முந்தைய பகுதிகள்:
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4
ரோயல்: இதனுடன் இணைத்து நாம் காந்தியின் மதம் பற்றி அடுத்து பேசலாமா? பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார், ஜே.டி.எஃப் ஜோர்டன்ஸ் எழுதிய, 'Gandhi’s Religion: A Homespun Shawl,'புத்தகம் இது. அவரது மதத்தைப் பிரித்து காந்தியைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் அவர்.
குஹா: முதலில் ஒரு சிறு தகவல் பிழையை திருத்துகிறேன்- ஜே.டி.எப். ஜோர்டன்ஸ் கத்தோலிக்க பாதிரியாய் இருந்தவர் என்று சொல்வது சரியாக இருக்கும். அவர் முதலில் பாதிரியாராய்த்தான் இந்தியா வந்தார், சர்ச்சில் சேர்ந்தார், பிறகு அதைவிட்டு வெளியேறினார். அவருக்கு காந்தியில் ஆர்வம் ஏற்பட்டது, ஆய்வாளரானார், கடைசியில் ஆஸ்திரேலியாவில் ஒரு பேராசிரியர் வேலையில் சேர்ந்தார்.
இது ஓரளவு தன்னிச்சையானது. ஆனால் என் பட்டியலில் உள்ள அந்நிய தேசத்தவர்களின் மூன்று புத்தகங்களையும் நீங்கள் பார்த்தால்- ஒருவர், ரஷ்யாவில் வாழ்ந்த அமெரிக்கர், ஃபிஷரைச் சொல்கிறேன், இரண்டாமவர் இங்கிலாந்தில் படித்த அமெரிக்கர், டால்டன். மூன்றாவது புத்தகம் ஆஸ்திரேலியாவில் கல்வியாளரான பெல்ஜிய தேசத்துக்காரர். தன் மண்ணை மட்டும் அறிந்தவராய் இல்லாத, அந்நிய வெறுப்பு இல்லாமல் உலகு குறித்த புரிதல் கொண்டவர்களைச் சேர்க்க நினைத்தேன். இவர்கள் எல்லாருமே வித்தியாசமானவர்கள். காந்தி குறித்து மிகவும் சுவாரசியமான பார்வைகளை அளித்தவர்கள். இவர்கள் மூவருமே மூன்று முதல்தர புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஜோர்டன்ஸ்சுக்கும் காந்தியின் மதத்துக்கும் வருகிறேன்: காந்தி இறை நம்பிக்கை கொண்டவர், ஆனால் அவர் மத நம்பிக்கை விஷயத்தில் மிகவும் வித்தியாசமான, தனித்தன்மை கொண்ட, சராசரியாய் அல்லாத நிலைப்பாடு கொண்டவர். அவர் தன்னை சனாதன இந்து என்று அழைத்துக் கொண்டார்- அதன் பொருள், பக்தி கொண்ட, மரபில் பற்றுதல் கொண்ட இந்து-, ஆனால் அவர் கோயிலுக்குப் போனதில்லை. ஒரே ஒரு முறை அவர் தென்னிந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோயிலொன்றுக்குச் சென்றார், தீண்டத்தகாதாரை முதல் முறையாக கோயிலுக்குள் அனுமதித்தபோது. அது ஒன்று தவிர, அவர் கோயிலுக்கே போகாத இந்து. அவர் இந்துதான், ஆனால் இந்து மரபில் உள்ள தவறான நம்பிக்கைகளை, குறிப்பாக, தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை, புரட்சிகரமாக எதிர்த்தவர். சி.எஃப். ஆண்ட்ரூஸ் என்ற இங்கிலிஷ் கிறித்தவ பாதிரியாரை மிக நெருக்கமான நண்பராய்க் கொண்ட இந்து அவர். இந்துக்கள் முஸ்லிம்களை ஒடுக்கக்கூடாது, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் செயல்திட்டம் கொண்ட இந்து அவர்.
காந்தியின் சமயவுணர்வு மிகத் தெளிவானது. நாம் 19ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் வளர்ந்த ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில்தான் டார்வினின் 'The Origin of Species'வெளிவந்ததையடுத்து பகுத்தறிவு நாத்திகம் பீரிட்டெழுந்தது. அறிவுஜீவிகளும் அறிவியலாளர்களும் கடவுளை நிராகரித்து விட்டனர் என்ற காரணத்தைக் கொண்டு ஹார்டி, 'இறைவனின் நல்லடக்கம்'என்ற கவிதை எழுதுகிறார்.
ஆனால் அது மிகத் தீவிரமாக மதமாற்றப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலமும்கூட- கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள், முஸ்லிம் மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது நாம் மத நம்பிக்கையை அறிவுஜீவிகள் அற்பப்படுத்தும் காலத்தில் வாழ்கிறோம்- ஒரு பக்கம் ஆணவ நாத்திகமும் மறு புறம் மத அடிப்படைவாதமும் இருக்கின்றன. இந்தப் பொய்த் தேர்விலிருந்து வெளியேற காந்தி ஒரு வழிகாட்டுகிறார். நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராய் இருக்கலாம், என்கிறார் காந்தி. உணர்ச்சியற்ற பகுத்தறிவும் அறிவியலும் முழுமையாய் விளக்கிவிட முடியாத வகையில் வாழ்க்கை ஆச்சரியமும் மர்மமும் கொண்டதாய் இருக்கிறது.
ஆனால், அதே வேளை, இறைவனை அடையும் ஒரே உண்மைப் பாதை என்று எதுவும் கிடையாது. உன் விதியை ஏற்றுக் கொள், என்கிறார் காந்தி. நீ இந்துவாய் பிறந்திருக்கிறாய், நல்லது. உன் பெற்றோர், உன் பெற்றோரின் பெற்றோர், பல தலைமுறைகளாய் இந்துக்களாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் பிற மதங்களிலிருந்து நீ எதைக் கற்றுக் கொள்ள முடியும் என்று யோசித்துப் பார். கிறித்தவர்களுடனும் முஸ்லிம்களுடனும் யூதர்களுடனும் பார்ஸிக்களுடனும் நட்பு வளர்த்துக் கொள். உன் மதத்தை பிறரின் கண்ணாடியில் காணும்போது, அதன் களங்கங்களை நீ அறியக்கூடும். இது ஒரு சுவையான, வழக்கத்தில் இல்லாத மத அணுகுமுறை.
ஆனால் மதம் காந்தியின் வாழ்வின் மையத்தில் இருந்தது. இதை நான் என் சரிதையில் சொல்வதில்லை, என் மிக இளம் வயதில், இருபதுகளின் துவக்கங்களில், காந்தியை மதசார்பற்றவராக மாற்ற விரும்பும் காலகட்டத்தைக் கடந்தேன். நான் நாத்திகனாக வளர்ந்தவன். என் அப்பாவும் தாத்தாவும் அறிவியலாளர்கள், நான் கோயிலுக்கு சென்றதேயில்லை. காந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது, இந்த மத விவகாரம் எல்லாம் தேவையற்ற கவனக் குலைவுகள் என்று நினைத்தேன். காந்தியைப் பொறுத்தவரை எது உண்மையாகவே இந்தக் காலத்துக்குப் பொருந்துவது என்றால், தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சம உரிமை கோருவது, பெண் சமத்துவம், அகிம்சை, மக்களாட்சி, பொருளாதார தன்னிறைவு. மதம் இல்லாத காந்தியைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் கடைசியில் இந்த முயற்சியின் வியர்த்தத்தை உணர்ந்தேன். காந்தியைப் புரிந்து கொள்வதற்கான கதவு இது கிடையாது, ஏனென்றால் காந்தி மத நம்பிக்கை உள்ளவர். அவருக்கு மதம் மிக முக்கியமானது. அவர் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும், அதன் ஆசாரங்களுக்கு எதிரான கலகக்காரர். அவரது கிறித்தவ சீடர் ஒருவர் சர்ச்சை விட்டு வெளியேற்றப்பட்ட இடம் ஒன்று மிக அழகாக இருக்கும். வெர்ரியர் எல்வினைச் சொல்கிறேன், அவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். தனது பிஷப் கிறித்தவ மதத்தை விட்டு தன்னை விலக்கி விட்டதாக காந்திக்கு எழுதுகிறார் அவர். காந்தி பதில் எழுதும்போது, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார், இறைவனை இருத்தி வழிபட அவருக்கு வானம் இருக்கிறது, வழிபாட்டுத் தளமாய் காலடியில் உள்ள மண் இருக்கிறது, என்கிறார். சர்ச்சில் இல்லாதபோதும்கூட நீ கிறித்துவுடன் உரையாட முடியும். இதில் காந்திக்கு டால்ஸ்டாய் மற்றும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இருந்தது என்பது உண்மைதான், இறைவனின் அரசு உனக்குள் இருக்கிறது என்ற டால்ஸ்டாயின் உணர்வு காந்தியை பாதித்திருந்தது.
ஜோர்டன்ஸ் எழுதிய புத்தகம் கவனமாக எழுதப்பட்டது, நியாய உணர்வு கொண்டது, காந்திக்கு ஏன் மதநம்பிக்கை அவ்வளவு முக்கியமாக இருந்தது, எது காந்தியின் நம்பிக்கைக்கு அவ்வளவு தனித்தன்மை அளித்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர் எழுதுகிறார். அதனால்தான் இது என் பட்டியலில் இருக்கிறது.
ரோயல்: ஆனால் முஸ்லிம்களுக்கு ரொம்ப நல்லவராக இருந்தார் என்று காந்தி ஒரு இந்துவால் கொலை செய்யப்பட்டார் என்பதையும் இறுதியில் நாம் சொல்ல வேண்டும்.
குஹா: நிச்சயமாக.
ரோயல்: பிரமச்சரியத்தின் மீது காந்திக்குள்ள பற்றுதல், அது மதத்திலிருந்து வருகிறதா?
குஹா: பிரமச்சரியம், அல்லது உங்கள் காம விழைவுகளை வெற்றி கொள்ளுதல், பல சமய மரபுகளில் மேலோங்கி நிற்கிறது: கத்தோலிக்கம், பௌத்தம், ஜைனம், இந்துமதம். வேறு சில சமய மரபுகளில் அது சஅறவே இல்லை: இஸ்லாம், பிராடஸ்டன்ட் கிறித்தவம், யூத மதம். நீங்கள் காம இன்பங்களை நிராகரிக்க வேண்டும், அது உங்களை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்லும், என்பது பௌத்தம், கத்தோலிக்கம், இந்து சமயங்களின் ஒரு பகுதி. ஆனால் அது இஸ்லாம், யூத மதம், மற்றும் நவீன உலகுக்கு அந்நியமானது, முழுக்கவே எதிரானது.
ஒரு கதை சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஜோசப் லெலிவெல்ட் என்ற அமெரிக்க ஆய்வாளர் காந்தி ஒரு தற்பாலின விழைவு கொண்டவர் என்று புத்தகம் எழுதினார். ஹெர்மன் கல்லென்பாக் என்ற யூதர் ஒருவர் காந்தியின் நெருங்கிய நண்பர். இருவரும் தென்னாப்பிரிக்காவில் சேர்ந்து வசித்திருந்தார்கள். இருவரும் டால்ஸ்டாயை பின்பற்றுபவர்கள், இருவரும் பிரமசாரிகளாக இருக்க விரும்பினார்கள். சேர்ந்து இருக்கும் இரண்டு பேர் பிரமசர்யத்தைக் கடைபிடிக்க விரும்புவதை லெலிவெல்ட்டால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இருவரும் தற்பாலின விழைவு கொண்டவர்கள் என்று அவர் முடிவு செய்து விட்டார். அவருக்கு கிடைத்த வலுவான ஆதாரம், கல்லென்பாக்குக்கு காந்தி லண்டனிலிருந்து எழுதிய ஒரு கடிதம். அப்போது காந்தி தற்காலிகமாக தன் நண்பரையும் அறைச் சகாவான கல்லென்பாக்கை பிரிந்திருந்தார். அவர் கல்லென்பாக்குக்கு எழுதிய கடிதத்தில், "இப்போது என் மேஜையின் மேல் வாசலின் பாட்டில் ஒன்று இருக்கிறது, அது எனக்கு உன்னை நினைவுபடுத்துகிறது,"என்று எழுதியிருந்தார். அந்த அமெரிக்க ஆய்வாளர் அவசரப்பட்டு உடனே முடிவுக்கு வந்து விட்டார். ஆனால் வாசலின் பாட்டில் உண்மையில் அங்கே இருக்கக் காரணம், காந்தியும் கல்லென்பாக்கும் ஷூ போடக்கூடாது என்ற டால்ஸ்டாயிய பிரதிக்ஞை எடுத்திருந்தார்கள். காலணிகள் இல்லாமல் அல்லது ஸ்லிப்பர்கள் போட்டுக் கொண்டுதான் நடந்தார்கள். லண்டனிலும் இப்படி நடந்து சென்ற காரணத்தால் காந்தியின் பாதத்தில் ஆணிகள் வந்து விட்டன.
நியூ யார்க்கில் வாழும் 21ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட் போன்ற ஒரு நவீன மனிதர், ஒவ்வொரு ஆண்டும் 'கே ப்ரைட் பரேட்'களில் பங்கேற்பவர், பிறர் கட்டாயத்தாலல்லாமல் சுயவிருப்பத்தால் பிரம்மச்சரியம் காக்க விரும்பும் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் உலகெங்கும் பல தேசங்களில் உள்ளது போல் எட்டு வயது சிறுவன் ஒருவன் மத நிறுவனமொன்றுக்கு அனுப்பப்பட்டு பூசகர் ஆகச் சொல்லப்படுவது போன்ற விஷயமல்ல இது. கல்லென்பாக் கட்டிடக்கலை நிபுணராய் வெற்றி பெற்றவர், காந்தி வக்கீல் பணியில் வெற்றி பெற்றவர். அனைத்தையும் துறந்து எளிய வாழ்வு வாழச் சொன்ன புகழ்பெற்ற நாவலாசிரியர் டால்ஸ்டாயின் தாக்கத்தில் இருவரும் இருந்தனர். என் முதல் நூலான 'Gandhi Before India'வில் இது விஷயமாக என்னால் நல்ல கேலி செய்ய முடிந்தது- ஜோசப் லெலிவெல்ட்டின் பிழை புரிதல் பற்றி இரண்டு பக்க அடிக்குறிப்பு ஒன்று எழுதினேன்.
ஆனால் விஷயம் இதுதான்- பிரமச்சரியம் இந்து மதத்திலும் இருக்கிறது, ஜைன மதத்திலும் இருக்கிறது. இந்து சமயத்துடன் தொடர்புடைய ஜைன சமயத்துக்கு நெருக்கமானவராய் இருந்தார் காந்தி- குஜராத்தியான காந்திக்கு பல ஜைன நண்பர்கள் இருந்தனர். ஜைன முனிகள் இப்படிப்பட்ட பிரமச்சரியத்தை பூரணமாய் கடைபிடிப்பவர்கள். எனவே, இது காந்தியின் சமய நம்பிக்கைகளின் முக்கிய அடித்தளமாய் இருந்தது. இது அவரது மன நம்பிக்கையில் எழுவது, நவீன ஆணோ பெண்ணோ இதைப் புரிந்து கொள்ள முடியாது.
ரோயல்: ஆனால் மத விஷயங்களில் திறந்த மனம் கொண்டவராய் இருந்தாலும் காந்தி தன் மகன் ஒரு முஸ்லிமை மணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க மறுத்தார்.
குஹா: ஆம், ஆனால் அதற்கு நடைமுறை அரசியல் காரணங்கள் இருந்தன. அவர் மிகவும் ஆச்சாரமான சமூகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார். முதல் முறையாக அவரால் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்க முடிந்தது. கலப்பு மணம் நிகழ்ந்திருந்தால் அது அவரது அரசியல் போராட்டத்தை தடம் புரளச் செய்திருக்கும். ஏனென்றால், இஸ்லாமிய மதபிரசாரகர்கள் அவரது மகன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கைப்பற்றி விட்டான் என்கிற மாதிரி போயிருக்கலாம். இது நடந்தது 1920களில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன். இன்று அதற்கு எந்த ஆட்சேபமும் இருக்காது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
முந்தைய பகுதிகள்:
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4
(ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் புத்தகங்கள் தொடரும்)
The Best Books on Gandhi, recommended by Ramachandra Guha: Interview by Sophie Roell, Five Books
Image Credit: The Hindu
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4
ரோயல்: இதனுடன் இணைத்து நாம் காந்தியின் மதம் பற்றி அடுத்து பேசலாமா? பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார், ஜே.டி.எஃப் ஜோர்டன்ஸ் எழுதிய, 'Gandhi’s Religion: A Homespun Shawl,'புத்தகம் இது. அவரது மதத்தைப் பிரித்து காந்தியைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் அவர்.
குஹா: முதலில் ஒரு சிறு தகவல் பிழையை திருத்துகிறேன்- ஜே.டி.எப். ஜோர்டன்ஸ் கத்தோலிக்க பாதிரியாய் இருந்தவர் என்று சொல்வது சரியாக இருக்கும். அவர் முதலில் பாதிரியாராய்த்தான் இந்தியா வந்தார், சர்ச்சில் சேர்ந்தார், பிறகு அதைவிட்டு வெளியேறினார். அவருக்கு காந்தியில் ஆர்வம் ஏற்பட்டது, ஆய்வாளரானார், கடைசியில் ஆஸ்திரேலியாவில் ஒரு பேராசிரியர் வேலையில் சேர்ந்தார்.
இது ஓரளவு தன்னிச்சையானது. ஆனால் என் பட்டியலில் உள்ள அந்நிய தேசத்தவர்களின் மூன்று புத்தகங்களையும் நீங்கள் பார்த்தால்- ஒருவர், ரஷ்யாவில் வாழ்ந்த அமெரிக்கர், ஃபிஷரைச் சொல்கிறேன், இரண்டாமவர் இங்கிலாந்தில் படித்த அமெரிக்கர், டால்டன். மூன்றாவது புத்தகம் ஆஸ்திரேலியாவில் கல்வியாளரான பெல்ஜிய தேசத்துக்காரர். தன் மண்ணை மட்டும் அறிந்தவராய் இல்லாத, அந்நிய வெறுப்பு இல்லாமல் உலகு குறித்த புரிதல் கொண்டவர்களைச் சேர்க்க நினைத்தேன். இவர்கள் எல்லாருமே வித்தியாசமானவர்கள். காந்தி குறித்து மிகவும் சுவாரசியமான பார்வைகளை அளித்தவர்கள். இவர்கள் மூவருமே மூன்று முதல்தர புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஜோர்டன்ஸ்சுக்கும் காந்தியின் மதத்துக்கும் வருகிறேன்: காந்தி இறை நம்பிக்கை கொண்டவர், ஆனால் அவர் மத நம்பிக்கை விஷயத்தில் மிகவும் வித்தியாசமான, தனித்தன்மை கொண்ட, சராசரியாய் அல்லாத நிலைப்பாடு கொண்டவர். அவர் தன்னை சனாதன இந்து என்று அழைத்துக் கொண்டார்- அதன் பொருள், பக்தி கொண்ட, மரபில் பற்றுதல் கொண்ட இந்து-, ஆனால் அவர் கோயிலுக்குப் போனதில்லை. ஒரே ஒரு முறை அவர் தென்னிந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோயிலொன்றுக்குச் சென்றார், தீண்டத்தகாதாரை முதல் முறையாக கோயிலுக்குள் அனுமதித்தபோது. அது ஒன்று தவிர, அவர் கோயிலுக்கே போகாத இந்து. அவர் இந்துதான், ஆனால் இந்து மரபில் உள்ள தவறான நம்பிக்கைகளை, குறிப்பாக, தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை, புரட்சிகரமாக எதிர்த்தவர். சி.எஃப். ஆண்ட்ரூஸ் என்ற இங்கிலிஷ் கிறித்தவ பாதிரியாரை மிக நெருக்கமான நண்பராய்க் கொண்ட இந்து அவர். இந்துக்கள் முஸ்லிம்களை ஒடுக்கக்கூடாது, சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் செயல்திட்டம் கொண்ட இந்து அவர்.
காந்தியின் சமயவுணர்வு மிகத் தெளிவானது. நாம் 19ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் வளர்ந்த ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில்தான் டார்வினின் 'The Origin of Species'வெளிவந்ததையடுத்து பகுத்தறிவு நாத்திகம் பீரிட்டெழுந்தது. அறிவுஜீவிகளும் அறிவியலாளர்களும் கடவுளை நிராகரித்து விட்டனர் என்ற காரணத்தைக் கொண்டு ஹார்டி, 'இறைவனின் நல்லடக்கம்'என்ற கவிதை எழுதுகிறார்.
ஆனால் அது மிகத் தீவிரமாக மதமாற்றப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலமும்கூட- கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள், முஸ்லிம் மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது நாம் மத நம்பிக்கையை அறிவுஜீவிகள் அற்பப்படுத்தும் காலத்தில் வாழ்கிறோம்- ஒரு பக்கம் ஆணவ நாத்திகமும் மறு புறம் மத அடிப்படைவாதமும் இருக்கின்றன. இந்தப் பொய்த் தேர்விலிருந்து வெளியேற காந்தி ஒரு வழிகாட்டுகிறார். நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராய் இருக்கலாம், என்கிறார் காந்தி. உணர்ச்சியற்ற பகுத்தறிவும் அறிவியலும் முழுமையாய் விளக்கிவிட முடியாத வகையில் வாழ்க்கை ஆச்சரியமும் மர்மமும் கொண்டதாய் இருக்கிறது.
ஆனால், அதே வேளை, இறைவனை அடையும் ஒரே உண்மைப் பாதை என்று எதுவும் கிடையாது. உன் விதியை ஏற்றுக் கொள், என்கிறார் காந்தி. நீ இந்துவாய் பிறந்திருக்கிறாய், நல்லது. உன் பெற்றோர், உன் பெற்றோரின் பெற்றோர், பல தலைமுறைகளாய் இந்துக்களாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் பிற மதங்களிலிருந்து நீ எதைக் கற்றுக் கொள்ள முடியும் என்று யோசித்துப் பார். கிறித்தவர்களுடனும் முஸ்லிம்களுடனும் யூதர்களுடனும் பார்ஸிக்களுடனும் நட்பு வளர்த்துக் கொள். உன் மதத்தை பிறரின் கண்ணாடியில் காணும்போது, அதன் களங்கங்களை நீ அறியக்கூடும். இது ஒரு சுவையான, வழக்கத்தில் இல்லாத மத அணுகுமுறை.
ஆனால் மதம் காந்தியின் வாழ்வின் மையத்தில் இருந்தது. இதை நான் என் சரிதையில் சொல்வதில்லை, என் மிக இளம் வயதில், இருபதுகளின் துவக்கங்களில், காந்தியை மதசார்பற்றவராக மாற்ற விரும்பும் காலகட்டத்தைக் கடந்தேன். நான் நாத்திகனாக வளர்ந்தவன். என் அப்பாவும் தாத்தாவும் அறிவியலாளர்கள், நான் கோயிலுக்கு சென்றதேயில்லை. காந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது, இந்த மத விவகாரம் எல்லாம் தேவையற்ற கவனக் குலைவுகள் என்று நினைத்தேன். காந்தியைப் பொறுத்தவரை எது உண்மையாகவே இந்தக் காலத்துக்குப் பொருந்துவது என்றால், தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சம உரிமை கோருவது, பெண் சமத்துவம், அகிம்சை, மக்களாட்சி, பொருளாதார தன்னிறைவு. மதம் இல்லாத காந்தியைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் கடைசியில் இந்த முயற்சியின் வியர்த்தத்தை உணர்ந்தேன். காந்தியைப் புரிந்து கொள்வதற்கான கதவு இது கிடையாது, ஏனென்றால் காந்தி மத நம்பிக்கை உள்ளவர். அவருக்கு மதம் மிக முக்கியமானது. அவர் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும், அதன் ஆசாரங்களுக்கு எதிரான கலகக்காரர். அவரது கிறித்தவ சீடர் ஒருவர் சர்ச்சை விட்டு வெளியேற்றப்பட்ட இடம் ஒன்று மிக அழகாக இருக்கும். வெர்ரியர் எல்வினைச் சொல்கிறேன், அவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். தனது பிஷப் கிறித்தவ மதத்தை விட்டு தன்னை விலக்கி விட்டதாக காந்திக்கு எழுதுகிறார் அவர். காந்தி பதில் எழுதும்போது, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார், இறைவனை இருத்தி வழிபட அவருக்கு வானம் இருக்கிறது, வழிபாட்டுத் தளமாய் காலடியில் உள்ள மண் இருக்கிறது, என்கிறார். சர்ச்சில் இல்லாதபோதும்கூட நீ கிறித்துவுடன் உரையாட முடியும். இதில் காந்திக்கு டால்ஸ்டாய் மற்றும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இருந்தது என்பது உண்மைதான், இறைவனின் அரசு உனக்குள் இருக்கிறது என்ற டால்ஸ்டாயின் உணர்வு காந்தியை பாதித்திருந்தது.
ஜோர்டன்ஸ் எழுதிய புத்தகம் கவனமாக எழுதப்பட்டது, நியாய உணர்வு கொண்டது, காந்திக்கு ஏன் மதநம்பிக்கை அவ்வளவு முக்கியமாக இருந்தது, எது காந்தியின் நம்பிக்கைக்கு அவ்வளவு தனித்தன்மை அளித்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர் எழுதுகிறார். அதனால்தான் இது என் பட்டியலில் இருக்கிறது.
ரோயல்: ஆனால் முஸ்லிம்களுக்கு ரொம்ப நல்லவராக இருந்தார் என்று காந்தி ஒரு இந்துவால் கொலை செய்யப்பட்டார் என்பதையும் இறுதியில் நாம் சொல்ல வேண்டும்.
குஹா: நிச்சயமாக.
ரோயல்: பிரமச்சரியத்தின் மீது காந்திக்குள்ள பற்றுதல், அது மதத்திலிருந்து வருகிறதா?
குஹா: பிரமச்சரியம், அல்லது உங்கள் காம விழைவுகளை வெற்றி கொள்ளுதல், பல சமய மரபுகளில் மேலோங்கி நிற்கிறது: கத்தோலிக்கம், பௌத்தம், ஜைனம், இந்துமதம். வேறு சில சமய மரபுகளில் அது சஅறவே இல்லை: இஸ்லாம், பிராடஸ்டன்ட் கிறித்தவம், யூத மதம். நீங்கள் காம இன்பங்களை நிராகரிக்க வேண்டும், அது உங்களை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்லும், என்பது பௌத்தம், கத்தோலிக்கம், இந்து சமயங்களின் ஒரு பகுதி. ஆனால் அது இஸ்லாம், யூத மதம், மற்றும் நவீன உலகுக்கு அந்நியமானது, முழுக்கவே எதிரானது.
ஒரு கதை சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஜோசப் லெலிவெல்ட் என்ற அமெரிக்க ஆய்வாளர் காந்தி ஒரு தற்பாலின விழைவு கொண்டவர் என்று புத்தகம் எழுதினார். ஹெர்மன் கல்லென்பாக் என்ற யூதர் ஒருவர் காந்தியின் நெருங்கிய நண்பர். இருவரும் தென்னாப்பிரிக்காவில் சேர்ந்து வசித்திருந்தார்கள். இருவரும் டால்ஸ்டாயை பின்பற்றுபவர்கள், இருவரும் பிரமசாரிகளாக இருக்க விரும்பினார்கள். சேர்ந்து இருக்கும் இரண்டு பேர் பிரமசர்யத்தைக் கடைபிடிக்க விரும்புவதை லெலிவெல்ட்டால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இருவரும் தற்பாலின விழைவு கொண்டவர்கள் என்று அவர் முடிவு செய்து விட்டார். அவருக்கு கிடைத்த வலுவான ஆதாரம், கல்லென்பாக்குக்கு காந்தி லண்டனிலிருந்து எழுதிய ஒரு கடிதம். அப்போது காந்தி தற்காலிகமாக தன் நண்பரையும் அறைச் சகாவான கல்லென்பாக்கை பிரிந்திருந்தார். அவர் கல்லென்பாக்குக்கு எழுதிய கடிதத்தில், "இப்போது என் மேஜையின் மேல் வாசலின் பாட்டில் ஒன்று இருக்கிறது, அது எனக்கு உன்னை நினைவுபடுத்துகிறது,"என்று எழுதியிருந்தார். அந்த அமெரிக்க ஆய்வாளர் அவசரப்பட்டு உடனே முடிவுக்கு வந்து விட்டார். ஆனால் வாசலின் பாட்டில் உண்மையில் அங்கே இருக்கக் காரணம், காந்தியும் கல்லென்பாக்கும் ஷூ போடக்கூடாது என்ற டால்ஸ்டாயிய பிரதிக்ஞை எடுத்திருந்தார்கள். காலணிகள் இல்லாமல் அல்லது ஸ்லிப்பர்கள் போட்டுக் கொண்டுதான் நடந்தார்கள். லண்டனிலும் இப்படி நடந்து சென்ற காரணத்தால் காந்தியின் பாதத்தில் ஆணிகள் வந்து விட்டன.
நியூ யார்க்கில் வாழும் 21ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட் போன்ற ஒரு நவீன மனிதர், ஒவ்வொரு ஆண்டும் 'கே ப்ரைட் பரேட்'களில் பங்கேற்பவர், பிறர் கட்டாயத்தாலல்லாமல் சுயவிருப்பத்தால் பிரம்மச்சரியம் காக்க விரும்பும் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் உலகெங்கும் பல தேசங்களில் உள்ளது போல் எட்டு வயது சிறுவன் ஒருவன் மத நிறுவனமொன்றுக்கு அனுப்பப்பட்டு பூசகர் ஆகச் சொல்லப்படுவது போன்ற விஷயமல்ல இது. கல்லென்பாக் கட்டிடக்கலை நிபுணராய் வெற்றி பெற்றவர், காந்தி வக்கீல் பணியில் வெற்றி பெற்றவர். அனைத்தையும் துறந்து எளிய வாழ்வு வாழச் சொன்ன புகழ்பெற்ற நாவலாசிரியர் டால்ஸ்டாயின் தாக்கத்தில் இருவரும் இருந்தனர். என் முதல் நூலான 'Gandhi Before India'வில் இது விஷயமாக என்னால் நல்ல கேலி செய்ய முடிந்தது- ஜோசப் லெலிவெல்ட்டின் பிழை புரிதல் பற்றி இரண்டு பக்க அடிக்குறிப்பு ஒன்று எழுதினேன்.
ஆனால் விஷயம் இதுதான்- பிரமச்சரியம் இந்து மதத்திலும் இருக்கிறது, ஜைன மதத்திலும் இருக்கிறது. இந்து சமயத்துடன் தொடர்புடைய ஜைன சமயத்துக்கு நெருக்கமானவராய் இருந்தார் காந்தி- குஜராத்தியான காந்திக்கு பல ஜைன நண்பர்கள் இருந்தனர். ஜைன முனிகள் இப்படிப்பட்ட பிரமச்சரியத்தை பூரணமாய் கடைபிடிப்பவர்கள். எனவே, இது காந்தியின் சமய நம்பிக்கைகளின் முக்கிய அடித்தளமாய் இருந்தது. இது அவரது மன நம்பிக்கையில் எழுவது, நவீன ஆணோ பெண்ணோ இதைப் புரிந்து கொள்ள முடியாது.
ரோயல்: ஆனால் மத விஷயங்களில் திறந்த மனம் கொண்டவராய் இருந்தாலும் காந்தி தன் மகன் ஒரு முஸ்லிமை மணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க மறுத்தார்.
குஹா: ஆம், ஆனால் அதற்கு நடைமுறை அரசியல் காரணங்கள் இருந்தன. அவர் மிகவும் ஆச்சாரமான சமூகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார். முதல் முறையாக அவரால் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்க முடிந்தது. கலப்பு மணம் நிகழ்ந்திருந்தால் அது அவரது அரசியல் போராட்டத்தை தடம் புரளச் செய்திருக்கும். ஏனென்றால், இஸ்லாமிய மதபிரசாரகர்கள் அவரது மகன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கைப்பற்றி விட்டான் என்கிற மாதிரி போயிருக்கலாம். இது நடந்தது 1920களில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன். இன்று அதற்கு எந்த ஆட்சேபமும் இருக்காது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
முந்தைய பகுதிகள்:
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 1
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 2
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 3
ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4
(ராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் புத்தகங்கள் தொடரும்)
The Best Books on Gandhi, recommended by Ramachandra Guha: Interview by Sophie Roell, Five Books
Image Credit: The Hindu