம் வரும்பொழுது என் கடமை என்னவென்பதைக் கவனித்துக்கொள்கிறேன். இப்பொழுது என் கடமை மற்ற நாட்டுக் கடிகாரங்களைக் காட்டிலும் ஆங்கில நாட்டுக் கடிகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயாகும்என்றார்.
தேவதாஸ் காந்தி:-அவர் சாதுவாகவும், மனவுறுதி மிக்கவராகவும் இருந்தார். ஸம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. ஒரு மனிதனது தன்மை எஃகைப் போன்று கடினமாகவும், பூவிதழ் போன்று மிருதுவாகவும் இருக்கவேண்டும் என்று சொல்வதுண்டு. அவருடைய தன்மை அத்தகைய தன்மையாகும்.
கே. ஸ்ரீதராணி:-உருக்கைவிடக் கடினமாகவும் மலரைக் காட்டிலும் மென்மையாகவும் இருப்பவர்தான் காந்திஜி. அவர் வேலை வாங்குவதில் கண்டிப்பான எஜமானராக இருந்தார் என்பதும் கரிசனம் காட்டுவதில் தந்தைக்கும் தலைவர்க்கும் மேலாக இருந்தார் என்பதும் எனக்கு நினைவு இருக்கின்றது.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-நினைவிருக்கட்டும்.அவர் வேலை வாங்குவதில் மிகக் கறார் பேர்வழி. ஓ! அவர் என் விஷயத்தில் அநீதி இழைப்பதாக எண்ணி நான் எத்தனையோ தடவை அழுதிருக்கிறேன். நான் சிறு தவறு செய்துவிட்டாலும் அவர் என்னைக் கடுமையாக நடத்துவார். என்னைக் கண்ணீர் விட்டு அழவைத்துவிடுவார். அப்புறம் உன் கண்ணீருக்கு நான் இரங்கமாட்டேன். ஏனெனில் கண்ணீர் கோபத்தின் அறிகுறியே தவிர வருத்தத்தின் அறிகுறி அல்ல. கோபத்தையும் வருத்தத்தையும் மயிரிழைக் கோடுதான் இனம் பிரிக்கிறதுஎன்று கூறுவார். சிறிது ஆறப்போட்ட பின் யாருமே காரணத்தை அறிந்துகொள்ள முடியும். சொல்லப்போனால் அவர் கடுமையாக நடந்துகொண்ட நேங்களிலெல்லாம் நானே பொறுமையை இழந்திருக்கிறேன் என்பதைஉணர்கிறேன். அவர்கூடச் சில சமயங்களில் தன் பொறுமையைஇழந்திருக்கிறார். ஆனால் தாம் பொறுமையை இழந்துவிட்டோம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்குப் பெருந்தன்மை வாய்ந்தவராக இருந்தார்.
வெரியர் எல்வின்:-அவர் பொறுமையை இழந்து நான் பார்த்ததில்லை. அவர் கோபமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் பொறுமை இழந்ததை நான் ஒருபொழுதும் பார்த்ததில்லை.
ஜே. பி. பட்டேல்:-சாதாரணப் பொருளில் உறுதி என்னும் சொல் காந்திஜிக்குப் பொருந்தும் என்று நான் நினைக்கவில்லை. அவர் பிடிவாதக்காரராக இருந்திருந்தால், தமக்கு முரண்பாடாக உள்ளவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒருநாளும் சம்மதித்திருக்கமாட்டார்.
ராஜா ஹத்தி சிங்:-அவர் மனிதன் என்ற முறையில் மிகவும் இளகிய மனம் படைத்தவராக இருந்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் அவர் கருத்தை மாற்றலாம். உங்களது கருத்துக்கு ஒத்துவரச் செய்யலாம். உங்கள் கருத்தை அவர் உள்ளத்தில் பதிய வைக்கலாம். அவரைப்போல் எதிர்ப்புக்கு இடம் கொடுத்துப் பொறுமையுடன் செவிசாய்க்கும் சான்றாண்மை கொண்டவர்களை நான் கண்டதே இல்லை.
சொல்பவர்:-உறுதி, சகிப்புத்தன்மை, ஒழுக்கம், சாத்வீகம் ஆகிய கலவைத்தன்மையை அவரிடம் கண்ட அனைவரும் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். மிஸ்டர் நேரு உட்பட.
ஜவஹர்லால் நேரு:-கொள்கைகளில் தீவிரமாக இருந்தாலும் அவர் போதிய மனிதாபிமானம் உள்ளவராகவும் இருந்தார். அவர் கொள்கைகளில் உறுதியாக மட்டும் இருந்திருந்தால் மக்களோடு அவரால் த்துப்போயிருக்க முடியாது. ஆனால் அவர் பலவகைப்பட்ட மக்களையும் அரவணைத்துக்கொண்டு போனார். எங்களிடையே கருத்து வேற்றுமைகள் தோன்றும் பொழுதெல்லாம் நாங்கள் அவரிடம் செல்வோம். அவர் எங்கள் கருத்துக்களைச் செவிமடுத்து அனுசரித்துப்போக முயல்வார். முடியாவிட்டால் தம் கருத்துக்களை எங்களை ஏற்குமாறு செய்துவிடுவார். சில சமயங்களில் நாங்கள் எதிர்ப்பு உணர்வோடுதான் அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். என்ன இருந்தாலும் ஏற்றுக்கொண்டது ஏற்றுக்கொண்டதுதானே!
சொல்பவர்:-மற்றொரு விஷயத்தையும் எல்லோரும் கவனித்திருப்பார்கள். அவர் குழந்தைகளிடம் அளவற்ற அன்புகொண்டிருந்தார். ஆசிரமத்துப் பணியாட்கள் தினசரி நூற்புக்கணக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகள் அவரோடு விளையாடிக்கொண்டிருப்பதை ஹொரேஸ் அலெக்ஸாந்தர் கவனித்திருக்கின்றார்.
ஹொரேஸ் அலெக்ஸாந்தர்:-அவர்கள் சப்தம் செய்யமாட்டார்கள். சொல்லப்போனால் இந்தியக் குழந்தைகள் அவ்வளவாகச் சப்தம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்திஜி உட்கார்ந்துகொண்டிருந்த இடத்தைச் சுற்றி ஓட ஆசைப்பட்டார்கள் என்பதை நான் கவனித்தேன். அக்குழந்தைகளில் ஒன்று அவரைக் கடந்து ஓடும் பொழுது அவர் அதன் கையைத் தடவிப்பிடித்து அதோடு கூட ஓடுவது போல் பாவனை செய்வார். அல்லது அது செய்வது போலவே தாமும் செய்வார். வேறு சில நேரங்களில் காந்திஜி மௌனமாக அமர்ந்து குழந்தைகளின் விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பார்.
ரெய்ஹானாதயாப்ஜி:-அடேயப்பா! அவரது நகைச்சுவை அபாரம்! சொல்லப்போனால் அவரது நகைச்சுவைதான் அவரை உயிருடன் வைத்திருந்தது என்பேன்.
சொல்பவர்:-யாரும் இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அந்தச் சிரிப்பை சுலபமாக நினைவுக்குக் கொண்டுவருவது சாத்தியமல்ல. வெரியர் எல்வின் சொல்வது போல் அது சாதாரணமான நகைச்சுவை அல்ல.
வெரியர் எல்வின்:-காந்திஜியின் நகைச்சுவை சாதாரணமானதல்ல. பார்க்கப்போனால் அவர் பேசுவதில் வார்த்தை ஜாலம் இராது. அவர் அபூர்வமாகத்தான் நகைச்சுவைக் கதைகள் சொல்வார். ஆனால் அவர் ஆழ்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார். அவர் தம்மையே கேலி செய்தாலும் ரசிப்பார். அது பரிகசிப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பமாக இருந்து சொந்த நாட்டையே எதிர்த்துக் கேலி செய்வதாக இருந்தாலும் தயக்கம் காட்டமாட்டார்.
சொல்பவர்:-சில வேளைகளில் நம்மால் இன்னமும் அவர் குறட்டையைக் கேட்க முடியும். உதாரணமாக 1931-இல் காந்தி இங்கிலாந்திற்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தபொழுது மேல் தளத்தில் படுத்துத் தூங்கினார். அவரோடு பிரயாணம்செய்துகொண்டிருந்த பிரயாணிகள் காந்திஜியிடம் எங்கள் நடனத்திற்கு இந்த இடத்திலேயே ஏற்பாடு செய்யலாமா?” என்று (வேடிக்கையாக) கேட்டார்களாம். அதைப்பற்றி அவரது காரியதரிசி நினைவுகூர்கிறார்.
பியாரேலால் நையார்:-உங்களுக்கு அருகில் நாங்கள் நடனமாடலாமா?” என்று அவர்கள் கேட்டார்கள். என் மீது ஆடாமல் இருக்கும் வரை தாராளமாக எனக்கு அருகில் மட்டுமென்ன என்னைச் சுற்றிலும் கூட ஆடலாம்என்று அவர் சொன்னார். அன்று இரவு அவர் தூங்கச் சென்றுவிட்டார். அவர்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கிட்டத்தட்ட நடுநிசி வரை தொடர்ந்து நடனம் ஆடினார்கள். அது அவரது தூக்கத்தைத் துளிக்கூடக் கலைக்கவில்லை. தொடர்ந்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூடப் பிரயாணம் செய்த ஒருசில பிரயாணிகள் அவரிடம் வந்தனர். வம்பர் மகாசபை என்ற ஒரு சங்கத்தை அவர்கள் அமைத்திருந்தனர். வம்பர் சபை என்று கையினால் எழுதியிருந்த ஒரு காகிதத்தை வைத்திருந்தனர். அந்தப் பக்கத்தில் கண்டிருந்த பொருள் அந்தத் தலைப்புக்கு ஏற்றதாக இருந்தது. அந்தப் பிரதிநிதிகளில் ஒருவர் காந்திஜியிடம் வந்து மிஸ்டர் காந்தி இதோ இருக்கிறது எங்கள் வம்பர் சபை தாள். உங்கள் கண்ணோட்டத்தை இதில் செலுத்தி இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்பதைக் கூறுங்கள். நாங்கள் அறிந்துகொள்ள மிகவும் ஆவலாயிருக்கிறோம். சீக்கிரமாகப் படித்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். ஏனெனில் நான் கீழே போய் அவசரமாக இரண்டாவது கோப்பை மது அருந்த வேண்டும்என்றார். காந்திஜி அந்தத் தாளைத் தம் கையில் எடுத்துக்கொண்டார். அதிலிருந்த பித்தளை இணைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு. “இதிலுள்ள மிகவும் மதிப்புள்ள பொருளை நான் எடுத்துக்கொண்டுவிட்டேன்என்று சொல்லி அத்தாளை அவரிடம் திருப்பிக்கொடுத்துவிட்டார்.
சொல்பவர்:-நிச்சயமாகக் காந்திஜி அந்தப் பித்தளை இணைப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்தியிருப்பார். அவர் எதையுமே விணாக்கியதில்லை. பிரஜ்கிருஷ்ணா சாந்திவாலாவைப் போல் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் சின்னஞ்சிறு விஷயங்களில் கூட எவ்வளவு அக்கரையோடு இருந்திருக்கிறார் என்பதைக் கவனித்துள்ளார்கள்.
பிரஜ்கிருஷ்ணா சாந்திவாலா:-அவர் எல்லாவற்றிலும், அது மிகக்சிறு பொருளாக இருந்தாலும் கூட மிகவும் கருத்தாக இருப்பார். அவர் ஒரு துண்டுப் பென்சிலைத் தொலைத்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அது கிடைக்கும் வரை அவர் நிம்மதியாக இருக்கமாட்டார். அவருடைய கைக்குட்டையைத் தொலைத்துவிட்டால், அவரும் தேடுவார். அவரோடு ஒவ்வொருவருமே தேடுவோம். அது கண்டுபிடிக்கப்படும் வரை அவர் திருப்தியடையமாட்டார். அவர் நான் ஒரு தர்மகர்த்தா, ஒவ்வொரு சிறு பொருளும் தேசத்தின் சொத்து. ஆகையால் எதையுமே நான் தொலைக்கக்கூடாது. நான் ஓர் ஏழை. எனது நாடோ இன்னும் ஏழை. மிகச் சிறு பொருளானாலும் அதற்கு ஒரு மதிப்பு உண்டு. அதைத் தொலைக்க எனக்கு உரிமைகிடையாதுஎன்பார்.
சொல்பவர்:-உதாரணமாக,காகிதம்.
பிரஜ்கிருஷ்ணா சாந்திவாலா:-ஓ! காகிதத்தைப் பற்றித்தானே? அவர் புதுக்காகிதத்தை உபயோகிக்கமாட்டார். அவர் தம்முடைய கருத்துக்களையும் கட்டுரையையும் தமக்கு வரும் தந்திக் காகிதங்களிலோ, கடிதங்களிலோ பின்புறத்தில்தான். எழுதுவார். அவரால் எவ்வளவு தூரம் காகிதத் துண்டுகளைப் பயன்படுத்தமுடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்துவார்.
சொல்பவர்:-அவரது செயலாளர்களும் அப்படித்தான் செய்ய வேண்டுமோ?
பிரஜ்கிருஷ்ணா சாந்திவாலா:-ஆம். ஆம். அப்படியேதான். ஒருநாள் அவரது செயலாளர்களில் ஒருவர் கடையிலிருந்து சில ஃபைல்களை வாங்கி வந்தார். அவர் அதுபற்றித் திருப்தி அடையவில்லை. செய்திப் பத்திரிக்கையைப் ஃபைலுக்காக ஏன் உபயோகிக்கக் கூடாது! இத்தனை பணத்தை ஏன் செலவு செய்தாய்?” என்று கேட்டார். அதோடு அந்த ஃபைல்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடும்படியும் கூறினார்.
சொல்பவர்:-இந்தக் கண்காணிப்புச் சிக்கனம் எப்படியெல்லாம் உருப்பெறுமோ? பேராசிரியர் நிர்மல் போஸைப் போல் கருங்கல் ஜெல்லிகளைப் பொறுக்கியெடுத்துப் போகவேண்டிவரலாம்.
நிர்மல் போஸ்:-1934-இல் அவருடன் நான் உலா சென்றேன். திரும்பி வரும்பொழுது அவர் சிறிதும் பெரிதுமாக கற்களைப் பொறுக்கிகொண்டிருப்பதைக் கண்டேன். அவற்றை அவர் வேஷ்டியில் சேகரித்து எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.ஒவ்வொருவரும் அப்படியே செய்தனர். ஆசிரமத்தை அடைந்தபோது பெரிய கற்குவியலை நாங்கள் கண்டோம். இது எதற்கு என்று நாங்கள் அவரைக் கேட்டபொழுது, “நாம் இங்கிருந்து வயலுக்குக் குறுக்கே முக்கியமான பாதை வரைக்கும் ஒரு பாதை அமைக்கவேண்டியுள்ளது. அதற்குப் பணம் தேவைப்படுகிறது. கான்ட்ராக்டர்கள் சாமான்களுக்குப் பாதிப் பணமும், கூலிக்குப் பாதிப் பணமும் வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நாம் சிறிது சிறிதாகக் கற்களைச் சேகரித்துவிடுவதால் பாதிப் பணம் மிச்சம் ஆகும். நாம் கூலி மட்டும்தான் கொடுக்க வேண்டும். இது ஒரு வகையில் நமக்கு உதவிதானேஎன்றார்.
சொல்பவர்:-இதுதான் ஒரு வேளை ரஸ்கினுடைய பொருளாதாரத் தத்துவத்தின் எதிரொலியோ?” அப்படித்தான் தோன்றுகறது. “Unto this last” (கடையனுக்கும் கடைத்தேற்றம்) என்பது காந்திஜியைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். அவரே அதை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அதைச் சர்வோதயம்என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். எல்லோருக்கும் நல்லது என்ற சொல்லை இன்று அரசியல் பேச்சுக்களில் அதிகமாகக் கேட்கலாம். புதுதில்லியில் உள்ள காந்திஜி மியூஸியத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில பொருள்களுக்கு மத்தியில் தென்னாப்பிரிக்காவில் ஹென்றி எஸ். எல். போலக் என்பவர் 1904-ஆம் ஆண்டு காந்திஜிக்கு இரவலாகக் கொடுத்த “Unto this last” என்ற புத்தகப் பிரதி ஒன்றும் இருக்கிறது.


காந்திஜி ஒரு சொற்சித்திரம் – ஒலிச்சித்திரம் - 3

$
0
0
Gandhi by Raiber González Hechavarría / Behance
காந்திஜி ஒரு சொற்சித்திரம் – ஒலிச்சித்திரம் - 2
எச். எஸ். எல். போலக்:- அப்பொழுது டர்பனில் நடந்துவந்த வாரப் பத்திரிகையின் பொருளாதார நிலையைப் பற்றி அவர் சற்றுக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் இரயிலில் பிரயாணம் செய்தபொழுது அவரை வழியனுப்புவதற்காக நான் இரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். ‘Unto this last’ (கடையனுக்கும் கடைத்தேற்றம்) என்ற புத்தகத்தை அவருக்குப் படிக்கக் கொடுத்தேன். தமது சுயசரிதையில் அவர் அந்தப் புத்தகத்தால் மிகவும் கவரப்பட்டதாகவும், இரவு முழுவதும் அதைப் படித்துக்கொண்டிருந்ததாகவும், படித்து முடிக்கும்வரை அதைக் கீழே வைக்க முடியவில்லையென்றும் குறிப்பிடிருக்கிறார். உடனே அவர் சாதாரண மத்தியதரக் குடும்பம்போல் வாழும் தமது வாழ்க்கை முறையை மாற்றி ஒரு குடியானவனைப் போலவோ, தொழிலாளியைப் போலவோ எளிமையாக வாழவேண்டும் என்று முடிவு செய்தார். அப்பொழுது அவர் செய்த காரியங்களில் ஒன்று டர்பனிலிருந்து பதின் மூன்று மைல் தூரத்திலுள்ள போனிக்ஸ் என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கியதாகும். எளிய வாழ்க்கைக்கு அடிகோலிய இடமான அதோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
சொல்பவர்:-அங்கே ரஸ்கினும் இருந்தார். டால்ஸ்டாயும் இருந்தார்.
எச். எஸ். எல். போலக்:-அவரது புத்தக அலமாரியைப் பார்த்துக்கொண்டிருக்கையில், மற்றப் புத்தகங்களுக்கு மத்தியில் ஹிந்து சமயத்தைச் சார்ந்த சில புத்தகங்களும் இருக்கக் கண்டேன். தென்னாப்பிரிக்காவுக்கு வருவதற்கு முன்பே நான் இலண்டனில் சேகரித்தவை அவை. அவற்றை நானேதான் தென்னாப்பிரிக்காவிற்குக் கொண்டுவந்திருந்தேன். டால்ஸ்டாயின் புத்தகங்களில் சில அங்கே இடம்பெற்றிருந்தன. நான் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற பொழுது டால்ஸ்டாயினுடைய மாணவனாக இருந்திருக்கின்றேன். எனவே அவருடைய மனம் வேலை செய்யும் முறையை ஓரளவு என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. போயர் யுத்தத்தில் அவரே ஒரு ஆம்புலன்ஸ் உடையில் ஸார்ஜென்ட் மேஜராக இருந்திருக்கின்றார் என்பதை நான் அறிவேன்.டால்ஸ்டாய் ஒரு போர் வீரராக இருந்திருக்கின்றார் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும், டால்ஸ்டாயின் மனம் சமாதானத்துக்காகவே வேலை செய்தது. காந்திஜியும் அதே திசையில் வேலை செய்துகொண்டிருந்தார்.
சொல்பவர்:-அவர் இளமையில் புத்தகங்களிலிருந்து கற்றவற்றைத் தம் வாழ்க்கையிலும் பின்பற்ற முயன்றார். எனவே காந்திஜி எப்படியிருந்தவர் எப்படியானார் என்ற கேள்வி எழுவது இயல்பே. நீங்கள் மீரா பென் போன்றவர்களது நோக்கோடு பார்த்தால் அவரிடம் ஆரம்பத்திலேயே இருந்த பண்புகளில் சில இன்னும் மங்கிப்போகவில்லை என்பதைக் காண்பீர்கள்.
மீரா பென்:-விளையும் பயிர் முளையில் தெரியும் என்ற விதிப்படி ஒரு மனிதன் எப்படியிருக்கப்போகிறான் என்பது அவனது பிறவியிலிருந்து தெரிந்துவிடுகிறது. அவன் வளர வளர அவனது இயல்புகளும் முதிர்ச்சி பெறுகின்றன. எனவே அதன் விதை ஆரம்பத்திலிருந்து அவனிடம் இருக்கிறது என்று ஆகிறது. பாபுஜி இறுதிவரை இலட்சியங்களை அடையும் முயற்சியிலேயே ஈடுபட்டிருந்தார். ஏனெனில் பாபுஜி கொண்ட இலட்சியங்கள் உயர்ந்த குறிக்கோளைக் கொண்டதாக இருந்தன. அவற்றை அடையும் விஷயத்தில் அவரால் ஒரு பொழுதும் திருப்தி காண முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று முறை மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் பாபுஜி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நான் இப்பொழுதுதான் அஹிம்சைச் சோதனையைத் தொடங்கியிருக்கிறேன். மக்களை அந்தப் பாதையில் இட்டுச்செல்லவும் முயன்றுகொண்டிருக்கிறேன். அது செப்பனிடப்பட்டுச் சீர்மை பெற எத்தனையோ காந்திஜிகள் வேண்டும்என்றார். இதற்கு ஒருவர் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். ஆனால் பல காந்திகள் என்று அவர் கூறியதன் உண்மையான பொருள் மீண்டும் தான் வரவேண்டும் என்று அவர் விரும்பியதாகப் படுகிறது. பாபுஜி இதைத் தொடக்கம் அல்லது இடைநிலை என்றுதான் உணர்ந்தார். அவர் ஒருநாளும் தம்மை உயர்ந்தவர் என்றோ, புரிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ எண்ணியதில்லை. ஆனாலும் அவர் நம்மைவிட எவ்வளவோ பெரியவர். அவரது எளிமை கபடமற்ற தன்மை காரணமாகவேகூட நம்மால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எவ்வளவு பெரியவர் என்பதை இன்று என்ன, என்றுமே நாம் உணரவில்லை.
சொல்பவர்:-இன்னொருபுறம் அவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்டவராக ஜாகிர் உசைன் எண்ணுகிறார்.
ஜாகிர் உசைன்:-பாருங்கள்! எனது கருத்துப்படி காந்திஜியுடைய வாழ்க்கையைக் கவனித்தால் ஒரு முக்கியமான விஷயம் தெரியவரும். அது என்னவெனில் அவர் பெரிய மனிதராகப் பிறக்கவில்லை. வழக்கமாக எவையெல்லாம் மனிதனைப் பெரியவனாக்குவதற்கு உதவுகின்றனவோ, அவற்றோடு காந்திஜி பிறக்கவில்லை. அவர் சாதாரண மனிதனாக, சாதாரணத் திறமைகளுடன் பிறந்தார். சொல்லப்போனால் அவர் தம்மைத் தாமே தட்டிக் கொட்டிப் பண்படுத்திக்கொண்டார். சீவிச் சீர்செய்து உருவம் கொடுத்துக்கொண்டார். தமக்குத் தாமே கல்வி புகட்டிக்கொண்டார். தம்மை ஆளாக்கிக்கொண்டார். தமக்குத் தாமே மதிப்பைத் தேடிக்கொள்ள வேண்டும், பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்து, அதற்கு ஏற்பச் செயல்பட்டு மதிப்பை பெற்றார். உதாரணமாக அவர் அப்படியொன்றும் அழகுள்ளவர்அல்லர், அவரது தோற்றத்தில் மிடுக்கோ, அதிகாரத் தோரணையோ கிடையாது. இயல்பான பேச்சுத் திறமையும் அவர் பெற்றிருக்கவில்லை. அவர் தம்மைத்தாம் உருவாக்கிக்கொண்ட ஒரு மாபெரும் மனிதர்.அந்த உயர்ந்த தன்மையே அவரை வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு சொத்தாக ஆக்கியுள்ளது. ஏனெனில் அவர் கடவுளால் அனுப்பப்பட்ட மிக உயர்ந்த பிறர் பார்த்துப் பின்பற்ற முடியாத மனிதரல்லர். அப்படியிருப்பின் அவரிடத்திலிருந்து எதையும் சுலபமாகக் கற்றுக்கொள்ளவும் முடியாது, பின்பற்றவும் முடியாது.
சொல்பவர்:-காந்திஜி தம் தொடக்க காலத்தைப் பற்றி ஒளிவு மறைவுகளின்றி வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார். சில சமயங்களில் இரவு தூங்கப்போகும் முன்பு அவற்றைப் பற்றி அவர் பேசுவதும் உண்டு. இவற்றை அவரது படுக்கை நேரக் சதைகள் என்று ராஜகுமாரி அமிர்தகௌர் சொல்கிறார்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-ஆம்! அவர்தம் குழந்தைப் பருவத்தைப்பற்றிப் பேசியிருக்கிறார். அவர் தம்மை ஒரு மந்தமான குழந்தை என்று சொல்லியிருக்கிறார். பல முறைகள் என்னிடம் தம்மை ஓர் அசட்டுப் பிள்ளையென்று அடித்துச் சொல்லியிருக்கிறார். அவருடைய தாயார் விரத நாட்களில் எப்படி உணவு அருந்தாமல் இருப்பார் என்றும், ஏன் அவர் அப்படிப் பட்டினி கிடக்க வேண்டும் என்பது தமக்கு நன்கு விளங்கவில்லை என்றும், அவ்வாறு அவர் பட்டினி கிடப்பது அவரது உண்ணா நோன்பை முறியடிப்பதற்குச் சந்திரனோ, நட்சத்திரங்களோ தெரிகிறதா என்று பார்ப்பற்கு இங்கும் அங்கும் எப்படியெல்லாம் ஓடியிருக்கிறார் என்றும் தாயாரோடு தொடர்புகொண்ட காட்சிகளையெல்லாம் நினைவுகூர்வதுண்டு. அவர் தமது பள்ளி நாட்களை நினைவுகூரும் பொழுது, தாம் எவ்வளவு சங்கோசப்பிராணியாக இருந்தார் என்பதையும், மற்றப் பையன்களது மத்தியில் இருப்பதை வெறுத்தார் என்பதையும் கூறி, அன்று தொட்டு இன்று வரையில் தமது சங்கோஜம் போகவில்லையென்றும் மக்கள் என்னிடம் வரும்போது நான் மிகவும் கூசுகிறேன் என்றும் சொல்வது வழக்கம். ஆயினும் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவரை சங்கோஜி என்று கூறமுடியாது. பேச்சுச் சுவாரசியத்தில் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுவார். ஏன், எப்படி, எங்கே என்பது போன்ற கேள்விகள் கேட்டு எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ள குழந்தையாக இருந்தார் அவர். குழந்தையாக இருந்தபொழுது அதிகமாகப் பேசப் பிடிக்காது என்றும், அப்படிப் பேசுவதாக இருந்தாலும் அது எப்பொழுதும் கேள்விகள் கேட்பதாகவே இருக்கும் என்றும், பெரும்பாலும் அவை அவருக்குத் திருப்தியளிக்கக்கூடிய பதில்களாக இராது என்றும், அவர் ஒருமுறை என்னிடம் சொல்லியிருப்பதாக நினைவு.
சொல்பவர்:-சிறந்த ஒழுக்கத்திலிருந்து பிறழ்ன்றவற்றையெல்லாம் மிகவும் வெளிப்படையாக எழுதியது சிறிது காலத்திற்குப் பிறகுதான்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-அவர் பெரியவராகிக் கெட்ட சகவாசம் ஏற்பட்ட பொழுது, காப்பிலுள்ள தங்கத்தைத் திருடி விற்றிருக்கிறார். அவர் புலால் உணவு அருந்தி அதைத் தம் தந்தையிடம் மறைத்து வைத்தது போன்ற செயல்களெல்லாம் அவரை வருத்தின. மற்ற சாதாரண குறும்புத்தனங்களுக்குக்கெல்லாம் அவர் அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. அவர் குறும்புக்காரக் குழந்தையாக இருந்திருக்கமாட்டார் என்றும், எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருக்கும் சாதுக் குழந்தையாகத்தான் இருந்திருப்பார் என்றும் எனக்குத் தோன்றுகிறது.
சொல்பவர்:-காந்திஜி தம்முடைய தாயாரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும், பொதுவாகப் பெண்களிடம் அவர் நடந்துகொண்ட முறை பற்றியும், சில கொள்கைப் பிடிப்பு உண்டு. பேராசிரியர் நிர்மல் போஸ் இதைப் பிரம்மச்சரியத்தின் கொள்கையோடு அல்லது கல்யாணமாகாதவர்களது கோட்பாடுகளோடு தொடர்புபடுத்திக் கூறுகிறார்.
நிர்மல் போஸ்:-இவ்விஷயம் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் அவரது புத்தகங்களில் அவரது தாயாரைப் பற்றியும், அவரை அவரது தாயார் எவ்வளவு தூரம் கவர்நதிருந்தார் என்பது பற்றியும் அடிக்கடி குறிப்பு காணப்படுகிறது. மக்களிடத்துள்ள சில சாதாரண உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. உதாரணமாக பசிஅல்லது பாலுணர்ச்சி. நமது மத சம்பிரதாயத்தில் மட்டுமின்றி பிற மத சம்பிரதாயங்களிலும் கூட, ஒரு மனிதன் எப்பொழுதுகடவுளைத் தனது துணையாகத் தேடுகின்றானோ, அப்பொழுதுஇந்தஉணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர் தம்முடைய தாயாரிடமிருந்து பெற்ற கருத்துக்களும், தம் தாயாரிடத்தில் கண்ட தூய்மையும் பெரும்பாலும் அவருடைய சொந்தப் பண்பிலும் பிரதிபலித்திருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது அவரது பிறப்போடு தோன்றியதல்ல. அவர் தம் தாயாரிடமிருந்து குழந்தைப் பருவத்தில் அடைந்த தாய்வழிப் பண்பு ஆகும். ஆனால் பிறகு பாலுணர்ச்சி அவரது வழியில் இடையூறுகளாகக் குறுக்கிட நேர்ந்த காலத்தில், அவர் தமது சுயசரிதையில் கூறியுள்ளது போல, அவர் தம் தாய்வழிப் பாதையிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டாலும், தம்மோடு தொடர்புகொள்ள வந்தவர்களுக்கெல்லாம் தம்மைத் தாமே ஒரு தாயாக பாவிக்க முயன்று பாலுணர்ச்சியை வெற்றிகொள்ள முயன்றிருக்கிறார் என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன். தங்கள் துயரத்திற்குத் தீர்வு காணவோ ஆறுதல் கூறவோ அவரை நாடி வருபவர்கள் எவரிடமும் அவர் காட்டும் கரிசனத்தை நான் பலமுறைகள் கவனித்திருக்கிறேன். அதுவே அவரிடமுள்ள தாய்மைத் தன்மை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த இயல்பை இடையறாது முயற்சி செய்து அவர் சிறுகச் சிறுக வளர்த்துக்கொண்டார் என்றே கூறவேண்டும். மதத்தத்துவங்களைக் காணவிழைபவர் களிடம் இத்தகைய தன்மையை நாம் காண்கிறோம்.
வெரியர் எல்வின்:-தம்மைப் பெண்பாலாகக் கருதிகொண்டு செயல்படும் தன்மை சாதாரணமான சுவையுள்ளது என நினைக்கிறேன். பல பெரிய மகான்களைப் போல அவரிடத்திலும் தாய்மைப் பண்பு குடிகொண்டிருந்தது. மக்கள் பால் அவர் கொண்டிருந்த அன்பின் மூலமும், கருணையின் மூலமும் அது வெளிப்பட்டது. ஆனால் அதுபற்றி அவர் பேசி நான் கேட்டதில்லை.
சொல்பவர்:-காந்திஜியின் இத்தன்மை பற்றி வெரியர் கொண்டுள்ள கருத்து வேறு வகையானது.
வெரியர் எல்வின்:-நான் அவரோடு உரையாடல்கள் நிகழ்த்தியிருக்கிறேன். அவர் இவ் விஷயத்தில் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார் என்பதே என் கருத்து. இது ஒரு தற்காலிக நிலையே. இடைக்கால நிலை என்று வேண்டுமானாலும் கொள்ளலாம். இதை ஒருசிலர் அவரது நேரிய தத்துவ போதனைகள் என்று எண்ணிவிட்டனர் என்றே நான் நினைக்கிறேன். தம் நாடு விடுதலை பெறவேண்டுமென்றால் அது முழுதும் சுதந்திரமான மக்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்று காந்திஜி கருதினார். உங்களுக்கு ஒரு மனைவி இருந்து சில உயர்ந்த ஒழுக்கப் பிரச்சினையோ அல்லது அரசியல் பிரச்சினையோ எழுமானால் அவை உங்கள் மனைவியை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் இது நம் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு அளிக்கும் விஷயத்தில் அனுகூலமாக இருக்குமா இல்லையா என்று சிந்கிந்துப் பார்ப்பீர்கள். அதுபோல்தான் உங்களுக்கு வருவாயோ சொத்தோ இருந்தால் நெருக்கடியான நிலை ஏற்படும் பொழுது நீங்கள் எப்பொழுதும் அதைப் பற்றியேதான் எண்ணிக்கொண்டிருப்பீர்கள். ஆகையினால்தான் அவர் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் உடலுறவு கொள்ள வேண்டாம் என்றும் கூறிவந்தார். இப்படி இவர் கூறியதற்கு ஆத்மீக நோக்கம் காரணமல்ல. தற்காலிகமாக அரசியலுக்காகத் துறவை மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும். அதோடு அவர் அரசியலையும் ஒழுக்கத்தையும் ஒன்றாகவே பாவிப்பார் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சொல்பவர்:-இருப்பினும் காந்திஜிக்கு ஒரு மனைவியும் குழந்தைகளும், பேரப்பிள்ளைகளும் இருந்திருக்கிறார்கள். மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமை தமக்கு அஹிம்சைப் பயிற்சி அளித்ததாக அவர் ஒருமுறை செல்லியிருக்கிறார். நெருங்கிப் பழகுபவர்களால் பாஎன்று அழைக்கப்படும் கஸ்தூரிபா காந்தி, காந்திஜிக்கு அவரது 38ஆவது வயதில் தென்னாப்பிரிக்காவில் பிரம்மசரிய விரதத்தை மேற்கொள்ள அனுமதி கொடுத்த போதிலும் அவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமைகள் இருந்திருக்கத்தான் வேண்டும். அவர் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவரை நன்கு அறிந்திருந்த திருமதி மில்லி போலக்கும் அவரது கணவரும் அந்தக் காலத்தில் போனிக்ஸில் குடியேறியவர்களது வாழ்கை எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை நினைவுகூர்கிறார்கள்.
திருமதி போலக்:-திருமதி காந்தி அவ்வளவு சந்தோஷமாக இருக்கவில்லை. அப்படி சந்தோஷமாக இருந்ததாகச் சொல்வது உசிதமாகாது. ஆனால் இந்தியா வாழ் இந்திய மக்களின் வாழ்க்கை ஆடம்பரமானதல்ல என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கவேண்டும்.
எச். எஸ். எல். போலக்:-ஒரே ஒரு விஷயத்தை மட்டும்குறிப்பிட நான் ஆசைப்படுகிறேன். காந்திஜி பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொள்வது என்று முடிவு செய்த காலத்தை நாம்நினைவில் கொள்ளவேண்டும். ஆண் பெண் உறவை உதறினால்தான் பொதுக் காரியங்களில் அதிமாக ஈடுபடலாம் என்றும், குடும்ப வாழ்க்கையில் இருந்தால் நினைத்தபடி தம்மால் பொது வேலையில் ஈடுபட முடியாது என்றும் உணர்ந்திருந்தார்.
திருமதி போலக்:-திருமதி காந்தி அந்த மாதிரி வாழ்க்கையை மேற்கொள்ளத் தயாரா என்பதை அறியும் பொருட்டு அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கு ஒரு காரணமும் இல்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளார். ஆனால் அவள் மனத்தைப் பாதித்தது கல்விப் பிரச்சனை. முக்கியமாகத் தமது மூன்று குழந்தைகளின் கல்விப் பிரச்சனை என்றே நான் நினைக்கிறேன்.
சொல்பவர்:-காந்திஜியுடைய கடைசி மகனான தேவதாஸ் காந்தி தாம் தென்னாப்பிரிக்காவில் பள்ளிக்கூடங்களும் பாடத்திட்டமும் இல்லாமல் வளர்க்கப்பட்டதை நினைவுகூர்கிறார்.
தேவதாஸ் காந்தி:-எங்கள் தந்தையின் கருத்துப்படி பொதுவாக மக்கள் நினைக்கும் கல்வி, கல்வியே அல்ல. ஆம், நீண்ட காலமாகப் பள்ளிப் படிப்பும் இல்லாமல் முறையாக வீட்டுப் படிப்பும் பெறாமல் இருக்கும் எங்களுக்கு எங்கள் தந்தையோடு பணிபுரிபவர்களில் சிலர் வீட்டுக்கு வந்து குழந்தைகளான எங்களிடத்தில் அக்கறை கொண்டு புத்தகங்களைப் படித்துக்காட்டுவார்கள். கணக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். இம்மாதிரி சில மாதங்கள் நடக்கும், திடீரென்று தடைபடும். ஏனெனில் பெரியவர்கள் அனைவரும் சிறைக்குப் போய்விடுவார்கள்.
சொல்பவர்:-காந்திஜியைத் தவிர எல்லோரும் ஒரு சந்தர்ப்பத்தில் சிறையில் இருந்தனர்.
தேவதாஸ் காந்தி:-எங்களைப் பார்த்துக்கொள்வதற்காக விடப்பட்ட ஒரே மனிதர் என்னுடைய தந்தைதான். அவர் அதுவரைக்கும் தாமாகவே முன்வந்து சிறைக்குச் செல்லவில்லை. அல்லது தம்மைச் சிறையில் அடைக்கும்படித் தூண்டக்கூடிய பெரிய குற்றம் எதுவும் செய்திருக்கவில்லை. எங்கள் தாயாரும் சிறைக்குச் சென்றுவிட்டார். நாங்களும் இன்னும் ஓரிருவரும் எவ்வளவு சங்கடப்பட்டோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. என்ன நடக்கப்போகிறதென்று எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் எங்கள் தந்தை முன்வந்து எங்களையெல்லாம் எப்படிப் பார்த்துக்கொண்டார் என்பது இலேசாக நினைவிருக்கிறது.
திருமதி போலக்:-நாங்கள் ஜோஹான்ஸ்பர்க்கில் இருந்த பொழுது நான் அந்த மூன்று குழந்தைகளுக்கும் எளிய கல்வியோ, பாடங்களோ புகட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.அவற்றள் இசையும் ஒன்று. குழந்தைகள் நன்றாகவே கிரகித்துக்கொண்டார்கள். ஆனால் நான் போனிக்ஸை விட்டுச் செல்லும் பொழுது பெரிய பையனுக்குக் கல்வி கற்பிக்க சரியான முறை எதுவும் இருக்கவில்லை. அவன் அதுபற்றி வருந்தினான். அவனது தாயும் கூட வருந்தினாள். தமக்கு வேண்டிய பொருட்கள் பற்றி திருமதி காந்தி தம் கணவரோடு சண்டை செய்ய அதிகம் விரும்பியதில்லை என்றே நான் சொல்வேன். அவள் அடிக்கடி என்னிடம் வந்து நீங்கள் பாபுவிடம் கேளுங்கள்.பாபு உங்களுக்குக் கொடுப்பார், நீங்கள் பாபுவிடம் கேளுங்கள்என்று சொல்லுவாள். பாபு என்னும் சொல் தந்தையை குறிப்பது. அந்த உறவு கொண்டாடி நான் மிஸ்டர் காந்திஜியிடம் வாதாடிப் பல பொருட்களைப் பெற்றிருக்கிறேன்.சின்னப் பையனுக்குச் செருப்பு,காலுறை, பொருத்தமான கால்சட்டை என்று கேட்டுப் பெற்றுள்ளேன். எனவே திருமதி காந்தி நான் கூறுவதை ஏற்றுக்கொண்டாள். இருப்பினும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் அவள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பியதை அவளிடமிருந்து பறித்துக்கொண்டதேயாகும்.
சொல்பவர்:-ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இந்தக் குடும்பத்து உறவு சீரடைவது போலவே தோன்றியது. காந்தியை அறிந்து, அவரைக் கூர்ந்து கவனித்தவர்கள் இந்தப் படைப்புக்களில் காந்திஜியினுடைய மனைவி முக்கியமான இடத்தை அடையப்போகிறாள் என்று கருதினர். வேறு சிலர் அவரது செல்வாக்கு உயரும் என்று மதிப்பிட்டனர். இருவரது வாழ்க்கையின் கடைசி மாதங்களும் ஆகாகான் மாளிகையில் சிறைவாசமாகக் கழிந்தன. ஹோரெஸ் அலெக்ஸாண்டர் என்னும் ஆங்கிலேயர் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது காந்திஜி அவ்வளவு உற்சாகமாக இல்லை.
ஹோரெஸ் அலெக்ஸாண்டர்:-1942-44இல் சிறையில் வாழ்ந்த காலத்தில் அவர் மிகக் கவலையில் ஆழ்ந்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். அவரைக் கைது செய்த சில நாட்களுக்குள்ளாகவே அவரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த அவரது காரியதரிசி ஸ்ரீ மகாதேவ தேசாய் தீடீரென்று இறந்ததும் அதன்பின் அவரது மனைவி சுகவீனமடைந்து கடைசியில் இறந்ததும் காந்திஜியையே கடுமையான நோய்க்கு இலக்காக்கியதும் நினைவுகொள்ள வேண்டியவை. நான் நினைப்பது சரியென்றால் அதுதான் அவரை விடுதலை செய்ய வழிவகுத்தது என்று கூறுவேன். அந்த இரண்டு மூன்று ஆண்டுகள் அவர் மனநிம்மதியின்றியே கழித்தார். ஒவ்வொன்றுமே தவறுதலாகப் போவது போல் உணர்ந்தார். பிரிட்டிஷாரோடு நல்ல தொடர்பு கொள்ளவேண்டுமென்று அவர் கொண்டிருந்த விருப்பம் அடியோடு மறைந்துவிட்டாற்போல் தோற்றமளித்தது. இதிலிருந்து அவர் விடுபடுவதற்கு நீண்ட நாள் ஆயிற்று.
சொல்பவர்:-ஆகாகான் அரண்மனையிலிருந்து அந்தக் குழப்பமான காலத்திலும் ஒரு விந்தைக் கதை நடந்தது. திரு காந்தியும், திருமதி காந்தியும் டேபிள் டென்னிஸ் ஆடினார்களாம். அப்பொழுது டாக்டர் கில்டர் அங்கே இருந்திருக்கிறார்.
எச். டி. கில்டர்:-டேபிள் டென்னிஸ் கதை பற்றிய உண்மை இதுதான். நாங்கள் ஆகாகான் மாளிகையில் இருந்த பொழுது வெயில் காலத்தில் சில இளைஞர்கள் பாட்மின்டன் விளையாடுவார்கள். மழைக்காலத்தில் வேறு எதாவது விளையாட வேண்டியிருந்தது. பிங்பாங் அல்லது நீங்கள் சொல்வது போல் டேபிள் டென்னிஸ் வைத்துக்கொள்வது பற்றி நாங்கள் யோசித்தோம். டேபிள் டென்னிஸ் கிளப்பைத் தொடங்கி வைப்பதற்கு நாங்கள் காந்திஜியையும் பாஎன்று நாங்கள் அழைக்கும், அவரது மனைவியான கஸ்தூரிபாவையும் அழைத்திருந்தோம். இரண்டு பேரும் டேபிளுக்கு இரு பக்கங்களிலும் மட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றனர். பா முதலில் பந்தை அடித்தார். பந்து சரியாக காந்திஜியின் வழுக்கைத் தலைக்கு மேல் போய் விழுந்தது. அவர் சிரித்தார். ஒவ்வொருவருமே சிரித்தோம். இதுவே டேபிள் டென்னிஸ் கிளப்பின் கோலாகலத் தொடக்கம்.
சொல்பவர்:-அந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் வேறொரு நிகழ்ச்சிக்குத் திரும்புவோம். காந்திஜிக்கு அப்பொழுது எழுபத்து மூன்று வயதாகியிருந்தது. அவர் தம் நண்பர்களிடம் நாம் இன்னும் ஏழு வருடங்கள் சிறையில் அடைந்து கிடப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும்என்றார். திருமதி காந்தி நோய்வாய்ப்பட்ட பொழுது அவளைக் கவனித்துக்கொண்டவர் டாக்டர் சுசிலா நய்யார் ஆவார்.
சுசிலா நய்யார்:-பா சுவை மிகுந்த உணவை விரும்புபவர். உடம்பு சரியில்லாததனால் அவரால் நாவுக்குச் சுவையான உணவாகச் சாப்பிட முடியவில்லை. காந்திஜி வேறு அவரது உணவு விஷயத்தில் பத்தியம் போட்டுவிட்டார். எனவே சமயங்களில் தர்மசங்கடத்திற்கு ஆளானோம். பா குறிப்பி உணவைச் சாப்பிட விரும்பினால் பாபு கூடாது என்பார். சமயம் காந்திஜி ஏதோ ஒன்றைச் சாப்பிடத் தொடங்கிய சமயம் பா அது தனக்கும் வேண்டும் என்றார். உடனே பாபு தனக்கு அந்த உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால்பாவும் அந்த உணவு தனக்கும் வேண்டாம் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
சொல்பவர்:-பாவின் நிலை மோசமான பொழுது அவளுக்கு உதவி தேவைப்பட்டது. பலரும் முறை வைத்து அவளைக் கவனித்துக்கொண்டனர். சாவு வந்த பொழுது காந்திஜி அவளைத் தாங்கிக்கொண்டார்.
சுசிலா நய்யார்:-காந்திஜிக்கு இவ்விஷயத்தில் திருப்தி. ஏனெனில் அவர் அவள் மேல் அளவில்லாப் பற்று வைத்திருந்தார். அவளிடம் தாம் கொண்டிருந்த அன்பைப் பற்றி அவரே அடிக்கடி சொல்வது வழக்கம். நான் போன பிறகு வாழ்க்கை எப்படி இருக்குமோ தெரியாதாகையால் அவள் எனக்குப் பின் போவதைவிட எனக்கு முன் போவதையே விரும்புகிறேன்என்று சொல்லுவார். அவள் அவருக்கு முன் போனது மட்டுமல்லாமல் நிதரிசனமாக அவரது கைகளிலேயே இறந்தாள்.
சொல்பவர்:-இரவு முழுவதும் சடலத்திற்குப் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பிரார்த்தனை செய்துகொண்டும் பகவத் கீதையிலிருந்து சுலோகங்களைச் சொல்லிக்கொண்டும் இருந்தார்கள். அரண்மனைக் காம்பவுண்டுக்குள்ளேயே தகனக்கிரியை நடைபெற்றது.
சுசிலா நய்யார்:-அவர் தகனக்கிரியை முடியும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்தார். சடலத்தில் தண்ணீர் மிகுந்திருந்தமையால் தகனம் நடப்பதற்கு வெகு நேரம் ஆகியது. பலமுறை அவரிடம் நீங்கள் எழுந்து போகக்கூடாதா பாபு?” என்று கேட்டபொழுது எங்களுக்கிடையில் அறுபது வருஷத் தொடர்பு இருந்திருக்கிறது. ஒருசில மணிநேரம் நான் அதிகமாக உட்கார்ந்திருக்கக்கூடாதா?” என்று கேட்டார். மகாதேதேசாயின் மரணம் ஜம்னாலால் பஜாஜியின் மரணம், மகன்லால் காந்தியின் மரணம், ஆகியவை அவரை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. இந்த மூன்று பேருடைய மரணமும் அவரவர் வழியில் ஈடுசெய்ய முடியாத நஷ்டமாகும். ஆனால் பாவினுடைய மரணம் இவர்களைக் காட்டிலும் என்னுள் ஒரு சூன்யத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தச் சூன்யம் எதனாலும் ஈடு செய்ய முடியாத ஒன்றுஎன்று குறிப்பிட்டார் காந்திஜி. பிள்ளைப் பிராயத்திலிருந்தே இருவரும் ஒன்றாகவே இருந்தவர்களல்லவா.
சொல்பவர்:-நாம் காந்திஜியின் அந்தரங்க வாழ்க்கையிலிருந்து ஓர் ஏட்டைத் திருப்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவருக்கு அந்தரங்க வாழ்க்கை என்று ஒன்று இருந்ததா? இருந்திருக்க முடியுமா? என்பதே கேள்வி. மேல்நாட்டார்களுக்கு உதாரணமாக வெரியர் எல்வினுக்கும், ஹோரெ அலெக்ஸாண்டருக்கும் அப்படி இருந்ததாகவே தோன்றவில்லை.
வெரியர் எல்வின்:-காந்திஜியுடன் எப்பொழுதுமே ஒரு பெருங்கூட்டம் இருக்கும். அவரோடு தனித்து உரையாடுவதும் கடினமாய் இருக்கும். என்றாலும் நான் அவரோடு பல விஷயங்களைப் பற்றிப் பலமுறை விவாதித்திருக்கிறேன். அவரைத் தனிமையில் பார்ப்பது எவருக்குமே எளிதல்ல. அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. ஏனெனில் அவரோடு யார் இருந்தாலும் அவரோடு தம்மை முழுதும் ஈடுபடுத்திக்கொள்ளும் அசாதாரணமான சக்தி அவரிடம் இருந்தது. அவர் அத்தனை பேருக்கும் இடையில் தன் முழு கவனத்தையும், ஒன்றிய சிந்தனையையும் உங்கள் பால் திருப்பிவிடுவார். ஆனால் அவரோடு பேசுவது நமக்குத்தான் கஷ்டமாக இருக்கும்.
ஹோரெஸ் அலெக்ஸாண்டர்:-அவர் தம் அந்தரங்க வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் ஒன்றாகவே இருந்திருக்கிறார் என்பதே என் எண்ணம். அவருக்கு அந்தரங்க வாழ்க்கையென்று ஒன்று இல்லையென்று கூடச் சொல்லிவிடலாம். அவரை எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம். ஒரு சமயம் அவர் இலண்டனில் தங்கியிருந்த பொழுது வட்ட மேஜை மகாநாடு நடக்கையில் நான் அவருக்குப் பல வகையிலும் என்னால் இயன்ற அளவு உதவி செய்ய முயன்றிருக்கிறேன். அவர் நைட்ஸ் பிரிட்ஜில் ஒரு வீட்டில் தங்கிய ஒருநாள் அவர் தம் அறையில் இருந்த பொழுது நான் எனது அறையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். அவரைச் சூழ்ந்திருப்பவர்கள் அனைவருமே வெளியில் போகும்படியான நிலை ஏற்பட்டது. அவர் எதையோ பார்ப்பது போலச் சுற்றுமுற்றும் பார்த்தார். உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?நான் கொண்டுவந்து தருகிறேன்என்றேன். இல்லை, என்ன அதிசயம்அறையில் யாரையுமே காணோமே என்று பார்த்தேன். “னக்குஇப்படித் தனிமை கிட்டுவது என்பது வெகு அபூர்வம்என்றார்அவர். ஆம்! அவருக்கு முற்றிலும் அந்தரங்கம் என்று ஒருவாழ்க்கை இருந்ததேயில்லை என்று துணிந்து கூறலாம்.
சொல்பவர்:-சொல்லப்போனால் அவரது உறவினர்களுமே கூட லட்சக்கணக்கான மக்களுக்கிடையில்தான் அவரை அணுக முடியும். ஆசிரமத்திலும் கூட அவர்கள் அவரைத் தனித்து சந்திக்க முடிந்ததில்லை. மற்றவர்களோடு சேர்ந்துதான் காண முடிந்தது. தேவதாஸ் காந்தி தென் ஆப்பிரிக்காவில் தம் குழந்தைப் பருவத்தைக் கழித்த காலத்திலேயே இந்த நிலையைப் புரிந்துகொண்டார். பேத்தி சுமித்ரா காந்தியோ இதை இன்னும் பின்னால்தான் தெரிந்துகொண்டார்.
தேவதாஸ் காந்தி:-அவரைப் பொறுத்தவரை எங்கள் எல்லோரிடத்திலும் ஒரே விதமாக இருந்ததுதான் எங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்புடைய அம்சமாக இருந்தது. தம்முடைய குழந்தைகள் தமக்கு அதிக முக்கியமானவர்கள் என்று யாருக்கும் எவ்விதமான அபிப்ராயமும் தோன்றக்கூடாது என்னும் விஷயத்தில் அவர் வெகு எச்சரிக்கையாக இருந்தார்.
சுமித்ரா காந்தி:-என்னுடைய தாத்தா எனக்கு மட்டும் தாத்தா என்று நான் உணர்ந்ததில்லை. அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கெல்லாம் அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி அவர் தாத்தாவாகத்தான் இருந்துவந்தார். நாங்கள் பொறுப்பில்லாத குழந்தைகள். வேலை செய்யவேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவருக்கு விசிறிக்கொண்டிருப்போம். ஏனெனில் கோடை காலத்தில் மிகவும் உஷ்ணமாக இருக்கும். அதோடு அவர் தம்மைச் சுற்றி ஈரமாயிருப்பதை விரும்புவதில்லை. ஆசிரமத்தை வெகு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் நாங்கள் வைத்துக்கொண்டாலும் சில சமயங்களில் ஈக்களும் கொசுக்களும் அங்கே வந்துவிடுவதுண்டு. நாங்கள் உட்கார்ந்து விசிறுவோம். நான் அடிக்கடி விசிறுவது வழக்கம். என் தாயார் அவரது கால்களைச் சுத்தமான பசுநெய் தேய்த்து மாலை நேரங்களிலோ இரவு நேரங்களிலோ உருவிப் பிடித்துவிடுவதுண்டு. சில சமயங்களில் என் பாட்டி பிடித்துவிடுவாள். அவர் பதினைந்து இருபது நிமிடங்கள் பிற்பகலில் குட்டித்தூக்கம் போடுவார். அவர் என்னையும் தம் அருகில் படுக்க வைத்துக்கொண்டு தம் கைளினால் தட்டித் தூங்க வைக்க முயல்வார். தம் உள்ளங்கையை எனது கண்களின் மீது வைத்து என்னைத் தூங்கச்சொல்வதுண்டு. அப்படியே அமைதியாகத் தாமும் தூங்கிப்போவார். அவரது கையை மெதுவாக விலக்கிக் கைகளின் இடுக்கு வழியாக நழுவி நான் என் சகோதரர்களுடன் ஓடிவிடுவேன். ஏனெனில் பகலில் தூங்குவது எனக்குக் கட்டோடு பிடிக்காது. நீ ரொம்பப் பொல்லாதவள் என்னோடு தூங்காமல் வெளியே ஓடிவிட்டாயே. பகல் வேளைகளில் வெயிலிலும், மண்ணிலும், நீ அலையக் கூடாது.என்பார். இப்படியாக அவர், கண்களைப் பற்றியும், என் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலை கொண்டிருந்தார். சொல்லப்போனால் எல்லோரிடமுமே இப்படித்தான் இருந்தார். தம் பேரக்குழந்தை, சொந்தக் குழந்தையென்று வித்தியாசம் பாராட்டாமல் பிறர் குழந்தைகளிடம் கூட மிகவும் பரிவோடு நடந்துகொண்டார்.
சொல்பவர்:-அவர் எல்லோரிடமும் அதே பரிவைக் காட்டினார். திரு. நேரு, அவர் குஷ்டரோகிகளிடம் காட்டிய பரிவை நினைவுகூர்கிறார்.
ஜவஹர்லால் நேரு:-குஷ்டரோகியைப் பார்த்துவிட்டால் அவராகவே அவர்களை அணுகி சிகிச்சை அளிப்பார். தமது சொந்த ஆசிரமத்தில் இருந்த நோயாளிகளைத் தாமே நேரில் சென்று கவனிப்பதைத் தமது அன்றாடப் பணியாகக் கொண்டிருந்தார்.
சொல்பவர்:-எல்லோரையும் அவர் அக்கறையோடு கவனிப்பார். ஆசிரமத்தில் கூட எப்பொழுதும் மக்கள் அவரைச் சூழ்ந்திருப்பார்கள்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-ஆம்! எப்பொழுதுமே மக்களால் அவர் சூழப்பட்டிருப்பார். பிறர்மேல் அக்கறை காட்டக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரிடமிருந்து மிக விரைவிலேயே நான் கற்றுக்கொண்டேன். அவர் எல்லோருக்கும் எளியவராக, எவரும் எந்த நேரத்திலும் அணுகக்கூடியவராக இருந்தார். மிகமிகச் சாதாரணமான மனிதன் மிகமிகச் சாதாரணமான வேண்டுகோளோடு வரும்போது அவன் கருத்துக்குச் செவிசாய்ப்பதையும் அவனோடு உரையாடுவதையும் நான் வீணான கால விரயம் என்று மெய்யாகவே எண்ணுவதுண்டு. ஆனால் காந்திஜி ஒருமித்த மனத்துடன் அவன் கருத்தை ஊன்றிக் கேட்பார். மக்கள் அவர்பால் ஈர்க்கப்படுவதற்கு இது ஒரு பெருங்காரணம் ஆகும்.
சொல்பவர்:-இது ராஜகுமாரி அமிர்தகௌர் காந்திஜியின் காரியதரிசியாக வேலை செய்துகொண்டிருந்த பொழுது நடந்தது.சபர்மதி ஆசிரமத்தில் உணவுவிடுதியில் ரெய்ஹானா தயாப்ஜி விருந்தாளியாக இருந்தபோது முதன் முதலாக காந்தியடிகளில் இந்தக் குணநலனை அனுபவபூர்வமாக உணர்ந்தார்.
ரெய்ஹானாதயாப்ஜி:-பாபு கதவிற்கு மிக அருகில் இருந்தார்.அவரது இடது பக்கத்தில் ஆச்சார்ய கிருபளானி இருந்தார்.அவர் என்னைத் தம் வலப்பக்கத்தில் உட்காரச் சொன்னார். அவர் வெகு சுவாரஸ்யமாக ஆச்சார்ய கிருபளானியோடு பேசிக்கொண்டிருந்தார். விரும்பக்கூடிய பொருள் ஏதோ ஒன்று வந்தது. அது என்ன என்பது எனக்கு மறந்துவிட்டது. அது கவர்ச்சியாக இருக்கவே நான் அதை எடுக்கப்போனேன். பாபுதலையைத் திருப்பாமலே “ரெய்ஹானா, உங்கள் ஸ்தானத்தில் நான் இருந்தால் எடுக்கமாட்டேன். அது இலேசில் ஜிரணமாகாத பொருள். உங்களுக்கு ஜீரணசக்தி குறைவு என்பது எனக்குத் தெரியும். எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்என்றார். இருந்தாலும் பாபூ,நான் கொஞ்சம் சுவைத்துப் பார்க்க விரும்புகிறேன்என்றேன். ஆனால் அதற்குள்ளாகவே அவர் பரிமாறுகின்றவர்களிடம் ரெய்ஹானாவுக்கு வேண்டாம் ''கிகேரி''கொடு என்று சொல்லிவிட்டார். கிகேரி என்பது அரிசியில் தயாரித்த ஒரு வகைச் சாதம். நான் கிகேரியைத்தான் சாப்பிட வேண்டி வந்தது. பிறகு வேறு ஏதோ வந்தது. அதுவும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. வேண்டாம் இதுவும் உனக்கு வேண்டாம்என்று சொல்லிவிட்டார் பாபு. இது அவருக்குக் கூடாது. அவருக்கு இருமல் இருக்கிறது. இது அவருக்கு வேண்டாம். அவருக்கு ஜீரணசக்தி ஒழுங்காக இல்லை. அரிசிச்சோறு வேண்டாம் அவருக்கு. அவர் ஆஸ்துமாவினால் கஷ்டப்படுகிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்! யார் யார் எங்கே தங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதையெல்லாம் எப்படி பாபுநினைவு வைத்திருக்கிறார்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-அபூர்வமான ஞாபகசக்தி!ஞாபகசக்தியை ஒருவர் எப்படிப் பேண வேண்டும் என்பது பற்றியும் அதற்குள்ள வழி பற்றியும் எனக்குப் போதித்தார். ஒருநாள் அவர் என்னிடம் மூன்று வேலைகளைச் செய்யச் சொன்னார். நான் இரண்டு வேலைகளைச் செய்தேன். மூன்றாவதை மறந்துவிட்டேன். மறுநாள் நான் அவரிடம் சென்று நீங்கள் என்னிடம் இதைச் செய்யச் சொன்னீர்கள்.செய்துவிட்டேன். அதைச் செய்யச் சொன்னீர்கள்; இதோ அந்தக் காகிதங்கள்!என்றேன் நான். இன்னொன்றையும் உங்களைச் செய்யச் சொல்லவில்லையா?” என்று கேட்டார். நான் அவரிடம் அடடா மறந்துவிட்டேனேஎன்றேன். சரி இப்பொழுது நீங்கள் மறந்துவிட்டீர்கள், இனிமேல் மறவாமல் இருப்பது எப்படி என்று என்னிடமிருந்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள அதிகம் தேவையில்லாத விஷயங்களுக்கு ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்கு உங்கள் ஞாபகசக்திக்கு அதிக வேலை கொடுக்கத் தேவையில்லை. ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு மட்டுமே உங்கள் நினைவுக்கிடங்கில் இடம் அளிக்கவேண்டும். அப்படிச் செய்தால் உங்கள் ஞாபகசக்தியைப் பேணி வளர்க்க முடியும்என்றார். அவர் சொல்வது முற்றிலும் சரி என்று நான் நினைக்கிறேன். கடைசி இரண்டு ஆண்டுகளில் அவருடைய ஞாபகசக்தி முன்போல் அவ்வளவு கூர்மையாக இல்லை என்பது என் கருத்து. என்றாலும் பழையபடி இல்லையே தவிர இறுதிவரை நன்றாகவேதான் இருந்தது.
பத்மஜா நாயுடு:-நான் மிகவும் உடல்நலம் இல்லாதிருந்த சமயம் அவர் என்னை ஹைதராபாத்தில் சில வேலைகள் செய்யச்சொல்லி அனுப்பியிருந்தார். அப்பொழுது அவர் என்னுடைய உடல்நலத்தில் அக்கறை கொண்டு தினந்தோறும் இரு கடிதம் அனுப்புவார். அதில் என் உடம்பு எப்படி இருக்கிறது என்றும் நான் அதிகமாக வேலை செய்யக்கூடாது என்றும் எழுதுவார். பாபுவுக்கு தினந்தோறும் காதல் கடிதம் எழுதுவதற்கு நேரம் கிடைக்கிறது. அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லையா?” என்று ஒருநாள் என் சகோதரி வியப்போடு என்னிடம் கேட்டாள். அதனால் நான் அவருக்கு எனது சகோதரி நீங்கள் தினந்தோறும் காதல் கடிதம் எழுதுவதைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பதை அவள் அறிய விரும்புகிறாள்என்று எழுதினேன். அதற்கு அவர், “அவள் இதுவரை காதலிக்கவில்லை என்பது தெளிவாகிறது. சொல்லிக்கொடு, காதலித்தால் அவளுக்கு எப்பொழுதும் காதல் கடிதம் எழுதவேண்டிய அளவு நேரம் கிடைக்கும்என்று பதில் எழுதியிருந்தார்.
சொல்பவர்:-மிஸ். நாயுடு வேண்டியவளாதலால் காந்திஜி வேடிக்கை செய்வதுண்டு. மானிடப் பண்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்போடு பழகுவார். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார்இதை வெகு தெளிவாக உணர்ந்துள்ளார்.
இராஜகோபாலாச்சாரியார்:-அவர் மிகவும் நட்புரிமை கொண்டாடுவார். மனிதத் துணையை மிகவும் விரும்புபவர். சிரிப்பில் பற்றுள்ளவர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். மனிதர்கள்விரும்பும் ஒரு மனிதராவார். சிரிக்கின்ற மனிதர்களைக் கண்டால் அவருக்கு நிரம்பப் பிடிக்கும். அவர் குழந்தைகளை விரும்பினார். பெண்களை விரும்பினார். நல்ல சகவாசத்தை விரும்பினார்.
சொல்பவர்:-தனிமையாக இருந்து தியானம் செய்வதற்காக இந்த மனிதர் பிறக்கவில்லை. மௌரிஸ் பிரைட்மேன் அவருடைய ஆரம்ப அடிப்படைத் தத்துவம் எது என்று ஒருதடவை அவரைக் கேட்டார்.
மௌரிஸ் பிரைட்மேன்:-அவர் வெகு எளிதாகக் கூறிவிட்டார். நான் ஆண்டவனைக் காண விரும்புகிறேன். நான் கடவுளைக் காண விரும்புவதால் மற்ற மக்களோடு கூடத்தான் கடவுளைக் காணமுடியும் என்று நம்புகிறேன். கடவுளைத் தனியாகக் காணமுடியும் என்று நான் நம்பவில்லை. அப்படி நம்பியிருந்தால் நான் கடவுளைக் காண்பதற்காக ஹிமாலயத்திலுள்ள ஒரு குகைக்கு ஓடியிருப்பேன். ஆனால் கடவுளைத் தனியாக யாரும் காணமுடியாது என்று நம்புவதால் நான் மக்களோடு பணிபுரிய வேண்டும்.அவர்களை என்னோடு அழைத்துச் செல்ல வேண்டும். நான் மட்டும் தனிமையில் அவரிடம் செல்ல முடியாது. இதுவே நான் அணுகும் ஒவ்வொரு பொருளின் அடிப்படைத் தத்துவமாகும்.”என்று சொன்னார். இது உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நான் எந்த அடிப்படையில் ஆரம்பிக்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும்என்றும் சொன்னார்.
சொல்பவர்:-மேலும் அவர் எப்படி முடிக்கிறார்? பரம்பரை வழக்கப்படி மலைக்குகைக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தா? இல்லை. மக்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு மக்களுக்குப் பணி புரிந்துகொண்டு. பெருங்காரியத்தாலும், செயலாலும் சமாதானத்தை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட பணி பலர் நினைப்பது போல் அவரது சாதனைகளுக்கெல்லாம் சிகரம் போல் இருக்கிறது. ஒரு விதத்தில் அவர் எடுத்துக்கொண்ட கடைசி முயற்சி தனி முயற்சியாகவும் தோன்றியது. வெகு தூரத்தில் கிழக்கு வங்காளத்தில் பாதிக்கப்பெற்ற ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு தன்னந்தனியாக வயது வந்த அந்த மனிதர் செருப்பு அணிவது ஹிம்சையின் அடையாளம் என்று கருதி வெறுங்காலுடன் நடந்தார். அவர் தம் பெரும்பாலான சகாக்களை அனுப்பிவிட்டார். சுதிர் கோஷ் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார்.
சுதிர் கோஷ்:-அவர் நடக்கும்போதெல்லாம் தமது கைகளை யாருடைய தோள்மீதாவது போட்டுக்கொண்டு நடப்பார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. நான் அவரோடு இருந்த அந்த மூன்று நாட்களிலும் அவர் தமது கைகளை எனது தோளின் மீது போட்டுக்கொண்டு என்னோடு நடந்தார். ஒருநாள் காலை நடக்கும்போது முழுவதும் பேசிக்கொண்டே வந்தார். அது உரத்த குரலில் முணுமுணுப்பது போல இருந்தது. ஏனெனில் அவர் உடம்பு மிகவும் பலவீனமாக இருந்தது. அந்த மெல்லிய குரலில் அவர் இந்தியாவின் நிலையை, இந்திய அரசியல் கட்சிகளை, இந்திய சுதந்திரத்திற்காக முப்பது, முதல் நாற்பது ஆண்டுகள் அவர் நிகழ்த்திய போராட்டங்களை, உண்மையில் தாமே கர்த்தாவாக இருந்து வளர்த்த காங்கிரஸ் ஸ்தாபனத்தை, தாம் பயிற்சி கொடுத்து உருவாக்கிய பெரிய காங்கிரஸ் தலைவர்களை, அவர்கள் செய்துவரும் செயல்களை ஒன்று விடாமல் வீண்டு உரைத்தார். தவிர்க்க முடியாத நிலை வரப்போவதையும் அவரால் ஊகித்து உணர முடிந்தது. வாழ்நாள் முழுவதும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன் பலன் முடிவில் துண்டாடப்படாத இந்திய விடுதலையாக விடியப்போவதில்லை என்பதை அறிந்த பொழுது அவருடைய மனத்தை வேதனைச் சுமை எப்படி அழுத்தியிருக்கும் என்பதை உங்களால் நன்கு உணர முடியும். முழு இந்திய நிலையைப் படம்பிடித்துக் காட்டி அவரது நண்பர்களும் கூட்டாளிகளும் என்னென்ன வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றனர் என்றும் விளக்கிய பிறகு அவர் நீண்ட பெருமூச்சு விட்டு, “நீங்கள் இதன் வெறுமையை உணரவில்லையா?” என்று கேட்டார்.அவருடைய உருக்கமான குரல், உண்மையில் இதயத்தைப் பிளப்பதாக இருந்தது.
சொல்பவர்:-ஆனால் அவர் அதற்காகத் தளர்ந்து சோர்ந்துவிடவில்லை. அதுவே அவரது சிறப்பியல்பு. சூழ்நிலையைச் சமாளித்தார். பிரிவினையினால் தீர்வு காணாமல் விடப்பட்ட பூசல்களைச் சமாதான முறையிலேயே அணுகினார்.
சொல்பவர்:-கல்கத்தாவில் கோரமாகக் கலவரம் நடந்துகொண்டிருந்த பொழுது காந்திஜி வேண்டுமென்றே ஒரு முஸல்மான் வீட்டில் தங்கினார். அந்த வீட்டைக் கலகக்காரர்கள் தாக்கினார்கள். பேராசிரியர் போஸ் அப்பொழுதுதான் அவ்விடத்தை விட்டு வெளியில் சென்றிருந்தார்.
நிர்மல் போஸ்:-நான் திரும்பி வந்த பொழுது எங்களைச் சுற்றி ஒரே சேதமடைந்த பொருட்களாகக் கிடப்பதைக் கண்டேன். கண்ணாடிக் கதவுகள் எல்லாம் உடைந்திருந்தன. மேஜை நாற்காலிகள் கைகால் உடைந்து யாவும் துண்டு துண்டாக இருந்தன. நான் காந்திஜியிடம் சென்ற பொழுது அவர் பெரிதாகச் சிரித்துவிட்டு, “உங்கள் வங்காளி மக்கள் மிகச் சாதுவானவர்கள்?” என்றார். பாபு! என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?” என்று நான் கேட்டேன். “”அவர்கள் என்னைக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர்களுடைய நல்ல மனத்தைப் பாருங்கள்! எல்லா மேஜை நாற்காலிகளைத்தான் உடைத்தனர். கண்ணாடிக் கதவுகளைத்தான் நொறுக்கினார்கள். ஆனால் அவற்றில் ஒன்றுகூட எனக்குச் சொந்தமில்லை. வேறு யாருக்கோ சொந்தமானது என்பது அவர்களுக்குத் தெரியாதுஎன்றார். அவர் அதை எடுத்துக்கொண்ட விதம் இது.
ஜவஹர்லால் நேரு:-பற்றுக்கோடாகக் கொண்ட அடிப்படையான அவரது நம்பிக்கையே அவரை இவ்வாறு இட்டுச்சென்றது என்று நான் எண்ணுகிறேன். நம்மில் பலர் அவர் அளவு நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லர். அச்சமின்மை. ஆம்! அச்சமின்மைதான் அவரது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று நான் சொல்லுவேன். பலமற்ற அந்தச் சிறு எலும்புக்கூட்டில் பயமின்மை உள்ளத்தாலும் உடலாலும் உறுதியோடு நிலை பெற்றிருந்தது. அவரிடம் காணப்பட்ட அந்த அச்சமின்மை பிறரிடமும் பரவக்கூடிய வகையில் பிரமிக்கதக்கதாக அமைந்திருந்தது. அவர்களையும் அச்சக்குறைவானவர்களாகச் செய்தது.
சொல்பவர்:-அச்சமின்மை என்று நேரு சொல்வார். கடவுள் என்று சொல்லியிருப்பார் காந்திஜி. 1932இல் இங்கிலாந்திலிருந்து அவர் திரும்புகையில் ஸ்விட்சர்லாந்தில் தங்கினார். ஒருநாள் அதிகாலையில் அவர் பியரி ஸெரிஸோல் அவர்களுடனும் மூரியல் லெஸ்டர் அவர்களுடனும் மலைப்பகுதியில் நடந்துகொண்டிருந்தார்.
மூரியல் லெஸ்டர்:-அவர் ஒருநாளும் உணர்ச்சிகளுக்கு அடிமையாவதில்லை. அவர் தம் செய்கையில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடாதவர். அவரைப் போன்றவர்களைக் காண்பது அரிது. ஒரு பொழுதும் அதிர்ந்து பேசமாட்டார். சில சமயங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரி குரலில் பேசுவார். ஆனாலும் நடித்தும் காட்டுகிறவர் போல் சொல்வதைப் பதியும்படிச் சொல்வார். அவர் அப்படிச் செய்ததை நான் அப்பொழுதுதான் முதன் முதலாகக் கண்டேன். என் ஆற்றல் எதுவும் இல்லை. எல்லாம் அவன் ஆற்றல். அவன் அருள் இல்லையெனில் எனக்கு ஏது ஏற்றம்? என்னைப் பாருங்கள்.” என்று கூறி எங்களுக்கு அருகிலேயே அவர் வழியில் நின்றார். கீழே பார்த்தார். கைகளை நீட்டினார். தமது சின்னஞ்சிறு உடம்பைப் பார்த்துக்கொண்டார். நாங்கள் அந்தக் குட்டையான சின்ன உடம்பைப் பார்த்தோம். என்னைப் பாருங்கள். எனக்கென்று ஏதும் ஆற்றல் இல்லை. இருந்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிறு பையன்கூட ஒரு தட்டுத் தட்டி என்னைத் தள்ளிவிட முடியும். எனக்குப் பலமே கடவுள்தான். இந்த உலகமே எனக்கு எதிரானாலும், இவ்வுண்மையை மறுத்தாலும் அதுவே உண்மையென்பது எனக்குத் தெரியும். அவர் பலத்தில் நான் தனித்து நிற்பேன்என்று கூறினார்.
சொல்பவர்:-கடைசியாக அவரது வாய்மொழியில் சொந்தச் சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பேச்சு இதோ.
காந்திஜி:-என்னைச் சுற்றிலும் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கையில், எப்பொழுதும் மடிந்துகொண்டே இருக்கையில், மாற்றம் ஏதும் இல்லாத ஒன்று, இந்த மாற்றங்களில் எல்லாம் ஊடுருவிப் பாய்ந்திருப்பதை நான் இலேசாக மங்கலாகக் காண்கிறேன். அது எல்லாவற்றிலும் ஊடுருவிச் சென்று உற்பத்தி செய்கிறது. கரைகிறது, மீண்டும் உற்பத்தி செய்கிறது.
(முதல் பகுதி நிறைவு)


காந்திஜி ஒரு சொற்சித்திரம் – தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – இந்தியாவின் வெற்றி - 1

$
0
0
The Forgotten Gandhi by V-IMAgine-L / Deviant Art
காந்திஜி ஒரு சொற்சித்திரம் – ஒலிச்சித்திரம் - 3
சொல்பவர்:-இந்திய விடுதலையென்பது பெரும் பொருள் கொண்ட சொற்றொடராக காந்திஜிக்குக்கூடத் தோன்றவில்லை. சோதனைகள் நிறைந்த அவரது வாழ்கையில் உண்மையான வெற்றியடைந்த வினாடிகளை அறிந்துகொள்வது கடினம். 1947ஆகஸ்டில் பெருங்கூட்டம் சுதந்திரத்தைக் கொண்டாடிய பொழுது, காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். அவரது முடிவு காலம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையிலே வங்காள கிராமங்களில் வெறும் காலுடன் ஒரே ஒரு வங்காள நண்பருடன் நடந்தார். அப்பொழுது, கடந்த முப்பது ஆண்டுகள் இந்தியாவில் நடைபெற்ற காரியங்கள் பற்றித் திரும்பவும் சிந்தித்துப் பார்த்தார்.
சுதிர் கோஷ்:-கடைசியில் அவர் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு எல்லாவற்றிலும் ஒரு தனிமையை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்டார்.
சொல்பவர்:-மற்றவர்கள் எங்கே சாதனையைப் பார்த்தார்களோ, அங்கே அவர் அதன் தொடக்கத்தைக் கண்டார்.
மீரா பென்:-மக்கள் பாபுவோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரண்டு மூன்று முறைகள் இப்பொழுதுதான் என்னால் அஹிம்சையைப் பற்றிய சோதனையைத் தொடங்க முடிந்திருக்கிறதுஎன்று பாபு சொல்லக் கேட்டிருக்கிறேன். தமக்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்பு சக்திகளை அவர் குறைவாக மதிப்பிடவில்லை. வைஸ்ராய்க்கு எதிராக வைக்கவேண்டிய குண்டு அவரையும் குறிபார்த்திருக்கலாம் அல்லவா?
ரெஜினால்டு ரெயினால்டு:-காந்திஜி இராட்டையில் நூல் நூற்றவாறே நிமிர்ந்து பார்த்து அவர்கள் இப்பொழுது இர்வினை குறிவைத்துக் குண்டுகளை எறிந்தார்கள். அடுத்து என் முறையாகவும் இருக்கலாம் அல்லவா?” என்றார். அவர் அப்பொழுது மகிழ்ச்சியோடு தோற்றமளித்தபடியால் வேடிக்கை செய்கிறார் என்று நான் நினைத்தேன். கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்கள் அதை நம்பவில்லை. அதிர்ந்து திகைத்துப் போய்க் காணப்பட்டார்கள்.
சொல்பவர்:-தம்மை வென்ற அந்த மகிழ்ச்சி, அவர் மற்றவர்களை வெற்றி கொள்ளும் பொழுது மறைந்துவிடுகின்றது. அவரால் சிலவற்றில் வெற்றி காண முடியவில்லை. உதாரணமாக பாகிஸ்தான் வேண்டுமென்று கேட்கின்ற முஸ்லிம்களை வெற்றி காண முடியவில்லை. குறை கூறுபவர்கள் கடைசிவரை குறை சொல்லிக்கொண்டேதானிருந்தார்கள். இருந்தாலும் அவர் தம்முடைய வேலையைத் தென்னாப்பிரிக்காவில் முடித்துவிட்டு 1915-இல் இந்தியாவிற்குத் திரும்பி வந்ததிலிருந்து 1981-இல் வைஸ்ராய் இர்வின் - காந்தி பேச்சுவார்த்தை நடத்தும் வரை உள்ள இடைவெளியில் காந்திஜி தமக்குத்தாமே ஒரு நிலையான ஸ்தானத்தை அமைத்துக்கொண்டார் என்பதும் அதிலிருந்து அவரை அசைக்க முடியவில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் அவருடைய போராட்டங்களில் ஆறு முறை கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் ஒரே ஒரு முறைதான் விசாரிக்கப்பட்டார். 1922-ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி அகமதாபாத்தில் ஆரம்பமான அந்த விசாரணை இந்தியாவில் பெரிய விசாரணைஎன்று சொல்லப்பட்டது. காந்திஜியுடைய புகழ் மங்குவது போல் தோற்றமளித்த காலம் அது. ஏனெனில் அவர் தமது ஒத்துழையாமை இயக்கத்தை முழுமையாக நிறுத்திவைத்துவிட்டார். காரணம் அதில் கலகமும் ஹிம்சையும் தலைகாட்டியதே ஆகும். அந்தக் கலகத்திற்கும் ஹிம்சைக்கும் காந்திஜியே பொறுப்பு என்று அவர் மீது உடனே குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி ப்ரூம்பீல்டும் பிறகு சர் ராபர்ட்ப்ரூம்பீல்டும் விசாரணையை நடத்தினார்கள்.
சர் ராபர்ட் ப்ரூம்பீல்டு:-அவர் ஒரு நீண்ட அறிக்கையைத் தயாரித்துக்கொண்டு அதை வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தம்முடன் கொண்டுவந்திருந்தார். அது அரசியல் பிரசாரமாக இருக்கவேண்டும் என்றும், பெரும்பாலும் குற்றச்சாட்டு சம்பந்தமாக இருக்காது என்றும் ஓரளவு நான் உறுதியாக நம்பினேன். இருந்தபோதிலும் அவர் வாசிப்பதில் தவறில்லை என்று எண்ணி அவரை வாசிக்க அனுமதித்தேன். இம்மாதிரி நான் அவரை வாசிக்க அனுமதித்த ஒரு காரணத்தால் அவர் என் மீது திருப்தி அடைந்தார் என்றே நான் கருதுகின்றேன். அது ஒரு நீண்ட அறிக்கை. அதைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறுமிடத்து அவர் அரசாங்கத்திற்குத் தாம் செய்த குறிப்பிடத்தக்க சேவைகளைப் பற்றியும் கூறினார். முடிவில் நடந்த நிகழ்ச்சிகள், தமது மனத்தை மாற்றிவிட்டன என்றாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டங்களை அமல் நடத்துவதில் இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டவில்லையென்றும், னால் அதற்குப் பணியக்கூடாது என்றும் கூறியிருந்தார். ஓரிடத்தில் நீதிபதியாக இருக்கும் நான் எனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூடத் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் நான் ராஜிநாமா செய்வேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். உண்மையில் அப்படி அவர் என்னிடம் கூறவில்லை. அகமதாபாத்தில் செஷன்ஸ் கோர்ட்டுக்கு வெளியில் இருந்த பெருங்கூட்டத்தில் கூறினார்.
சொல்பவர்:-அந்தப் பெருங்கூட்டத்திலிருந்தவர்கள் சண்டைக்குப்பிறகு இந்த அரசியல் கொடுமைகளுக்குக் காந்திஜி என்ன பரிகாரம் காண விரும்புகிறார் என்றும், கிலாபத் இயக்கம்,ரௌலட் சட்டம் போன்றவை பற்றி உறுதியான ஒத்துழையாமைவாதியான காந்திஜி என்ன கருதுகிறார் என்றும் தெரிந்துகொள்ளவே காத்திருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காந்திஜியுடைய தனிப்பட்ட வழிமுறைகள் சுலபமானதல்ல. அவரது வாழ்க்கை தொடர்ந்து சோதனையாகவே இருந்தது. அவரது கொள்கை எப்பொழுதும் சமாதானத்தைப் புறக்கணிக்காததாகவே இருந்தது.அவரது ஆழ்ந்த கருத்து வெறும் அரசியலைப் பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து ஏழு ஆண்டுகளுக்கும் சற்றுக் கூடுதலாக உள்ள இந்தக் கால கட்டத்திற்குள் அகமதாபாத் கோர்ட்டில் அவர் வந்து நின்றதும் இவ்வளவு சீடர்களையும் தொண்டர்களையும் அவர் எவ்வாறு அடைந்தார்? நேருஜியை ஓர் அங்கத்தினராகக் கொண்ட காங்கிரஸ் காரியக்கமிட்டி முதன் முதலாக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தத் திட்டமிட்ட பொழுது எந்தத் திட்டமும் ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாமல் வெற்றி பெறாதுஎன்று காந்திஜி அமைதியாகக் கூறினார்.
ஜவஹர்லால் நேரு:-நீங்கள் என்னைத் தலைவனாகத் சேர்த்தெடுப்பதும் எடுக்காததும் உங்களைப் பொறுத்தது. நீங்கள் விரும்பும் பொழுது என்னை வெளியில் தள்ளுவதும் உங்களைப் பொறுத்த விஷயம். நீங்கள் விரும்பினால் என் தலையைக்கூவெட்டிவிடுவதும் உங்களைப் பொறுத்துள்ளது. ஆனால் நான் உங்களுக்குத் தலைவனாக இருக்கும் வரை இத்தகைய கட்டுப்பாட்டு விதிகள் இருக்கத்தான் செய்யும்.என்று காந்திஜி கூறினார். மிக எளிமையும் மிக மரியாதையும் எஃகு போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்புக் கொண்ட உத்தரவும் எப்பொழுதும் இம்மாதிரி விசித்திரமான முறையில் அவரிடமிருந்து வெளிவரும்.
சொல்பவர்:-ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் அரசியல்வாதிகள், காந்திஜியை மதிப்பு வாய்ந்த அரைப்பயித்தியம் என்றுதான் கருதிவந்தனர் என்று நேருஜி கூறுகிறார்.
ஜவஹர்லால் நேரு:-பிறகு அவர் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்று ஆச்சரியகரமான தீர்மானங்களைக் கொண்டுவந்தார். உதாரணமாக வக்கீல்கள் எல்லோரும் தங்கள் தொழில்களைத் துறக்க வேண்டும் என்றும், மிக எளிமையாக வாழ வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் கிராமங்களில் தயாராகும் கைத்தறி ஆடைகளையே அணியவேண்டும் என்றும், அவர் கூறிய பொழுது சூழ்நிலை முற்றும் மாறியது. அவரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்பிய மூத்த தலைவர்களுக்கு இவை எல்லாம் எதைக் குறிக்கின்றன என்பது தெளிவாகப் புரியவில்லை. ஏனெனில் அவர்கள் எல்லோரும் வேறு விதமாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்கு இந்தப் போராட்டம் இருந்துவந்தது. ஆனால் அவர் இந்திய மக்களோடு - பாமர மக்களோடு மிகச்சிறந்த முறையில் ஒத்துப்போனார். இது மூத்த தலைவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்தது. அதன் பயனாக அவர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.
சொல்பவர்:-1915-இல் காந்திஜி இந்தியாவிற்கு வந்தவுடன்மதிப்பிற்குகந்த சீர்திருத்தவாதியாகிய கோகலேயை அவசர அவசரமாகக் காணச் சென்றார். அவரைச் சாவு நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது. டாக்டர் ஜெயகர் நினைவுகூர்வது போல் கோகலே புகழ் வாய்ந்த அரைப்பயித்தியமான தலைவரைக்கண்டார். கோகலேயின் இந்திய சமுதாயச் சேவைச் சங்கம் சில காலம் காந்திஜி பயிற்சியாளராகிப் பணி செய்து பார்ப்பதுஎன்று முடிவாயிற்று.
எம். ஆர். ஜெயகர்:-அவர் சேர்ந்த அன்றோ அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகோ நான் கோகலேயைச் சந்திக்க நேர்ந்தது. நான் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் புதிதாகப் பணிக்கு வந்த ஆள் கக்கூஸ்களையெல்லாம் கழுவிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது. கோகலேக்கு அது பிடிக்கவில்லை. அவர் ஏன் இதைச் செய்கிறார்?” என்று கேட்டார். அவர் காந்திஜிக்கு அந்த வேலைகள் எல்லாம் இங்கே நீங்கள் செய்யவேண்டாம்என்று சொல்லியனுப்பினார். இது எனது தினசரி அலுவல்களில் ஒன்றாகும்என்று காந்திஜி பதிலுரைத்தார். இது என் தினசரி அலுவல்களில் ஒன்றல்ல. நீங்கள் இதை நிறுத்தவேண்டும்என்று கோகலே கூறினார். கோகலேக்கு அவர் மீது அதிகச் செல்வாக்கு இருந்தது. ஏனெனில் காந்திஜி தம்மை அவரது சீடர் என்று சொல்லிக்கொண்டார். இந்தப் புதிய ஆசாமியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நான் கோகலேயைக் கேட்டேன். அவரைப் பற்றியா? நாமெல்லாம் போன பிறகு அவரே இந்தியாவின் தலைவராக வரப்போகிறார்என்று சொன்னார். ஆம்,மக்கள் மனத்திலே தேசப்பற்று தன்னலத்தியாகம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் அவருக்கு இணையானவரை நான் கண்டதில்லைஎன்றேன்.
சொல்பவர்:-1916-இல் அகமதாபாத்தில் காலம் சென்ற ஜி. வி. மாவ்லங்கர் முதன் முதலில் காந்திஜியைப் பார்த்த பொழுது அவரை ஒரு விநோதப் பிரகிருதியாகவே கண்டார்.
ஜி. வி. மாவ்லங்கர்:-விநோதப் பிரகிருதி என்றால் சாதாரண விநோதப் பிரகிருதி அல்ல. கூடை கூடையாகக் கூறலாம். அவர் ஆடை அணியும் முறை, அவர் உணவு கொள்ளும் முறை, சமையல் செய்யும் முறை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமைத்தல், துப்புரவு செய்தல், பெருக்குதல், கக்கூஸ் வேலை செய்தல் போன்ற வேலைகளில் ஏன்தான் இவர் தமது நேரத்தையெல்லாம் வீணாக்குகிறாரோ? அவருடைய தத்துவத்தை நான் அறிந்துகொள்ளவில்லை. நாங்கள் அவரைப் பார்க்க அவர் இருப்பிடத்திற்குச் சென்றபொழுது அவர் எங்களுக்கு அமர ஒரு நாற்காலிகூட அளிக்கவில்லை.
சொல்பவர்:-அரசியலில் இறங்கிய வழக்கறிஞர்களிடையே இந்திய உடை அவ்வளவாகப் பிரக்யாதி பெற்றிருக்கவில்லை. அவருடைய அஹிம்சைக் கருத்தோ உத்வேகம் மிகுந்த காகா காலேல்கர் போன்றவர்களுக்கும்கூட முற்றிலும் புதுமையாக இருந்தது.
காகா காலேல்கர்:-என்னை அராஜகவாதி என்று நீங்கள்கூறக்கூடும். ஆனால் நான் என்னை ஒரு புரட்சிக்காரன் என்றேகூறிக்கொள்வேன். ஆயுதப் புரட்சியின்றி இந்தியா விடுதலை பெறமுடியாது என்று எண்ணியிருந்தேன். அந்த சமயம்தான்காந்திஜி சாந்தி நிகேதனுக்கு வந்தார். அவர் வந்தது 1915-ஆம் ஆண்டு ஆகும். அவர் ஓரளவு ஓய்வாக இருந்தார். நிறைய ஓய்வு நேரம் இருந்தது. வள்ளிசாக எட்டு நாட்கள் இருந்தன. ஆத்மீகத்துறை, மதத்துறை, கல்வித்துறை, புரட்சி இயக்கம் என்று கேள்விக்கு மேல் கேள்விகளாகக் கேட்டு அவரைப் பெரிதும் திணற அடித்தேன். அதற்கு அவர் என்னோடு தங்கியிருந்து நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதைப் பாருங்கள். எனது அஹிம்சை முறை உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னைவிட்டு விலகுவதற்கு உங்களுக்குப் பூரண உரிமை உண்டு. உங்கள் சுதந்திரத்திற்குப் பங்கம் நேராதுஎன்றார். ஆகையால் எனக்குச் சரியான வழிகாட்ட ஒரு மனிதர் இருக்கிறார் என்று உணர்ந்தேன். மேலும் நான் அவரிடம் பேசப்பேச அவர் வாழ்க்கையை நெருக்கமாகக் கண்டேன். முதலாவதாக அவரிடம் உள்ள உள்ளார்ந்த ஆத்மிக உறவே என்னை வெகுவாகக் கவர்ந்தது.
சொல்பவர்:-ஆனால் சி. இராஜகோபாலாச்சாரியைப் போன்றவர்களுக்கு அப்படியில்லை.
சி. இராஜகோபாலாச்சாரி:-ஒரு புது உத்தி. அதுதான் கவர்ச்சி. அவரது துறவு மனப்பான்மையும், சீரிய குணமும் அந்த உத்திக்குத் தற்செயலாக அமைந்தவையே. அந்தப் புதிய உத்தியைப் பயன்படுத்துபவர் நல்ல மனிதராக இருக்கவேண்டும். அப்படி அவர் இருந்தார். ஆனால் அது மட்டும் கவனத்தை ஈர்க்கும் விஷயமல்ல. மிதவாதிகள் கையாண்ட காங்கிரஸ் கட்சியின் திட்டத்தைக் கண்டு நான் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டேன். நான் ஒரு தீவிரவாதி என்றாலும் இங்குமங்கும் நடக்கும் வன்முறைகளால் நன்மை எதுவும் ஏற்படாது என எண்ணினேன். திட்டமிட்ட வன்முறைக் கிளர்ச்சி பயன் தரலாம்.ஆனால் அது அசாத்தியமானது.
ராஜா ஹத்தீ சிங்:-புழுதியில் புரண்டுகொண்டிருந்த நம்மைக்கைதூக்கிவிடக்கூடிய மாற்றுவழி அறிந்த மனிதராக அவர் இருந்தார்.
சொல்பவர்:-ராஜா ஹத்தீ சிங் அப்பொழுது சிறு பையனாக இருந்தார்.
ராஜா ஹத்தீ சிங்:-நான் ஒரு பள்ளிமாணவனாக இருந்தேன். காந்திஜி அப்பொழுதுதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்தார். அதிகாலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை மைதானத்திற்கு வரும் பொழுது அவருடைய தோற்றம் அற்புதமாகவும் தெய்வீகத்தன்மை பொருந்தியதாகவும் இருந்தது. முதன் முதலில் நான் அவரைப் பார்த்தது அதிகாலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை மைதானத்தில்தான். நான் அத்யார்த்தமாக அவர் மீது லயித்துப்போனேன். அவரது கொள்கைகளை உடனடியாக ஒப்புக்கொள்ளவும் செய்தேன்.
சி. இராஜகோபாலாச்சாரி:-இதே சமயம் நான் குறுக்கிட்டு உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பொதுவாக மக்கள் கொலை செய்வதைத் தவறு என்று எண்ணுவதில்லை. செய்யவும் செய்கிறார்கள். என்றாலும் அதே சமயம் மனித இயல்பு மனித இயல்பாகவே இருக்கிறது. நல்ல மனிதன் கொலை செய்யப்படுவதை விரும்புவதில்லை. இந்த வெறி பிடித்த குற்றங்களை அவர்கள் கண்கொண்டு காணவே சகிப்பதில்லை. ஆனால் அது தவிர்க்க முடியாததாக இருந்தால் அவர்கள் மறுப்பதில்லை. அவர்கள் காந்திஜியின் திட்டத்தை ஏற்பதற்கு இது காரணமல்ல. காந்திஜியின் திட்டமே நடைமுறைக்கு ஒவ்வக்கூடிய சிறந்த திட்டமாகத் தோன்றியபடியால் அவர்கள் அதை ஏற்றார்கள்.
சொல்பவர்:-ஆனால் அது சட்டென்று ஏற்கக்கூடியதாக இல்லை. அது உடனடியாகத் தீட்டப்படவுமில்லை. அப்பொழுதும், அதன் பிறகும் பிரிட்டிஷ் உறவு பற்றி அதிதீவிரவாதிகட்கு மாறாக காந்திஜியின் கருத்து அசைக்க முடியாததாக இருந்தது.
சி. இராஜகோபாலாச்சாரி:-பிரிட்டிஷாரின் உறவோடும், துணையோடும் முழு சுதந்திரம் பெறமுடியும் என்று அவர் நம்பினார். ஏனெனில் அவருக்கு ஆஸ்திரேலியாவைப் பற்றியும், கானடாவைப் பற்றியும், குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரது போராட்டம் எப்பொழுதும் ஹிம்சையைத் தவிர்த்த நுட்பப் போராட்டமாகும். பயங்கர இயக்கத்தை வேரறுத்தவர் காந்திஜிதான். பிரிட்டிஷார்கள் அல்ல என்று நான் துணிந்து கூறுவேன்.
சொல்பவர்:-சுதந்திர வேட்கையும் பொறுப்புணர்வும் ஒன்றாகச் செயல்படுபவை என்று நம்பிய காந்தஜி போருக்கு ஆட்கள் சேர்க்கும் விஷயத்தில் அரசாங்கத்திற்கு உதவிக்கொண்டிருந்தார். ஆசார்ய கிருபளானி அவரோடு இருந்தார்.
ஜே. பி. கிருபளானி:-நான் அவரோடு இருந்தேன். ஆனால்அவர் இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்க்கத் தொடங்கவே நான் அந்த நேரத்திற்கு அவரை விட்டு விலகிவிட்டேன். ஏனெனில் ஆள் சேர்ப்பது பற்றி அவர் கூறிய வாதங்களை என்னால் ஏற்கமுடியவில்லை. அஹிம்சையில் நம்பிக்கை கொண்ட அவர், போருக்கு ஆள் சேர்ப்பதென்றால் அஹிம்சையையும், அதையும் என்னால் இணைத்துப் பார்க்கமுடியவில்லை. அடுத்தபடியாகப் போருக்கு ஆள் சேர்ப்பதை நினைத்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு நான் பிரிட்டிஷாரோடு பகைமை உணர்வைப் பாராட்டிக்கொண்டிருந்தேன். அவரது விளக்கத்தினால் என் மனம் சமாதானம் அடையவில்லை. ஹிம்சையில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் விளக்கினார். சுதந்திரப் பிரஜையாக அவர்கள் அரசாங்கத்தில் எந்தப் பதவியையாவது விரும்பினால், அவர்கள் சராசரி நிலையில் தங்கள் உரிமையைக் கேட்பதற்கு முன்பு கடமையைச் செய்தாக வேண்டும் என்று சொன்னார். இந்த நியாய வாதத்தை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அந்த அரசாங்கத்தைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றுதான் விரும்பவில்லையே! (சிரிப்பு).
சொல்பவர்:-இந்தியாவில் ஓராண்டுக்குத் தாம் அரசியல் பிரசங்கங்கள் செய்யப்போவதில்லையென்றும், தேசமெங்கும் பிரயாணம் செய்து தமக்குத்தாமே கல்வி புகட்டிக்கொள்ளப்போவதாகவும் காந்திஜி கோகலேயிடம் உறுதியளித்திருந்தார். ஓராண்டு முடிந்ததும் காசியில் திருமதி அன்னிபெசன்டின் தலைமையில் ஹிந்து பல்கலைக்கழகம் தொடங்கியபொழுது, ஆடம்பரமான அரசர்களும், அறிவிற் சிறந்த மேதைகளும் கூடியிருந்த மேடையில் தம் மௌனத்தை அவர் கலைத்தார். அக்கூட்டத்தில் பல மாணவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் சுதீன் தத்தா.
சுதீன் தத்தா:-காந்திஜியின் முறை வந்தது. சிறுமனிதர்ஒருவர் எழுந்தார். எளிய ஆடை அணிந்திருந்த அவர் எந்தவிதமான அங்க சேஷ்டைகளோ, முகபாவங்களோ இல்லாமல் பேசினார்.ஒருவருடைய நினைவாற்றலை முழுவதும் நம்பமுடியாது என்றாலும் நான் அறிந்தவரை அவர் பேசியது இதுதான். மகாராஜாக்கள் எல்லோரும் நன்கொடை அளித்ததன் பயனாக ஹிந்து பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமே. இன்னமும் இது நிதியில்லாது போகுமேயானால் அந்தப் பிரச்சினையை மகாராஜாக்களே இலகுவாகத் தீர்த்துவிடலாம். மனமுவந்து அவர்கள் ஒருசில நகைகளைக் கொடுத்தால் ஆயிற்றுஎன்று அவர் பேசியதாக நினைவு. பிறகு அன்னிபெசன்ட் அம்மையார் எழுந்து காந்திஜி அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் கடந்துவிட்டதாகவோ அல்லது வேறு எதையோ சொல்லி அவர் பேசுவதை நிறுத்தும்படியிருந்தது. அவர் உட்கார்ந்துவிட்டார். கூட்டத்தில் இருந்த நாங்கள் எல்லோரும் கூச்சல் போட்டோம். அது புயல் அடித்த கூட்டங்களில் ஒன்றாகும்.
சொல்பவர்:-அரசர்களிடமிருக்கும் பணத்தைப் பற்றி மட்டும் காந்திஜி அந்தக் குழறுபடி நிலையில் பேசவில்லை. அவர் தம் ஒளி விளக்கைப் பல பக்கங்களிலும் பாய்ச்சினார். இந்திய நகரங்களின் அசுத்தமான தெருக்கள், கண்ட இடத்தில் எச்சில் துப்பும் கெட்ட பழக்கம், இரயில் வண்டிகளில் நடைபெறும் வன்முறைச் செயல்கள், விவசாயத் துறையினரைப் புறக்கணித்தல், அச்சம், நம்பிக்கையின்மை, ஹிம்சை ஆகியவையும் அவர் பேச்சில் அடிப்பட்ட விஷயங்களாகும். இதுபோன்ற அரசியல் இல்லாத பல அடிப்படை விஷயங்களே அவர் கவனத்தை அதிகம் கவர்ந்தவை. ஆசிரம வாழ்க்கை முறையில் இந்தியாவைப் புனருத்தாரணம் செய்யவேண்டும் என்று எண்ணினார். தென்னாப்பிரிக்காவில் முயன்று பார்த்த முறைதான் என்றாலும் அதிலிருந்தே இந்தக் கருத்துக்கள் ஊக்கமும், ஆக்கமும் பெற்றன. தமது தாய்மொழியாகிய குஜராத்தி பேசும் மக்கள் நிறைந்த, ஆலைகள் மிகுந்த நகரமான அகமதாபாத்தைத் தேர்ந்தெடுத்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட முதலிடம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சபர்மதி இரண்டாவது இடமாகும். குலோர்னி போல்டன் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைப் பார்வையிட்டார்.
குலோர்னி போல்டன்:-உண்மையாகவே அந்த ஆசிரமம் மிகவும் எளிய முறையில் எந்தவிதமான கலையுணர்வும் இன்றிக் கட்டப்பெற்ற சில குடிசைகளின் தொகுப்பாகத்தான் இருந்தது. இருப்பினும், அது பலவகை மரங்களால் சூழ்ந்திருந்தது. பலவகை மரங்களும், பலவகைப் பூக்களும் நிறைந்து அந்த இடம் அபூர்வமான அழகோடு விளங்கிற்று. அது உயரமாக ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. ஆற்றின் ஒரு கரையில் இயற்கை அழகோடு விளங்கும் ஆசிரமம். மறுகரையில் இந்தியாவின் மாஞ்செஸ்டர் என்று சொல்லக்கூடிய அகமதாபாத் மில்கள். எனவே ஆங்கிலேயர்களால் இந்திய நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தொழில் வாழ்க்கையையும், காந்திஜி இந்தநாட்டுமக்களுக்கு உகந்தது என்று விரும்பிய மிகமிக எளிய வாழ்க்கையையும் நீங்கள் ஒருசேர இங்கே பார்க்கலாம். இந்தப்பொருத்தமற்ற சேர்க்கையே என்னைப் பெரிதும் கவர்ந்து என்று நான் எண்ணுகிறேன். இந்த வேற்றுமை காரணமாக அவர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று எனக்குத் தோன்றியது.
சொல்பவர்:-இந்த வேற்றுமை - ஆற்றங்கரையின் ஒருபுறம் காந்திஜியின் இராட்டைச் சக்கரம் எழுப்பிய ரீங்காரம், மறுபுறம் கரிய புகை கக்கும் பெரிய மில்களின் ஒலி ஆகிய இரண்டும் எல்லையற்ற சர்ச்சைகளை எழுப்பின. ஆனால் ரெஜினால்ட் ரெயினால்ட்ஸ் நினைவுகூர்வது போல ஆசிரமத்திலிருந்து வரும் பேச்சுக்கள் இயந்திரங்களுக்கு எதிரானவையா, ஆதரவானவையா என்று தெளிவாகாத நிலை.
ரெஜினால்ட் ரெயினால்ட்ஸ்:-அவர் சர்க்காவைச் சுட்டிக்காட்டி எனக்கு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை என்று சொல்வது முற்றும் பிசகாகும். இதுவுமே ர் அழகான இயந்திரக் கருவிஎன்று சொல்லியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் எல்லா இயந்திரக் கருவிகளையும் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறார். சொல்லப்போனால் பொருளாதாரத் துறையில் அவை வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்பட்டிருக்கின்றன என்பதையும், வாழ்க்கையை எவ்வகையில் சீர்கேடு அடையச்செய்திருக்கின்றன என்பதையும் அவர் எடைபோட்டுப் பார்த்திருக்கிறார்.
சொல்பவர்:-மௌரிஸ் பிரைட்மேன் எஞ்சினியர் என்ற முறையில் வாதிப்பதுண்டு. ஆனால் அவரும் ஓர் இலட்சியவாதியாக இருந்ததால், காந்திஜி அவருக்கு எப்படி பதில் சொல்வது என்பதை அறிந்துவைத்திருந்தார். இயந்திரக் கருவிகளினால் மக்களைச் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே அவர் சொல்வார்.
மௌரிஸ் பிரைட்மேன்:-ஆகையால், நான் சிறு இயந்திரங்களை விரும்புகிறேன். ஒருவராலும் வைத்துக்கொள்ள முடியாத பெரிய பூதாகார இயந்திரத்தை நான் விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளக்கூடிய இயந்திரமே எனது கருத்துப்படி இயந்திரம்என்று அவர் சொல்லுவார். மனிதனுக்கே முதலிடம் என்பது என் சொந்தக் கருத்தாகும். அவரும் மனிதனுக்காக முதலிடம் என்றுதான் கூறிவந்தார். மனிதனுக்கு எது நன்மை பயப்பதோ, அது காந்திஜிக்கும் நன்மை பயப்பது. மனிதனுக்கு எது தீமை பயப்பதோ, அது காந்திஜிக்கும் தீமை பயப்பது. ஆனால், எது நன்மை என்று முடிவு சொல்வதில்தான் கஷ்டங்கள் தோன்றின. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு எதுவும் நன்மை பயப்பதே, அளவுக்கு மீறிவிட்டால்தான் எல்லாமே தீமையாக முடியும். நடுநிலையில், இரண்டிற்கும் பொதுவாக நின்று எங்கே நிறுத்தவேண்டும் என்று அறிந்துவைத்திருந்தது அவரது மேதாவிலாசம் ஆகும். அவர் தமது வாழ்க்கைக்குப் போதுமென்று எண்ணியிருந்த வாழ்க்கைத்தரம் நமது நோக்கில் பார்த்தால் நமக்குக் குறைவாகப் படலாம். ஆனால் அவர் துறவு மனப்பான்மையைக் கொண்டிருந்தபடியாலும் அவர் ஒரு ஹிந்துவாக இருந்தபடியாலும் உலகில் அடையக்கூடிய பொருள்களைப் பொறுத்தவரை அவருக்கு உணவு மட்டுமே போதுமானதாக இருந்தது. அவருக்கு அதைக் காட்டிலும் வேறு எதுவும் தேவையாக இருக்கவில்லை. ஆகையால் உண்ணச் சிறிது உணவும், உடுக்கச் சில துணிகளும், குந்தச் சிறு குடிசையும் ஒரு மனிதனுக்குத் தேவையானவை என்று அவர் கூறினார். இதற்கு மேல் தேவையான மற்றப் பொருள்களைப் பற்றி அவர் விட்டுவிட்டார். அவரது கொள்கைகளில் உருவாகிய நாகரிகமும் அடக்கமான பண்பாட்டின் அஸ்திவாரத்தில் அமைந்ததாக இருந்தது.
சொல்பவர்:-காந்திஜியின் சர்க்காப் பிரசாரத் தத்துவத்தில் நிச்சயமாக ஏதோ ஒர் அபூர்வத் தன்மை இருந்தது. ஆனால் பொருளாதாரத் தத்துவத்தின் கடினமான முறைகளையும் டாக்டர் ஜாகிர் உசைன் கண்டதுபோல் அதில் காணமுடிந்தது.
ஜாகிர் உசைன்:-காந்திஜி எப்பொழுதும் சர்க்காவில் நூற்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நான் நினைக்கவில்லை. தொழிற்சாலைகளைப் பெருக்க வேண்டும் என்ற கருத்தில் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன. ஆண்டுதோறும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப நம்மால் அவ்வளவு பேரையும் தொழிற்சாலையில் சேர்த்துக்கொள்ள முடியாமற்போய்விடும். அதன் பயனாகப் பெருகிவரும் மக்கள் தொகை ஒரு பக்கம் நாட்டுக்குத் தலைவலியாகவே இருந்துவரும். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கவே காந்திஜி ஒரு முடிவுக்கு வந்தார். வேறு வழியின்மையால் மக்களிடையே குடிகொண்டுவிட்ட சோம்பேறித்தனத்தைப் போக்க அதிகச்செலவு இல்லாத கருவிகளை மக்களிடம் கொடுத்துச் சிறிதளவாவது உற்பத்திப் பெருக்கம் உள்ள தொழில்களில் ஈடுபடுத்தினால் அது அவர்களுக்குப் பொருளாதாரத் துறையில் ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணிக் காந்திஜி சர்க்காவை வற்புறுத்தினார். கையினால் நூற்றுக் கையினால் நெசவு செய்யும் துணிகட்கு ஆக்கமளிக்க முன்வந்தார். படித்த மக்களையும், நகர்வாழ் மாந்தர்களையும், கிராமாந்திரங்களில் உள்ள ஏழைஎளியவர்களோடு ஒன்றிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.நம்நாடு சாதிசமயங்களை அதிகம் கொண்டது. அந்தச் சாதி வேறுபாடுகூட நகர்வாழ் மக்கள், பணக்கார மக்கள், ஏழை எளிய கிராமமக்கள் என்ற பாகுபாட்டைக் காட்டிலும் அபாயகரமானதல்ல. மற்ற தேசங்களைப் போலன்றி இந்தியர்களது வாழ்க்கை நிலை பாதிக்கப்படக்கூடிய அபாயம் இதில்தான் இருக்கிறது. அரசியல் சுதந்திரத்தைத் தொடங்கும்போதே காந்திஜி இந்த வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று விரும்பினார். நாட்டின் ஏழை எளிய மக்களோடு அறிவாளிகளும், பெருந்தனக்காரர்களும் பாகுபாடின்றிப் பழகவேண்டும் என்று எண்ணினார். இதுதான் அவர் கையாண்ட முறை.
சொல்பவர்:-பணக்காரர்களையும், மில் சொந்தக்காரர்களையும், தொழில் அதிபர்களையும் காந்திஜி தம்பால் இழுத்ததுதான் ஆச்சரியமான விஷயம். உதாரணமாகத் தொழிலதிபரான பிர்லாவிடமிருந்து காந்திஜி ஒரு பெரும் தொகையையும், அதிகமான உதவிகளையும் பெற்றுள்ளார். 1916-இல் காந்திஜியை ஒரு பைத்தியக்காரத் தலைவர் என்று பிர்லா நினைத்திருந்தார். ஆனால் பின்னர் காந்திஜியின் மகனாகத் தம்மைப் பாவிக்கத் தொடங்கி - காந்திஜியின் எல்லா இயக்கங்களிலும் அவர் பங்குகொண்டார் என்று கூறமுடியாவிட்டாலும் - பெரும்பாலான இயக்கங்களை ஆதரித்துப் பலவற்றுக்கு உதவியுள்ளார்.
ஜி. டி. பிர்லா:- சிலவற்றை நான் நம்பினேன். சிலவற்றை நம்பவில்லை. ஆனால் இவற்றின் சிறப்புக்களைப் பற்றி அவர் என்னோடு பேச வரும்பொழுதெல்லாம் சிறப்புக்களைப் பற்றிப் பேச வேண்டாம். எனக்கென்று சொந்த அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால் நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நல்ல செயல்களில் எனக்கு நம்பிக்கையுண்டு. நல்ல மனிதர்களால்தான் நல்ல செயல்களைச் செய்யமுடியும்என்று அவரிடம் சொல்லுவேன். ஆகையால் அவருக்கு உதவி செய்வதில் நான் ஒருபோதும் தயங்கியதில்லை. என்னுடைய பொருளாதார நிலை எவ்வளவு தூரம் இடம் கொடுக்குமோ அவ்வளவு தூரம்அவருக்குப் பணம் தேவைப்படும் பொழுதெல்லாம் உதவிஅளிப்பதாக நான் வாக்குறுதி அளித்தேன். ஆண்டவன் அருளால்ஒருபோதும் இல்லையென்று சொல்லக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்படவில்லை. அவர் பல தடவை விபரமாகச் சிறுசிறு விஷயகளில்கூட எனக்குக் கணக்குக் காட்ட முயன்றுள்ளார். ஆனால்நான் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.
சொல்பவர்:-காந்திஜியின் பேரியக்கமான தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திற்கு, கடவுளின் குழந்தைகள் என்று காந்தியடிகளால் போற்றப்பட்ட ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு ஸ்ரீ பிர்லா பெரிதும் உதவியுள்ளார். தீண்டாமை ஒழிப்பு, கையினால் நூல் நூற்றல், கிராம முன்னேற்றம், ஆதாரக்கல்வி, ஹிந்தி மொழி இயக்கம் ஆகிய காந்திஜியின் தேசியப் புனரமைப்பு இயக்கங்களெல்லாம் காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே தொடங்கப்பெற்றன. இத்தொண்டுகள் முதலில் சபர்மதி ஆசிரமத்தில் ஆசிரமத் தொண்டர்களின் அர்பணிப்பு உறுதிமொழியுடன் தொடங்கியது. பின்னர் இந்தியாவின் மையமாக விளங்கும் வார்தாவிலுள்ள ஆசிரமத்தில் இத்தொண்டுகள் தொடர்ந்தன. இந்த வழிமுறைகளால்தான் காந்திஜி, அரசியல்வாதிகளால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட பாமர மக்களோடு தொடர்புகொண்டார். பலமுறை அரசியல் நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்புக்களையெல்லாம் தவறவிட்டுவிடுகிறார் என்று குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியிலுள்ள இடதுசாரிகளால் காந்திஜி குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் இப்பொழுது பின்னோக்கிப் பார்க்கிறார். அதன் சிறப்பைத் தெளிவாக உணர்கிறார்.
கிராமப் பணியாளர்:-சமூகநலப் பணிகள் பலவும் அரசியலில் மிகுந்த செல்வாக்கைக் கொடுக்கக்கூடிய நல்லெண்ணத்தைப் பெற்றுள்ளதாக எங்களில் பெரும்பாலோர் மெய்யாகவே கருதுகிறோம். ஆனால் காந்திஜி அப்படி மேலெழுந்தவாரியாக எடைபோடவில்லை. அந்நியரது ஆட்சிக்கு எளிதில் இரையாவதற்குக் காரணமாக இருந்த மக்களது மனோபாவங்களை மாற்றக்கூடிய சாதனங்களாகவும், வேலைகளாகவும்தான் அவை காந்திஜிக்குப் பட்டன. அரசியல் சுதந்திரம் என்ற குறுகிய வட்டத்தில் ஊறியிருந்தவர்களின் கண்களுக்கு, நிர்மாணத் தொண்டின் சிறப்பு அம்சமான, நோயுற்ற புராதனமான மக்கள் சமுதாயத்தின் பிணியைத் தீர்க்கும் சிறப்பு அம்சம் தெரியாமல் போய்விட்டது.
சொல்பவர்:-டாக்டர் பி. ஸி. ராய் கூட காந்திஜியின் நோக்கத்தைப் பரந்த மனப்பான்மையோடுதான் ஏற்றுக்கொண்டார்.
பி. ஸி. ராய்:-தனிமனிதனது முன்னேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றத்தோடு ஒட்டியே ஏற்பட வேண்டும் என்று அவர் பணிபுரிந்தார். காலக்கிரமத்தில் அதுதான் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் அவர் அத்தகைய அடிப்படை நோக்கங்களை அமைத்திராவிட்டால் சுதந்திரம் கிடைத்த முதல் சில ஆண்டுகளில் ஏற்பட்ட சிரமத்தைத் தாங்கியிருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை.
சொல்பவர்:-காந்திஜியின் கொள்கைகளில் சில பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டன. அஹிம்சைக்கும் சத்தியத்திற்கும் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் ஏராளம். அகமதாபாத் ஆசிரமத்தின் அடி நாட்களில் எத்தனையோ மாறுபட்ட கருத்துக்களைப் போக்க வேண்டியிருந்தது. தம் சீடர்களைக் காட்டிலும் காந்திஜி தாம் ஒத்துப்போகிறவர் என்பதை நிரூபித்துள்ளார். உதாரணமாகக் கொள்ளைக் கூட்டத்திற்கு எதிராக ஆயுதபலத்தை அனுமதித்தார். பிறகு நோயும் பட்டினியுமாகக் கேட்பாரற்றுத் திரியும் நாய்கள் பிரச்சனை எழுந்தது. தமது வாழ்நாளைக் காந்திஜியின் பணிகளுக்கே அர்ப்பணித்துவிட்ட ஆங்கிலேயப் பெண்மணியான மீரா பென் என்னும் குமாரி ஸ்லேடும் மற்ற ஆசிரமவாசிகளைப் போல் அவரைத் தந்தையாக மதித்து பாபு” என்று அழைத்துவந்தார். நோயுற்ற நாய்களை அழிப்பது அகிம்சைக் கொள்கைக்கு முரணாகாது என்று காந்திஜி சொல்ல அவர் கேட்டிருக்கிறார். நாய்கள் என்ன ஹிந்துக்கள் வணங்கும் பசுவைப் பற்றிக்கூட அவர் கொண்டிருந்த கருத்து அவளுக்குத் தெரியும். நோயைத் தீர்க்கமுடியாத நிலையில் இருந்த கன்றுக்குட்டி விஷயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது குமாரி ஸ்லேட்ஆசிரமத்தில்தான் இருந்தார். காகா காலேல்கர்கூட அங்குதான் இருந்தார். அப்பொழுது நிகழ்ந்த பெரும் சர்ச்சை அவருக்கு நினைவிருக்கும்.
காகா காலேல்கர்:-அவர் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். அது முக்கியமான விஷயம். நானே மாட்டுக் கொட்டிலுக்குச் சென்று மாட்டின் நிலையை நேரில் தெரிந்துகொள்ளாத வரை எப்படி என் அபிராயத்தைச் சொல்லமுடியும் என்று சொன்னேன். அதனால் நான் கொட்டிலுக்குச் சென்றேன். கன்று வெகு சிரமப்பட்டு நோயுடன் போராடிக்கொண்டிருந்தது. அதைக் கண்ணுற்ற நான் கன்றுக்குட்டியைக் கொன்றுவிடுவதே மேல் என்று என் அபிப்பிராயத்தைத் தெரிவித்தேன்.
மீரா பென்:-பாபுமிகவும் அமைதியாக இருந்தார். அவர் இதுபற்றி மிகவும் வருந்தினார். ஆனாலும் அதுவே சரியான செய்கை என்றும் முடிவு கட்டினார். நோயாளியின் கையைப் பிடிப்பது போல் பாபுஅந்தக் கன்றின் முன்னங்கால்களைக் குனிந்து பிடித்துக்கொண்டார். டாக்டர் எலும்பின் வழியே ஊசி போட்டார். உடனடியாக அது விறைத்து மரித்தது. பாபுஒரு துணியை எடுத்து அந்தக் கன்றின் முகத்தை மூடினார். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பிறகு அமைதியாக ஆசிரமத்திற்கு நடந்தார். அறைக்குச் சென்றதும் தம் வேலையைத் தொடங்கினார். வழக்கப்படி பத்திரிகைகள் இதைப் பற்றிக் கூப்பாடு போட்டன.
காகா காலேல்கர்:-இதன் பயனாக தேசத்தின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையுள்ள ஹிந்து மக்கள் அனைவரும் இது என்ன அநியாயம்? மதாபிமானமுள்ள ஒரு மனிதன் ஒரு பசுவைக் கொல்லத் துணிவதா? என்று பேசத் தொடங்கினார்கள். இதுபற்றிப் பெருமளவில் சர்ச்சையேகூட நடந்தது.
சொல்பவர்:-பயமுறுத்திக் கடிதங்கள்கூட வந்தன. ஆனால் ரெய்ஹானா தயாப்ஜி இதை அவர் இலேசாக எடுத்துக்கொண்டதாக நினைவுகூர்கிறார்.
ரெய்ஹானாதயாப்ஜி:-தபால்காரர் இப்பொழுது கொண்டுவந்த கடிதத்தைப் பாருங்கள்என்று பாபுஜி என்னிடம் சொன்னார். அது ஒரு ஜைன நண்பனிடமிருந்து வந்திருந்தது. காந்தி! நீங்கள் அந்தக் கன்றுக்குட்டியைக் கொன்றீர்கள். அந்தப் பசுவைக் கொன்றீர்கள். அதற்குப் பதிலாக உங்களை நான் கொல்லாவிடில் நான் ஒரு ஜைனன் அல்லஎன்று எழுதியிருந்தார். அவர் சிரித்தார்; சிரித்தார்; அப்படிச் சிரித்தார். அவரது பொழுது இம்மாதிரியாகச் சிறுசிறு நகைச்சுவை மிகுந்ததாகப் போயிற்று. அவர் அபரிமிதமான நகைச்சுவை உணர்வைப் பெற்றிருந்தார். அவரது வாழ்க்கையில் இவ்வுணர்வுதான் அவரை நிலைகலங்காமல் வைத்திருந்தது என்று எண்ணுகிறேன்.
சொல்பவர்:-நாம் அவரது வாழ்க்கையில் ஒளிர்ந்த ஒருசில ஒளிக்கீற்றுக்களை மட்டுமே காட்டமுடியும். அவை ஆசிரமத்தில் மட்டுமே கண்ட நிகழ்ச்சிகள் அல்ல. காந்திஜி பலமுறை இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்திருக்கிறார். சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் சென்று தமது கருத்துக்களைப் பரப்பியிருக்கிறார். மக்களுக்காகப் பணம் வசூல் செய்தும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கிறார். தம்மைப் பிச்சைக்காரர்களின் அரசர் என்று சொல்லிக்கொள்வதில் அவருக்குப் மிகுந்த பிரியம். லூயி பிஷர் காந்திஜியைப் பின்பு ஒருமுறை பார்க்கச் சென்ற பொழுது காந்திஜி தம் கையெழுத்தை விற்றுப் பணம் திரட்டுவதையும் ஒருவழியாகக் கொண்டிருந்தார் என்பதையும் கண்டிருக்கிறார்.
லூயி பிஷர்:-ஒரு குடிசையில் நான் ஒரு புகைப்படத்தை கண்டேன். அதைக் காந்திஜியிடம் எடுத்துச்சென்று, “என் நண்பர் உங்கள் கையெழுத்தை இதில் போட்டுத்தவேண்டும்என்று வேண்டுகிறார்என்று சொன்னேன். எனது வாரப்பத்திரிகையான ஹரிஜனுக்கு நீங்கள் இருபது ரூபாய் கொடுப்பதாயிருந்தால் நான் கையெழுத்துப் போட்டுத்தருகிறேன்என்றார் அவர். நான் பத்து ரூபாய் தருவதாகச் சொன்னேன். அவர் அந்தப் பேரத்திற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். பின்னால் நான் இதைப் பற்றிக் காந்திஜியின் கடைசி குமாரரான தேவதாஸ் காந்தியிடம் கூறியபொழுது, “அவர் ஐந்து ரூபாய்க்கேகூட கையெழுத்துப் போட்டுக்கொடுத்திருக்கிறார்என்றார்.
சொல்பவர்:-சில சமயங்களில் வெரியர் எல்வின் காந்திஜியுடன் பிரயாணம் செய்துள்ளார்.
வெரியர் எல்வின்:-காந்திஜியுடன் மூன்றாவது வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்வது சாதாரண அனுபவம். கண்டிப்பாக அவருக்கென்று ஒரு பெட்டி எப்பொழுதும் காலியாக இருக்கும். ஆனாலும் இந்தியாவில் மூன்றாவது வகுப்புப் பெட்டியில் பிரயாணம் அவ்வளவு செளகரியமானதல்ல. நான்கு மரப்பலகைகளைக் கொண்ட சின்னஞ்சிறு பெட்டியில் பயணம் செய்யவேண்டியிருக்கும். பெட்டியே கொதிக்கும், நான் என் படுக்கையில் அலைபாய்வேன். அவரோ கீழே படுத்துக்கொண்டு எவ்விதக் கஷ்டமுமின்றிக் குழந்தையைப்போல் தூங்கிவிடுவார். அவருக்குத் தரையில் தூங்கியே பழக்கம். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் திரளான மக்கள் கூடி அவரது கையெழுத்தைக் கோருவதும் அவரைப் பார்க்க முயல்வதும்தான் பெரும் கஷ்டமாக இருந்தது. பொறுமையோடும் பாசத்தோடும் அவர் கூட்டத்தினரை வாழ்த்துவதைக் காணும்போது வியப்பாகவேத் தோன்றும்.
சொல்பவர்:-கூட்டம் என்றால் சாதாரணக் கூட்டமா 1917-இல் அகமதாபாத் மில்லில் வேலை நிறுத்தம் நடந்தபொழுது ஒவ்வொரு நாள் மாலையிலும் இருபதாயிரம் மக்கள் காந்திஜியின் பேச்சைக் கேட்கக் கூடுவார்கள். அந்தப் போராட்டத்தில் அம்பலால் சாராபாயின் தலைமையில் மில் முதலாளிகளும், அவரது சகோதரி அனுசூயாபென் சாராபாயின் தலைமையில் தொழிலாளர்களும் நடத்திச்செல்லப்பட்டார்கள்.
அனுசூயாபென் சாராபாய்:-ஆற்றங்கரையோரத்திலே அவர் தினந்தோறும் ஒன்றரை மணிநேரம் பேசுவார். இருபதாயிரம் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் கூடுவார்கள். பத்தாயிரம் பேர் வேலை நிறுத்தம் செய்தவர்கள். பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் அவரது பேச்சைக் கேட்பதற்கு என்று கூடுவார்கள். தென்னாப்பிரிக்காவில் தமக்கு ற்பட்ட அனுபவத்தையும், அஹிம்சை, சத்தியம் ஆகியவற்றின் பெருமையையும் பற்றிக் கூறுவார். வேலை நிறுத்தம் செய்பவர்கள் தங்கள் எதிரியிடமும் அன்போடு நடந்துகொண்டு அமைதியான முறையில் நடக்கவேண்டும் என்று கூறுவார். நாம் கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர மக்களை எதிர்த்துப் போராடக்கூடாது என்றும், அதில் கசப்பு இருக்கக்கூடாது என்றும் வற்புறுத்துவார்.
சொல்பவர்:-அந்தத் தொழிற்புரட்சியில் கசப்புக்கு இடம் இல்லை. அப்படியிருந்தால் வெகு குறைவாகவே இருந்தது. குறுகலான சந்துகளைக் கொண்ட அந்த ஆலை நகரத்தில் ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருந்த ரத்தக்களரி எப்படியே தவிர்க்கப்பட்டது. காந்திஜி அந்தச் சந்தர்ப்பத்தில், போற்றக்கூடிய முறையில் இரு தரப்பாருக்கும் சமரச நிலையை ற்படுத்தினார். முடிவில் இரு தரப்பாருமே அவரது செயலைப் போற்றிப் பாராட்டினர். ஆனால் அதற்குச் சற்று முன்னதாக அவர் செய்த செயல் அதற்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பிஹாரில் பெரும்பாலும் பிரிட்டிஷ் மக்களை முதலாளிகளாகக் கொண்டிருந்த அவுரித்தோட்டத் தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை விசாரித்துத் துயர் தீர்க்கும் பொருட்டுக் காந்திஜி பீஹாருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி காந்திஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனவே அவர் தற்சமயம் ஜனாதிபதியாக இருக்கும் திரு. ராஜேந்திரப் பிரசாத் உட்பட தமது ஆதரவாளர்களான வக்கீல் நண்பர்கள் சிலருக்கும் தந்தி கொடுத்தார்.
ராஜேந்திரப் பிரசாத்:-நான் போய்ச் சேர்ந்த பொழுது புதிய நிலை உருவாகியிருப்பதைக் கண்டேன். வக்கீல்களைப் பற்றிய பிரச்சனையும் எழவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் சூழல்களிலிருந்து எப்படி வெளிவருவது என்ற யோசனையும் எழவில்லை. உங்கள் விருப்பப்படிச் செய்யுங்கள். நான் எடுத்த நடவடிக்கைகளினால் ஏற்படும் எந்த விளைவையும் நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்என்று உறுதியோடு கூறிவிட்டார். நாட்டுக்குப் பெரும் நலம் பயத்தது. ஏனெனில் இது நாடுகண்டிராத ஒரு புதுமை.
சொல்பவர்:-காந்திஜி தம் நண்பர்களிடம் எதிர்பார்த்ததும் அத்தகையதொரு புதுமையே ஆகும். அவர் சிறைப்பட்டால் அவரது நண்பர்களும் அவரைப் பின்பற்றிச் சிறைபுக வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
ராஜேந்திரப் பிரசாத்:-மாஜிஸ்டிரேட் நாளைக்கு என்னைச் சிறைப்படுத்த உத்தரவு போடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். அவரோடு எங்களுக்கு முன்பே இருந்த இரண்டு நண்பர்களும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்பினோம். இந்தக் கேள்வி அவர்களின் முன் வைக்கப்பட்டது. அவர்கள் அவரைப் பின்பற்ற முடிவு செய்திருப்பதாகக் கூறினார்கள். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நல்லது! இந்த விஷயத்தில் இப்பொழுது நமக்கு வெற்றியேஎன்று அவர் சொன்னார். பின்னர் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
சொல்பவர்:-ஒருவரும் சிறைக்குச் செல்லவில்லை. எனினும் முதல் இந்திய சத்தியாக்கிரகிகள் அணி உருவாகிவிட்டது. சம்பரானிலுள்ள அவுரித்தோட்டத் தொழிலாளர்களின் வழக்கு முடிய ஏறக்குறைய ஓர் ஆண்டு பிடித்தது. காந்திஜி மேற்கொண்ட உத்திக்கு சிறப்புமிகு சோதனையின் பயனாக நிரந்தரப் பலன் கிடைத்தது.
ராஜேந்திரப் பிரசாத்:-தோட்ட முதலாளிகள், தொழிலாளிகள் ஆகிய இருவரும் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் சொன்னார். அது அப்படியே உண்மையாயிற்று. ஏனெனில் முதலாளிகள் தங்கள் நிலங்களை நல்ல விலைக்கு விற்க முடிந்தது. முதலாளிகளால் பறித்துக்கொண்ட தங்கள் பழைய சொத்துக்கள் திரும்பக் கிடைக்கவே குடியானத் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
சொல்பவர்:-ஆனால் சாம்பரானில் நிகழ்ந்த சாத்வீப்போராட்டம் மட்டும் மக்களை விழிப்புறச் செய்யவில்லை. அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு மாஜிஸ்ரேட் பிறப்பித்த உத்தரவுக்கு காந்திஜி பணிய மறுத்த நிகழ்ச்சி மக்களை விழிப்புறச் செய்தது. பதினெட்டு மாதங்களுக்கு. முன்பு அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் உட்பட பல தேசீய அரசியல்வாதிகள் தாங்கள் விளையாடிவந்த பிரிட்ஜ் ஆட்டத்தை நடுவில் நிறுத்திவிட்டு இந்தக் கிறுக்குப்பிடித்த காந்தியைக் காண்பது வீண் என்று நினைத்தார்கள். ஆனால் அதே நண்பர்கள், தற்சமயம் அதே ஆட்டத்தில் இருக்கும்போது சம்பரானிலிருந்து வந்த முதல் செய்தியை எப்படிக் கேட்டார்கள் என்று காலம் சென்ற ஜி. வி. மாவ்லங்கர் நினைவுகூர்கிறார்.
ஜி. வி. மாவ்லங்கர்:-அதுதான் முதன் முதலாக இந்தியாவில் நடந்த தனிநபர் சத்யாக்கிரகம். அந்தச் செய்தி வந்தவுடனே ஹரிலால் தமது நாற்காலியிலிருந்து துள்ளிக் குதித்து மாவ்லங்கர் இதோ நமக்குத் தைரியசாலியான வீரர் கிடைத்துவிட்டார். நாம் நமது குஜராத் சபாவுக்கு இவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளலாம்என்று என்னிடம் சொன்னார். சர்தார் அதை உடனே ஒப்புக்கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல நாங்கள் மேற்கொண்ட வழி ஒழுக்க முறையாலோ, உத்தி நுட்பத்தாலோ எப்படிப் பார்த்தாலும் தவறு என்றும், அவர் போதித்த வழியே எவ்வகையிலும் சரியானது என்றும் உணர்ந்தோம். உண்மை நிலையை உணர்ந்து மாறவும் செய்தோம். அரசியலை வியாபாரத்துக்காகவோ அல்லது சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ பின்பற்றவில்லை.
சொல்பவர்:-அரசியல் கொள்கைகளில் உறுதியாக நின்று பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது சிரமமாக இருந்தது. ஆனாலும் காந்திஜியின் காரியதரிசியான பியாரேலால் இதற்கு முரணான எதனையும் ஒப்புக்கொள்ளவில்லை.
பியாரேலால் நைய்யார்:-இல்லை. அவரது அரசியல் கொள்கைக்கும், அகிம்சைக்கும் கருத்து வேறுபாடேயில்லை. ஏனெனில் அவர் இந்த நாட்டிற்குக் குறைந்தபட்ச அரசியல் சுதந்திரத்தை விரும்பினார். இந்த நாட்டிலுள்ள பலவீனர்களும், நொண்டி, முடங்களும் சுதந்திரத்தின் பயனை அடைந்து, சுதந்திரத்தை, பூர்ணமாக வலிமை பெற்றவர்களோடு சரிசமமாக அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆகையால் பலவீனர்களும், கடைநிலை மக்களும் சேர்ந்து சரிசமமாக வெற்றிபெற போராடவேண்டியிருந்தது. அது ஓர் உயர்ந்த ஆத்மீகப் போராட்டமாக இருந்தது. அகிம்சை வழியைப் பின்பற்றுவதாக இருந்தது. இப்படியாக அகிம்சையே மார்க்கமாகவும் முடிவிடமாகவும் இருந்தது.
சொல்பவர்:-கொள்கை அளவில் இவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் நடைமுறையில் அவர் தம் முதல் அரசியல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபொழுது மோசமான சில வன்முறைச் செயல்களும் இடம்பெற்றன.
பியாரேலால் நைய்யார்:-அது அவரது கண்களைத் திறக்கும் கருவியாகவும் அமைந்தது. தவறுதலாகப் புரிந்துகொள்ளவே முடியாத விஷயம் என்று அவர் நினைத்திருந்ததை மக்கள் இப்படி ஒரேயடியாகத் தவறுதலாகப் புரிந்துகொள்வார்கள் என்பதை முன்கூட்டியே அறியாமற்போனது மாபெரும் இமாலயத் தவறு என்று அவரே கூறினார். இது தமது ஆத்மாவை ஒரு வகையில் ஏமாற்றிக்கொள்வதாகும். உள்ளத்திலே நேர்ந்துவிட்ட இந்தப் பொய்க்கூற்றை அகற்றினாலன்றி நான் மீண்டும் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கமாட்டேன் என்றார்.
சொல்பவர்:-அவர் தமது ஆசிரமத்திற்குத் திரும்பியதால் அரசியலில் புறமுதுகு காட்டியவர் என்று சிலர் எண்ணினர். ஆனால் இது அதிகாரவர்க்கத்திற்கு எதிராக விட்ட சொந்தச் சவால் ஆகும். எனவே அவர் அகமதாபாத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி ப்ரூம்பீல்டின் முன் ஆஜர் செய்யப்பட்டார்.
சர் ராபர்ட் ப்ரூம்பீல்டு:- பொதுமக்கள் தயாராவதற்கு முன்னதாகவே அவர் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியதால் அது இந்தியாவில் பல இடங்களிலும் பயங்கரமான வன்முறைச் செயல்களில் கொண்டுபோய் விட்டது. அச்சமயம் அவர் இதை நிச்சயமாக உணர்ந்தார். அந்த நிலையில் அவர் எந்த வழியைப் பின்பற்றுவது என்று தெளிவாகத் தெரியாமல் திகைப்பதாக எனக்குத் தோன்றியது. அந்த நேரத்திற்கு உலக விவகாரங்களை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிறையில் இருப்பதற்கும் அவர் விரும்பாமல் இல்லை. சிறையில் எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்தித்து எதிர்காலத்தில் தாம் செய்யவேண்டிய வேலைகளைப்பற்றி முடிவு செய்யலாமே என்றும் எண்ணினார். இந்த விசாரணையின் பொழுது, ஒவ்வொருவருமே அவரைப் பாசத்துடனும், மதிப்புடனும் நடத்திய முறை என்னை மிகவும் கவர்ந்தது. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அவர் புன்முறுலோடு நீதிபதிகள் காட்டிய கண்ணியத்தைப் பாராட்டியதாகும்.
சொல்பவர்:-இந்தியாவில் சிறைக்குப் போவதைக் கெளரமான நிகழ்ச்சியாக மாற்றியது காந்திஜிதான். சில சமயங்களில் இதை ஏற்றுக்கொள்ளாமற் போனாலும் சிறைக்குப் போவது ஒரு தொழிலாகவும், உயர்ந்த பதவியை அடையக்கூடிய ஏணியாகவும் ஆகிவிட்டது. அவர் சிறையில் இருந்த ஒவ்வொரு முறையும் பல வகைப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு சமயத்தில் காகா காலேல்கர் மட்டும் அவருக்குத் துணையாக இருந்திருக்கிறார். ஒரு சமயம் சிறை மேற்பார்வையாளர் காந்திஜியிடம், தான் மேலதிகாரிகளுக்கு, சிறப்பு மிகுந்த அரசியல் விருந்தாளி ஒருவருக்கு கைச்செலவுக்கு மாதம் ஒன்றுக்கு நூற்றைம்பது ரூபாய் வெகு குறைவு என்று எடுத்துரைத்திருப்பதாக கூறியதை காகா காலேல்கர் நினைவுகூர்கிறார்.
காகா காலேல்கர்:-நீங்கள் இந்தப் பணத்தை இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்போவதில்லை. நீங்கள் எங்கள் மக்களின் பணத்தை எடுத்துத்தான் செலவு செய்யப்போகிறீர்கள், அவ்வகையில் அது என் பணமே, என் பணத்தைத்தானே நீங்கள் செலவு செய்ய விரும்புகிறீர்கள்?” என்று மகாத்மா காந்தி முறுவலித்துக்கொண்டே, “எனக்காக நீங்கள் முப்பத்தைந்து ரூபாய்க்குமேல் செலவு செய்வதை நான் விரும்பவில்லை. தயவு செய்து அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். ஏனெனில் அது என் பணம். அது என் நாட்டுப்பணம், அதை நீங்கள் வீண் செய்வதை நான் விரும்பவில்லைஎன்றார்.
சொல்பவர்:-சிறையில் உடற்பயிற்சிக்காகச் சிறு தோட்டம் இருந்தது. மழைகாலத்தில் தான் உபயோகித்த பொருள்களை உலரவைப்பதற்காகக் காலேல்கர் அந்தத் தோட்டத்தில் கணப்பு மூட்ட விரும்பினார்.
காகா காலேல்கர்:- ஒருநாள் சருகுகளுக்காக வேண்டிக் கிளையை வெட்டிவிட்டேன். காந்திஜிக்குக் கோபம் வந்துவிட்டது. நீங்கள் என்ன நினைத்தீர்கள்? மரத்திலுள்ள இலைகளையெல்லாம் இம்மாதிரி துடைத்து எடுத்திருக்கக்கூடாது. உங்களுக்குத் தேவையான இலைகளை மட்டுமே பறித்திருக்க வேண்டும். அப்படிப் பறிப்பதற்காக நீங்கள் மரத்திடம் மன்னிப்பும் கேட்டுத்தான் எடுக்க வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே மரத்தின் இலைகள் முழுவதையும் இப்படி மொட்டையடித்திருக்கக் கூடாதுஎன்று சொன்னார். நான் சொன்னது போல் அவரது வாழ்க்கை முழுவதும் சின்னஞ்சிறு விஷயங்களும் கன ஜாக்கிரதையாகவும், கவனமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தன. அவர் நாள் முழுவதும் நூற்பார். நூற்றுக்கொண்டே பகவத் கீதையைப் படிப்பார். மராட்டி மொழியைக் கற்பார் அல்லது கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பார்.

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – இந்தியாவின் வெற்றி - 2

$
0
0
Courtesy: Emaze

சொல்பவர்:- சிறையிலே வேலையின்றிச் சும்மா இருப்பதுஎன்ற பிரச்சினையே அவர் விஷயத்தில் எழவில்லை. அவரோடுஇருப்பவர்களையும் அப்படியிருக்க அவர் அனுமதியார். 1942-இல் காந்திஜி தமது மனைவியுடனும், நண்பர்களுடனும் பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறையிருந்தபோது ஏரானமான புத்தகங்களும், செய்தித்தாள்களும் வரும். அவற்றின் தேவையான விவரங்களைக் கத்தரித்து ஒழுங்குபடுத்தி வைப்பார். 24மணிநேரத்திற்கும் நிகழ்ச்சிகள் தயாரித்து அதன்படி நடக்க வேண்டும் என்று சுசிலா நைய்யாரிடம் சொன்னார். ஏழு ஆண்டுகள் அவர்கள் அங்கேயிருக்க வேண்டி வரலாம் என்று எதிர்பார்த்தார்.
சுசிலா நைய்யார்:-எனவே என்னோடு சம்ஸ்கிருதம் படிப்பதற்கான திட்டம் ஒன்று தீட்டினார். பைபிளில் புதிய ஏற்பாடு முழுவதையும் அவர் என்னோடு வாசித்தார். நீங்கள் இதைப் படித்திருக்கலாம். ஆனால் என்னோடு சேர்ந்து படிப்பதில் அதிகப் பயனுண்டுஎன்று சொன்னார். பிறகு அவர் நூற்கும் பொழுது நான் பெர்னார்ட்ஷாவின் நாடகங்களை அவருக்காகப் படிப்பது வழக்கம். நான் ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிப் படித்த பொழுது அதை அவர் எப்படி ரசித்தார் என்பதும் எனக்கு நினைவு இருக்கிறது. குறிப்பாக முடிவில் நான் இப்பொழுது ஒரு துறவி.நீங்கள் விரும்பினால் நான் மீண்டும் உயிர்த்தெழலாம்என்று ஜோன் சொல்லும் கட்டத்தில் முதன் முதலாகப் பாதிரி எழுந்து ஆண்டவன் மீது ஆணை.அப்படிச் சொல்லாதீர், அரசனும் நாங்களும் உங்களை விரும்பவில்லைஎன்று வரும் இந்த இடத்தை அவர் வெகுவாக ரசித்தார். இதுபோன்ற பதிலைத் தம் விஷயத்திலும் இன்றும் யாராவது எங்கேயாவது ஏன் சொல்லக்கூடாது என்று அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஓடியிருக்கலாம். இப்படியாகச் சிறை வாழ்க்கை ஓடியது.
சொல்பவர்:-ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்ற காந்திஜிஇருபத்திரெண்டு மாதங்கள் முடிந்தபிறகு 1924 ஜனவரி மாதம் கடும் குடல்நோயால் பீடிக்கப்பட்டார். அப்பொழுது எரவாடாசிறையிலிருந்து பூனாவுக்கு அருகில் இருக்கும்ஸாஸன்ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். பிரிட்டிஷ் ஸர்ஜனான கலோனெல்மாடக் அவருக்கு உடனே ஆப்பரேஷன் செய்யவேண்டுமென்று சொன்னார். காந்திஜி அதற்கு ஒப்புக்கொண்டார்.ஒருவேளை ஆப்பரேஷன் செய்யும் பொழுது தாம் இறந்துவிட்டால் பெருங்குழப்பம் ஏற்படாதிருக்க வேண்டி முன்னெச்சரிக்கையாகத் தாமே பொது அறிக்கை தயாரித்து ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவர் இறக்கவில்லை. ஆனால் உடல்நிலை தேறிவருவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டார். தமக்கு ஸாஸன் ஆஸ்பத்திரியில் நடந்த சிகிச்சை பற்றி காந்திஜி மிகவும் திருப்தி அடைந்தார். ஆனாலும் மருந்துகளைப் பற்றியும் தமது சொந்த வழிமுறைகளைப் பற்றியும், அவர்தம் கருத்துக்களைச் சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லை. அவருக்குச் சிகிச்சை செய்ய வரும் டாக்டர்களுக்கு இது சற்றுத் தர்மசங்கடமான வேலையாக இருந்தது. அவர்களில் ஒருவர் பி. ஸி. ராய்.
பி. ஸி. ராய்:-தமது சொந்த சிகிச்சைகளைப் பொறுத்தமட்டில் காந்திஜி மிகவும் சிக்கலான மனிதர். ஏனெனில் அவர் தமது உள்ளத்தையும், உடலையும், கவனித்துக் கண்காணிக்கும் பொறுப்பைத் தமது உள்ளத்திடம் ஒப்படைத்திருந்தார். ஆகையால் ஒரு குறிப்பிட்ட மருந்து தன் நோயைத் தீர்க்க உதவுகிறதா என்றும், தமது சொந்த முறை பயன்படுகிறதா என்றும் முயன்று பார்க்கவே விரும்பினார். அதனால் அவர் கூடியவரை பிற மருந்துகளைத் தவிர்க்கவே முயன்றார்.
சொல்பவர்:-1925-இல் காந்திஜி இரத்தக் கொதிப்பினால் பாதிக்கப்பட்டார். டாக்டர் ராய் அவருக்கு ஓய்வும், உறக்கமும் அளிக்க வேண்டி வேறு ஒரு டாக்டரை அனுப்பி வைத்தார்.
பி. ஸி. ராய்:-அப்பொழுது அவர் இங்குமங்கும் அலைந்துகொண்டும் அதிகமாக வேலை செய்துகொண்டும் இருந்தார். டாக்டர் அங்கே சென்றார். அவரைப் பார்த்ததும் காந்திஜி, “நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் டாக்டர்என்று கேட்டார். நீங்கள் சற்றுத் தூங்குவதற்காக மருந்து சாப்பிட வேண்டும்என்று டாக்டர் கூறினார். ஓ! நான் தூங்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நல்லது எனக்கு இரண்டு நிமிடம் அவகாசம் கொடுங்கள்என்று கூறித் திரும்பிவந்தார். அவர் சொன்ன சொற்படி இரண்டு நிமிடங்களில் ஆழ்ந்து தூங்கியும் போனார்.
சொல்பவர்:-எண்ணும் எண்ணங்களுக்கும், எடுக்கும் முடிவுகளுக்கும் ஏற்ப காந்திஜியின் இரத்த ஓட்டம் ஏறி இறங்குவதை மற்றொரு டாக்டரான கில்டர் கவனித்திருக்கிறார்.
எம். டி. கில்டர்:-ஒரு முக்கியமான விஷயம் பற்றி முடிவு எடுக்க நேரும் பொழுது காந்திஜி பல விஷயங்களை வெகு கவனமாகச் சிந்திப்பது வழக்கம். அப்படிச் சிந்திக்கும் போதுகளில் அவரது இரத்த அழுத்தம் அதிகமாகும். ஒரு விஷயத்தைப்பற்றிப் பலரிடமும் கேட்டறிந்த பின் அதிகாலையில் எழுந்துயோசித்து முடிவு எடுப்பது அவர் வழக்கம். தமது அந்தராத்மாவின் உட்குரலைக் கேட்கும் பொருட்டே தாம் விடியற்காலையில் எழுந்திருப்பதாக அவர் கூறுவார். அவர் மனத்தீர்வு கண்டுவிட்டால் இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அவரது தீர்மானம் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், படாவிட்டாலும் பொதுமக்கள் அவரது முடிவைப் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் தாம் எடுத்த முடிவிலிருந்து ஒரு மயிரிழைகூட அவர் விலகமாட்டார். தாம் எடுத்த முடிவு சரியே என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார். அதன்பிறகு அவரது இரத்த அழுத்தம் ஒருபோதும் மாறுபட்டதில்லை.
சொல்பவர்:-தமக்கு அளிக்கப்பட்ட மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டதா என்பதும் காந்திஜியின் உள்ளத்தை வாட்டும். ஒரு தடவை நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருக்குச் சிபாரிசு செய்த மருந்து வெளிநாட்டிலிருந்து வந்தது என்று டாக்டர் ராய் அவரிடம் சொல்லவேண்டி வந்தது. இன்னொரு டாக்டர் அவர் காலையிலும் மாலையிலும் வாய் கொப்பளிப்பதற்குப் பயன்படுத்தும் சோடா பைகார்பனேட் இந்தியாவில் தயாரித்ததல்ல என்று குறிப்பிட்டார்.
பி. ஸி. ராய்:-அவர் மாட்டிக்கொண்டார். என்ன பதில் சொல்வது என்று புரியாது திணறினார். பிறகு நீங்கள் எனக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கல்கத்தாவிலிருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். இலவசமாக எனக்குச் சிகிச்சை செய்ய வந்தது போல் என் நாட்டின் நாற்பது கோடி மக்களுக்கும் இலவசமாகச் சிகிச்சை செய்வீர்களா?” என்று கேட்டார். நல்ல சிக்கலான கேள்வி! மாட்டேன்.எல்லோருக்கும் இலவசமாகச் சிகிச்சை செய்யமாட்டேன். நான் சிகிச்சை செய்பவர்களிடம் பணம் பெற்றே தீருவேன். எல்லோருக்கும் இலவசச் சிகிச்சை செய்வதென்றால் நான் வாழ்வது எப்படி?” என்று கேட்டுவிட்டு, “பாருங்கள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்குச் சிகிச்சை செய்வதற்காக நான் இங்கு வரவில்லை. இந்தியாவின் நாற்பது கோடி மக்களுக்குப் பிரதிநிதியாக எனக்குத் தோன்றும் ஒரு மனிதருக்குச் சிகிச்சை செய்யவே வந்திருக்கிறேன். அவருக்குச் சிகச்சை அளிப்பதன் முலம் இந்தியாவிலுள்ள நாற்பது கோடி மக்களுக்கும் சிகிச்சை அளிக்கிறேன்.என்றேன். நீங்கள் ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் நாலாம் தர வக்கீலைப் போல் பேசுகிறீர்கள். கொடுங்கள் அந்த மருந்தை அருந்துகிறேன்என்றார் அவர். அந்த ஒரே சமயத்தில்தான் அவர் ஏதோ சிலவகை மருந்துகளைச் சாப்பிட்டிருக்கிறார். (சிரிப்பு)
சொல்பவர்:-ஒருவர், அது காந்தியாகவே இருப்பினும் சரி நாற்பது கோடி இந்திய மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்கமுடியுமா? இது வெறும் கொள்கை அளவு ஆதரிசமோ அல்லது அலங்கார விந்நியாசமோ அல்ல. அரசியல் பிரச்சனையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காந்திஜி மக்களுக்கு உரிய முறையில் பணிபுரிந்தார். அதை அவர் பெருவாரியான மக்களின் அபிப்பிராயம் என்றே சொல்லுவார். ஆனால் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கும் இந்து சாதிப்பிரிவினைகளில் எழுந்த தீண்டாதாரது பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவேண்டியிருந்தது. புரையோடிப்போயிருந்த கருத்துக்களை விட்டு மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குடல் சம்பந்தமான நோய்க்கு இரணசிகிச்சை செய்துகொண்ட எட்டாவது மாதத்தில் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகக் காந்திஜி வரலாற்றுச் சிறப்பு கொண்ட உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டார். இது இருபத்தொரு நாள் நீடித்தது. 1932-இல் மேற்கொண்ட மற்றொரு உண்ணாவிரதமோ தீண்டாதாரின் நிலை பற்றி பிரிட்டிஷ் அரசாங்கமே ஏற்கும் அளவுக்கு எரவாடா ஒப்பந்தத்தில் முடிவுற்றது. அவரது நண்பர்களாகவும் உதவியாளர்களாகவும் இருந்த டாக்டர்களுக்கு இந்த உண்ணாவிரதம் மிகப்பெரும் கவலையைத் தந்தது. உணவைத் தள்ளியதோடு மட்டுமன்றி அவர் மருந்துகளையும் தவிர்த்துவிட்டார்.
பி. ஸி. ராய்:-ஆம்.மருந்து அருந்தவில்லை. வயிற்றைச் சுத்தம் செய்வதற்கும், உடம்பைப் பிடித்துவிடுவதற்கும், வெந்நீரால் உடம்பைத் துடைத்துவிடுவதற்கும் மட்டுமே அனுமதித்தார். இந்த இயற்கையான உடற்சிகிச்சையைத் தவிர அவர் வேறு மருந்தே அருந்தவில்லை.
சொல்பவர்:-நீண்ட உண்ணாவிரதத்தைப் பற்றி வைத்திய ஆலோசனையும் அவர் கேட்கவில்லை.
பி. ஸி.ராய்:-இல்லை, இல்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பது கடவுள் சித்தம் என்றே அவர் உணர்வது வழக்கம். உள்ளுணர்வே மனிதனது செயல்களுக்கு எல்லாம் வழிகாட்டி என்று எண்ணும் மக்களில் அவரும் ஒருவர். உண்ணாவிரதம் மேற்கொண்டதைப் பொறுத்தவரை அவர் யார் சொல்லையும் கேட்கவில்லை.
சுசீலா நைய்யார்:-கவனித்துப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர நாங்கள் அதிகமாக வேறு எதுவும் செய்யவேண்டியிருக்கவில்லை. இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் காந்திஜி கொண்டிருந்த தத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சுவை மிகுந்ததாகவும் இருந்தது. ஒரு சத்யாக்கிரகி கடைசி வழியாகப் பயன்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்த ஆயுதம் உண்ணாவிரதம் என்று அவர் எண்ணியிருந்தார். இதனால் மூன்று பயன்கள் உண்டு. முதலாவதாக உண்ணாவிரதம் இருந்தால் இயல்பாகவே அமைதி ஏற்படும். ஆசுவாசம் கிட்டும். படபடப்போ ஆத்திரமோ ஏற்படாது. சாந்தமாக உட்கார்ந்து எடுத்த முடிவு சரியா தவறா என்று உள்நோக்கிச் சிந்திக்க முடியும். ஏதாவது தவறு தெரிந்தால் திருத்திக்கொள்ளலாம். மாற்றிக்கொள்ளலாம். இரண்டாவதாக உள்ளம் தூய்மை பெறும். ஒளி வேண்டி - வழி வேண்டி -உள்ளத் தூய்மை வேண்டிப் பிரார்த்திக்கலாம். மூன்றாவதாகத் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதன் மூலம் எதிராளியின் உள்ளத்தை உருகவைக்கலாம்.
எம். ஆர். ஜெயகர்:-பல சந்தர்ப்பங்களில் அவர் அப்படி நினைக்காமற்போனாலும் அது ஓர் அச்சுறுத்தலாக அரசியல் அச்சுறுத்தலாக இருந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் தவறான முடிவுக்கு அவசரமாக வருவதற்கு ஓர் அரசியல் பயமுறுத்தலாகப் பயன்பட்டதென்பதும் எனக்குத் தெரியும். இன்னும் விபரமாக ஆழ்ந்து அமைதியாகச் சிந்தித்துச் சிறந்த மாற்று வழிகளையும் அபிப்பிராயங்களையும் கூடக் கேட்டிருக்கலாம். பல மக்கள் இதை உண்மையாகவே ஓர் அச்சுறுத்தல் என்றுதான் சொன்னார்கள். காந்திஜி இறந்துவிடுவார் என்றும், அப்படி ஏற்பட்டால் என்ன ஆகிவிடுமோ என்றும் எண்ணினார்கள். அந்தச் சமயத்தில் நடந்த முக்கியப் பேச்சுவார்த்தைகளின் நினைவு எத்தகையதாயிருக்கும் என்பதை நாம் இப்பொழுது கற்பனைக் கண்கொண்டு காணமுடியும்.
சொல்பவர்:-அது சொந்த விஷயம். சிக்கலான விஷயம் என்று டாக்டர் ஜெயகர் நினைக்கிறார். காந்திஜிக்கு இது நிச்சயமாகச் சொந்த விஷயம்தான். உண்ணாவிரதத்தில் தத்துவங்களைப்பற்றி அவர் எழுதியுள்ள, பேசியுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் தம் தாயிடம் அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையே காட்டும். ராஜகுமாரி அமிர்தகௌர் அவரது குழந்தைப் பருவக் கதைகளை அடிக்கடி கேட்டிருக்கிறார்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:- அவர் தம் தாயாருடன் இருந்த காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நன்கு நினைவு வைத்திருந்தார். குறிப்பிட்ட நாட்களில் அவள் உண்ணாவிரதம் இருப்பதும் அவர் மனத்தில் பதிந்திருந்தது. ஆனால் அவள் ஏன் பட்டினி கிடக்கிறாள் என்பதுதான் புரியாமல் இருந்திருக்கிறது. அப்படிப் பட்டினி கிடப்பது அவருக்குப் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. அவர் சுற்றிச்சுற்றி வந்து சந்திரன் தென்படுகிறானா? நட்சத்திரங்கள் தென்படுகின்றனவா? அல்லது வேறு ஏதாவது தோன்றித் தம் தாயாரின் உண்ணாவிரதத்தை நிறுத்தி உணவு உட்கொள்ளச் செய்யாதா என்று பார்த்துக்கொண்டேயிருப்பார். பிறகு பெரியவரான பின்னர் தாயார் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் மதச்சடங்குகளைக் கடைப்பிடிப்பதில் ஏன் இவ்வளவு தீவிரமாய் இருந்தார் என்பதையும் உணர்ந்துகொண்டார். அது வெறும் மதச்சடங்காக மட்டும் இல்லாமல் அவளது ஆத்மீக வாழ்க்கையில் ஊறியும் போயிருந்தது.
சொல்பவர்:- காந்திஜி மேற்கொண்ட உண்ணாவிரதம் அவரைப் பொறுத்தவரையில் தனித்தன்மை வாய்ந்தது. அது அவரது தனிப்பட்ட விஷயம். அடுத்தபடியாக அவர் விரும்பியது அவரைப் பின்பற்றுவோர்களின் சுய கட்டுப்பாடு ஆகும். குறிப்பிட்ட உப்பு சட்டத்தை மீறுவதற்கு சபர்மதியிலிருந்து அவருடன் அணிவகுத்துக் கடற்கரைக்குச் செல்லும் குழுவிற்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். அவர் சட்டத்தை மீறுவதற்கும் இதைத் தேர்ந்தெடுத்ததற்கும் காரணம் இது நாட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளக்கூடிய எளிய செயலாக இருந்தது. அதோடு பெரும் போராட்டத்திற்கு அறிகுறியாகவும் இருந்தது.
அன்னதா சங்கர்ராய்:-நாம் சட்டத்தை மீறப்போகிறோம் என்பதை அரசாங்கத்திற்குத் தெளிவாக்குவதன் பொருட்டே நாம் இந்தச் சட்டத்தை மீற வேண்டும் என்று அவர் கூறினார். இந்த மிக எளிய முறையைத் தவிர அவர் வேறு எந்த முறையையும்தேர்ந்தெடுக்கவில்லை. இது ஆரம்பத்தில் குழந்தைத்தனமான பயித்தியக்காரக் கனவுபோல் பலருக்குத் தோன்றியது. ஆனால் சபர்மதியிலிருந்து தண்டிக்குச் சென்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாட்டில் எத்தகைய பலம் பெருகப்போகிறது என்பதை அவர்கள் சிந்தித்தே பார்க்கவில்லை.
பியாரேலால் நைய்யார்:-தம்முடன் செல்ல அவர் எழுபத்தொன்பது பேர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
சொல்பவர்:-இந்த ஒழுங்குமுறைகள் சபர்மதி ஆசிரமத்தில் வகுக்கப் பெற்றன. ஆனால் அவை வழக்கமான ஆசிரமங்களில் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகளுக்கு மாறானவை. பெண்கள் உப்புப் போராட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் மீரா பென் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சியைப் பார்த்துள்ளார்.
மீரா பென்:-இந்த ஒழுங்குமுறைகளைப் பயிற்றுவிப்பதில் கடுமையும், கண்டிப்பும் கடைப்பிடிக்கப்பட்டன. ஒழுங்குமுறையில் அதிக நாட்டம் செலுத்தாத ஓர் ஆசிரமவாசியைப் பற்றி எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரும் தினசரிக்குறிப்பு எழுதவேண்டும். அவை காந்திஜியிடம் கொடுக்கப்படும். ஒருவனுக்குச் செய்ய என்ன இருக்கிறது? வேலை, வேலை, வேலை! என்று அவர் தம் நாட்குறிப்பில் எழுதியிருந்தார். அவருடைய உணர்ச்சி அதில் கொப்பளித்தது. உண்மையில் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொருவரும் காலை முதல் இரவு வரை வேலை செய்யவேண்டியிருந்தது. காலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை என்ன என்ன செய்ய வேண்டும் என்ற திட்டக்குறிப்பு என்னிடமிருந்தது. அதுவும் எந்த நிமிஷம் என்ன செய்யவேண்டும் என்றும் குறிக்கப்பட்டிருந்தது.
சொல்பவர்:-அவர்களில் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீதாரணி ஆவார். இன்னும் அவரது நாள் குறிப்பு இருக்கிறது.
கே. ஸ்ரீதாரணி:-அந்த நாள் குறிப்பை நான் விலைமதிக்க முடியாத பொருள்களில் ஒன்றாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். அதில் இது நல்லது, இது கெட்டது, நீங்கள் இதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். பிறகு அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் காந்திஜியின் கைப்படக்குறிப்புகள் இருக்கின்றன. எங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம்கூட அந்த நாள் குறிப்பில் பதிவுசெய்து ஒவ்வொரு நாளும் மாலையில் காந்திஜியிடம் சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் தூங்குவதற்கு ஒரு பாயைத்தவிர வேறு எதையும் உபயோகிக்கக்கூடாது. பொதுவாக நாங்கள் திறந்த வெளியில் தூங்குவோம். ஒரு முழு நிலவு நாளில் பக்கத்து மனிதரோடுபேசவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. காலைப் பிரார்த்தனையின் பொழுது விதிமுறைகளை மீறிய எங்கள் இருவரைப்பற்றியும் காந்திஜியிடம் எங்கள் தலைவர் புகார் செய்தார். அதனால் காந்திஜி எங்களைக் கண்டிப்பும், கனிவும் கொண்ட பார்வையோடு நோக்கிப் பிறர் முன்னிலையில் கடிந்து கண்டித்தார். அன்றைய உபதேசம் முழுவதும் காரணம் எதுவும் கேட்காது சொன்னதை செய்து மடிவதுதான் என்று வரும், டென்னிசனுடைய கருத்துக்களைச் சுற்றிப் படர்ந்ததாகவோ, அல்லது அதேபோன்ற வேறு கருத்துக்களைக் கொண்டதாகவோ இருந்தது. ராணுவ வீரனின் கடமைகள் யாவை என்பது பற்றி விவரித்தார். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றும் கூறினார். விதிமுறைகளை மீறிச் செயற்பட்டு எவனாலும் எதையும் சாதிக்க முடியாதுஎன்றும் விளக்கினார்.
சொல்பவர்:-பயித்தியக்காரனின் கனவான இந்தத் திட்டம் எளிதாகவும் நாடகப்பாங்கு நிறைந்ததாகவும் இருந்தது. மெதுவாகத் தொடங்கிய பிரசாரம் மலை போன்று சிறப்புடைதாயிற்று. குறிப்பிட்ட தினத்தன்று காந்திஜியும் ஒழுங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அவரது சீடர்களும் அணிவகுத்துச் சபர்மதி ஆசிரமத்தை விட்டு முன்னூறு கிராமங்களின் வழியாகத் தண்டியென்று சொல்லப்படும் சிறு கடற்கரையை நோக்கிப் பயணமானார்கள். இருபத்து நான்கு நாட்களில் அங்கு போய்ச் சேரவேண்டுமென்று திட்டமிட்டிருந்தனர். அங்கே கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறுவதற்குக் காந்திஜியே அடையாளமாக ஒருபிடி உப்பை எடுப்பதாகவும், அதன் பிறகு நாடு முழுவதும் அவரது உதாரணத்தைப் பின்பற்றுவதாகவும் தீர்மானமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்பு வைசிராய்க்குக் காந்திஜியின் நோக்கங்களையும் காரணங்களையும் அறிவித்துவிட வேண்டுமென்றும் முடிவாயிற்று. ரெஜினால்ட் ரெயினால்ட்ஸ் என்று ஓர் ஆங்கில இளைஞர் ஆசிரமத்திற்குப் புதிதாக வந்திருந்தார். தில்லியிலிருக்கும் இர்வின் பிரபுவுக்கு அன்பார்ந்த நண்பருக்குஎன்று தொடங்கும் காந்திஜியின் கடிதத்தைக் கொண்டுபோய்க் கொடுக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரெஜினால்ட் ரெயினால்ட்ஸ்:-காந்திஜி இதற்கு என்னைப் பயன்படுத்திக்கொள்வதன் நோக்கத்தை நான் புரிந்துகொண்டேன். இந்தியர்கள் லட்சியத்திற்காகப் போராடுகிறார்களே தவிர பிரிட்டிஷாருக்கு எதிராக அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவேதான் இந்த ஏற்பாடு. டெல்லி பயணத்தில் எனது கடைசி நேர முயற்சி தோல்வியடைந்தது. உப்பு யாத்திரைக்கு முதல் நாள் ஆசிரமம்முழுவதும் பார்வையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது
சொல்பவர்:-அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவினுடைய பத்திரிகாசிரியர் குலோர்னி போல்டன் என்ற வேறொரு ஆங்கிலேயர் காந்திஜியை பேட்டி கண்டார். அடுத்த நாள் 1930மார்ச் மாதம் 12ஆம் தேதி யாத்திரை தொடங்கியது.
குலோர்னி போல்டன்:-காந்திஜி தமது நண்பர்கள் புடைசூழ நடந்துகொண்டிருந்தார். அது ஒருவகையில் தீவிரமான மந்த கட்டமெனத் தோன்றியது. மகிழ்ச்சியோ, சந்தோஷ ஆரவாரமோ எழவில்லை. கம்பீரமான ஊர்வலமாகவும் தோன்றவில்லை. சொல்லப்போனால் ஒருவகைக் கேலிக்கூத்தான ஊர்வலம் போலவே தோன்றியது. இருப்பினும் இந்த யாத்திரை ஆரம்பமாகிவிட்டது. அன்று மாலை காந்திஜி போன பாதையில் சென்று அவர் முதலில் தங்கப்போகிற இடத்தில் அவரைக் காணவேண்டுமென்று நினைத்தேன். நான் புழுதிபடிந்த அந்தப் பாதையில் ஓரிரு விவசாயிகளைக் கடந்து சென்றேன். அவர்கள் தங்கள் முறையில் வணக்கம் செலுத்தினார்கள். ஒரு விதத்தில் பெரிய சமுதாயப் புரட்சி தொடங்கியிருந்தது என்றாலும் அது இந்தியர்களது இயல்பான பண்பாட்டைப் பாதிக்கவில்லை. இறுதியாக நான் பெரிய முற்றத்தைக் கொண்ட ஒரு வீட்டை அடைந்தேன். காந்திஜியைப் போன்ற வயது முதிர்ந்த ஒரு மனிதர் ஒரு நாளில் இவ்வளவு தூரம் நடக்க முடிந்ததை எண்ணி வியந்தேன். அங்கே அவர் மக்கள் புடைசூழ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அமைதி மிகுந்த அந்தச் சூழலிலே இடையிடையே காந்திஜியின் குழந்தைத்தனமான விந்தைச் சிரிப்பு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த யாத்திரை எப்படி முடியும் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் தொடங்கிய இந்தப் போராட்டம் எங்கு போய் முடியும் என்றும் அவருக்குத் தெரியவில்லை. ஆயினும் அந்த விந்தை மிகுந்த அந்தக் கூட்டம் தன் போக்கில் ஒரு புதுமையான வரலாறு சமைப்பதையும் கண்டேன். ஐரோப்பிய முறைக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது. அது உள்ளத்தை உருக்குவதாகவும் இருந்தது.
பியாரேலால் நைய்யார்:- நாங்கள் கடற்கரையை நோக்கிமுன்னேறிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் நாட்டின் கவனம்முழுவதும் அஹிம்சை முறையில் நடைபெறும் இந்தப் போராட்ட நிகழ்ச்சிகளிலேயே பதிந்திருந்தது.
சொல்பவர்:-இந்தியாவில் மட்டும் அல்ல. பயிற்சி மிகுந்த பத்திரிகாசிரியர்களான ஸ்ரீதாரணி, ஸ்ரீ கே. ரங்கஸ்வாமி ஆகிய இருவரும் உப்பு சத்தியாக்கிரகத்தின்போது கையாண்ட முறைகளின் மூலம் உப்பு சத்தியாக்கிரகச் செய்திகள் உலக முழுவதும் எத்தகைய விளைவுகளை உண்டு பண்ணிற்று என்பதை நன்கு அறிவார்கள்.
கே. ஸ்ரீதாரணி:-அக்காலத்தில் நடந்துவந்த பத்திரிகைகள் பிரிட்டிஷாருக்குச் சாதகமானவையாக இருந்தாலும் அவற்றில் பணிபுரியும் நிருபர்கள் பெரும்பாலானவர் இந்தியர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒன்று விடாமல் எங்களுக்குச் செய்திகளை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். காந்திஜி எங்கு சென்றாலும், அது தூரத்திலுள்ள ஒரு சிறு கிராமமாகவோ அல்லது காட்டை ஒட்டிய பகுதியாகவோ இருந்தாலும் அது ஒரு வகையில் நாட்டின் முக்கிய மையமாக அமைந்தது.தம்முடன் பணிபுரிபவர்களிடமிருந்தும் தமது கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் அவர் பல தந்திகளையும் கடிதங்களையும் பெற்றிருக்கிறார்.
கே. ரங்கஸ்வாமி:-தாம் அனுப்பும் செய்திகளில் கூட அவர் மிகவும் கவனம் காட்டிவந்தார். ஏதேனும் செய்தித்தாள்கள் அவர் எழுதியதில் ஒருவார்த்தையைத் திருத்தம் செய்யும் உரிமையை எடுத்துக்கொண்டாலும் கூட அவர் சகிக்கமாட்டார். ஏனெனில் அவர் தாம் கொடுக்கும் செய்திகளையும் குறிப்புகளையும் இம்மியளவும் மாற்றாமல் அப்படியே பிரசுரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். அவர் தம் கருத்துக்கள் ஒருபோதும் தவறுதலாக பிரசுரமாகாத வண்ணம் பார்த்துக்கொள்வார்.
சொல்பவர்:-யாத்திரையில் கலந்துகொண்ட பியாரேலாலின் கருத்துப்படி, அவர்களது பிரயாணம் தொடரத் தொடர காந்திஜி தம் நெறிமுறைகளைக் கடுமையாக்கினார்.
பியாரேலால் நைய்யார்:-உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு ஏழு தினங்கள் இருக்கும்போதே நாங்கள் தண்டியை அடைந்துவிட்டோம். காந்திஜி அங்கேயே தங்கினார். அந்த ஏழு தினங்களிலும் எங்களுக்குச் சமைத்த உணவே இல்லை. சமையலுக்காக அடுப்பு மூட்டவேயில்லை. வறுத்த தானியங்களும் கொழுப்புக்காக, அரை அவுன்ஸ் நெய்யும் இரண்டு அவுன்ஸோ நாலு அவுன்ஸோ எத்தனையென்று சரியாக நினைவில்லை, பழுப்புச் சர்க்கரையும் தான் எங்களுக்கு ஒருவாரத்து ரேஷனாகத் தரப்பட்டது. யாராவது நோயுற்றாலும், யாருக்காவது வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டாலும் அவர் தகுதியற்றவராகக் கருதப்பட்டார். குறிப்பிட்ட தினத்தன்று அவர் விடியற்காலையில் எழுந்திருந்து எங்களையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றார். ஹிந்துக்களின் வழக்கப்படி அவர் முதலில் கடலில் ஸ்நானம் செய்தார்.
கே. ஸ்ரீதாரணி:-அதிகாலை நேரம். தண்டி கடற்கரையில் அழகு கொழிக்கிறது. அவர் தண்ணீருக்குள் இறங்கிவிடவில்லை. கடற்கரையோரமாக மணற்பகுதியில் நடந்தார். கடல் தண்ணீர் வந்துபோன இடத்தில் கொஞ்சம் உப்புப் படிந்திருந்தது. அந்த உப்பை அவர் பொறுக்கி எடுத்தார். ஒரு சிட்டிகையளவுதான். அதைப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவரிடம் கொடுத்தார். ஆணா பெண்ணா பெயர் என்ன என்பதெல்லாம் எனக்கு இப்போது நினைவில்லை. அதுவே உப்புச் சட்டத்தை மீறுவதற்கு அடையாளமாக அமைந்தது. சில புகைப்படக்காரர்கள் படம் எடுத்தார்கள். அதன் பிறகு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர் தம் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார். எங்களைச் சூழ்ந்திருந்த குறிப்பாகக் காந்திஜியைச் சூழ்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
சொல்பவர்:-காந்திஜி தொடங்கிய இந்தச் சட்டமறுப்பைத் தொடர்ந்து இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் அது எப்படிப் பரவியிருந்தது என்பதைக் காங்கிரஸ் சார்புள்ள பத்திரிகைகள் பிரசுரித்தன. அரசியல் ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காந்திஜியின் சாத்வீகப் போராட்ட முறையைப் பின்பற்றி வெற்றிகரமாகவே நடந்தது. இதற்கு ஒருசில விதிவிலக்கும் உண்டு. சிட்டகாங் ஆயுதசாலைத் தாக்குதல் அவற்றில் ஒன்றாகும். இயக்கம் அஹிம்சை முறையில் நடைபெற்றதால் போலீசுக்குப் பெரும் தலைவேதனையை அளித்தது. நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியாமல் திணறினார்கள். ஆனால் அரசாங்கமும் வைசிராயும் இப்போராட்டத்தை அடக்கியே தீருவது என்று உறுதியாக்கிக்கொண்டார்கள். குறைந்தது அறுபதாயிரம் மக்கள் கைது செய்யப்பட்டனர்.மே மாதம் 4ஆம் தேதி 5ஆம் தேதிக்கிடையேயுள்ள நள்ளிரவில் காந்திஜியும் கைது செய்யப்பட்டார். கைது செய்வதை அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தயாராக இருந்தார். தாமே அதை வருந்தியும் வரவேற்றார். அவர் கடற்கரைக்கு அருகில் ஒரு கிராமத்து மாமரத்தடி குடிசை ஒன்றில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரை எழுப்பிக் கைது செய்யுமாறு உத்தரவு வந்தது. 1827வருடத்திய கிழக்கிந்திய கம்பெனியின் விதிகள்படி பம்பாய் கவர்னர் காந்திஜியின் நடவடிக்கைகள் பயங்கரமானவை என்று கருதுவதால் அவர் கைது செய்யப்படுவதாகவும் அந்த உத்தரவில் கண்டிருந்தது.
கே. ஸ்ரீதாரணி:-திடீரென்று ஒருநாள் இருள் சூழ்ந்த இரவில் போலீஸ்காரர்கள் வந்தார்கள். நாங்கள் அனைவரும் கலவரமுற்றோம். எங்களைக் காட்டிலும் போலீஸ்காரர்கள் கலவரமுற்றார்கள். ரகளை நடக்கக்கூடும் என்று எண்ணி அவர்கள் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கொண்டுவந்திருந்தனர். இத்தனை குழப்பத்திற்கும் இடையில் சிறிதளவுகூடப் பாதிக்கப்படாமல் அமைதியுடனும் திடசித்தத்துடனும் ஒருவர் இருந்தார் என்றால் அவர் காந்திஜிதான். அவர் போலீஸ் அதிகாரியிடம் பல் தேய்த்துவர அவகாசம் கேட்டார். இந்திய முறையில், காந்திஜி போலீஸ்காரர்களுக்கும், எங்களுக்கும் முன்னிலையில் ஒரு குச்சியினால் பல் தேய்த்தார். அவர் போலீஸ் அதிகாரியிடம் வாரண்டை வாசிக்கும்படிச் சொன்னார். அதோடு எந்தவிதமான அசாதாரண நிகழ்ச்சியும் நடவாதது போல் நடந்துகொண்டார்.
சொல்பவர்:-ஒன்பது மாதங்கள் சென்றபின் ஒருநாள் 1931ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி பிற்பகலில் வேறு ஒன்று நடந்தது. சர்ச்சிலின் புகழ்வாய்ந்த கூற்றுப்படி அரசத்துரோகம் செய்யும் அரை நிர்வாணப் பக்கிரி ஒருவர் சக்கரவர்த்தியின் பிரதிநிதியான வைசிராயை அவர் மாளிகைக்குச் சென்று சம அந்தஸ்தோடு பேட்டி கண்டு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அசாதாரண நிகழ்ச்சியாகும். காந்திஜி வைசிராயோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது எப்படிப் பார்த்தாலும் இது முதல் தடவை அல்ல. இர்வின் பிரபுவுக்கு முன்பு இருந்த வைசிராயான ரீடிங் பிரபுவால் காந்திஜி வரவேற்கப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு லார்ட் செம்ஸ்போர்டு அவர்களாலும் வரவேற்கப்பட்டிருக்கிறார். இர்வின் பிரபு அவர்களையும் சந்தித்திருக்கிறார். இருந்தபோதிலும்சம அந்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதுஎன்ற புரட்சிச் சொற்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவ்வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தித் தயாரித்துப் பத்திரம் கையெழுத்தாகப் பதினைந்து நாட்கள் பிடித்தது. அது காந்தி -இர்வின் ஒப்பந்தம் என்று புகழ் பெற்றது. பிற்காலத்தில் இர்வின்பிரபுவாக வந்தஹாலிபாக்ஸ் பிரபு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் வைசிராயாக இருந்த காலத்தில் நடந்த முக்கியமான சம்பவத்தைமீண்டும் நினைத்துப்பார்க்கிறார்.
ஹாலிபாக்ஸ் பிரபு:-நானும் காந்திஜியும் சந்திக்கமுடிந்துபேச்சுவார்த்தை நடத்தி விவாதித்தால் பலவித இடையூறுகளைக்கடந்துவிடமுடியும் என்றும், பிடியும் சற்றுத் தளரும் என்றும் இந்தியா சார்பிலுள்ளவர்கள் வற்புறுத்திவந்தார்கள். அவர்கள் யார்யார் என்பதை இப்பொழுது என்னால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை. நெடுநேர யோசனைக்குப் பின் சிறிது சந்தேகத்துனேயே அவரைச் சந்திப்பது என்று முடிவு செய்தேன். அதற்கேற்ப அவருடன் பேச்சுவார்த்தை நடத்த சூழ்நிலை உருவாக்கப்பெற்றது. என் அழைப்பை ஏற்று அவர் என்னைக் காண வைசிராய் மாளிகைக்கு வந்தவர் என் அறைக்கு வந்தார். முதலில் நாங்கள் இருவருமே என்ன பேசுவது என்று வெகு ஜாக்கிரதையாகவே இருந்ததாகத்தான் எண்ணுகிறேன். எங்கள் பேச்சுவார்த்தைகள் முதலில் இடையிடையே முறிந்துபோயின. பிறகு போகப்போக சகஜமாகிவிட்டன. அது ஏன் எப்படி என்று எனக்குத் தெரியாது.
சொல்பவர்:-அதிகார தோரணையின்றி ஒரு முறைக்கு மேலாக தூதுவராக நடந்துகொண்ட ஜி. டி. பிர்லா அவர்களுமே காந்திஜி பேச்சுவார்த்தையைச் சற்று சந்தேகத்துடன் ஆரம்பித்ததாக ஒப்புக்கொள்கிறார்.
ஜி. டி. பிர்லா:-முதல் சந்திப்பில் அவர் மிகவும் கவரப்பட்டுத் திரும்பி வந்தார். நான் அப்பொழுது இர்வின் பிரபுவுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தேன். பனிக்கட்டி உடைந்ததுஎன்ற செய்தியை நான் அவருக்கு (இர்வின் பிரபுக்கு) அனுப்பினேன். ஏனெனில் காந்திஜி இர்வின் பிரபுவைப் பார்த்துவிட்டு வந்ததும் முதன் முதலாக என்னிடம் இர்வின் பிரபு நல்ல எண்ணங்களைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகத் தோன்றுகிறார்என்று சொன்னார்.
ஹாலிபாக்ஸ் பிரபு:-போலீஸார் மிகவும் கொடுமையாகவும் மிருகத்தனமாகவும் நடந்துகொண்டார்கள் என்றும் தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார்கள் என்றும் காந்திஜிபெரிதும் வருந்தினார். ஆகையினால் அவர்களின் அச்செயல்கள் பற்றிஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். அது சரியான திட்டமாக எனக்குத் தோன்றவில்லை என்றும், ஏற்கனவே பலவற்றில் பிளவுபட்டிருக்கும் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒவ்வொன்றைப் பற்றியும் விசாரிக்கத் தொடங்கினால் உண்மையாக என்ன நடந்தது என்பதைப் பற்றி யாருக்குமே நினைவிருக்காது என்றும் அதனால் பொய் சாட்சிகளைத் தயார் செய்வதில்தான் கவனமாக இருப்பார்கள் என்றும் நான் சொன்னது எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. நாங்கள் போலீஸ் தரப்பில் பொய் சாட்சிகளைத் தயாரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் காங்கிரஸ் தரப்பில் பொய் சாட்சிகளைத் தயாரிக்க வேண்டும். இவற்றின் முடிவில் நாம் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பிளவுபடுவோம். ஆகையினால் நம்மால் எதுவும் செய்யமுடியாமற் போய்விடும் என்று கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே இதைத் தம்மால் மறுக்க இயலாது என்று சொன்னார். என்றாலும் அதே சமயத்தில் விசாரணை நடத்தவே வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கருத்தை முறியடிக்க நான் முயற்சி செய்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பட்ட சம்பவம் நடந்திருக்குமானால் அதுபற்றி விசாரிப்பதாகச் சொல்லி செய்வதைத் திருந்தச் செய்யவேண்டாமா என்று கேட்டேன். என்ன செய்தாலும் நன்மை விளையாது என்றுதான் தோன்றியது. ஆனால் அது போதும் என்று நினைக்கவில்லை. நான் நம்பிக்கை இழந்தேன். அதனால் எங்கள் பேச்சுவார்த்தை முழுவதும் முறிந்துவிடும் என்று நான் நினைத்தேன். அதனால் எரிச்சலேற்பட்டது. எனது உணர்ச்சி கட்டு மீறியது. ஏனெனில் அவரை நியாயமற்றவராக நினைத்தேன். நல்லது மிஸ்டர் காந்தி! நான் உங்கள் விசாரணையின் நிபந்தனையை ஏற்கப்போவதில்லை என்று ஏன் கூறுகிறேன் என்றால்என்று சற்றுக் காரசாரமாகவே தொடங்கினேன். அது அவர் காதுகளைக் குத்துகிறாற் போல் இருந்தது. இப்பொழுது ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தாலும் இன்னும் ஆறு மாதத்திற்குள்ளோ அல்லது பன்னிரெண்டு மாதத்திற்குள்ளோ நீங்கள் அரசியல் ஒத்துழையாமையில் ஈடுபடமாட்டீர்கள் என்ற உறுதி எனக்கில்லை. நீங்கள் அப்படிச் செய்யும்போது போலீசுடைய உதவியை நான் நாடவேண்டியிருக்கும். அப்போது அவர்கள் செல்வாக்கு ஓங்கியிருக்க வேண்டுமே ஒழியத் தாழ்ந்திருக்கக் கூடாதுஎன்றேன். அதைக் கேட்டதும் அவரது முகம் பிரகாசமடைந்தது. ” “துரை அவர்களே தென் ஆப்பிரிக்காவில் ஜெனரல் ஸ்மட்ஸ் அவர்கள் நடத்தியது போலவே தாங்களும் என்னை நடத்துகிறீர்கள். என் வழக்கு நேர்மையானது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. போலீஸ் வரம்புக்கு மீறிப் போயிருக்கலாம். அதையும் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அப்படி அவர்கள் அத்துமீறிப் போயிருந்தால் அதற்கு நீங்களோ நானோ அத்துமீறி நடந்தது காரணமாயிருக்கலாம் என்றுகூடக் தாங்கள் சொன்னீர்கள். எப்படியிருப்பினும் வழக்கு தர்ம நியாமானது என்பதை நீங்கள் மறுக்கவில்லை. என் கோரிக்கையை ஏற்க முடியாததால் விடையளிக்க முடியாத காரணங்கள் என்று கூறுகிறீர்கள். எனவே நான் என் கோரிக்கையை விடுகிறேன்என்றார். மூன்று நாட்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை இப்படிமுடிந்தது என்றாலும் அவர் என் மனத்தில் ஆழ்ந்த முத்திரையை பதித்திருந்தார். நிர்வாக விஷயத்தில் சிரம சாத்தியமான விஷயங்கள் கூட விந்தைமிகு தம் விடாப்பிடிக் கருத்துக்களால் வற்புறுத்தி ஏற்க வைக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். அவருக்குப் புறம்பான கடினமான விஷயங்களை வைத்தாலும் அவர் அவற்றை ஏற்று மாற்றக்கூடியவராயிருந்தார். அது தனி சுவை தரும் விஷயமாகும்.
சொல்பவர்:-காந்திஜி தமது சொந்தச் செல்வாக்கையும் அறிவாற்றல் மிகுந்த காரணங்களையும் காட்டிக் காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வந்த கோரிக்கையை விட்டுவிட்டார். நிலைமையைப் பல கோணங்களிலும் ஆராய்ந்து தினமும் பேச்சுவார்த்தை நடந்தது. மாலையில் காந்திஜி தம் சகாக்களுடன் விவாதிப்பதற்காகத் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்றுவிடுவார்.
ஹாலிபாக்ஸ் பிரபு:-நான் காந்திஜியுடன் பேச்சுவார்த்தைகளை முடித்தபோது வியாழக்கிழமை விடியற்காலை இரண்டு மணி இருக்கும் என்று எண்ணுகிறேன். அன்றைக்கு ஒன்பது அல்லது பத்து மணிக்குக் காந்திஜி திரும்பி வந்து, மாலைப் பொழுதில் ஆசிரமத்திற்குப் போனதும் மிகவும் இக்கட்டான பயங்கர நிலை ஏற்பட்டதாக என்னிடம் சொன்னார். அவர் தமது மற்ற இந்திய சகாக்களைச் சந்தித்த பொழுது தம் தாயார் இறந்த பொழுதுகூடக் கண்ணீர் விட்டு அழாத ஜவஹர்லால் நேரு இந்தியாவை காந்திஜி காட்டிக்கொடுத்துவிட்டதாகக் கூறி அவரது தோளிலேயே சாய்ந்துகொண்டு அழுததாகவும் கூறினார். இதைச் சொன்ன அந்தச் சிறிய மனிதர் மிகவும் நிலைதடுமாறிப் போயிருந்தார். நல்லது நாம் இங்கு இருக்க நேர்ந்ததே, நம்மால் இந்த நிலை வந்ததே என்று எண்ணி உள்ளம் சோர்ந்து போகாதீர்கள். இன்னும் சில மணிநேரங்களில் இங்கிலாந்திலிருந்து திரு. சர்ச்சிலும் மற்றவர்களும் நான் இங்கிலாந்தை காட்டிக்கொடுத்துவிட்டதாகக் குமுறப்போகும் செய்தியை நான் தொலைபேசி மூலம் பெறப்போகிறேன். ஆகையால் நான் இங்கிலாந்தைக் காட்டிக்கொடுத்ததாகச் சர்ச்சில் நினைத்தாலும் உங்களது நண்பர்கள் நீங்கள் இந்தியாவைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக நினைத்தாலும் நாம் நிச்சயமாகச் சரியான காரியத்தில்தான் இறங்கியுள்ளோம்என்று அவரை உற்சாகப்படுத்துவதற்காகச் சொன்னேன். அப்பொழுது அவர் இன்னொரு விஷயத்திற்காக நான் உங்களிடம் ஒன்று வேண்டிக்கொள்ள வேண்டும்என்றார்.
சொல்பவர்:-இது ஒரு தனிமனிதனைப் பற்றிய விஷயம். கொலைக் குற்றம் புரிந்தார் என்பதற்காகவும் குழப்பத்தை விளைவித்தார் என்பதற்காகவும் பயங்கரவாதி பகத்சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர் தாய்நாட்டுப் பற்றுக்கொண்டவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் காந்தீய வழியில் அல்ல. அவருடைய செயல்முறைகள் ஆபத்தான உணர்ச்சிகளைக் கிளர்ச்சி கொள்ளச் செய்பவை. காந்திஜி அவருடைய உயிருக்காக மன்றாடினார்.
ஹாலிபாக்ஸ் பிரபு:-மரண தண்டனை கொடுப்பது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பது என்னுடைய வேலையல்லஎன்று நான் அவரிடம் சொன்னேன். சட்டப்படி மரண தண்டனை அளிக்கப்பட வேண்டுமானால் அந்தச் சமயத்தில் சட்டத்தை நிலைநாட்டுவதுதான் என் கடமை. பகத்சிங்கைக் காட்டிலும் மரண தண்டனை பெறவேண்டியவர்கள் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. துர்ப்பாக்கியவசமாக நமது பேச்சுவார்த்தைகள் நடக்கும் இதே சமயத்தில் அதற்குத் தொடர்புள்ளது போல் இந்த நிகழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது. ஏனெனில் நேற்றிரவு நமது பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு அந்த பகத்சிங்கினுடைய விவகாரத்தைப் பற்றி நான் கவனிக்க வேண்டியிருந்தது. நியாயத்திற்கும் சட்டத்திற்கும் இடையே நாம் குறுக்கிடக் கூடாது என்பதற்காக அவருடைய மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்து சனிக்கிழமையன்று அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று உத்தரவு அனுப்பிவிட்டேன் என்றேன். அன்று வியாழக்கிழமை. 'சரி'அவ்வளவுதான் அவர் அதிர்ஷ்டம் என்றார் காந்திஜி. ஏனெனில் அந்த வியாழக்கிழமை மாலையிலேயே அவர் கராச்சிக்கு ரெயிலில் செல்லவேண்டியிருந்தது. அங்கு காங்கிரஸ் செயற்குழுவிடமோ அல்லது வேறு எந்தக் குழுவிடமோ எங்கள் உடன்பாட்டைப் பற்றிய அறிக்கையை அவர் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர் அங்கு போய்ச்சேர்ந்து அறிக்கையை அவர் சமர்ப்பிக்கும் அதே நேரத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார் என்ற செய்தியும் போய்ச்சேரும். இதனால் எல்லாமே தகர்க்கப்பட்டுத் தவிடுபொடியாகப் போகும். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே இதுபற்றி என்னால்ஆவது ஒன்றும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை இதுபற்றி மூன்றே மூன்று விஷயங்கள்தாம் யாராக இருந்தாலும் செய்யக்கூடியது. ஒன்று சட்டம் அதன் போக்குப்படியே போகட்டும் என்று விட்டுவிடுவது. இது அவர் விளக்கியது போல் மிகவும் தர்மசங்கடமான நிலை. அடுத்தது அவனை விட்டுவிடுவது. அதைச் செய்ய என்னால் முடியாது. மூன்றாவது அவர் காங்கிரஸ் செயற்குழுவிடம் எங்களது அறிக்கையைச் சமர்ப்பித்து அதன் அனுமதி கிடைக்கும் வரை இந்த வழக்கின் தண்டனையைத் தள்ளிப்போடுவது. எனக்கு இது மிகவும் நேர்மையற்ற செயலாகப்பட்டது. நான் அதைச் செய்ய முடியாது என்றும் தோன்றியது. அவரும் இதைப் புரிந்துகொண்டு சொன்னார் நான் கராச்சிக்குப் போய் அங்கு உள்ளவர்களிடம் அந்த இளைஞனுடைய உயிருக்காக என்னால் முடிந்த வரை தங்களிடம் மன்றாடியதாகக் கூறினால் உங்களுக்கு ஆட்சேபனைஎதுவும் இருக்காதே? இதை அனுமதிப்பதால் சிரமம் ஒன்றும் இல்லையேஎன்று கேட்டார். “இல்லைஎன்றேன். என்னுடைய நிலையிலிருந்து பார்த்தால் எனக்கு இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதையும் அவர் சேர்த்துச் சொல்லுவதானால் அவர் என்னிடம் மன்றாடியதைச் சொல்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லைஎன்றேன்.ஒரு நிமிடம் அவர் சிந்தித்தார். பிறகு அவர் அதையும் சொல்வதாகச் சொன்னார். இந்தக் கருத்தின் அடிப்படையில் நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தோம். அவர் கராச்சிக்குப் பயணமானார். அவர் எதிர்பார்த்தவை எல்லாம் அப்படியே நிகழ்ந்தன. மக்கள் அவரைச் சந்திக்க வந்தார்கள். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தி எட்டிற்று. அவர்கள் கொதித்தெழுந்து கொலைகார வைசிராயின் வலையில் காந்திஜி விழுந்துவிட்டதாகச் சாடினார்கள். அவர்கள் காந்திஜியைத் தவறாகப் புரிந்துகொண்டு கருத்து மாறுபட்டுச் செயற்பட்டார்கள். அவரோடு மிகவும் கடுமையாக ஒரு கை பார்க்காத தோஷமாகக்கூட நடந்துகொண்டார்கள் என்று சொல்லுவேன். இருப்பினும் சந்தர்ப்பம் வந்தபோது அவர் என்னைப் பற்றியும், எங்களது பேச்சுவார்த்தைகளைப் பற்றியும் புரிந்துகொண்டதை, புரிந்துகொண்டபடி சொன்னார். அதன் பிறகு மக்கள் நீங்கள் காந்திஜியை ஒருபோதும் நம்பக்கூடாதுஎன்று என்னிடம் சொல்லுவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு அந்த சம்பவத்தைக் கூறி நான் அறிந்தவரை அவரைக் கட்டாயம் நம்பலாம்என்றே சொல்லுவேன். அவரை நம்பலாம். நம்பினேன். எத்தனையோ தடவைகள் எங்கள் பேச்சுக்களுக்கிடையில் நான் சில விஷயங்களை உங்களிடம் சொல்லப்போகிறேன். நீங்கள் இதை வெளியில் விட்டால் என் பெயர் கெட்டுவிடும். நீங்கள் உங்கள் மனத்திலேயே இதையெல்லாம் வைத்திருக்க வேண்டும். உங்களை நம்பிச் சொல்லுகிறேன்என்று சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொன்னவை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து ஒருநாளும் எந்த இடத்திலும் வெளிவந்ததில்லை. ஆகையால் விந்தைமிகு அந்தச் சிறு மனிதரிடம் நான் மட்டற்ற மரியாதையும், மதிப்பும் வைத்திருப்பதற்குத் தக்க காரணம் இருக்கிறது.

(இரண்டாம் பகுதி நிறைவு) 

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – இங்கிலாந்தில் காந்தி அடிகள் - 1

$
0
0
Mahatma Gandhi by Annie Stoll / Behance

சொல்பவர்:-கூட்டம், கூட்டம், இலண்டனில் கிழக்குப் பகுதியில் மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது. இதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் 1931-ஆம் ஆண்டு குளிர் காலத்தில் 'பௌ'என்ற பகுதிக்கு அருகில் இவ்வளவு பெரும் கூட்டம் இருந்தது. கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாகப் போலீஸ்காரர்கள் அதிகமாகக் கூடியிருந்தனர். ஆம், மிக அதிகம் இருந்தனர்.
ஆல்பர்ட் டாக்கர்:-அப்பகுதியிலுள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆகியவர்கள் ஒருங்கிணைந்து கூடி நின்றுகொண்டிருந்தனர். போலிஸ்காரர்கள் அவர்களுக்கு வெளியே வட்டம் கட்டி அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். தெரு முழுவதும் போலீஸ்காரர்கள் மயம். பெரிய தெருக்களில் மூலை முடுக்குகளில் போலீஸ்காரர்கள் அணி அணியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்அறையை விட்டு வெளியில் வந்து பால்கனியை அடைந்த பொழுது சுமார் 200 கஜ தூரத்தில் போலீஸ்காரர்கள் வரிசைவரிசையாக நின்றுகொண்டிருந்தனர். பெண்கள் தங்கள் ஆடைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டே இந்தச் சிறு பிசாசு என்ன துன்பம் செய்யப்போகிறதோ?” என்று பேசிக் கொண்டிருந்ததாகப் பல மக்கள் என்னிடம் கூறினார்கள்.
சொல்பவர்:-என்ன துன்பமோ? என்ன நன்மையோ ? அது ஒரு பெரும் தோல்விக் கதை ஆகும். 1930க்கும் 1935க்கும் இடையில் இந்தியாவுக்கான சமஷ்டி அரசியலமைப்பு பொறுமையுடனும் உண்மையுடனும் தயாரிக்கப்பட்டது. பட்ட சிரமத்திற்கு அதைச் செயலாக்கிக் காட்டும் முழு வாய்ப்பு அளிக்கப்படவில்லை சரித்திரம் அதை மிஞ்சிவிட்டது. 1931இல் இலண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் காந்திஜி பங்குகொண்டும் பிரச்சனை தீர குறிப்பிடத்தக்க வகையில் அரசியல் முறை எதையும் கொண்டுவர முடியவில்லை. ஒருவேளை இவ்வளவு அதிகமாக எதிர்பார்த்திருக்கக்கூடாதோ என்னவோ? இன்று லார்ட் டெம்பிள்வுட்டாகவிருக்கும் ஸர் சாமுவேல் ஹோர் அன்று இந்தியாவின் அலுவல்களைக் கவனிக்கும் காரியதரிசியாக இருந்தார். அவர் காந்திஜியுடன் நெருங்கிப் பழகி நல்லிணக்கம் கொண்டிருந்தார். என்றாலும் அந்தச் சிறிய மனிதரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள எவ்வளவோ இருந்தது.
லார்டு டெம்பிள்வுட்:-பெரும்பான்மையான பிரிட்டிஷ் மக்கள் அவரைச் சிறிய மனிதர் என்று அழைப்பதுதான் வழக்கம்.
சொல்பவர்:-அந்தச் சிறு மனிதர் அரசியலமைப்பை இயற்றுகின்ற மக்களோடு பேசிய தோரணையே வேறு.
லார்டு டெம்பிள்வுட்:-அவர் எங்களது இந்திய அரசியல் அமைப்பில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. நாங்கள் இயற்றிக்கொண்டிருந்த பலவகைப்பட்ட அரசியலமைப்புக்களைப் பற்றிச் சிறிதும் ஈடுபாடு காட்டவில்லை. ஹாலிபாக்ஸ் அவருடன் நடத்திய பேச்சுவார்தைகளுக்கெல்லாம் சாட்சியாக இருந்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். பெரிதாகப் பீடிகை போட்டுத் தொடங்கிய இந்த விஷயங்கள் எல்லாம் அவரைச் சிறிதும் கவரவே இல்லை.
சொல்பவர்:-லார்டு இர்வின் என்ற பெயரில் வைசிராயாக இருந்த ஹாலிபாக்ஸ் பிரபு பெரிய ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு தேக்கம் கண்ட நிலையைத் தகர்த்து காந்திஜியை இலண்டன் மகாநாட்டிற்கு வரும்படியாகச் செய்தார். இப்பொழுது அவரது வைசிராய் பதவி முடிந்துவிட்டது என்றாலும் அவர்காந்திஜியை இலண்டனில் எவ்வித அரசியல் கலப்பும் இன்றிஒரு முறைக்குமேல் சந்தித்திருக்கிறார்.
லார்டு ஹாலிபாக்ஸ்:-ஆமாம் அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து உரையாடிக்கொண்டிருப்பது வழக்கம். அவருக்கு அரசியல் அமைப்புப்பற்றித் தெரியவும் தெரியாது. அவர் மனிதாபிமானத்தோடு மக்களிடம் நெருங்கிப் பழகுவதிலும் அவர்களுடைய சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் அக்கறை கொண்டிருந்தார். எனவே காந்திஜியை எதிர்த்தரப்பில் பிரதிநிதியாகக் கொண்டு கூட்டம் நடத்தி முடிவு எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஒருவரைப்பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொண்டதுடன் இந்தியாவைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டதைத் தவிர அவர் மகாநாட்டில் கலந்துகொண்டதால் அவருக்கோ அல்லது வட்ட மேஜை மகாநாட்டிற்கோ அனுகூலம் எதுவும் ஏற்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.
எச். என். ப்ரேயில்ஸ்ஃபோர்டு:-இந்தியாவிலுள்ள காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே அவரை இலண்டனுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டியது.
சொல்பவர்:-அப்பொழுது காந்திஜியை நன்கு அறிந்திருந்த ப்ரேயில்ஸ்ஃபோர்டு இந்தியாவிலிருந்து காந்திஜி வரும் பொழுது அதிக நம்பிக்கையோடு வரவில்லை என்று கருதுகிறார்.
எச். என். பிரேயில்ஸ்ஃபோர்டு:- அவர் தாமாகவே முன்வந்தார் என்றாலும் வழக்கத்திற்கு மாறாக அவரிடம் உற்சாகமின்மையும் கவலையுமே தலைகாட்டின. அவர் புறப்படுவதற்கு முன்பே தாம் எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் செல்வதாகவும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிவருமோ என்று அஞ்சுவதாகவும் சொன்னது நினைவிருக்கிறது.
சொல்பவர்:-இங்கிலாந்தில் காணப்பட்ட சூசகங்கள் அவ்வளவு சிறந்தவையாகத் தோன்றவில்லை. காந்திஜி காங்கிரஸ் பிரதிநிதியாகப் போகிற விஷயம் உறுதியாவதற்கு முன்பே வேறு சில இந்தியப் பிரதிநிதிகள் இலண்டனுக்குக் கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். 1931ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. அவர்கள் இலண்டனை அடைவதற்கு முன்பே முதல் தொழிற்கட்சி அரசாங்கம் குலைந்து, நெருக்கடி நிலையில் ராம்ஸே மாக்டனால்டை பிரதம மந்திரியாகவும், (பழமை) மிதவாதியான சர் சாமுவேல் ஹோரை இந்தியாவின் அலுவல்களைக் கவனிக்கும் காரியதரிசியாகவும் கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இலண்டன் மகாநாடு கூடியபொழுது பிரிட்டனில் தங்கத்தின் மதிப்புக் குறைந்துவிட்டது. பொதுத்தேர்தல் தேசிய அரசாங்கத்தை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தியது. இங்கிலாந்து இத்தகைய பல சொந்தப் பிரச்சனைகளில் உழலவேண்டியிருந்தபடியால் இந்த மகாநாடு காந்திஜியின் விஜயத்தைச் பயன்படுத்த முடியவில்லை. நாற்பது ஆண்டுகளுக்குமுன்சட்டம் பயிலும் மாணவராக இங்கு வந்திருந்த காந்திஜி. நடனமும்பேச்சுக்கலையும் பயின்றிருக்கிறார். பத்தொன்பது ஷில்லிங் விலையுள்ள தலைத்தொப்பி அணிந்திருக்கிறார். மரக்கறி ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார். சர் எட்வின் ஆர்னால்டு தந்த கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதன் முறையாகப்பயின்றிருக்கிறார். அத்தகையவரின் மறு விஜயத்தை அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை. சொல்லப்போனால் இது காந்திஜியின் நீண்ட வரலாற்றின் ஓர் அத்தியாயம். அவரது சொந்த வாழ்க்கை பிரிட்டனோடும், பிரிட்டிஷ் மக்களோடு அவர் கொண்ட தொடர்பும் இங்குதானே தொடங்குகிறது.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-அரசியல் ரீதியாக அதைப் பெருந்தோல்வியென்றே நான் சொல்லுவேன். உடனடிப் பயன் எதுவும் கிட்டவில்லையென்றாலும் அவர் தம் இணையற்ற ஆளுமையை விட்டுச்சென்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
சொல்வபர்:-பிரிட்டிஷ் மக்களில் அவருடைய வழியை அறிந்த ஒவ்வோர் ஆணும், பெண்ணும் ஏற்கனவே இக்கருத்தைத்தான் கொண்டுள்ளனர். இந்தியாவில் காந்திஜியின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்யும் மேலை நாட்டவர்கள், குறிப்பாக ஹோரேஸ் அலெக்சாந்தர், இதுபற்றி மிகவும் வியந்திருக்கிறார்.
ஹோரேஸ் அலெக்சாந்தர்:-வெளிநாடுகளிலிருந்து வரும் விருந்தினர்களை, அவர்கள் சொந்த வீட்டில் இருக்கிறாற்போல் சகஜமாக உணரும்படி அவர் தனிக் கவனம் செலுத்திக் கவனிப்பார் என்று கருதுகிறேன். ஒவ்வொரு நாட்டின் நலனிலும் அவருக்கு அக்கறை உண்டு. அந்த அக்கறை அவை இந்தியாவோடு தொடர்பு கொண்டுள்ளதால் மட்டும் அல்ல என்பது உறுதி.
இந்தியாவிற்கு ஒன்றும் சாதிக்காமல் உங்கள் நாட்டுக்கு என்னால் வரமுடியாதுஎன்று கூறுவதில் அவருக்கு என்னவோ மோகம் இருந்தது.
சொல்பவர்:-1926-ஆம் ஆண்டு இலண்டன் போயிருந்த பொழுது காந்திஜி மிஸ். மூரியல் லெஸ்டர் என்பவரின், கீழ்க்கோடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் காந்திஜியை இந்தியாவில் சந்தித்துத் தம் கருத்தை நேரடியாக வெளியிட்டார்.
மிஸ் மூரியல் லெஸ்டர்:-நான் புறப்படுவதற்குச் சற்றுமுன்பாக நீங்கள் இங்கிலாந்திற்கு வருவீர்களாஎன்று நேரடியாகவே கேட்டேன். அவர் அப்பொழுது நூல் நூற்றுக்கொண்டிருந்தார். வழக்கமான மரியாதை, பண்பு, பெருமிதம் ஆகியவற்றோடு தலையைக் குனிந்துகொண்டே சிரித்தவாறு, “உங்கள் அழைப்புக்கு நன்றி. ஆனால் என்னால் வரமுடியும் என்று தோன்றவில்லை. அங்குள்ள தலைவர்களுக்குக் கற்பிக்கும் அளவிற்கு என்னிடம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லைஎன்றார். “மிஸ்டர் காந்தி, நீங்கள் வந்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நினைத்து நான் கூப்பிடவில்லை. நீங்கள் அங்கு வந்து அவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்றுகொள்வது நல்லது என்று நான் நினைத்தேன்என்றேன். அவர் உரக்கச் சிரித்தார்.
சொல்பவர்:-பிறகு உண்மையாகவோ என்னவோ அவர் மூன்று நிபந்தனைகளின் பேரில் தாம் இங்கிலாந்து வருவதாக மிஸ். லெஸ்டரிடம் கூறினார். அந்த நிபந்தனைகள் சிரமமாகத்தான் இருந்தன. கற்பனைக் கதைகளில் வருவது போல அவை மிகவும் கடினமான நிபந்தனைகள். பிரிட்டிஷ் கொள்கைகளை மாற்றும்படியாக அவள் கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சிக்கலான சில அரசியல் பிரச்சனைகள் காரணமாக இலண்டனில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜி புறப்படுவது நிச்சயமில்லாமலே இருந்தது. இது அந்த மகாநாட்டிற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கும் அவரோடு வட்ட மேஜை மகாநாட்டிற்குச் செல்ல இருந்தவர்களுக்கும் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பியாரேலாலும் ஒருவர்.
பியாரேலால் நைய்யார்:-கடைசி நிமிடம் வரை நாங்கள் கலந்துகொள்ளப் போகிறோமா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. ஒருநாள் அவர் போவதாக முடிவு ஆகியிருக்கிறதென்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தோம். ஆனால் நாங்கள் பயணத்துக்கான அனுமதிச் சீட்டுப் பெறக்கூட ஏற்பாடு செய்துகொள்ளவில்லை. இலண்டனில் தங்கினால் தேவைப்படக்கூடிய பொருள்களைக்கூட சேகரித்து வைத்துக்கொள்ளவில்லை.
சொல்பவர்:-காந்திஜி சிம்லாவில் வைசிராய் வெல்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இருந்தவர்கள் அவசரமாகச் சில பொருள்களை வாங்கிக் கட்டி வைத்தனர்.
பியாரேலால் நைய்யார்:-இதற்கிடையில் அவர் சிம்லாவைவிட்டுப் புறப்பட்டுவிட்டார் என்பது உறுதியாகிவிடவேநாங்களாகவே சில பொருள்களைச் சேகரிக்கலானோம். ஏனெனில்அவருடன் இருக்கும் சகாக்களுக்குப் பயணத்திற்குத் தேவையானபொருள்களைச் சேகரிக்க நேரம் இருக்குமோ இராதோ, வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்பது எங்களுக்கு விளங்கவில்லை கப்பலில் கூடியபோது நாங்கள் ஒவ்வொருவருமே மற்றஎல்லோருக்கும் தேவையான பொருள்களைச் சேகரம் செய்திருந்ததை அறிந்தோம். அதிகமாகத் தோன்றிய பொருள்களை ஏடனிலேயே விட்டுவிட்டு மிகத் தேவையான பொருள்களுடன் மட்டும் இலண்டனுக்குப் பயணமானோம்.
சொல்பவர்:-காந்திஜியின் சொந்தப் பொருள்கள் எப்பொழுதும் போலச் சாதாரணமாக இருந்தன. காந்திஜியின் நண்பர்களில் சிலருக்கு படுக்கை வசதியுடன் இடம் கிடைத்திருக்கையில் அவர் மட்டும் 'டெக்'பயணியாக மேல் தளத்திலேயே உணவு, உறக்கம், வழிபாடு, அலுவல்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டார்.
பியாரேலால் நைய்யார்:-கப்பலிலிருந்த குழந்தைகளுடன் நட்பு கொண்டு உறவாடக் காந்திஜிக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. அவர்கள் அவரைச் சூழ்ந்து அவருடைய உணவைப் பகிர்ந்துகொள்வார்கள். சில சமயங்களில் அவருடன் விளையாடுவார்கள். ஒரு சமயம் சக பயணிகளில் சிலர் அவரிடம் வந்து அவர் வழக்கமாகத் தூங்குகின்ற மேல் தளத்தில் நடனம் ஆடலாமா? “உங்கள் பக்கத்தில் ஆடினால் பரவாயில்லையா?” என்று கேட்டார்கள். தாராளமாக ஆடலாம். அருகிலும் ஆடலாம், சுற்றிச் சுற்றியும் ஆடலாம். என் மேல் ஆடாமல் இருந்தால் சரி!என்றார்.
சொல்பவர்:-பத்திரிகை நிருபர்கள் செய்திக்காக ஆவலோடு கப்பலில் இருந்தனர். பிரேம்பக்ஷிஎன்ற பயணி, காந்தி எளிய முறையில் அளித்த விடைகளை நினைவுகூர்கிறார்.
பிரேம் பக்ஷி:-வட்ட மேஜை மகாநாட்டில் உங்களுக்கு வெற்றி கிட்டாவிட்டால் உங்களது அடுத்த திட்டம் என்னவாயிருக்கும்?” என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு நான் ஒரு போர் வீரன். எனது குறிக்கோள் சுதந்திரம். நான் அதை இம்முறை அடையத் தவறிவிட்டாலும் என் இலட்சியத்தை அடையும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிசெய்வேன்என்று மகாத்மாஜி கூறினார்.
சொல்பவர்:-அவர் தொழில் அதிபர்களிடமும் ஒளிவு முறைவு இன்றி நேர்மையாக இருந்தார். அதே கப்பலில் பிரயாணம் செய்த ஜி. டி. பிர்லா இந்தியாவின் பொருளாதார அரசியல் பிரச்சனைகளை நன்கு அறிந்துவைத்திருந்தார். காந்திஜி தமக்கென்று பெரும் செயலாளர் படையும் கட்டுக்கட்டான ஆதாரக் குறிப்புக்களும் வைத்துக்கொள்ளாததைக் கண்டு வியந்தார்.
ஜி. டி. பிர்லா:-நீங்கள் இப்பொழுது சிங்கத்தின் குகைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் தேவையான சிப்பந்திகளும் பலமும் இல்லை. உங்கள் கட்சியை எடுத்துரைக்க ஆதாரக் குறிப்புக்களும் இல்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? சூழ்ச்சியை எப்படிச் சமாளிப்பீர்கள்?” என்று நான் காந்திஜியைக் கேட்டேன். அவர் அளித்த எளிய சமாதானம் என்னைத் திருப்திப்படுத்தியது. இதோ பாருங்கள்,நான் ஒரு பட்டிக்காட்டான். சூதுவாது தெரியாத கிராமத்தான். நான் திரு. சாமுவேல் ஹோரிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்பதேயாகும். வேறு தர்க்கமே நான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் கொடுத்தார்களானால் பெற்றுக்கொள்வேன். கொடுக்கவில்லையெனில் திரும்பிவிடுவேன்என்று கூறினார். அவர் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான கருத்துக்களையே நம்புவார்.
சொல்பவர்:-இலண்டனுக்குச் சென்றதும் சாமுவேல் ஹோரே அவருடன் வெளிப்படையாகப் பேச்சு வார்த்தை நடத்து வதற்குத் தயாராக இருப்பதைக் காணக் காந்திஜிக்கு வியப் பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
லார்டு டெம்பிள்வுட்:-அவரை உடனே சந்தித்துத் திட்டவட்டமாக என்னால் எவ்வளவு தூரம் போகமுடியும், எவ்வளவு தூரம் போகமுடியாது என்பதைச் சொல்லிவிடுவதுதான் ஒரே வழி என்று எண்ணினேன். சொல்லப்போனால் நான் அவரை என்னை வந்து பார்க்கும்படி அழைக்குமாறு கூட நேரவில்லை. ஏனெனில் இலண்டனுக்கு வந்து சேர்ந்தவுடன் முதற் காரியமாக அவர் தாமாகவே நான் அவரைப் பார்க்க விரும்புகிறேனா என்று கேட்டு அனுப்பினார். அவர் அவ்வளவு தூரம் இந்த விஷயம் பற்றித் தாமாகவே முன்னுக்கு வந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். இலண்டனில் அப்பொழுது சரியாக இலையுதிர் காலமாக இருந்தது. கடும்பனி, மழை, குளிர், காற்றுஎல்லாம் இருந்தன. நான் இந்தியா அலுவலகத்தில் அவருக்காகக்காத்திருந்தேன். என் காரியதரிசி அரசாங்கக் கப்பற்படையிலிருந்து ஓய்வு பெற்ற ஸார்ஜென்ட் மேஜர்.மிடுக்கான தோற்றம் கொண்டவர். மெடல்கள் போர்த்திய சீருடை பளபளக்க பேரரசரை அறிமுகம் செய்துவைப்பவர் போல் பவ்யமாக கதவைத் திறந்தார். காந்திஜி உள்ளே வந்தார். கூன் விழுந்தமுதுகு.பார்த்த மாத்திரத்தில் பல் இல்லை என்று தெரிந்துகொள்ளக் கூடிய பொக்கை வாய். இலண்டனிலோ இலையுதிர் காலத்தில் பயங்கரக் குளிர். படு பயங்கரமான குளிர். அவர் இருந்த நிலையிலிருந்தே அவருக்கு எவ்வளவு தூரம் குளிரும் என்பதை உணர்ந்து நாம் கணப்புக்கு அருகில் போய் உட்காருவோமா?” என்றேன். அவர் தமது முழங்காலைச் சுற்றிச் சூடேற்றிக்கொண்டார். எங்கள் பேச்சு கணப்பில் தொடங்கிப் பல்வேறு விஷயங்களைச் சுற்றிப் படர்ந்தது. அவருக்கு இந்தியக் கிராம வாழ்க்கையில் அதிக ஆர்வம் என்பதை அறிந்திருந்த நான் இங்குள்ள கிராமங்களைப் பற்றியும் சாகுபடியைப் பற்றியும் பேசினேன். எங்கள் பேச்சு தங்குதடையின்றித் தொடரவே எங்கே நாம் வெகுதூரம் சென்றுவிடுவோமோ, நம்மால் செய்யமுடியாத காரியங்களை அவர் நம்மிடம் எதிர்பார்த்துவிடுவாரோ என்றுகூட எனக்கு அச்சமாகப் போய்விட்டது. எனவே நல்லது உங்களைப் போலவே நானும் இந்தியாவுக்கு முழு சுய ஆட்சி வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கிறேன்என்றார். ஒரே மூச்சில் எளிதாக அதைச் செய்துவிட முடியாது என்று எண்ணுகிறேன். மக்கள் சபையில் இதற்கு எதிராகப் பெரும்பான்மை மிதவாதிகள் இருக்கின்றனர். பால்டிவினும் நானும் அவர்களை ஓரளவுக்குச் சரிகட்ட முடியும். முழுவதுமாக முடியாது. ஆகையினால் இங்கேயே இப்பொழுதே எதையும் நான் உறுதியாச் சொல்ல முடியாது. குடியேற்ற அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆனாலும் என்னால் முடிந்த வரை விரைவில் இது விஷயத்தைத் துரிதப்படுத்துவேன். நீங்கள் எங்களை நம்பலாம்என்றேன். அதுபற்றி இன்னும் அப்பட்டமாக நான் அவரிடம் பேசியிருப்பேனோஎன்றுகூட நினைக்கிறேன். ஏனெனில் காந்திஜி என்நோக்கில் காரிய சாத்தியமற்ற பேச்சு வகைகளை உடனடியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்பதை என்னால் அப்பொழுதே அறியமுடிந்தது. அவர் என் பேச்சில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
சொல்பவர்:-அவர் எவ்வளவு நேரம் தங்குவது என்று திட்டம் போட்டிருந்தாரோ அதைக் காட்டிலும் அதிகமாகத் தங்கியதிலிருந்து அவர் மகிழ்ச்சி புலனாகியது. எச். என். பிரெயில்ஸ்போர்டு அவர்களைப் பார்ப்பதற்குக் குறிப்பிட்டிருந்த நேரம் கடந்துவிடவே சற்றுப் பதற்றமும் இருந்தது.
எச். என். பிரெயில்ஸ்போர்டு:-அவர் வெகு அவசரமாக வந்தார். சாமுவேல் ஹோருடன் பேச்சுவார்த்தை சற்று நீண்டுவிட்டதுஎன்று விளக்கம் கூறினார். ஏன் என்று தெரியுமா? என்று அவர் கேட்டார். இந்தியாவுக்கு நீங்கள் விரும்பும் நன்மைகளைப் பற்றிப் பேசும்போது ஆங்கிலேயர்கள் நேர்மையானவர்கள் என்பதை முதன் முதலாக அவர் எனக்கு விளங்க வைத்தார்என்று கூறினார். இங்கிலாந்து விஜயம் காந்திஜியின் மனத்தில் இருந்த ஒரு கருத்தை நன்கு நிலைபெறச் செய்தது.
சொல்பவர்:-இலண்டன் மாநகரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் கீழ்க்கோடியிலிருந்த 'பௌ'என்னும் இடத்தில் கிங்ஸ்லி ஹாலில் காந்திஜிக்கும் பிரெயில்ஸ்போர்டுக்கும் சந்திப்பு நிகழ்ந்தது. அங்குதான் காந்திஜிக்கு அவர் வற்புறுத்தியதன் பேரில், ஜாகை ஏற்பாடு செய்துதரப்பட்டிருந்தது.
பியாரேலால் நைய்யார்:-அவர் வேண்டுமென்றே தாம் தங்குவதற்குக் கிழக்குப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஏனெனில் வாயில்லாப் பூச்சிகளாக வாழும் கோடிக்கணக்கான ஏழை இந்தியனின் பிரதிநிதியாக அவர் வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொண்டதால் ஏழைகளோடு ஏழையாகத் தம்மையும் காட்டிக்கொள்ளவே அவர் எப்பொழுதும் விரும்பினார்.
சொல்பவர்:-மற்றப் பிரதிநிதிகளோ இப்பகுதியைத் தேர்ந்தெடுத்ததைக் கிறுக்குத்தனமென்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்றுமே எண்ணினர். ஆனால் மூரிஸ் லெஸ்டருக்கோ இது ஒரு வகையில் வெற்றி முயற்சியாகவே பட்டது.
மூரில் லெஸ்டர்:-அவர் வட்ட மேஜை மகாநாட்டிற்காக இலண்டனுக்கு வருவதை நான் நேரிடையாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததை அவர் மறந்திருக்கமாட்டார். அவருக்கு அசாதாரணமான ஞாபக சக்தி உண்டு என்பதை அறிந்திருந்த நான், அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் வருவது குறித்து மகிழ்ச்சி. கிங்ஸ்லிஹாலில் நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை மறவாதீர்கள். நாங்கள் எப்படி எளிய வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை நீங்கள் அங்கு காண்பீர்கள். எங்கள் சின்னஞ்சிறு படுக்கை அறைகள் மேற்கூரையின் மீது இருக்கும் அழகை நீங்கள் காண்பீர்கள். நீங்களும் அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் உங்களுடன் யாரை அழைத்து வந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள். குறிப்பிட்ட காலத்தில் உங்களைப் போலவே நாங்களும் பிரார்த்தனை நடத்துகிறோம்.அவர் எழுதிய பதில் கடிதத்தில், “நான் இலண்டனில் கிங்ஸ்லி ஹாலைத் தவிர வேறு எங்கும் தங்க விரும்பவில்லை. ஏனெனில் நான் எத்தகைய மக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேனோ அத்தகைய மக்களுடனயே அங்கேயும் தங்க விரும்புகிறேன்என்று எழுதியிருந்தார்.
சொல்பவர்:-அதனால் அவர் அங்கே தங்கினார். அகன்ற தோள்களைக் கொண்ட அவரது காரியதரிசியும் நெருங்கிய நண்பருமான மகாதேவ தேசாய்,கைத்தறி ஆடையணிந்த அவரது ஆங்கில சிஷ்யை மீரா பென், அவரது குமாரர் தேவதாஸ் காந்தி,பியாரேலால் நைய்யார் ஆகியவர்கள் அவரோடு தங்கினார்கள்.
பியாரேலால் நைய்யார்:-அவர் அந்தக் கிழக்குப் பகுதியில் தங்கியிருந்தது அப்பகுதி வாழ் மக்களின் கற்பனையைத் தூண்டி விடுவதாக அமைந்தது. விடியற்காலையில் அவர் உலாவச் செல்லும் நேரங்களில் அங்கு வாழும் ஏழை மக்களின் வீட்டு ஜன்னல்களும் பால்கனிகளும் சாலையின் இரு புறங்களிலும் திறந் திருக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று அவருக்குக் காலை வணக்கம் செலுத்தவும் அவரைத் தரிசிக்கவும் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
சொல்பவர்:-அவர்கள் அவரை மறக்கவில்லை. கிங்ஸ்லி ஹாலுக்கு அவர் வந்த அதே நாள் அங்குள்ளவர்கள் அனைவரும் வழக்கமாகக் கூடும் ஒரு கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டார். அதை அவர் மகிழ்ச்சிகரமான இரவுஎன்று சொல்வது வழக்கம்.
மூரியல் லெஸ்டர்:-அந்தக் கூட்டத்தைப் பற்றிக் கூறுங்கள். உங்களுக்கு அதைப் பற்றி என்னவெல்லாம் நினைவு இருக்கிறது?”
மார்த்தா ரோலஸான்:-வெளியே சென்றிருந்த அவர் உள்ளே வந்தார். மாடிக்குச் சென்றார். பிறகு கீழே வந்து இந்த மகிழ்ச்சிகரமான இரவில் கலந்துகொண்டார். நாங்கள் அப்பொழுது நடனமாடிக்கொண்டிருந்தோம். நான் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவரது தோளில் தட்டிக்கொடுத்து வாருங்கள் காந்தி, நாம் நடனம் ஆடுவோம்என்றேன். எனக்கு ஆடத் தெரியாதேஎன்றார் அவர்.
மூரியல் லெஸ்டர்:-இப்படிக் கேட்டதில் அவர் மகிழ்ந்துபோனார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
மார்த்தா ரோலஸான்:-ஆம்.நான் அவரிடம் கேட்ட பொழுது அவர் மிக மிக மகிழ்ச்சி அடைந்தார். அவர் மூரியல் பக்கமாகத் திரும்பி நீங்கள் எனக்கு நடனமாடக் கற்றுத்தரவேண்டும்என்றார்.
மூரியல் லெஸ்டர்:-ஆம்.அவர் நடனமாடினார். (சிரிப்பு)
பியாரேலால் நைய்யார்:-நான் கட்டாயம் நடனமாடுவேன்என்று கூறியவர் தம் கைப்பிரம்பைச் சுட்டிக்காட்டி இதுதான் எனக்கு ஜோடிஎன்றார்.
மூரியல் லெஸ்டர்:-ஆனால் அவர் உங்கள் சொந்த வீட்டிற்கு வந்த பொழுது என்ன நடந்தது?
மார்த்தா ரோலஸான்:-, அதுவா? சனிக்கிழமை காலையில் நான் சாமான் வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்குப் போயிருந்தேன். திரும்பி வந்து பார்த்தால் வாசலில் ஒரே கூட்டம். என் குழந்தைகளை நான் வீட்டில் விட்டுப்போயிருந்தேன். எங்கே நெருப்புக் கிருப்புப் பிடித்திருக்குமோ என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டேன். மேல் மாடிக்குச் செல்லத் திரும்பிய பொழுது மிஸ்.லெஸ்டரும் காந்திஜியும் அங்கே எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். வெளியில் குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர். கீழே வாருங்கள்.நீங்கள் கீழே வரவேண்டும்என்று அவர்கள் கூறவே நான் சாமான்களோடு கீழே வந்தேன். அவற்றை மேஜை மேல் வைத்தேன். காந்திஜி ஒரு ரொட்டித் துண்டை எடுத்து இது என்ன விலை?” என்று கேட்டார். நான்கு பென்சும் அரை பென்னியும்என்று நான் சொன்னேன். ரொட்டிக்கு நான்கு பென்சும் அரை பென்னியுமா?” என்று கேட்டார். அப்புறம் அவர் சர்க்கரையின் விலை என்ன?” என்று கேட்டார். அப்புறம் அவர் கீழே போன பொழுது வாசலைச் சுற்றிலும் பெருங்கூட்டம் கூடிவிட்டது. சொக்கப்பனை கொளுத்தி மகிழ்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்கு மகிழ்ச்சி ஆரவாரம். இவர் அழகாக இல்லையாஎன்று அவர்கள் கேட்டார்கள். (சிரிப்பு)
ஆல்பர்ட் டோக்கர்:-நான் அறிந்த வரையில் அவர் மிகவும் நுட்ப அறிவு படைத்தவர், விஷயங்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர். இதுவே என் கருத்தாகும். ஆனால் அவரை அப்பம் அறிவுள்ளவர் என்றோ விஷயங்களைப் புரிந்துகொள்பவர் என்றோஅவரைப் பார்த்தோ கேட்டோ அறியாத யாரும் ஒரு பொழுதும் எண்ணியதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவரது நிறம் ஆகும். அவரிடத்தில் சில அசாதாரணமான சிறப்பியல்புகள் இருந்தன. அவற்றில் பல எனக்குப் பிடித்திருந்தன. அவர் பேசிக்கொண்டேயிருப்பார். அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தபடியால் என்னைச் சூழ்ந்துள்ள சிறுவர்களுக்காக நான் அவரது கையெழுத்தைக் கேட்கும் பொழுதெல்லாம் கையெழுத்துப் போட்டுக்கொடுப்பார். அதே நேரத்தில் கையோடு எடுத்துச்செல்லக்கூடிய சிறு ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டுமிருப்பார்.
மூரியல் வெஸ்டர்:-அவருக்கு இங்குள்ள குழந்தைகளின் நாகரிகப் பள்ளியைப் பிடித்திருந்தது. குழந்தைகள் எல்லோரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அவரை காந்தி மாமாஎன்று கூப்பிடுவார்கள், அவர் காலுறை அணியாதிருப்பதைக் கண்டு அவர்கள் மிகவும் வருந்துவார்கள். வெதுவெதுப்பான உடையை அவருக்கு அணிவிக்க அவர்கள் முயன்றனர். அவர் பிறந்தநாளுக்கு அவர்கள் ஏகப்பட்ட சிறு பொம்மைகளைப் பரிசாகக் கொடுத்தார்கள். கம்பிளியினால் நெய்த சிறு ஆட்டுக்குட்டி, சிறு பொம்மை, தொட்டில் போன்ற பல பொருட்களை அவர்கள் கொடுத்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.
ஐடா பார்ட்டன்:-காந்திஜி பெளவுக்கு வந்த மறுநாள் காலையிலேயே துணிகளைத் துவைக்கவேண்டியிருந்தது. அவற்றை உலர்த்துவதற்குத்தான் எங்கும் இடம் கிடைக்கவில்லை. அந்த நாளில் நான் காந்திஜியுடன் நெருங்கிப் பழகும் அண்டை வீட்டுக்காரியாக இருந்தபடியால் அவர்கள் என்னிடம் வந்தார்கள். துணிகளைக் கீழே எடுத்துப் போட்டுவிட்டு காந்திஜியின் துணிகளைத் துவைக்கும் குமாரி ஸ்லேட்டுக்கு அந்த இடத்தைக் கொடுத்தேன். கடைசியில் என்னவாயிற்று தெரியுமா? நான் துணிகளைத் துவைக்கும்படி ஆயிற்று. காந்திஜி தங்கியிருக்கும் கட்டிடத்தைச் சுற்றிலும் போலீஸ் காவல் இருந்தது. காந்திஜிக்கு மட்டும் காவல் இருந்தால் போதாது. துவைத்து உலர்த்தியிருக்கும் துணிகளுக்கும் காவல் வேண்டும்.என்று நான் சொன்னேன். அதன் பிறகு மூன்று மாதங்களும் காந்திஜி, குமாரி ஸ்லேட், தேவதாஸ் ஆகியவர்களின் துணிகளைத் துவைக்கும் பணிப்பெண்ணாக நான் இருக்கும்படி நேர்ந்தது.
மூரியல் லெஸ்டர்:-உங்கள் பணியில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களா?
ஐடா பார்ட்டன்:-ஆமாம்.பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். மிகவும் நேர்த்தியான சலவை என்றார்கள். சொல்லப்போனால் அவை மிகவும் வெண்மையாகவும் அழகாகவும் இருந்தன. எங்களுக்கு அதிக வேலை வைக்கவில்லை.
மூயரில் லெஸ்டர்:-அவரது ஆட்டுப்பாலைப் பற்றி அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ஐடா பார்ட்டன்:-ஓ! நன்றாக நினைவிருக்கிறது. ஆட்டுப்பாலில்தான் அவர் வாழ்ந்தார். மக்கள் அதைப் பற்றிக் கேலி செய்து சிரிப்பது வழக்கம். திங்கட்கிழமை இரவு என்று எண்ணுகிறேன். அந்தச் சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது இலையுதிர் காலத்து இனிமையான ஒரு மாலைப் பொழுது.வெளியில் கூடியிருந்த பெருங்கூட்டம் என் வீட்டு வாசலையும் அடைத்துக்கொண்டு நின்றது. நான் வெளியே போகவேண்டியிருந்தது. அதற்காக வாசலில் வந்து நின்றதைப் பார்த்துப் போலீஸ்காரர் நீங்கள் இங்கே நிற்கக்கூடாது அம்மாஎன்றார். இது என் வீடு. நான் இந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கிறேன். இங்கேதான் நிற்பேன்என்றேன் நான். ஆனால் காந்திஜியின் நட்புக்குப் பாத்திரமான எனக்கு அந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் சிறந்த செயலாகப் பட்டது.
மூரியல் லெஸ்டர்:-பக்கவாதத்தினால் பீடிக்கப்பெற்ற ஒரு மனிதர் அதே தெருக்கோடியில் வசித்துவந்தார் என்றும்அவர் தம்மை வந்து பார்த்துப் பேச முடியாத நிலையில் இருந்தார் என்றும் ஒருநாள் காந்திஜி கேள்விப்பட்டார். ஏனெனில் பல க்கள் காந்திஜியைப் போய்ப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரோ கீல் வாயுவினால் தாக்கப்பட்டு எப்பொழுதும் கணப்பின் அடியிலேயே உட்கார்ந்து குளிர் காய்ந்துகொண்டேயிருக்க வேண்டிய நிலையிலிருந்தார். காந்திஜி அவரைச்சந்திக்கச் சென்றிருப்பார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. அந்த ஊரிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பார்த்தார்.அங்கே ஒரு குருடர் அவரைக் காண விரும்பினாராமே உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ஐடா பார்ட்டன்:-அவர் ஒரு நேர்த்தியான தோற்றம் உள்ளவர். நீங்கள் ஒரு திருப்பத்தில் நடந்து செல்ல நேர்ந்தால் பளிச்சிடும் வெளிச்சத்துடன் கார் திரும்புவதைக் காண்பீர்கள்.கண்ட மாத்திரத்தில் காந்திஜியின் கார் வருகிறது என்றும் சொல்லிவிடுவீர்கள். அது பறந்து வருவது போலிருக்கும். அன்றைய அலுவல்களுக்குப் பின் களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார் காந்திஜி.
சொல்பவர்:-அவர் எப்பொழுதும் இப்படியிருப்பதுண்டு. அது களைப்பு மிகுதியினால் என்பதில் ஐயமில்லை. ஆனால் நிச்சயம் அது தூக்கமல்ல. அவரைக் கண்காணிக்கும் சார்ஜென்ட் ரோகரூம் சார்ஜென்ட் ஈவானும் காந்திஜியுடன் விந்தையானதொரு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். காந்திஜி விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கமுடையவராகையால் அவர்களது வேலை சுலபமானதல்ல என்பதை உணர்ந்திருந்தார் போலும். அவர் இந்தியாவில் எழுந்திருப்பதைப் போலவே விடியற்காலை நான்கு மணிக்கே தம் சொந்தப் பிரார்த்தனைக்காக எழுந்திருப்பார். பிறகு மீண்டும் ஒரு மணிநேரம் தூங்கச் சென்றுவிடுவார். அதன் பின்னர் ஐந்தரை மணிக்கு கிங்ஸிலி ஹாலில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொள்வார். பிரார்த்தனை முடிந்ததும் கிழக்குக் கோடித் தெருக்களில் உலாவச் சென்றுவிடுவார்.
மூரியல் லெஸ்டர்:- சில சமயங்களில் சின்னஞ்சிறு குழந்தைகள் குழாம் வாரந்தோறும் தங்கள் தாய்மார்களிடம் சென்று அந்தக் குளிர்ந்த காலை நேரத்தில் உலாவச் செல்லத் தங்களையும் அனுமதிக்குமாறு கோரி நச்சரிப்பார்கள். ஆப்பிள் போல் சிவந்த அவர்களது முகங்களையும் கழுத்தைச் சுற்றிப் பெரிய சிவப்புக் கம்பளிகளை அணிந்திருக்கும் தோற்றத்தையும் என்னால் ஒரு பொழுதும் மறக்கமுடியாது. அவர் மகிழ்ச்சியோடு அவர்களுடன் உலாவச் செல்வார். ஆறரை மணிக்குத் திரும்பி வருவார். ஒருநாள் நாங்கள் உலாவச் சென்றுவிட்டு வீட்டுக்குஅருகில் வந்ததும் நாம் விரைவில் குளித்துவிட்டுக் குஷியாக காலைச் சிற்றுண்டி அருந்துவோமா?” என்று கேட்டேன். அன்று குளிர் அதிகமாக இருந்தது. அவர் தமக்கே உரிய அமைதியான முறையில் என்னைத் திருத்தி நாம் முதலில் குளிக்கப் பார்ப்போம்என்றார்.
சொல்பவர்:-விடியற்காலை உலாவச் செல்லும் பொழுது கண்காணிப்பாளராக ரோகரும் ஈவானும் கூடச் செல்வார்கள்.
ஆல்பர்ட் டாக்கர்:-அவர்கள் காந்திஜியுடன் நடக்கும் முயற்சியில் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டு திரும்புவார்கள். அவர் அடி எடுத்து நடக்கும் முறையே விந்தையானது. அவரோடு நடந்துவரும் முனைப்பு அவர்களை ஓடச்செய்தது.
சொல்பவர்:-காலைப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காகவும் உலாவுவதில் பங்கு கொள்வதற்காகவும் யாராவது சில சமயம் இரவு நேரங்களில் கிங்ஸிலி ஹாலில் வந்து தங்குவார்கள். பெண் சிற்பியான கிளேர் ஷெரிடான் ஒரு சமயம் அப்படித் தங்கினார்.
கிளேர் ஷெரிடான்:-குளிரும் பனியும் மிகுந்த அந்த விடியற்காலை நேரத்தை என்னால் மறக்க முடியாது. மூன்று மணிக்கு மீராபென் வந்து என்னை எழுப்பி காந்திஜியின் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள், நான், மகாத்மாஜி அவரது ஹிந்து சிஷ்யர் ஆகிய நால்வர் மட்டுமே அங்கு இருந்தோம். அவர்கள் விளக்குகளை அணைத்துவிட்டுக் கதவுகளைத் திறந்துவிட்டார்கள். நீல வானம் கண்களுக்குத் தெரிந்தது. அவர்கள் ஹிந்து முறைப்படி பிரார்த்தனை செய்தார்கள். அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. பிரார்த்தனையின் கருத்து என்னவென்று எனக்குத் தெரியாது என்றாலும் அது மிக மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.
சொல்பவர்:-உலாவச் சென்றபோதும் புலனாய்வுத் துறையாளர்களைப் பற்றிக்கூட திருமதி ஷெரிடான் நன்கு நினைவு வைத்திருக்கின்றார்.
கிளேர் ஷெரிடான்:-காந்திஜியுடன் நட்பு முறையில் பழகிய கண்காணிப்பாளர்கள் எங்களைப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் வேகமாக எடுத்து வைக்கும் காலடி ஓசையும் அவர்கள் விட்ட நீண்ட பெருமூச்சும் கூட என் காதில் விழுந்தது. ஏனெனில் காந்திஜி மிக வேகமாக நடந்தார். இரவு நேரம். நல்ல மூடுபனி. அவருடைய நிறம் வேறு இரவை ஒத்திருந்தது. ஆளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அது வெட்ட வெளியில் வெகு வேமாக முன்னேறி நடந்தது என்றாலும் நான் அவரைக் தொடர்ந்தேன். மூச்சுக்கூட விட நேரமின்றி சுவாரசியமாக அவரோடு பேசிக்கொண்டே நடந்தேன். அவை பெரும்பாலும் மதம் பற்றிய விஷயங்கள்.
சொல்பவர்:-காந்திஜி கீழ்க்கோடியில் முத்திரையிட்டு நின்றார். ஜேம்ஸ் அரண்மனையில் நூற்றுப் பதினோரு பிரதிநிதிகள் இந்தியாவின் எதிர்காலம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள். யாரவது அவரது உண்மைத்தன்மையை எடுத்துக்காட்ட முடியுமா என்று பார்ப்போமனால் மிகவும் சொற்பமானவர்களால்தான் முடியும் என்று பிரெயில்ஸ்ஃபோர்டு கூறுகிறார்.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-பகட்டான உடைகளும், ஜொலிக்கும் வைரங்களுமாகக் கற்பனை உலகில் மிதந்த அரசர்களுடனும் திறமை வாய்ந்த பேச்சளர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் அவர் எதிர்த்து வாதிடவேண்டியிருந்தது. உண்மையில் அதீத கற்பனையில் மிதக்க வைத்தவர்கள் அவர்கள். என்றாலும் அவர்களில் ஒருவரால்கூட ஒரு தொகுதியில் பொதுத் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்றிருக்க முடியாது. அரசர்களைப் பொறுத்தமட்டில் அதில் பின்னால் ஒரு திருப்பம் கண்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அவர்களிடமிருந்து வந்த எதிர்ப்பைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிறிய மனிதர் போர்வைக்குளிருந்து இந்த அரை நிர்வாணத் துறவி அந்தப் பகட்டான அரசர்களைக் காட்டிலும் திறமை மிக்க நிபுணர்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கவராகக் கருதப்பட்டார். இதை நம்மில் பெரும்பாலோர் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே சந்தேகம்தான். சராசரி அரசியல்வாதிகளோ நிச்சயமாகப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்.
சொல்பவர்:-இந்த மகாநாட்டின் வெற்றிக்கு வழி காட்டிய சிறப்பு மிக்க இந்தியச் சட்ட நிபுணர்களில் திரு. தேஜ்பகதூர் சாப்ரு ஒருவர். மற்றவர் டாக்டர் எம். ஆர். ஜெயகர். டாக்டர் ஜெயகர் காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நட்புரிமை கொண்டவர். ஆனால் அரசியலில் அவர் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுபவர் என்றும் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துடையவர் என்றும் கண்டார். இலண்டனில் நடந்த முதல் மகாநாட்டுக்குக் காந்திஜியை அழைத்துவர வேண்டும் என்று விரும்பினார்.
எம். ஆர். ஜெயகர்:-அவர் ஆரம்ப நாட்களில் சேரவில்லை. அவர் வர மறுத்தார். அப்பொழுது இங்கிலாந்து முழுவதும், என் கருத்தைக் கேட்டால், எங்கள் காலடியில் இருந்தது என்றே கூறுவேன். காந்திஜியின் பெயர் எங்களுக்குப் பின்னால்தான் இருந்தது. சாப்ரூவும் நானும் அவரைக் கூட்டிக்கொண்டு வர எங்களால் இயன்ற அளவு முயன்றோம். அவர் வரவில்லை. வற்புறுத்தியதன் பிறகே வந்தார். ஆனால் அவரது தீவிரக் கொள்கை பிரிட்டிஷ் பிரதிநிதிகளைக் கவரவில்லை. நாங்கள் எல்லோரும் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தை விரும்பினோம். நாங்கள் அதே சமயத்தில் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தை அடைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினோம். காந்திஜியும் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தைத்தான் கேட்டார். ஆனால் அதை அடைய அவர் கையாள நினைத்த முறை இங்கிலாந்தின் அனுபவ முறையினின்றும் மாறியிருந்தது. பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தார். பிரிட்டிஷ் மக்களை அவர் கவர்ந்திருக்கக்கூடும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரது கொள்கைள் மிகவும் முரட்டுத்தனமானவை என்று கருதப்பட்டன.
சொல்பவர்:-பிரிட்டிஷ் மக்களால் மட்டும் அல்ல. திரு. சாமுவேல் ஹோர் மிகவும் சிரமப்பட்டுக் காந்திஜியை இலண்டனை விட்டுப் புறப்படாமல் தடுக்க முயன்றார். திடீரென ஒரு வகை உள்ளுணர்வுக்கு ஆளாகி இந்தியப் பிரதிநிதிகளுக்கெல்லாம் எரிச்சலை மூட்டுபவராக காந்திஜி நடந்துவருகிறார் என்று அவருக்குத் தோன்றியது.
டெம்பிள்வுட் பிரபு:-காந்திஜி தாம் மேற்கொண்டிருந்த மூன்று குறிக்கோள்களிலேயே கண்ணாயிருந்தார். வேறு எவர் மீதும் அவர் கவனம் செலுத்தவில்லை. இடையிடையே சொன்ன கருத்துக்களையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார். அது மற்றவர்களுக்கு எரிச்சலைத் தந்தது. ஒருநாள் பல்வேறு விஷயங்களில் புகுந்து புறப்பட்டு மிகவும் சிரமத்துக்குள்ளானோம். அன்று இரவு 11 மணி இருக்கும். அவர் ஏற்கனவே பேசின பேச்சை மேலும் மேலும் பேசிக்கொண்டே போனார். அது சோர்வுற்றிருந்த இந்தியர்களுக்கும், முகமதியர்களுக்கும் எரிச்சலைக் கொடுத்தது. ஆனாலும் அவர் தமது பேச்சு பிறரை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை உணராமலேயே தம் பேச்சில் உறுதியாயிருந்தார். வட்ட மேஜை மகாநாட்டைப் பொறுத்தவரை அவருடைய பங்கு உருப்படியான கருத்து உருவாவதற்குப் பதிலாக எரிச்சலைத் தூண்டுவதாகவே அமைந்தது. ஆனாலும்அவர் ஒரு பெரிய மனிதர் என்ற என் எண்ணம் வலுப்பெற்றது இவருடைய பல வேறு குணநலன்களாலும் நான் பெரிதும் கவரப்பட்டிருந்தமையால் மகாநாடு தடைபடாமல் நடப்பதற்குஎன்னால் ஆன முயற்சியைச் செய்துகொண்டிருந்தேன்.
சொல்பவர்:- கருத்து வேற்றுமைகள் ஏராளமாக இருந்தன. முகமதியர்கள் தனித்தொகுதி கேட்பதில் காட்டிய தீவிரம் ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஊன்றி ஆராய்ந்த பொழுது ஒவ்வொரு சிறுபான்மைக் கோஷ்டியுமே ஒன்றன் பின் ஒன்றாகத் தனி உரிமைக்கு அடிகோலின.
எச். என். பிரெயில்ஸ்போர்டு:-முகமதியர்களும், சீக்கியர்களும், தீண்டாதாரும் மகாநாட்டிற்குச் சென்றிருந்தார்கள். முகமதியர்களாகவும், சீக்கியர்களாகவும், தீண்டாதார்களாகவுமே அவர்கள் மகாநாட்டிலிருந்து வெளியே வந்தார்கள். ஒரு வினாடி கூட அங்கே யாரும் இந்தியராக இல்லைஎன்று அவர் சொன்னார். தாம் ஒருவரே தனிப்பட்ட முறையில் இந்தியப் பிரதிநிதியாக இருந்ததாக அவர் உணர்ந்தார்.
டெம்பிள்வுட் பிரபு:-காங்கிரஸ் மட்டுமே இந்தியாவின் அரசியல் பிரதிநிதியாகச் செயற்படுகிறது. மற்றப் பிரிவு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்விதப் பயனும் இல்லை என்று காந்திஜி அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.
எச். என். பிரெயில்ஸ்போர்டு:-எண்பத்தைந்து சதவிகித இந்திய மக்களின் சார்பில் பிரதிநிதியாகத் தாம் வந்திருப்பதாக அவர் ஒரு தடவை சொன்னார். இது சிறிது மிகைப்படக் கூறியதாகும். ஏனெனில் முகமதியர்களில் மிகச் சிறுபான்மையினரைத் தவிர ஏனையோருக்கு அவர் பிரதிநிதியாக இருந்ததில்லை. ஆனால் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் தீண்டாதார்கள் ஆகியவர்களைக் கொண்டு பார்க்கும் பொழுது அவர் பெருமைப்பட்டது சரியாகும்.
சொல்பவர்:-எப்படி நோக்கினும் இது உண்மையே. மற்றோரைக் காட்டிலும் தீண்டாதார்களின் நலனைப் பாதுகாப்பதை அவர் தம் கடமையாக உணர்ந்திருந்தார். இது விஷயமாக பிரெயில்ஸ்போர்டு அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.
எச். என். பிரெயில்ஸ்போர்டு:-அவர் இவ்விஷயத்தில் மிகவும்உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் என்றே நான் நினைக்கிறேன்.அவர்தோ பெரிய குற்றம் செய்துவிட்டாற் போன்றதோர்உணர்ச்சியால்வேதனைப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஹிந்து சமயம்இந்தத் தீண்டாதவர்களை எவ்வளவு கேவலமாக நடத்தியிருக்கிறது என்பதை அவர் அறிவார். எனவேதாம் தவற்றைத் தமது ஹிந்து சமுதாயமே திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் முடிவு செய்தார்.
சொல்பவர்:-இப்பிழையைத் திருத்துவதற்காகக் காந்திஜியே ப்பொழுது ஒரு புதிய இயக்கத்தையும் புத்துணர்வையும் தோற்றுவிக்க முயன்றார். டாக்டர் வெரியர் எல்வின் இந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில் ஒருசில மாதங்கள் அவருடன் கூடவே இருந்திருக்கிறார்.
வெரியர் எல்வின்:-ஆம் 1931ஆம் ஆண்டு அகமதாபாத்திலுள்ள பிரபல ஆலை முதலாளிகளுக்குச் சொந்தமான ஒரு கோவிலுக்கு நான் அவருடன் போயிருந்தேன். காந்திஜி தீண்டாதாரின் குழந்தைகள் பலரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது சாதி ஹிந்துக்களான பூசாரிகளின் முகம் போன போக்கு எனக்கு இன்றும் நன்கு நினைவிருக்கிறது. அவர்களுக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. அப்புறம் நிகழ்ந்த கூட்டத்தில் பேசும் பொழுது தீண்டாதார்களை இனி நாம் ஹரிஜன்’ -அதாவது கடவுளின் குழந்தைகள் -என்று அழைக்க வேண்டும் என்று புத்திமதி கூறினார். அதுமுதல் அவர்கள் அந்தப் பெயராலேயே அறிமுகமாயினர்.
சொல்பவர்:-ஆனால் வட்டமேஜை மகாநாட்டில் அழுத்தமான ஒரு புதுமுகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. தீண்டாதார் குலத்தில் பிறந்த டாக்டர் அம்பேத்கார் தமது சொந்த முயற்சியாலும்குணநலன்களாலும் முன்னுக்கு வந்தவர். அவர் ஜாதி ஹிந்துக்கள் காட்டும் இந்தப் பரிவை விரும்பவில்லை.
அம்பேத்கார்:-எங்களுக்குத் தனித் தொகுதி கொடுத்துவிடுங்கள்.
சொல்பவர்:-அம்பேத்கார் நேரிடையாகப் பேசுபவர். இலேசில் பிறருக்கு மசியமாட்டார். இதற்குப் பின்னரும் கூட அவர் காந்திஜியின் பக்கம் மாறவில்லை.
பி. ஆர். அம்பேத்கார்:-தீண்டாதாரைப் பற்றிப் பேசுவதன் நோக்கமெல்லாம் அவர்களைக் காங்கிரஸில் இழுத்துக்கொள்வதற்காக என்பது ஒன்று. இரண்டாவது தீண்டாதார் அவரது சுயராஜ்ய இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கவேண்டும் என்பது. இதற்குமேல் அவருக்கு உண்மையாகத் தீண்டாதவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
சொல்பவர்:-ஆனால் காந்திஜியின் நோக்கம் போதுமான அளவு திட்பமுள்ளதாக இருந்தது. இந்தியாவிற்குத் திரும்பிச்சென்ற பிறகு பூனாவில் அவர் தம்மைச் சோதனைக்கு உள்ளாக்கி உண்ணாவிரதம் இருந்தார். இலண்டன் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பங்களைக் களைவதற்கு அவர் தயாராக இருந்ததைப் பியாரேலால் நினைவுகூர்கிறார்.
பியாரேலால் நைய்யார்:-இந்தியாவின் விடுதலைக்காக நான் தீண்டாதாரின் நலன்களைப் பணயம் வைக்கமாட்டேன் என்று அவர் சொன்னார். ஆனால் பெரும் பிரிவினரான தீண்டாதவருக்குத் தனித் தொகுதி உகந்ததல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார்.ஆகவே உயிருள்ள வரை ஒருவராகவே போராட வேண்டியிருப்பினும் நான் எதிர்த்துப் போராடுவேன் என்று அவர் சொன்னார். அப்பொழுது யாருமே இதன் முடிவு எதில் கொண்டுபோய் விடும் என்று சிந்தித்துப் பார்க்கவில்லை.
சொல்பவர்:-இந்திய ராஜ்யங்களின் பிரச்சினைகள் காந்திஜி கண்டது போல் முற்றிலும் மாறுபட்டிருந்தன. அவ்வளவு சிக்கலாக இல்லை. மைசூர் திவானாக மகாநாட்டில் கலந்துகொண்ட சர். சாமிர்ஜா இஸ்மாயில் காந்திஜி அரசர்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்றே கூறுகிறார்.
சர். சாமிர்ஜா இஸ்மாயில்:-அரசர்கள், தங்கள் குடிகளை அவர்களே ஆண்டுகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அரசர்கள் அந்தந்த ராஜ்ய மாகாணங்களுக்குத் தலைவர்களாக இருந்து பணிபுரிய வேண்டும் என்றுமே அவர் விரும்பினார். என்னைப் போன்ற பலரும் இதையேதான் விரும்பினோம். அவர் உயிரோடு இருந்தால் அவர் இந்திய அரசர்களைப் பாதுகாத்திருப்பார். இதுவே என் சொந்தக் கருத்து.
சொல்பவர்:-அவுன்டு என்ற ஒரு சிறு சமஸ்தான அரசர் பின்பு ஒருசமயம் காந்திஜியிடம், ஒரு எளிதான அரசியல் அமைப்பு ஏற்படுத்துவது பற்றி ஆலோசனை கேட்டார். ஆபாபந்த் என்ற அரசரின் மகன் காந்திஜி எப்படி இதை முடிவான தியாகமாக இருக்கவேண்டுமென்று கேட்டார் என்பதை நினைவுகூர்கிறார்.
ஆபாபந்த்:-எங்கள் மனத்திலிருந்ததெல்லாம் மக்களுக்கு நல்ல பள்ளிகள், நல்ல உணவு, போன்ற ஏனைய வசதிகள் கிடைக்க என்ன வழி? அதற்கு நல்ல நேர்த்தியான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதுதான். ஒரு வகையில் நல்லாட்சி. அந்தந்த ராஜ்யத்து அரசர்கள் குடும்பத் தலைவர்களைப்போல் திகழ வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் காந்திஜி அதைத் தலைகீழாக மாற்றினார். ராஜாக்கள் குடும்பத் தலைவர்களாக அல்ல; குடிபடைகளின் தொண்டர்களாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
சொல்பவர்:-அரசர்களது விஷயத்தில் காந்திஜியின் போக்கை ஒரு விசித்திரக் கலவை என்றார் பிரெயில்ஸ்போர்டு.
எச். என். பிரெயில்ஸ் போர்டு:-நான் சந்தித்துப் பேசிய திறமை வாய்ந்த பெரும்பான்மை இந்தியர்களும் தேசியவாதிகளும் அரசர்களே சுதந்திரம் பெற முக்கியத் தடையாக இருப்பதாக எண்ணினார்கள். காந்திஜி இதை எப்பொழுதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்விஷயத்தில் அவருடைய போக்கு விசித்திரமாயிருந்தது. ஒருபுறம் இந்திய அரசர்கள் மீது அவரது உள்ளம் அன்பு கொண்டிருந்தாற்போல் தோன்றினாலும் அலட்சிய பாவமும் கலந்திருக்கிறாற்போல் இருந்தது. அவர்களைப் பற்றிப் பேசும்போது அவர் சொல்லுகின்ற ஒரு சொற்றொடர் நினைவு வருகிறது. அவர்களை இந்திய உடையில் இருக்கும் பிரிட்டீஷ் அதிகாரிகள்என்பார் அவர்.
சொல்பவர்:-அரசர்களது அந்தஸ்த்தைப்பற்றி மகாநாட்டில் கலந்துகொண்ட மாணவர் குழு ஒன்று காந்திஜியுடன் விவாதித்தது. அந்தக் குழுவில் ஹத்தீ சிங்கும் டாக்டர் அஷ்ரஃபும் இருந்தனர்.
ராஜா ஹத்தீ சிங்:-இலண்டனிலிருந்தும் ஆக்ஸ்போர்டிலிருந்தும் கேம்பிர்ட்ஜிலிருந்தும் வந்த ஒரு டஜன் இளைஞர்கள் இருந்தோம். நாங்கள் அனைவரும் சோஷலிஸ்டுகள். அப்பொழுது கம்யூனிசத்தின்பால் நாட்டம் கொண்டவர்களாக இருந்தோம். இந்தியாவில் உள்ள ஏழைகள் நன்மை அடைய என்ன வாய்ப்பு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று நாங்கள் காந்திஜியைக் கேட்டோம்.
கே. எம். அஷ்ரஃப்:மக்களுக்கு எதிராக அரசர்களை ஆதரிக்கப்போகிறீர்களா? அல்லது அரசர்களுக்கு எதிராக மக்களை ஆதரிக்கப்போகிறீர்களா?”என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு மக்கள் எல்லோரும் அஹிம்சை வழியில் நடந்தால் நான் நிச்சயம் ஆதரவளிப்பேன். ஆனால் அவர்கள் ஹிம்சை வழியில் நடந்தால் நிச்சயமாக அவர்களை எதிர்ப்பேன்என்றார்.உடனே என் நண்பர் காந்திஜி! இது சரியான விடை இல்லைஎன்று சொன்னார்.
ராஜா ஹத்தீ சிங்:-இளம் மாணவர்கள் சித்தாந்த ரீதியில் பேச விரும்புவார்களாகையால் நாங்கள் அந்த ரீதியில் பேசி காந்திஜியை ஒரு மூலையில் தள்ள முயன்றோம். அதன் மூலம் அவர் பணக்காரர்களையும் முதலாளிகளையும் ஆதரிக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வார் என்று எண்ணினோம். அவரை ஒரு மூலையில் தள்ளிவிட்டதாக எண்ணியதற்குக் காரணம் அவர் பேசியது பொருளாதாரம் அல்ல; வெறும் குப்பை என்று எண்ணியதேயாகும். ஆம் அந்த நிலையிலே நான் எண்ணியது அதுதான்.
சொல்பவர்:-இவ்வளவு சிக்கல்களுக்கும் இடையில் காந்திஜியின் தனிப்பெருமை தானாகவே வெளிப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் வந்தன. கிளேர் ஷெரிடான், கார்ல்டன் ஹோட்டலில் நடந்த பெரிய வரவேற்புக்குப் போனார். அரசர்கள், மகாநாட்டு பிரதிநிதிகள், மந்திரிகள், பார்லிமென்ட் அங்கத்தினர்கள் மற்றும் தூதுவர்கள் அதில் கலந்துகொண்டனர். உண்மையில் யார் யாரோ வந்திருந்தனர். ஆனால் காந்திஜியை மட்டும் காணோம்.
கிளேர் ஷெரிடான்:-கசமுசவென்று நடந்துகொண்டிருந்த பேச்சு சட்டென்று நின்றது. நான் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் அந்தத் திசையை நோக்கினார்கள். நிலைப்படியில் மகாத்மாவின் சிறு உருவம் நிழல் ஆடியது. அவர் பால்ரூமுக்கு வரவில்லை.வாசற்படியிலேயே நின்றார். ஒவ்வொருவரும் அவரிடம் பேசினார்கள். மகாராஜாக்களும் முற்றிலும் மாறுபட்ட முறையில் பாராட்டுகளைத் தெரிவிக்க அவரிடம் சென்றார்கள். அவர் அறைக்குள் வரவேயில்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் மாயமாய் மறைந்துவிட்டார். உலகாய முறையில் நடக்கும் பெரிய விருந்துகளில் அவர் கலந்துகொள்ளச் சம்மதிப்பதில்லை.


காந்திஜி ஒரு சொற்சித்திரம் – இங்கிலாந்தில் காந்தி அடிகள் - 2

$
0
0
Gandhi by Shien279 / DeviantArt

சொல்பவர்:-காந்திஜியைப் படம் வரைவதற்கு அவரது அனுமதி கோரி நைட்ஸ்பிரிட்ஜ் உள்ள எண்பத்தெட்டாம் நம்பருக்கு வந்த பொழுதுதான் கிளேர் ஷெரிடான் காந்திஜியைப் பற்றித் தெரிந்துகொண்டார். பகல் நேரத்தில் தலைமை அலுவலகமாகக் காந்திஜி பயன்படுத்திய வீட்டை கிளோர்னி போல்டன் நினைவுகூர்கிறார்.
கிளோர்னி போல்டன்:-அவர் பெள என்ற இடத்தில் கிங்ஸிலி ஹாலில் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவரைப் பார்க்க வரும் ஏராளமான மக்களுக்கு இது தொலைவாக இருந்தபடியால் அவர் நைட்ஸ்பிரிட்ஜில் ஜியார்ஜியன் என்ற ஒரு சிறு வீட்டை எடுத்துக்கொண்டார். அது மிகவும் சீரணித்துப்போயிருந்தது. அவரை அங்கே பார்க்க விந்தையாக இருந்தது. ஏனெனில் அது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீடு. முதலில் நான் அவரைச் சந்திக்கச் சென்ற பொழுது சுமார் கால் மணிநேரம் காத்துக்கொண்டிருக்கவேண்டியிருந்தது. அப்பொழுது அந்த அறையில் எனக்குப் படிக்கக் கிடைத்த ஒரே புத்தகம் புர்கீயின்லேண்டட் ஜென்ட்ரி ஆப் அயர்லாண்டுஎன்பதாகும்.
கிளேர் ஷெரிடான்:-நான் என் தளவாடங்களுடன் நைட்ஸ்பிரிட்ஜிலுள்ள அந்த வீட்டிற்குச் சென்றேன். என்னை அவர் லேடி ஸ்காட் என்று எண்ணினார். இல்லை, என் பெயர் கிளேர் ஷெரிடான் என்று சொன்னபோது” “, சரிதான். என்னைப் பார்க்க விரும்பாத அந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் சொந்தக்காரியோ?” என்று கூறி அவர் என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார். நீங்கள் இப்பொழுது என்னைச் சந்தித்ததையும் அவர் நினைக்கிறாற்போல நான் மோசமானவன் அல்ல என்பதையும் நீங்கள் கட்டாயம் அவரிடம் சொல்லவேண்டும். நான் அவரோடு பேச இயலாதது குறித்து வருந்துவதாகவும் ஆனால் அவரிடம் மிகவும் அன்புணர்வு கொண்டுள்ளதாகவும் அவரிடம் சொல்லுங்கள்என்றார்.
சொல்பவர்:- பலவகைப்பட்ட விருந்தாளிகள் இடையறாத ஆற்றொழுக்குப் போல் அவரைக் காண வந்துகொண்டே இருந்தார்கள். அவர்களில் காந்திஜியின் பழைய நண்பரான மதிப்பிற்குரிய சி. எப். ஆண்ட்ரூசும் ஒருவர்.
கிளேர் ஷெரிடான்:-முதலாவதாக அவர் அருகில் வந்து வணங்கியவர் ஆண்ட்ரூஸ். “பதினைந்து மதகுருக்கள் சேர்ந்து தங்களுக்கு வரவேற்புக் கொடுக்க இருக்கிறார்கள். மறந்துவிடாதீர்கள். இலண்டன் பிஷப்பும் தனியாக உங்களைச் ஒருமணிக்கு வருகிறார்என்றதும் பாபுஜி நூற்பதை ஒரு வினாடி நிறுத்திவிட்டு, “ஏழு மணி பிரார்த்தனை என்ன ஆவது?” என கேட்டார். பிரார்த்தனையை முன்போ பின்போ வைத்துக்கொண்டால் என்ன?”என்று ஆண்ட்ரூஸ் கேட்டார். காந்திஜி ஒரு வினாடி யோசித்துவிட்டு இல்லை, நாம் பிரார்த்தனையைப் போகும் பொழுது காரிலேயே வைத்துக்கொள்வோம்என்றார். அவர் மனத்தில் மேலோங்கி நின்றது ஏழு மணி பிரார்த்தனைதான். அவருக்காகக் காத்துதிருக்கும் பதினைந்து மதகுருமார்களும் அவரது உள்ளத்தில் துளிகூட இடம்பெற்றதாக எனக்குத் தோன்றவில்லை.
சொல்பவர்:-நியூ ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை ஆசிரியருடன் மற்றொரு பேச்சு நடந்தது. அது ஒரு வகையில் எதிர்ப்பு உணர்வைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
கிளேர் ஷெரிடான்:- ஆங்கிலேயர்கள் சரியான வாதம் புரிந்தார்கள். இந்து முஸ்லீம்கள் சகிப்புத் தன்மையற்ற போக்குப் பற்றிப் பேச்சு எழுந்தது. அந்த முடிவற்ற விஷயத்தில் பங்குகொள்ளுகையில், பிரிட்டிஷார் கவனிக்காமல் விட்டுவிட்டால் ஹிந்துக்களும் முகமதியர்களும் ஒருவர் கழுத்தை ஒருவர் அறுத்துக்கொள்வார்கள் என்று கூறப்பட்டபோது காந்தியடிகள் வேடிக்கைதான், பார்க்கப் போனால் பெருவாரியான பிரிட்டிஷ் படைகள் தண்டு இறங்கியிருக்கும் இடங்களில்தான் பெரிய பெரிய போர்களே நிகழ்ந்துள்ளன என்று கூறினார். இதற்கு அந்த ஆங்கிலேயர் நாங்கள் இந்தியாவை முழுதும் உங்களிடம் ஒப்படைத்துவிட்டால் குழப்பம்தான் ஏற்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்என்றார். ஆம்.ஆரம்பத்தில் குழப்பம் ஏற்படலாம். ஆனால் இங்கிலாந்திலுள்ள நீங்களே பெரிய பெரிய பிரச்சனைகளோடு போராடுகிறீர்களே. உங்கள் உதவி இன்றியே நாங்கள் ஏன் எங்கள் நாட்டிற்காகப் பாடுபடக்கூடாது?” என்று காந்திஜி கேட்டார்.
சொல்பவர்:-ஒவ்வொருவரைப் பற்றியும், ஒவ்வொரு சின்ன விஷயத்தைப் பற்றியும் கவனிக்கும் காந்திஜியின் புகழ்மிகு வழக்கம் முற்றிலும் மாறுபாடு இன்றி இருந்தாகவே தோன்றுகிறது.
கிளேர் ஷெரிடான்:-அவர் ஒரிருவரிடம் சிறிது கோபப்பட்டிருக்கிறார். பாவம் மிஸ்டர் கிரீன் காந்திஜியை காண வந்தவர். அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நாம் தென்ஆப்பிரிக்காவில் சந்தித்துப் பேசியிருக்கிறோம். உங்களுக்கு நினைவு தத்திறதா?” என்று கேட்டார். எனக்குத் தென் ஆப்பிரிக்காவை நினைவு இருக்கிறது ஆனால் மிஸ்டர் கிரீன், உங்களை எனக்கு நினைவு இல்லைஎன்றார். டர்பனில் ஹோட்டல் உள்ள தோட்டத்தை உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார் கிரீன். டர்பன் ஹோட்டலில் நான் தங்கியிருந்தது என்னவோ மெய்தான். ஆனால் ஒரு சாதாரண காரணத்திற்காக நான் பூங்காவிற்கே சென்றதில்லை. ஏனெனில் நான் ஒரு ஹிந்து. ஹோட்டலில் எனது அறையில் நான் இருப்பதை மட்டுமே அவர்கள் சசித்துக்கொண்டார்கள். என்னைப் பூங்காவிற்கு அருகில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை. சொல்லப்போனால் எனக்கும் அதில் ஆர்வம் இல்லை. மிஸ்டர் கிரீன் உங்களைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் அவசரமாகச் செல்லவேண்டியிருந்தால் உங்களை நிறுத்திவைக்க நான் விரும்பவில்லை.என்று காந்திஜி சொன்னார். (சிரிப்பு) பாவம் கிரீன் மிகவும் அதிருப்தியோடு திரும்பிச் சென்றார்.
பிறகு ஒரு அமெரிக்கப் பெண் அவரை அமெரிக்காவுக்கு வற்புறுத்தி அழைத்தாள். அதற்குக் காந்திஜி நான் கேள்விப்பட்டவரை, அமெரிக்காவில் எனது செய்தியைக் கேட்க தயாராக இல்லை.என்றார். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவரும் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று உறுதி அளிக்கிறேன் மகாத்மாஎன்று அவள் சொன்னாள். மகாத்மா பளிச்சிடும் தம் கண்களால் அந்தப் பெண்ணைப் பார்த்து விஷயமறிந்த என் நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? என்னை ஒன்பது நாள் அதிசயமாகக்கூடப் பார்க்கமாட்டார்களாம்.இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளேயே மிருகக்காட்சிச் சாலையில் அடைத்துவிடுவார்களாம்என்றார்.
சொல்பவர்:-இந்தச் சமயத்தில் காந்திஜியை அமெரிக்காவிற்குச் செல்ல ஆசையைத் தூண்டும் இன்னொரு முயற்சியை ஹோரேஸ் அலெக்ஸாந்தர் நினைவுகூர்கிறார்.
ஹோரேஸ் அலெக்ஸாந்தர்:-அரபிக்கடல் மார்க்கமாக தொலைபேசி நடைமுறைக்கு வந்த புதிதில் அவருடைய அமெரிக்க நண்பர் ஒருவர் அவரைத் தொலைபேசியில் கூப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து இவ்வளவு தூரம் தொலைபேசி மூலம் கூப்பிபட்டது காந்திஜிக்கு வீண் ஆடம்பரச் செலவு என்று தான் பட்டது. அது அவரைத் துளிகூடக் கவரவில்லை.
சொல்பவர்:- ஆனால் எப்படியோ வானொலியில் ஒரு அமெரிக்கக் கம்பெனிக்காக அறுபது நிமிடம் பேசும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதில் அவர் இந்தியாவை இழிவாக மதிக்கும் பாங்கைப் பற்றி வெட்டவெளிச்சமாகக் குறிப்பிட்டார். அவர் சார்ல்ஸ் சாப்ளின் அவர்களை வரவேற்று அவருடன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். சாப்ளின் அவரை பெளவில் பார்த்தார். பெர்னாட்ஷா அவரை நைட்ஸ்பிரிட்ஜில் சந்தித்தார்.சந்திப்பதற்குச் சிறந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. ஆனால் சில சமயங்களில் காந்திஜி மக்களை எங்கேயாவது வெளியிலும் தேடுவார். உதாரணமாக பிரிட்டிஷ் அஸோஸியேஷனுக்குத் தலைமை வகிப்பதற்காக இங்கிலாந்துக்கு ஜான் ஸ்மட்ஸ் வந்திருந்தார். மழையும் குளிரும் நிறைந்த மாலை வேளையாக இருந்தபடியால் ஒருவரை ஒருவர் பார்க்கத் தவறிவிடக்கூடாது என்பதற்காக பியாரேலால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்றுவிட்டார். ஸ்மட்ஸ் பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கின்ற மனநிலையில் இருந்தார்.
பியாரேலால் நைய்யார்:-இந்த மக்களுக்கு எதுவும் தெரியாது. நான் இந்த மனிதரோடு இருபது ஆண்டுகள் போராடியிருக்கிறேன். இது என்ன என்பது எனக்குத் தெரியும். கடைசியில் அவர்கள் இவரோடு சமாதானம் செய்துகொள்ளவே வேண்டியிருக்கும். நலனே நாடும் மனிதர் இவர் ஒருவர்தான்என்றார் ஸ்மட்ஸ். நாங்கள் இந்த உரையாடலை நடத்திக்கொண்டிருக்கும் பொழுது காந்திஜி வந்து சேர்ந்தார். இவர்தான் மற்றவர்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்கு அதிகமாகத் தொந்திரவு கொடுத்தவர்என்றார் ஜெனரல் ஸ்மட்ஸ். எனக்கு அது தெரியாது. நான் உங்களுக்குத் தொந்திரவு கொடுத்ததைக் காட்டிலும் நீங்கள்தான் எனக்கு அதிகமாகத் தொந்திரவு கொடுத்திருக்கிறீர்கள்என்றார் காந்திஜி.
சொல்பவர்:-அது மிகவும் உளமார்ந்த சந்திப்பு. பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவை விட்டு வரும் பொழுது ஸ்மட்ஸுக்குக் காந்திஜி ஒரு ஜோடி செருப்புக்களைக் கொடுத்திருந்தார். அதை காந்திஜியிடம் திருப்பிக் கொடுத்து இத்தனை நாட்களும் அதை அணிந்துவந்திருப்பதாகச் சொன்னார். அந்த மகாநாட்டில் காந்திஜிக்கு ஏற்பட்ட தொல்லைகளைத் தீர்க்கத் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதாக, அவசியமானால் மன்னர்களைக் கூடச் சந்தித்துப் பேசுவதாகவும் உறுதியளித்தார்.
பியாரேலால் நைய்யார்:-என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்று தோன்றினால் நான் இங்கேயே தங்குகிறேன். உதவ முடியாது என்று தெரிந்தால் இங்கிலாந்தை விட்டே சென்றுவிடுகிறேன்என்று ஸ்மட்ஸ் கூறினார்.
சொல்பவர்:-காந்திஜி தனிப்பட்ட முறையில் ஐந்தாவது ஜார்ஜ் மன்னரைப் பேட்டி கண்டார். அந்தச் சந்திப்பு வெறும் கதையாகிவிட்டது. இதைப்பற்றி அதிகாரபூர்வமாகச் சொல்லக்கூடியவர் சர் சாமுவேல் ஹோர் என்னும் டெம்பிள்வுட் பிரபுதான்.
லார்டு டெம்பிள்வுட் பிரபு:-ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவை மிக அக்கறையோடு கவனித்துவந்தார். அவரை காந்திஜியைப் பார்க்கும்படி தூண்டுவதில் எனக்கு உண்மையாகவே சில சிரமங்கள் ஏற்பட்டன. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடிய காலம் அது. அதை இப்பொழுது உள்ளுணர்ந்து பார்ப்பது வெகு சிரமம்.நன்றியுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களும் இந்தியப் போலீஸ் கமிஷனர்களைப் போன்ற அதிகாரிகளும் கொடுமைகளுக்கு ஆளாயினர். அவற்றை அறிந்த மன்னர் பெரிதும் கவலை கொண்டிருந்தார். அப்புறம் காந்திஜியின் நிலையை வேறு கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. காந்திஜியை அரண்மனைக்குப் போகச் சொன்னால் போவாரோ மாட்டாரோ என்ற பிரச்சனை வேறு.
சொல்பவர்:-அவர் போவார். ஆனால் எத்தகைய ஆடை உடுத்திக்கொள்வார்?
டெம்பிள்வுட் பிரபு:-அந்தக் காலத்தில் அரண்மனைக்குச் செல்லும் மக்கள் வால் போல் நீண்ட கோட்டுக்களை அணிந்துகொண்டு மட்டுமே போய்வந்தார்கள். காந்திஜியை மூடி மறைக்காத முழங்கால்களுடனும் சாக்குப் போன்ற உடையுடனும்தான் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார். எப்படியோ அந்தச் சிக்கலிலிருந்து அவர் விடுபட்டார். நான் என்ன நடக்கப்போகிறதோ என்ற வியப்புத் துடிப்போடு அருகில் நின்றுகாண்டிருந்தேன். சந்தர்ப்பம் பார்த்து ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். வட்ட மேஜை மகாநாட்டிற்கு வந்த மற்ற அங்கத்தினர்கள் எல்லோரும் அங்கே வந்திருந்தார்கள். எங்கள் மீது கண்வைத்து ஒரு விதமாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அது நல்லபடியாகவே முடிந்தது. ஆனால் அறிவாற்றல் மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் நான் முதலில் காந்திஜியைச் சந்தித்த பொழுது எந்த மனநிலையில் இருந்தேனோ கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்தார். அவர் தாம் சற்று அதிகமாகவே போய்விட்டதாகக்கூட எண்ணி அயர்ந்தார்.மிஸ்டர் காந்தி எனது இந்திய அரசாங்கத்தின் மீது நான் எவ்விதத் தாக்குதலையும் சகிக்கமாட்டேன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்என்றார் மன்னர். ஆச்சரியகரமான அரசியல் அறிவு படைத்தவர் காந்திஜி. அதைக் காட்டிலும் அற்புதமான குணநலன்களைக் கொண்டவர். மேன்மை தங்கிய அரசர் பெருமானே!தங்களது விருந்தினைப் பெறும் இந்த வேளையில் நான் அரசியல் விவாதத்தில் கண்டிப்பாக இறங்கக்கூடாது. இறங்கவும் மாட்டேன்என்று திருப்பிக் கூறினார். எல்லாமே நல்லபடியாக முடிந்தன. காந்திஜியின் கவர்ச்சிமிகு ஆளுமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
சொல்பவர்:-என்ன? அவர் தம் தோற்றத்தினால் ஏதாவது காரியத்தைச் சாதிக்க முயற்சி செய்தாரா? அரசரது பேட்டியைத் தவிர மற்ற பேட்டிகள் எல்லாம் என்ன பொருளைக் கொடுக்கின்றன. அவர் தமது காரிய சித்திக்காக மகாநாட்டுக்கு வெளியில் மக்களை ஈர்க்கும் வகையில் ஏதாவது முயற்சி எடுத்துக்கொண்டிருந்தாரா?
டெம்பிள்வுட் பிரபு:-அவர் இங்கு இருந்த வரையில் பிரசாரம் எதுவும் செய்ய முயன்றதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் பலரும் அவரைப் பல வந்தமாகச் சுற்றி வளைத்துத்கொண்டு பலவகைப்பட்ட கேள்விகளைக் கேட்டு அவர் வாயைப் பிடுங்கித் தொந்தரவு தந்ததை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை.
சொல்பவர்:-அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தாதவர்களில் எச். என் பிரெயில்ஸ்ஃபோர்டு ஒருவர். ஏழைகள், தொழிலாளிகள் கிழக்குப் பகுதி மக்கள் போன்றோர் மீது அவர் கவனம் செலுத்துவதைத் திசை திருப்ப விரும்பினார்.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-ஆம் நான் விரும்பினேன். முடியுமானால் அவர் ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும் போய்ச் சங்கங்களில் பேச வேண்டுமென்று நான் விரும்பினேன். நான் இந்த மாதிரி விஷயங்களைச் சொன்னபோது அவர் தொழிலாளிகளிடம் தம் கருத்தைப் பரப்புவதையே ஆதரித்தார். ஒரு கருத்தை அவர்கள் உள்ளத்தில் பதிய வைத்துவிட்டால் அது மேலிடத்திற்குச் சென்றுவிடும் என்று அவர் எண்ணினார். அதைச் செய்ததோடு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், இலண்டன் பொருளாதாரப் பள்ளி ஆகியவைகளில் உள்ள மாணவர்களிடம் பேசினார் என்றும் நினைக்கின்றேன். நான் சுவையாகக் கழித்த மாலைப் பொழுதுகளுக்குச் சிகரம் வைத்தாற்போல் அன்றைய மாலைப் பொழுது அமைந்தது. ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும் அறிவாளிகளும் குழுமியிருக்கக் காந்திஜி ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் அவரிடம் கேள்விகளுக்கு மேல் கேள்விகளைத் தொடுத்தோம். அவரைப் போல் அனுதாபத்தோடு விடையளிக்கக்கூடிய ஒரு மனிதனை நான் எனது ஆயுளில் வேறு எவரையும் கண்டதில்லை. அவர் கஷ்டத்தைக் கண்டு விலகிச் செல்லவில்லை. தம் கருத்தை ஒளித்து மறைத்ததில்லை.
சொல்பவர்:-அவர் ஆக்ஸ்போர்டுக்குப் போனார். ஆனால் மாணவர் கூட்டத்தில் பேசுவதற்காகப் போகவில்லை. அவர் வாரக் கடைசியில் பல தடவை சென்றிருக்கிறார். கல்லூரித் தலைவர்களோடும் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். காலம் சென்ற எட்வார்டு தாம்சன் அவர்களில் ஒருவர். பேராசிரியர் கில்பர்ட் முர்ரே மற்றொருவர். வாதத்தில் காந்திஜியை சாக்கரடீஸாகக் கண்டிருக்கிறார் எட்வார்டு தாம்சன். ஆனால் சாக்ரட்டீஸ்கூட விந்தையான கருத்துகளைக் கொண்டிருந்தார் என்பதை அவரால் வெளியிடாமல் இருக்க முடியவில்லை. முடிவில் ஒரு கோப்பை விஷத்தைத் தவிர ஏதன்ஸ் மக்களுக்கு விடை தெரியவில்லையே என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
கில்பர்ட் முர்ரே:-உண்மையில் அது மிகப் பொருத்தம் என்றே நான் எண்ணுகிறேன். உரைத்துப் பார்க்க முடியாதபடி அவரிடம் ஏதோ ஒன்று இருந்தது. இறுதியில் ஏதோ ஒன்று அவரை ஆட்கொண்டிருந்தது. அவரைப் பொறுத்தவரையில் ஒருவகை நல்லியல்பையே நீங்கள் காண்பீர்கள். இன்னொரு வகையில் அரசியலில் ஈடுபட்ட மற்றத் துறவிகளைப் போலல்லாமல் அவர் காரியங்களைச் சாதிப்பதில் வெகு சாமர்த்தியமாக, வல்லவராக இருந்தார். அவரது திறமையும் தந்திரமும் சாதாரண ஐரோப்பியருடைய திறமையைக் காட்டிலும் சிறறப்புடையதாகவே இருந்தது.
சொல்பவர்:-கில்பர்ட் முர்ரே வழக்கமாக அரசியல் விஷயத்தைப் பற்றியும்உரையாடல் எப்படித் தொடங்கும் என்பது பற்றியும் மகாநாடு பற்றியும் நினைவுகூர்கிறார்.
கில்பர்ட் முர்ரே:-பிறகு நாங்கள் நிச்சயமாக மற்ற விஷயங்களுக்கும் போவோம். ஆனால் அவர் எங்களை முக்கியமாக தம்பால் ஈர்க்க விரும்பிக்கொண்டிருந்தார் என்ற உணர்ச்சி எனக்கு எப்பொழுதுமே ஏற்பட்டதில்லை. நாங்கள் பெரும்பாலும் அவரை நச்சரித்துக்கொண்டேயிருப்போம். அவரைப் பற்றி மாறான எண்ணம் நீங்கள் கொள்ளக்கூடும். நான்கடுஞ்சொற்களை உபயோகப்படுத்தவில்லை. உரையாடல்களைப் பற்றி இரண்டொரு தெளிவான அபிப்பிராயங்களைப் பெற்றேன். முதலாவதாக அவர் மகிழ்ச்சிகரமான ஒரு நண்பர். நகைச்சுவை மிக்கவர், பழகுவதற்கு இனியவர். அவரிடம் பேசிப் பார்த்தால் அவருடைய முறைகள் விளங்கும். நாடு முழுமைக்கும் தலைமை வகிக்கக்கூடிய பெருமை மிக்க அந்தஸ்து காந்திஜிக்கு இருந்தது என்ற அபிப்ராயத்தை அனைவருமே கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன். அவர் தெளிவாக இங்கிலாந்துக்குச் சரி சொல்லிவிட்டால் அந்த அந்தஸ்துக்குத் தீங்கு விளைந்து அழிந்துவிடும் என்று அவர் அறிந்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். அயர்லாந்துக்கு டிவேலராவைப் போன்ற நிலை. இங்கிலாந்துக்குச் சரியென்று சொல்லாத வரையில் நீங்கள் சரியாக இருப்பீர்கள்.அவர் நியாயமாகப் பேசுவார். வெளிப்படையாகப் பொதுவான அந்தஸ்தை ஒப்புக்கொள்வார். ஆனால் அவர் நிச்சயமாக ஏதாவது சொல்லவேண்டும் என்று நீங்கள் விருப்பினால் அவர் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
சொல்பவர்:-இதற்கு நேர்மாறாக டாக்டர் ஜெயகரும் இந்தியப் பிரதிநிதிகளும் காந்திஜி சில விஷயங்களில் மிக அதிகமாக உறுதிப்பாடு கொண்டவர். என்று வாராந்திரப் பயணத்தின்போது அவர் சொன்னதைக் கொண்டு வருந்துகிறார்கள்.
எம். ஆர். ஜெயகர்:-வாரக் கடைசியில் அரசியல் விஷயம் பற்றிப் பேசாதீர்கள் மிஸ்டர் காந்தி. ஏனெனில் மற்ற நாட்கள் முழுவதும் நீங்கள் சொன்ன விஷயங்களுக்கு நாங்கள் விளக்கம் கூறவேண்டியிருக்கிறது.என்று நாங்கள் அவரிடம் அடிக்கடி சொல்லுவோம்.
சொல்பவர்:-கடைசியாக பாலியாலில் காலம் சென்ற லிண்டேஸ் பிரபுவின் அறையில் மற்றவர் கூடியிருந்தபோது ஒரு வாரக் கடைசியில் காந்திஜி இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் எந்த விதமான மாற்றமும் இன்றி மாகாணங்களுக்கு மட்டும் பூர்ண உரிமை கொடுத்தால் தாம் திருப்தி அடைந்துவிடுவதாகக் கூறினார். திங்கட்கிழமையன்று பிரதம மந்திரி ராம்ஸே மாக்டொனால்டு ஜெயகரையும், சாப்ரூவையும் இன்னும் பலரையும் விருந்திற்கு அழைத்திருந்தார்.
எம். ஆர். ஜெயகர்:-அவர் தமது சட்டைப் பையிலிருந்து காந்திஜி நிகழ்த்திய பேச்சின் அறிக்கை ஒன்றை எடுத்தார். சொல்லப் போனால் அந்தப் பேச்சு துளிக்கூடக் கவனமின்றித் தயாரித்த பேச்சாகும்.
சொல்பவர்:-ஜெயகரையும் ஸ்ரீனிவாஸ சாஸ்திரிகளையும் காந்திஜியைப் பார்த்துவர பெளவுக்கு அனுப்பிவைப்பது என்று நள்ளிரவில் முடிவாயிற்று.
எம். ஆர். ஜெயகர்:-டிசம்பர் மாத மத்தியில் பயங்கரமான குளிர் அடிக்கையில் நாங்கள் ஏழாம் மாடிக்கு ஏறிச் சென்றோம். அந்தக் கடுங்குளிரில் இந்த வயதான மனிதர் வெட்ட வெளியிலே தூங்கிக்கொண்டிருந்தார். ஓர் ஏழையைப் போன்று பாயினாலோ அல்லது ஒரு துண்டு விரிப்பினாலோ போர்த்துக்கொண்டிருந்தார். சாஸ்திரி அவரைத் தட்டி எழுப்பினார். காந்திஜி இந்த உரையை நீங்கள் நிகழ்த்தினீர்களா?” என்று கேட்டார். அவர் எழுந்து ஆம்என்றார். மாகாணங்களுக்குச் சுய ஆட்சி உரிமை போதுமென்று நீங்கள் சொன்னீர்களா?” என்று கேட்டார். ஆம்என்றார் அவர். பிறகு அரசியல் படி அது சரியான கொள்கை அல்ல என்று அவருக்கு உணர்த்தினோம். அப்படியா! நான் இப்பொழுது மாற்றிக்கொள்கிறேன். இப்பொழுதுதான் எனக்கு அது விளங்கியது. நீங்கள் சொல்லுகிறபடி எதிலும் நான் கையெழுத்திடத் தயராக இருக்கிறேன்என்றார் அவர்.
சொல்பவர்:- பழைய குறிப்பை நீக்கிவிட்டு அதற்கு நேர் மாறாக ஒரு பத்திரம் தயாரிக்கப்பட்டது. இதில் காந்திஜி கையொப்பம் இட்டார். மறுநாள் அதிகாலையில் ஜெயகர் தமது ஆங்கிலக் காரியதரிசிகளை டாக்ஸியில் அனுப்பி முக்கியமான இருபத்தைந்து இந்தியப் பிரதிநிதிகளிடம் கையெழுத்துச் சேகரம் செய்துவரச் சொன்னார். இப்படியாகப் போருக்குத் தயாராகிய ஜெயகர் பிரதம மந்திரிக்கு டெலிபோன் செய்து சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து இந்த மாற்றம் செய்த அறிக்கையைக் காண்பித்தார்.
எம். ஆர். ஜெயகர்:-"ஓ அப்படியா?"என்று அவர் கேட்டார். ஆனால் அவர், “நேர் மாறாகச் சொல்லியிருக்கிறாரே. இவ்வளவு பெரிய மனிதர் இரண்டு முரண்பாடான கருத்துகளை இரண்டு வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார் என்பதை நாங்கள் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்னுடைய மந்திரி சபைக்கு நான் என்ன சொல்வது? மந்திரி சபை பதினொரு மணிக்குக்கூடஇருக்கிறது. என்ன பதிலை நான் கொடுப்பது?” என்று கேட்டார். மிஸ்டர் மாக்டொனால்ட், நீங்கள் ஒரு வக்கீலாக இருந்தால் இரண்டு முரண்பாடான கருத்துக்களிருந்தால் பின்னால் சொல்லப்பட்டதுதான் மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று நான் சொல்லியிருப்பேன்என்றேன். உங்களால் முடியக்கூடியதைச் செய்யுங்கள்என்று சொன்னேன். அவரும் செய்தார்.
சொல்பவர்:-அந்த மகாநாட்டில் யாருடைய பேச்சும் நல்லபடி எடுபடவில்லை. ஆனால் காந்திஜியின் பேச்சே புனித ஜேம்ஸ் அரண்மனைக்கு வெளியிலும் பரவிற்று.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-ஆம்.அவருடைய அணுகுமுறையே தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. அவரது உள்ளப்பாங்கு. எப்பொழுதுமே ஏழையின்பால் நாட்டம் கொண்டதாக இருந்தது.அவர் இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் லங்காஷையருக்கு போயிருந்தபோதுதான் மிகச் சுவையான கருணைமிகு அனுபவங்களைப் பெற்றார்.
சொல்பவர்:-லங்காஷையரில் உள்ள மில் தொழிலாளரிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கண்டு அவர் உள்ளம் வருந்தியதாக எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு கூறுகிறார்.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-அவர் உள்ளத்தை அது உறுத்தியிருக்கிறது. அவர் நேரடியாக ஆலைத் தொழிலாளர்களிடம் சென்று இந்தியாவில் ஏழைமை நிலை எப்படிப் புரையோடிப் போயிருந்தது என்பதை அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினார்.
பியாரேலால் நைய்யார்:-எங்கள் நண்பர்களில் சிலர்அவருக்கு அங்கே நல்ல வரவேற்பு கிடைக்காதோ என்று அஞ்சினர். ஏனெனில் அவர்கள் அப்பொழுது வியாபாரத்தில் அடி வாங்கி பாதிக்கப்பட்டிருந்தார்கள். பிரிட்டிஷ் லங்காஷையரில் சாமான்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்பதற்குக் கர்த்தாவே இவர்தான் என்று எண்ணி அவர்கள் இவர் மீது மிகவும் சீற்றமடைந்திருப்பார்கள் என்று அஞ்சப்பட்டது.
சொல்பவர்:-பியாரேலால் மட்டுமல்ல, காந்திஜியை விருந்தாளியாக ஏற்று காந்திஜியைடார்வன் போன்ற இடங்களில் உள்ள மற்ற ஆலைகளுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருந்த சார்ல்ஸ் ஹாவர்த்தும் இதே எண்ணம்தான் கொண்டிருந்தார்.
சார்ல்ஸ் ஹாவர்த்:-ஆம்! இந்தியர்களது விதேசி பகிஷ்காரம் மிக உச்சநிலையை அடைந்திருந்தது. பருத்தி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. வாலிபர்கள் பள்ளியை விட்ட பிறகும் நீண்ட காலம் வேலைக்குப் போக முடியாத பெருந்துன்பநிலை ஏற்பட்டிருந்தது. அவர் நள்ளிரவில் அங்கு வருவதாகக் கேள்விப்படவே நாங்கள் பெரிதும் கவலை கொண்டோம். அதுவும் அவர் ரெயிலில் வருகிறார் என்று கேட்ட உடனே நான் அவரைப் பகல் வெளிச்சத்தில் வரும்படி எத்தனையோ தந்திகளும், செய்திகளும் அனுப்பினேன். ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவர் ஸ்டேஷனிலிருந்து மோட்டாரில் போவதைப் பார்த்ததும் மக்கள் குதூகல ஆரவாரம் செய்தனர். அது எங்களுக்குப் பெருத்த ஆறுதலைத் தந்தது. அவரைப் பார்த்தால் என்ன நடக்குமோ என்று கவலை கொண்டிருந்த எங்களுக்கு அவர்கள் அவரைத் தங்களுக்கு உற்ற நண்பராகப் பாவித்து உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.
சொல்பவர்:-காந்திஜி தமது கருத்தைப் பற்றி எவரிடமும் பேசுவதற்கு அல்லது தமது வழக்கை எடுத்துரைப்பதற்கு முன்பே இது நடந்தது. அவரது வருகையின் அறிகுறியே இவ்வளவு தூரம் நற்பயனை விளைவித்தது.
சார்ல்ஸ் ஹாவர்த்:-ஆரம்பம் அதுதான் என்று நினைக்கிறன். மக்கள் தங்களது எதிரியாக நினைத்த மனிதர்.அவர்களிடமே பேச்சுவார்த்தை நடத்த விரும்பினார். நாம் பொதுவாகக் கையாளும் வழி இது அல்லவே. ஒரு மனிதர் அம்மாதிரி செய்ய முன்வந்தால் அது நிச்சயமாகப் போற்றக்கூடிய செயலே அல்லவா!
சொல்பவர்:-காந்திஜி தம் உத்தியிலே ஊன்றி நின்றார். அன்றாடக் கடமைகளை வழுவாது கடைபிடித்துவந்தார். எனவே அவரது கண்காணிப்பாளர்களாசார்ஜென்ட் ரோகர்சும், சார்ஜென்ட் ஈவானும் இன்னும் விடியற்காலையில் எழுந்திருக்கும்படிதான் இருந்தது.
சார்ல்ஸ் ஹாவர்த்:-விடியற்காலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் பிராத்தனை நேரம். பிறகு ஆறு மணியிலிருந்துஏழு மணி வரை காலையில் உலாவப் போகும் நேரம். நாங்கள்தங்கியிருந்தது ஒரு சிறு தோட்டக் கிராமம். மூர்கள் வாழும் பகுதியை ஒட்டியிருந்தது. அதுவரை நாங்களும் அந்த இரண்டு கண்காணிப்பாளர்களும் உலாவப் போய்வருவோம். லங்காஷையர் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் எங்கள் குழுவில் உள்ளோரும் அவருடன் உலாவச் செல்வோம். அந்தக் குழுவில் மொத்தம் ஒன்பது பேர் இருந்தோம். எனவே அந்தச் சின்ன வீட்டில் இருப்பது எல்லோருக்கும் சிரமமாகத்தான் இருந்தது. ஆட்டின் பால் வரவழைப்பதைத் தவிர யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விதமான வசதியும் செய்துதரப்படவில்லை. இது வெகுநாள் வரை எங்களுக்கு ஆட்டுப்பால் வரவழைப்பதுகூடப் பெரும் பிரச்சனையாகவே இருந்தது. கடைசியில் பிளாக்பான் என்ற இடத்திலிருந்து வந்த ஒரு நண்பர் தேவையான ஆட்டுப்பால் தர முன்வந்தார்.
சொல்பவர்:-வழக்கப்படி ஆட்டுப்பால் பற்றியும் பத்திரிகையில் பிரசுரமாகியது. ஆனால் ஓர் ஆலையிலுள்ள தொழிலாளர்கள் வெளியே செல்லும் நேரத்தில் காந்திஜியும் தொழிலாளியோடு தொழிலாளியாக வெளியே வந்ததை ஒரு பத்திரிகையாளர் பெரிதாகப் படம் போட்டுப் பிரசுரித்திருந்தார்.
சார்ல்ஸ் ஹாவர்த்:-ஆலை 11-30 மணிக்கு வேலையை நிறுத்திற்று. குறிப்பிட்ட நேரத்திற்குச் சிறிது பின்தங்கிவிட்டோம். அதனால் தொழிலாளர்கள் வெளியே வரும் நேரத்தில் அவரும் வெளியே வரும்படி ஆயிற்று. மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். காந்திஜி அவர்களுக்கு நடுவில் இருந்தார். பத்திரிகைகளுக்குப் புகைப்படம் அனுப்பும் ஒருவர்மக்களை மகிழ்ச்சி ஆரவாரம் செய்யச்சொல்லிப் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். மக்களை அவ்வாறு செய்யவைத்து அதே நேரத்தில் படம் எடுத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பினார். அது வெகு நன்றாக அமைந்துவிட்டது. தங்கள் உணவைத் தங்கள் வாயிலிருந்து பறித்த மனிதனையே உற்சாகப்படுத்திய காட்சி!”
சொல்பவர்:-இந்தக் காட்சி உலகெங்கும் பிரசுரமாகியது வேடிக்கை ஆனாலும் இதன் பின்னணியில் சிறிது உண்மையும் இருந்தது. பல கூட்டங்களில் இது பற்றிப் பேசப்பட்டது.
பியாரேலால் நைய்யார்:-பிறர் துன்பத்தில் நீங்கள் வளங்காண விரும்புகிறீர்களா?” என்று அவர் கேட்டார். இல்லைஎன்று அவர்கள் கூறினார்கள். பிறகு தொழிலாளர்களில் ஒருவர் அவரிடம் வந்து மிஸ்டர் காந்தி! நான் இந்தியாவில் இருந்திருந்தால் நீங்கள் இன்று எங்களிடம் என்ன சொல்லுகிறீர்களோ அதையேதான் சொல்லியிருப்பேன்என்றார்.
சி. ஹாவர்த்:-இது லங்காஷையர் மக்களிடம் அதிக பயனை ஏற்படுத்தியதா என்பது பற்றி நான் சொல்லமாட்டேன். ஆனால் வேலையில்லா காலத்திலும் இங்குள்ளவர்கள் 17/6d பெறுகிறார்கள். இது எவ்வளவோ மேல். இந்தியத் தொழிலாளியோ மாதம் ஒன்றுக்கு 7/6d வேலை செய்துவிட்டுக் கூலியாகப் பெறுகிறான்என்று அவர் சொன்னார். அவர் இந்தியாவில் உள்ள பஞ்சு ஆலைகளுக்கு உதவும் பொருட்டு இங்குள்ள ஆலைத் துணிகளைப் பகிஷ்கரிக்குமாறு பிரசாரம் செய்யவில்லை. கிராமக் கைத்தொழில்களுக்கு உதவும்படியாகத்தான் சொன்னார். எனக்குத் தெரிந்த பலர் காந்திஜியின் கருத்துக்களை நன்கு அறிந்தவர்களாகவும் காந்திஜியை விட நன்கு தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். நெசவாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தது குறிப்பாக எனக்கு நினைவிருக்கிறது. காந்திஜியின் கருத்துக்களில் அவர் மிகத் திருப்தி கொண்டார். அவர் அங்கு வருவதற்கு முன்பு நிச்சயமாக அவர் கருத்துக்களை அனுமதித்திருக்கமாட்டார். ஆனால் அவர் காந்திஜியைப் பார்த்த பின் திருப்தி அடைந்தார் என்றே நிச்சயமாகக் கூறுவேன்.
சொல்பவர்:-அரசியல் கேள்விகளும் பல எழுந்தன. சுமார் முப்பது பணியாளர்கள் பல விஷயங்கள் பற்றிச் சர்ச்சை செய்வதற்காகக் கிராமக் கல்விச்சாலை ஒன்றில் காந்திஜியைச் சந்தித்தனர்.
சி. ஹாவர்த்:-அவர் அளித்த பதில் ஒன்று என்னைப் பெரிதும் கவர்ந்தது. 7/6d “நீங்கள் இந்த நாட்டினிடமிருந்து விடுதலை பெற்றால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பற்றி என்ன கருதுவீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அது நாங்கள் எப்படி சுதந்திரத்தைப் பெறுகிறோம் என்பதைப் பொறுத்தது. நாங்கள் உங்களை உதைத்துத் தள்ளினால் நீங்கள் ஏறக்குறைய விரோதிகளாகச்செல்வீர்கள். நாங்களும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து வெளியேறிவிடுவோம். ஆனால் நீங்கள் நண்பர்களாகப் பிரிந்து வெளியேசென்று உதவி செய்யத் தயாராக இருந்தால் நாங்கள் பிரிட்டிஷ்சாம்ராஜ்யத்திற்குள்ளேயே இருப்போம். அதோடு உங்கள் ராஜ்யத்திற்குள் மகிழ்ச்சியாகவும் இருப்போம்என்று கூறினார்.
சொல்பவர்:-காந்திஜியைப் பொறுத்தவரை வட்ட மேஜைமகாநாட்டில் அவர் எதிர்கொண்டு விமரிசனத்திற்கு ஆளாக்கிய மக்களைக் காட்டிலும் அவரது பேச்சுக்களை வெளியில் கேட்கக்கூடிய மில் தொழிலாளர்கள் சிறந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சில் ஒரே கருத்தையே இரண்டு இடங்களிலும் வலியுறுத்தினார். இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையேயுள்ள தொடர்பை முறித்துக்கொள்ளக் கூடாது என்றும் அதிகாரத்தை மட்டுமே மாற்றவேண்டும் என்றும் அவர் திரும்பத் திரும்பக் கூறினார். காமன்வெல்த் குடிமகனாக இருக்கவேண்டுமேயல்லாது சாம்ராஜ்யப் பிரஜையாக இருக்கக்கூடாது என்றே இன்னும் ஆசைப்படுகிறேன்என்று காந்திஜி சொன்னார். இன்று அவரது அந்த வார்த்தைகள் தீர்க்க தரிசனத்தோடு கூறிய எளிமையான சொற்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் அன்று அவரது விந்தைப் போக்கோடு இணைத்துப் பார்த்தால் எளிமை வெளித்தோற்றமாகத்தான் தோன்றும். டிசம்பர் முதல் தேதி மகாநாடு முடியும் தறுவாயில் காந்திஜி இரண்டு நிமிஷங்கள் ராம்ஸே மக்டொனால்டு அவர்களுக்குக் கூறிய சந்தேகாஸ்பதமான மறுமொழியில் கூறிய கருத்து நிபந்தனையுடன் கூடியதாகத்தான் இருந்தது.
டெம்பிள்வுட் பிரபு:-ஹாலிபாக்ஸ் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இந்தியாவிற்குச் சென்று தங்கியிருந்தால் காந்தியைப் பற்றி அவர் நன்கு புரிந்துகொண்டிருப்பார். அவரோடு பேசி முடிவு எடுக்கக்கூடிய சுதந்திரம் எனக்குக் கிடைத்திருக்குமானால் இங்கு நாங்களும் இன்னும் விரைவாகச் செயல்பட்டிருக்க முடிந்திருக்கும். ஆனால் அந்தச் சமயத்தில் அது சாத்தியமில்லாத ஒன்று.
நான் அவரிடம் இந்தியா பிரிட்டனின் காமன்வெல்த்தில் (பொது உடமை) அங்கம் வகித்தவாறே சுதந்திரம் அடைவதைக்காண நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் பாதுகாப்புப் பொறுப்புகளை உங்களிடமே விட்டுவிடுகிறோம்என்று கூறியிருப்பேன். சட்டசபையின் மூலம் சட்டங்களை இயற்றிப் பாதுகாப்புஅளிப்பதை விட அதிகமான பாதுகாப்புகளை அவர் எனக்கு அளித்திருப்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.
ஹாலிபாக்ஸ் பிரபு:-அவரிடம் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, அலுப்புத் தட்டக்கூடிய முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் மலிந்திருந்தும் கூட இந்திய மக்கள் மேல் அவருக்திருந்த அபரிமிதமான செல்வாக்கைப் பற்றி இங்கிலாந்து மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை.
எச். என். பிரெயில்ஸ்ஃபோர்டு:-காந்திஜி இந்தியாவில் செய்த பணிகளைப் பார்த்திருக்கும் நம்மில் சிலர் பொதுமக்களுக்கு அவற்றைப் புரியவைத்திருப்போமாயின் சரித்திரத்தின் போக்கே வேறு விதமாக அமைந்திருக்கும், ஆனால் நாங்கள் அதில் வெற்றி காணவில்லை.
டெம்பிள்வுட் பிரபு:-ஐரோப்பியக் கருத்துக்கும் ஆசியக் கருத்துக்கும் இடையிலுள்ள பிரச்சனையே பெரும் அடிப்படைப் பிரச்சனை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஐரோப்பியர்கள் ஒரு விஷயத்தைத் தொடக்கத்திலிருந்தே தொடங்கி அனுபவப்பூர்வமாக அதன் வழியே சென்று முடிவு காண முயல்வார்கள். ஆனால் இந்தியச் சிந்தனையாளர்களோ ஒரு விஷயத்தை அதன் முடிவிலிருந்து தொடங்குவார்கள்.
சொல்பவர்:-ஆனால் இன்னும் முடிவாகவில்லை காந்திஜி இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். கிட்டத்தட்ட, நேராகச் சிறைச்சாலைக்கேதான் சென்றுவிட்டார். தீண்டத்தகாதவர்கள் நிலைக்காகவும் வளர்ந்து வரும் இந்திய முஸ்லிம்களின் பிரிவினை மனப்பான்மைக்காகவும் உண்ணாவிரதம் என்னும் அக்கினிப்பரீட்சையில் இறங்கினார். அதோடு அடிப்படை அமைப்பே இன்னும்முடிவு பெறவில்லை. எதிர் காலம் குழப்பமுடையதாக இருந்தது. உலகப் போர் மூளும் போல் இருந்தது. அவர் உண்ணாவிரதத்துக்கு எல்லாம் சேர்ந்து கொண்டன. மூன்றாம் சுற்று வட்ட மேஜை மகாநாட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆசாரமுள்ள ஹிந்துக்கள் கூறுவது போல் அவர் அதன் பிறகு ஒருபோதும் கடல் கடந்து செல்லவேவில்லை.
டெம்பிள்வுட் பிரபு:-ஓர் அத்தியாயம் முடிவுற்றது. அதன் பிறகு அவருடன் செய்யவேண்டிய பணி உண்மையில் எதுவும்இங்கே இல்லை.
சொல்பவர்:-இந்த அத்தியாயம் முடிவுறும் நிலையிலே காந்திஜி நேப்பிளுக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குக் கப்பலேறுவதாக எண்ணியிருந்தார். அப்பொழுது விந்தையான வருத்தம் தரும் அடிக்குறிப்பு ஒன்றை வரலாற்றில் பதிக்கும்படி ஆகிவிட்டது. முசோலினியின் இத்தாலி தேசத்தில் காந்திஜி மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பாகப் பத்திரிகையாளரிடம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் பிரான்ஸ் நாட்டு நண்பர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்.
டெம்பிள்வுட் பிரபு:-அவர்கள் எந்தக் கொள்கையையும் உறுதியாகப் பற்றி நிற்கத் தயாராக இல்லை. அவர்கள் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதில்தான் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார்கள்.
சொல்பவர்:-அவர்கள் நினைத்தது நடந்தது. "ஜியோர்னேலே த  இதாலியா'' (Giornale d' Italia) என்ற கேதாவின் பத்திரிகையில் காந்திஜி இந்தியாவிற்குத் திரும்பியதும் அரசியல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்போவதாகக் கூறினாற்போல் திரித்து செய்தி வெளியிட்டனர். பேட்டி என்று கூறப்பட்டு ஒரு கூட்டத்திற்கு காந்திஜி அழைக்கப்பட்டு வலை வீசப்பட்டார். தம்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களைக் காந்திஜி மறுத்தார். அவர் கப்பல் ஏடனை அடைந்ததும் தமது மறுப்பைத் தந்தி மூலம் இலண்டனுக்குத் தெரிவித்தார். ரோமாபுரி நாட்டில் எல்லாக் கூட்டங்களிலும் அவர் குழுவைச் சேர்ந்த மகாதேவ தேசாய் மட்டுமே பக்கத்தில் இருந்தார். அவர் குறிப்பு எடுத்துவைத்திருந்தார். அதை பியாரேலால் நைய்யார் பார்வையிட்டுள்ளார்.
பியாரேலால் நைய்யார்:-அவர் மகாதேவ தேசாயிடம் ஓர் அறிக்கை தயாரிக்கச் சொன்னார். மகாதேவ தேசாய் தாம் எடுத்த குறிப்புக்களைச் சேகரிக்க முயன்றார். ஆனால் அவரது நண்பர் ஒருவர் தம் பெட்டியை எடுத்துச்சென்று அதிலுள்ள குறிப்புக்களை வேறு வகையில் பயன்படுத்திவிட்டு வெளியல் தூக்கி எறிந்துவிட்டதை அறிந்த பொழுது வருத்தமடைந்தார். அந்தக் குறிப்புக்கள் திரும்பக் கிடைக்கவேயில்லை. அந்தக் குறிப்புக்களை நான் படித்திருந்தேன். ஸெனட்டார் கேதாவின் பத்திரிக்கையில் காந்திஜியைப் பற்றி எழுதியிருந்தது போல் அதில் எதுவும் குறிக்கப்படவில்லை என்பது நன்கு நினைவிருக்கிறது.
சொல்பவர்:- அந்தச் சமயத்தில் அந்த நிகழ்ச்சி காந்திஜியின் பெயருக்கு இழுக்குக் கற்பிப்பதாக இருந்தது. வேண்டிய ஊறும் விளைவித்துவிட்டது. ஆனால் டெம்பிள்வுட் பிரபுவின் அறிக்கை அழுத்தமாக இருந்தது.
டெம்பிள்வுட் பிரபு:-நான் அவரை முழுவதும் நம்புகிறேன். அவர் பெயருக்கு மாசு கற்பிக்க மேற்கொள்ளப்பட்ட இழிசெயல் என்றே நான் நினைக்கிறேன். அவர் உண்மையாக அது பற்றிப் பெரிதும் வருந்தினார்.
சொல்பவர்:-ஆனால் இந்தியா திரும்பும் பொழுது பயணத்தைப் பற்றிய, நினைவில் வைக்கவேண்டிய நல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. இலண்டனில் இவரை உபசரித்த மூரியல் லெஸ்டர் ரோமாபுரி வரையில் நடந்த பயணத்தை நினைவுகூர்கிறார்.
மூரியல் லெஸ்டர்:-குறிப்பாக ஸ்விட்ஸர்லாந்திற்கு வந்த பொழுது அவர் மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டார். அவர் யாருக்குமே பேட்டி அளிக்கவில்லை. கடந்த பத்து வாரங்களாக இங்கு அவர் முழுமூச்சுடன் கவனித்து வந்த வேலைகளை மறக்க முயலவில்லை என்றாலும் அவற்றை நினைவில் தேக்கி மனத்துக்குச் சுமை ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை. மறந்த நிலையில் மகிழ்ச்சியுடன் இருக்கவே முயன்றார் என்று எண்ணுகிறேன்.
சொல்பவர்:-அவர் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ரோமைன் ரோலண்டு அவர்களைக் காணச் சென்றார். அவர் பியானோ வாசித்துக் காட்டினார். அதைப் பற்றிய அவர் கருத்துக்களைக் குறிப்பில் காணோம். ரோமாபுரியில் வெட்டிகன் மாளிகைக்கும் மீரா பென்னுடன் சென்று வந்தார்.
மீரா பென்:- நாங்கள் அங்குள்ள மாதா கோவிலுக்குச் சென்றோம். அங்கே மைக்கேல் ஏஞ்சிலைப் பற்றிய கவர்ச்சிச் சிற்பங்கள் உள்ளன. செம்பினால் ஆன சிலுவையில் அறையப்பெற்ற ஏசுநாதரின் உருவம் ஆள் உயரத்திற்கு இருக்கிறது. அது மிகவும் அழகானது. உணர்ச்சிபாவம் ததும்புவது. பாபுஜி அதன் முன் நின்றார். அதைப் பார்த்தார்; பார்த்தார்;அப்படிப் பார்த்த பிறகு மௌனமாக இரு பக்கங்களுக்கும் சென்றார். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. யாரும் போக நினைக்காத அந்தச் சிலையின் பின்புறத்துக்கும் போனார். மீண்டும் பார்த்தார். பிறகு சுற்றி முன்புறம் வந்தார். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வெளியே வந்தோம். வெட்டிகனை விட்டு வெளியே வந்த பின்னரே பாபுஜிமெதுவான குரலில் அற்புதம்,சிலுவைச் சிலை பிரமாதம்''என்றார்.
சொல்பவர்:- சிறு சிறு விவரங்களும் சில சமயங்களில் காந்திஜியைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லும். அவருக்குக் கிடைத்த பொம்மைகளை நன்கு கவனிக்க வேண்டும். குறிப்பாக கிங்ஸ்லி ஹாலில் குழந்தைகள் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த கம்பளி ஆட்டுக்குட்டி போன்ற பொருள்களைக் கூறலாம்.
மூரியல் லெஸ்டர்:-நாங்கள் பிரயாணத்தின் பொழுது வண்டி மாற்றிய பொழுதெல்லாம் இந்தப்பொம்மைகளை அவர் தம் மிருதுவான கரங்களால் தாமே எடுத்துச்சென்று ஜாக்கிரதையாக ஜன்னல் மீது வைப்பார். நீராவிக் கப்பலில், கால்வாயைக் கடக்கும் பொழுதும் அப்படியே செய்வார். இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் அவர் மிகவும் கவனம் எடுத்துக்கொள்வார்.
சொல்பவர்:-சார்ஜென்ட் ரோகர்சும் சார்ஜென்ட் ஈவானும் கடைசியில் காந்திஜியின் விருந்தாளிப் பதவியிலிருந்து ஒருநாள் விடுமுறை பெற்றனர்.
டெம்பிள்வுட் பிரபு:-அவர் என்னிடம் வந்து அவர்கள் உண்மையிலேயே என்னை இலண்டனில் மிகவும் நல்லபடியாகக் கவனித்துகொண்டார்கள். அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னுடன் ரோமாபுரிக்கு வர உங்களால் ஏற்பாடு செய்யமுடியுமா?” என்று கேட்டார். நாங்கள் ஏற்பாடு செய்தோம். ரோமாபுரி பயணம் முடிந்து தப்பபிப்பிராயங்களும் மறைந்த பிறகு அவர்கள் இருவருக்கும் அவர் மிகச் சிறந்த கைக்கடிகாரங்களை அனுப்பிவைத்தார். நான் அவற்றை அவர்களுக்கு இலண்டனில் பரிசாக் கொடுத்தேன்.
பியாரேலால் நைய்யார்:- நான் அவர்களுக்கு ஆங்கில கடிகாரங்களை அனுப்ப வேண்டும். ஏனெனில்,முதலாவதாக அவர்களுக்கு நான் உறுதி அளித்துள்ளேன். இரண்டாவதாக எனக்கு ஆங்கிலேயர்கள்பால் எவ்விதத் துவேஷமோ வெறுப்போ இல்லை என்பதைக் காட்டவேண்டும். ஆங்கிலேயர்கள் தயாரித்தது என்பதற்காக அப்பொருட்களைப் புறக்கணிக்க நான் விரும்பவில்லைஎன்று கூறினார் காந்திஜி.
டெம்பிள்வுட் பிரபு:-நாங்கள் இலண்டனில் இருந்த பொழுது எங்கள் சொந்த நட்புறவு மிகவும் நன்றாக அமைந்திருந்தது என்பதைக் காட்டுகிறது இந்தச் செயல்.
எச். என். பிரெயில்ஸ்போர்டு:-இங்கிலாந்தை விட்டுச் செல்லும் பொழுது ஆங்கிலேயர்கள், அல்லது குறைந்த பட்சம் அரசியல் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை மாற்றுவதற்கு இன்னும் தயராகவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். ஆனால் அதே சமயத்தில் இங்கிலாந்தில் அவருக்கு அளிக்கப்பட்ட உபசாரங்களையும் அன்பையும் பற்றி அவர் நன்றி உணர்வோடு பேசினார். தமது துர்பாக்கியமான நாட்டுக்கு எது நடந்திருந்தாலும் அல்லது நடக்கவேண்டியிருந்தாலும் இங்கிலாந்தில் தாம் பெற்ற அன்பையும் ஆசார உபசாரங்களையும் என்றுமே மறக்க முடியாது என்று அவர் கூறியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
சொல்பவர்:-இங்கிலாந்தின் அரசியல் முக்கியத்துவம் பற்றி காந்திஜி உணர்ந்ததை இன்னமும் விவாதிக்கலாம். ஆனால் அவரது சொந்த சரித்திரத்தில் அவர் ரஸ்கினுடைய புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய அடிநாளிலிருந்து பிரிட்டிஷாருடன் தொடர்பு கொண்டது பற்றி இடையறாத இழை ஒன்று ஓடுகிறது. பிரிட்டனுக்குப் படை சேர்த்த நாளில் அவரது நாடு ஒரு முடிவு எடுக்கமுடியாமல் குழம்பித் தவித்துக்கொண்டியிருந்தது. தமக்கென்று ஒரு கைத்தடி, இராட்டை, நம்பகமான கடிகாரம் போற்றிப் பாதுகாத்து வந்த சில சாதாரண சிறுபொருட்களைத் தவிர வேறு ஒன்றையும் வைத்துக் கொள்ளாத அந்தக் கிழவன், மௌண்ட்பேட்டன் பிரபு அவர்களிடம் சென்று, அரசி எலிசபெத்துக்கும், அரச குமாரன் பிலிப்புக்கும் கல்யாணப் பரிசாகத் தாம் என்ன அனுப்பலாமென்று கேட்டிருக்கிறார்.
லூயி பிஷர்:-அவர் துவேஷமோ பகையோ பாராட்டாதவர். அவருக்கு வெறுக்கத் தெரியாது. அவர் இங்கிலாந்தை இந்தியாவிடமிருந்து விடுவிக்க விரும்பியே இந்தியாவை இங்கிலாந்திடமிருந்து விடுவிக்க விரும்பினார் என்று நான் எண்ணுகிறேன்.
சொல்பவர்:-லூயி பிஷர் அப்படி நினைக்கிறார். 1946ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அரசியல் குழுவைத் தலைமை தாங்கி அழைத்து வந்த பெத்திக் லாரன்ஸ் பிரபுவும் அதே கருத்தை உறுதி செய்கிறார்.
பெத்திக் லாரன்ஸ் பிரபு:-காந்திஜி இங்கிலாந்தின் மீது துவேஷம் கொண்டார் என்றும் குறிப்பாகத் தமது வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரிட்டனுக்கும் அதன் சாம்ராஜ்யத்திற்கும் தீங்கிழைக்க முயன்றார் என்றும் சொல்லப்படுவதை நான் சில சமயங்களில் கேட்டிருக்கிறேன். இது முழுப் பொய். காந்திஜிக்கு அந்த மாதிரி உணர்ச்சிகளோ எண்ணங்களோ கிடையாது. இங்கிலாந்தில் இளமையில் கழித்த நாட்களையும் அப்பொழுதும் அதற்குப் பின்னரும் அவருக்கு இங்கிலாந்தில் ஏற்பட்ட நண்பர்களையும் அவர் வாழ்நாள் முழுவதுமே நினைவு வைத்துக்கொண்டிருந்தார்.
சொல்பவர்:-1914ஆம் ஆண்டு காந்திஜி தென் ஆப்பிரிக்காவை விட்டு வந்ததிலிருந்து அவருடைய பரம சீடராக விளங்கியவர் காகா காலேல்கர். காந்திஜியின் தொடர்பு பற்றி எழுந்த பேச்சுக்களை அவர் சிறைச்சாலையின் நான்கு புறச் சுவர்களுக்குள்ளேயே கேட்டிருக்கிறார். காலேல்கர் இறுதியாகக் கூறுவதாவது:
காகா காலேல்கர்:-காந்திஜியின் செல்வாக்கினால்தான் இந்தியா தேசம் காமென்வெல்த்தோடு சேர முடிவு செய்தது. எனவே நான் ஆங்கிலேயர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம், “உங்களிடம் ஒரு பெரிய குறைபாடு இருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மனத்தில் கொண்டு காமென்வெல்த்திற்குச் சிறப்பான கடந்த காலம் இருந்ததாக எண்ணுகிறீர்களே ஒழிய,அதற்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறீர்கள். நமக்கு முன்னால் இருக்கும் எதிர்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அதனுடைய கடந்த காலம் ஒன்றுமேயில்லைஎன்று நான் சொல்லுவேன்.
(மூன்றாம் பகுதி நிறைவு)
காந்திஜி ஒரு சொற்சித்திரம் – தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – கடைசி காட்சி - 1

$
0
0
Ghandi by lkop / DeviantArt

சொல்பவர்:-ஆகஸ்டு 1947ஒரு முடிவும் ஓர் ஆரம்பமும் ஆகும். பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் செல்கின்ற அதிகாரத்தை இரண்டு தேசங்கள் சேர்ந்து பெறப்போகின்றன. 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கராச்சியில் மௌண்ட்பேட்டன் பிரபு காய்தே அஜம் ஜின்னா அவர்களிடம் கவர்னர் ஜெனரல் பதவியை ஒப்படைத்துவிட்டு உடனே தில்லிக்கு விமானத்தில் பறந்து வந்தார். அவரது விமானம் பஞ்சாபின் எல்லைப் பகுதிக்கு மேலாகப் பறந்து சென்ற பொழுது பல பெரும் தீக்கங்குகளைப் பார்க்க முடிந்தது. அன்றிரவு தில்லியிலுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு புது இந்தியாவின் சார்பில் பேசினார்.
ஜவஹர்லால் நேரு:-நள்ளிரவு மணி பன்னிரெண்டு அடிக்கும் பொழுது உலகம் உறங்கும் நேரத்தில் இந்தியா சுதந்திர வாழ்விற்காக விழித்துக்கொள்கிறது.
(கையொலி, முரசொலி, சங்கொலி, இசை ஒலி எல்லாம் நள்ளிரவில் கேட்கிறது. மகாத்மா காந்திக்கு ஜேஎன்ற கோஷத்தோடு முடிகிறது.)
சொல்பவர்:-மகாத்மா காந்திக்கு ஜேஎன்ற கோம் எழுந்தாலும் காந்திஜி புது தில்லியில் இல்லை. அவர் கல்கத்தாவில் இருந்தார். அவர் மகிழ்ச்சி அடையவில்லை. சுதந்திரத் திருநாளை அவர் பிரார்த்தனையிலும் உபவாசத்திலும் கழித்தார்.காந்திஜி இந்த விழாவில் கலந்துகொள்ள தில்லிக்குச் செல்வதைஎப்படி மறுத்தார் என்பதை பி. ஸி. கோஷ் நினைவுகூர்கிறார்.
பி. ஸி. கோஷ்:-என் சுதந்திரம் இன்னும் வரவில்லை. என் உள்ளக் கருவில் உருப்பெற்றுள்ள சுதந்திரம் இன்னும் வரவில்லை. இந்தப் பயங்கர வறுமை ஒழியும் வரை இம்மாதிரியான கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் இடமே இல்லைஎன்று அவர் சொன்னார்.
சொல்பவர்:-மகாத்மா காந்திக்கு ஜேஎன்ற கோஷம் அவருக்கு உண்மையற்றதாகத் தோன்றியது முதல் தடவை அல்ல.
பி. ஸி. கோஷ்:-1921ஆம் ஆண்டு அதிகாலை ஆறு மணிக்கு எங்களைச் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கியிருந்தார். குளிர்காலம் அது. டிராம்வே வேறு வேலை நிறுத்தம் செய்திருந்தது.நாங்கள் நடக்கும்படி ஆகிவிட்டது. பிறகு அவர் வந்தார். தாமதமாக வந்ததற்கு அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். நேற்று இரவு நான் ஓரிடத்திற்குச் சென்றிருந்தேன். எல்லோரும் உரத்த குரலில் மகாத்மா காந்திக்கு ஜேஎன்று கோஷம் போட்டார்கள். ஆனால் ஒருவரும் நான் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லைஎன்றார் .
சொல்பவர்:-இந்தியப் பிரிவினையை அனுமதித்தபடியால் நாட்டு மக்கள் தாம் சொல்வதைக் கேட்கவில்லை என்பதைக் காந்திஜி உணர்ந்தார். ஆனால் சுதந்திரம் கைகூடிய நேரத்தில் அவரைத் தனிமையாக இருக்கச்செய்தது இது அல்ல; அது வேறு விஷயம்.
பி. ஸி. கோஷ்:-ஆம், தமது மதிப்பிற்குரிய தோழர்களும், உதவியாளர்களும் செய்யவேண்டியதைச் செய்யாமல் தம்மைவிட்டு ஒதுங்கிவிட்டனர் என்ற தாபம் இருத்தது. புது அரசாங்கத்திற்கு முன்பும்கூடக் காங்கிரஸ்காரர்கள் எதைச் செய்யவேண்டுமோ, அதைச் செய்வதில்லை என்று அவர் கூறினார்.
சொல்பவர்:-அதிகாரம் மாறும் சமயத்தில் ஆச்சாரிய கிருபளானி காங்கிரஸ் தலைவராக இருந்தார். புதிய அரசாங்கத்தைப் பற்றிக் காந்திஜியின் கருத்துக்களும் கொள்கைகளும் என்ன என்பது அவருக்குத் தெரியும்.
ஜே. பி. கிருபளானி:-அவர் பரவல் முறையை நம்பினார். அவர் தொழில்கள் மட்டும் பரவலாக இருக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அதிகாரமும் பரவலாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஜனநாயகம் சிறுசிறு யூனிட்பிரிவுகள் மூலமே நன்கு இயங்க முடியும். எனவே சிறுசிறு பகுதிகளுக்கும் சக்திவாய்ந்த சுய ஆட்சி உரிமை வேண்டும் என்று கருதினார். ஒவ்வொரு கிராமமும் தனித்தனியே சுய ஆட்சி காணும் குடியாட்சியென விளங்க வேண்டும் என்று கனவு கண்டார்.
சொல்பவர்:-இறுதி நாட்களில் காந்திஜியை மிகவும் ஆழமாக ஊடுருவிப் பாதித்தது அரசியல் பிரிவினை அல்ல என்பது எழுத்தாளர் ஸ்ரீதாரணியின் கருத்து.
கே. ஸ்ரீதாரணி:-அவர் எல்லைகள், நாடுகள், சாம்ராஜ்யங்கள் என்று கவனம் செலுத்தினாலும் கூட மற்ற அரசியல்வாதிகளைப் போலவோ, தேசத் தலைவர்களைப் போலவோ அவற்றைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பவர் அல்லர். அவர் முக்கியமாகக் கவனம் செலுத்தியதெல்லாம் மக்களைப் பற்றியும் மக்கள் தன்மையைப் பற்றியுமேதான். தம் வாழ்நாள் முழுவதும் எந்த மக்களுக்காகப் பரிந்து பேசினாரோ, பணிபுரிந்தாரோ அவர்களே அவரைக் காட்டிக்கொடுப்பதாக அவர் எண்ணினார். இது அவருக்குத் தேசப் பிரிவினையைக் காட்டிலும் அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் நாடு பிளவுபட்டதைக் காட்டிலும் உள்ளம் பிளவுபட்டதைத் தாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது.
சொல்பவர்:-இருப்பினும் வயதான காலத்தில் காந்திஜிக்கு உற்சாகமூட்டும் பொறுப்பை நாம் ஏற்றிருக்க வேண்டும். ஹோரேஸ் அலெக்ஸ்ஸாந்தர் காந்திஜியைச் சிறைச்சாலையில் 1942-1944க்கு இடையில் பார்த்திருக்கிறார். அப்பொழுது எல்லாமே தவறுதலாக நடந்துவிட்டதாகக் காந்திஜி கருதினார் என்பதும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவருக்கு வெகுகாலம் பிடித்தது என்பதும் அவர் கருத்து. லூயி பிஷர் 1942 இல் அவரைப் பார்த்த பின் 1946-இல் திரும்பி வந்தார். அவர் 1942-இல் நடந்த கிளர்ச்சியும் வன்முறைச் செயல்களுமே அவரைப் பெரிதும் பாதித்ததாக நம்புகிறார்.
லாயி பிஷர்:-ஆம், ஆம். இது மிக அதிகமான வன்முறைகளைத்தாண்டிவிட்டது. வீடுகளையும் பொதுக் கட்டிடங்களையும் கொளுத்துவது பிரிட்டிஷ் மக்களைத் தாக்குவது போன்ற வன்முறைச் செயல்களைப் பெரும் அளவிற்குத் தூண்டிவிட்டுவிட்டது. அவர் அந்தக் குற்றத்தைத் தாம் ஏற்க மறுத்தாலும் இது மீண்டும் ஓர் அரசியல் ஒத்துழையாமை இயக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமோ என்று அஞ்சினார். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பெற்றதும் அந்த இயக்கத்தைச் சரியான வழியில் திருப்ப வேண்டும் என்றுதான் கருதினார். தம் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியை அவர் கண்டார். 1946-இல் ஒவ்வொரு இந்தியனுக்குமே இது தெளிவாகியிருக்கும். அதேபோல நிச்சயமாக பிரிட்டிஷ் மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் என்னைப் போன்ற வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் இது கட்டாயம் தெளிவாகியிருக்கும். 1946போருக்குப் பிறகு பிரிட்டிஷார் தங்கள் நலனுக்காகவும் ஆதர்ச காரணங்களுக்காகவும் இந்தியாவை விட்டுவிட முடிவு செய்தார்கள். காந்திஜி அதை நம்பத் தயாராக இருந்தார்.
சொல்பவர்:-ஹோரேஸ் அலெக்சாண்டர் இந்தியாவிற்குத் திரும்பவும் 1946-இல் வந்தார், காந்திஜியின் சிறப்பைக் கண்டார்.
ஹோரேஸ் அலெக்சாண்டர்:-1946-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெரும் அளவுக்குப் பழைய நிலையை அடைந்திருந்தார். 1946-இல் வசந்த காலத்தில் அரசியல் குழு இந்தியாவிற்கு வந்தது. அப்பொழுது பழைய உற்சாகத்தையும் உறுதியையும் பெற்றுவிட்டிருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அவரை அறிந்த நாள் முதல் அவரது வாழ்க்கையில் இறுதி ஆண்டு வரை இந்து முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் படுகொலை புரிவதைத் தடுத்து நிறுத்த அவர் நடத்திய போராட்டமே பெரிது. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போவதற்கு முன்பும் போன பின்பும் அவர் மேற்கொண்ட சமரசப் பணியே அவரது வாழ்க்கையின் உச்ச கட்டம் என்று நான் கூறுவேன்.
ஸ்ரீதாரணி:-அவர் உடல்நலம் பேணுவதில் காட்டிய அக்கறை என்னை மெய்யாகவே பெரிதும் கவர்ந்தது. அவரது தோற்றம் உயர்நிலைப்பள்ளி மாணாக்கியும் கண்டு பொறாமைப்படக்கூடிய வகையில் அமைந்திருந்தது. ஏனெனில் அவர்விஞ்ஞான முறைப்படி தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தார். அவர் அருந்தும் ஒவ்வொரு அவுன்ஸ் உணவும் அளவானது. முன்கூட்டி திட்டமிடப்பெற்றது. அவர் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழ ஆசை கொண்டிருந்தார் என்பதை இங்கு நினைவுகூர்வோம். இந்த உணவு முறைப்படி அவர் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடியும் என்றே நான் நம்புகிறேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஆத்திரமும் பகையும் கொண்டு ஒருவரை ஒருவர் தலையைக் கொய்துகொண்டிருந்த காரணத்தினால் அவருக்கு வாழ வேண்டுமென்ற ஆசையே போய்விட்டது. அவர் தமது பிரார்த்தனைக் கூட்டங்களில், நான் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழ ஆசை கொண்டிருந்தது என்னவோ மெய்தான். ஆனால் இப்பொழுது எனக்கு வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமற்போய்விட்டது என்று அடிக்கடி கூறலானார்.
ஹோரேஸ் அலெக்சாண்டர்:-ஆம், எதற்கும் இரு பக்கம் உண்டல்லவா? தாம் அனுபவிக்கும் வேதனைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினார். அவர் பட்ட வேதனை மிகத் தெளிவானது; உண்மையானது. ஆனால் அதைத்தவிர வேறு ஒரு சிறப்பியல்பும் அவரிடம் குறிப்பாகக் காணப்பட்டது.
சொல்பவர்:-போர் முடிந்த கையோடு பலவகையிலும் பரந்த மனப்பான்மையோடு ஈவான் ஸ்டீபன்ஸ் காந்திஜியைக் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஸோத்புர் ஆசிரமத்தில் தங்கியிருந்த சமயம் கண்டிருக்கிறார்.
ஈவான் ஸ்டீபன்ஸ்:-அப்பொழுது குளிர்காலம். அன்று நல்ல குளிராக இருந்தது. அவர் தம்மைப் போர்வையால் மூடிக்கொண்டிருந்தார். பட்டுப்பூச்சியின் கூடு போன்று தோன்றினார். அவர் அமைதியாக அமர்ந்து கடந்த கால நிகழ்ச்சிகளை அசைபோட்டுப் பார்ப்பதில் மகிழ்ந்திருப்பார். தென் ஆப்பிரிக்காவில் பழைய நாட்களில் நடத்திய போராட்டத்தைப் பற்றி நீண்ட விளக்கம் தந்தார். பிறகு தம் இளமைப் பருவத்தில் முதன் முதலாக தாம் வெறுத்த கல்கத்தாவிற்கு விஜயம் செய்த நிகழ்ச்சியை விரிவாக விளக்கினார். இப்பொழுது இருந்த எண்ணத்திற்கு மாறாக கல்கத்தாவை மோசமான அசுத்தமான வெறும் பொருளீட்டும் நகரம் என்றுதான் அவர் எண்ணியிருந்தார். அவர் அமர்ந்திருக்க, காரியதரிசி பேனாவினால் ஏதோ கிறுக்குவதை என்னால் கேட்க முடிந்தது. வெளியே டம்டம் விமான நிலையம். விமானங்கள் வருவதும் போவதுமாயிருந்தன. பிரிட்டிஷ் படைகளும் அமெரிக்கப் படைகளும் விமானத்தில் தங்கள் நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். ரெயில் வண்டி நிலையமும் ஆசிரமத்தை ஒட்டினாற்போல் இருந்தது. ரெயில் வண்டிகள் போகும் கடகட ஓசையும் காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. வெளியிலிருந்து வரும் இந்த ஓசைகளை மேவிச் சில சமயம் மகாத்மா காந்திஜியின் முழக்கம் திடீரெனக் கேட்கும். சில குறிப்பிட்டபழைய சம்பவங்கள் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொழுது இப்படிக் குரல் உயரும். அவர் உற்சாகத்தில் மிதப்பார். அசாதாரணத் தெளிவுடன் சுவாரசியமான பேட்டி கொடுத்ததற்காக நான் அவரைப் பாராட்டி நன்றி கூறி முடித்தேன். அந்தப் பட்டுக் கூட்டிலிருந்து ஒரு பொன்னிறமான கை வெளியே நீண்டு வந்து என்னைப் பிடித்துக்கொண்டது. அது ஒரு வயதானவரின் கையாகத் தோன்றினாலும் அது இளமையும் வெதுவெதுப்பும் மிக்கதாக இருந்தது. அது உறுதியான உருண்டு திரண்டிருந்த வாலிபனது கரம் போலத்தோன்றியது. எழுபது வயதான மனிதனின் கையா இது என்ற வியப்பைக் கொடுத்தது.
சொல்பவர்:-உண்மையில் அவருக்கு எழுபத்தாறு வயதாகியிருந்தது. பேனாவினால் ஏதோ எழுதிக்கொண்டிருந்த அவரது காரியதரிசி பியாரேலால் நைய்யார் போர் முடிந்த பின் பல மாதங்கள் மிகவும் அருகிலிருந்து பணிபுரிந்துகொண்டிருந்தார். இந்தியாவிற்கு, முடியுமானால் இணைந்த நிலையிலும் தவிர்க்க முடியாவிட்டால் பிரிவினை நிலையிலும், அதிகார மாற்றம் செய்வது பற்றி ஆலோசனை நடந்துகொண்டிருந்த நேரம் அது. ஒரே நாடாக அதிகார மாற்றம் பெற்றாலும் கூடக் காந்திஜிக்குச் சிரமங்கள் இருந்திருக்கும் என்பது அவர் கருத்து.
பியாரேலால் நைய்யார்:-மக்களது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அதிகாரம் செலுத்தக்கூடிய வகையில் நாட்டின் நிர்வாகம் அமைவதைக் காந்திஜி விரும்பவில்லை. ஏனெனில் மக்களுக்கு ஒழுங்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதைச் செய்ய சுதந்திரம் பெற்றால்தான் அது சாத்தியமாகும். மக்கள் தன்னம்பிக்கையுடனும், தங்கள் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்பவர்களாகவும், தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்கிறவர்களாகவும், தவறு செய்வதானால் கூடத் தாங்கள் எண்ணுகிறப்படி வாழச் சுதந்திரம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
சொல்பவர்:-எந்தவிதக் கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்று நினைக்கும் காந்திஜி மனிதத் தன்மையைப் பரிசோதித்துப் பார்ப்பதில் இன்னும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இருப்பினும் அவரது அறிவுரை தேசத்தை உருவாக்குபவர்களாலும் அவரது காங்கிரஸ் சகாக்களாலும் வைசிராயாக இருந்த வேவல் பிரபுவாலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குழுவினாலும் இன்னமும் நாடப்பட்டது. ஆனால் 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி நேருஜியைப் பிரதமராகக் கொண்டு வேவல் பிரபு இடைக்கால சர்க்காரை அமைத்த பொழுது காந்திஜி எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதற்குத் தக்க காரணம் இருந்தது.
அன்னதா சங்கர் ராய்:-காரணம் என்னவெனில் அவரைப் பின்பற்றும் பெரும்பாலானவர்கள் அரசியல் மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் இடைக்கால சர்க்கார் மூலம் தில்லியில் எதை அடைய வேண்டுமென்று விரும்பினார்களோ அதை அடைந்துவிட்டார்கள். மேலும் அது அவர்களுக்கு வேலையைக் கொடுத்ததால் பிரிட்டிஷாருக்கு எதிராகத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல இனி காந்திஜியின் உதவி தங்களுக்குத் தேவைப்படாது என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் விரும்பியதைப் பெரும்பாலும் பிரிட்டிஷார் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். எனவே அரசியல் துறைக்கு அவர் முக்கியமில்லாதவராக ஆகிவிட்டார்.
சொல்பவர்:-அப்படி நடப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றால் இதுகாறும் மக்களைத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற காந்திஜியின் உருவம் அரசியலிலிருந்து மங்கத்தொடங்கியிருந்த நேரம். அது ஹிந்து சம்பிரதாயப்படி ஓய்வு பெறுவதற்கு உலகைத் துறந்து மரணத்தை நோக்கி அமைதியோடு அடி எடுத்து வைப்பதற்கான காலம். அவர் ஹிமாலயத்தில் ஒரு குகையைத் தேடி வைத்திருந்தாராம். ஆனால் அவருக்கு அந்த ஏற்பாடெல்லாம் ஓய்வெடுத்துக்கொள்வதற்கென்று விடவில்லை. மீரா பென் ஒரு தடவை காந்திஜி எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து பணிபுரிய வேண்டும் என்று குறிப்பிட்ட நிகழ்ச்சியைச் சுசீலா நைய்யார் நினைவுகூர்கிறார்.
சுசிலா நைய்யார்:-மலைக்குன்றுகளில் ஓய்வெடுத்துக்கொள்வது என்பது என்னால் முடியாத காரியம் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியவில்லையா? நான் பாமர மக்களுக்கு மத்தியில் வாழப் பிறந்தவன். எல்லோருக்கும் மத்தியில் கடவுளைப் பற்றி எண்ணவும் சிந்திக்கவும் என்னால் முடியும் என்று கூறினார் பாபு.
சொல்பவர்:-கடவுளை அடையும் வழியைப் பற்றித் தாம் உணர்ந்ததை உணர்ந்தபடியே அவர் மௌரிஸ் பிரைட்மேனிடம் கூறியுள்ளார்.
மௌரிஸ் பிரைட்மேன்:-நான் கடவுளை அறிய விரும்புகிறேன்.நான் கடவுளை அறிய விரும்புவதால் மற்ற மக்களோடு சேர்ந்தே கடவுளை அறியும் நிலையில் உள்ளேன். கடவுளைத் தனிமையில் காணலாம் என்பதை நான் நம்பவில்லை. அப்படித் தனிமையில் காண முடியும் என்றால் கடவுளைக் காண்பதற்காக ஹிமாலயத்தில் உள்ள ஏதாவது ஒரு குகைக்கு என்றோ ஓடியிருப்பேன். ஆனால் அம்மாதிரி ஒருவராலும் கடவுளைத் தனிமையில் காண முடியாது என்று நான் நம்புவதால் மக்களோடு சேர்ந்து பணிபுரிய வேண்டியுள்ளதுஎன்று அவர் என்னிடம் வெகு எளிதாகக் கூறினார்.
சொல்பவர்:-வேலை அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தது. 1942-லிருந்து இந்தியாவில் தலைதூக்கியிருந்த வன்முறைப் போக்கைக் கண்டு காந்திஜி பெரிதும் கவலையுற்றிருந்தார். சுதந்திரம் உண்மையாகவே அடையும் தறுவாயில் ஹிந்து முஸ்லீம் ரகளை அதிகமாயிற்று. 1946-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கொலை பாதகச் செயல்கள் தலைவிரித்தாடின. இந்தச் சங்கிலித் தொடர் போன்ற பயங்கரச் செயல்களை யார் எங்கே தொடங்கினார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தாலுமே அது ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் காந்திஜியின் கடைசி கால வாழ்க்கைக்கு முதல் அத்தியாயமாக அதன் சிகரமாக அமைந்தது நவகாளி. நவகாளி மாவட்டம் சுழன்றோடும் நீர்ப்பெருக்கினைக் கொண்ட கிழக்கு வங்கத்தில் உள்ளது. ஹிந்துக்களுக்குச் சொந்தமான பெரும்பான்மை நிலப்பகுதிகளில்,வாழ்ந்தவர்களுள் பெரும்பான்மை முஸ்லீம்களே ஆவார்கள். ஹிந்துக்களைக் கொலை செய்வதும் கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைப்பதும் பெருகிவிடவே காந்திஜி அங்கே தனியாகச் சென்று அமைதி நிலவும் வரை தங்குவதென்றும் தேவைப்பட்டால் அங்கேயே செத்து மடிவது என்றும் தீர்மானம் செய்தார்.
பியாரேலால் நைய்யார்:-தாம் அங்கு போகாதுபோனால் தமக்கே அமைதி ஏற்படாது என்று முடிவு செய்து அவர் அங்கே சென்றார்.
சொல்பவர்:-சரித்திரப் புகழ் வாய்ந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய நவகாளி தில்லியிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தது. தொலைவே காந்திஜியின் முயற்சிக்கு வலுவூட்டியது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவரைத் தேடிச் சென்ற சுதிர் கோஷ் அந்தத் தொலைதூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சுதிர் கோஷ்:-ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர் வெகு தூரத்திலிருப்பதாகவே தோற்றமளித்தார். உடலாலும்கூட அவர் மிகவும் தொலைவில் இருந்தார். தில்லியிலிருந்து நான் கல்கத்தாவிற்கு விமானத்தில் சென்றேன். கல்கத்தாவிலிருந்து கடைசி புகைவண்டி நிலையமான கோலந்து வரை ரெயிலில் சென்றேன். அப்புறம் பகல் முழுவதும் படகுப் பயணம் செய்து சாந்த்பூரை அடைந்தேன். அங்கேயுள்ள மாஜிஸ்திரேட் அன்புடன் ஒரு ஜீப் காரைத் தந்து உதவினார். அதிலேயே முடிந்த தூரம் வரைப் போனேன். பிறகு மீண்டும் ர் ஆறு குறுக்கிட்டது. ஒரு சிறு படகை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அந்த ஆற்றைக் கடந்தேன். என் பொருட்கள் அடங்கிய பையைத் தோளிலே தூக்கிக்கொண்டு ஆறு ஏழு மைல்கள் நடந்து அன்று இரவிலேயே காந்திஜி தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். கிராமவாசிகள் காந்திஜி தங்கியிருந்த வீட்டைக் காட்டினார்கள். அது ஒரு சலவைத் தொழிலாளியின் வீடு. கிராமவாசிகள் அவர் தங்குவதற்கு அந்த வீட்டில் வசதிகள் செய்திருந்தனர். அவர்கள் உணவை அவர் உண்டார். இவ்வாறு சலவைத் தொழிலாளியின் குடிசையில் இருந்துகொண்டு அவர் மண்ணெண்ணெய் விளக்கின் அடியில் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.
சொல்பவர்:-அவர் நவகாளி மாவட்டத்திற்கு வந்து ஒரு மாதம் ஆன பிறகே அவரது அந்தத் தனிப்பயணத்தில் அவரது பேத்தி மனு காந்தியையும், காரியதரிசியாகவும் துவி பாஷியாவும் பணியாற்றப் பேராசிரியர் நிர்மல் போஸையும் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்று முடிவு ஆயிற்று. ஒவ்வொரு நாளும் காலையில் காந்திஜி ஒழுங்காகப் பத்து நிமிடங்கள் வங்காள மொழியைக் கற்றுவந்தார். முதன் முதலாகக் கிழக்கு வங்காளத்தில் அவரோடு பணிபுரிபவர்கள் கூடியிருந்தபோது கிராமவாசிகளுக்கு அவர் ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தார். அதுபற்றி பியாரேலால் நினைவுகூர்வதாவது.
பியாரேலால் நைய்யார்:-அப்பொழுது அங்கே மிக பயங்கரமான சூழ்நிலை நிலவியிருந்தது. படை வீரர்களால் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க முடியவில்லை. அவர் அங்கேசென்றபோது இடைக்கால சர்க்காரின் அதிகாரத்தைப் பயன்படுத்திப் போர்ப்படைகளையும் போலீஸ் படைகளையும் திரட்டிக்கொண்டு வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்றும் தங்களுக்குத் துன்பம் அளித்துவரும் சமூக விரோதிகளுக்கு நல்ல பாடம் கற்பிப்பார் என்றும் அங்குள்ள மக்கள் எண்ணினார்கள். அங்கு கூட்டிய முதல் கூட்டத்திலேயே, அவர் ஏற்கனவே அங்கு இருந்துவந்த போர்ப்படைகளையும் போலீஸ் படைகளையும் போகச்சொல்லிவிட வேண்டும் என்று தம் கருத்தை வெளியிடவே ஒவ்வொருவருக்கும் அது ஆச்சரியத்தை விளைவித்தது. அவர்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை. ஆனால் விரைவிலேயே காந்திஜி என்ன கருதுகிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
சொல்பவர்:-ஒவ்வொரு பகுதியிலும் வாழும் இரண்டு ஹிந்துக்களும் இரண்டு முஸ்லீம்களும் சேர்ந்து தங்கள் உயிர்களுக்கும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் ஏனையோர்களது உயிர்களுக்கும் உத்தரவாதமளித்து வாழவேண்டும் என்று காந்திஜி விரும்பினார். ஆனால் அவர் போட்ட திட்டம் நீடிக்க முடியவில்லை.
பியாரேலால் நைய்யார்:-அதனால் பாதகமில்லை. ஒவ்வொரு பகுதியிலும் என் சகாக்களில் ஒருவரை நிறுத்தி வைக்கிறேன். அவர்கள் இந்த மக்களுக்குத் தைரியமூட்டி நம்பிக்கை அளிப்பார்கள். எதிரிகள் உங்கள் தலையிலுள்ள ஓர் உரோமத்தைத் தொடுவதற்கு முன்பு அவர்கள் உயிர் துறக்கச் சித்தமாயிருப்பார்கள். இந்த உறுதியை நாங்கள் அளிக்கிறோம்என்றார் அவர்.
சொல்பவர்:-பியாரேலால் நைய்யாருடைய சகோதரி டாக்டர் சுசீலா நைய்யார் இவ்வாறு ஓரிடத்தில் நியமிக்கப்பட இருந்தார்.
சுசீலா நைய்யார்:-அதனால் அவர் என்னைக் கூப்பிட்டபோது நான் அவரிடம் பாபூ உங்களிடம் ஒளிவு மறைவின்றி, உண்மையைச் சொல்லிவிடுகிறேனே. எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது. அப்படி இந்தப் பயத்தைப் போக்கிக்கொள்ள என்னால் இயன்ற அளவு முயற்சி செய்கிறேன்என்று கூறினேன். அதனால் அந்த நேரம் வந்தபோது பாபு!எங்களுக்கு அவசியம் தேவைப்பட்டால் சரியான பலம் மிக்க பாதுகாப்பு வசதி வேண்டுமேஎன்றோம். அப்பொழுது பாபுஎங்களைத் திரும்பிப் பார்த்து என்ன இப்படிக் கேட்கிறீர்களே? உங்கள் நம்பிக்கை எங்கே போயிற்றுஎன்று கேட்டார்.
சொல்பவர்:-சுசீலா நைய்யார் அனுப்பப்பட்ட இடம் பெரும்பாலும் எரிக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட இடமாகும். அதனால் கிராமவாசிகள் அவளுக்கு ஒரு சிறு அறையைக் கொடுத்திருந்தார்கள். கக்கூஸ் வெட்டிக்கொடுத்தார்கள். குளிக்கச் சில தகர டின்களைக் கொடுத்தார்கள்.
சுசீலா நைய்யார்:-ஒருநாள் இரவு நான் குளியல் அறைக்குச் செல்ல வேண்டிவந்தது. காய்ந்த இலைச்சருகுகளின் சலசலப்பு பின்பக்கத்திலிருந்து கேட்டது. நான் சத்தம் போட முயன்றேன். ஆனால் ஒலிதான் எழும்பவில்லை. என்னை நோக்கிச் சிலர் வருவது போன்ற பீதி என்னைப் பெரிதும் பற்றிக்கொண்டது. ஒரு நாய் மரங்களுக்கிடையில் சென்றதால் ஏற்பட்ட சலசலப்பு அது என்பதைப் பின்னால் தெரிந்துகொண்டேன்.
சொல்பவர்:-காந்திஜி பயத்திற்கு எதிராகத் தான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். மதப் பூசல்களைத் தனியாகத் தீர்த்துவிடலாம் என்று எண்ணி அரசியல் ரீதியில் அவர் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார். ஆழ்ந்து பார்க்கப்போனால் அறுபது ஆண்டு காலமாக அவரை வாழவைத்த நம்பிக்கைக்கு இப்பொழுது சோதனை தோன்றியுள்ளது. இந்தச் சோதனையில் தோல்வியுற்று இறக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். நிர்மல் போஸ் ஒரு முறைக்குப் பல முறையாக ''மை க்யா கரூன், மை க்யா கரூன்?'' (“நான் என்ன செய்வேன்”) என்று தமக்குத்தாமே முணுமுணுத்துச் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறார்.
நிர்மல் போஸ்:-அனைவரும் இதயமுள்ள மனிதர்களாக, தவறு கண்ட இடத்தில் கண்டித்து மாற்றியமைக்கும் துணிவு உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது விருப்பம் செயலாக முகிழ்க்காமல் பேச்சளவில் இருப்பதை அறிந்த பொழுது மக்கள் அவரைப் பெரிய மனிதர் என்றும், பண்புசீலர் என்றும் வணங்கி வருவதை உணர்ந்த பொழுது அவருக்கு வரவர உற்சாகம் குன்றிக்கொண்டே வந்தது. ஒரு சமயம் ஹிந்து அரசியல் தலைவர் ஒருவர் முஸ்லிம் லீக் தலைவர்களது உள்ளம் உண்மையிலேயே மாற்றம் அடையும் என்று நீங்கள்நம்புகிறீர்களா?” என்று அவரிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு அவர் இவன் உள்ளத்தை மாற்றுவது அவன் உள்ளத்தை மாற்றுவது என்பதெல்லாம் பிரச்சனை அல்ல. பிறகு சரியானபடி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் நமது காரியத்தைச் செய்துகொண்டுபோக வேண்டும்என்றார். இந் நம்பிக்கை எப்பொழுதும் இருக்கிறது என்றாலும் யாரோ அவரிடம் நீங்கள் அந்த நம்பிக்கை ஒளியை எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? என்று கேட்பார்கள். அப்பொழுது அவர் இல்லை.என் முன்பு ஒரே இருளாகத்தான் இருக்கிறது. இருள் மட்டுமல்ல. இந்த இருள் எப்பொழுதாவது விலகுமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. எனக்கு எதிரே வெளிச்சத்தைக்கூட காணோம். நான் உயர்ந்தோர் எவருடைய ஒத்துழைப்பும் இன்றியே பணிபுரிந்துகொண்டிருக்கிறேன்என்றார். உண்மையில் அந்த நாட்களில் இதே சொற்றொடர்களை அவர் உபயோகித்துவந்தார்.
சொல்பவர்:-சேறும் சகதியுமாக இருந்த அந்த டெல்டாப் பகுதியில் ஒளிந்திருந்த கிராமத்தில் சலவைத் தொழிலாளியின் குடிசையில் தனிமையில் இருந்த அவரை சுதிர் கோஷ் பார்த்திருக்கிறார்.
சுதிர் கோஷ்:-அவரோடு பயணம் வந்த அவரது சகாக்கள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு அவரவர் பொறுப்பில் பணிபுரிய வேண்டி அனுப்பப்பட்டுவிட்டனர். இந்த வயதில் திடகாத்திரமில்லாத உடம்போடு அவர் இவ்வளவு சிரமப்படுவதைக் காண எனக்கு இருதயம் வெடிக்கும் போலாயிற்று. அவர் வழக்கமாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட உணவு கிடையாது. அவரோடு வந்தவர்களால் அவருக்குத் தேவையான சிறு சௌகரியங்களைக்கூடச் செய்துதர முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் அவர் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு நடந்தே சென்றார். அவர் என்னைத் தம்முடன் வருமாறு கூறினார். அவர் ஒரு நாளும் பூட்ஸ் அணிந்திருக்கவில்லை. தோல் செருப்புத்தான் அணிவார். அதைக்கூட அவர் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் வெறுங்கால்களுடன் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குப் பல மைல்கள் அவர் நடந்தார். அவரோடு வெகு சில கிராமவாசிகளே நடந்து செல்வார்கள். ஒருநாள் காலையில் உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சியைக் கண்டேன். வயதான மூதாட்டி ஒருத்தி தெருவின் மருங்கில் நின்றுகொண்டு காந்திஜிக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அவர் அந்தப் பக்கம் வந்தபோது அவள் என்ன மகனே!நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன். ஆனால் எனக்குக் கண் பார்வை இல்லை.என்னுடைய கரங்களால் உன்னைத் தொட்டுப் பார்க்கலாமா?"என்று கேட்டாள். காந்திஜி தமது கரங்களால் மூதாட்டியைத் தொட்டார். அவளோடு சிறிது நேரம் உரையாடினார். அவர் கண்களில் நீர் பனித்தது.
நிர்மல் போஸ்:-நாங்கள் ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். கொலை,கொள்ளை முதலியன நடந்து முழுதும் பாழாக்கப்பட்ட ஒரு வீட்டை அடைந்தோம். அந்த வீட்டிலிருந்தவர்களில் பெரும்பாலோர் கொலை செய்யப்பட்டிருந்தனர். அந்த அறையின் வெள்ளை பூசிய சுவர்களில் இன்னமும் இரத்தக்கறை படிந்திருந்தது. அந்த அறையின் தளம் குழி தோண்டப்பெற்று திறந்திருந்தது. அதற்குள் ஏதாவது பொருட்கள் இருந்திருக்குமோ என்னவோ? அந்தக் கிராமத்தின் வழியாகக் காந்திஜி பிரயாணம் செய்யப்போகிறார் என்று தெரியவந்தது. இதற்கிடையில் தங்களது கணவன்மார்களை அந்தப் படுகொலையில் இழந்த சில கைம்பெண்கள் காந்திஜியைக் காண வந்தனர். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைத் தமக்கு மொழிபெயர்த்துக் கூறும்படி அவர் என்னிடம் சொன்னார். அவர்கள் உங்களிடமிருந்து ஆறுதலை விரும்புகிறார்கள்என்று நான் சொன்னேன். அவர் மிகச் சீற்றமுற்று நான் வங்காளத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக வரவில்லை. தைரியம் அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்என்று சொன்னார். அவர் வங்காளத்திற்கு வந்த நோக்கம் அதுதான். கொள்கை ரீதியாக மாற்றத்திற்காக மட்டும் அவர் வரவில்லை. வங்காளத்தில் தாம் விரும்பிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவே வந்தார். ஆனால் அது சீர்திருந்திய உள்ளத்தின் மூலமாகவும் சீர்திருந்திய மக்களின் நேரடித் தொடர்பின் மூலமாகவும்தான் சம்மந்தப்பட்ட மக்களிடம் ஏற்படவேண்டியிருந்தது.
சொல்பவர்:-முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சத்தியாக்கிரக இயக்கத்தை முதன் முதலில் எந்த பீகாரில் தொடங்கி வைத்தாரோ அந்த பீகாரிலும் இப்படியே நடந்தது. நவகாளியில் நடந்ததற்குப் பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் பீகாரில் ஹிந்துக்கள் பயங்கரப் படுகொலை செய்து தீ வைத்தனர். பீகாரைப் பற்றிய என் கனவை அவர்கள் பொய்யாக்கிவிட்டனர்என்று காந்திஜி கூறினார். அவர் வங்காளத்தை விட்டுப் புறப்பட முடிந்த பொழுது பீகாரின் மோசமாவன்முறைச் செயல்கள் கட்டுக்கு அடங்கிவிட்டன. என்றாலும் முஸ்லீம்கள் அவர் உடனே அங்கு செல்லாதபடியால் ஓரவஞ்சனை காட்டுகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனாலும் அங்கு இன்னும் எத்தனை எத்தனையோ சமாதானப் பணிகள் புரியவேண்டியிருந்தது. இந்த சமாதானப் பணியை காந்தி பச்சாத்தாபப்பணி என்று குறிப்பிட்டு அதைச் செய்யத் தவறியதற்கு வருந்துவதாகக் கூறுவார்.
மௌண்ட்பேட்டன் பிரபு:-காந்திஜி தாம் செய்யத் தவறிய காரியங்களுக்காகப் பச்சாதாப யாத்திரையை பீகாரில் மேற்கொண்டுள்ளார் என்று நான் எச்சரிக்கப் பெற்றேன்.
சொல்பவர்:-மௌண்ட்பேட்டன் பிரபு 1947-ஆம் வருடம் மார்ச் மாதம் வேவல் பிரபுவிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்காகத் தில்லிக்கு வந்தார். காந்திஜிக்கும் ஜின்னாவிற்கும் அவர்கள் தம்மை வந்து பார்ப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருப்பதாகக் கடிதம் எழுதியதுதான் அவர் செய்த முதல் வேலை. காந்திஜி தம் யாத்திரையை நிறுத்திக்கொண்டு புது வைசிராய் பதவி ஏற்ற ஒன்பது நாட்களுக்கெல்லாம் தில்லியை அடைந்தார்.
மௌண்ட்பேட்டன் பிரபு:-அத்தனை அன்புக்கு பாத்திரமான கிழவரை, இனிய இயல்பும் ஈர்க்கும் நல்லொழுக்கமும் கொண்ட மனிதரை, அள்ள அள்ளக் குறையாத ஹாஸ்ய உணர்வும் சிறந்த நகைச்சுவையும் மனிதத்தன்மையும் கொண்ட மனிதரை சந்திக்க நிச்சயமாக நான் முன்னேற்பாடாக இருக்கவில்லை. நானும் எனது மனைவியும் சேர்ந்து அவரை வரவேற்றோம். எளிதில் எங்களிடையே நட்புறவு ஏற்பட்டது. அன்று காலை அவருடன் தனிமையில் பேசுவதற்காக நான் அவரை எனது படிக்கும் அறைக்கு அழைத்துச் சென்றபோது நாங்கள் ஒருவரை ஒருவர்மனிதப் படைப்பாகப் பார்த்துக்கொள்கிறோம் என்பதை அறிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. வெகு சீக்கிரத்துலேயே ஒரு பொருளைச் சூரிய வெளிச்சத்தில் காண்பதற்கு ஒப்பாக மனம் விட்டுப் பேசினோம்.
சொல்பவர்:-அடுத்த இரண்டு வாரங்களுக்குள்அரைஜன் சந்திப்பு நடந்திருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் முன்இருந்த பிரச்சனைகளைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.ஜின்னாவும் அதே அளவுக்கு மௌண்ட்பேட்டன் பிரபுவிடம் பேசினார். வைசிராய்க்குத் தெரிந்த வரையில் காந்திஜியும் ஜின்னாவும் மூன்று ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டதில்லை. ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் மௌண்ட்பேட்டன் பிரபு காந்திஜிக்கும் ஜின்னாவிற்கும் அடுத்தடுத்துப் பேட்டியளிக்கத் திட்டம் வகுத்தார். அந்த வாய்ப்பில் அவர் பயன் கண்டார்.
மௌண்ட்பேட்டன் பிரபு:-அதனால் நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் சற்றுக் காலம் தாழ்த்தியே வந்தேன். இருவருக்கும் ஏக காலத்தில் பேட்டி கொடுக்க வேண்டியதாயிற்று. முதலில் வேற்றுமை மிகுந்த இந்த இரு பெருந்தலைவர்களது சந்திப்பு வெற்றிகரமாக வேலை செய்யும் என்று தோன்றவில்லை. ஏனெனில் வைசிராயின் படிப்பறையில் அமைந்திருந்த கைப்பிடியிள்ள தோலினால் செய்யப்பெற்ற பெரிய நாற்காலிகள் தூக்க முடியாத அளவுக்கு கனமாக இருந்தன. காந்திஜியும் ஜின்னாவும் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். இரண்டும் ஒன்றுக்கொன்று தள்ளியிருந்தன. இருவருமே அமைதியான மெல்லிய குரலில் பேசும் பழக்கமுள்ளவர்கள். இருவரில் ஒருவருமே தங்கள் குரலை உயர்த்திப் பேச முடியாதவர்களாகத் தோற்றமளித்தனர். ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. ஒருவர் சொல்வதை மற்றவருக்கு எடுத்துச் சொல்பவனாக நான் இருக்க நேர்ந்தது. அதன் பயனாக அவர்களது பேச்சுக்கிடையில் அடுத்த முறை இருவரும் இன்னும் சௌகரியமாகப் பேச ஜின்னாவின் வீட்டில் சந்திக்கலாமே என்ற கருத்தைச் சுலபமாக புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்படியே அதற்கான ஏற்பாடும் செய்யப் பெற்றது.
சொல்பவர்:-இதன் பயனாக ஏப்ரல் 15-ஆம் நாள் காந்திஜியும் ஜின்னாவும் சேர்ந்து வகுப்புவாதப் போர் பற்றியும் வன்முறைச் செயல்கள் பற்றியும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். என்றாலும் அரசியல் போக்கு விரும்பத்தகாத முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. இந்தியாவைத் துண்டாடுவதன் மூலம் பிரிவினைக்கு வழிகோலுவதாகவும் பஞ்சாபும், வங்காளமும் கூடப் பிரிவினைக்கு உட்பட வேண்டும் என்பதாக அமைந்தது. முஸ்லீம் லீக் விரும்பியது போல் பிரிட்டிஷார் இரண்டு மாகாணங்களையும் துண்டாடக் காங்கிரஸ் சம்மதிக்கவில்லையென்றால் அவற்றின் அதிகாரத்தை ஒப்படைக்க பிரிட்டன் தயாராக இல்லை. திரு. நேரு, பட்டேல்,காங்கிரஸ் செயற்குழுவினர் ஆகியவர்களின் நீண்ட பேச்சுக்குப் பின் இதற்கு ஒப்புதல் கிடைத்தது. ஜூன் மாதம் இரண்டாம் நாள் பிரிவினைத் திட்டத்தை முடிவு செய்யக் கூடுவதற்கு முந்திய நாள் மௌண்ட்பேட்டன் பிரபு காந்திஜியைத்தனிமையில் சந்திக்க விரும்பினார். அன்று காந்திஜியின் மௌன தினம். அதனால் பேசவேண்டியதை எல்லாம் பேச வைசிராய்க்கு மட்டுமே வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்தன.
மௌண்ட்பேட்டன் பிரபு:-கவலைக்குரிய முக்கியமான விஷயங்களைச் சம்பிரதாயமற்ற வழியில் விவாதிப்பதும் அந்நேரத்தில் இயல்பாகவே தோற்றமளித்தது. நான் மட்டுமே பேசவேண்டியிருந்ததைப் பற்றியோ காந்திஜி தம் கருத்துக்களைப் பென்சிலினால் பழைய தபால் உறைகளின் மீது எழுதிக் காட்டுவது குறித்தோ எங்களுக்குச் சிறிதும் சிரமம் தோன்றவில்லை. மகாத்மா எழுதிக் காட்டிய சின்ன விஷயங்கள் கூட வெகு நட்புரிமையோடு இருந்தன. அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் விளைவு என்ன ஆகுமோ என்று அவர் கவலையும் வேதனையும் பட்டுக்கொண்டிருந்ததையும் நான் தெளிவாக உணர்ந்தேன். அதோடு அவர் தமது குற்றச்சாட்டை அடுத்த பிரார்த்தனைக் கூட்டத்தில் எங்கே சொல்லிவிடுவாரோ என்று நான் சற்று பயந்துகொண்டும் இருந்தேன்.
சொல்பவர்:-ஆனால் வைசிராயை என்னால் குறை சொல்ல முடியாது என்று காந்திஜி அடுத்த பிரார்த்தனைக் கூட்டத்தில் சொன்னார். தேசத்தைப் பிரிக்க வேண்டும் என்ற திட்டத்தை ஏற்றதே காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம் லீக்கும்தான். அது தானாக முளைத்தது. பல்வகை மாற்றங்களைக் கண்டது. இந்த முக்கியமான கட்டத்தில் தில்லியில் தீண்டாதார்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்கள் மக்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பினை ஏற்படுத்தின. அச்சமும் ஆத்திரமும் அவர்களிடையே பொங்கி எழுந்தன. தம் பிரார்த்தனைகளில் திருக்குரானிலிருந்து காந்திஜி எடுத்தாளும் பகுதிகளுக்குச் சீற்றம் மிகு எதிர்ப்புக்கள் கிளம்பின. ஆனால் அவர் அவற்றை வெற்றி கொண்டார். பிரிவினையைப் பற்றி அவரது சொந்தக் கருத்து என்ன என்று கேள்விக்கு மேல் கேள்வியாகக்கேட்கப்பட்டது. கடைசி கூட்டத்தில் ராஜா ஹத்தீ சிங் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டம் நிறைவேற்றிய தீர்மானத்தில் இந்தப் பிரிவினைப் பிரச்சனை இடம்பெற்றது.
ராஜா ஹத்தீ சிங்:-காந்திஜி வந்த பொழுது அந்தப் பிரச்சனை பற்றி முடிவுரை நடந்துகொண்டிருந்தது. அதில் காந்திஜி பேசினார். காந்திஜி பேசியதெல்லாம் நீங்கள் உங்கள் தலைவர்களை ஆதரியுங்கள் என்பதுதான். அவர் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது பற்றி அவர் ஒன்றுமே பேசவில்லை. காந்திஜி தீர்மானத்தை ஆதரியுங்கள் என்று சொன்ன பொழுது கூட கூட்டத்திலிருந்து எதிர்ப்பே எழுந்தது. நான் சரியாக நினைவு வைத்துக்கொண்டு சொல்லுகிறேன் என்றால், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக் கணை அவர் மீது தொடுக்கப்பட்டது. அப்பொழுதும் காந்திஜி நான் சொல்வதெல்லாம் உங்கள் தலைவருக்கு ஆதரவு கொடுங்கள் என்பதேஎன்று தான் சொன்னார்.
சொல்பவர்:-ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த முடிவு எடுக்கும்போது காந்திஜி என்ன செய்தார் என்பதே ஆகும். சாகும் வரை அவர் கண்டிப்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய பலர் இருந்தனர். அதேபோல் அவர் மறைவதற்குக் காலம் வந்துவிட்டது என்று கூறிய பலர் இருந்தனர். பிரிவினையோ, பிரிவினை இல்லையோ அவை புரையோடிய புண்கள்; நிச்சயமாக ஆற்றப்பட வேண்டும் என்பதை அவர் கண்டார். பாகிஸ்தான் என்று ஒன்றைக் கற்பனை செய்து முடிவில் அதை அடைந்த முஸ்லிம் லீக் இப்பொழுது காந்திஜியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காண முயன்றது. ஆனால் கடைசி வரை அவர் ஒரே மனிதராகதான் இருந்தார்.
பாகிஸ்தானி:-ஆம்! பிரிவினைக்குப் பிறகு காந்திஜி பாகிஸ்தானியரின் பார்வையிலுமே பெரிதாக உயர்ந்தார். ஏனெனில் தங்களது ஆசை நிறைவேறுவதற்கு அதாவது பாகிஸ்தான் ஏற்படுவதற்குப் பெரும் தடையாக இருப்பவர் காந்திஜி என்று பாகிஸ்தானியர்கள் கருதிவந்தனர். அவர் முதல் தடையாக இருந்தார். என்றாலும் பிரிவினைக்குப் பிறகு அவர் தடையாக இருப்பதை நிறுத்திவிட்டார். ஏனெனில் அவர்கள் ஆசைப்பட்டதை அடைந்துவிட்டனர். பின்னர் அந்தப் பாகிஸ்தானிய முஸ்லீம்களே, காந்திஜிதான் சமாதானத்தை நிலைநாட்டவும் இந்தியாவிலுள்ள முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் வல்லவர் என்பதை உணர்ந்தார்கள்.
சொல்பவர்:-பாகிஸ்தான் இயக்கத்தில் பெரும்பங்கு கொண்ட முக்கியமான ஒரு முஸ்லீம் நபர் ஹிம்சையைத் தடுத்து நிறுத்த காந்திஜி காட்டிய பெருமுயற்சி காரணமாக அவர் பக்கம் கவரப்பட்டார். அவர்தான் (வங்காளப் பிரிநிலைக்கு முன்) பிரதம மந்திரியாகப் பணியாற்றிய சுஹர்வர்த்தி. தலைவிதியை நிர்ணயிக்கும் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஜூலை மாதக் கடைசியிலும் ஆகஸ்டு  மாத முதலிலும் காந்திஜி மேற்கொண்ட சமாதானப் பணி அவரைவடமேற்கு எல்லைப்பகுதிகளுக்கும், பிறகு காஷ்மீரத்திற்கும் இட்டுசென்றது. பிறகு கிழக்கு வங்காளத்திலிருக்கும் நவகாளிக்குத்திரும்பவும் போகும் நோக்கத்தோடு அவர் கல்கத்தாவுக்குப் பயணமானார். ஆனால் கல்கத்தாவிலேயே மிகவும் கொடுமையான ரகளை தொடங்கிவிட்டது. சுஹர்வர்த்தி அப்பொழுது இந்திய உபகண்டத்தின் எதிர்ப்பக்கத்தில் கராச்சியில் இருந்துகொண்டு பாகிஸ்தான் ஏற்படுவதற்காகப் பெரிதும் முயன்றுகொண்டிருந்தார். ஆனால் உடனே அவர் கல்கத்தாவிற்குப் பறந்து சென்று காந்தியைக் கல்கத்தா நகரத்திலேயே தங்குமாறு கேட்டுக்கொண்டார்.
எச். எஸ். சுஹர்வர்த்தி:-காந்திஜி நான் சொல்வதை மிகவும் பொறுமையாகக் கேட்டார். இரண்டு மணிநேரம் சென்ற பிறகு நான் அவரை நவகாளிக்குப் போகவேண்டாம் என்று சொல்லுகின்றேனா என்று குறிப்பாகக் கேட்டார். அவர் போவதை நான் விரும்பவில்லை என்று சொன்னேன். அப்படியானால் கல்கத்தாவில் தங்கியிருந்து அவரது செல்வாக்கை உபயோகித்து ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ என்று என்னைக் கேட்டார். நான் அவரிடம் அதுதான் எனது உறுதியான வேண்டுகோள் என்றேன். பிறகு அவரது முயற்சியில் நானும் பங்குகொள்வதாக இருந்தால் அவ்வாறு செய்வதாகக் கூறினார். முஸ்லீம்கள் எந்தப் பகுதியில் மோசமாக நடத்தப்பட்டார்களோ அந்த அபாயகரமான பகுதியில்தான், தாம் இருக்கப்போவதாக அடித்துச் சொன்னார். அங்கு ஒரு குடிசையிலோ, வீட்டிலோ இருந்துகொண்டு வேலை செய்யப்போவதாகவும் நானும் அவருடன் சேருவதாக இருந்தால் மட்டுமே தம்மால் செயற்பட முடியும் என்பதாகவும் கூறினார். அவர் எனது உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த ரகளைக்கெல்லாம் நான்தான் பொறுப்பு என்று ஹிந்துக்கள் கருதினார்கள். அவர்கள் பட்ட துன்பம் அவர்களுக்கல்லவா தெரியும். எனவே, அந்த இயக்கத்தில் ஈடுபட்டால் அது எனக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என்று எண்ணி அவர் இதில் சேருவதற்கு என் தந்தையிடமிருந்தும் என் பெண்ணிடமிருந்தும் நான் கட்டாயம் அனுமதி பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.


காந்திஜி ஒரு சொற்சித்திரம் – தொகுப்பு

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – கடைசி காட்சி - 2

$
0
0
Mithil Thaker / Behance
காந்திஜி ஒரு சொற்சித்திரம் – கடைசி காட்சி - 1
சொல்பவர்:-ஆகையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பெற்ற ஒரு மாவட்ட நகரத்தில் ஒரு முஸ்லீம் வீட்டில் காந்தியோடு திரு.சுஹர்வர்த்தி தங்கினார். பேராசிரியர் நிர்மல் போஸ் மீண்டும் காந்திஜியிடம் பணிபுரிய வந்தவர், அப்பொழுது அவர்கூட அங்கே இருந்தார்.
நிர்மல் போஸ்:-திரு. சுஹர்வர்த்தியும் நானும் தரையில் இரண்டு படுக்கைளில் பக்கத்தில் பக்கத்தில் படுத்து உறங்குவது வழக்கம். காந்திஜியைத் தவிர வேறு எந்த ஹிந்துவையும் நம்பக்கூடாது என்பதை இத்தனை ஆண்டுகளில் நான் கண்டுகொண்டேன். நான் எனது முழு நம்பிக்கையும் வைக்கக்கூடிய ஒரே மனிதர் காந்திஜிதான் என்று அவர் அடிக்கடி கூறுவார்.
எச். எஸ். சுஹர்வர்த்தி:-முதல் நாள் மாலை, பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசினார். ஹிந்துக்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்னை வரக்கூடாது என்று தடுத்துவிட்டார். மறுநாள் பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் பிறகு தமது அறை ஜன்னல் வழியாகக் கூடியிருந்த ஹிந்துக்களுக்குச் சொற்பொழிவாற்றச் சொன்னார். நான் பேசியபோது எனக்கு அருகில் நின்றுகொண்டார்
சொல்பவர்:-காந்திஜியின் சிறப்பே அலாதி. ஒரு ஹிந்துவும் ஒரு முஸ்லிமும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தங்களது உயிரையே தியாகம் செய்யச் சித்தமாக இருந்தனர். காந்திஜியின் உயிருக்கு ஆபத்து என்று அச்சுறுத்தப்பட்டது. சுஹர்வர்த்தியின் உயிருக்கும் ஆபத்து இருந்தது. அந்தப் பெரிய நகரத்தை மாதக்கணக்கில் அச்சமும் வன்முறைச் செயல்களும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தன என்றாலும் அவர் சோதனை வெற்றி கண்டது. ஆகஸ்ட் 14, 15தேதிகளில் இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்ற நேரத்தில் வங்காளம் இரண்டாகத் துண்டாடப்பட்ட நிலையில் கல்கத்தா நகரம் கதிகலங்கிப் போயிருந்தது. எரிக் தா கோஸ்தா, சுதின் தத்தா என்ற இரண்டு நண்பர்களும் என்ன நடந்தது என்பதைக் கண்ணால் கண்டார்கள்.
எரிக் தா கோஸ்தா:-வகுப்புவாதக் கிளர்ச்சிகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் நாங்கள் கல்கத்தாவில் ஓர் ஆண்டு இருந்தோம். எனவே பிரிவினை அமுலில் வர இருந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்று இதைவிட எதுவும் உள்ளன்போடு நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வானத்தை எட்டும் கோஷங்களைக் கேட்டோம். சென்டரல் அவென்யூவில் காரை ஓட்டிச்சென்றபோது லாரிக்குப் பின் லாரியாக மக்களை ஏற்றிக்கொண்டு வந்தன. சிலவற்றில் பெண்களும் இருந்தனர். அவர்கள் ஹிந்து முஸல்மான் ஏக்ஹோ ஹிந்து முஸல்மான் ஏக்ஹோஎன்று பெரும் கோஷமிட்டுக்கொண்டு சென்றனர். நான் எனது குருவிடம் ஓடிச்சென்று உடனே வெளியே வாருங்கள்.வந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்என்றேன். அந்தக் கிழவர் மீண்டும் செய்துகாட்டிவிட்டார்என்றேன்.
சுதின் தத்தா:-எரிக், என்னைத் தம் காரில் ஏற்றிக்கொண்டு ஹாரியன் தெருவிற்குச் சென்றார். அந்தப் பகுதி கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக மூடப்பட்டுக் கிடந்தது. அங்கே போர் வீரர்களைக் கண்டேன். அவர்கள் ஈட்டி, துப்பாக்கி ஏந்தி நின்றனர். ஆனால் ஈட்டி முனையில் மக்கள் பொருத்திய சிறு சிறு கொடிகள் காட்சி அளித்தன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுகூடி நடனமாடினர். லாரிகள் வழிய முஸ்லிம்கள் வருவார்கள். வழியில் லாரியை நிறுத்தி அங்கும் ஹிந்துவைப் பிடித்து அணைத்து வாருங்கள் வாருங்கள் நாம் விழாக் கொண்டாடி மகிழ்வோம்என்பார்கள். இத்தகைய கோலாகலக் காட்சியைப் பார்த்தபோது என்னால் என் கண்களுக்கு அந்தக் காட்சியைப் பார்ப்பதிலிருந்து நிச்சயம் தடை போட முடியவில்லை. எரிக்கின் நிலை பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் கடந்த ஓர் ஆண்டு அனுபவம் கல்கத்தா வாழ்க்கையைக் கசக்கச் செய்திருந்தது. காந்திஜி வந்த பொழுது முதல் நாள் என்று நினைக்கிறேன். அவர்மீது கற்களும் வீசப்பட்டன. அவற்றைச் சற்றும் பொருட்படுத்தாமல் அவர் அவர்களோடு நின்று அன்புடன் உரையாற்றினார். இரண்டு மூன்று நாட்களில் சூழ்நிலை சாதகமாக மாறியது. பதினான்காம் தேதி எனது வாழ்க்கையில் அதுவரை காணாத ஓர் அதிசயத்தைக் கண்டேன்.
சுர்வர்த்தி:-அவரது பெருமைகள் அளப்பற்கரியவை. இந்த அதிசயம் அவரால் நிகழ்ந்திருப்பினும் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமாதானத்தை உண்டு பண்ண தாம் மேற்கொண்ட பணியின் உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துக்கூறி புரியவைக்கும் வாய்ப்பை நழுவவிடவில்லை. இனி இரு சாராரும் இந்தியாவின் பெருமைக்குப் பங்கம் நேராமல் பணிபுரிய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அது மட்டுமின்றி நான் அவரோடு இருக்காமற்போனால் தமது இந்தச் சிறப்புப் பணி வெற்றி முகம் கண்டிருக்க முடியாது என்பதாகக் கூறி தகுதியற்ற எனக்குத் தகுதிப் புகழ் தேடிக்கொடுத்தார்.
சொல்பவர்:-அவர் அப்படிக் கூறவில்லையென்றால் காந்திஜியாக இருக்கமுடியாது. இது ஓரிரு மனிதர் கூடிச் செய்யக்கூடிய வேலை அல்ல. நாம் அனைவரும் கடவுளின் கைப்பொம்மைகள்\” என்றும் கூறினார். கராச்சியும் தில்லியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தொடங்கும் நேரத்தில் கல்கத்தா இந்த விந்தை புரிந்து உயர்ந்தது. எனவேதான் காந்திஜி சுதந்திர விழாக் கொண்டாட மறுத்துவிட்டார். அந்த அபூர்வ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கவேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இன்னும் கடுமையான சோதனைகள் எதிர்ப்படக்கூடும் என்றும் அவர் காத்திருந்தார். எனவே அவர் பேராசிரியர் போஸிடம் கல்கத்தா இன்னும் வன்முறைச் செயல்களைக் கைவிடவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தார்.
நிர்மல் போஸ்:-ஓர் ஆண்டு ரகளையில் ஈடுபட்டதனால் மக்கள் அலுத்துப்போயிருக்கிறார்கள். இப்பொழுது அவர்களுக்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த அமைதி ஏற்பட்டிருக்கிறது என்று தான் நினைக்கிறேன். முஸ்லீம்கள் தாம் முன்பு வாழ்ந்து வந்த ஹிந்துக்களின் பகுதிக்குச் சென்று சமாதானமாக வாழ வேண்டும். ஹிந்துக்கள் தாம் துரத்தப்பட்ட முஸ்லீம்களின் பேட்டைகளுக்குச் சென்று சமாதானமாக வாழ வேண்டும். அந்த நிலை வந்தால்தான் நான் திருப்தியுறுவேன் என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கான அறிகுறிகளை இப்பொழுது காணோம்.
சொல்பவர்:-வங்காளத்தின் மானிடப் பிரச்சனையைக் கூறிட்டு நோக்குமிடத்து சாதிவெறி இந்தியச் சார்பில் ஒரு பயங்கரமான திருப்பத்தைக் கண்டது. ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் இரவு காந்திஜியின் சமாதான இயக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி நடந்தது. ஒரு கூட்டம் மோதியது. காந்திஜி மீது கல் வீசப்பட்டது. கம்பு வீசப்பட்டது. அந்தக் கம்பு தம் மீது படாமல் காந்திஜி மயிரிழையில் தப்பினார். அவரது கரங்கள் கூப்பிய வண்ணம் இருந்தன. அங்கு சுஹர்வர்த்தியும் இல்லை. போஸும் இல்லை.
நிர்மல் போஸ்:-நான் திரும்பி வந்த பொழுது ஜன்னல் கதவுகளும் நாற்காலிகளும் மேஜைகளும் உடைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டேன். நான் காந்திஜியிடம் சென்றதும் அவர் உரக்கச் சிரித்து உங்கள் வங்காளிகள் மிகவும் சாதுவானவர்கள். மரியாதையுள்ளவர்கள். அமைதியுள்ளவர்கள்.என்றார்.
பாபூ நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன் அவர்கள் நினைத்திருந்தால் என்னைச் சுலபமாகக் கொன்றிருக்கலாம் அவர்கள் மிகவும் தன்மையானவர்கள். ஆதலால் ஜன்னல் கதவுகளையும், மேஜை நாற்காலிகளையும் மட்டுமே உடைத்தார்கள். இவற்றில் ஒன்றுகூட என்னைச் சேர்ந்ததில்லை. இவை யாவும் வேறு ஒருவருடையவையேஎன்றார். இது அவர் எடுத்துக் கொண்ட முறை.
சொல்பவர்:-ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் காந்திஜி புரிந்துகொண்டார். அவர் கண்டதை முக்கியமாகக் கருத்தில் கொண்டார். அடுத்த நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் தாம் மதித்து வந்த நவகாளிக்குத் திரும்பிப் போவதில்லை என்றும் இந்த வெறித்தீ அடங்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறினார்.
நிர்மல் போஸ்:-கல்கத்தா அறிவுத் தெளிவு பெற வேண்டி நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். கல்கத்தாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் சென்று கடந்த கால வேறுபாட்டை நாம் கண்டிப்பாக மறந்தாக வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வது என்னுடைய கடமைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல முடியாதாகையால் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போகிறேன். கல்கத்தாவின் உள்ளத்தைக் கவர்ந்து நான் இதில் வெற்றி அடைவேன்என்றும் கூறினார்.
சொல்பவர்:-தலைவர்களும் மந்திரிகளும் அவரது உயிருக்கு ஊறு தேடிக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தக்க விடையளிக்க அவரிடம் காரண காரியத்தோடு விரிவாக அறிக்கை தயாராக இருந்தது. இந்த உண்ணாவிரத காலத்தில் அவர் சோடாவோடு தண்ணீரோ அல்லது புளிப்பான எலுமிச்சம் பழச்சாறோ அருந்துவதாகச் சம்மதித்தார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னரான ஸ்ரீ இராஜகோபாலச்சாரியார் அவரை இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளாமல் தடுக்கத்தக்கதொரு வாதம் இருப்பதாக நினைத்தார்.
நிர்மல் போஸ்:-அவர் மற்றவற்றோடு புளிப்பு எலுமிச்சம் பழமும் சாப்பிடுவார் என்ற வாக்கியத்தைப் படித்ததும் இராஜாஜி உடனடியாக அவரிடம் பாய்ந்து ஏன் இந்தப் புளிப்பு எலுமிச்சை?” என்று கேட்டார். அவர் உடனே என்னிடம் திரும்பி,நீங்கள் இந்த அறிக்கையைப் படித்தபொழுது இதை கவனிக்கவில்லை. ஆனால் என்னைப் பற்றி நீண்ட நாட்களாக நன்கு அறிந்த ராஜாஜி எனது பலவீனத்தைப் புரிந்துகொண்டவர். அவர் சொல்வது முற்றிலும் சரியே. இந்த உண்ணாவிரதத்தில் நான் பிழைத்துக்கொள்வேன் என்ற நம்பிக்கைக் கீற்று என் உள்ளத்தில் இருக்கிறது.அதனால் தான் புளிப்பு எலுமிச்சையை இதில் சேர்த்துக்கொண்டேன். என் பலவீனத்தைப் புரிந்துகொண்டு அவர் சுட்டிக்காட்டுகிறார்என்றார். அடுத்த கணமே ஒரு பென்சிலை எடுத்து அதை அடித்துவிட்டார். நாம் காணும் காந்தி சாதாரண பெரிய மனிதரல்ல. மாபெரும் மனிதர்.
சொல்பவர்:-சுதந்திரத்திற்குப் பிறகும் பல வாரங்கள் தலையெடுத்த காழ்ப்புணர்வுக்கும் கசப்பான வெறிச்செயலுக்கும் பிறகு கூட மீண்டும் ஒரு விந்தை புரியும் அளவுக்கு அவர் பெரிய மனிதராக இருந்தார். நான்கு நாட்களுக்குள் கல்கத்தா பிரமுகர்கள் அவர்களது பழைமையான உறுதிமொழியோடு அவரது படுக்கையைத் தேடி வந்தார்கள். சிறுபான்மையான முஸ்லீம் மக்களின் சார்பில் பேசியவர் சுர்வர்த்திதான்.
எச். எஸ். சுர்வர்த்தி:-காந்திஜி உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்பதில் நான் மிகவும் கவலையும் ஆர்வமும் கொண்டிருந்தபடியால் நான் அவரிடம் சென்று,நான் திருப்தி அடைந்துவிட்டேன்என்று கூறினேன். மனமுவந்து காந்திஜி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். என் கையினால் பானக் கோப்பையைப் பெற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். எனவே கல்கத்தாவில் ஓரளவு சமாதானம் அல்லது அதுபோன்ற நிலை நிலவியது. ஆனால் வடக்கிலிருந்து, பிரிக்கப்பட்ட பஞ்சாபிலிருந்து, கல்கத்தாவையும் தூக்கியடிக்கும்படியான மிக மோசமான செய்தி வந்தது. அதைப் பாகிஸ்தானி அல்லாத இந்திய முஸ்லிம் ஜாகிர் ஹுஸைன் எவ்வளவு எளிய முறையில் எடுத்துரைக்கிறார், பாருங்கள்.
ஜாகிர் ஹுஸைன்:-இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடந்த சம்பவங்களுக்கு இரண்டு நாடுகளுமே வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான். கொலையும் குடியிருப்புக்களிலே தீ வைத்தலும் விவரிக்க முடியாத கொடூரங்கள்!
சொல்பவர்:-அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்கள் பஞ்சாபிலும் வங்காளத்திலும் குழப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். பஞ்சாபில் ஐம்பத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட உத்யோகஸ்தர்களும் பணியாளர்களும் நாட்டில் அமைதியைக் காக்கும் பொருட்டு குவித்துவைக்கப்பட்டிருந்தனர். கல்கத்தாவிலோ காந்திஜி மட்டுமே இருந்தார். மௌண்ட்பேட்டன் பிரபு அவரைத் தனிமனித எல்லைப் பாதுகாப்புப் படைஎன்று குறிப்பிடுவார்.
மௌண்ட்பேட்டன் பிரபு:-கலவரம் தொடங்கியதும் பஞ்சாபில் படையாகத் திரண்டிருந்த ஐம்பதாயிரம் மக்களும் இருந்த இடம் தெரியாமல் சிதறிவிட்டனர். ஆனால் எனது தனிமனித எல்லைப் பாதுகாப்புப் படைகல்கத்தாவில் அமைதியை நிலைநாட்டியது. .
சொல்பவர்:-பஞ்சாபிலிருந்தும் தில்லியிலிருந்தும் காந்திஜியை அங்கே வருமாறு வேண்டிப் பலர் எழுதினர். அவர்களில் ஒருவர் ராஜகுமாரி அமிர்தகௌர்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-நாங்கள் மிகவும் பயங்கரமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மிகவும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மக்கள் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு எப்படிப் போகிறார்கள் என்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. தயவுசெய்து வாருங்கள்என்று நான் எழுதினேன். அவர் பதில் எழுதியதோடு தனிப்பட ஆளையும் அனுப்பினார். மக்கட்தன்மையின்பால் ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள். சிறு அசுத்த துளிகள் கடல் நீரைக் கெடுத்துவிட முடியாது. மக்கள் தன்மையும் அத்தகையதேஎன்று எழுதியிருந்தார்.
சொல்பவர்:-1947செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கடைசி அத்தியாயம் ஆரம்பமாகிறது. தில்லியை நோக்கிக் கடைசிப் பயணம். ரயில் வடமேற்குத் திசையில் ஓர் இரவும் ஒரு பகலும் ஓடியது. வண்டி நிற்குமிடங்களிலெல்லாம் சந்தை இரைச்சல் போடும் கூட்டம். அந்தக் கிழவரது மனத்தைத் துன்பச்சுமை அழுத்தியது. அவரே அடிக்கடி கூறுவது உள்ளத்தைத் தகித்துக்கொண்டிருந்தது. அவர் உள்ளத்தில் தீ பற்றி எரிவதாகச் சொல்லத்தான் செய்தார்.
ராஜகுமாரி அமிர்தகௌர்:-அவர் உள்ளத்தில் தீ பற்றி எரிவதாகச் சொல்லத்தான் செய்தார். சந்தேகம் இல்லை. அவருக்குச் சிறிதும் மகிழ்ச்சியே இல்லை. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றாலும் அவர் ஒரு பொழுதும் நம்பிக்கை இழக்க வில்லை.
சொல்பவர்:-தில்லி கூட வன்முறையினால் பாதிக்கப்பட்டிருந்தது. பழைய சுவர்களைக் கொண்ட நகரத்தில் கொலையும் நடந்திருக்கிறது. அகதிகள் ஓடி வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். காந்திஜி வழக்கமாகத் தமது தலைமைக் காரியாலயத்தை வைத்துக்கொள்ளும் நகரசுத்தியாளர் காலனியில் அகதிகள் வந்து குவிந்துவிட்டனர். எனவே அதற்குப் பதிலாக தனது நண்பர் திரு. ஜி. டி. பிர்லாவின் ரம்மியமான தில்லி மாளிகையில் ஒரு சின்னஞ்சிறு அறையில் தங்கினார். தில்லியில் இருந்து தூரத்தில் உள்ள ஒக்கோலா என்னும் கிராமத்தில் ஜாகிர் ஹுஸைனின் சிறப்பு வாய்ந்த ஜாமியா மிலியா என்ற கல்விக்கூடம் இருந்தது. முஸ்லிம்களின் தொடர்பு காரணமாக அது ஆபத்தான எதிர் நோக்கம் கொண்டிருந்தது.
ஜாகிர் ஹுஸைன்:-முதல் காரியமாகக் காந்திஜி ஜாமியா மிலியாவைப் பற்றி அதற்குத் தீங்கு எதுவும் நேரவில்லையே என்று கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. அவர் ஜாமியாவிற்கு வந்தார். எங்களோடு பல மணிநேரம் அவர் தங்கியிருந்தார். ஒவ்வொருவரிடம் தனிப்பட்ட முறையில் பேசினார். சுற்றுப்புறமுள்ள கிராமங்களிருந்து முன்னூறுக்கு மேலாக அகதிகள் இருந்தனர். அவர் அங்கே சென்று அவர்களிடம் பேசினார். தம் உள்ளத்தையே அவர்களுக்குத் தந்தார். தாம் உயிரோடு இருக்கும் வரை ஜாமியாவிற்கு எதுவும் நேராது. யாருக்குமே எவ்வகைத் துன்பமும் ஏற்படாது என்றும் ஒவ்வொருவருக்கும் மறுவாழ்வளிக்கத் தாம் முயன்றுவருவதாகவும் அவர் சொன்னார்.
சொல்பவர்:-புது தில்லியிலுள்ள அனாதை முஸ்லீம்களுக்குப் புகலிடம் கொடுத்துக்கொண்டிருந்த புரானாகிலா என்ற எழில்மிகு தோற்றம் கொண்ட பழைய கோட்டையின் மத்தியிலுள்ள திறந்த வெளிக்கு அவர் தில்லிக்கு வந்த நான்காம் நாள் விஜயம் செய்தார். அவருடைய குழுவில் திவான் சமன்லாலும் இருந்தார்.
சமன்லால்:-அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் முரட்டுத்தனத்தோடும் கோபத்தோடும் கூடியிருந்தனர். அவர் அவர்களிடம் என்னைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவரும், ஹிந்துவும் முஸ்லீமும் சகோதரர்களே. எல்லோரும் ஒரே கடவுளது மைந்தர்களே. உங்களிடம் இதைக் கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்என்று சொன்னார். கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஆங்கார ஒலி எழுந்தது. இதெல்லாம் பொய்என்று அவர்கள் கூக்குரலிட்டனர். நான் தில்லியில் அமைதியைக் கொண்டுவருவேன். அல்லது இந்த இயக்கத்தில் அழிந்துபோவேன்என்று காந்திஜி அவர்களிடம் சொல்லி முடிக்கின்ற வரைக்கும் எதுவுமே நடக்காதது போல் பேசிக்கொண்டேயிருந்தார். அந்த முரட்டுக் கூட்டம் காந்திஜி வாழ்கஎன்று கோஷமிட்டுக்கொண்டு அவரை நோக்கி விரைந்தது. அவர் கையை முத்தமிட்டு, பாதங்களைத் தொட்டு வணங்கியது. கோபமும் பகையும் மறைந்தொழிந்தன.அன்பினால் வெற்றி கொண்டார். அவர்களிடம் அவர் கொண்ருந்த அன்பையும் அவர் எதற்காகப் பாடுபடுகிறார் என்பதையும் அவர்கள் அறிந்துகொண்டதுதான் இதற்குக் காரணம்.
சொல்பவர்:-ஆனால் அவர்கள் புரிந்துகொண்டார்களா? அவர்களது நிலையற்ற உணர்ச்சிப் பெருக்கு அவர்களுக்குப் பலவீனமாக அமைந்தது. அதைத் தமது பலத்தினாலும் தம்மோடு பணிபுரிய வந்துள்ள மக்களது பலத்தினாலும் காந்திஜி மோதிப் பார்த்தார். நேருஜியின் மகள் இந்திரா தில்லியிலுள்ள ஒரு ரயில் நிலையத்திற்குத் தனியாகச் சென்று அங்கிருந்த கொலைகாரக் கும்பலிலிருந்து ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றினார் என்று அவர் கேள்விப்பட்டார்.
இந்திரா காந்தி:-ஹிந்துக்கள் எல்லோரிடமும் எனக்கு பெரிய அபகீர்த்தியைத் தேடித்தந்த முஸ்லிம்கள் வாழ் பகுதிக்குப் போகச் சொன்னார். அதே போன்று முஸ்லிம்களும் நாங்கள் அங்கு சென்றதுமே வசைமாறி பொழியவும் கற்களால் வீசி அடிக்கவும் இன்னும் காதில் கேட்க இயலாத அசிங்கமான வார்த்தைகளால் திட்டவும் தொடங்கினர்.
சொல்பவர்:-அவளால் செய்ய முடியும் என்று காந்திஜி நினைக்கவில்லை. இருந்தாலும் மனிதத்தன்மையைச் சோதனை செய்வதற்காக வேண்டி அவளை அந்த முயற்சியில் ஈடுபடுத்தினார். பெண்மைக்கும் அகிம்சைக்கும் தொடர்புண்டு என்று அவர் நம்பியதாலும் அவள் ஒரு பெண் என்பதாலும் நாசூக்காக வளர்க்கப்பட்ட அவளை அனுப்பினார். இது மனிதத் தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக இருந்தது. பசுமையையே கருக்கக் கூடியது என்று தெரிந்திருந்தும் இந்தச் சோதனையை மேற்கொண்டார்.
இந்திரா காந்தி:-அவர் ஒவ்வொருவரிடமும் இம்முறையைக் கையாண்டாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் விஷயத்தில் கையாண்டார். அமெரிக்கர்கள் சொல்வது போல் அது சாதாரண வேலையல்ல. நாம் ஏதோ செய்தோம் என்று பெயர் பண்ணுவதற்கு. அதை என்னால் மேற்கொள்ள முடியுமா என்று அறிந்துகொள்ளாமலே என்னை அனுப்பினார். முதல் நாள் நாங்கள் அந்தப் பகுதிக்குப் போனபோது அங்கு ஏகப்பட்ட தண்ணீர் இருந்தது. கம்பி மேல் நடப்பதுபோல் தத்தித்தத்திநடந்து மெதுவாகச் சென்றோம். இரண்டாவதாக எங்களோடு ஒத்துழைக்க யாரும் தயாராயில்லை. முழு நேரமும் அவர்களது வசவு திட்டுக்களைக் கேட்கவேண்டியிருந்தது. அதோடு மட்டுமல்ல என் தந்தைக்கு ஏகப்பட்ட அநாமதேயப் பயமுறுத்தல் கடிதங்கள் வந்தன.உங்கள் மகள் என்ன செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறாள்? அவளைக் கொல்லமாட்டோம் என்று நினைக்கிறீர்களா? எங்கள் பெண்கள் எல்லோரும் அங்கே கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்களும் அதையே இங்கும் செய்வோம்என்றெல்லாம் எழுதியிருக்கும்.
சொல்பவர்:-அந்த நெருக்கடியான கலவரம் மிகுந்த மாதங்களில் காந்திஜி அளித்துவந்த தைரியத்தைக் கண்டுதான் இந்திராவுடைய தந்தையான ஜவஹர்லால் நேரு பெரிதும் மதிப்பு வைத்தார்.
ஜவஹர்லால் நேரு:-அச்சமின்மை!ஆம், அவர் அளித்த பெருந்தனம் அஞ்சாமைதான் என்று நான் சொல்லுவேன். அந்த பலவீனமான சிறு எலும்புக்கூட்டுக்குள் அஞ்சாமை எதிலும் அஞ்சாமை உடலாலும் உள்ளத்தாலும் அஞ்சாமை அற்புதத்தை விளைவித்தது. அது மற்றவர்களிடமும் பரவி அவர்களையும் அஞ்சாமல் இருக்க வைத்தது. கிளர்ச்சிகளும் கலவரங்களும் பெருவெள்ளமெனப் பாய்ந்துகொண்டிருந்தபோது அவர் இங்கே வந்தார். அவரது வருகை எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அவர் மக்களைச் சமாதானப்படுத்தி நல்ல வழியில் திருப்பினார் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் எத்தனையோ நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
சொல்பவர்:-புது இந்தியாவின் பிரதம மந்திரியான நேருஜி காந்திஜியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். அதே போல் நெஞ்சுறுதி படைத்த பட்டேலும் பேசியுள்ளார். காந்தியைப் பொறுத்தமட்டில் அவரது பழைய நண்பர்கள் அவரிடம் அறிவுரை கேட்டு வருவார்களானால் அவர் தரச் சித்தமாக இருந்தார். ஆனால் அவர் அரசாங்கத்துடனோ அதன் ஆட்சிமுறை, ராணுவப்படை, போலீஸ் படை ஆகியவற்றுடனோ தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. இராஜகோபாலாச்சாரி அமைதி நிலவிய வங்காளத்தில் இருந்த வண்ணம் என்ன புது அதிசயம் தில்லியில் நடக்கபோகிறதோ என்று வியப்புடன் நோக்கிவந்தார்.
சி. இராஜகோபாலாச்சாரி:-நான் அப்பொழுது கல்கத்தாவில் இருந்தேன். தில்லியில் அவர் தமது சகாக்களோடும், மற்றவர்களோடும் மிகப் பெரிய நெருக்கடியான சோதனைகளைக் கடக்கவேண்டியிருந்தது. சொல்லப்போனால் அவர் அரசாங்கத்திற்கு ஓர் ஒளி தரும் விளக்காக இருந்தார்.
சொல்பவர்:-இத்துணை களேபரத்துக்கும் இடையில் சில வேளைகளில் ஓய்வும் சிரிப்பும் அங்கு தலையெடுத்ததுண்டு. மந்திரிகள் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் பெரும்பாலும் காந்திஜியின் அறையிலேயே இருந்த ஹோரேஸ் அலெக்சாண்டர் இதைக் கண்டு வியந்து போனார்.
ஹோரேஸ் அலெக்சாண்டர்:-எந்த விஷயமாயிருந்தாலும் அவரது அறிவுரையைக் கேட்க அவர்கள் கூடி உட்காருவார்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கெல்லாம் எல்லோரும் சேர்ந்து சிரிப்பார்கள். அந்த இருண்ட சூழலிலும் கூட எதிலுமே ஏதாவது ஒளி தரும் சிறந்த அம்சங்களைக் காணும் அசாதாரணத் திறன் காந்திஜியிடம் இருந்தது. அவர் தம்மோடு பணிபுரியும் தோழர்களுக்கும் அந்த நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டக்கூடிய ஆற்றல் பெற்றிருந்ததால் எல்லாமே இருள் அல்ல என்று கூறுவார்.
சொல்பவர்:-அவர் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினார். பல வகைப்பட்ட சாதிகளைக் கொண்டுள்ள மக்களிடத்தில் அமைதியை நிலைநாட்டுதல், அகதிகளைப் பராமரித்து மீண்டும் அவர்களை அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தல், மற்றவர்களைத் தங்கள் இடங்களிலிருந்து போகாமல் பார்த்துக்கொள்ளுதல், மூன்றாவதாகக் கட்டுப்பாடுகளை, உணவுக் கட்டுப்பாடு,விலைவாசிக் கட்டுப்பாடு போன்றவற்றை நீக்குதல் ஆகியவையாகும். கட்டுப்பாடு தனிமனிதனது முயற்சியையும், சுதந்திரத்தையும், பொறுப்புணர்ச்சியையும் பலவீனப்படுத்துவதாகக் கருதினார். அவர்தம் கருத்துக்களைக் கூறுவதற்குப் பிரார்த்தனைக் கூட்டத்தையே பூங்கா மேடையாகக் கொண்டார். வழக்கமாக பிர்லா மாளிகையிலுள்ள தோட்டம், சில சமயம் அகதிகள் முகாம் அல்லது ரகளையினால் பாதிக்கப் பெற்ற ஏதாவது பொது நிறுவனம் அவரது மேடையாகும். இந்தக் கூட்டங்களிலிருந்து அவரது பேச்சுக்கள் வற்றாத ஊற்றாகப் பாய்ந்தன. அவை ரேடியோ மூலம் ஒலிபரப்பாயின, பத்திரிகைகள் மூலம் பிரசுரமாயின, லாகூரில் தனது வீட்டையும் சொத்துக்களையும் இழந்து நல்ல வேளையாக உயிர் தப்பிக் குடும்பத்துடன் வாழக்கொடுத்துவைத்த கடைக்காரர்ஒருவர் அவரது பேச்சுக்கள் எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கக்கூடியவையாக இருந்தன என்பதை நினைவுகூர்கிறார்.
தேவதாஸ் கபூர்:-அவர் ஒவ்வொரு சமயமும் பிரார்த்தனைநடத்தும் பொழுதெல்லாம் நூற்றுக்கணக்கான மக்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அவர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் வந்து அறிவுரைவழங்கும்போது அவர் துன்பத்திலுள்ள மக்களைக் காப்பாற்றுவார் என்ற உணர்வு எங்களுள் தலையெடுத்து நின்றது. ரகளை நடந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் அவர் அங்கே வந்து,பாகிஸ்தான் தவறு செய்கிறது என்றால் அதற்காக நீங்களும் தவறு செய்வீர்களானால் இரண்டு தவறுகளும் சேர்ந்து ஒரு நல்லதாகிவிட முடியுமா? இந்த முட்டாள்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள். முஸ்லிம்களும் இந்தியர்களே. உங்களது சகோதரர்களே. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகையினால் அவர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது. அவர்களைச் சுடுவதோ கொல்லுவதோ எதுவுமே கூடாதுஎன்றார். அது நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் அறிவுரைக்குப் பிறகு யாவுமே நிறுத்தப்பட்டன.
சொல்பவர்:-அப்படி நின்றதாகத் தோன்றுகிறதே ஒழிய அதற்கு ஐந்து மாத கால முயற்சி தேவைப்பட்டது. ஒவ்வொரு நாளும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி அதனால் பாதிக்கப் பெற்ற மக்கள் தங்கள் சோகக் கதைகளை அவரது காலடிகளில் வந்து சொல்லுவார்கள். அவர் தாங்கொணா மன வேதனையோடு அதைக் கேட்டு ஆறுதல் கூறுவார். சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களுக்கு நீதியும் நியாயமும் வழங்குவதற்காகக் காந்திஜி போராடப் போராடத் தீவிரப் போக்குள்ள ஹிந்துக்களிடமும் சீக்கியர்களிடமும் சந்தேகமும் வெறுப்பும் வளரலாயின. அயல்நாட்டுக்காரரான ஹோரேஸ் அலெக்சாண்டரிடம் கூட இந்த வளர்ந்து வரும் வெறுப்புணர்ச்சி வெளிப்படையாகவே கூறப்பட்டது.
ஹோரேஸ் அலெக்சாண்டர்:-அந்த இலையுதிர் காலம் முழுவதிலும் பல ஹிந்துக்கள் படுகோபம் கொண்டிருந்தார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சுதந்திரம் கிடைத்த அன்றே ஏன் இந்தக் கிழம் மண்டையைப் போடவில்லை? அவர் நமக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார் என்பது மெய்தான். ஆனால் இப்பொழுது எதற்கெடுத்தாலும் குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறாரேஎன்று நான் தில்லியில் சந்தித்த ஹிந்துக்கள் கூறியது எனக்கு நினைவு வருகிறது.
சொல்பவர்:-இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவில் காந்திஜியை மகிழ்ச்சியோடு பேட்டி கண்ட ஈவான் ஸ்டீபேன்ஸ் அந்த ஆண்டின் முடிவில் அவரைப் பார்த்துப் போக மீண்டும் தில்லிக்கு வந்திருந்தார். அவர் காந்திஜி மாறியுள்ளதைக்கண்டார்.
ஈவான் ஸ்டீபேன்ஸ்:-காந்திஜியை நான் இதற்கு முன்பு கண்ட பேட்டி முற்றிலும் மாறுபாடானது. பேட்டியின் முடிவில் வெதுவெதுப்பான அவரது கைகள் மட்டும் பூச்சிக்கூடு போன்ற அந்தச் சால்வைக் குள்ளிருந்து வெளியே வந்து எனது கைகளைப் பற்றின. அது சோத்பூரில் நடந்தது. கடவுள் விரும்பினால் நான் நூற்றிருபத்தைந்து வயது வாழ விரும்புகிறேன்என்று என்னிடம் சொன்னார். இப்பொழுது 1947-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் புது தில்லியிலுள்ள பிர்லா மாளிகையில் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழ்வதாகக் கூறிய கருத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அதை அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அதில் ஆர்வமும் காட்டவில்லை. அஹிம்சைக்குப் பிரசாரகரான மகாத்மாவுக்கு தில்லியிலும் பஞ்சாபிலும் அவற்றின் புதிய எல்லைகளின் இரு பக்கங்களிலும் பிரிவிரினைக்குப் பிறகு நடந்துவரும் நிகழ்ச்சிகள் இருதயத்தைப் பிளக்கும் பேரிடியாக இருந்திருக்கின்றன. இந்தக் கருத்தைத்தான் அந்தப் பேட்டியின் முடிவில் கொண்டேன். இது நினைவாற்றல் புரியும் விந்தை அல்ல. இந்த எண்ணம் எழுந்த உடனேயே பதிவு செய்துகொண்டது.
சொல்பவர்:-சொல்லப்போனால் அதற்குள் எல்லை கடந்த கொடுமைகள் யாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. காந்திஜி தில்லியில் இருந்தபடியாலும் அவரது இடையறா முயற்சியாலும் தளராத எடுத்துக்காட்டாலும் ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளும் கொலை, கொள்ளை சூறையிடுதல் போன்ற கலவரங்களும் அடங்கிக் குறைந்துவிட்டன என்று பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் காந்திஜி விரும்பிய உணர்வு,மனோபாவம் இன்னும் அங்கு ஏற்படவில்லை. சிறுபான்மையினர் தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணரவில்லை. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். காந்திஜிக்கு மிகவும் வேண்டிய முஸ்லிம் நண்பர்களே இந்தியாவில் தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணர முடியவில்லை என்று காந்திஜியிடம் கூறி வருந்தினார்கள். எனக்கு எதுவுமே ஓடவில்லைஎன்றார் அவர். என் வாழ்க்கையில் இதுபோன்ற செயலற்ற நிலையை நான் எந்த நாளும் அடைந்ததில்லைஎன்று கூறினார். திடீரென்று மீண்டும் ஒருமுறை உண்ணாவிரதமிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இந்தத் தடவை ஒரு டாக்டர் கூட, ஏன் டாக்டர் பி. ஸி. ராய் கூட தம்மோடு இருப்பதை அவர் விரும்பவில்லை.
பி. ஸி. ராய்:-பொதுவாக அவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய அன்றே எனக்குச் சொல்லி அனுப்பப்படும். அவர் என்ன காரணத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ஓர் அறிக்கை விடப்படும். இதுவே அவர் வழக்கம். உண்ணாவிரதம் பொதுவாக மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் உள்ள ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது என்பது அவரது அபிப்பிராயம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் நீண்ட நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வது மனத்திலுள்ள விஷயங்கள் பற்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவு காண உதவுகிறது என்று கூறுவார்.
சொல்பவர்:-அவர் காண்பது போல் அவரது பலவீனம் அவரது உள்ளத்தைப் பற்றியதுதான். தம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காகவே தான் இந்த உண்ணாவிரதம் என்று அவர் கூறினார். தில்லியில் உண்மையாகவே சகஜ நிலை ஏற்பட்டால் அன்றி உண்ணாவிரதத்தைக் கைவிட முடியாதென்றும், அமைதி நிலை உருவாகாது என்றால் இறந்துவிடுவதே மேல் என்றும் அவர் நினைத்தார். ஏனெனில் அவர் தில்லிக்கும் அப்பால் இந்தியாவைக் கண்டதாகவும், இந்தியாவிற்கும் அப்பால் வசித்திருக்கும் உலகத்தைக் கண்டதாகவும், அது துயரக்கடலிலும் வேதனைப் புயலிலும் அலையுண்டு பசித்து வாழ்வதாகவும் நம்பிக்கையற்றிருந்ததாகவும் கூறினார். 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி காலை சிற்றுண்டிக்குப் பிறகு உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாக அறிக்கை வெளியாகியது. உலகத்தின் நாற்றிசைக்கும் இந்தச் செய்தி பரவியது. அதுவே அவரது பதினெட்டாவது பெரிய கடைசி உண்ணாவிரதமாகும். மௌண்ட்பேட்டன் பிரபு அவரது தீர்மானதிலிருந்து அவரை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சி பயனற்றுப் போயிற்று.
மௌண்ட்பேட்டன் பிரபு:-இந்தக் தடவை அவரது உண்ணாவிரதம் அபாயத்தில் முடிந்தால் என்ன ஆவது என்று நான் பயந்தேன். அவரைத் தடுக்கவும் முயன்றேன். தில்லியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வரும் சாதிச்சண்டை பற்றி மிகுந்த மன வருத்தத்தோடு தாம் கொண்டிருக்கும் அதிருப்தியை வெளியிட்டார். அவரது மனத்தை மாற்ற முடியாது என்பதைக் கண்ட நான் அவருக்குப் பக்க பலமாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.
சொல்பவர்:-ஆனால் வற்புறுத்தி சொன்னதின் பேரில் டாக்டர்களைப் பற்றிய தமது கருத்தை அவர் மாற்றிக்கொண்டார். டாக்டர் பி. ஸி. ராய் வந்தார். டாக்டர் சுசீலா நைய்யாரும் வந்தார். பம்பாய்வாசியும் இருதய நோய் நிபுணருமான டாக்டர் கில்டர் 1932-ஆம் ஆண்டு பூனாவில் காந்திஜி வலாற்றுப் புகழ் கொண்ட உண்ணாவிரதம் இருந்த பொழுது முதன் முதலில் அவர் தம் நோயாளியாக இருந்ததை நினைவுகூர்கிறார்.
எம். டி கில்டர்:-நான் அவரைப் பார்த்துக்கொள்ளும்படி பிறகு கேட்டுக்கொள்ளப்பட்டேன். சாதாரணமாக நான் அவரைப் பரிசோதித்தேன். பரிசோதித்துக்கொண்டே காந்திஜி உங்கள் வயிறு சற்றுக் குழைகிறதுஎன்றேன். அவர் திரும்பி கில்டர் அது இன்னும் குழைந்துவிடும்என்றார்.
சொல்பவர்:-கவலை மிகவும் அதிகமாக இருந்தது. கடைசி சில மாதங்களில் அவர் கூடவே இருந்தவர் பிரஜ்கிருஷ்ணா சாந்திவாலா. தில்லி அற்புதம் நிகழ்த்திய கல்கத்தா இல்லை. உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள் இரவு காந்திஜி பிர்லா மாளிகையில் படுத்துக்கொண்டிருந்த பொழுது வெளியே கோஷங்கள் கேட்டன. அவற்றில் ஒன்று காந்தி ஒழிகஎன்பதாகும். நேருஜி காரில் வந்துகொண்டிருந்தவர் காரிலிருந்து குதித்துக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரில் போய் நின்றார். அவர்கள் ஓடிவிட்டனர். இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் மற்ற தொலை நாடுகளிலிருந்தும் கவலையும் அன்பும் தெரிவித்துத் தந்திகளும் செய்திகளும் ஒருபுறம் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இன்னொரு புறம் பரவிய நச்சுக்காற்று சூழ்நிலையையே கெடுத்துக்கொண்டிருந்தது. இந்தத் தடவை காந்திஜி பொதுவான வாக்குறுதிகளால் திருப்தி அடைவதாக இல்லை. நிச்சயமாக மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் விரும்பியது நடந்தது. பிரிவினை காரணமாகப் பாகிஸ்தானுக்குச் சேரவேண்டிய பங்கை சுமார் நான்கு கோடி பவுனைக் கருத்து வேறுபாடு காரணமாக இந்திய அரசாங்கம் கொடுக்கத் தாமதம் காட்டியது. அவர் வற்புறுத்தவே அதைக் கொடுத்துவிட்டது. தில்லியில் அவர் சில வாக்குறுதிகளை நாடினார். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவும், நினைக்கும் இடங்களுக்கு நினைத்த பொழுது செல்லக்கூடிய சுதந்திரமும், மசூதிகளை மீண்டும் திறந்து அவர்கள் விழாக் கொண்டாடும் உரிமையும், இதுபோன்ற இன்னோரன்னவையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காரியதரிசி பியாரேலால் காந்திஜி படுத்திருந்த அறைக்கும் இவை பற்றி ஆலோசனை நடத்தச் சமாதானக் குழு இருந்த இடத்துக்குமாக தூது நடந்துகொண்டிருந்தார்.
பியாரேலால் நைய்யார்:-அவர் கேட்ட வாக்குறுதிகளை மக்கள் கொடுத்ததும் அந்த உண்ணாவிரதம் சாதாரணமாக முடிவுற்றது. அவர் தமது உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்வதற்கு முன்பு ஏழு நிபந்தனைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். அந்த ஏழு நிபந்தனைகளும் மக்களுடைய உள்ளத்தை மாற்றக்கூடிய அறிகுறியோடு அமைந்திருந்தன. அந்த நிபந்தனைகளில் கையெழுத்தானதும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும் தம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஒரு சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளது போல் ஒரு நிமிடம்கூட முன்னால் அல்ல.
சொல்பவர்:-உண்ணாவிரதத்தின் ஆறாவது நாள் தான் காந்திஜி அதை ஏற்றுக்கொண்டார். அதை அவர் நட்புரிமைக்கான உறுதிமொழிஎன்று கூறுவது வழக்கம். அன்று மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அந்த நட்பை உடைப்பது நாட்டை உடைப்பதாகும் என்று சொன்னார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மாலைப் பிரார்த்தனையில் ஒரு குண்டு வீசப்பட்டது. ஊறு விளைவிக்காதபடி அது வெடித்தது. எந்த விதமான பாதுகாப்பு அங்கே இருந்தது? காந்திஜி பாதுகாப்பை விரும்பவில்லை. அவரை விருந்தாளியாகக் கொண்டிருந்த ஜி. டி. பிர்லா கூடப் பிரார்த்தனையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் இருப்பது சரியல்ல என்றே எண்ணினார்.
ஜி.டி. பிர்லா:-சொல்லப்போனால் வீட்டில் ஆயுதம் தாங்கிய ஆயுதம் தாங்காத போலீஸ் படையினர் குழுமியிருந்தனர். அவருக்கு அந்த மாதிரி அபாயம் வரக்கூடும் என்பதை ஏனோ நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் அதைப் பற்றி நான் சீற்றம் கொண்டேன். ஒருநாள் நான் காந்திஜியிடம் பிரிஜ் கிருஷ்ணா சாந்திவாலா. தில்லி அற்புதம் இது தவறு. நீங்கள் ஆயுதம் தாங்கிய போலீஸரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தவறுஎன்று சொன்னேன். அதற்கு அவர் நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். என்னிடத்தில் எதற்காகச் சொல்கிறீர்கள்? நம் அரசாங்கத்திடம் சொல்வதுதானே? நம் சர்தார் வல்லபாய் பட்டேல் தானே உள்துறைப் பொறுப்பில் இருக்கிறார்என்றார். நான் சர்தாரிடம் கூறினேன். சர்தார் இது உங்கள் பொறுப்பல்ல. எங்களால் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாதுஎன்றார். உண்மையில் நாங்கள் இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். பிர்லா வீட்டில் நுழைபவர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் சோதயினையிட விரும்புகிறோம்என்றும் கூறினார். ஆனால் காந்திஜி உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டபடியால் அவர் ஒருவாறு சமாதானம் அடைந்தார்.கடைசியாக அவரைச் சுட்ட மனிதன் சோதனைக்குள்ளாகவில்லை.
சொல்பவர்:-அவருக்கு ஒரு சில நாட்களே மிகுந்திருந்தன. உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பிறகு அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதைக் கூறுவது கடினம். சில பேட்டிகளும் சில அசம்பாவிதங்களும் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்கின. ஆனாலும் நண்பர் இராஜகோபாலாச்சாரி சொன்னது போல் அவரிடம் சில சாதனைகளைச் செய்து முடித்தோம் என்ற நிறைவு உணர்ச்சி இருப்பதாகவே பட்டது.
இராஜகோபாலாச்சாரி:-அவர் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்பு அவரது வாழ்நாளிலேயே இப்பொழுது புரியும் பணிதான் பெரிய சாதனை என்று எழுதினேன். அவர் அப்படியே ஒத்துக்கொண்டார். அதில் மகிழ்ச்சியும் கொண்டார்.
சொல்பவர்:-ஜனவரி மாதம் 28-ஆம் தேதி தில்லிக்கு அருகிலுள்ள மேஹ்ரௌலி என்னும் இடத்தில் நடைபெற்ற முஸ்லிம்களது விழாவில் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டார். அமைதியாக நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்ட விழாவாகும் அது. பத்மஜா நாயுடு அவருடன் இருந்தார்.
பத்மஜா நாயுடு:-அவர் மேஹ்ரௌலிக்குச் சென்றதுதான் மிகவும் விசித்திரமானது. ஏனெனில் மாதக்கணக்கில் நிம்மதியே இல்லாமல் தவித்த அவருக்கு அது நிம்மதியைக் கொடுத்தது. அன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் பத்திரமாக இருப்பதுபோல் உணர்ந்தார்கள் என்பதை அவரே உணர்ந்தார். அதுதானே அவருக்கு வேண்டியது. அவர்கள் இனியாவது இந்த நாட்டைத் தங்களுடையது என்றும் தாங்கள் இங்கு பத்திரமாக வாழ முடியும் என்றும் அவர் எண்ணினார். போனது போயிற்று. அது ஒரு சோதனை நாள். அவருக்கு மகிழ்ச்சியும் வியப்பும் கொடுத்த நாள்.
சொல்பவர்:-இந்தக் கடைசிச் சம்பவத்தைப் பற்றி மீரா பென் தமக்கென்று தனியானதொரு கருத்துக் கொண்டிருந்தார்.
மீரா பென்:-ஆம்.பாபுஜி முடிவில் போராடிக்கொண்டிருந்தார். ஏனெனில் பாபூஜி ஒருபோதும் திருப்தி அடையமுடியாத அளவு தமது லட்சியத்தை வளர்த்துக்கொண்டிருந்தார். பாபுஜிஇறுதி நாட்களில் இரண்டு மூன்று தடவைகள் சொல்லியிருக்கிறார். மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, “நான் பாபுஜிசொல்லக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் நான் அஹிம்சை முறையில் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறேன். மக்களை அவ்வழியில் செலுத்த முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பல காந்திகள் வரவேண்டும். அப்பொழுதுதான் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியும்என்பார். உங்களுக்குத் தோன்றிய பொருளை நீங்கள் கொள்ளுங்கள், ஆனால் பல காந்திகள் வரவேண்டும் என்று பாபுஜி சொன்னது,மீண்டும் பாபுஜியே வரவேண்டும் என்பதுதான் உண்மையில் அதற்குப் பொருள் என்றே நான் கருதுகிறேன்.
சொல்பவர்:-எல்லாவற்றிற்கும் காந்திஜி எதிர்கால வேலைத் திட்டம் வைத்திருப்பார். தில்லியில் நிலைமை சீருற்றதாகத் தமக்குத் திருப்தி ஏற்பட்டதும் அவர் மத்திய இந்தியாவில் தமது வார்தா ஆசிரமத்திற்குச் சென்று அங்குள்ள கிராமப் பணியை மீண்டும் தொடங்குவது என்று நினைத்துக்கொண்டிருந்தார். பாகிஸ்தானுக்குக்கூடப் போய்வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருத்தது. ஜே. பி. பாட்டீல் அவருக்காகச் சில விஷயங்களைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார்.
ஜே. பி. பாட்டீல்:-ஆம்! அகதிகள் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்தியாவில் சமூக சேவை செய்துகொண்டிருந்தவர்களில் சிலரைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் அவர் தயாராக இருந்தார். இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் அவர் பாகிஸ்தானுக்குச் சென்றிருப்பார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். காந்திஜி இறப்பதற்கு முன்பு நான் பாகிஸ்தானில் இருந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த வரைக்கும் அங்குள்ள மக்களோடு தொடர்பு கொண்டதில் அவர்கள் காந்திஜி அங்கு வருவது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் அவரிடம் பாசத்தைக் காட்டாவிட்டாலும் பெருமதிப்பைக் காட்டினார்கள்
சொல்பவர்:-1948-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி வியாழக்கிழமை காந்தியின் வாழ்க்கையில் கடைசி மாலைப்பொழுது ஆகும். இந்திரா காந்தி சில சகாக்களோடு தமது சிறு பையனையும் அழைத்துக்கொண்டு அவரைக் காணச் சென்றார்.
இந்திரா காந்தி:-அவர் மிகவும் உற்சாகமாக இருப்பதைக் கண்டேன். அவர் எங்களை வரவேற்று நீங்கள் என் மனச்சுமையைக் குறைக்க இங்கே வந்தது குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன். ஏனெனில் இங்கு நான் சோம்பேறி மக்களால் சூழப்பட்டிருக்கிறேன்என்றார். நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். அவர் என் சிறு பையனோடு விளையாடினார். நாங்கள் கூந்தலில் சூடிக்கொள்ளக்கூடிய மலர்களை வளையமாகத் தொடுத்து எடுத்துப்போயிருந்தோம். என் பையனிடம் அதைக் காட்டி இதை நான் எங்கே அணிந்துகொள்ள வேண்டும் சொல்? தலையில் அணிந்துகொள்ளலாமா?”என்று கேட்டார். உங்களால் அணிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் உங்களுக்குத் தலைமுடியில்லையே!என்று என் மகன் பதில் சொன்னான். அதனால் மலரை அணிந்துகொள்ள மிகச் சிறந்த இடம் கணுக்கால் என்ற முடிவுக்கு வந்தார்கள். அவர் அவனுடைய கால்களிலும் கணுக்கால்களிலும் அணிவித்து விளையாடி மகிழ்ந்தார். அன்றைக்கு அவர் ஒரே உல்லாசமாஇருந்தார். அவர் நடக்கப்போவதைச் சூசகமாக முன்கூட்டியே அறிந்திருந்தார் என்றோ அல்லது வேறு எண்ணங்கள் கொண்டிருந்தார் என்றோ எனக்குத் தோன்றவில்லை என்பதை நான் கூறித்தான் ஆகவேண்டும்.
சொல்பவர்:-பிறகு காந்திஜியின் மகன் தேவதாஸ் பிர்லாவின் வீட்டிற்கு வந்தார்.
தேவதாஸ்:-அவர் அப்பொழுது படுக்கை போட ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். அதோடு அன்று என்றுமில்லாத ஒரு நிலையையும் கண்டேன். ஆம், அவர் தனியாக இருக்கக் கண்டேன். ஏனெனில் பொதுவாக அவர் இரவு பகல் எந்நேரத்திலும் பார்வையாளர்களாலும் பணியாளர்களாலும் சூழப்பட்டிருப்பார். அன்று அவர் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று ஏன் என் குழந்தை கோபால் இன்று மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரவில்லை? என்பதாகும் அவனும் அவனது தாயாரும் பிரார்த்தனைக் கூட்டத்திற்குத் தவறாமல் வந்துவிடுவார்கள். சொல்லப்போனால், கோபால் என் தந்தையின் மடியிலோ அல்லது அவருக்கு வெகு அருகிலோ உட்காந்து அவரோடு சேர்ந்து பிரார்த்தனைப் பாடல்களை ஒப்பிப்பான். நான் என்ன விளக்கம் கொடுத்தேன் என்பது எனக்கு நினைவு இல்லை. ஏனென்றால் அவன் அங்கு வராததுகூட எனக்குத் தெரியாது. அன்றைக்கு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும்போது அவரால் நான் எப்படிப் பராமரிக்கப்பட்டேன், எப்படிக் செல்லமாக வளர்க்கப்பட்டேன் என்பது பற்றியெல்லாம் எனக்கு நினைவுபடுத்தினார்.
சொல்பவர்:-மேலும் ஒரு அதிகாலைப் பொழுது. தில்லியில் பிர்லா மாளிகையின் புல்வெளியில் பனி முத்துப்போல் ஒளிர குளிர் மிகுந்த தெளிவான அதிகாலை காந்திஜி வழக்கம் போல் எழுந்தார்.
பி. சாந்திவாலா:-அன்று ஜனவரி மாதம் 30-ஆம் தேதி - வெள்ளிக் கிழமை. வழக்கம் போல் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து அந்த நாளைத் தொடங்கினார். முதலில் பிரார்த்தனை செய்தார். பிறகு நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல அலுவல்களையும் கவனித்தார்.
சொல்பவர்:-பிரஜ்கிருஷ்ணா சாந்திவாலா வழக்கப்படி காந்திஜியின் இடது பக்கத்தில் தூங்கினார். எட்டு மணிக்குக் காந்திஜி காலைப் பத்திரிக்கைகளைப் படித்துக்கொண்டிருக்கையில் அவர் காந்திஜிக்கு உடம்பு பிடித்துவிட்டார்.
பி. சாந்திவாலா:-அவர் வார்தாவுக்குப் போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார். அங்கு ஒரு மகாநாடு நடப்பதாக இருந்தது.
சொல்பவர்:-ஆனால் முதலில் தில்லியிலுள்ள மௌல்விகளை, முஸ்லிம்களின் குருமார்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர்கள் தில்லியில் பத்திரமாக இருப்பதாக உணர்ந்து காந்திஜியைப் போக அனுமதித்தால்தானே தில்லியை விட்டுச் செல்ல முடியும்.
பி. சாந்திவாலா:-நீங்கள் இங்கிருந்து வெளியே போனால் அது எங்களுக்கு ஒரு சோதனையாக முடியும். நீங்கள் இல்லாத நேரத்தில் நாங்கள் அமைதியாக வாழ்கின்றோமா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்க்க உதவும். நீங்கள் வெளியில் சென்றுவருவது நல்லதுதான் என்று மௌல்விகள் கூறினார்கள். அதனால் அவர் போக அனுமதிக்கப்பட்டார். பிறகு நான்கு மணி வரைக்கும் அவர் பேட்டி அளித்தார். நான்கு மணிக்கு அவர் எழுந்து என்னிடம் வந்து சர்தார் பட்டேலைப் பார்க்குமாறும் ரயிலுக்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். நாலரை மணிக்கு மேல் சர்தார் பட்டேல் வந்தார். அவரைப் பார்க்க விரும்பினார். அப்பொழுது அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தார். சர்தார் அவரைப் பார்த்தார். அவர்கள் மிகவும் ரகசியமாக ஏதோ பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஐந்து மணிக்குப் பிரார்த்தனை நேரம். ஆனால் பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை. எனவே நாங்கள் அனைவரும் கவலை கொண்டோம். அவர் வெளியே வந்தார். குறிப்பிட்ட நேரத்தில் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் ஆதலால் பிரார்த்தனை மைதானத்திற்கு விரைந்தார்.
சொல்பவர்:-பிரார்த்தனை ஒரு புல் தரையில் நடந்தது. அங்கு ஒரு சிறு மேடை இருந்தது. கூட்டம் கூடி அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பிரிட்டிஷ் ரேடியோ நிருபரான ராபர்ட் ஸ்டிம்சன் என்பவரும் இருந்தார். அவர்தான் அன்று மாலை அந்தச் செய்தியை ஒலிபரப்பியவர்.
ராபர்ட் ஸ்டிம்சன்:-இந்திய நேரப்படி மணி ஐந்து அடித்து மூன்று நிமிடங்கள் ஆன பொழுது காந்திஜி பிர்லா மாளிகையிலிருந்து வெளியே வந்தார். மாலைப் பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டபடியால் அடிகளை எட்டிப்போட்டு விரைவாக நடந்தார். உண்ணாவிரதத்திற்குப் பிறகு அவர் வேகம் அன்றுதான் கூடியிருந்தது. அவர் வழக்கப்படி முழங்கால் வரை வெள்ளை வேஷ்டியும் ஒரு ஜதை செருப்பும் அணிந்திருந்தார். குளிர் வீசத்தொடங்கியிருந்தபடியால் அவர் தம் மார்பைச் சுற்றி ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தார். அவரது இரு கரங்களும் அவரது இரு சகாக்களின் தோள்களின் மீது படிந்திருத்தன. அவர் புன்சிரிப்போடு இருந்தார். அந்தப் பூங்காவில் இருநூறு அல்லது முன்னூறு மக்கள் தாம் இருந்திருப்பார்கள். பிரார்த்தனை நடக்கும் மேடை சற்று உயரமான புல்தரையில் இருந்தது. அவர் படியேறுவதைக் கண்ட மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு கூட்டம் கூடியிருந்த இடத்தை நோக்கி விரைந்தனர். தமது சகாக்களது தோள்களிலிருந்து கைகளை எடுத்து வணக்கம் செலுத்துகிறார் போல் கைகளை உயர்த்தினார். அவர் படிகளைத் தாண்டி மேடைக்குச் சென்றார். அவர் கூட்டத்தைப் பார்த்தார். இப்பொழுது அவர் புன்சிரிப்போடுதான் இருந்தார். முப்பது வயதுள்ள ஒரு கட்டுமஸ்தான மனிதன் காக்கி உடையுடன் கூட்டத்திற்கு முன் இருந்தான். ஓர் அடி காந்திஜியை நோக்கி நடந்து வந்து தனது துப்பாக்கியை எடுத்துப் பல முறை சுட்டான்.
பி. சாந்திவாலா:-அச்சமயம் நான் அவருக்கு நேர் பின்னால் இருந்தேன். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் அவருக்கு நமஸ்தேஎன்றும் ஜய் ஹிந்த்'என்றும் சொல்லிக் கைகூப்பி வணங்கினார்கள். அதன் பிறகுதான் அவர் நிறுத்தியதை நான் கண்டேன். என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மூன்று முறை சுட்ட ஒலியை நான் கேட்டேன். என்ன நடந்தது என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் யாராவது அவரைச் சுடுவார்கள் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை. அதனால் நான் நகர்ந்து அவருக்கு முன் வந்தேன்.ரத்தம் கசிவதைக் கண்டேன். பிறகுதான் என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். சில வினாடிகள் அவர் நின்றுகொண்டிருந்தார். கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அவர் கீழே விழுந்து இறந்துபோனார்.
(நான்காம் பகுதி நிறைவு)

காந்திஜி ஒரு சொற்சித்திரம் – தொகுப்பு

கடல் கடந்த காந்தி | முகவுரை | பாரஸ்நாத் ஸின்ஹா

$
0
0

இந்திய வியாபார கைத்தொழில் சங்கமென்பது இந்திய வியாபாரிகளின் முக்கியமான பிரதிநிதி ஸ்தாபனமாகும். இந்திய வியாபாரம்என்றால் இந்தியர்களின் முதலைக் கொண்டு இந்தியர்களாலேயே நிர்வகிக்கப்படுவதாகும். இந்த மாபெரும் சங்கத்துடன் நாட்டில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வியாபார ஸ்தாபனங்கள் இணைக்கப்பெற்றிருக்கின்றன. இந் நூலின் ஆசிரியர் ஸ்ரீ கனச்யாமதாஸ் பிர்லா இச்சங்கத்தின் பிரதிநிதியாக இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொண்டார்.
சங்கம் முதல் வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் காந்தியடிகள் பங்கெடுத்துக்கொள்ளாததும், அவரது ஆசியைப் பெறாததுமான எந்த மகாநாட்டிலும் தான் சேருவதில்லை என்று சங்கம் தீர்மானித்திருந்தது; காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் பயனாக நாட்டின் நிலைமை மாறி, காந்தியடிகளும் லண்டன் செல்வாரென்று தோன்றவே சங்கமும் அதில் கலந்துகொள்ளத் தீர்மானித்தது.
மகாநாட்டிற்கு மூன்று பிரதிநிதிகளை அனுப்பும் உரிமை சங்கத்திற்குக் கிடைத்தது. சங்கம் அதிக ஸ்தானங்களைக் கோரியபோதிலும் இர்வின் பிரபுவின் வார்த்தைக்கிணங்கி மூன்று ஸ்தானங்களுடன் திருப்தியடைந்து மூன்று பிரதிநிதிகளின் பெயர்களையும் ராஜப் பிரதிநிதியிடம் சமர்ப்பித்தது. 14-4-31ல் அவரிடமிருந்து ஒத்துக்கொண்டதாகப் பதிலும் வந்தது.
ஆனால் ஆகஸ்டு 4ஆம் தேதி மகாநாட்டின் பிரதிநிதிகளின் பெயர்கள் பிரசுரமான பொழுது, சங்கத்திற்கு மூன்று ஸ்தானங்கள் தரப்படாமல் ஒரே ஸ்தானம் தரப்பட்டும், அதற்குச் சங்கம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்த மூன்று கனவான்களில் ஒருவரான ஸர் புருஷோத்தமதாஸ் தாகூர் தாஸின் பெயர் மட்டிலும் வெளியிடப்பட்டுமிருந்ததைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியமுண்டாயிற்று.
சிம்லா மலையுச்சியில் ராஜப் பிரதிநிதியின் திட்டத்தைக் கலைக்கக்கூடியதோர் புயல் அடித்திருக்கிறதென்பது இதிலிருந்து வெளியாயிற்று. இந்தியா மந்திரியின் காரியாலயத்தாரின் தொந்தரவே இம்மாறுதலுக்குக் காரணமென்று லண்டனில் பிரஸ்தாபம். காரணம் எதுவாயினும், இத்தகைய நிலையில், சங்கம் மகாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது. அது செய்த தீர்மானத்தில், ‘கலந்துகொண்டால் மூவரும் கலந்துகொள்வோம், இல்லையேல் ஒருவரும் கலந்து கொள்வதில்லைஎன்று தெளிவாகக் கூறிவிட்டதுடன், ‘சங்கத்தின் பிரதிநிதிகள் சம்மதம் இல்லாமல், செய்யப்படும் எந்த ஒப்பந்தமும், இந்திய வியாபார சமூகத்திற்கு ஒப்ப முடிந்ததாகாதுஎன்றும் கண்டிருந்தது.
கடைசியில் சங்கத்திற்கே வெற்றி கிட்டிற்று. வேறு வழியின்றிச் சர்க்கார், தமது முடிவை மாற்றிக்கொண்டு ஒருவருக்குப் பதிலாக மூவருக்கும் ஸ்தானங்கள் அளித்தது. 16-8-31ல் சங்கத் தலைவர் ஜனாப் ஜமால் முகம்மது ஸாஹிப்பிற்கு அவரையும், ஸ்ரீ கனச்யாமதாஸ் பிர்லாவையும் மகாநாட்டின் பிரதிநிதிகளாக நியமித்திருப்பதாக ராஜப் பிரதிநிதியின் அந்தரங்கக் காரியதரிசியிடமிருந்து கடிதம் கிடைத்தது. இவ்விதமாக, நூலாசிரியருக்குச் சில தினங்கள் லண்டனில் வட்டமேஜை மகாநாட்டில் வளையவருவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இது அவருடைய இரண்டாவது லண்டன் யாத்திரையாகும். இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம் லண்டன் வழியாக அமெரிக்காவுக்குச் செல்வதாகும்.
மகாநாட்டில் சர்க்காருடைய விருப்பம் பூர்த்தியாகிவிட்டது. அங்கே ஆசிரியர் கண்ட பரிதாபக் காட்சியை விவரிக்கும் பொழுது, “காரியத்தைக் கெடுத்தவர்கள், சர்க்காரால் நியமனம் பெற்ற அங்கத்தினர்களே; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருந்தால், இத்தகைய சந்தர்ப்பமே ஏற்பட்டிராதுஎன்று கசந்துகொண்டு கூறுகிறார். சுயராஜ்யத் திட்டம் தயாரிப்பதற்கு ஜனப் பிரதிநிதி சபை அவசியம் என்று ஏன் வற்புறுத்தப்படுகிறது என்பதும் ஆசிரியரின் அனுபவத்தைக் கேட்கும் பொழுது தெளிவாகிவிடுகிறது.
மகாநாட்டின் பொதுக்கூட்டத்தில் ஆசிரியர் செய்த சொற்பொழிவு, உள்ளதை உள்ளவாறு கூறுவதற்குச் சிறந்த உதாரணமாகும். மகாநாட்டில் பிரஸ்தாபிக்கப்பட்ட பொருளாதார நிர்ப்பந்தங்கள் இந்தியர்களுக்கு ஏன் சகிக்கக்கூடாதவை என்பதைத் தெளிவாக்கினார். வருமானத்தில் 100ல் 80பகுதி, சேனைக்கும், கடனின் வட்டிக்குமாக ஒதுக்கப்பட்டு, வருங்காலத்தில் இந்தியப் பொருளாதார மந்திரிக்கு அதைச் சிறிதும் மாற்றுவதற்கு அதிகாரம் மறுக்கப்பட்டிருந்ததால் இப்பெரும் பகுதி முழுவதும், மேற்கூறிய செலவுகளுக்காக பந்தகம்வைக்கப்பட்டது போலாகுமென்பதையும்; இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்குமிடையில் செய்யப்படும் எந்த ஒப்பந்தத்திலும், முதன்முதலில் இச் செலவின் சுமையைக் குறைக்கும் விஷயமாக ஓர் முடிவு ஏற்படவேண்டுமென்றும் மிகவும் வற்புறுத்தினார். சொற்பொழிவின் முடிவில் அவர் கூறியதாவது:— “எந்த சர்க்காரும் ஆளப்படுவோரின் சம்மதமின்றி, ஒரு தேசத்தை ஆள முடியாது. சாந்தியையும், சமாதானத்தையும் நிலைக்கச் செய்ய வேண்டுமானால், எங்கள் இஷ்டப்படி எங்களை ஆளுங்கள்; அல்லது நாங்களே எங்களை ஆண்டுகொள்ள விடுங்கள்; அப்பொழுது நாங்கள் உங்களுடைய நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் இருக்கமுடியும். நீங்கள் தற்சமயம் எங்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில், இது உங்களுடைய மாபெருந்தவறாகும். அன்று என்னிடம் ஒரு ஆங்கில நண்பர், ‘1930ஆம் வருஷத்திய வட்ட மேஜை மகாநாட்டிற்கு நீங்கள் வராமல் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். அச்சமயத்திலிருந்த தொழில் கட்சி சர்க்காரின் ஆதரவினால் மிகுந்த பயன் பெற்றிருக்கலாம்என்று கூறினார். இதில் எவ்வளவு உண்மை உண்டு என்று எனக்குத் தெரியாது. ஆனால் தற்காலத்திய சர்க்கார் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றும் செய்துகொள்ளாதிருந்தால், இது அவர்கள் செய்யும் பெருந்தவறாகும். எனக்கு எனது நாட்டின் வாலிபர்களை நன்றாகத் தெரியும். சில வருஷங்களுக்குப் பிறகு இந்தியாவில் காந்தியடிகளோ, இந்தியச் சிற்றரசர்களோ என்னைப் போன்ற முதலாளிகளோ, ஒப்பந்தத்திற்கில்லாமல், புதிய எண்ணங்களும், புதிய ஆசைகளும் கொண்ட முற்றிலும் புதிய மனிதர்களுடன் ஒத்துப்போக நேரும். ஆகையால் இங்கிலாந்து இப்பொழுதே எச்சரிக்கையாக இருத்தல் நலம்.
லண்டனிலிருந்து திரும்பிய பின்னர் பிரிட்டிஷ் உரிமைகளைக் காப்பதில் கண்ணுள்ள பெந்தல், ஆங்கில வியாபாரிகளின் ஒரு சபையில், இந்திய வியாபார சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு, வருத்தமும் ஆச்சரியமும் உண்டாகும்படி பேசினார். இந்தச் சொற்பொழிவின் விவரம் பத்திரிகைகளில் பிரசுரமான பொழுது அதை மறுத்து ஒரு வார்த்தையும் பெந்தல் வெளியிடவில்லை. இதில் காந்தியடிகளின் பேரில் சிறிதும் ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் ஒரு விஷயம் மட்டும் வெட்டவெளிச்சமாயிற்று. அதாவது லண்டனில் காந்தியடிகளுடனும், மற்றவர்களுடனும் அவர் நடத்திய பேச்சுக்கள் ராஜதந்திரப் பேச்சுக்களேயன்றி, அப்பொழுது அடிக்கடி கூறப்பட்டதுபோல உண்மையானவையல்ல என்பது பெந்தலைப்பற்றி நூலில் உள்ள பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.
சங்கத்தின் பிரதிநிதிகள் தமது கமிட்டியிடம் சமர்ப்பித்த அறிக்கையில், காந்தியடிகளைப்பற்றிக் கீழ்க்கண்ட கருத்துக்கள் காணப்படுகின்றன:-
மகாநாடு வெற்றியடையாததற்குக் காந்தியடிகளைக் காரணமாகக் கூறப்படுகிறது. இதைவிடப் பெரிய ஆதாரமற்ற பொய் வேறு இருக்கமுடியாது. லண்டனில் அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கும் அவருடைய கருத்துக்களை அறிவதற்கும் எங்களுக்கு வேண்டிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. காந்தியடிகள் சரியான முறையில் ஒப்பந்தம் செய்துகொள்ள எப்பொழுதும் சித்தமாயிருந்தார் என்று நாங்கள் உண்மையாகச் சொல்லக்கூடும். அவர் தமது கோரிக்கைகளை அவசியமானால் குறைத்துக்கொள்ளவும் சம்மதித்தார்; ஒப்பந்தத்திற்குத் தம்மாலானதையெல்லாம் செய்துபார்த்தார். அவர் செய்த ஒரு சொற்பொழிவில் சமாதானம்தான் தமது நோக்கம் என்பதை நெஞ்சையள்ளும்கீழ்க்கண்ட சொற்களில் விளக்கினார். டில்லியில் தற்காலிகமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் சாசுவதமாவதைக் காணவேண்டுமென்பது என் ஆசை. ஆகையால் கடவுளுக்குப் பயந்து இந்த 62வயதுக் கிழவனுக்கு ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள். எனக்கும், நான் எந்தக் காங்கிரஸின் பிரதிநிதியோ அந்த ஸ்தாபனத்திற்கும் உங்கள் மனதில் ஒரு சிறிதளவாவது இடம் கொடுங்கள்.ஆனால், இவையெல்லாம் மகாநாட்டில் விழலுக்கிரைத்த நீராயிற்று. பெந்தல் கூறியபடி காந்தியடிகள் வெறுங்கையுடன் திரும்ப நேர்ந்தது.
காந்தியடிகளின் சம்பந்தத்தினால் உலகம் முழுவதும் பிரசித்தியடைந்ததும், இந்தியா முழுமையும் ஆதரவுடன் கவனிக்கப்பட்டதுமான மகாநாட்டைப் பற்றியது இந்த நூலில் காணப்படும் குறிப்புகள். இதன் ஆசிரியர் இதில் காணப்படும் சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தவர்; அவைகளைப்பற்றிய உள் வயணங்களை இவரைப்போல் அறிவதற்கு வேறு எவருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்க முடியாது. இதற்கு ஆதாரமான சரித்திரப் பகுதியை நிர்மாணிப்பதில் இவருக்கும் பங்குண்டு. இக்காரணங்களால் இந்நூலின் ருசித்தன்மை புலனாகும்.
இக் குறிப்புகள் சரித்திர ஆராய்ச்சி செய்வோருக்கு மட்டுமின்றி, தற்கால அரசியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருக்கும் உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது.

('கடல் கடந்த காந்தி' மூலநூலுக்கு ஸ்ரீ பாரஸ்நாத் ஸின்ஹா எழுதிய முகவுரை. நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அ. சுப்பையா)

கடல் கடந்த காந்தி - 1 | ஜி. டி. பிர்லா

$
0
0
கப்பலில் காந்தி
ராஜபுதானா
29-8-31
பம்பாயில் இன்று காலை முதல் ஒரே அமளிதான். காந்தியடிகள் கொஞ்சகாலம் இந்தியாவில் இருக்கமாட்டாரே என்னும் அகக்கனிவு ஒவ்வொருவருடைய முகத்தோற்றத்திலும் வெளியாகிக்கொண்டிருந்தது. ஆனால் என்னுடைய பாக்கியவசமாக, காந்தியடிகளும் மாளவியாஜியும் போகும் கப்பலிலேயே நானும் போகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
எனக்கு நான் கப்பலில் இடம் தயார் செய்துகொண்ட பொழுது, காந்தியடிகள் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போவதில்லையென்று நிச்சயமாகியிருந்தது; ஆனால் கடவுளின் சித்தம் வேறுவிதம் இருந்தது போலும்! விதி வகுக்கும் வழியை யாரால் மாற்ற முடியும்?
பங்களாவினின்று கிளம்பித் துறைமுகத்தை அடைந்ததும் போட்டோ பிடிக்கும் பித்தர்கள் டஜன் கணக்கில் வந்து, என்னைச் சூழ்ந்துகொண்டனர். எவ்வளவு பிளேட்டுக்களைப் பாழாக்கினார்களோ தெரியாது. இருபத்தைந்துக்குக் குறைவில்லை. நமது பணம் இப்படித்தான் வெளிநாடுகளுக்குப் போகிறது! மேலும், என் படத்திற்கு இப்போது என்ன கிராக்கி வந்தது?
நான் கப்பலில் ஏறிய சிறிது நேரத்திற்குள், வானை அளாவும்படியாக காந்திக்கு ஜே!என்ற கோஷம் எழுந்தது. சரிதான், காந்தியடிகள் வந்துகொண்டிருக்கிறார் என்று எல்லோரும் தெரிந்துகொண்டார்கள். கப்பலில் எங்கும் ஒரே தடபுடல். இந்தியர்கள், ஆங்கிலேயர்கள், ஸ்திரீ புருஷர்களெல்லாரும் ஓடோடியும் வந்து மகாத்மாவின் வருகையைப் பார்ப்பதற்குத் தகுந்த இடம் தேடிப்பிடிக்கத் தொடங்கினார்கள். துறைமுகத்திலிருந்து அரை மைல் வரையிலிருந்த வீடுகளின் மாடிகளிலெல்லாம் இடமில்லாமல் ஜனங்கள் நெருங்கி நின்றனர். நாலாபுறத்திலிருந்தும் ஜயகோஷம் கிளம்பிற்று. காந்திஜி கப்பலில் ஏறுவதற்குள் மிகவும் கஷ்டமாகிவிட்டது. ஆங்கில மாலுமிகள் அவரைச் சுற்றிக் கைகோத்து நின்று, மேலே பத்திரமான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.
அங்கு நின்றபடியே காந்தியடிகள் கரையில் கூடியிருந்த மக்களுக்குத் தரிசனம் அளித்துக்கொண்டிருந்தார். அந்தக் கண் கொள்ளாக் காட்சியை என்னவென்பது!
இதற்கு முன்பே வட்டமேஜை மகாநாட்டிற்குச் சென்றிருந்தார்களே, அவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளா, அல்லது எலும்பும் தோலுமாயிருக்கும் இந்த துர்ப்பல காந்தி பொதுஜனங்களின் பிரதிநிதியா என்ற கேள்விக்கு அங்கே கூடியிருந்த மக்களின் உணர்ச்சிப் பெருக்கே சாட்சி சொல்லிக்கொண்டிருந்தது. இதற்குள் சிறிது மழைத்தூற்றல் போடத் தொடங்கிற்று. இந்திரனும் காந்திஜியின் பிரிவாற்றாமையினால் கண்ணீர் சொரிந்தான் போலும்! ஆனால் ஜனங்கள் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. கப்பல் புறப்படுவதற்காக முதல் மணி அடித்தது. இரண்டாவது மணியும் அடித்தது. மூன்றாவது மணியடித்த பிறகே ஜனங்களுக்குக் கப்பலை விட்டு இறங்கவேண்டுமென்ற நினைவு வந்தது. அவர்கள் கரையில் இறங்கினாலும், அவர்களது கண்கள் காந்தியடிகளிடமே இருந்தன.
வல்லபாயின் வதனத்தில் வருத்தம் தெரிந்தது. ஜவஹர்லாலின் முகத்திலோ புன்முறுவல் பூத்திருந்தது. பண்டித மாளவியாஜி இன்னும் வந்துசேர்ந்தபாடில்லை. மாளவியாஜி இன்னும் வரவில்லையா?” என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தனர். கடைசியில் அவரும் சமயத்தில் வந்துசேர்ந்தார். நங்கூரம் வலிக்கப்பட்டு, கப்பல் மெள்ள நகரத் தொடங்கவும், எங்கள் பிரயாணம் ஆரம்பமாகிவிட்டது என்று தெரிந்தது. ராமேச்வரும், விரஜமோஹனும் (நூலாசிரியர் ஜி. டி. பிர்லாவின் சகோதரர்கள்)அங்க வஸ்திரத்தை வீசி வீசி சமிக்ஞை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் நானோ சிந்தனைக் கடலில் மூழ்கி எழுந்த வண்ணம் இருந்தேன். வற்றி உலர்ந்த இந்தச் சின்ன மனிதர்தான் மக்களை எவ்வாறு மயக்கியிருக்கிறார்!என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்.
கப்பல் சிறிது நகர்ந்ததும், கரையிலுள்ளவர்களைப் பிரிந்து போய்க்கொண்டிருக்கிறோமென்பது நினைவிற்கு வந்தது. கப்பலுக்கும் கரைக்குமிடையே உள்ள தூரம் அதிகரிக்க அதிகரிக்க, என் மனம் கரையை நோக்கி ஓட ஆரம்பித்தது. கரையிலுள்ளவர்களும் இதே நிலையில் இருந்தனரோ என்னவோ? கடைசியில் கரையிலுள்ளவர்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதும் கஷ்டமாகிவிட்டது; கண்ணின் சக்தி போதவில்லை. அதற்குப் பிறகும் காதினால் ஜயகோஷத்தைப் பருகிக்கொண்டிருந்தோம். கடைசியில் அதுவும் நின்றுவிடவே சமுத்திரத்தின் ஓங்காரத்வனியே எஞ்சியிருந்தது. பாரத பூமியின் அறிகுறி எல்லாமே மறைந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் ஒரே நீர்ப்பரப்பு; அதனிடையில் ராஜபுதனம்என்ற இந்தச் சிறிய உலகம்! ஆனால் இந்தச் சின்ன உலகத்திலேதான் இந்திய நாட்டின் முடிசூடா மன்னர் இருக்கிறார். அவருடைய இந்த யாத்திரையோ சரித்திரப் பிரசித்தி பெறப் போகிறது. அத்தகைய மகா யாத்திரையின் காட்சி உள்ளத்தை உருக்குவதில் வியப்பென்ன இருக்கிறது?
2. கீழ் வகுப்புப் பிரயாணி
ராஜபுதானா
30-8-31
கப்பலில் சம்பிரதாயங்களெல்லாம் தகர்ந்துவிட்டன. 1927-ல் நான் கப்பல் பிரயாணம் செய்தபொழுது விசித்திர வேஷம் தரிக்க வேண்டியிருந்தது. இரவு உடை வேறு; பகல் உடை வேறு; மொத்தத்தில் வெகு தொந்தரவு. உடுப்பு மாற்றிக்கொள்வதிலேயே மணிக்கணக்காய்ப் போய்விடும். வேஷ்டியும், ‘குடுத்தாவும் அணிதல் ஏதோ பெரிய பாவச்செயலாகக் கருதப்பட்டது. இப்பொழுதோ கப்பலில் வேஷ்டியும் குடுத்தாவும் அணிந்தவர்கள் தங்குதடையில்லாமல் திரிந்துகொண்டிருக்கிறார்கள். கேட்பார் யாருமில்லை, சங்கோசப்படுகிறவர்களும் இல்லை. நான் மட்டும் வேஷ்டியும் சொக்காயும் எடுத்துக்கொள்ளாமல் வந்துவிட்டது தவறு என்று இப்போது தெரிகிறது. பிரயாணிகளும் சரி, காப்டனும் சரி, வேஷ்டி சொக்காயைக் கண்டு முன்போல் வெறித்துப் பார்ப்பதில்லை. ஒருவேளை மனதிற்குள் அவர்களுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் காந்தியின் சௌகரியத்தைக் கவனித்துக் கொள்ளவும்என்று சிம்லாவிலிருந்து கட்டளை பிறந்திருப்பதால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பண்டித மாளவியாஜிக்காக அடுப்பு தனியாகத் தயாராகிவிட்டது. கங்கா தீர்த்தமும் உடன் வந்திருக்கிறது. ஒரு தகரம் நிறைய மண், சுதேசி சோப்பு, பல் குச்சியின் ஒரு பெரிய கட்டு ஆகியவையும் வந்திருக்கின்றன. காந்தியடிகளின் சர்க்காவும், பஞ்சடிக்கும் வில்லும் மற்றும் பல விசித்திரமான வஸ்துக்களும் உடன் யாத்திரை புரிகின்றன. கப்பலிலுள்ளவர்கள் இது நல்ல சிவகணம்யாத்திரைக்கு வந்தது என்று வியக்கிறார்கள். போகிற போக்கில் கடைக்கண்ணால் கடாக்ஷித்துச் செல்கிறார்கள். வெளியில் காட்டுவதென்னவோ ரொம்ப ரொம்ப மரியாதைதான்!
கப்பல் கிளம்பியதும், காந்தியடிகள் தம் சாமான்களைக் கவனிக்கத் தொடங்கினார். இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது? அதில் என்ன இருக்கிறது?” என்ற கேள்விகள் பிறந்தன. மீரா பென், பாவம், புயல் தொடங்கிவிட்டதென்று கண்டு கலங்கினார். மகாதேவும், தேவதாஸும், காந்தியடிகளுடன்தான் பம்பாய்க்கு வந்தனர். ஆகவே, பிரயாண ஏற்பாட்டின் முழுப் பொறுப்பும் மீரா பென்னுடையதாயிற்று. காந்தியடிகள் கணக்குக் கேட்கத் தொடங்கவும், இது நல்லதுக்கில்லையென்று மீரா பென் கண்டுகொண்டார். முதன் முதலில், “இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?” என்றார் காந்தியடிகள்.
பாபு, தங்களுடைய உடைகள்என்றார் மீரா.
என் துணிகளுக்கு இவ்வளவு பெரிய பெட்டியா?”
இது நிறையத் துணிகள் இல்லை.
ஓஹோ! இதை நிரப்பிவிடலாமென்றே பார்த்தீர்களோ? இந்தியாவில் என்னுடைய துணிகள் பெட்டியில்லாமல்தானே வருகின்றன? இங்கே மாத்திரம் எதற்காகப் பெட்டி?”
மீரா பென் பெட்டியைத் திறந்து சாமான்களை எடுத்து முன்னால் வைக்கவே, காந்தியடிகளின் முகம் சிவந்துவிட்டது. சாமான்கள் ஒன்றும் அதிகமாக இல்லை; ஆனால் ஒரு பைசாவானாலும் அவசியமில்லாமல் செலவு செய்வது காந்தியடிகளுக்குச் சகிப்பதில்லை. பெட்டிகளெல்லாம் இரவலாக வந்தவைதான்; ஆனாலும் இதில் அவருக்குக் கொஞ்சமும் சமாதானமில்லை. ஒரு மணிநேரம் வரையில் அவர் தமது கோஷ்டியினரைக் கண்டித்துக்கொண்டிருந்தார். முடிவில், சில பொருள்களை மட்டும் நிறுத்திக்கொண்டு, மற்றவைகளை ஏடனிலிருந்து திருப்பி அனுப்பிவிடுவதென்று தீர்மானமாயிற்று. காந்தியடிகள், “இந்தச் சாமான்களைக் கண்டு எனக்குத் திகிலாகிவிட்டது. நான் என்னுடைய பழைய பழக்கங்களையே விட்டுவிட்டதாக எண்ணி, இவர்கள் காகிதம் வைப்பதற்குக்கூடப் பெட்டியல்லவா கொண்டுவந்திருக்கிறார்கள்!என்றார்.
ஐந்து மணி அடித்ததும், தாம் உட்காரும் இடத்தைத் தீர்மானிப்பதற்காக காந்தியடிகள் மேல் தளத்திற்கு வந்தார். நான், “கப்பலின் ஓரத்தில் ஆட்டம் ரொம்ப அதிகம்; அங்கே உட்காருவது சிரமம்; ஒரு நிமிஷம் அங்கே நிற்கக்கூட என்னால் முடியவில்லை; ஆகையால் அதைப் பார்க்கவேண்டியதில்லை. கப்பலின் மத்திய பாகத்துக்குப் போகலாம்என்றேன். காந்தியடிகள் அந்த இடத்தையுந்தான் பார்ப்போமே?” என்று சொல்லி, நான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், கப்பல் ஓரத்தில் ஒரு ஆபத்தான இடத்தைக் கடைசியில் தேடிப் பிடித்தார். நான் திகைத்து வாய்பேசாதிருந்தேன். வேறு யாராவது இத்தகைய உபயோகமில்லாத உபத்திரவமான இடத்தை வேண்டுமென்று தேடிப் பிடிப்பார்களா? ஆனால், ‘மற்ற ஜீவன்களெல்லாம் விழித்திருக்கும் பகற்பொழுதை முனிவர்கள் இரவென்று கருதுகிறார்கள்என்பது கீதை வாக்கியம்.
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः।
நல்ல இடத்தில் நாம் போய் உட்காருவதால் மற்றவர்களுக்குக் கஷ்டமேற்படலாம்; அம்மாதிரி நல்ல இடத்தில் தனிமையாயிருப்பதும் சாத்தியமில்லை. ஆகையால் கஷ்டமுள்ள இடமே நமக்கு நல்லதுஎன்பது காந்தியடிகளின் எண்ணம். அவருடைய கருத்தை மாற்றுவதற்காகக் கப்பலின் காப்டனிடம் ஓடினேன்; இன்னும் எவ்வளவோ முயற்சி செய்தேன். எல்லாம் நிஷ்பிரயோஜனமாயிற்று. ஆற்றங்கரைப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்தவர் உட்கார்ந்தவர்தான். கடைசியில், மாளவியாஜி தமது செல்வாக்கைப் பிரயோகித்துப் பார்த்தார். டிக்கட்டை முதல் வகுப்பிற்கு மாற்றும்படி மன்றாடினார். மாலையில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது காந்தியடிகள்,
நீ ஏன் நிர்ப்பந்தம் செய்கிறாய்?” என்றார்.
நான், “நீங்கள் வாங்கியிருப்பதோ இரண்டாவது வகுப்பு டிக்கட்டு; ஆனால் தங்களுடைய பெயருக்காக முதல் வகுப்பின் எல்லா வசதிகளும் கிடைத்துவிடுகின்றன. முதல் வகுப்புத் தளத்தில் கித்தான்விரித்துத் தங்களுக்காகப் பிரார்த்தனைக்கு இடம் செய்யப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது தாங்கள் முதல் வகுப்பின் கட்டணத்தைச் செலுத்திவிடுவதே உசிதமல்லவா?” என்று கேட்டேன்.
காந்தியடிகள், “உன்னுடைய வாதம் என்னவோ சரிதான்; ஆனால் அதிலிருந்து முதல் வகுப்பின் உரிமைகளையெல்லாம் நான் விட்டுவிட வேண்டுமென்றுதான் ஏற்படுகிறதுஎன்றார். அதுமுதல் காந்தியடிகள் முதல் வகுப்பு தளத்தில் உலாவுவதையே நிறுத்திக்கொண்டார். பிரார்த்தனைக்கு விரித்திருந்த கித்தானும் ஒரு நாளைக்கே பயன்பட்டது. இன்றையப் பிரார்த்தனையை அவருடைய சங்கடமான இடத்திலேயே நடத்தினார். பிரார்த்தனை சமயத்தில் காந்தியடிகள் தியானத்திலாழ்ந்திருக்கையில், நான் கடவுளே! இந்தப் பிரார்த்தனை எப்பொழுது முடியும்? எப்பொழுது இங்கிருந்து போவேன்?’ என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். அங்கே இரண்டு நிமிஷம் உட்கார்ந்தால் போதும், தலை சுழலத் தொடங்கும். வாந்தி வராதிருந்தால் பெரிய காரியம். சூரிய சந்திரர்கள் சஞ்சரிக்காத இடத்தில் கடவுள் வாசம் செய்கிறார்என்று கூறுவதுண்டு. இது எங்கள் கப்பலின் விஷயத்தில் ஓரளவு உண்மையென்று கூறலாம்.
சாதாரண மனிதர்கள் சுய உணர்வுடன் எங்கே இருக்கமுடியாதோ, அங்கே காந்தியடிகள் எழுந்தருளியிருக்கிறார். தரிசிக்க யாராவது சென்றால் ஒரு நிமிஷத்திற்கு மேல் அவரருகில் நிற்க விரும்புவதில்லை. பம்பாயிலிருந்து கிளம்பியதுமே கடலில் கொந்தளிப்பு உண்டாகிவிட்டது. ஆகவே, காந்தியடிகள் இருந்த இடம் தொட்டில் ராட்டினத்தைப் போல் ஆடிக்கொண்டிருந்தது.
3. பண்டித்ஜி பட்டினி!
ராஜபுதானா
31-8-31
பண்டித்ஜியின் கதையைக் கேளுங்கள்! இன்று மூன்று நாட்களாகின்றன; நித்திய ஏகாதசிதான்! பண்டித்ஜியினுடைய சமையற்காரனுக்கு உடம்பு சரியில்லை. போதாததற்கு ரொட்டி மாவு முதலிய சாமான்களிருந்த பெட்டியையும் எங்கும் காணவில்லை. பண்டித்ஜியிடம், “சுவாமி! கப்பல்காரர்களிடமிருந்து மாவும், அரிசியும் வாங்கிக்கொண்டால் பாதகமொன்றுமில்லையே''என்று லக்ஷம் தடவை சொல்லியாகிவிட்டது. அவரோ, “பசித்தால் பார்த்துக்கொள்வோம். இப்பொழுது பசியில்லை. உடம்பும் பளுவில்லாமல் சௌகரியமாயிருக்கிறதுஎன்கிறார். முந்தாநாளும் நேற்றும் சிறிது பால் அருந்தினார். அவருடைய சாமான் பெட்டிக்காகக் கப்பல் முழுவதும் சலித்தாய்விட்டது. மறைந்த மாயம் புரியவேயில்லை!
பண்டித்ஜி தாம் சாப்பிடாமல், தம் சமையற்காரனை மட்டும் வைத்தியநாத், கொஞ்சம் சாப்பிடு!என்று வற்புறுத்துகிறார். வைத்தியநாத் எதைச் சாப்பிடுவது? பெட்டியோ பிரும்மலோக யாத்திரை போய்விட்டது! கப்பலின் பண்டசாலையிலிருந்து சாமான்கள் பெறுவதற்குப் பண்டித்ஜி நேற்று வரை சம்மதிக்கவில்லை. இன்று அவரை ஒத்துக்கொள்ளச் செய்துவிட்டேன். கப்பலின் சாமான்களைக் கொண்டு சமையல் நடைபெறும். பண்டித்ஜி சிறிது உடல் சோர்ந்திருக்கிறார்; ஆனால் உற்சாகத்தில் குறைவில்லை. சமுத்திரத்தின் கொந்தளிப்பினால் இரண்டு தினங்களாகச் சிறிது கஷ்டம். சமுத்திரம் இன்று கொஞ்சம் சாந்தமடைந்து வருகிறது. மாலையில் சாப்பாடும் தயாராகிவிடும்.
பண்டித்ஜிக்கு மிகுந்த கஷ்டம். அவரைப் போன்ற மனிதர்களுக்கு இத்தகைய யாத்திரையில் மிகுந்த சிரமம்தான். ஆனால் அவர் நாட்டிற்காக எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு வருகிறார். உண்மையைக் கேட்பீர்களானால், பண்டித்ஜியின் அபிப்பிராயத்தில் இந்தக் கப்பல் ஒரு நரகம்; இங்கிலாந்தோ ரௌரவம்என்ற பெரிய நாகம். இன்று, அவர் எனக்கு நீ ஒதுக்கி வைத்த கேபின்என்னவோ நல்ல அறைதான்; ஆனால் அது ஒரு சிறைக்கொட்டடி!என்றார். நாட்டுப்பணியாக இல்லாமலிருந்தால், பண்டித்ஜி இந்த யாத்திரையை சொப்பனத்திலும் விரும்பியிருக்கமாட்டார். பண்டித்ஜியின் மனத்திலுள்ள அன்பிற்கும், நம்பிக்கைக்கும் ஓரளவில்லை. பெட்டி தொலைந்தே போயிற்று; கப்பல் முழுதும் சலித்துப் பார்த்தாய்விட்டது; ஆயினும் பெட்டி நிச்சயம் கிடைக்கும்; எங்கே போய்விடும்?” என்று இப்பொழுதும் கேட்கிறார்.
இதற்கு நான் என்ன பதில் சொல்வது? கோவிந்தஜி (பண்டித மாளவியாஜியின் குமாரர்)நேற்றும் இன்றும் பேடாவையே தின்று தீர்த்தார். கிளம்பும்போது ராமேச்வர் பேடா இன்னும் அதிகமாகக் கொண்டு போஎன்று சொன்னார். நான் கேட்கவில்லை. இத்தகைய நிலைமை ஏற்படுமென்று எனக்கு அப்பொழுது எவ்வாறு தெரியும்?
4. பாய்மரப் பறவை
ராஜபுதானா
1-9-31
இன்று (புதன்கிழமை) கடல் அடங்கியிருக்கிறது. ஸுரஜியா இன்றும் அசௌக்கியமாகவே இருக்கிறான். பாரஸ்நாத்ஜிக்கு இன்று கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. நான் ஒரு வேளை உணவை நிறுத்தினேன். காந்தியடிகள் ஆனந்தமாயிருக்கிறார். பண்டித்ஜிக்கு சமையல் நடந்துகொண்டிருக்கிறது. கப்பலிலிருந்து வாங்கிய சாமான்களைக் கொண்டுதான். கோவிந்தஜிக்கு பேடாசாப்பிட்டதால் சிறிது தொந்தரவு உண்டாகியிருக்கிறது. காந்தியடிகளின் பிரார்த்தனை தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபெறுகின்றது. இந்தியர்கள் பிரார்த்தனைக்கு வருகிறார்கள். ஆங்கிலேயர்களோ தூரத்தில் தலைமறைவாயிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றிரவு ஏடன் சேர்ந்துவிடுவோம். பண்டித்ஜி, “கப்பல் ஒரு சிறைச்சாலைதான்; என்ன விந்தை பார்! நாம் காசையும் கொடுத்துச் சிறைவாசமும் செய்கிறோம்!என்கிறார். நேற்று கலக்கமடைந்தவராய்,
सीतापति रघुनाथजी तुम लगी मेरी दौर;
जैसे काग जहाज को मूझत और न ठौर।
(“எங்கும்போய்க் கரைகாணா(து) எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே
என்னும் ஆழ்வார் பாட்டின் கருத்துத்தான் மேற்கண்ட ஹிந்திப் பாட்டின் பொருளும். – மொழிபெயர்ப்பாளர்)
என்று பாடத் தொடங்கினார். இங்கு வேறு புகலிடமேது?
5. அராபிய தீர்த்தம்
ராஜபுதானா
3-9-31
ஏடனை விட்டு இப்பொழுதுதான் கிளம்பினோம். ஏடனில் காந்தியடிகளுக்கு அமோகமான உபசாரங்கள் நடைபெற்றன.
வரவேற்புப் பத்திரங்கள் அளிக்கப்பட்டன; காந்திஜி பதிலளித்தார். அவருடைய பேச்சு இந்தியப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கும். காந்தியடிகளுக்கு 341பவுன் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. வரவேற்பு வைபவத்தில் அராபியர்கள், யூதர்கள், இந்தியர்கள் ஆகிய யாவரும் குழுமியிருந்தனர். ஆயிரக்கணக்கில் வழி முழுதும் இருபுறமும் நின்று அரபி பாஷையில் வரவேற்பு கோஷங்கள் செய்துகொண்டிருந்தனர். காந்தியடிகளிருந்த வண்டியிலேயே ஸரோஜினி தேவியும், பிரபாசங்கர் பட்டாணியும், நானும் இருந்தோம். சில அராபியர்கள் பிரபாசங்கர்ஜியையே காந்தியடிகளென்று நினைத்துவிட்டார்கள். ஏனெனில் பிரபாசங்கர்ஜியின் வெள்ளைத் தாடியும், வெள்ளைச் சட்டையும், வெள்ளைத் தலைப்பாகையும் சேர்ந்து அவருக்கு மஹாத்மா பதவியை உண்மையில் அளித்துவிட்டன.
கூட்டம் நடந்த இடத்திலும் ஆயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள்; அவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்.
பண்டித்ஜிக்காக இங்கிருந்து கொஞ்சம் மாவும், அரிசியும் இரண்டு குடம் தண்ணீரும் எடுத்துக்கொள்ளப்பட்டன. பண்டித்ஜியின் கங்கைக் குடத்தில் அரேபியாவின் தீர்த்தம் நிரப்பப்பட்டுவிட்டதால், “பண்டித்ஜி அதைக் குடித்துக் குடித்து, இனிமேல் மௌலானா ஷௌகத் அலிக்கு உதவி புரிய வேண்டியதுதான்!என்று நாங்கள் கேலி செய்தோம். அவரோ தீர்த்தத்திலுள்ள விஷத்தைக் காலையிலும், மாலையிலும் செய்யும் சந்தியாவந்தனத்தினால் களைந்துவிடுவேன்!என்றார்.
***
காந்தியடிகள் லண்டனை அடைந்ததும் என்ன செய்யப்போகிறாரென்பதை அறிய யாவரும் ஆசை கொண்டிருக்கின்றனர். வட்டமேஜை மகாநாட்டிற்கு ஏறக்குறைய 100அங்கத்தினர்கள் ஆகிவிட்டார்கள். பெயரே கேட்டிராத பலர் அங்கத்தினர்களாகியிருக்கிறார்கள். இது இந்திய ஜனப்பிரதிநிதிகளின் மகாநாடல்ல; காந்தியடிகளைத் தவிர, பிரதிநிதிகளென்று கூறப்படும் மற்ற எல்லோரும் சர்க்காரால் நியமிக்கப்பட்டவர்களே; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்ல. சிலர் நல்லவர்கள்; பெரும்பாலோர் கவைக்குதவாதவர்கள். உண்மையில், இவர்களெல்லோரும் சர்க்காரின் பிரதிநிதிகளே. இத்தகைய நிலைமையில் காந்தியடிகள் ஒருவர் என்ன செய்யக்கூடும். மகாநாட்டில் விவாதம் எழும்போது அரசாங்கம் சொல்வதே சரியென்று தலையாட்டுவோருக்குக் குறைவிராது. அந்நிலையில் அங்கேயுள்ளவர்கள், “காந்திஜி! நீங்கள் சொல்வது சரிதான்; ஆனால் உங்கள் நாட்டு மக்கள் ஒப்பாத பொழுது நாங்கள் என்ன செய்வது?” என்று இலேசாகக் கேட்டுவிடலாம். இத்தகைய நிலைமையில் காலம் வீணாவது ஒன்றுதான் கண்ட பலனாகும்; காரியம் ஒன்றும் நடைபெறாது. ஆகையால் காந்தியடிகள் இந்த ஆபத்துக்களில் சிக்கமாட்டார் என்பது நிச்சயம். எனவே, நடக்கப்போவது இதுதான் என்று கருதப்படுகிறது:- காந்தியடிகள் அங்குள்ள மந்திரி சபையுடனும், பிரமுகர்களுடனும் தனியாகக் கலந்து யோசிப்பார்; அவர்களுக்கு இந்தியாவின் நிலைமையை விளக்குவார்; இங்கிலாந்தின் பொதுமக்களைத் தூண்டுவார்; இவ்விதமாக ஒரு தீர்மானத்திற்கு வருவார். மந்திரி சபை தனியாகப் பேச சம்மதியாவிடில் பெடரல் கமிட்டியில் தம் அபிப்பிராயத்தை வெளியிட்ட பின், வாதத்திற்கு வர விரும்புவோரை, அழைப்பார். இவ்வளவும் செய்த பிறகும் காந்தியடிகளையும் நூறோடு நூற்றொன்றாகக் கருதுவதாகத் தெரிந்தால், உடனே ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்.
காந்தியடிகள் லண்டன் சென்றவுடனேயே தம் உத்தேசத்தைத் தெரிவித்துவிடுவாரென்பது என் எண்ணம். எனவே, மந்திரி சபை காந்தியடிகளிடம் தனியாகக் கலந்துபேச வேண்டியிருக்கும்; ஆகவே காந்தியடிகளே வட்டமேஜை மகாநாடாக ஆகிவிடலாம்.
***
வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஸர். புருஷோத்தம தாஸையும், என்னையும் வட்டமேஜை மகாநாட்டிற்கு நியமிக்க சர்க்கார் விரும்புவதாக சிம்லாவில் காந்தியடிகளிடம் கூறப்பட்டது. போனால் மூவரும் போவோம்; இல்லையேல் ஒருவரும் போவதில்லைஎன்று நான் ஸர். புருஷோத்தம தாஸிடம் பம்பாயில் சொல்லிவிட்டேன். காந்தியடிகள் பம்பாய்க்குச் சென்றதும் இராஜப் பிரதிநிதிக்கு ஒரு காரசாரமான கடிதம் எழுதியிருக்கிறார். காந்தியடிகளின் வார்த்தை எடுபட்டால் மூவரும் அழைக்கப்படுவோம்; இல்லையேல் ஒருவரும் இல்லை.

கடல் கடந்த காந்தி - தொகுப்பு

கடல் கடந்த காந்தி - 2 | ஜி. டி. பிர்லா

$
0
0
ஸ்ரீ பிர்லாஜியும் காந்திஜியும்
கடல் கடந்த காந்தி - 1 | ஜி. டி. பிர்லா
6. விசித்திர மனிதர்
ராஜபுதானா
4-9-31
நேற்று மீண்டும் வட்டமேஜை மகாநாட்டைப்பற்றி காந்தியடிகளிடம் பேச்செடுத்தேன். சர்க்கார் தங்களை என்ன உத்தேசத்துடன் அழைத்திருக்கிறார்கள்? நீங்கள் கேட்கப்போவதோ சர்க்காருக்குத் தெரியும். கராச்சி தீர்மானம்தான் எதிரில் இருக்கிறதே. இருந்தும் தங்களை அழைத்திருப்பதிலிருந்து தங்களுடைய விருப்பம் நிறைவேறப்போகிறதென்று தெரியவில்லையா?” என்றேன்.
காந்தியடிகள்:- நான் ஒன்றையும் மறைத்துவைக்கவில்லையே! இர்வினுடன் ஒப்பந்தம் ஆயிற்றல்லவா? அது ஆன பின்பு இரவு எட்டு மணிக்கு நான் இர்வினிடம், “பாருங்கள், என்னோடு ஒப்பந்தம் செய்துகொண்டவுடன் என்னை ஏன் லண்டன் போகச் சொல்கிறீர்கள்? நான் விரும்புவதோ உங்களுக்குத் தெரியும். அதை உங்களால் நிறைவேற்ற முடியாது; பின் என்னை அனுப்பிப் பயன் என்ன?” என்று கேட்டேன். அதற்கு இர்வின், “நீங்கள் எதைக் கேட்டாலும், நியாய வழியை விட்டு வழுவமாட்டீர்களென்று எனக்குத் தெரியும். ஆகையால்தான் போகச் சொல்லுகிறேன்என்றார்.
நான்:- ஆமாம்; நமது கோரிக்கையை எவ்விதம் சமர்ப்பிப்பது?
காந்தியடிகள்:- நாட்டுப்புறத்தானைப்போல், சாதாரணமான, புரியும் பாஷையில்தான். அங்கு யாராவது சவிஸ்தாரமான பேச்சைத் தொடங்கி, ஆட்சி முறையின் சூக்ஷ்மங்களைப் பற்றி வாதம் செய்ய ஆரம்பித்தால், “ஐயா, நான் பட்டிக்காட்டான்; இந்த வாதங்கள் ஒன்றும் என் மூளைக்கு எட்டவில்லை. நான் வேண்டுவது இது இது; இவைகளைக் கொடுக்கத் தயாரா?” என்பேன். என் வார்த்தைகளை ஒருவரும் காதில் வாங்க விரும்பவில்லையானால், “என்னை ஏன் வீணில் உட்கார வைத்திருக்கிறீர்கள்? திரும்ப அனுப்பிவிடுங்கள்என்று கூறுவேன்.
நான்:- தாங்கள் திரும்பு முன் அங்கே பொதுக்கூட்டங்களில் பேசுவீர்களல்லவா?
காந்தியடிகள்:- அதுவும் அங்கே மாக்டோனால்டோ, பால்டுவினோ விரும்பினால்தான்; இல்லையேல், வாயைப் பொத்திக்கொண்டு திரும்பிவிடுவேன். எவன் வீட்டிலிருக்கிறேனோ அவனது அடிமையாய் இருப்பது என் சுபாவம். அவர்களுடைய விருந்தினனாக எப்போது போகிறேனோ, அப்போது அங்கிருக்கும் வரையில் அவர்கள் மனம் நோகும்படி ஒன்றும் செய்யமாட்டேன்.
***
அவரது போக்கே விசித்திரமானதுதான். நாம் ஒவ்வொன்றையும் உலக நோக்கத்துடன் பார்க்கிறோம். இவரோ எந்த விஷயத்தையும் ஆன்மீக திருஷ்டியுடன் பார்க்கிறார். நூறு, இருநூறு வருஷங்கள் ஆனாலும் ஆகட்டும்; நமக்கு வேண்டியது சுயராஜ்யமல்ல, ராமராஜ்யமேஎன்கிறார். சூக்ஷ்மமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இவருடைய கோரிக்கை எவ்வளவுக்குப் பெரியதாயிருக்கிறதோ அவ்வளவுக்கு அதன் அளவைக் குறைத்துக்கொள்ளவும் தயாராயிருக்கிறார் என்று தெரியவரும். இதை ஒரு உதாரணத்தினால் நன்கு விளக்கலாம். அதாவது, வெண்ணெய் நீக்கிய ஒரு படி பாலைக் காட்டிலும், வெண்ணெயுடனிருக்கும் ஒரு ஆழாக்குப் பாலைப் பெற்று அவர் திருப்தியடைந்துவிடுவார். அளவைக் குறைத்துக்கொள்ளச் சம்மதிப்பாரேயன்றி, பொருளின் குணத்தைக் குறைக்க ஒருநாளும் சம்மதியார்.
விஷயங்களை நன்றாய்ப் படித்து வைத்துக்கொள்ளுங்கள்; சமயத்தில் காரியம் கெட்டுவிடப்போகிறதுஎன்றேன். வட்டமேஜை மகாநாட்டில் இதுவரை என்ன நடந்திருக்கிறதென்று நான் இன்னும் படிக்கவில்லை; இப்பொழுது படித்துவிடுகிறேன். ஆனால் எனக்கு பலம் தருவது வித்வத் அல்ல; வாத விவாதம் செய்வதும் என் வேலையல்ல. நான் செய்யப்போவது ரோதனம் (அழுகை); இதற்குப் பாண்டித்யம் எதற்கு?” என்று காந்திஜி கேட்டார். உண்மைதான். அழுகையும், சிரிப்பும் இயற்கையாக உண்டாகிறவை. நாடகம் நடிப்பவர்கள் மட்டுமே அழுகையிலும் பாண்டித்யம் காட்டுகிறார்கள்! காந்தியடிகளோ இயற்கையான அழுகை அழ விரும்புகிறார்.
பண்டித்ஜி என்னிடம் அடிக்கடி, “இந்த விஷயத்தைப் படி; அந்தச் சரித்திரத்தைப் பார்த்து வை; ஆங்கிலேயரின் நாணயச் செலாவணி முறையை நன்றாக ஆராய்ச்சி செய்து வைத்துக்கொள்என்றெல்லாம் சொல்கிறார். மாளவியாஜி பற்பல ஆயுதங்களைக் கொண்டு போர் புரியப்போகிறார் என்று தெரிகிறது. காந்தியடிகளிடமோ ஏகபாணந்தான். லண்டனில் பிரமாதமான பிரசார வேலை செய்யப்போவதாக மாளவியாஜி சொல்லுகிறார். காந்தியடிகளோ பிரசாரம்கூட எதிரியின் அனுமதி கிடைத்தால்தான் செய்வேனென்று கூறுகிறார். முழுதும் புதிய முறை, புதிய போக்கு, புதிய வழி! எத்தகைய விசித்திரமான மனிதர் வந்திருக்கிறார்!என்று லண்டன்வாசிகளும் ஆச்சரியப்படுவார்களென்றே எனக்குத் தோன்றுகிறது.
நேற்று எழுதி எழுதி, காந்தியடிகளின் வலது கை அடியோடு அசந்துபோய்விட்டது. இப்பொழுது இடது கையால் எழுதுகிறார். தினமும் ஆறு மைல் தூரம் உலாவுகிறார். இரண்டு ஆழாக்குப் பால் அருந்த ஆரம்பித்திருக்கிறார். லண்டனில் சர்ச்சிலை மட்டும் அவசியம் சந்திக்க வேண்டும். அந்த ஆசாமிதான் விடாத விரோதம் பாராட்டுகிறார்; வைதுகொண்டே இருக்கிறார்என்றார் காந்தியடிகள். பர்னார்ட்ஷாவைப் பார்ப்பீர்களா?” என்றேன். அவரைப் பார்த்து ஆவது என்ன?” என்று பதில் வந்தது.
7. "அன்ஸாரி வரட்டும்"
ராஜபுதானா
5-9-31
போபால் நவாப் காந்தியடிகளை அழைத்துக்கொண்டு போய், “ஹிந்து முகம்மதியப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு தாங்கள் தனித் தொகுதி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்என்றார். காந்தியடிகள், “எனக்குத் தனித் தொகுதியின் மேல் துவேஷமுமில்லை; கூட்டுத் தொகுதியின் மேல் மோகமுமில்லை. ஆனால் டாக்டர் அன்ஸாரி இல்லாமல் நான் எதுவும் செய்வதற்கில்லைஎன்று பதிலளித்தார். நவாபுக்கு இந்த பதில் பிடிக்கவில்லையென்பதாகப் பிரஸ்தாபம். காந்தியடிகள், “நான் ஒருநாளும் என் நண்பர்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன். அன்ஸாரியிடம் கலந்துகொள்ளாமல் ஒன்றும் முடிவு செய்ய விரும்பவில்லைஎன்றார். போபால் நவாப், “அன்ஸாரியை இப்போது எப்படி அழைத்துக்கொண்டு வருவது?” என்று கேட்டார். காந்தியடிகள், “லண்டன் போனதும் முயன்று பாருங்கள். நானும் முயற்சி செய்துகொண்டுதானிருக்கிறேன்என்றார்.
மீண்டும் இரண்டு மணிநேரம் எனக்கும் காந்தியடிகளுக்குமிடையில் சொந்த விஷயங்களையும், ராஜீய விஷயங்களையும் பற்றிப் பேச்சு நடந்தது. காந்தியடிகளின் கோரிக்கை நிறைவேறப்போவதில்லை என்றும், ஆனால் மற்றவர்களுக்குத் திருப்தியளிக்குமளவுக்கு ஏதாவது கிடைத்துவிடுமென்றும் நான் அநுமானிப்பதாகச் சொன்னேன். அப்படி நடந்தால் அதுவும் நல்லதுதான்என்கிறார் காந்தியடிகள். எனது இரண்டாவது போர், ஜமீன்தார்கள், தனவான்கள், ராஜாக்கள் ஆகியவர்களுடன் நடக்கும்; ஆனால் அப்போர் இனிய போராயிருக்கும்என்கிறார்.
இரவு பிரார்த்தனைக்கு ஆங்கிலேயர்களும் வருகிறார்கள். அதிகம் பேரில்லை; ஐந்து அல்லது ஆறு பேர்தான். பிரார்த்தனையினால் பயன் என்ன?” என்று ஒரு முகம்மதியர் கேட்டார். எனக்குச் சிறிதாவது புத்தியிருப்பதாக நீ கருதினால், பயனிருப்பதாலேயே பிரார்த்தனை புரிகிறேன் என்று அறிந்துகொள்என்றார் காந்தியடிகள். அந்த முகம்மதியருக்குக் கடவுளிடமோ, பிரார்த்தனையிலோ நம்பிக்கையில்லை என்கிற விஷயம் தமக்குப் பின்னர் தெரியவந்ததாக காந்தியடிகள் கூறினார். எனக்கு உணவு கிடைக்காவிடில் கஷ்டமில்லை. பிரார்த்தனை செய்யாவிடில் பைத்தியம் பிடித்துவிடும்என்பது காந்தியடிகளின் வாக்கு. இன்னும் அவர் சொல்வது, “எனது வாழ்க்கையே பிரார்த்தனைமயமானதுதாம். இதனுடைய இன்பம் இந்த வழியில் சென்று பார்த்தால்தான் தெரியும். புத்தர், ஏசு, முகம்மது ஆகிய மூவரும் பிரார்த்தனையின் மகத்துவத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னால் கடவுளைக் காட்ட இயலாது. கடவுள் அநுபவித்து அறிவதற்குரியவர்; ஆகையால் ஒவ்வொருவரும் தம் சொந்த அனுபவத்தினால்தான் அவரை உணரக்கூடும். பிரார்த்தனையின் மூலமாக அவரை அனுபவித்து அறிகிறோம். கடவுளின் அநுபவம் யாருக்கு வேண்டுமோ, மனச்சாந்தி யாருக்குத் தேவையோ, அவர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும்.
8. கப்பலோட்டும் காந்தி
ராஜபுதானா
6-9-31
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கப்பலின் மாதா கோவிலில் பிரார்த்தனை நடந்தது. காப்டன் காந்தியடிகளை அழைத்திருந்தார். பண்டித்ஜியும், நாங்களும் கூடச் சென்றிருந்தோம். பஜனை, தியானம், பாட்டு எல்லாம் நடைபெற்றன. பண்டித்ஜி கையில் பைபிளை வைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து தியானத்தில் அமர்ந்திருந்த காட்சி விசித்திரமாயிருந்தது. பண்டித்ஜியைக் குருட்டுப் பிடிவாதமுள்ள வைதிகர் என்று கூறுவோர் தெரியாதவர்கள். பண்டித்ஜி அராபிய ஜலம் அருந்தலாம்; மாதா கோவிலில் பிரார்த்தனை செய்யலாம்; ஆயினும் அவர் சிறந்த ஸனாதனியே! ஏனெனில் அவரது இருதயத்தில் பகவான் வாசம் புரிகிறார். ஆனாலும், பண்டித்ஜி பைபிள் தாங்கிய கையுடன் தியானத்தில் அமர்ந்திருந்த அந்தக் காட்சி எளிதில் கிடைக்கக்கூடியதல்ல.
கப்பலின் காப்டன் காந்தியடிகளை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று அவர் கையில் கப்பலோட்டும் சக்கரத்தைத் தந்து கப்பலோட்டச் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர் வேடிக்கையாக, “இந்தியக் கப்பலை காந்தியடிகள் ஓட்டுகிறார்என்று கூறினார்.
சூயஸிலும் போர்ட் ஸெயிதிலும் அராபிய ஜனங்கள் வந்து காந்தியடிகளுக்கு உபசாரம் நடத்துவார்கள் என்று தெரிகிறது. சூயஸில் நுழைந்ததும் குளிர் தொடங்கிவிட்டது. நேற்று வரை உஷ்ணம் தாங்கவில்லை.
9. சூயஸ் கால்வாய்
ராஜபுதானா
7-9-31
சூயஸ் கால்வாயில் நுழைந்ததும் ஒரே அமளிதான். கப்பலில் பிரயாணிகளின் வைத்திய சோதனை நடந்தது. ஆனால் பெயரளவிலேதான். எகிப்திய சர்க்காரின் டாக்டர் வந்திருந்தார். அவர் பிரயாணிகளை வெறுமனே பார்த்துவிட்டு, ‘சரி’, ‘சரிஎன்று போகச் சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் காந்தியடிகளின் கோஷ்டி வந்ததும், டாக்டர் எழுந்து நின்று காந்தியடிகளுடன் கைகுலுக்கிவிட்டு, “எனது இந்தப் புத்தகத்தில் தாங்கள் இரண்டு வார்த்தைகள் எழுதவேண்டும்என்று கேட்டுக்கொண்டார். இவ்வாறு காந்தியடிகளின் வைத்திய சோதனை முடிந்தது. இதன் பின்னர் கப்பலில் எகிப்திய ராஜீயத் தலைவர்களும், பத்திரிகைப் பிரதிநிதிகளும், போட்டோ எடுப்பவர்களும் வந்து குழுமிவிட்டனர். அநேகமாய் எல்லோரும் காந்தியடிகளுடன் கைகுலுக்கி கைகளை முத்தமிட்டனர். கப்பலில் பெருத்த கூட்டம். கப்பல் புறப்படும் நேரம் சமீபிக்கவே மிகவும் சிரமத்துடன் ஜனங்களைக் கரையில் இறக்கிவிட்டார்கள். படம் பிடிப்பவர்கள் தங்கள் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்தனர். ஒரு நிமிஷமாவது காந்தியடிகளைத் தொந்தரவின்றி இருக்கவிடவில்லை.. எந்தப் பக்கம் திரும்பினாலும், தங்கள் காமிராவைத் தூக்கிக்கொண்டு வந்து பாய்கிறார்கள். குறைந்தது 200, 300படங்களாவது பிடித்திருப்பார்கள். லண்டன் டெய்லி டெலிகிராப்பத்திரிகையின் பிரதிநிதியும் வந்திருந்தார். அவரும் பல கேள்விகள் கேட்டார். கடைசியில் கப்பல் கிளம்பிற்று. சில பிரதிநிதிகள் இரவு முழுவதும் எங்களுடன் கப்பலில் யாத்திரை செய்தபின், காலையில் போர்ட் ஸெயிதில் இறங்கினார்கள்.
இரவு பிரார்த்தனையில் பல எகிப்தியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஒரு ஜெர்மானியர் காந்தியடிகளை அஹிம்ஸையைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதன்மேல் காந்தியடிகள் அரை மணிநேரம் வெகு அழகாகப் பேசினார். எகிப்தியர் அதைத் தங்கள் பாஷையில் எழுதிக்கொண்டிருந்தனர். காந்தியடிகள் தூங்குவதற்குப் போகிற வரையில் அவரைப்பற்றிய ஒவ்வொரு செய்தியையும், அவர் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் பற்றிக் குறித்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் எகிப்தின் நிலைமையைப்பற்றிக் கேட்டேன். முன் தடவை நான் அங்கே போய்வந்த பிறகு அவர்கள் சிறிதும் முன்னேறவில்லை என்று தெரிந்தது. உறுதியுள்ள, சுயநலமற்ற தலைவர்களில்லாதது குறை. நஹாஸ் பாஷா, காந்தியடிகளுக்கு அன்பு ததும்பும் தந்தியொன்று அனுப்பியிருக்கிறார்; திரும்புகையில் கெய்ரோவுக்கு விஜயம் செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
காலையில் போர்ட் ஸெயிதிலும் வெகு ஜனங்கள் வந்திருந்தனர். ஷௌகத் அலி முதல் கப்பலில் வந்திறங்கி எகிப்திலும், பாலஸ்தீனத்திலும் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். அவரும் எங்கள் கப்பலில் இன்று வந்து ஏறிவிட்டார். அவர் முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் ஐக்யபத்ய இயக்கத்தைப் பிரசாரம் செய்யச் சென்றிருந்ததாகக் கேள்வி. இவருக்கு எங்கும் வரவேற்புக் கிடைக்கவில்லை என்று எகிப்தியர் கூறினர். நஹாஸ் பாஷா சிறிது கடுமையாகவே பேசிவிட்டதாகவும் கேள்வி. இங்குள்ள முஸல்மான்கள் தேசப்பற்றுள்ளவர்கள்; மதவெறி கொண்டவர்கள் அல்ல; ஆகையால் மௌலானா ஸாஹிப்பின் கைவரிசை இங்கே ஒன்றும் செல்லவில்லை.
இவ்விடத்துப் பத்திரிகை ஒன்றில் பண்டித்ஜியைப்பற்றி வேடிக்கையான செய்திகள் பிரசுரமாகியிருக்கின்றன. அவர் ஒரு பானை நிறையச் சோறு கொண்டுவந்திருக்கிறாராம். அதிலிருந்து தினமும் சிறிது எடுத்து உருட்டி வைத்துப் பூஜை செய்கிறாராம்! அவர் குடிப்பதற்காக கங்கை ஜலம் அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறதாம். இதற்காக மொத்தச் செலவு ரூ. 15,000ஆகிறதாம். இதற்கு அவரது பணக்கார நண்பர் ஒருவர் பணம் கொடுக்கிறாராம்!
சூயஸின் கரையோரத்தில் சிற்சில இடங்களில் அராபியர்கள் கூடி நின்று, கோஷம் செய்து, காந்தியடிகளை வரவேற்றுக்கொண்டிருந்தனர்.
போர்ட் ஸெயிதில் ஜனங்கள் காந்தியடிகளுக்காகப் புஷ்பங்களும், பழங்களும் கொண்டுவந்தனர்; புதிய மாம்பழங்களும், பேரீச்சம் பழமும் இருந்தன. மாம்பழங்கள் நமது ஊர் பழங்களைப் போல் ருசியாயில்லை; திராக்ஷை பழம் பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருந்தது; தின்பதற்கும் ருசியாயிருக்கலாம்.
10. மனம் சுத்தமில்லை
ராஜபுதானா
9-9-31
இப்பொழுதுதான் மௌலானா என்னோடு பேசிவிட்டுப் போனார். உடம்பு சௌக்கியமா?” என்றேன். உயிர் வைத்துக்கொண்டிருக்கிறேன்என்றார். நீங்கள் வந்தது நமது அதிர்ஷ்டம். லண்டன் போகுமுன் இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள்; இல்லையேல் இரு ஜாதிகளும் அழிந்துபோம்என்றேன். மௌலானா, “இது மிகச்சிறிய விஷயம்; எல்லாம் காந்தியடிகளின் கையில் இருக்கிறதுஎன்றார். நான், “எல்லாம் உங்கள் கையில் இருக்கிறது. நவாப் ஸாஹிபும் இருக்கிறார். அன்ஸாரியையும் அழைத்துக்கொள்ளுங்கள். எல்லோரும் கூடி அமர்ந்து ஒரு முடிவு செய்துகொள்ளுங்கள்என்றேன். ஆனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
போபால் நவாப் மீண்டும் காந்தியடிகளை அழைத்தார். ஷௌகத் அலியும் இருந்தார். நான்கு மணிநேரம் பேச்சு நடைபெற்றது; பயனொன்றுமில்லை. நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொண்டால், லண்டனில் தேசீயக் கோரிக்கைகள் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்வீர்கள்?''என்று காந்தியடிகள் கேட்டார். ஷௌகத் அலி, “நான் சர்க்கார் பக்கந்தான் இருப்பேன்என்றார்.
மறுநாள் போபால் நவாப் மாளவியாஜியையும் அழைத்தார். வட்டமேஜை மகாநாட்டில் மாளவியாஜியின் போக்கு எவ்வாறிருக்குமென்பதைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. பண்டித்ஜி, “வாழ்வா, சாவா என்ற மிக்க முக்கியமான பிரச்னை. கிடைத்ததைப் பற்றிக்கொண்டு போவதற்காக நான் லண்டன் வரவில்லை. எந்நிலையிலும் காந்தியடிகளைக் கைவிடப்போவதில்லைஎன்றார். அப்படியானால், மேலே பேசுவதில் பயனில்லைஎன்றார் நவாப். நடப்பது நடக்கட்டும்என்று பதிலளித்தார் பண்டித்ஜி.
லண்டனிலிருந்து ஆண்டுரூஸின் தந்தி வந்திருக்கிறது. லண்டனுக்கு 80மைல் தூரத்திலுள்ள போக்ஸ்டன்என்ற நகரில் காந்தியடிகள் இறங்கி, ரயிலில் வராமல், மோட்டாரில் லண்டன் வந்து சேர்வது நலமென்று சர்க்கார் கருதுவதாகத் தெரிவித்திருக்கிறார். எனக்கு எவ்வித ஆக்ஷேபமுமில்லைஎன்று காந்தியடிகள் தந்தி அனுப்பிவிட்டார். லண்டனில் காந்திஜியை வரவேற்க பெருத்த கூட்டம் கூடலாம். இத்தகைய வரவேற்பை சர்க்கார் விரும்பவில்லை. அதனாலேயே இந்த யுக்தி செய்யப்பட்டிருக்கிறது.
13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காந்தியடிகள் பிரதம மந்திரி முதலிய பிரமுகர்களைச் சந்திக்க வேண்டுமென்று, ஸப்ரூவினிடமிருந்து தந்தி வந்திருக்கிறது.
அன்றிரவே நான் எனது வேலையை முடித்துக்கொண்டு, அவசியமானால் மறு கப்பலிலேயே திரும்பிவிடுவேன்என்று காந்தியடிகள் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கு வரவேற்பு கூடாதென்பதற்காகவே மோட்டாரில் அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கே, மனம் சுத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கடல் கடந்த காந்தி - 3 | ஜி. டி. பிர்லா

$
0
0

ஸ்ரீ மஹாதேவ தேசாய், ஸ்ரீ கனச்யாம தாஸ் பிர்லா, ஸ்ரீ தேவதாஸ் காந்தி
11. நிருபர் சரடுகள்
ரயிலில்
11-9-31
இன்று காலையில் மார்ஸேல்ஸ்வந்தோம். இங்கும் பழைய கதைதான். நூற்றுக்கணக்கில் புகைப்படம் பிடிப்பவர்களும், கணக்கற்ற பத்திரிகை நிருபர்களும் தயாராயிருந்தனர். கப்பலுக்கு வர அவர்களுக்கு அனுமதியில்லை. ஆயினும் நல்ல கூட்டம். லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, நார்வே ஆகிய இடங்களின் பத்திரிகைப் பிரதிநிதிகள் அநேகம் பேர் வந்திருந்தார்கள். எல்லாரும் விதம் விதமாகக் கேள்விகள் கேட்டனர். லண்டனிலிருந்து வந்தவர்கள் ஏதாவது இடுக்குக் கிடைக்குமா என்று பார்ப்பதற்கே வந்தவர்கள்; அவர்கள் பொய்யும் புளுகுமாகச் செய்திகளைப் புனைந்து அனுப்புகிறார்கள். எகிப்திலிருந்து ஒரு சேனை அதிகாரி காந்தியடிகளுக்கு ஒரு சட்டை அனுப்பி அதை அணியும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். காந்தியடிகள் அதை வைத்துக்கொண்டிருக்கிறார்.
பதினோரு மணிக்கு காந்திஜி கப்பலிலிருந்து இறங்கி, பிரெஞ்சு மாணவர்களுடைய கூட்டம் ஒன்றுக்குச் சென்றார். வழியில் வண்டி நின்றவிடமெல்லாம் ஜனங்கள் கூட்டம் கூடி காந்தி வாழ்கஎன்று கோஷித்தனர். காந்தியடிகளைப் பார்க்கவேண்டுமென்று எல்லோருக்கும் மிகுந்த ஆசை. கூட்டத்தில் அதிக ஜனங்களில்லை; ஏனெனில் அனுமதிச்சீட்டில்லாமல் கூட்டத்திற்கு வரக்கூடாது. ஆனால் வெளியில் திரளான ஜனங்கள் நின்றனர். இங்கு நடைபெறும் பொதுக் காரியங்களிலெல்லாம், படம் பிடிப்பவர்கள், பத்திரிகைக்காரர்கள் மிகுதியாக இருக்கிறார்கள். தினமும் சராசரி இருநூறு தடவையாவது காந்தியடிகளைப் படம் பிடிக்கிறார்களென்று கூறலாம். பத்திரிகை நிருபர் சுமார் பத்துப் பதினைந்து பேராவது காந்திஜியிடம் செய்தி வாங்கிக்கொண்டு போகிறார்கள்.
பத்திரிகைகளெல்லாம் இங்கு வியாபார முறையில் நடக்கின்றன. நிருபர்கள் உண்மைச் செய்திகளையே அனுப்புகிறார்களென்பதில்லை. பொய் எல்லோருந்தான் எழுதுகிறார்கள். சிநேகபாவமுள்ளவர்கள் புகழ்ந்து கயிறு திரிக்கிறார்கள். உதாரணமாக, ஒரு அமெரிக்கப் பத்திரிகை நிருபர் திரித்த சரடைக் குறிப்பிடலாம். காந்தியடிகள் ரொம்பவும் தயாளு; இதனால் அக்கம் பக்கத்திலுள்ள பூனைகளைத் தம்மோடு படுக்கையில் படுக்கவைத்துக்கொண்டு தூங்குகிறார்என்று அவர் எழுதியிருந்தார். விரோத பாவங்கொண்ட ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்காரனோ, “காந்தி போகுமிடமெல்லாம் ஆங்கிலேயரைத் திட்டுகிறார். இதுவரை அவருக்கு எங்கும் மரியாதை கிட்டவில்லை; ஆகையால் அவர் முகத்தில் ஈயாடவில்லை. ஒரே கோபமாயிருக்கிறார். விதேசித் துணிகளைத்தான் அவர் அணிந்துகொள்கிறார்; வெளியிற் காட்டுவதற்கு மட்டுமே சுதேசித் துணி வைத்திருக்கிறார்என்றெல்லாம் எழுதித் தீர்த்துவிட்டான். இந்தப் பத்திரிகைக்காரன் ஸபர்மதி ஆசிரமத்தில் சில தினங்கள் தங்கியிருந்தவன். அங்கு இவன் காய்ச்சலாகக் கிடந்த பொழுது காந்தியடிகளே இவனுக்கு சேவை புரிந்தார். மார்ஸேல்ஸிலிருந்து புறப்படும் பொழுது பத்துப்பன்னிரண்டு பத்திரிகைக்காரர்கள் வண்டியில் வந்து உட்கார்ந்துகொண்டனர்; அவர்களில் இவனும் ஒருவன். காந்தியடிகள் இவனைத் தம் பக்கத்தில் அழைத்து நன்றாகக் கண்டித்தார். அவன் வெதிர்வெதிர்த்துப்போனான். ஆனால் தன் பழக்கத்தை எங்கே விட்டிருக்கப்போகிறான்?
12. மக்களின் வரவேற்பு
லண்டன்
12-9-31
வண்டி காலை ஆறுமணிக்குப் பாரிஸை அடைந்தது. அங்கும் அதே கூட்டம்; அதே படம் பிடிப்பவர்கள்; அதே நிருபர்கள்.
பதினோரு மணிக்கு வண்டி பூலோன் சேர்ந்தது. இங்கிருந்து இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து ஒரு மணிக்கு நாங்கள் போக்ஸ்டன் சேர்ந்தோம். போக்ஸ்டனிலும் நல்ல கூட்டம். போலீஸ் பந்தோபஸ்தின் காரணமாக ஒருவரும் கப்பலுக்கு வரமுடியவில்லை. இங்கு இரண்டு சர்க்கார் வண்டிகள் வந்திருந்தன. ஒன்றில் காந்தியடிகள் அமர்ந்தார். மற்றதில் மாளவியாஜியும், நானும் உட்கார்ந்தோம். போலீஸின் யுக்தியினால் முதலிலிருந்தே இரு வண்டிகளும் பிரிந்து வேறு வேறு வழிகளில் சென்றன. லண்டன் அருகில் சென்றதும் பண்டித்ஜி வண்டிக்காரனிடம், “எனக்குக் கைகால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்; முதலில் ஆரியபவனத்திற்குக் கொண்டுபோஎன்றார். அதற்கு, டிரைவர், “மகாநாட்டு மாளிகைக்கு நேரே கொண்டுபோகும்படி எனக்கு உத்தரவு. வழியில் வேண்டுமானால் எங்காவது இறங்கிப்போய்விட்டு வாருங்கள்; ஆரியபவனம் போக முடியாதுஎன்றான். ஆகவே நாங்கள் கைதிகள் என்றே எனக்குப் புலப்பட்டது. எங்களுக்குக் கிடைத்த இந்த வரவேற்பிலிருந்து இனி கிடைக்கப்போகிற சுயராஜ்யும் எப்படியிருக்குமென்று கற்பனை செய்துகொள்ளலாமல்லவா? காந்தியடிகள் ரயிலில் வரவில்லையென்பது தெரிந்திருந்தும் விக்டோரியா ஸ்டேஷனில் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் கூடியிருந்தனராம். மழை பெய்துகொண்டிருந்தபோதிலும் ஆயிரமாயிரம் மக்கள் மகாநாட்டு மாளிகையின் முன்னால் காந்தியடிகளின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
இங்கிலாந்து தேசமென்பது ஒன்றல்ல என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏழை எளியவர்கள், சாதாரண ஜனங்கள் - இவர்களடங்கிய இங்கிலாந்து ஒன்று. இந்த தரித்திர நாராயண இங்கிலாந்துக்கு இந்தியாவிடம் துவேஷமில்லை; இங்கே அதற்கு யாதொரு செல்வாக்குமில்லை. மற்றொரு இங்கிலாந்து பிரபுக்களுடையது; அவர்கள் கையில்தான் அதிகாரமிருக்கிறது; சக்தியுமிருக்கிறது. இவர்களில் பத்துப்பேர் இந்தியாவுக்கு சுயராஜ்யம் தர விரும்பினால் நமக்குச் சுயராஜ்யம் கிடைத்துவிடும். ஹுர்ரே! ஹுர்ரே!ஒன்ற கோஷத்துடன் காந்தியடிகளை வரவேற்பவர்கள் ஆயிரக்கணக்கானவர்களானபோதிலும் அவர்கள் சக்தியற்ற நொண்டிகள். இங்கே ராஜாங்கம் பிரபுக்களின் கையிலேதான் இருக்கிறது. தொழிற்கட்சிஎன்பது பெயரளவில்தான், ‘தொழிலாளி சர்க்கார்நடந்ததும் பெயருக்குத்தான். தொழிலாளி சர்க்கார் சிறிது வாலையாட்டியதும், முதலாளிகள் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்; மாக்டோனால்டுக்குப் புத்தி வந்தது.
எனவே, இங்கே காந்தியடிகளுக்கு ஏழைகளின் வரவேற்பில் ஒன்றும் குறைவு கிடையாது; ஆனால் பணப்பைகளின் போக்குத்தான் சரியாயில்லை.
மகாநாட்டு மாளிகையில் 1500பேர் கூடியிருந்தனர்; அவர்களில் சுமார் 600பேர் இந்தியர்கள். வரவேற்புப் பிரசங்கம் செய்தவர் நன்றாய்ப் பேசினார். காந்தியடிகளின் பிரசங்கமோ அபூர்வமாயிருந்தது. கேட்டோர் மெய்மறந்தனர். அவ்வளவு தொப்பியணிந்த தலைகளினிடையில் கம்பளி போர்த்திய உடலுடன் அமர்ந்தபடியே காந்தியடிகள் பேசினது, ஏசுநாதரே ஆங்கிலேயர் முன் வந்து உபதேசிப்பது போலிருந்தது. காந்தியடிகள், “உங்களுடைய அரசாங்கம் தற்பொழுது வரவுசெலவுக் கணக்கை சரிக்கட்டுவதில் முனைந்திருக்கிறது. ஆகையால் மிகவும் சிந்தனையிலாழ்ந்திருக்கிறது. ஆனால் எங்களது கணக்கையும் நேர்செய்யாத வரையில், நீங்கள் செய்வதொன்றும் பயன்படாது. நான் தேசபக்தன், ஆனால் எனது தேசபக்தி எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்பிக்கிறது; நான் எல்லோரது நன்மையையும் கோருகிறேன்என்று சொன்னதும் பிரமாதமான கரகோஷம் எழுந்தது.
வரவேற்பு முடிந்தபின், காந்தியடிகள் தொழிலாளர் வசிக்கும் பாகத்திலிருந்த தமது ஜாகைக்குச் சென்றார். பண்டித்ஜி ஆரியபவனத்திற்கு வந்தார். மாளிகையிலிருந்து கிளம்பியதும் பண்டித்ஜி தழதழத்த குரலில், “காந்தியடிகளின் தேக நிலையைப் பற்றி எனக்குக் கவலையாயிருக்கிறது. அவர் தேவையான துணி உடுத்துவதில்லை. ஒன்றும் ஏற்படாதிருக்க வேண்டும். வியாதியோ, மரணமோ எது வந்தாலும் எனக்கு வரட்டும், பகவானேஎன்று வேண்டிக்கொண்டேயிருக்கிறேன்!என்றார். நான், “பண்டித்ஜி, தாங்கள் தங்களுடைய கவலையைப் பட்டாலே போதும்; அவரைப் பற்றிக் கவலை வேண்டாம்என்றேன். பண்டித்ஜி பம்பாயிலிருந்து புறப்பட்ட பிறகு மிகவும் இளைத்துவிட்டார்; சோர்வும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இவரது உடல்நிலையைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாயிருக்கிறது.
13. நாடிப் பரீக்ஷை
லண்டன்
13-9-31
காந்தியடிகளின் ஜாகை சிறியது; ஓய்வெடுத்துக்கொள்வதற்குப் போதிய வசதியில்லை; ஆனால் அங்குள்ளவர்கள் அன்போடு சேவை புரிந்துவருகின்றனர், கூலியில்லாச் சேவகர்கள்! பத்திரிகைக்காரர்கள் இலவசமாகப் பத்திரிகைகள் கொடுத்துப்போகிறார்கள். ஜனங்கள் நூற்றுக்கணக்கில் வீட்டெதிரில் நின்றுகொண்டு ஜயகோஷம் செய்தவண்ணமாய் இருக்கிறார்கள்.
இன்றிரவு பிரதம மந்திரியுடன் பேச்சு நடைபெறும்; நாடி எப்படி இருக்கிறதென்று நாளைக்குள் புலப்படலாம்.

கடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா

$
0
0
காந்திஜி, ஸ்ரீ கனச்யாம தாஸ் பிர்லா,  ஸர் பிர்பாசங்கர் பட்டானி
14. ஏகப் பிரதிநிதி
லண்டன்
15-9-31
இன்று மாலை போஜனத்திற்குப்பின் நாங்கள் கிங்ஸ்வே ஹாலைஅடைந்தோம். நான் முக்கியமாய் மூன்று விஷயங்களைக் குறித்து காந்தியடிகளின் கருத்தை அறிய விரும்பினேன். முதலாவது, இங்கிருந்து வேறு இடத்திற்குப் போகும் எண்ணம் இப்பொழுது உண்டா என்பது. இடம் மாற்றுவதற்கு பாபு சிறிது சம்மதம் உள்ளவர் போல் தெரிகிறது என்றும், ஆரிய பவனத்தில் தங்க ஒத்துக்கொள்ளலாமென்றும் நேற்று தேவதாஸ் டெலிபோனில் சொன்னார். கிங்ஸ்வே ஹால்போவது வருவது சுலபமல்ல. இங்குள்ள இந்தியர்களும், காந்தியடிகளுக்கும் தங்களுக்குமிடையில் இவ்வளவு தூரம் இருப்பதை விரும்பவில்லை. இடம் மாற்ற வேண்டுமென்பவர்கள், இன்னும் அழுத்தமான காரணங்களும் கூறுகிறார்கள். கிங்ஸ்வே ஹால்ஒரு பொது ஸ்தாபனம்; அங்கே காந்தியடிகள் தாமதிப்பதால் அவ்விடத்திய காரியங்கள் தடைப்படுகின்றன. அன்று டெலிபோன்காரன் தனக்கு மூச்சுவிடவும் நேரமில்லை என்று மெதுவாகக் குறை கூறினான். உள்ள ஆட்கள் குறைவு; அவர்களுக்கு இருக்கும் காரியத்தின் பளு பெரிது. நான் அன்று இந்த ஸ்தாபனத்தை நடத்தும் மிஸ் லெஸ்டரிடம் பேசினேன். மற்றவர்களிடமும், நாங்கள் உதவி செய்யக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினேன். லெஸ்டரோ, “எங்களுக்கு யாதொரு கஷ்டமோ அசௌகரியமோ இல்லை; இருந்தால் சொல்வதற்கு சங்கோசப்படமாட்டோம்என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். காந்தியடிகளுக்கு இவ்வளவே போதுமானது. அவரிடம் வேறு காரணங்களையும் எடுத்துச் சொன்னோம். லெஸ்டருக்குத் தங்களிடம் மிகுந்த பக்தி உண்டு; ஆனால் இந்திய ராஜீய இயக்கத்தில் அவருக்குப் பூரண அநுதாபமில்லை. மேலும் லெஸ்டரைப்போல் இந்த ஸ்தாபனத்தில் எல்லா டிரஸ்டிகளுக்கும் தங்களிடம் அன்பு கிடையாதுஎன்றெல்லாம் சொல்லிப் பார்த்தோம். ஆனால் இந்த வாதங்களினாலெல்லாம் காந்தியடிகளை அசைக்க முடியவில்லை. இன்று நான் கேட்ட பொழுது அவர் சொன்னதாவது:
மறுபடியும் இன்றைக்கு இவ்விஷயமாக எனக்கும் மிஸ் லெஸ்டருக்கும் பேச்சு நடந்தது. நான் இங்கு தங்குவதால் அவருடைய ஸ்தாபனத்திற்கு ஏதாவது நஷ்டமுண்டாகுமென்றாலும் வேறு ஏதாவது கஷ்டமிருந்தாலும் என்னிடம் ஒளிவு மறைவின்றிச் சொல்லவேண்டுமென்றும், இதில் ஒன்றும் சங்கோசமே வேண்டியதில்லை என்றும் தெரிவித்தேன். மிஸ் லெஸ்டர் நீங்கள் இங்கிருப்பதால் எங்களுக்குக் கஷ்டமோ நஷ்டமோ இல்லையென்பது மட்டுமல்ல; எங்களுக்கு லாபமே உண்டாகியிருக்கிறது. எங்களிடம் விரோதம் பாராட்டிவந்த சிலரும் இப்போது இங்கு வரவும் உதவி செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள்என்று உறுதி கூறினார். எனக்கு லெஸ்டரின் வார்த்தையில் நம்பிக்கையுண்டு. ஆகையால் நான் வேறு எங்கும் போக விரும்பவில்லைஎன்றார்.
இது ஏழைகள் வசிக்குமிடம். இங்கிருக்கும் ஏழை மக்களுக்கு காந்தியடிகளிடத்தில் அன்பு ததும்புகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் தரித்ர நாராயண உபாசகரான காந்தியடிகள் இந்த ஏழை மக்களை விட்டுப் பிரிய யாதொரு காரணத்தையும் காணக்கூடவில்லை.
மீராபென்னும் லெஸ்டரும் ஒருவர் மற்றவரிடமிருந்து விலகியே இருக்கின்றனர். இதைப்பற்றிப் பேச்செழுந்த பொழுது காந்தியடிகள், “இதில் நான் மீராபென் பேரில்தான் குற்றமென்பேன். மீராபென்னின் மனதில் நான் செய்திருக்கும் அளவு இவர்களும் ஏன் தியாகம் செய்யவில்லை?’ என்ற எண்ணமிருக்கிறது. ஒருவரும் தனது தியாகம் அல்லது தவத்தைக் குறித்து கர்வம் கொள்ளலாகாது. என்னால் ஆன அளவிற்கு நான் செய்கிறேன்; மற்றொருவர் அவ்வளவு செய்யக் கூடவில்லையாயின் நான் ஏன் அவரிடம் கோபம் கொள்ள வேண்டும்? தியாக மார்க்கத்தில் செல்பவனுக்கு முதலில் கர்வமுண்டாகும். எனக்கும் ஒரு காலத்தில் உண்டானதுண்டு. ஆனால் சீக்கிரத்தில் சமாளித்துக்கொண்டேன்என்றார்.
லெஸ்டர் தமது ஸ்தாபனத்தை விளம்பரப்படுத்தவே காந்தியடிகளைத் தம் விருந்தினராக்க விரும்பினார் என்ற ஊர் வம்பும் காந்தியடிகளின் காதுக்கு எட்டிவிட்டது. இதைப்பற்றி அவர், “லெஸ்டர் அவ்வாறு விரும்பி, அவரது ஸ்தாபனத்திற்கு விளம்பரம் ஏற்படுவதானால் அதில் என்ன தவறு இருக்கிறது? அவரும், அவரது ஸ்தாபனமும் கொண்டுள்ள விரதம் ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்வதுதானே?” என்று கேட்டார்.
நான் கேட்க விரும்பிய இரண்டாவது விஷயம் சுருக்கெழுத்துக்காரனைப் பற்றியது. சுருக்கெழுத்துக்காரனை எப்பொழுது அனுப்பட்டும்?” என்று கேட்டேன். அதற்கு காந்தியடிகள், “இப்பொழுது ஒரு அவசியமுமில்லை. எழுதவும் எழுதச் சொல்லவும் எங்கே அவகாசமிருக்கிறது? ‘வியாசம்என்று எழுதப்பட்டு என் முன் வருவதெல்லாவற்றையும் நான் பாஸ்செய்து அனுப்பிக்கொண்டிருக்கிறேன். மஹாதேவின் பாஷை எனக்கு ஒத்துவந்துவிட்டது. அவருடைய கையெழுத்தும் நன்றாயிருக்கிறது. பியாரிலால் அவ்வளவு போதாதுதான். அவருடைய கையெழுத்து ரொம்ப மோசம்; நடையும் அவ்வளவு திருப்திகரமாயில்லை. நல்ல வித்வான்தான்; ஆனால் பாஷையும், நடையும் ஒரு மாதிரியாயிருப்பதில்லை. மனதை விஷயத்தில் பூரணமாய்ச் செலுத்தி எழுதத் தொடங்கினால் நன்றாக இருக்கிறது; இல்லாவிட்டால் குற்றங்கள் வந்துவிடுகின்றனஎன்றார்.
மகாநாட்டிற்கு காந்தியடிகள் போய்வருவதற்கு மோட்டார் வசதி தேவையென்பதாகச் சொன்னார்கள். காந்தியடிகளை விசாரித்ததில் இந்தச் செய்தியும் தவறென்று தெரியவந்தது. இந்திய டாக்டர் ஒருவர், காந்தியடிகளை அழைத்துப்போய்வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். நேற்று அவருடைய மோட்டார் வந்து வாசலில் நின்றுகொண்டிருந்தும் காந்தியடிகள் தவறாக வேறு வாசல் வழியாகப் போய்விட்டார். வாடகை மோட்டார் வைத்துக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது. பின்னர், டாக்டருடைய வண்டி வந்திருந்த செய்தி கேட்டு காந்தியடிகள் மிகவும் வருந்தினார். என் மௌன தினமாகையால் நன்றாக விசாரிக்க முடியவில்லை; வண்டி எங்கிருக்கிறது என்று மஹாதேவிடமும் தெரிந்துகொள்ளக்கூடவில்லைஎன்றார். ஒரு சல்லிக் காசும் வீண் செலவு ஆகக்கூடாதென்று காந்தியடிகள் வெகு ஜாக்கிரதையாயிருக்கிறார். வாடகை மோட்டார் விஷயத்திலும் கொஞ்சம் மிச்சப்படுத்திவிட்டார். மாளவியாஜிக்கும் வண்டி வேண்டியதாயிருந்தது. அவருக்குத் தனி வண்டி வைக்க வேண்டாமென்று தம் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் ஆரிய பவனில் இறக்கிவிட்டு வந்தார். இனிமேல் வாடகை வண்டியே கூடாது என்று கண்டிப்பாய்ச் சொன்னார்.
அப்படியானால் நான் கேள்விப்பட்ட மூன்று செய்திகளும் பொய்யா?” என்று கேட்டேன்.
காந்தியடிகள், “முழுப்பொய்!என்றார்.
மூன்றும் பத்திரிகைச் செய்திகள் போலும்!என்றேன் நான்.
காந்தியடிகள் கொல்லெனச் சிரித்தார்.
***
இன்றைய மகாநாட்டுக் கூட்டத்தில் காந்தியடிகள் செய்த உபந்நியாசத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தது. எல்லோரும் அதை வாயாரப் புகழ்கின்றனர்; அது என்றும் அழியாத சரித்திரப் பிரசித்தி பெறப்போகிற சொற்பொழிவு என்கிறார்கள். கூட்டத்திற்குப் போகுமுன் காந்தியடிகள் இந்தியா மந்திரியைச் சந்தித்தார். அவர் நல்ல நோக்கம் கொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டார். தாம் பிரிட்டிஷ் ஆட்சி முறையில் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தது போய், எவ்வாறு அவ்வாட்சி முறையின் கொடிய விரோதியானார் என்ற விவரத்தை இந்தியா மந்திரியிடம் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார்.
ஒரு காலத்தில் உங்கள் ஆட்சியை எனது நாட்டிற்கு நன்மை செய்யக்கூடியதென்று நம்பி அது நீடூழி வாழவேண்டுமென்று விரும்பினேன். உலகில் வேறெந்த மனிதனும் என்னைப்போல் சுயநலமின்றி, தூய மனதுடன் உங்களுக்கு உதவியிருக்கமாட்டான். நண்பனாயிருந்தவன் சத்துருவானதற்கும், வேருக்குத் தண்ணீர் வார்க்காமல் வேரையே களைந்தெறிவதில் முனைந்து நிற்பதற்கும் என்ன காரணம்?” என்று காந்திஜி கேட்டார்.
ஹோர்:- மஹாத்மாஜி, எனது பிறப்பு வளர்ப்பு வேறு மாதிரியாயிருப்பதால் என் கருத்தும் வேறு விதமாயிருக்கிறது. எனது படிப்பும் பயிற்சியும் என் ஜாதியார் இந்தியாவில் செய்திருக்கும் செயல்களைக் குறித்து என்னை கர்வமடையக் கற்பிக்கின்றன.
காந்தியடிகள்:- உங்களுக்கு கர்வம் இருக்கலாம்; ஆனால் அது தவறு. இந்தியாவின் தற்போதைய நிலைமையும், நாளுக்கு நாள் அது அடைந்துவரும் சீர்கேடும் உங்களுக்கு கர்வத்தையல்ல, வெட்கத்தைத் தரவேண்டும். பல வருஷங்களாக எனக்கு என் நாட்டு மக்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்துவருகிறது. கிராமங்களில் சுற்றுதல், கிராம ஜனங்களுடன் நெருங்கிப் பழகுதல், அவர்களுடைய கஷ்டங்களை ஆராய்ந்து அறிந்துகொள்ளல், அவர்களுடைய சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ளல்- இவைகளில் உங்களுடைய உத்தியோகஸ்தர் எவரும் என்னை மிஞ்ச முடியாது. எனது நாட்டு மக்கள் நேற்று எப்படி இருந்தனர், இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை என் கண்களால் பார்த்திருக்கிறேன். உங்கள் மூலமாய் என்னுடைய தேசம் க்ஷேமம் அடையப்போவதில்லை என்பது நிச்சயம்; எத்தனையோ கசப்பான அனுபவங்களின் பயனாகவே இந்த முடிவுக்கு வந்தேன்.
ஹோர்:- இப்பொழுதுதானே நமக்குள் சமாதான முயற்சி ஆரம்பித்திருக்கிறது? இது முடிவதற்குள் உங்களுடன் எத்தனையோ விஷயங்கள் பேசியாகவேண்டும்.
காந்தியடிகள் உடனே மகாநாட்டிற்குச் சென்று உபந்நியாசம் செய்யவேண்டியிருந்தது. ஆகவே ஹோர், “உங்களுக்கு இன்று நான் சிரமம் கொடுக்க விரும்பவில்லை. ஆயினும் கூடிய சீக்கிரத்தில் உங்களைப் பார்க்கவேண்டியதும் அவசியமாயிருந்ததுஎன்றார். பிறகு, அவர் தங்கியிருக்கும் இடத்தைப்பற்றி விசாரித்தார். ஏழை சகோதரர்களிடையே சௌக்கியமாயிருக்கிறேன்''என்று பதில் தந்தார் காந்தியடிகள். ஹோர், “இங்கிலாந்தின் உண்மை மக்களின் வாழ்க்கை ஏழைகளின் வாழ்க்கையேஎன்றார். அவருடைய பேச்சின் தோரணையைக் கண்டு காந்தியடிகளுக்குத் திருப்தியுண்டாயிற்று. காந்திஜி சொன்னதாவது:- ஹோர் அதிகாரத் திமிரில் வெட்டொன்று, துண்டிரண்டுஎன்று பேசவுமில்லை; தலைசுற்றும்படி ராஜதந்திர முறையிலும் பேசவில்லை. நான், ‘என் மனதிலுள்ளதை மறைத்துப் பேச முயலுவேனென்று மட்டும் என்னிடம் எதிர்பாராதீர்கள். ஆனால் சமாதானம் செய்துகொள்வதற்கு எல்லா முயற்சிகளும் நான் செய்தேனென்று உங்களிடம் நற்சாட்சிப் பத்திரம் பெற விரும்புகிறேன்என்று சொன்னேன். அவர் நானும் தங்களிடம் அதேமாதிரி நற்சாட்சிப் பத்திரம் பெற ஆசைகொண்டிருக்கிறேன்என்றார்.
நான்:- அப்படியானால் ஹோருடன் நடந்த உங்கள் சம்பாஷணையை நம்பிக்கை தரக்கூடியதென்று நினைக்கலாமா?
காந்தியடிகள்:- (தலையை அசைத்துக் கொண்டு) இல்லை, இல்லை. ஆனால் அவர் இவ்வளவு தூரம் உள்ளத்தைத் திறந்து என்னுடன் பேசுவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஸாங்கி பிரபுவையும் ஹோரையும் ஒப்பிட்டுப் பேசினோம். காந்தியடிகள், “அவர் மனதிலும் எனது வார்த்தைகள் நன்கு பதிந்தன. ஆனால் அவர் ஹோரைவிட அதிக சாமர்த்தியமும், பெருமிதமும் உள்ளவர்; அவருடைய வார்த்தைகளிலிருந்து அவருடைய மனதை அறிதல் கடினம்என்றார். காந்தியடிகள் ஸாங்கிக்கு நல்ல சூடு கொடுத்தார். அவர் சமஸ்தானாதிபதிகளைப்பற்றிப் பேச்சு எடுக்கவே காந்தியடிகள், “உங்களுக்கு உண்மை தெரியாதா? மகாநாட்டில் சர்க்கார் சொல்வதே சரியென்று சொல்லுவோரே நிரம்பியிருக்கிறார்கள் என்பதை அறியீர்களா? எந்த மன்னர்களைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அவர்களெல்லாம் சர்க்கார் சொல்லுகிறபடி ஆடுகிறவர்களென்பதும் சொல்லவேண்டுமா? நான் அவர்களுக்கோ, அவர்களுடைய வார்த்தைகளுக்கோ மதிப்பு அளிக்கமாட்டேன்; உண்மை என்னவென்று உங்களுக்கும் தெரியும்என்றார். ஸாங்கியினால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
காந்தியடிகளின் செல்வாக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது. அவருடைய ஜோதியினால் விரோதிகளின் கண்கள் கூசத் தொடங்கிவிட்டன. மகாநாட்டில் ரீடிங் பிரபு அவர் இருந்த இடத்தைத் தாண்டி இரண்டு மூன்று முறை வர நேர்ந்தது; அவர் எழுந்து நின்று காந்திஜியுடன் தனியாகப் பேசவேண்டுமென்று தெரிவித்துக்கொண்டார்.
சர்ச்சில் நேரில் வந்து இன்னும் சந்திக்கவில்லை; தம் மகனை அனுப்பி வைத்தார். பத்திரிகைகள் அவரைக் கேலி செய்யத் தொடங்கிவிட்டன. ஸ்டார்பத்திரிகை, “நீர் பெரிய வீராதிவீரராயிற்றே! சிங்கங்களை எதிர்ப்பவராயிற்றே! காந்தி உம்மைப் பார்ப்பதற்குத் தயாராயிருக்கும் பொழுது நீர் ஏன் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடுகிறீர்?” என்று எழுதியிருக்கிறது. மகனும் தந்தையைப்போலவே மேதாவிதான்; அபிப்பிராயங்களும் ஒரே மாதிரி. மகாநாட்டினால் ஒன்றும் பயனேற்படாவிடில்- சமாதானமாகாவிடில்- என்ன செய்வீர்கள்?” என்று அவர் கேட்டார். காந்தியடிகள் சத்தியாக்கிரகம்என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார். அதற்கு வியாக்யானம் செய்வதுபோல், “சென்ற தடவையைக் காட்டிலும் மிகவும் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க நாங்கள் தயாராயிருக்க வேண்டிவரும்என்றார். மேன் என்பவர் எழுதிய புராதன கிராம ஸ்தாபனங்கள்என்ற புத்தகத்தைப் படிக்கும்படி அவருக்குச் சொன்னார். அதிலிருந்து இந்தியர்களிடம் சுயராஜ்யம் நடத்தும் சக்தி எவ்வளவு இருந்தது, இப்பொழுது எவ்வளவிருக்கிறது என்ற விஷயங்கள் தெரியுமென்று கூறினார். சர்ச்சிலுடைய புதல்வர் தம் தகப்பனாரிடம் எல்லா விஷயங்களையும் தெரிவிப்பதாகச் சொன்னார். சர்ச்சில் மனதில் காந்திஜியின் வார்த்தைகள் பதியுமென்றோ, இவரைச் சந்திப்பதனால் அவர் தமது வழியை மாற்றிக்கொள்வாரென்றோ எதிர்பார்ப்பது வீண். அப்படியாயின் காந்தியடிகள் ஏன் சிரமப்படுகிறார்? விஷயமென்னவெனில், அவர் உலகின் அநுதாபத்தைப் பெறும் முறையை நன்கு அறிந்திருக்கிறார். அவரது இந்த வித்தை அபூர்வமானது. எவன் என்னை தூஷிக்கிறானோ, எனது மகா பெரிய விரோதியோ, அவனையும் சந்தித்துப் பேசுவதற்கு எனக்குச் சம்மதம்என்று அவர் பறைசாற்றியாகிவிட்டது. சர்ச்சிலின் மனம் இன்னும் கரையவில்லை. உண்மையில் காந்தியடிகளின் பெயரைக் கேட்டு அவர் பிரமைபிடித்துப்போய்விட்டார். அவர் சந்தித்தாலும் சந்திக்காவிடினும், இந்த தர்ம யுத்தத்தில் காந்தியடிகளின் கட்சிக்கு பலமுண்டாகிவிட்டது.
காந்தியடிகள் இங்கு வந்தவுடனே இர்வின் பிரபுவுக்கு, “நான் வந்து சேர்ந்தேன். எங்கே எப்பொழுது உங்களைச் சந்திக்கலாம்?” என்று கேட்டுத் தந்தி கொடுத்தார். தந்திக்குப் பதில் இர்வின் வெகு அழகாகக் கடிதம் எழுதியிருக்கிறாராம். நான் வேண்டுமென்றே வட்டமேஜை மகாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில், வெளியில் இருந்துகொண்டு அதிக உதவி செய்யலாமென்பது என்னுடைய நம்பிக்கைஎன்று எழுதியிருக்கிறாராம். அவர் சீக்கிரத்தில் லண்டன் வரப்போகிறார்.
சிம்லாவிலிருந்து எமர்ஸனும் காந்தியடிகளின் கடிதத்திற்கு மிகவும் திருப்திகரமான பதில் அனுப்பியிருக்கிறார். காந்தியடிகள் அவரை மிகவும் தாக்கி எழுதியிருந்தார்; கண்டித்திருந்தார். அவருடைய பதில் கவனிக்கத்தக்கதுஎன்கிறார் காந்தியடிகள். எமர்ஸன் ஒரு தந்தியும் அனுப்பினாராம்; அது என்ன காரணத்தாலோ காந்தியடிகளிடம் வந்துசேரவில்லை.
நான்:- தங்களுடைய கருத்தை வெளியிட்டுவிட்டீர்கள். தாங்கள் விரும்புவதென்னவென்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. மேற்கொண்டு என்ன? தாங்கள் அவர்களது பதிலை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருப்பீர்களா? அல்லது பதில் கிடைக்காவிடினும் கமிட்டியின் காரியங்களில் கலந்துகொள்வீர்களா?
காந்தியடிகள்:- கமிட்டியின் நடவடிக்கைகளில் கலந்துகொள்வேன். காங்கிரஸினுடைய மூலக் கொள்கையுடன் சம்பந்தமுள்ள பிரச்னை ஏதாவது எழுந்து, காங்கிரஸின் கருத்தை விளக்குவது அவசியமென்று கண்டால், நான் என் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்வேன். உதாரணமாக, வாக்குரிமை விஷயத்தைக் குறிப்பிடலாம். முக்கியமில்லாத விஷயங்களைப்பற்றிப் பேசும் எண்ணம் எனக்கில்லை. இவ்விதம் நான் நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை ஸாங்கி விரும்பவில்லை போல் தோன்றுகிறது. நடவடிக்கைகளில் கலந்துகொள்வோருடைய பெயர்களை அவர் எழுதிக்கொண்ட பொழுது நானாகவே என் பெயரையும் சேர்த்துக்கொள்ளச் சொன்னேன். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தும் அவர் இதைப்பற்றி என்னிடம் பிரஸ்தாபிக்காததால் அவருக்கு நான் கலந்துகொள்வதில் விருப்பமில்லை என்று ஊகித்தேன். என் பெயரை எழுதிக்கொள்ளச் செய்த பிறகு நான் அவரிடம், ‘எல்லோரும் பேசிய பிறகு கடைசியில் எனக்குப் பேச இடம் கிடைத்தால் போதும்என்று சொன்னேன்.
நான்:- தாங்கள் ஒன்றும் பேசாமலிருக்கும் விஷயங்களில் மௌனம் ஸம்மத லக்ஷணம்என்று கருதப்படலாமல்லவா?
காந்தியடிகள்:- கிடையவே கிடையாது. ஒவ்வொரு முடிவையும் நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுவேன்.
நான்:- அவர்கள் காலங்கடத்திக்கொண்டேயிருந்தால் அவர்களுடைய முடிவுக்காகக் காத்திருப்பீர்களா?
காந்தியடிகள்:- அவர்கள் என்ன பதில் சொல்வார்களென்று எனக்குச் சில தினங்களிலேயே தெரிந்துவிடும். அவர்கள் நம்மைச் சிறு விஷயங்களில் சிக்கவைத்துக் காலத்தைக் கடத்த விரும்பினால், நான் சும்மா இருப்பேனா? நானும் கடிவாளத்தை இழுக்க ஆரம்பித்துவிடமாட்டேனா?
இன்று காந்திஜி செய்த உபந்நியாசத்தைக் குறிப்பிட்டு, “பிரசங்கத்துக்காக முன்னதாகவே ஏதேனும் ஆயத்தம் செய்துகொண்டீர்களா?” என்று கேட்டேன்.
காந்தியடிகள்:- இல்லவே இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் பேசுவதற்கு முன் சிறிது ஆயத்தம் செய்யவேண்டும், யோசித்து வைக்கவேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லாமலில்லை. ஆனால் சமயந்தான் கிட்டவில்லை. நேற்றிரவு தடைக்குப் பின் தடையாக ஏதாவது வந்துகொண்டேயிருந்தது. இன்று காலையிலும் இரு கனவான்கள் பார்க்க வந்துவிட்டார்கள். ஹோரைப் பார்க்க இந்தியா மந்திரி காரியாலயத்திற்குப் போகும் பொழுது வழியில் யோசிக்கலாமென்று எண்ணியிருந்தேன். வண்டியில் ஆண்ட்ரூஸ் கூட இருந்தார்; வழி எல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டே சென்றோம். இந்தியா மந்திரி காரியாலயத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு 20நிமிஷம் முன்னரே போய்விட்டேன். (நேற்று காந்தியடிகள் மகாநாட்டிற்குப் போவதில் சிறிது தாமதம் ஆகிவிட்டது. வழியில் கூட்டம் அதிகமாயிருப்பதால் வண்டி நின்று நின்று போகவேண்டியிருந்தது. ஆகையால் இன்று முன்னதாகவே கிளம்பிவிட்டார்). அங்கேயும் சிந்தனை செய்ய முடியவில்லை. ஹோரினுடைய இரு காரியதரிசிகள் வந்துவிட்டனர். அவர்களுடன் பேச்சு நடந்தது. காங்கிரஸின் பிரதிநிதி என்ற ஹோதாவில் நான் பேச வேண்டும்; அதைப்பற்றிச் சிறிது சொல்லவேண்டியது அவசியம்என்று மட்டும் யோசனை செய்திருந்தேன். என்னுடைய முன் ஆயத்தம் எல்லாம் இவ்வளவுதான்.
நான்:- சிறிதும் முன்னேற்பாடு செய்யாமல் இத்தகைய அற்புதமான உபந்நியாசம் செய்ய முடிந்தது கடவுளின் கடாக்ஷத்தினால் என்றே சொல்லவேண்டும்.
காந்தியடிகள்:- உண்மைதான். இர்வின் பிரபுவுடன் ஒப்பந்தம் முடிந்த பிறகு நான் பத்திரிகைப் பிரதிநிதிகளுக்குத் தந்த அறிக்கையும் சரி, இங்கு வந்து சேர்ந்த அன்று நான் செய்த பிரசங்கமும் சரி, அன்று அமெரிக்காவுக்கு நான் அளித்த செய்தியும் சரி- இவைகளில் ஒன்றின் பொருட்டும் நான் முன்னதாகச் சிந்திக்கவோ, ஏற்பாடு செய்யவோ முடியவில்லை. அந்தந்த சமயத்தில் என் உள்ளத்தில் என்ன உதித்ததோ அதையே ஒப்பித்தேன். இதெல்லாம் பகவானுடைய அருளின் மகிமைதான்.
மேலே நடக்கப்போவது என்னவோ, ஆண்டவனுக்குத்தான் தெரியும்; ஆனால் சகுனம் மட்டும் நன்றாய்த்தானிருக்கிறது. பிரதம மந்திரி இதுவரை நம்பிக்கையளிக்கக்கூடியதாய் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் காந்தியடிகள் கூறியபடி அவருக்குள்ள செல்வாக்கு பூஜ்யமென்று சொல்லலாம். பத்திரிகைகளில் மான்செஸ்டர் கார்டியனைப் போல் உண்மையாகவும், அநுதாபத்துடனும் வேறு ஒரு பத்திரிகையும் எழுதவில்லை; அதுவும்கூட காந்தியடிகள் லங்கோட்டைவிட்டுவிட்டு கால்சட்டை அணிகிறார் என்று பிசகாக எழுதியிருக்கிறது! காந்தியடிகள் இதைக் கேட்டுச் சிரித்தார். டெய்லி மெயில்காந்தியடிகளை முரட்டுப் பிடிவாதக்காரர் என்று எழுதிக்கொண்டேயிருக்கிறது; ஆனால் அந்தப் பத்திரிகையும் அவரிடமிருந்து நான் விரும்புவதென்ன?” என்ற தலைப்புடன் 3000 சொற்களுள்ள ஒரு கட்டுரை வேண்டித் தந்தியடித்தது. அவர் அனுப்புகிறபடி ஒரு எழுத்துக்கூட மாற்றாமல் பிரசுரிப்பதாகவும் வாக்குத் தந்திருக்கிறது. தற்சமயம் வேலை மிகுதியாயிருப்பதாகவும் ஓய்வு கிட்டியதும் எழுதியனுப்புவதாகவும் காந்திஜி பதில் அனுப்பியிருக்கிறார்.


Viewing all 219 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>